Tuesday, September 20, 2022

மகாளய_அமாவாசை:அன்று செய்ய_வேண்டிய_தானங்கள்

#அண்ணாமலை சிவமே
#அருணாச்சல சிவமே.....

#மகாளய_அமாவாசை: 
#செய்ய_வேண்டிய_தானங்கள்...

_மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்._

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

*#அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும்*

*#துணி - ஆயுள் அதிகமாகும்*

*#தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்*

*#தீபம் - கண்பார்வை தெளிவாகும்*

*#அரிசி - பாவங்களை போக்கும்*

*#நெய் - நோய்களை போக்கும்*

*#பால் - துக்கம் நீங்கும்*

*#தயிர் - இந்திரிய சுகம் பெருகும்*

*#பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்*

*#தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்*

*#வெள்ளி - மனக்கவலை நீங்கும்*

*#பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்*

*#தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்*

*#நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்*

*#பூமி தானம் - ஈஸ்வர தரிசனம் உண்டாகும்*

சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். #அவர்களால் 
#பெரிய_அளவில்_தானம் செய்ய இயலாது. #அவர்கள்_கவலை #கொள்ள_வேண்டாம். 

*பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். 

கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. 

பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம்.

 ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். 

#பசுவிற்கு #வாழையிலையில் #சாதத்தை_அளிக்கலாம். #பழவகைகளை_கொடுக்கலாம்.*

பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். 

அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். 

#இதை_அதிகமாக #தரக்கூடாது. பசுவிற்கு #வயிற்றுஉபாதையை #உண்டாக்கும்.

#கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். 

அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும்.

 பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். 

எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு #தங்களால்_இயன்ற_அளவு_உணவை_அளிக்கவும்.

_அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.....

#மகேஷ்வரன் அருளோடு ......

#ரமணர் திருவடிகளே
சரணம் சரணம் ....

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...