Monday, July 3, 2023

நம்முடைய சிக்கல்களைத் தீர்க்கும் சிக்கல் சிங்காரவேலர்

நம்முடைய  சிக்கல்களைத் தீர்க்கும் சிக்கல் சிங்காரவேலர்.⛥⛥⛥
நாகை மாவட்டம் சிக்கலில் புகழ்பெற்ற வேல்நெடுங்கன்னியம்மன் நவநீதேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதேசுவர் சந்நிதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதியும் மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சந்நிதியும் அமைந்துள்ளது.⛥🌻🌻

சமயக் குரவர்களால் பாடல்பெற்ற பழைமைவாய்ந்த இக்கோயிலில் சிங்காரவேலவர் வீற்றிருக்கும் சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தலத்தில் எழுந்தருளும் சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கன்னியிடம் வேல் வாங்கிக்கொண்டு திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.⛥🌻🌻

இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவின்போது அன்னையிடமிருந்து வேல்வாங்கும் வைபவம் நடைபெறுகிறது. வேல் வாங்கியவுடன், சிங்காரவேலவரின் திருமேனி எங்கும் வியர்வை சிந்தும்.⛥🌻🌻

இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.⛥🌻🌻

இந்தக் கோயிலில் முருகப் பெருமான் அம்மை அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். அதனால், சிங்காரவேலர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். சிக்கல் சிங்காரவேலரைத் தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை....🕉🔯✡

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...