Sunday, March 26, 2023

சிவபெருமானின் கண் :ருத்ராட்சம் என்பது சிவனின் கண் என போற்றப்படுகின்றது.

ருத்ராட்சம் என்பது சிவன் முதல் சித்தர்கள், வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகின்றது. சிவ பெருமான் தன்னை பொன்னால் அலங்கரிக்காமல் ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் அதிகமாகத் தானே இருக்கும்.

இங்கு நாம் ருத்ராட்சம் முகம் குறித்தும், எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் அணியலாம் என்பது குறித்தும் விரிவாக பார்ப்போம்.

சிவபெருமானின் கண் :
ருத்ராட்சம் என்பது சிவனின் கண் என போற்றப்படுகின்றது. ருத்ரானான சிவனின் அருளை நமக்கு கொண்டுவருவதற்காக ருத்ராட்சம் அணியப்படுகின்றது.

ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது.

ருத்ராட்சம் முகம்ங்கள் :

ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம். 5 கோடுகள் இருந்தால் ஐந்து முக ருத்ராட்சம், ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது.
மொத்தம் 1 - 21 முக ருத்ராட்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசேஷ பலன்களைத் தரக்கூடியது.

ஒரு முகம்:
மிகவும் அரிதாக கிடைப்பது ஒரு முக ருத்ராட்சம் (ஏக முகம் ருத்ராட்சம்). மோட்சம் தரக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது. அருவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணிய உகந்தது.

இரண்டு முக ருத்ராட்சம் :
சிவன் சக்தி இணைந்த ருத்ராட்சமாக பார்க்கப்படுகிறது இந்த இரு முக ருத்ராட்சம். 
பாவத்தை நீக்கவல்ல இந்த ருத்ராட்சம், ஆண் - பெண் என இருவர் தம்பதியராக ஒருநிலை அடைவதைப் போல, ஒரு நிலைத் தன்மை அடைய மிகவும் உகந்தது.

மூன்று முகம் ருத்ராட்சம் 
இந்த ருத்ராட்சத்தை ஆளும் கோளாக செவ்வாய் பகவான் உள்ளார். தீயானது எல்லா கெட்டதையும் தன்னில் போட்டாலும், அது தூய்மையாக இருப்பது போல, இதை அணியும் நபருக்கு வாழ்வில் இருக்கும் அனைத்து தவறுகளிலிருந்து விலகி துய்மை நிலை அடைவார்.

நான்கு முகம் ருத்ராட்சம் 
நான்கு முக ருத்ராட்சத்த்தை ஆளக்கூடியவர் புதன் பகவான். பிரம்ம தேவரை குறிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனை அணிபவர் ஆக்க சக்தியை பெறுவார். தன்னுள் இருக்கும் புத்தி கூர்மை, திறமை, சாதூர்யத்தை வெளிப்படுத்தக் கூடிய நிலை இருக்கும். இதனை தங்களின் வலது கையில் கட்டினால் மிக சிறப்பானது. எந்த போட்டியாளரோ, எதிரியோ அவர் முன் நிற்க முடியது.

ஐந்து முகம் ருத்ராட்சம் 
ஐந்து முக ருத்ராட்சத்தை குரு பகவான் ஆளக்கூடியவர். மங்களத்தின் இறுப்பிடமாக பார்க்கப்படுகிறது. இதை அணிபவரின் ஆரோக்கியம் சிறப்பாகும். மனம் அமைதியடையும்.

ஆறு முகம் ருத்ராட்சம் 
ஆறு முக ருத்ராட்சத்தை சுக்கிர பகவான் ஆளக்கூடியவர். நம் அறிவு மேம்படவும், ஒரு தலைமைப் பண்பைப் பெறவும் இதை அணியலாம். ஒருவரின் பிறப்பு உறுப்பை ஆள்வதால், நாம் இச்சைக்கு ஆளாகாமல் பேரின்பத்தை பெற வழியை தேடுவோம்.

ஏழு முகம் ருத்ராட்சம் 
ஏழு முக ருத்ராட்சத்தை சனி பகவான் ஆளக்கூடியவர். இது தேவி திருமகளையும், சப்த கன்னிகள், ஆதிஷேசனை குறிக்கும் அம்சம். யோக சக்தியை தரக் கூடிய இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் எந்த ஒரு நிதி சிக்கலிலிருந்தும் வெளிவரலாம்.

எட்டு முகம் ருத்ராட்சம் 
எட்டு முக ருத்ராட்சத்தை ராகு பகவான் ஆளக்கூடியவர். இதனை அணிவோருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். அஷ்ட கணபதி, அஷ்ட லட்சுமி உள்ளிட்டோரின் அம்சமாக பார்க்கப்படுவதால் செல்வ வளம் கூடும்

9 முக ருத்ராட்சம் :

ஒன்பது முக ருத்ராட்சத்தை கேது பகவான் ஆளக்கூடியவர். சக்தியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால் உடல் மற்றும் மன சக்தி ஏற்படும். செயல் திறன் கூடும். பில்லி சூனியத்தை நீக்கும் ஆற்றல் மிக்கது.

10 முக ருத்ராட்சம் :
விஷ்ணுவின் அம்சமாக பத்துமுக ருத்ராட்சம் பார்க்கப்படுகிறது. இது கோல்களினால் எற்படும் தீவினைகளிலிருந்து காக்கின்றது. இதை அணிபவரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக செழிக்கும்,

11 முக ருத்ராட்சம் :
அனுமனின் அம்சமாக 11முக ருத்ராட்சம் பார்க்கப்படுகின்றது. இதை அணிவதால் நேர்மையான பாதையை கடைப்பிடிப்பதோடு, எதிர்த்து வரும் தீய சக்திகளிலிருந்து கக்க வல்லது. துணிவையும், வெற்றியையும் தர வல்லது.

12 முதல் 21 வரை ருத்ராட்சங்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. மொத்தம் 38 வகை ருத்ராட்சங்கள் இந்த பூமியில் தோன்றியது. தற்போது 1, 11, 7, 8, 9 முக ருத்ராட்சம் இவை எல்லாமல் அபூர்வமாகக் கிடைக்கின்றன. மிக அதிக விலை கொண்டதாக உள்ளது.

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...