Monday, February 13, 2023

குல தெய்வத்திற்கு விளக்கேற்றும் முறை

⛩️⛩️⛩️குல தெய்வத்திற்கு விளக்கேற்றும் முறை⛩️⛩️⛩️⛩️
நம் வீட்டில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைக்கும் மூல காரணமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பெரும்பாலானோருக்கு பணமாகத்தான் இருக்கும்.

அந்தப் பணம் நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும். 

அனேகமானவர்களின் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை மறந்துவிடுகிறார்கள்.

அதாவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது வேறு.

தினம்தோறும் நம் வீட்டில் அந்த குலதெய்வத்தை நினைத்து வழிபடுகின்றோமா, என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். 

குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். 

அது என்ன தீபம் என்பதை தெரிந்து கொள்வோமா?

இந்து ஆலயங்களில் தலவிருட்சம் வைத்து 
பேணும் மரபு உண்டு.

அந்த வகையில்…
திருஇரும்பை மாகாளம்,
திருப்பழமணிப் படிக்கரை,
திருக்கொடி மாடச்செங்குன்னூர், 
திருவனந்தபுரம்…. முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக உள்ளது.

இலுப்பை மரம் கொத்து கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்நிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப் பெற்ற விதையினையும் கொண்டது.

இதன் சாறு பால் தன்மை கொண்டது.

இந்த மரம் இருப்பை, ஓமை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. 

இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பை எண்ணை எனப்படுகிறது. 

இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும்,
சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது. 

ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது. 

இந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கில், 
ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு, இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

அந்த தீபத்தை ஏற்றும்போது உங்கள் குலதெய்வத்தின் பெயரை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே ஏற்றுவது அவசியமாகும்.

இந்த தீபமானது உங்கள் குலதெய்வத்திற்க்கு மட்டும் என்ற எண்ணத்தோடு ஏற்றவேண்டும்.

இந்த தீபத்தை உங்களால் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள் ஏற்றுவது சிறந்தது. 

முடியாதபட்சத்தில் காலை ஏழு மணிக்குள்ளாவது இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள்.

இலுப்பை எண்ணெய்க்கு அனைத்து தெய்வங்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை உடையது. 

சிவன் கோவில்களில் பெரும்பாலும் இலுப்பை எண்ணெயின் மூலம் தான் விளக்கினை ஏற்றி வந்தார்கள்.

குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வெள்ளைதிரி போட்டு வெள்ளிக்கிழமையன்று 
பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும்.

இதே போல் மஞ்சள் திரியிட்டால் குபேரன் 
அருள் கிடைக்கும்.

சிகப்பு திரியிட்டால் நம் கடன் தொல்லை தீரும். 

இப்படியாக இலுப்ப எண்ணெயில் முறையாக தீபத்தை ஏற்றும்போது நம்மால் நல்ல பலனை அடைய முடியும்.

எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் சரி,
வழிபடவில்லை என்றாலும் சரி உங்கள் வீட்டு குலதெய்வத்தை மறந்தும்கூட தயவுசெய்து வழிபடாமல் இருந்து விடாதீர்கள். 

ஏனென்றால் நம் குலத்திற்கு எந்த விதமான கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, நம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம்.

இப்படிப்பட்ட குல தெய்வத்தை மறப்பது 
என்பது நம் குடும்பத்திற்கு நல்லது அல்ல.

ஆயிரம் பசுநெய் விளக்குகளை ஏற்றி வைப்பதன் பலன் ஒரு இலுப்பெண்ணை விளக்கு ஏற்றி வைப்பதற்கு சமம்.

*குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால், அஷ்டலட்சுமிகளும் அள்ளித் தருவார்கள்.*...... நற்பவி 🙏🏾🪔🪔🙏🏾sv

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...