Sunday, May 28, 2023

கிருஷ்ண ராம நாம மகிமை

கிருஷ்ண ராம நாம மகிமை
1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'கிருஷ்ண, ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். 

நமது ஒவ்வொரு மூச்சும் கிருஷ்ண, 'ராம' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.

2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு கிருஷ்ண, ராம நாமமே 
மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் கிருஷ்ண, ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'கிருஷ்ண, ராம  ' என்றே நடக்கவேண்டும் .

3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'கிருஷ்ண, ராம நாம ஜெபமே.' கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லா திசைகளிலும்  அதுபோல கிருஷ்ண, ராம நாமத்தில்  கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.

4. ' கிருஷ்ண, ராம நாமத்தால் ' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும், குருவை அடைய கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'கிருஷ்ண, ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'கிருஷ்ண, ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'கிருஷ்ண, ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'கிருஷ்ண, ராம நாமத்தின் நாளாக இருக்கவேண்டும்.

6. ' கிருஷ்ண, ராம நாமத்தில் ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,

7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'கிருஷ்ண, ராம நாமத்தை ' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'கிருஷ்ண, ராம நாமம்' சொல்லிசாப்பிடலாம். கிருஷ்ணரும் அவனது நாமும் ஒன்றே!

8. 'கிருஷ்ண, ராம நாமத்தை எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'கிருஷ்ண, ராம நாமத்தை சொல்ல மனம் மட்டும் போதும். இதைதான் "நா உண்டு, நாமம் உண்டு" என்றனர் ஆச்சாரியர்கள் .

9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'கிருஷ்ண, ராம நாமத்தை ' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .

10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'கிருஷ்ண, ராம நாமத்தில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'கிருஷ்ண, ராம நாமமே சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு 

11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'கிருஷ்ண, ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'கிருஷ்ண, ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். 

12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'கிருஷ்ண, ராம நாமத்தை ' சொல்லலாம்.
அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது ) 
ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் கிருஷ்ண, ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதரின் தலையில்  சமர்ப்பிக்கிறார்கள். காசி விஸ்வநாதர் ராம நாமத்தை சொல்லி தான் காசியில் அனைத்து ஜீவன்களையும் முக்தி அடைய செய்கிறார் 

13. பெண்களின் மாதாந்திர நாட்களிலும் 'கிருஷ்ண, ராம நாம' சொல்லாம் 'கிருஷ்ண, ராம நாம சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

பெண்கள் சமைக்கும்பொழுது கிருஷ்ண, ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே கிருஷ்ண, ராம பிரசாதமாகி அதை உண்பவருக்கு தூய குணங்களையும் தன்மையையும் பெறுவோம் 

14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தைய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், பல கோடி பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'கிருஷ்ண, ராம நாமத்தை ஒரு முறை சொல்லமுடியும்.

15. 'கிருஷ்ண, ராம நாமத்தை உரக்க சொல்லுங்கள். காற்றில் கிருஷ்ண, ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.
சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் பறவைகள், விலங்குகள் எல்லாம் 'கிருஷ்ண, ராம நாமத்தை' கேட்டு கேட்டு அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே!

 யார் அறிவர்? நமது முந்தைய பிறவிகளில் நாமும் 'கிருஷ்ண, ராம நாமத்தை' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை .....கிருஷ்ணரும் ராமனே அறிவான்.
'கிருஷ்ண, ராம நாமம் ' சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய சக்திகளை....... ..... அழித்துவிடும்.

'கிருஷ்ண, ராம நாம அதிர்வு நமது மனதில் உள்ள ........காமம், கோபம் , லோபம், மோஹ, மத, பொறாமை , போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமான...மனதை சரிசெய்வது.........கிருஷ்ண, ராம நாம அதிர்வு ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு காரணமான கிருஷ்ணர் மற்றும் ராமரின் குணங்களை ஏற்படுத்தும்
'கிருஷ்ண, ராம நாம' சொல்ல சொல்ல .........(ஜீவேர ஸ்வரூப ஹய க்ருஷ்ணேர நித்ய தாஸ்) ஜீவனின் உண்மையான ஸ்வரூபம் கிருஷ்ணரின் நித்ய சேவகன் என உணர்வோம் .
அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் மாபெரும் சக்தியே " கிருஷ்ண, ராம  ".

உண்மையில் சத்தியமாம் ஒரே உண்மை கிருஷ்ண, ராம  ஒருவனே. கிருஷ்ண, ராம  அனைத்திலும் உள்ளான், அனைத்தும் கிருஷ்ண, ராமாவில் உள்ளன. கிருஷ்ண, ராம  ஒருவனே உண்மையான , பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து .........பரபிரம்மம் என்பதும் அவனே !
 மனம் ,சொல், செயல் , உயிர் அனைத்தும் கிருஷ்ண, மற்றும் ராமரில் மனம் ஒடுங்கவேண்டும்.
இடைவிடாது கிருஷ்ண, ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை கிருஷ்ண, ராம  அருள்வான் என 4 சம்பிரதாய ஆச்சாரியர்கள் தமது குருசீடப் பரம்பரையில் உபதேசமும் பெற்று கிருஷ்ண, ராம நாமத்தில் கரைந்து கிருஷ்ண, ராம, சொல்லி எங்கே சென்றால் மீண்டும் இந்த ஜடவுலகில் பிறவி எடுக்க மாட்டோமோ அப்பேற்பட்ட ஆன்மீக ராஜ்ஜியமான கோலோக வ்ருந்தாவனத்தில் (வைகுண்டத்தில்) நித்யமாக வாழ்கிறார்கள்  

16. நமது ஒரே அடைக்கலம் 'கிருஷ்ண, ராம நாமமே'. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .வைகுண்ட பிராப்தி கொடுக்கும் 

17. மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும் . மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் 'கிருஷ்ண, ராம நாமம்' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று முக்தி தரும்.

18. 'கிருஷ்ண, ராம நாம' மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும். அது போல 'கிருஷ்ண, ராம நாமமும் சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க நோயை , ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்.

19.எதை செய்கிறோமோ எதை உண்கிறோமோ எந்தெந்த தவங்களை எல்லாம் செய்கிறோமோ அனைத்தும் முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கே செய்ய வேண்டும் 

20. 'கிருஷ்ண, ராம நாம' சொல்ல , சொல்ல இனிமை தெரியும் எல்லா 33 கோடி தேவர்களும் முனிவர்களும் கிருஷ்ண, ராம உச்சரித்து ஆனந்தம் அடைகிறார்கள் 

21.'கிருஷ்ண, ராம நாம' சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன் மூலம் ..... பார்ப்பது கிருஷ்ண, ராம  , பார்வை கிருஷ்ண, ராம , பார்க்கப்படுவது கிருஷ்ண, ராம , கேட்பது கிருஷ்ண, ராம , கேள்வி கிருஷ்ண, ராம , கேட்கபடுவது கிருஷ்ண, ராம , புலன்கள் கிருஷ்ண, ராம , உணர்வது கிருஷ்ண, ராம , உணரபடுவது கிருஷ்ண, ராம , உணர்வு கிருஷ்ண, ராம , இந்த பிரபஞ்சம் கிருஷ்ண, ராம , இந்த மனம் கிருஷ்ண, ராம  , புத்தி கிருஷ்ண, ராம , உடலும் கிருஷ்ண, ராம , ஆன்மா கிருஷ்ண, ராம , 24 தத்துவங்கள் கிருஷ்ண, ராம  , ..... .........நன்மை, தீமை , இன்பம் துன்பம் , எல்லாம் கிருஷ்ண, ராம  , எல்லாம் கிருஷ்ண, ராம  , எல்லாம் கிருஷ்ண, ராம .

கிருஷ்ண, ராம நாமத்தை 10 வித குற்றங்களை தவிர்த்து ஜபம் செய்வதால் முழு பலனையும் பெற முடியும்

இத்தகைய .'கிருஷ்ண, ராம நாமாவில் பைத்தியமாவதே ....அனைத்தும் .... கிருஷ்ணரிடம்  அனைத்தும் ஒன்றாக அறிவதே உண்மையான அறிவு. அனைத்தும் ......கிருஷ்ணர், ராமனாக  பார்ப்பதுவே ......... எல்லா எண்ணங்கள் ....... எல்லா செயல்கள் .......
எனவே

கலியுகத்தின் தாரக மந்திரமான ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் ஜபம் செய்வோம் 
முதலில்

ஹரே கிருஷ்ண ஜபம் செய்யும் முன்பு ஒருமுறை இதை உச்சரித்து

ஜய ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய பிரபு நித்யானந்த ஸ்ரீஅத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி கெளர பக்த வ்ருந்த

தினமும் 108 முறை

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே 
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

என்று இந்த நாமத்தை

 ஜபம் செய்வோம்

ஆனந்தம் அடைவோமாக

🌷🌷

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...