Tuesday, August 22, 2023

தீராத நோய்களை தீர்க்கும் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்-நெமிலிச்சேரி சென்னை...!

தீராத நோய்களை தீர்க்கும் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்-
நெமிலிச்சேரி சென்னை...!
தல வரலாறு:

சித்தராகவும், சிவபித்தராகவும் இருந்து பல இடங்களில் சிவபெருமானை லிங்க வடிவில் ஸ்தாபித்து பூஜை செய்தார் அகத்தியர்.

பின்னாளில் அந்த லிங்கம் அமைந்த இடமே இறைவன் உறையும் பெரிய திருத்தலங்களாக மாறிவிட்டன. இப்படி அகத்திய முனிவரால் லிங்க பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட தலங்களுள் ஒன்று, நெமிலிச்சேரி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்.

சுமார் 1200 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனால் கட்டப்பட்டது. பின்னர் சிதலமடைந்துபோக, 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள் வழிவந்தவர்கள் இத்திருக்கோயிலை புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள்.

தலபெருமை:

நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று அர்த்தம். செருவு என்றால் கூட்டம். முற்காலத்தில் இப்பகுதியில் மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால் இத்தலம் நெமிலிச்சேரி எனப் பெயர் பெற்றதாம்.

இங்குள்ள அம்மன் ஆனந்தவல்லி தெற்கு நோக்கியவளாக அபயஹஸ்த முத்திரை காட்டி அருள்பாலிக்கின்றாள்.

கருவறையில் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சதுர வடிவிலான ஆவுடையார்மீது வீற்றிருந்து அருள்கிறார்.

ஈசன் போகலிங்க வடிவில் காட்சி தருவதால், நமது வாழ்வில் ஏகபோக மகிழ்ச்சிகள் உருவாக அருள்பாலிப்பவராக விளங்குகிறார். நோயால் அவதிப்படுவோர் இவரை வணங்கினால் ஆரோக்கியம் நிச்சயம் கிட்டும் என்கிறார்கள்.

பிரார்த்தனை

நோயால் பாதிக்கபட்டவர்கள் தங்களது பிரச்சனைகள் தீர இங்குள்ள சுவாமியையும் அம்மனையும் வழிபடுகின்றனர்.
இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

இருப்பிடம்

குரோம்பேட்டை புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கில் சுமார் இரண்டு கி.மீ. சென்றால் நெமிலிச்சேரியை அடையலாம். பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...