தீபம் பரிகார வழிபாடு
இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்றினால், குலதெய்வம் உங்களுடைய கண்களுக்கு தெரியும். போராட்டமான வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும்...
இறைவனை கண்களால் பார்க்க முடியுமா. இறை சக்தி எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள்? இப்படி கேட்டால், இறைவனை ஜோதி ரூபத்தில் காணலாம். இறைவன் ஜோதி வடிவமானவன். நாம் ஏற்றி வைக்கும் விளக்கு தான், அந்த இறைவன். கோவிலுக்கு சென்றால் கூட இறைவனுக்கு ஆரத்தி காண்பித்து, அந்த ஆரத்தியை தான், நாம் முதல் பிரசாதமாக வாங்கிக் கொள்கின்றோம்.
போராட்டமான உங்களுடைய வாழ்க்கை ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு ஜோதி வழிபாடு. விளக்கு போட்டு இறைவனை தினமும் வழிபாடு செய்தாலே போதும். உங்களுடைய கஷ்டங்கள் தீர்ந்துவிடும். தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்தாலே போதும். உங்களுடைய வீட்டில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்துக் கொண்டே இருக்கும்.
வீட்டில் இருக்கும் தீய சக்திகள் அழிந்து கொண்டே வரும். திருவண்ணாமலை ஈசனையும் ஜோதி வடிவில் காணலாம். அந்த ஐயப்பனையும் ஜோதி வடிவில் காணலாம். வள்ளலாரையும் ஜோதி வடிவில் தான் பார்க்கிறார்கள் இப்படி இறைவன் ஜோதி ரூபத்தில் காட்சி தந்த வரலாறு நம்முடைய ஆன்மீகத்தில் உண்டு. எவ்வளவு நேரம் உங்களுடைய வீட்டில் விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறதோ, அந்த அளவுக்கு உங்களுடைய வீடும் வீட்டில் இருப்பவர்களுடைய எதிர்காலமும் பிரகாசமாகத்தான் இருக்கும்.
அந்த வகையில் இன்றும் ஒரு விளக்கு பரிகாரத்தை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுடைய வாழ்க்கை ரொம்பவும் கஷ்டத்தில் இருக்கிறது. வாழ்க்கையில் எந்த திசைக்கு செல்வது என்று தெரியாமல் திக்குமுக்கு ஆடி வருகிறீர்கள். இந்த சூழ்நிலையில் உங்களுடைய குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால், என்ன செய்வது.
கஷ்டம் தீர குலதெய்வ வழிபாடு
பூஜையறையில் பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் குல தெய்வத்தின் திரு உருவப்படம் இருக்கும். உங்களுடைய குலதெய்வப் படம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருந்தால், அந்த குலதெய்வத்திற்கு முன்பு தொடர்ந்து 48 நாள் தீபம் ஏற்ற வேண்டும். எப்படி? இரண்டு மா இலை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு தாம்பூல தட்டில் இரண்டு மா இலைகள் வைத்து அதன் மேலே 2 மண் அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி, குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி, உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை அழைத்து, குலதெய்வ படத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீரை வைத்து, வழிபாடு செய்தாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வந்து உங்கள் கஷ்டத்தை தீர்த்து வைக்கும்.
நமக்கு பெரிய கஷ்டம் வந்துவிட்டது என்றால், அதற்கு முதல் காரணம் நம் குலதெய்வம் நமக்கு துணையாக இல்லை என்பதுதான். அந்த குலதெய்வத்தை உங்கள் வாழ்க்கைக்கு துணையாக வரவைக்க, மேல் சொன்ன முறையில் அழைத்தாலே போதும். குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்துவிடும். பெரிய பெரிய துன்பங்கள் கூட 48 நாட்களில் ஒன்றுமே இல்லாமல் போகும். 48 நாள் இந்த விளக்கை உங்கள் வீட்டில் ஏற்றினால்.
நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரில், உங்கள் வீட்டு கஷ்டமெல்லாம் பஸ்பம் ஆகிவிடும். இதுதான் நம்பிக்கை. வீட்டில் இருக்கும் பெண்களால் தொடர்ந்து 48 நாள் விளக்கு ஏற்ற முடியாது. இடையில் மாதவிடாய் நாட்கள் வரும். அப்போதும் நீங்கள் வழிபாட்டை நிறுத்தக்கூடாது. வீட்டில் இருக்கும் வேறு ஒருவரை பூஜை அறையில் விளக்கு ஏற்றச் சொல்லுங்கள்.
உங்கள் பிள்ளைகளோ, கணவரோ, மாமியாரோ வீட்டில் வேறு யார் இருந்தாலும் இந்த விளக்கை ஏற்றி வழிபாடு செய்யலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை அந்த மாயிலை வாடிய பிறகு புது மா இலை கொண்டு வந்து வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் குலதெய்வத்தின் திருவுருவப்படம் இல்லை என்றாலும், பூஜை அறையில் இந்த விளக்கை ஏற்றி குலதெய்வத்தை அழைக்கலாம்.
தவறு கிடையாது. ரொம்ப கஷ்டத்தில் இருப்பவர்கள், இந்த தீப வழிபாட்டை முயற்சி செய்து பாருங்கள். விளக்கை ஒரு நாள் மட்டும் ஏற்றி வைத்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது 48 நாள் பரிகாரத்தை செய்யும் போது தான் முழு பலன்களுக்கும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment