*🙏உழவாரப்பணி என்றால் என்ன?*
*இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை.கோயிலுக்கு நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்*
*உழவார பணி என்றால் என்ன?*
* ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்*
*அவையாவன:*
*1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை எடுத்து குப்பை கூடங்களில் போடுவது*
*2. பக்தர்கள் இறைவன் அருள் வேண்டாம் என சொல்லி தூண்களில் கொட்டும் திருநீறு குங்குமம் போன்றவற்றை சுத்தம் செய்வது*
*3. இறைவனுக்கு சாற்றப்படும் நிர்மால்ய பூக்களை எடுத்து நந்தவனத்தில் போடும் பணி.*
*4. திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது..*
*5. சுவாமியின் ஆடைகளை துவைப்பது.*
*6. அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது.*
*7. நந்தவனத்தை தூய்மைபடுத்துவது.*
*8. தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தப்படுத்துவது*
*9. கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது.*
*10. சிவாச்சாரியார்களின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது.*
*11. அறுபத்து மூவர் மற்றும் கல் திருமேனிகளுக்கு மாவு , தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது.*
*12. திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது.*
*13. வாரம் ஒரு முறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மெழுகிடுவது.*
*14. திருக்கோயிலை சுற்றி கோலமிடுவது.*
*15. கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது.*
*16. கற்பூர புகையால் படிந்திருக்கும் கரும்புகைகளை துடைப்பது..*
*17.கோவில் சுற்றுச்சுவர் அல்லது மதில் சுவரை, சுத்தம் செய்து வெள்ளை அடிப்பது.போன்ற பணிகளே உழவாரப் பணி ஆகும்.*
*இப்பணிகளை குறைந்தது மாதம் ஒரு நாள் செய்வோமானால் உடலும் , மனதும் வலிமை பெறும்.*
*உழவாரம் செய்வீர் இறைவன் அருள் பெறுவீர்.*
*உழவாரப்பணி செய்யும் அன்பர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு செல்வதில்லை* என்பது அடியார்களின் அனுபவம்.
*அடுத்த முறை உங்கள் அருகில் ஏதாவது உழவாரப்பணி நடைப்பெற்றால், தவறாமல் கலந்து கொண்டு அருள் பெறுங்கள்*!
No comments:
Post a Comment