சற்குணநாதர் (சற்குணேசுவரர், கல்யாணேசுவரர், இடும்பானேசுவரர்)
*தாயார்:
மங்களநாயகி (மங்கள வல்லி, கல்யாணேசுவரி)
*தல விருட்சம்:
வில்வம்
*தீர்த்தம்:
பிரம்ம தீர்த்தம்.
*பாடல் பெற்ற தலம்.
தேவாரம் பாடியவர்
திருஞானசம்பந்தர்.
*வழிபட்டோர்: பிரமன், அகத்தியர், யமன், ராமபிரான்.
*பிரம்மதேவர் சத்வ குணங்கள் பெற வேண்டி தவம் புரிந்து, சிவபெருமானை இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் இத்தல இறைவன் சற்குணேசர், சத்குண நாதர் என்று அழைக்கப்படுகிறார்.
*மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த இடும்பன் பூசித்துப் பேறுபெற்ற தலமாதலின் இத்தலம் "இடும்பாவனம்" எனப் பெயர் பெற்றது.
*பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான பீமன் "தலைமறைவு" வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் வந்தபோது இடும்பாவனத்துக்கு வந்து அருகில் உள்ள இடும்பனின் தலைநகரமாகிய குன்றளூரில் இடும்பியைக் கண்டு மணம் புரிந்து பின்னர் பீமன் இடும்பியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, சிவபெருமானை வணங்கி அருள் பெற்றதாக வரலாறு.
*அகத்திய மாமுனிவர் இறைவனின் மணக்கோலம் கண்ட தலங்களுள் ஒன்றாக "இடும்பாவனம்" புகழப்படுகின்ற,து. கருவறையில் இறைவனுக்குப் பின்புறம் இந்த திருமணக்கோலம் உள்ளதை தரிசிக்கலாம்.
*சாந்த குணத்தை அளிப்பதில் தன்னிகர் அற்ற தலமாக திருஇடும்பாவனம் விளங்குகிறது.
*பிரம்மதேவனுக்கு அடிக்கடி கோபம் வந்தது. அவர், சிவபெருமானிடம் வந்து கோபப்படும் தனது குணத்தை மாற்றி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அசரீரி வாக்காக, இடும்பாவனம் சென்று தன்னையும், அம்பிகையையும் பூஜித்து பலன் அடையும்படி கட்டளையிட்டார். அதன்படி இடும்பாவனம் வந்த பிரம்மா, வில்வ மரத்தடியில் நீண்ட காலம் தவம் இருந்தார். பிரம்மாவின் தவவலிமை கண்ட சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகனுடன் பிரம்மாவுக்குத் தரிசனம் தந்து, சாத்வீக குணத்தை பிரம்மாவுக்கு தந்தருளிய சிறப்புடைய தலம் இடும்பாவனம்.
*கோபமுற்று சில செயல்களை செய்துவிட்டு அல்லது பேசிவிட்டு அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் நம்மில் ஏராளம்.
*கோபம் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மற்றும் மன அழுத்தத்தை உண்டாக்கும்.
இதற்கு மருந்தாக சாந்த குணத்தை அளிக்கும் தலமாக இடும்பாவனம் விளங்குகிறது.
*சற்குணேஸ்வரரை வழிபட்டால் மன அமைதியும், அற்புத வரங்களையும் பெறலாம்.
வாழ்வில் ஏற்படக்கூடிய இடர்களை நீக்க வல்லவர் இந்த சற்குணேஸ்வரர்.
“இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம்” என்று திருஞான சம்பந்தர் தனது பாடலில் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றார்.
*பிதுர்க்கர்மாக்களைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. சிவராத்திரியன்று உபவாசம் இருந்து இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சற்குணநாதரை வணங்கினால், முன்னோரது பாவங்கள் நீங்கி அவர்கள் மோட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை.
*திருத்துறைப்பூண்டியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை போன்ற இடங்களில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment