Sunday, July 31, 2022

ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?

01.08.2022 ஆடி மாதம் 16 ம் நாள் திங்கட்கிழமை

                ஆடிப்பூரமும்.. நாக சதுர்த்தியும் இணைந்த நன்னாளில்.. என்ன செய்தால் சிறப்பு?
                ஆடிப்பூரம்...!!

ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

 திங்கட்கிழமை ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆடிப்பூர நாளாகும். இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுகிறது.

அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தன காப்பு, குங்கும காப்பு நடத்துவார்கள்.

அம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம். எனவே ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

கோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல் திருமணமாகியும் குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும். ஆடிப்பூரம் அன்று அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம் என்றும் கூறப்படுகிறது.

ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே அம்பாள் படத்துக்கு மலர்கள் சாற்றி வழிபடலாம். அம்பாளுக்கு உரிய லலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து நெய் விளக்கேற்றி வழிபடலாம்.
நாக சதுர்த்தி...!!


கருட பஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் அதாவது ஆடி வளர்பிறை சதுர்த்தியை நாக சதுர்த்தி என்கின்றனர். பாற்கடலில் இருந்து வெளிவந்த ஆலகால விஷத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது.

இந்தநாளில் விரதமிருந்து நாக பிரதிகளுக்கு பூஜை செய்வதை நாக சதுர்த்தி விரதம் என்கின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?

நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்கு பூஜை செய்து, புற்றுக்கு பால் ஊற்றி, புற்று மண்ணை பிரசாதமாக அணிந்து கொள்வார்கள்.

அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், சங்குபாலன், கார்க்கோடகன், குளிகன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தை சொல்லிக்கொண்டே புற்றுக்கு பால் ஊற்றி பூஜிப்பது நல்லது.

திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க இந்நாளில் பெண்கள் விரதம் மேற்கொள்வார்கள்.

நாக சதுர்த்தி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும்.

புற்றுக்கு பால் தெளித்து, விநாயகருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்கள் சூட்டி, விளாம்பழம், கரும்பு நெய்வேத்தியம் செய்து 12 முறை வலம் வந்து வணங்கினால் நன்மை உண்டாகும்.

Saturday, July 30, 2022

ஆடிப்பூரம் : அம்மனுக்கு வளைகாப்பு .பிள்ளை வரம் கிடைக்க வளையல் வாங்கி கொடுங்க..

#ஆடிபூரம் (ஆடி 16ஆம் தேதி) ஆகஸ்ட் 1, 2022ல் திங்கள் கிழமை நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த திருவாடிப்பூரம் விழாவானது கொண்டாடப்படுகிறது ஆடிப்பூரம் : அம்மனுக்கு வளைகாப்பு  .பிள்ளை வரம் கிடைக்க வளையல் வாங்கி கொடுங்க..

 
#அம்மனுக்குவளைகாப்பு
ஆடி மாதத்தில் அம்மனுக்கு வளையல் மாலை சாற்றி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுவது, அந்த அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவதாக நினைத்து, அதனால் அம்மன் நமக்கும் குழந்தை பாக்கியம் தரவேண்டும் என்று பெண்கள் வழிபடுவது சிறப்பு. அம்மன் வளையல் அணிய ஆசைப்பட்டதாக ஐதீகம் உள்ளது, அதனால் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபட்டால் நினைத்ததை அம்மன் செய்வார் என்பது அதீத நம்பிக்கை. ஒற்றைப்படை அல்லது 108 வளையல் அணிவித்து வழிபட்டு அதை கலந்துகொண்டோருக்கு கொடுத்து கொண்டாடுவது வழக்கம்.

ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்மன் ஆலயங்களுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி ஆனந்தப்பட்டால் அகில உலகமே மகிழ்ச்சியடையும் என்பது உண்மைதானே.

 ஆடிப்பூரம் வளைகாப்பு திருவிழா புராண கதை பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? அதற்கான புராண கதையைப் பார்க்கலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வளையல் வியாபாரி சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். "நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்று கூறி மறைந்தார் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள்.

Friday, July 29, 2022

Tiruvarur Sadhuranga Vallabanathar Temple :

தமிழகத்தில் செஸ் தோன்றியதற்கான சான்றாக பார்க்கப்படும் 1,500 ஆண்டுகள் பழமையான சதுரங்க வல்லபநாதர் கோயில்

Tiruvarur Sadhuranga Vallabanathar Temple : 44வது 'செஸ் ஒலிம்பியாட்' தொடரையொட்டி, தமிழகமெங்கும் சதுரங்க ஜூரம் பிடித்திருக்க, சிவன் சதுரங்கம் விளையாடியதாக கூறப்படும் புராதன சிறப்புமிக்க கோயில் ஒன்று, கவனிப்பார் இன்றி உள்ளது. அதுபற்றி ஒரு சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்.

செஸ் போட்டி இந்தியாவில் தோன்றி, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமான கூறப்படுகிறது. அதேவேளையில், செஸ் போட்டி தமிழகத்தை பாரம்பரியமாக கொண்டது என்று, ஓர் கோயிலின் தல வரலாறு கூறுகிறது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மன்னார்குடி சாலையில் பூவனூர் என்ற கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது.

ஆதிகாலத்தில் வசுசேனன் என்ற பாண்டிய மன்னனுக்கு, அன்னை பார்வதி தேவியே மகளாகப் பிறந்தார் என்றும், அவர் ராஜேஸ்வரி என்ற பெயருடன் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. சதுரங்கப் போட்டியில் வல்லமை படைத்தவராக விளங்கிய ராஜேஸ்வரியை, வயதான சித்தர் வேடத்தில் வந்த சிவபெருமான் வெற்றி கொண்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பின்னர், தனது திருவுருவத்தைக் காட்டி ராஜேஸ்வரியாக வளர்ந்த பார்வதி தேவியை, சிவபிரான் ஆட்கொண்டார் என்பது இந்த கோயிலின் தல வரலாறாக உள்ளது..

செஸ் ஒலிம்பியாடுக்காக தமிழகமெங்கும் விழாக்களும், போட்டிகளும் களை கட்டியிருக்கும் சூழலில் சிவபிரான் சதுரங்கம் விளையாடிய வல்லபநாதர் ஆலயத்தை புனரமைத்து, ஆதிகால வரலாற்றை வருங்கால சந்ததியினர் அறியும்படி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது..

வல்லபநாதர் கோயிலில் இருந்து 11 கல்வெட்டுகளை மத்திய அரசின் தொல்லியல் துறையினர் கண்டறிந்து பதிவுச் செய்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, இந்த கோயில் பூவனூர் என்று அழைக்கப்படுவதும், பழமையான கோயில் என்பதும் உறுதியாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த பழமையான கோயிலில், சிவன் சதுரங்கம் விளையாடினார் என்பது ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ஒரு செவிவழிச் செய்தியாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சிவபிரான் சதுரங்கம் ஆடிய சிற்பமும் கோயிலில் இன்றளவும் காணப்படுகிறது.

சிவன் சதுரங்கம் ஆடிய சிலை இருந்தாலும் கல்வெட்டுகள் இல்லை என கூறப்படுகிறது. அதே வேளையில், எல்லோரா குகையில் சிவனும், பார்வதியும் சதுரங்கம் போன்ற 'டைஸ்' எனப்படும் 'சொக்கட்டான்' விளையாடுவது சிற்பமாகவே செதுக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...

Wednesday, July 27, 2022

🌺🌺🌺🌺கயிலைக் காட்சி கண்ட அப்பர்

🌺🌺🌺🌺🌺ஆடி அமாவாசை சைவ உலகின் சூரியன் தன் உழவார தொண்டாலும் தன் தேனினும் இனிய திருப்பதிகத்தாலும் பல தலங்களை பாடி வழிபட்டு உலகோருக்கு பல அரிய நற்கருத்துக்களை தன் பதிகத்தின் வாயிலாக தந்து இறைவனை அவனது இயல்பை அடிமை நெறியில் நின்று அடியார்பெருமக்கள் ஈசனை அடைந்து பேரின்ப பெருவாழ்வை அடைய வழிகாட்டிய மாபெரும் மகான் அறிவில் சிறந்த ஞானி நாயன்மார்களில் என் மனம் கவர்ந்த அருள் வள்ளல் அப்பர்பெருமான் திருவையாற்றில் திருக்கயிலை காட்சி கண்ட மகத்தான திருநாள்

🌺🌺🌺🌺கயிலைக் காட்சி கண்ட அப்பர்
       
கயிலைக் காட்சி கண்ட அப்பர் பெருமானின் மனநிலையின் வெளிப்பாடு!
திருநாவுக்கரசர் தன் வாழ்நாளின் முதிய வயதில் தன் பூதவுடலோடு கைலாயம் செல்ல விரும்பி தெலுங்கு, கன்னடம், மாளுவம், இலாடதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளைக் கடந்து காசியை அடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு பகலாய் காடு மேடு, மலை, மணல் பகுதிகளைக் கடந்து நடந்து செல்கிறார். அப்படி நடந்ததால் அவருடைய திருவடிகள் தேய்ந்து போயின. கால்கள் நடக்கும் சக்தியை இழந்தன. குழந்தைகள் போல கால்கள், கைகளைத் தரையில் ஊன்றி தவழ்ந்து செல்லலாயினர். அதனால் அவரது கைகளும் தேய்ந்தன. எலும்புகள் தேய்ந்தன. எதுநேர்ந்தாலும் பின்வாங்காமல் கைலை நாதனை தரிசிக்காமல் திரும்புவதில்லை எனும் மனவுறுதியோடு இருந்தும் உடல் ஒத்துழைக்க மறுத்து ஓய்ந்து சரிந்தது.

       அப்பர் பெருமான் மேலும் சிலகாலம் பூவுலகில் வாழ்ந்து தீந்தமிழ்ப் பாமாலைகள் பாடவேண்டுமென்று திருவுளம் கொண்ட கயிலை வாசியான சிவபெருமான் ஒரு முனிவர் வேடம் தாங்கி, அருகேயோர் தடாகத்தினை உருவாக்கி அப்பர் முன்னால் வந்து நின்றார்.

       இறைவன் அப்பரை நோக்கி, “அங்கங்கள் சிதைய இக்கொடுங்கானகத்தில் தாங்கள் வந்தது எதைக் கருதி?” என்று வினவினார்.

       “இறைவனைத் திருகயிலையில் கண்டு தரிசித்து இன்புறவே” என்றார் அப்பர் பெருமான்.
       “திருக்கயிலை மானுடர் சென்றடைதற்கு எளிதோ? இயலாத செயலை முயன்று பார்த்தல் சரியல்ல, திரும்பிச் செல்லுங்கள், அதுவே தக்கது” என்றார் முனிவராக வந்திருக்கும் சிவபெருமான்.

       முனிவர் சொற்களால் வருத்தமுற்ற அண்ணல் திருநாவுக்கரசர் சொல்கிறார்; “எனை ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” என்று உறுதிபட கூறுகிறார்.

       அந்தக் கணம் முனிவர் வடிவில் வந்த ஈசன் அங்கிருந்து மறைந்து அசரீரியாய் அப்பரைப் பார்த்துச் சொல்கிறார். “நாவினுக்கரசனே! எழுந்திரு!” என்று ஈசன் சொன்ன மாத்திரத்தில் அப்பர் உடல்நலம் கைவரப்பெற்று எழுந்து பணிவோடு வேண்டுகிறார். “ஐயனே! கயிலையில் நின் திருக்கோலம் நண்ணி நான் தொழுதிட நயந்து அருள்புரி!” என்று.

       அசரீரியாய் ஐயன் சொல்கிறார், “நாவுக்கரசரே! இந்தத் தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து யாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் காட்சியைக் காண்பாயாக!” என்று.

       அவ்வாறே அப்பர் அந்தத் தடாகத்தில் மூழ்கித் திருவைந்தெழுத்தை ஓதியபடி கண் திறந்தபோது, தான் திருவையாற்றிலுள்ள பொய்கையில் இருப்பதை உணர்ந்து எழுகிறார். அங்கு எழுந்து ஆனந்தக் கண்ணீர் சொரிய ஐயாறப்பனை வணங்கும் போது அங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் சக்தியும் சிவமுமாய் காட்சியளிக்கின்றன. ஐயாறன் ஆலயம் கயிலை மலையாய்க் காட்சி தருகிறது. ரிடப வாகனமேறி ஐயனும் அம்மையுமாய்க் காட்சி அளித்தபோது அப்பர் ஆனந்தக் கூத்தாடி தரிசனம் செய்கிறார். ஐயனைப் பாடினார், மகிழ்ந்தார், வணங்கினார்.

       ஐயன் தானிருந்த கயிலைக் காட்சியை அப்பருக்கு மறைத்தருள, அடியார் திகைத்து இதுவும் உந்தன் திருவருளே எனத் தெளிந்து ஒரு பதிகம் பாடத் தொடங்குகிறார். அதுதான் “மாதர்ப் பிறைக் கண்ணியானை” எனத் தொடங்கும் அற்புதமான தேவாரம்.

                             அப்பர் பாடல். பண் காந்தாரம்.

“மாதர்ப் பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்” எனும் பாடலைப் பாடி இவ்வுலகம் இறைவனால் படைக்கப்பட்ட போதே சிவனும் சக்தியுமாகத்தான் எல்லா உயிர்களையும் படைத்தான் எனும் உண்மையைக் கண்டு மகிழ்ந்து பாடுகிறார்.

“கங்கையையும், பிறையும் அணிந்த பெம்மான் மலைமகளாம் பார்வதி அம்மையோடு இருக்குமிடம் தேடி மலர்களும் மங்கல நீராட குடங்களில் நீரும் சுமந்து செல்வார் பின்னால் அடியேனும் காலடி மண்ணில் எங்கும் படாமல் ஐயாற்றுத் தலத்தை யான் அடைகின்ற பொதில் ஆண் யானை தன் பெண் துணையுடன் வரும் காட்சியைக் கண்டேன். இந்தக் காட்சியில் ஐயன் திருப்பாதம் தரிசனம் செய்தேன், இதுநாள் வரை கண்டறியாதவற்றைக் கண்டேன்.

ஐயனையும் அம்மையையும் பாடிப் பரவிக்கொண்டும் ஆடிக்கொண்டும் நான் உலக நாயகன் உறையும் ஐயாற்றை அடைகின்றபோது கோழி தன் துணையோடு கூடிக் களித்து வருவதைக் கண்டேன், அங்கே ஐயனின் திருப்பாதம் கண்டேன்.

முகம் மலர பாடிப் பரவி ஏந்திழையாளொடும் எரிப்பிறைக் கண்ணியினானைத் தரிசித்து மகிழ்ந்து தெளிந்த நீரோடையோடு கூடிய ஐயாற்றை அடைகின்றபோது வரிக்குயில் தன் பேடையோடு ஆடி வருவதைக் கண்டேன். அங்கே ஐயனின் திருப்பாதம் கண்டேன், இதுநாள் வரை கண்டு அறியாதன கண்டேன்.

பிறையணிந்த பெம்மானும் இறைவியுமாய் காட்சியளிக்கும்போது பல்மலர் தூவி மனம் குளிர தொழுவேன், பூத்துக் குலுங்கும் ஐயாற்றின் சோலைகளூடே நான் செல்லும்போது சேவல் தன் இளம் பேடையோடு ஆடி வருவதைக் கண்டேன், ஈசனின் திருவடிகளைக் கண்டேன், அங்கு கண்டறியாதன வெல்லாம் கண்டேன்.

ஏடுமதிக் கண்ணியானை ஏந்திழையாளொடும் கூடியிருக்கும் காட்சியக் காண காடு மலைகளைத் தாண்டு கைகளைத் தொழுதுகொண்டு ஆடிக்கொண்டு நான் ஆடலரசன் ஆளும் திருவையாற்றை அடைகின்றபோது மயில் தன் பேடையுடன் கூடிப் பிணைந்து அசைந்து வருவது கண்டேன். ஆங்கே இறைவனது திருப்பாதம் கண்டேன், கண்டறியாதன கண்டேன்.

குளிர்ந்த பார்வை கொண்ட ஈசன் தையல் நல்லாளுடன் இருக்கும் காட்சியைப் பார்த்து மனம் உருகி பாடிக் கொண்டு அண்ணல் உறைகின்ற ஐயாற்றை அடைகின்றபோது வண்ணப் பறவையாம அன்றில் தன் இணையோடு சேர்ந்து வருவதைக் கண்டேன், ஈசனின் இணையடி தரிசனம் கண்டேன், கண்டறியாதன கண்டேன்.

பரமேஸ்வரனை மலைமகளோடும் இணைந்து பாடி மகிழ்ந்து வாய் நிறைய புகழ்பாடிக்கொண்டு கழலணிந்த ஈசன் உறையும் ஐயாற்றினை நான் அடைகின்றபோது இடிகுரலில் உறுமிக் கொண்டு வரும் காட்டுப் பன்றி தன் இணையுடன் இணைந்து வருவதைக் கண்டேன். கண்டறியாதனவைகள் எல்லாம் கண்டேன்.

ஐயனையும் அம்மையையும் பாடிப் பரவுதற்கு பொழுது புலருமுன் எழுந்து மலர்களைக் கொய்துகொண்டு பொன்னும் மணியும் நிறைந்து கிடைக்கும் ஐயாற்றை அடைகின்றபோது கருங்குரங்கு தன் பேடையோடு ஆடிக்கொண்டு இணைந்து வருவதைக் கண்டேன், ஈசன் திருப்பாதம் கண்டேன், கண்டறியாதன கண்டேன்.

முற்பிறைக் கண்ணியினானும் மொய்குழலாளொடும் இருக்கும் காட்சி காண பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் நான் ஐயாற்றை அடைகின்றபோது நாரை தன் துணையோடு இணந்து வருவது கண்டேன், கண்டறியாதன கண்டேன்.

குளிர்ந்த கண்களுடைய ஈசன் தன் தேவி தேமொழியாளொடும் இருக்கும் காட்சியைப் பாடிக்கொண்டு என்று நினது திருவருள் கிட்டும் என்று நான் திருவையாற்றை அடைகின்றபோது பைங்கிளி தன் பேடையோடு ஆடிப் பறந்து வருவது கண்டேன், கண்டேன், கண்டறியாதன கண்டேன்.

வளர்மதிக் கண்ணான் தன் வார்குழலாளொடும் இருக்கும் காட்சியை என் கடைக் கண்களால் பார்க்க முடியாதா என்று ஏங்கி அளவற்ற அன்போடு நான் திருவையாற்றை அடையும்போது காளை தன் இணையோடு மகிழ்ந்து வருவது கண்டேன், கண்டறியாதன வெல்லாம் கண்டேன்.

திருஞானசம்பந்தர் திருப்பழனத்திலிருந்து புறப்பட்டு காவிரியின் வடகரையோடு திருவையாற்றை வந்தடைகிறார்கள். ஞானக்குழந்தை வரும் செய்தியறிந்து ஊரார் தெருவை அலங்கரித்து தோரணங்கள் கட்டி வாயிலில் நீர் தெளித்துக் கோலமிட்டு மனமகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். நந்தியம்பெருமான் அருள்பெற்ற திருநகராம் திருவையாற்றை வணங்கிப் போற்றிப் பாடிய பனுவல் இது.

கருடன் பிறந்த ஆடிச் சுவாதி

ஆடி ஸ்பெஷல் !

கருடன் பிறந்த ஆடிச் சுவாதி!

கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்

கருடாழ்வார்....

கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார்.
முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தன உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார்.
பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாறு இருப்பார்.

காத்தல் தொழிலைக் கொண்ட திருமாலுக்கு வாகனமாய் இருப்பவர் கருடாழ்வார். 
சுபர்ணன், 
பன்னகாசனன், 
புஷ்பப்ரியன், 
மங்களாயன், 
சுவர்ணன், 
புன்னரசு 
என்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு.
இவரின் தாயான வினதையை முன்னிட்டு வைநதேயன் என்றும், பெரிய திருவடி என்றும் அழைக்கப்படுகிறார் கருடாழ்வார். 
கருட பஞ்சமியும், ஆடி சுவாதியும் கருடாழ்வாரின் அவதார நன்னாட்கள்.

காஷ்யப முனிவருக்கு இரண்டு மனைவி கள். ஒருத்தி பெயர் கத்ரு; மற்றொருத்தி பெயர் வினதை.
கருட பகவானின் தாயாரான வினதைக்கும், கத்ருவுக்கும் எப்போதும் விரோத மனப்பான்மை உண்டு. கத்ருவுக்கு நாகங்கள் பிறந்தன. 
அவற்றுக்கு கருடன் மீது எப்போதும் பகை எண்ணமே இருந்தன. கருடனும், நாகமும் பகைவர்களாக இருந்தபோதிலும் கருடன் திருமாலுக்கு வாகனமாகவும், ஆதிசேஷன் திருமாலின் அரவணை (படுக்கை)யாகவும் அமைந்தனர்.
இரண்டு மனைவிகள் என்றாலே சண்டையும் சச்சரவுகளும், பொறாமையும் வெறுப்பும்அதிகரித்துக் கொண்டே போக, எப்படியாவது ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும்; தானேஅதிகாரம் செலுத்தி மற்றவரை அடிமை கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போனது.
வினதையை வீழ்த்தி தனக்கு அடிமையாக்க வேண்டும் என்று நினைத்த கத்ருவிற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

காத்ருவும் ,வினதாவும் சகோதரிகள். ஒருமுறை வானில் பறந்து கொண்டிருந்த உக்கைஷ்ரவா என்ற தேவலோகக் குதிரையைக் கண்டனர். குதிரையின் வால் என்ன நிறம் என்பது பற்றி இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. வினதா அதை வெள்ளை என்று சொல்ல காத்ரு வெள்ளைக் குதிரைக்கு கருப்பு வால்தான் இருக்க முடியும் என்று பந்தயம் வைத்தாள்.

யார் பந்தயத்தில் தோற்றுப் போகிறார்களோ அவர்கள் மற்றவரிடம் காலம் முழுவதும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நிபந்தனை.மறுநாள் அந்த குதிரையின் வால் நிறத்தை மீண்டும் உறுதி செய்து கொள்வது என்று இருவரும் பேசிக்கொண்டனர்.

அன்று இரவே காத்ரு தன் குழந்தைகளான ஆயிரம் பாம்புகளிடம் குதிரையின் வால் போல் தோற்றமளித்து தான் பந்தயத்தில் ஜெயிக்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டாள். பாம்புகள் மறுநாள் அக்குதிரையின் வால் போல் காட்சி தந்து வினதாவை ஏமாற்றின.

வினதாவும் அதை நிஜமென்று நம்பி காலம் முழுவதற்கும் தன் சகோதரிக்கு கட்டுப்பட்டு இருக்கத் தொடங்கினாள். இந்த வினதாவுக்கு மகனாகப் பிறந்தவனே கருடன். தன் தாயின் நிலை கண்டு வருந்திய கருடன் தன் பாம்பு சகோதரர்களிடம் தன் தாய்க்கு விடுதலை வாங்கித் தருமாறு வேண்டிக்கொண்டான்.

பாற்கடலை கடையும்போது கிடைக்கும் அமுதத்தை தமக்கு கொண்டு வந்து தந்தால் கருடனின் தாயை தங்கள் அன்னையிடம் இருந்து மீட்டுத் தருவதாக பாம்புகள் வாக்களித்தன.

பலவகையான போராட்டங்களுக்கு பிறகு மிக பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த அமிர்த கலசத்தை கருடன் தூக்கிச் செல்ல தன தாயின் மேல் அவன் வைத்திருந்த பிரியத்தை எண்ணி மனம் மகிழ்ந்த நாராயணன் அவனை தனது வாகனமாகிக் கொண்டார்.

விஷ்ணுவை தன மீது அமர்த்திக் கொண்டு வெகு வேகமாக கருடன் பறந்த போது இந்திரன் தன் வஜ்ராயுதத்தை ஏவி அவனைத் தடுக்கப் பார்த்தான். ஆனால் வஜ்ராயுதம் கருடனுக்கு எந்த தீங்கும் இழைக்கவில்லை...

கருடனின் சக்தி அறிந்த இந்திரன் அமிர்தத்தை வேறு எவருக்கும் தரக்கூடாது என்று கட்டளை இட்டான். அதற்கு கருடன் "என் தாய் விடுதலை ஆனதும் தாங்களே வந்து அமிர்த கலசத்தை மீட்டுக் கொள்ளுங்கள். பதிலுக்கு பாம்புகள் எனக்கு உணவாகும் வரத்தை நீங்கள் அருள வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது.

இந்திரனும் கருடனின் சொல்லால் மனம் நெகிழ பாம்புகள் இருக்கும் இடத்தில் அமிர்த கலசத்தை ஒரு புல் தரையின் மீது கருடன் வைத்தான். ஆகம முறைப்படி சுத்த பத்தமாக ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு தன் தாயை விடுவிக்க வேண்டும் என்று கருடன் சொல்ல வினதாவும் விடுதலை ஆனாள். பாம்புகளும் ஸ்நானம் செய்யச் சென்றன.

அந்நேரம் இந்திரன் வந்து அமிர்த கலசத்தை மீண்டும் எடுத்துச் சென்றான். அமிர்த கலசத்தை காணாத பாம்புகள் ஏமாற்றத்தில் திகைத்தன. அதுமுதல் கருடன் பாம்புகளை உணவாக்கிக்கொள்ள ஆரம்பித்தது

பெருமாள் கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்' என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது.

இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு.

திருமால் அருளிய வரத்தின்படி திருக்கோயில்களில் கருடக்கொடியாகவும், திருமாலுக்கு வாகனமாகவும் திகழும் கருடன், திருமாலை நமக்குக் காட்டியருளும் குருவாகவும் போற்றப்படுகிறார்.
கருடன் மற்ற பறவைகளைப் போல் இறக்கைகளை விரித்துக்கொண்டு பறப்பதில்லை. கருடனின் பார்வையும் மிகக் கூரானது. கருடக் குரலின் அடிப்படையில் "கருடத்வனி' என்று ஒரு ராகமே அமைந்துள்ளது.
ஒவ்வொரு திருமால் கோயிலிலும் கருட úஸவைத் திருவிழா பலமுறை நடக்கும். மாசி மகத்தன்று கருட சேவையில் பகவான் திருக்கோயில்களின் அருகேயுள்ள புஷ்கரிணிக்கோ, ஆறு அல்லது சமுத்திரங்களுக்கோ சென்று தீர்த்த வாரி கண்டருள்வார்.

கருடனுக்கு வடை மாலை சாற்றுவது வழக்கம். பூரண கொழுக்கட்டையைப் போன்ற அமிர்த கலசம் இவருக்கு நிவேதனம். "கருடத்வனி' ராகமாய் நம் வாழ்க்கை இனிமை பெற, கருட பஞ்சமியன்றும் கருட ஜெயந்தியன்றும் கருடாழ்வாரையும், அவர் தாங்கிச் செல்லும் திருமாலையும் வழிபடுவோம்.

கருடபறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது. இப்பறவை வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் இந்துக்களால் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது.
கோவிலில் குடமுழுக்கு, வேள்வி மற்றும் பிற சிறப்பு வழிபாடுகள் நடைபெரும்போது போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது.
சபரிமலை ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்துக்காக கேரளா மாநிலம் பந்தளம் எனும் ஊரில் உள்ள அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரும்போது கூடவே கருடன் பறவை நேர் மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வருவதை இன்றும் காணலாம்.

பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. 
ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். 
இதுபோன்ற சிலை வேறு எங்கும் இல்லை….
ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது.
வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நறையூர் நம்பி கோவிலில் அமைந்துள்ள கல் கருடன் புகழ் பெற்றது
திருவள்ளூர் மாவட்டம் கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார். இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்புறம் உள்ளது.

கருடவாகன சேவை

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை . பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.

கருட புராணம்

பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது

கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

கருடனைத் தரிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள்:

ஞாயிறு கருட தரிசனம் - நோய் அகலும்

நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.

திங்கள் கருட தரிசனம் - குடும்ப நலம் பெருகும்.

செவ்வாய் கருட தரிசனம் - தைரியம் கூடும்.

புதன் கருட தரிசனம் - எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.

வெள்ளி கருட தரிசனம் - பணவரவு கிட்டும்

சனி கருட தரிசனம் - நற்கதி அடையலாம்.

கருடாழ்வாரை தரிசிக்கும்போது

குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம: என கூறி வணங்க வேண்டும்.

பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தன்றுதான்.
இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.
ஸ்ரீரங்கத்தில் பெரிய கருடன் மற்றும் அமிர்த கலச கருடன், கும்பகோணம் நாச்சியார் கோயில் கல் கருடன் ஆகியவை கருடாழ்வாரின் சிறப்புமிக்க ஸ்தலங்களாகும்.

ஓம் நமோ நாராயணாய !

Monday, July 25, 2022

பெண்களின் வளையல் திருவிழா ஆடி பூரம்

#ஆடிபூரம் (ஆடி 16ஆம் தேதி) ஆகஸ்ட் 1, 2022ல் திங்கள் கிழமை நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த திருவாடிப்பூரம் விழாவானது கொண்டாடப்படுகிறது ஆடிப்பூரம் : அம்மனுக்கு வளைகாப்பு  .பிள்ளை வரம் கிடைக்க வளையல் வாங்கி கொடுங்க..

 
#அம்மனுக்குவளைகாப்பு
ஆடி மாதத்தில் அம்மனுக்கு வளையல் மாலை சாற்றி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுவது, அந்த அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவதாக நினைத்து, அதனால் அம்மன் நமக்கும் குழந்தை பாக்கியம் தரவேண்டும் என்று பெண்கள் வழிபடுவது சிறப்பு. அம்மன் வளையல் அணிய ஆசைப்பட்டதாக ஐதீகம் உள்ளது, அதனால் அம்மனுக்கு வளையல் சாற்றி வழிபட்டால் நினைத்ததை அம்மன் செய்வார் என்பது அதீத நம்பிக்கை. ஒற்றைப்படை அல்லது 108 வளையல் அணிவித்து வழிபட்டு அதை கலந்துகொண்டோருக்கு கொடுத்து கொண்டாடுவது வழக்கம்.

ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அம்மன் ஆலயங்களுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி ஆனந்தப்பட்டால் அகில உலகமே மகிழ்ச்சியடையும் என்பது உண்மைதானே.

 ஆடிப்பூரம் வளைகாப்பு திருவிழா புராண கதை பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? அதற்கான புராண கதையைப் பார்க்கலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வளையல் வியாபாரி சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். "நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்று கூறி மறைந்தார் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள்.

சிவனின் பிருங்க நடனம் ஆடிய இடம்

நாகப்பட்டினம் மாவட்டம்நடனம் பிருங்க நடனம் எனப்படும் திருக்குவளை வட்டம், திருக்குவளை  சிவன்கோயில் 
Thirukuvalai sivan temple 

திருக்கோளிலி என்பதே திருக்குவளை ஆனது. 
இறைவன் : பிரமபுரீசுவரர்,, கோளிலிநாதேஸ்வரர்.
இறைவி: வண்டமர் பூங்குழலி.
தல மரம் : தேற்றாமரம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்.
நாவுக்கரசர்  சுந்தரர் பதிகம் பெற்ற தலம். 

தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று திருக்குவளை. இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.

 திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்குவளை  ஆகும். சப்த விடங்கரில் இவ்வூர் விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். திருவிழாவில் இவர் ஆடும்நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம், திருக்குவளை  சிவன்கோயில் 
Thirukuvalai sivan temple 

திருக்கோளிலி என்பதே திருக்குவளை ஆனது. 
இறைவன் : பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்.
இறைவி: வண்டமர் பூங்குழலி.
தல மரம் : தேற்றாமரம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்.
நாவுக்கரசர்  சுந்தரர் பதிகம் பெற்ற தலம். 

தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று திருக்குவளை. இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.

 திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்குவளை  ஆகும். சப்த விடங்கரில் இவ்வூர் விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். திருவிழாவில் இவர் ஆடும் , வண்டு மலருக்குள் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று ஆடுவது. 

பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் மற்றும் ஹேமகாந்தன் எனும் மன்னன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.  
மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமென சொல்கின்றனர்.  அதனால்  இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது என்பது ஒரு விளக்கம். 

பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் பீமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது, பீமன் இங்கு வந்து இறைவனை வழிபட்டதால் தோஷம் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது. திருவாரூரை போல் நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே வரிசையில் தெற்குப் பார்த்து உள்ளனர். நவக்கிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் இருந்தால் அவை நீங்கி விடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.

கிழக்கு நோக்கிய ஐந்து  நிலை  ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. கோயிலின் எதிர்ல் பெரிய குளம் படித்துறைகளுடன் உள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து கொடிமரம் நந்தி தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முகமண்டபம் ஒன்றும் உள்ளது. அதன் மேல் குண்டையுரர் தந்த நெல்மலை காட்சியும் அதனை பூதங்கள் திருவாரூருக்கு கொண்டு சென்று பரவையாரிடம் கொடுக்கும்  காட்சியும் சுதையாக உள்ளன. இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்  சுவாமி அவரின்  தென்புறம் தியாகராஜர்  சன்னதி உள்ளது. 

கருவறை கோட்டங்களில் விநாயகர் நடராஜர் தென்முகன்  லிங்கோத்பவர்  பிச்சாடனர் அர்த்தநாரி துர்க்கை உமாமகேஸ்வரர் உள்ளனர். 
பிரகாரவலம் வரும் போது தென் மேற்கில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.  தியாகவிநாயகரும், அடுத்து விஸ்வநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சன்னதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு ஒரு  சன்னதி  உள்ளது. இறைவனின் இடதுபுறம் அம்பிகை வண்டமரும்பூங்குழலாள்  கிழக்கு நோக்கி தனிக்கோயில் கொண்டு உள்ளார்.  இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. அகத்தியர் பூசித்த லிங்கம் ஒன்றும் பிரகாரத்தில் இருக்கிறது. 

இத்தலத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் உள்ள குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சுந்தரருக்கு மலைபோல் நெல்லை அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டார். இறைவன் பூதகணங்கள் மூலம் அவற்றை திருவாரூரில் சேர்ப்பித்தார். 

இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள் - சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார் ' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.
சோழமன்னன் ராஜராஜன் காலத்தில் அருமொழி தேவவளநாட்டு அளநாட்டிலும், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் ஆகிய சோழ மன்னர்கள் காலத்தில் ராஜேந்திர சோழ வளநாட்டு இடை அள நாட்டிலும், பாண்டியன் இரண்டாம் ஜடாவர்மன் சுந்தரன் காலத்தில் ராஜேந்திர சோழ வள நாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்திலும் திருக்கோளிலி என்னும் இவ்வூர் திகழ்ந்ததாகக் கல்வெட்டுச் சாசனங்கள் குறிக்கின்றன. கோளிலி என்ற பெயர் திருக்குவளை என இப்போது வழங்கப்படுகிறது. 

திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள பாங்கல் என்ற ஊரிலிருந்து கிழக்கு நோக்கிப் பிரியும் சாலையில் எட்டு கிமி தொலைவில் திருக்குவளை உள்ளது. ஊரின் நடுவே பெரிய மதில்சுவ்ருடன் கோயில் எதிரில் பிரம்மதீர்த்தம் கொண்டு அழகாக உள்ளது. 
 திருப்பணிகள் தொடங்க உள்ளது விரைவில் அழகிய திருக்கோயிலை  காண வாருங்கள். 
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்எனப்படும், வண்டு மலருக்குள் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று ஆடுவது. 

பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் மற்றும் ஹேமகாந்தன் எனும் மன்னன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.  
மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமென சொல்கின்றனர்.  அதனால்  இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது என்பது ஒரு விளக்கம். 

பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் பீமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது, பீமன் இங்கு வந்து இறைவனை வழிபட்டதால் தோஷம் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது. திருவாரூரை போல் நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே வரிசையில் தெற்குப் பார்த்து உள்ளனர். நவக்கிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் இருந்தால் அவை நீங்கி விடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.

கிழக்கு நோக்கிய ஐந்து  நிலை  ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. கோயிலின் எதிர்ல் பெரிய குளம் படித்துறைகளுடன் உள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து கொடிமரம் நந்தி தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முகமண்டபம் ஒன்றும் உள்ளது. அதன் மேல் குண்டையுரர் தந்த நெல்மலை காட்சியும் அதனை பூதங்கள் திருவாரூருக்கு கொண்டு சென்று பரவையாரிடம் கொடுக்கும்  காட்சியும் சுதையாக உள்ளன. இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்  சுவாமி அவரின்  தென்புறம் தியாகராஜர்  சன்னதி உள்ளது. 

கருவறை கோட்டங்களில் விநாயகர் நடராஜர் தென்முகன்  லிங்கோத்பவர்  பிச்சாடனர் அர்த்தநாரி துர்க்கை உமாமகேஸ்வரர் உள்ளனர். 
பிரகாரவலம் வரும் போது தென் மேற்கில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.  தியாகவிநாயகரும், அடுத்து விஸ்வநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சன்னதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு ஒரு  சன்னதி  உள்ளது. இறைவனின் இடதுபுறம் அம்பிகை வண்டமரும்பூங்குழலாள்  கிழக்கு நோக்கி தனிக்கோயில் கொண்டு உள்ளார்.  இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. அகத்தியர் பூசித்த லிங்கம் ஒன்றும் பிரகாரத்தில் இருக்கிறது. 

இத்தலத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் உள்ள குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சுந்தரருக்கு மலைபோல் நெல்லை அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டார். இறைவன் பூதகணங்கள் மூலம் அவற்றை திருவாரூரில் சேர்ப்பித்தார். 

இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள் - சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார் ' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.
சோழமன்னன் ராஜராஜன் காலத்தில் அருமொழி தேவவளநாட்டு அளநாட்டிலும், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் ஆகிய சோழ மன்னர்கள் காலத்தில் ராஜேந்திர சோழ வளநாட்டு இடை அள நாட்டிலும், பாண்டியன் இரண்டாம் ஜடாவர்மன் சுந்தரன் காலத்தில் ராஜேந்திர சோழ வள நாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்திலும் திருக்கோளிலி என்னும் இவ்வூர் திகழ்ந்ததாகக் கல்வெட்டுச் சாசனங்கள் குறிக்கின்றன. கோளிலி என்ற பெயர் திருக்குவளை என இப்போது வழங்கப்படுகிறது. 

திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள பாங்கல் என்ற ஊரிலிருந்து கிழக்கு நோக்கிப் பிரியும் சாலையில் எட்டு கிமி தொலைவில் திருக்குவளை உள்ளது. ஊரின் நடுவே பெரிய மதில்சுவ்ருடன் கோயில் எதிரில் பிரம்மதீர்த்தம் கொண்டு அழகாக உள்ளது. 
 திருப்பணிகள் தொடங்க உள்ளது விரைவில் அழகிய திருக்கோயிலை  காண வாருங்கள். 
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்

Sunday, July 24, 2022

🙏🏻கோபுர தரிசனம் , கோடி புண்ணியம் இன்றைய கோபுர தரிசனம்🙏🏻

🙏🏻 *ஓம் கம் கணபதயே நமோ நமஹா*  🙏🏻


*அருள்மிகு ஶ்ரீ வெள்ளடைநாதர் உடனுறை காவியங்கண்ணி அம்மையார் திருக்கோயில்*
திருக்குருகாவூர் ,
நாகபட்டினம்.

🙏🏻தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🏻

தமிழர்கள் கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 1700 ஆண்டுகள் முதல் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .

# *மூலவர் - வெள்ளடைநாதர், ஸ்வேத ரிஷப ஈஸ்வரர்* .

# *உற்சவர் - சோமாஸ்கந்தர்*

#  அம்மன்/தாயார் -
காவியங்கண்ணி , நீலோத்பல விசாலாட்சி

# தலவிருட்சம் - வில்வம்

# தீர்த்தம்- பால்கிணறு

# ஆகமம் /பூஜை -
சிவாகமம்

# புராண பெயர் -  திருக்குருகாவூர், வெள்ளடை

# ஊர்- திருக்குருகாவூர்

# மாவட்டம்-
நாகப்பட்டினம்

# மாநிலம்- தமிழ்நாடு

# திருக்கோவிலின் மீது  திருஞானசம்பந்த  பெருமானும் , சுந்தர பெருமாள் பாடல்கள் பாடியுள்ளனர் .

# தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில்  இது 13வது தலம்.

# திருவிழா
சித்ராபவுர்ணமியில் கட்டமுது படைப்பு விழா, தை அமாவாசை ஆகிய தினங்கள் வெகு விமர்சையாக சிறப்பிக்கப்படுகிறது.

# தல சிறப்பு
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சிதருகிறார் .

# திரு ஞானசம்பந்தருக்காக   இங்கு தை மாத அமாவாசையன்று கங்கை நதி கிணற்றில் பொங்கியது. இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசையன்று ஒருநாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்படுகிறது.

#  அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள்.

#  மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது.

# சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 13 வது தேவாரத்தலம் ஆகும்.

# *கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருக்கருகாவூர்  வேறு*.

#  *சீர்காழி தாண்டி உள்ள திருக்கடையூர் வேறு*.

# இத்தலவிநாயகர்  செல்வ விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

#  சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர்.

#  தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும், இரண்டு சாமரங்களும் இருக்கிறது.

# பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள முருகன், தெற்கு திசை நோக்கி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.

# தென் திசையை பார்த்திருப்பதால் இவரை, குரு அம்சமாக கருதி வழிபடுகிறார்கள்.

# இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

#  கோஷ்டத்தில்  உள்ள சட்டைநாதர் , துர்க்கையம்மன் உள்ளனர் .

# இந்த துர்க்கை , எட்டு கைகளுடன் காட்சி  தருவது விசேஷம். நவக்கிரக சன்னதி கிடையாது .

# பிரார்த்தனை
தெரியாமல் செய்த  பாவத்தால் வருந்துபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

#  இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

# நேர்த்திக்கடன்
பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

# தலபெருமை:
ஒருநாள் மட்டும் நீராடும் தீர்த்தம்: மூலஸ்தானத்தில் வெள்ளடைநாதர் சதுர பீடத்தில், சிறிய பாணலிங்கமாக காட்சி தருகிறார். அன்று காலையில் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து திருஞானசம்பந்தரின் உற்சவ மூர்த்தி இந்த தீர்த்தத்திற்கு வருகிறார். அப்போது இக்கோயிலிலுள்ள சிவனும், அம்பாளும் அவருக்கு காட்சி தந்து தீர்த்தம் கொடுக்கின்றனர்.

#  அதன்பின்பு மாலையில் சம்பந்தர் மீண்டும் சீர்காழி திரும்புகிறார். இந்த வைபவம் வெகு விமரிசையாக இங்கு நடக்கிறது.

# அன்னமிட்ட  “கை’: சிவத்தல யாத்திரை சென்ற சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார்.

#   இப்பகுதி அப்போது  அடர்ந்த வனப்பகுதியாக  இருந்தது. எனவே, அவரால் இக்கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை.


# இத்தலத்து சிவனை தரிசிக்காமல்  சென்றுவிட்டார். வழியில் அவருக்கு பசியெடுத்தது. அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு சென்றார்.

# சுந்தரரிடம் அவர் அருகில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி, தான் அவ்விடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும் , அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார். அதன்படி சுந்தரரும், அவருடன் சென்ற அடியார்களும் சாப்பிடச் சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார். அதன்பின்பு சாப்பிட்ட களைப்பில் அன்னப்பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சுந்தரர். சற்றுநேரம் கழித்து அவர் விழித்தபோது, அங்கு அன்னதான பந்தலோ, சாப்பாடு பரிமாறியதற்கான தடமோ தெரியவில்லை .

# வியந்த சுந்தரர், தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவன்தான் என அறிந்து கொண்டார். பின்பு சிவனை வேண்டவே, அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். அதன்பின்பு இங்கு வந்த சுந்தரர், சிவனை வேண்டி பதிகம் பாடினார்.

# சுந்தரருக்கு, சிவன் அன்னம் பறிமாறிய  விழா சித்ராபவுர்ணமியன்று  நடக்கிறது.


#  சிவனிடம் இங்கு வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு  குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

# சாந்த துர்வாசர்  இங்குள்ள காவியங்கண்ணி அம்பிகைக்கு, “சுகப்பிரசவ நாயகி’ என்ற பெயரும் உண்டு.


# அன்னைக்கு  நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அதையே பிரசாதமாக எடுத்துச்செல்கிறார்கள். இதனால், சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

#  பிரகாரத்தில் துர்வாசர், சாந்த கோலத்தில் சிரித்தபடி காட்சி தருகிறார். இவர் இடது கையில் ஏடு வைத்து, வலக்கையில் அருள் செய்தபடி காட்சி தருவது விசேஷம்.

#  சிவலோக நாதர், பூலோகநாதர், பைரவர், சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் ஆகியோரும் உள்ளனர்.

# தல வரலாறு
சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க சம்பந்தர், காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராட விரும்பினார்.

# தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார்.

#  சம்பந்தருக்கு காட்சி தந்த சிவன், அவரை சீர்காழிக்கு செல்ல வேண்டாமென்றும் இத்தலத்தில் அவருக்கு கங்கையை வரவழைத்துக் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இங்கிருந்த கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார்.

#  அதில் நீராடிய சம்பந்தர், பாவம்  நீங்கப்பெற்றார் .

#  பிற்காலத்தில் இத்தலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

# அதிசயத்தின் அடிப்படையில் இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக காட்சிதருகிறார்.

# திருக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டுள்ளது.

# காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள 13 வது சிவஸ்தலம் இதுவாகும் .

# திருக்கோவில் பத்தாம் நூற்றாண்டில் உத்தம சோழனால்  புனரமைக்கப்பட்டது.

# திருஞானசம்பந்தர் மகேந்திரப்பள்ளி சிவனை வழிபட்ட பிறகு இக்கோயிலுக்குச் சென்றார். இதுவே அவரது இரண்டாவது புனித யாத்திரையின் கடைசி ஆலயமாகும்.

# பிற்காலத்தில் மராட்டிய மன்னர்களும், குலோத்துங்க சோழனும், ராஜேந்திர சோழனும் ,விக்கிரம சோழனும் திருக்கோவிலை புனரமைப்பதற்க்கு உண்டான கல்வெட்டு ஆதாரங்கள் திருக்கோவிலில் உள்ளது .

# கல்வெட்டுகளின்படி  சிவபெருமான் *திருக்குருகாவூர் திருவெள்ளடை ஆண்டர்* ,

*திருக்குருகாவூர் வெள்ளடையப்பர்*,

*குருகாவூர் வெள்ளடையப்பன்* ,

*வெள்ளடை மகாதேவர் என்று அழைக்கப்பட்டார்*.

# அந்த இடம் ராஜாதிராஜா  வளநாட்டு திருவாலி நாட்டு குருகாவூரின் கீழ் இருந்தது.

#  மதுரையும் ஈழமும் கொண்டருளிய  ராஜகேசரிவர்மன்  திருபுவனச்  சக்கரவர்த்தி காலத்தில் *திருவாலி நாடு, எதிர்லிச் சோழ  சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது*

#  சிலையின் கீழ், அடிவாரத்தில் *"வெண்ணைலுடையான்  ஈழத்தங்கிள்ளை  ஆரூரன்*"என்று பொறிக்கப்பட்டுள்ளது.

# திருக்கோவில் குடமுழக்கு விழா 1986 ஜூன் 18 அன்று நடைபெற்றது .

# *சமஸ்கிருதத்தில் வெள்ளடை என்றால் "பரமகயம்" - இதை "தெய்வத்தின் உறைவிடம்" என்று அழைக்கலாம்* .

# திருக்கோவில் முகவரி

அருள்மிகு வெள்ளடைநாத சுவாமி திருக்கோயில், திருக்குருகாவூர்-609115, வடகால் போஸ்ட், சீர்காழி தாலுகா,நாகப்பட்டினம் மாவட்டம்

🙏🏻 நற்றுணையாவது நமசிவாயமே 🙏🏻

சித்தமெல்லாம் சிவமயத்துடன் ஞான சிவம் என்கின்ற ஞானசேகரன் .

🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻

Saturday, July 23, 2022

*இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்*

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவை:

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும் 
மதுரையில் வாழ்ந்தாலும் 
மதுரையில் இறந்தாலும் 
மதுரையில் வழிபட்டாலும் 
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்

இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.

சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி.

இனிய ஈசன் சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்

*இனிய ஈசன் சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்*

🌹அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவமே என் வரமே 🌹

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையை பணிந்து 🙏

சிவனின்றி ஓர் அணுவும் அசையாது

*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.

அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.

சிவபூமிதான் நாம் வாழும் பூமி .

இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்

இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.

பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.

நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

திருக்கேதீஸ்வரம்,

திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.

உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்

புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,

ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,

வாழ்க்கையையும்,

பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).

வட அமெரிக்காவில்கொலராடா என்றஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கத்தின் வடிவத்தில் வத்திக்கான் சிட்டி டாப் வியூ சிவலிங்கம் வடிவத்தில் வத்திக்கான் நகரம் கட்டப்படுவதை ஒருவர் கவனிக்க முடியும் (மேல் பார்வையில் இருந்து பார்க்கப்படுகிறது)

அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.

பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.

சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.

சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.

எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.

எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்

சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.

சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம் எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் ஈசனே 🙏

உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தைக்கு ஆத்ம நமஸ்காரங்கள்

அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நடுபழனி மரகத_தண்டாயுதபாணி திருக்கோயில் வரலாறு:

*🙏🌹*


45 அடி உயர முருகன் சிலை கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.

பனையபுரம் அதியமான் கோவில் முகப்புத் தோற்றம் 45 அடி உயர முருகன் சிலை மரகதத்தால் ஆன பாலதண்டாயுதபாணி சிலை முத்துசுவாமி சித்தரால் எழுப்பப்பட்ட மலைக்கோவில், நடுபழனி என காஞ்சிப் பெரியவரால் பெயர் சூட்டப்பட்டத் தலம், மரகத மூலவரைக் கொண்டு விளங்கும் திருக்கோவில், மணப்பேறு, மகப்பேறு அருளும் ஆலயம், 45 அடி உயர முருகன் சிலை கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில்

தல வரலாறு :

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சியைச் சார்ந்த முத்துசுவாமி என்ற மிராசுதாரர், முருகப்பெருமானின் திருவருளால் வடஇந்திய யாத்திரையை முடித்து, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெரும்பேர் கண்டிகை என்ற திருப்புகழ் தலத்திற்கு வந்தார். மலை மீது சுமார் நான்கு ஆண்டுகள் தவமிருந்தார்.
அங்கு தங்கியிருந்த காலத்தில் அவரது கனவில் குழந்தை வடிவத்தில் தோன்றிய முருகப்பெருமான், ‘பெருங்கரணையில் உள்ள மலையில் எனக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அதன்படி, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெருங் கரணை ஊரில் உள்ள மலையைக் கண்டறிந்தார். அதன் உச்சியில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். செடிகள், பாறைக் கற் களைச் சரிசெய்து, அதன்பிறகு அங்கேயே முருகன் சிலையை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபாடு தொடங்கினார். இதற்கு ஊர் மக்கள் பெரும் ஒத்துழைப்பு தந்தனர். ஒருநாள் பெருத்த மழையால் கீற்றுக்கொட்டகை விழுந்துவிட, தனி ஆலயம் எழுப்ப தீர்மானித்து, சிறிய ஆலயம் எழுப்பினர். இந்த மலையைச் சீரமைக்க முத்துசுவாமி சித்தர் பெரும்பாடுபட்டுள்ளார். அருகில் உள்ள ஊர்களுக்கு காவடியெடுத்து ஆடி, அவர்கள் தரும் அரிசி உள்ளிட்ட காணிக்கைகளைப் பெற்றார். அதனைக் கொண்டு மலையைச் சீரமைக்கும் பணியாட்களுக்குச் சமைத்து தந்தார். பக்தர்கள் தரும் காணிக்கைகளைத் திருப்பணிக்கு பயன்படுத்தினார். எவரிடமும் கையேந்தி நன்கொடை கேட்டதில்லை. குறையோடு வருபவர்களுக்கு திருநீறு தந்து குணமாக்கும் வல்லமையும், முத்துசுவாமி சித்தருக்கு முருகன் திருவருளால் கிடைத்துள்ளது. இப்படி முத்துசுவாமி சித்தரின் ஐம்பது ஆண்டு கால உழைப்பில் உருவானதே நடுபழனி திருக்கோவில்.
இந்த சமயத்தில் காஞ்சிப் பெரியவர் ஒருமுறை வருகை தந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான், பழனி பாலதண்டாயுத பாணியாகவே காட்சி தர, இந்தத் தலத்தை ‘நடு பழனி’ என்று அழைத்தார் காஞ்சிப் பெரியவர். அதன்பிறகு, முருகப்பெரு மானின் மூலவர் சிலையை, மரகத சிலையாக வடித்து, புதிய தண்டாயுதபாணியாக பிரதிஷ்டை செய்து, 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமது பூவுலக நிறைவுக்காலம் வருவதை உணர்ந்த
முத்துசுவாமிகளின் கனவில், மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் உருவம் வந்தது. அதே போல் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் கனவில், முத்துசுவாமி சித்தரின் உருவம் தோன்றியிருக்கிறது. அதன்பிறகு ஒரு முறை நடுபழனிக்கு, மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகள் வருகை தந்தார். அவரைக் கண்ட முத்துசுவாமி சித்தருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இருவரும் தங்களுக்கு தோன்றிய கனவைப் பற்றி பேசிக்கொண்டனர். அப்போதுதான் இருவருக்குமே ஒரே நேரத்தில் இதுபோன்ற கனவு வந்திருப்பது தெரியவந்தது.

ஆலய அமைப்பு :

நடுபழனி மலை, பசுமையான பெருங்கரணை கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 300 அடி உயரமுள்ள கனக மலையான நடுபழனி, வடக்கில் 128 படிகள் கொண்டு மலையேற வசதியாக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. மேற்குப்புறம் வாகனங்கள் மலையேறும் சாலை வசதியும் இருக்கிறது. அங்கே மலேசியாவில் பத்துமலைப் பகுதியில் உள்ள முருகப்பெருமான் சிலையைப் போலவே, 45 அடி உயர முருகப்பெருமான் கம்பீரமாய் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். மலை உச்சியில் இந்த கோவில் உருவாக மூலக்காரணமான முத்துசுவாமி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதி முன்மண்டபத்தோடு எழிலாக ஆலய வடிவில் கட்டப்பட்டுள்ளது.
சற்று மேலே இடும்பன் சன்னிதியைக் கடந்து சில படிகள் ஏறினால், நடுபழனி முருகன் ஆலயம் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றது. கணபதி, தத்தாத்ரேயர் சன்னிதிகள் சுற்றி அமைந் திருக்க, நடுநாயகமாக மரகதக் கல்லால் ஆன தண்டாயுதபாணி கிழக்கு நோக்கியபடி அருள்காட்சி தருகிறார். இவரின் வடிவம் நமக்கு பழனி மலையில் இருக்கும் பாலதண்டாயுதபாணியின் உருவத்தை நினைவுபடுத்துகிறது. ஆலய மகாமண்டபத்தின் இடதுபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகப்பெருமான், வலது புறம் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் வடிவமான தத்தாத்ரேயர், நாக தத்தாத்ரேயர், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகா லட்சுமி, உற்சவர் விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணியர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. மலை அடிவாரத்தில் விநாயகர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், ராஜேஸ்வரி அம்மன், நவக்கிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளன.

சுவாமிகளின் நெருங்கிய நண்பராக விளங்கிய முறப்பாக்கம் சுவாமிகளின் சமாதி மலையடிவாரத்தில், நவக்கிரக சன்னிதி அருகே அமைந்துள்ளது. இதனை சுவாமிகளே செய்து முடித்தார். இத்தலம் திருமண வரம், குழந்தை வரம் அருளும் தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பவருக்கும் பக்தர்களுக்கு, கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.விழாக்கள்: இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சஷ்டி உற்சவம் மற்றும் திருக்கல்யாணம், கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருநாள், முத்துசுவாமி சித்தர் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர, முருகனுக்குரிய கிருத்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்புடன் நடத்தப்படுகிறது. பவுர்ணமி தோறும் கிரிவலம் நடக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரி சனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

எல்லப்ப சித்தர்:

முத்துசுவாமி சித்தருக்கு முன்பாக, இம்மலை உச்சியில் எல்லப்ப சித்தர் என்பவர், வேல் ஒன்றை நிறுவி வழிபட்டு வந்ததாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இவரின் சமாதி, மலையடிவாரத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கே, விரிவாக்கம் செய்த குளம், ஆலயத்தின் தீர்த்தக்குளமாக அமைந்துள்ளது.

45 அடி உயர முருகன் :

இம்மலையின் மேற்கு அடிவாரத்தில் 45 அடி உயர முருகன் சிலை, மலேசிய பத்துமலை முருகன் சிலையைப் போல அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் அவதூத தத்த பீடத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டு, சுவாமிகளின் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தச் சிலை கனகமலை எனும் நடுபழனியின் அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

முத்துசுவாமி சித்தர் :

நடுபழனி தண்டாயுதபாணி மலைக்கோவிலை எழுப்பியவர் இவர்தான். இவர் முருகப்பெருமான் அருளால் பல சித்து விளையாட்டுகள் கை வரப்பெற்றிருந்தார். ஆனால் அந்த சக்திகளை எல்லாம் பக்தர்கள் நலம் பெறு வதற்காக மட்டுமே பயன்படுத்தினார். தன்னை நாடி வந்த அடியார்களுக்கு திருநீறு மட்டுமே தந்து அனைத்து வகை நோய் மற்றும் ஆபத்துக்களில் இருந்தும் காத்தருளியுள்ளதை பக்தர்கள் நினைவு கூருகின்றனர். இவர் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையில் வல்லவர் என்று இவரது சீடர்கள் பலரும் கூறுகின்றனர்.

அமைவிடம் : காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா பெருங் கரணை கிராமத்தில் உள்ள சிறிய மலையே நடுபழனியாகும். மேல்மருவத்தூருக்குத் தெற்கே 2 கி.மீ. தூரத்தில் இடதுபுறம் முருகன் கோவில் வளைவு வரும். அதில் நுழைந்ததும் ரெயில் கிராசிங் வரும். அதில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

🙏ஓம் முருகா 🙏


Tuesday, July 5, 2022

ஆனித் திருமஞ்சனம் ஸ்பெஷல் திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டை விரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன.இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில், திருச்சிற்றம்பலத்தில், இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.அதாவது நாம் தான் அது,அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்தத் திருநடனம்.அதாவது மனிதனின்அகம் ஒரு கோயில்.திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.பொதுவாகவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும்,சிவனே சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி திருச்சிற்றம்பலம் என்று கூறுவர். அதற்கு எதிர்புறம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் கூறுவர்.இதற்க்கு என்ன பொருள் என்றால் உன்னுள் இருக்கும் (பிண்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா, சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா, நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள்.அதற்கு எங்கே செல்ல வேண்டும் என்றால் தில்லையம்பலம் என்று எதிரில் உள்ளவர் பதில் வணக்கம் சொல்லுவர்.உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆத்மா நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறார்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும்.கூறுவதோடு நில்லாமல் தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை தரிசிக்க வேண்டும்.உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி.இதனை உணர்த்தவே திருசிற்றம்பலத்தில் நடராஜ பெருமான் மனித ரூபத்தில் ஆனந்தகூத்தாடுகிறான்.நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் . மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்.திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும், பேசும், செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புண்ணியம் சேர்க்கிறோம்..... நமது அறியாமையால் ஏற்படும் தவறுகள் எவ்வளவு என்பது நமக்கு தெரியாது. அதனால் நாம் திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா? மேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும், உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது.ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லிச் சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு ரஹசிய கோட் வேர்டாக இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று தன்பெயறை குறிப்பிட்டான்..... திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.

கூடா நட்பு

காலை வணக்கம்
GOOD MORNING 

"இன்றைய சிந்தனை.". 06.07.2022
..................................
''கூடா நட்பு .."
..................................

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். 

அதனால் தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது
நல்ல நட்பு இதயம் போல உனக்குத் தெரியாமலே உனக்காகத் துடிக்கும்! 

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்க விடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்துப் பள்ளத்தில் போட்டு விடுவார்கள்.

நல்ல நண்பர்கள் உங்களுடைய மகிழ்ச்சியின் போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள். 

தங்களைப் பற்றிய தம்பட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்.

திடீர் என்று வருபவர்களைத் தெரியாமல் நட்பாக்கிக் கொண்டால் அந்த நட்பு கேடாய்த் தான் முடியும் .

'மனம் கனத்து இருக்கிறது., பணம் எனக்குத் தேவையாக இருக்கிறது. எனக்கு உன் உதவி தேவை இருக்கு' என்று உங்களிடம் உதவி கேட்டு வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள். 

நட்பின் முக்கியத் தேவையே உதவுவதில் தான் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழல்களில் 'மட்டுமே' உங்களைத் தேடி வரும் நண்பர்கள் சுயநலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்,

அதே போல் பதவி ஆசையில் வரும் நட்புகள் நம்முடன் இருக்கும் உயிர் நட்புகளையே விரட்டச் சொல்வார்கள் அவர்கள் நல்ல பாம்பின் விஷம் போன்றவர்கள்.

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். 

நண்பனுக்கு இன்னொருவர் துரோகம் செய்து விட்டார்கள் என்றதும் அதை அறிந்து பொங்கி எழும் புனிதமான நட்பும் இந்த உலகத்தில் இருக்கிறது 

'உங்கள் நண்பர்களுடன் பேசும் போது உங்களுடைய மனம் 
நேர்சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர்சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். 

எதிர்சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.

சில நண்பர்களோடு பழகும் போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.

உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்கு பேரை நினையுங்கள். 

அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்கள் என்றால் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது.

ஆம்.,நண்பர்களே..

நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே, நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்!

எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யாதீர் அதன் வலி தாங்க முடியாதது. எல்லோரும் எல்லாவர்களுக்கும் நல்லவராய் இருக்க முடியாது 

எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்' என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்.

நல்ல நட்பே நம் வளர்ச்சி

வாழ்க வளமுடன்

Sunday, July 3, 2022

💚💜♥💛❤💛💚💜♥💛❤💛♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪#திருவாதவூரா்திருவாசகம்|||====|||====|||====|||====||| 🔔#சிவபுராணம்🔔 🙏🙏🙏🙏🙏🙏🙏>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<♥#திருச்சிற்றம்பலம்♥************************************🔥#பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்🔥#நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த🔥#மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 🔥#மறைந்திட மூடிய மாய இருளை🔥#அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்🔥#புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி🔥#மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை🔥#மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥**********************************💥 #எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால்,👣👣👣👣👣👣👣👣👣👣👣👣***********************************♦#தில்லையம்பலம்♦***********************************🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷

💚💜♥💛❤💛💚💜♥💛❤💛
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
#திருவாதவூரா்திருவாசகம்
|||====|||====|||====|||====|||
      🔔#சிவபுராணம்🔔
         🙏🙏🙏🙏🙏🙏🙏
>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<
♥#திருச்சிற்றம்பலம்♥
************************************
🔥#பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

🔥#நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த

🔥#மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 

🔥#மறைந்திட மூடிய மாய இருளை

🔥#அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்

🔥#புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி

🔥#மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

🔥#மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
**********************************
💥 #எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற எம் பெருமானே!
ஐந்து நிறங்களை உடையவனே! தேவர்கள் துதிக்க அவர்களுக்கு ஒளித்து இருந்தவனே! எம் பெருமானே! வலிய வினையையுடையவனாகிய என்னை, மறையும்படி மூடியுள்ள அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு, புண்ணிய பாவங்கள் என்கின்ற அருங்கயிற்றால் கட்டப்பெற்று, வெளியே தோலால் மூடி, எங்கும் புழுக்கள் நெளிகின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய, மலம் ஒழுகுகின்ற, ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய
 குடிசை குலையும்படி, ஐம்புலன்களும் வஞ்சனை பண்ணுதலால்,
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
***********************************
♦#தில்லையம்பலம்♦
***********************************
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷

Friday, July 1, 2022

🌹அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனடியை சிந்திப்போம் 🌹🌹காகபுஜண்டரின் திவ்விய சரித்திரம்🌹*63* *சீடர்களுடன் ஒரே இடத்தில்* *ஐக்கியமான ஒரு சித்தர் தலம்*.மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது.சித்தர்கள் மற்றும் மகான்களின் சமாதி சில ஆலயங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் மயிலாடுதுறை அருகே ஒரு சித்தர் தனது அறுபத்து மூன்று சீடர்களுடன் ஒரே இடத்தில் ஐக்கியமான தலம் ஒன்று உள்ளது. மயிலாடுதுறை சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆலயம் எனப்படும் இந்தத் திருக்கோவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது.சோழவள நாட்டில் உள்ள சீர்காழியில், 14–ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஆவார். இவர் திருச்செந்தூர் முருகப்பெருமானை போற்றி வழிபட்டு தவம் செய்து வந்தார். அவரது தவத்தின் பயனாக திருச்செந்தூர் முருகப்பெருமான், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு, மெய்ஞானம் தந்து அருள் வழங்கினார்.முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற சீகாழி சிற்றம்பல நாடிகள், அங்கிருந்து புறப்பட்டு மயிலாடு துறைக்குச் சென்றார். அங்கு ஒரு மடாலயம் அமைத்து அங்கேயே தங்கியிருந்து தவமியற்றி வந்தார். இவரிடம் உபதேசம் பெற்ற பலர், மெய்ஞான செல்வர்களாக விளங்கினர். இவரது சீடர்களாக அறுபத்துமூன்று பேர் இருந்தனர். இந்த நிலையில், சிற்றம்பல நாடிகள் சமாதி நிலையை அடைய விரும்பினார். சீடர்களிடம் தனக்கு உதித்த விருப்பத்தை எடுத்துக் கூறினார். சீடர்கள் அனைவருமே தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். இதன் பின்பு சோழ மன்னனை அழைத்த சீகாழி சிற்றம்பல நாடிகள், ‘நான் என்னுடைய சீடர்களோடு சித்திரை மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர நாளில் ஜீவ சமாதி என்னும் நிஷ்டையில் கூட விரும்புகின்றேன். அதற்கு தகுந்த இடம் ஒன்றை ஏற்பாடு செய்து தாருங்கள்’ என்று கேட்டார். அவரது கோரிக்கையை ஏற்ற மன்னன், அவரது விருப்பப்படியே மயிலாடு துறைக்கு மேற்கு பகுதியில் உள்ள காவிரிக்கரை சோலை ஒன்றில் இடம் ஒதுக்கிக் கொடுத்தான். பின்னர் அங்கு அறுபத்துமூன்று சமாதிக் கோவில்கள் அமைத்து, அதனைச் சிற்றம்பல நாடிகளிடம் தெரிவித்தான். அதே போல இந்தச் செய்தி நாடெங்கும் பறையறைந்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிசயத்தைக் காண பலரும் அங்கே கூடி நின்றனர். தான் குறித்த நாளில் சிற்றம்பல நாடிகள், தன் அடியவர் கூட்டத்தோடு அச்சோலைக்கு எழுந்தருளினார். அங்கிருந்த அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார். அனைவரும் கேட்கும் வகையில், மூன்று திருவெண்பாக்கள் பாடினார். தனக்கென்று அமைத்த சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி, மோன நிலையில் வீற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சீடர்களும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கிச் சித்தி பெற்றனர். இந்த இடம் தற்போது சித்தர்காடு என்ற பெயருடன் விளங்குகின்றது. இத்தலமே தற்போது சீகாழி சிற்றம்பலநாதர் திருக்கோவிலாக அருள் வழங்கி வருகின்றது. சித்தர் அங்கிருந்து அன்று போல் இன்றும் அருள்புரிந்து வருகின்றார். முறையாக தரிசித்து வணங்கும் எல்லாருக்கும் அவரவர் வேண்டும் வரங்களை வழங்கி வருகிறார். கிழக்கு பார்த்த வண்ணம் எளிய நுழைவு வாசலைக் கொண்டு அமைந்துள்ளது இந்த ஆலயம். கருவறை முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறைக்குள் தல நாயகர் சீகாழி சிற்றம்பல நாடிகளின் ஜீவ சமாதியும், அதன் மீது சிவலிங்கத் திருமேனியும் ஒளி வீசும் பொலிவோடு காட்சி தருகிறது. இவரே முக்காலத்து வினைகளையும் போக்க உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையைச் சுற்றி அறுபத்து மூன்று சீடர்கள் ஐக்கியமானதைக் குறிக்கும் விதமாக அறுபத்துமூன்று சிவலிங்கத் திருமேனிகள், நேர்த்தியாக ஒரே வரிசையில் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. மேலும், கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன.கருவறையின் பின்புறத்தில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சப்த பீடங்கள், தனி சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரக சன்னிதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அம்பாள், சிவயோக நாயகி என்ற பெயரில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில், சீகாழி சிற்றம்பல நாடிகளுக்கு குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதேபோல, மாதந்தோறும் திருவோணத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் செய்து வருகிறது. காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும். இந்த சமயத்தில் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம். *அமைவிடம்*:நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலத்தைக் கடந்ததும், சித்தர்காடு ஊராட்சி வரும். சாலையோர வளைவும் தென்படும். அதில் நுழைந்து வடக்கே சிறிது தூரம் சென்றால் இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் சரணம்அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி 🦜🦜🦜

Followers

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

_வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்_ 'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னக...