Monday, July 25, 2022

சிவனின் பிருங்க நடனம் ஆடிய இடம்

நாகப்பட்டினம் மாவட்டம்நடனம் பிருங்க நடனம் எனப்படும் திருக்குவளை வட்டம், திருக்குவளை  சிவன்கோயில் 
Thirukuvalai sivan temple 

திருக்கோளிலி என்பதே திருக்குவளை ஆனது. 
இறைவன் : பிரமபுரீசுவரர்,, கோளிலிநாதேஸ்வரர்.
இறைவி: வண்டமர் பூங்குழலி.
தல மரம் : தேற்றாமரம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்.
நாவுக்கரசர்  சுந்தரர் பதிகம் பெற்ற தலம். 

தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று திருக்குவளை. இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.

 திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்குவளை  ஆகும். சப்த விடங்கரில் இவ்வூர் விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். திருவிழாவில் இவர் ஆடும்நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம், திருக்குவளை  சிவன்கோயில் 
Thirukuvalai sivan temple 

திருக்கோளிலி என்பதே திருக்குவளை ஆனது. 
இறைவன் : பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்.
இறைவி: வண்டமர் பூங்குழலி.
தல மரம் : தேற்றாமரம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம்.
நாவுக்கரசர்  சுந்தரர் பதிகம் பெற்ற தலம். 

தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று திருக்குவளை. இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.

 திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்குவளை  ஆகும். சப்த விடங்கரில் இவ்வூர் விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். திருவிழாவில் இவர் ஆடும் , வண்டு மலருக்குள் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று ஆடுவது. 

பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் மற்றும் ஹேமகாந்தன் எனும் மன்னன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.  
மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமென சொல்கின்றனர்.  அதனால்  இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது என்பது ஒரு விளக்கம். 

பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் பீமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது, பீமன் இங்கு வந்து இறைவனை வழிபட்டதால் தோஷம் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது. திருவாரூரை போல் நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே வரிசையில் தெற்குப் பார்த்து உள்ளனர். நவக்கிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் இருந்தால் அவை நீங்கி விடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.

கிழக்கு நோக்கிய ஐந்து  நிலை  ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. கோயிலின் எதிர்ல் பெரிய குளம் படித்துறைகளுடன் உள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து கொடிமரம் நந்தி தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முகமண்டபம் ஒன்றும் உள்ளது. அதன் மேல் குண்டையுரர் தந்த நெல்மலை காட்சியும் அதனை பூதங்கள் திருவாரூருக்கு கொண்டு சென்று பரவையாரிடம் கொடுக்கும்  காட்சியும் சுதையாக உள்ளன. இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்  சுவாமி அவரின்  தென்புறம் தியாகராஜர்  சன்னதி உள்ளது. 

கருவறை கோட்டங்களில் விநாயகர் நடராஜர் தென்முகன்  லிங்கோத்பவர்  பிச்சாடனர் அர்த்தநாரி துர்க்கை உமாமகேஸ்வரர் உள்ளனர். 
பிரகாரவலம் வரும் போது தென் மேற்கில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.  தியாகவிநாயகரும், அடுத்து விஸ்வநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சன்னதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு ஒரு  சன்னதி  உள்ளது. இறைவனின் இடதுபுறம் அம்பிகை வண்டமரும்பூங்குழலாள்  கிழக்கு நோக்கி தனிக்கோயில் கொண்டு உள்ளார்.  இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. அகத்தியர் பூசித்த லிங்கம் ஒன்றும் பிரகாரத்தில் இருக்கிறது. 

இத்தலத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் உள்ள குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சுந்தரருக்கு மலைபோல் நெல்லை அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டார். இறைவன் பூதகணங்கள் மூலம் அவற்றை திருவாரூரில் சேர்ப்பித்தார். 

இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள் - சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார் ' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.
சோழமன்னன் ராஜராஜன் காலத்தில் அருமொழி தேவவளநாட்டு அளநாட்டிலும், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் ஆகிய சோழ மன்னர்கள் காலத்தில் ராஜேந்திர சோழ வளநாட்டு இடை அள நாட்டிலும், பாண்டியன் இரண்டாம் ஜடாவர்மன் சுந்தரன் காலத்தில் ராஜேந்திர சோழ வள நாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்திலும் திருக்கோளிலி என்னும் இவ்வூர் திகழ்ந்ததாகக் கல்வெட்டுச் சாசனங்கள் குறிக்கின்றன. கோளிலி என்ற பெயர் திருக்குவளை என இப்போது வழங்கப்படுகிறது. 

திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள பாங்கல் என்ற ஊரிலிருந்து கிழக்கு நோக்கிப் பிரியும் சாலையில் எட்டு கிமி தொலைவில் திருக்குவளை உள்ளது. ஊரின் நடுவே பெரிய மதில்சுவ்ருடன் கோயில் எதிரில் பிரம்மதீர்த்தம் கொண்டு அழகாக உள்ளது. 
 திருப்பணிகள் தொடங்க உள்ளது விரைவில் அழகிய திருக்கோயிலை  காண வாருங்கள். 
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்எனப்படும், வண்டு மலருக்குள் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று ஆடுவது. 

பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் மற்றும் ஹேமகாந்தன் எனும் மன்னன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.  
மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமென சொல்கின்றனர்.  அதனால்  இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது என்பது ஒரு விளக்கம். 

பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் பீமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது, பீமன் இங்கு வந்து இறைவனை வழிபட்டதால் தோஷம் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது. திருவாரூரை போல் நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே வரிசையில் தெற்குப் பார்த்து உள்ளனர். நவக்கிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் இருந்தால் அவை நீங்கி விடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.

கிழக்கு நோக்கிய ஐந்து  நிலை  ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. கோயிலின் எதிர்ல் பெரிய குளம் படித்துறைகளுடன் உள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து கொடிமரம் நந்தி தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முகமண்டபம் ஒன்றும் உள்ளது. அதன் மேல் குண்டையுரர் தந்த நெல்மலை காட்சியும் அதனை பூதங்கள் திருவாரூருக்கு கொண்டு சென்று பரவையாரிடம் கொடுக்கும்  காட்சியும் சுதையாக உள்ளன. இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார்  சுவாமி அவரின்  தென்புறம் தியாகராஜர்  சன்னதி உள்ளது. 

கருவறை கோட்டங்களில் விநாயகர் நடராஜர் தென்முகன்  லிங்கோத்பவர்  பிச்சாடனர் அர்த்தநாரி துர்க்கை உமாமகேஸ்வரர் உள்ளனர். 
பிரகாரவலம் வரும் போது தென் மேற்கில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார்.  தியாகவிநாயகரும், அடுத்து விஸ்வநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சன்னதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு ஒரு  சன்னதி  உள்ளது. இறைவனின் இடதுபுறம் அம்பிகை வண்டமரும்பூங்குழலாள்  கிழக்கு நோக்கி தனிக்கோயில் கொண்டு உள்ளார்.  இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. அகத்தியர் பூசித்த லிங்கம் ஒன்றும் பிரகாரத்தில் இருக்கிறது. 

இத்தலத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் உள்ள குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சுந்தரருக்கு மலைபோல் நெல்லை அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டார். இறைவன் பூதகணங்கள் மூலம் அவற்றை திருவாரூரில் சேர்ப்பித்தார். 

இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள் - சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார் ' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.
சோழமன்னன் ராஜராஜன் காலத்தில் அருமொழி தேவவளநாட்டு அளநாட்டிலும், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் ஆகிய சோழ மன்னர்கள் காலத்தில் ராஜேந்திர சோழ வளநாட்டு இடை அள நாட்டிலும், பாண்டியன் இரண்டாம் ஜடாவர்மன் சுந்தரன் காலத்தில் ராஜேந்திர சோழ வள நாட்டு வண்டாழை வேளூர் கூற்றத்திலும் திருக்கோளிலி என்னும் இவ்வூர் திகழ்ந்ததாகக் கல்வெட்டுச் சாசனங்கள் குறிக்கின்றன. கோளிலி என்ற பெயர் திருக்குவளை என இப்போது வழங்கப்படுகிறது. 

திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள பாங்கல் என்ற ஊரிலிருந்து கிழக்கு நோக்கிப் பிரியும் சாலையில் எட்டு கிமி தொலைவில் திருக்குவளை உள்ளது. ஊரின் நடுவே பெரிய மதில்சுவ்ருடன் கோயில் எதிரில் பிரம்மதீர்த்தம் கொண்டு அழகாக உள்ளது. 
 திருப்பணிகள் தொடங்க உள்ளது விரைவில் அழகிய திருக்கோயிலை  காண வாருங்கள். 
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...