♥ விநாயகர் சதுர்த்தி - 2023 பதிவு - 1 ♥விநாயகரின் 16 பெயர்கள் . ♥
♥ சிறப்புமிக்க சில விநாயக ஸ்தலங்கள். ♥
♥ ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
♥ விநாயகரின் 16 பெயர்கள்!
♥ 01. சுகர் - அழகிய முகம் கொண்டவர்
♥ 02. ஏகதந்தர் - ஒற்றைத் தந்தம் கொண்டவர்
♥ 03. கபிலர் - பழுப்பு நிறமானவர்
♥ 04. கஜகர்ணர் - யானை காது கொண்டவர்
♥ 05. லம்போதரர் - பெரிய வயிறு உடையவர்
♥ 06. விகடன் - புத்திக்கூர்மை மிக்கவர்
♥ 07. விக்னராஜர் - தடைகளை அகற்றுபவர் அல்லது
அழிப்பவர்
♥ 08. விநாயகர் - மேலான தலைவர்
♥ 09. துமகேது - அசுரன் தாமோதரனை வென்றவர்
♥ 10. கணாத்யட்சர் - பூதகணங்களுக்கு எல்லாம்
தலைவர்
♥ 11. பாலச்சந்திரர் - பிறை சந்திரனை சூடியவர்
♥ 12. கஜானனர் - யானை முகம் கொண்டவர்
♥ 13. வக்ரதுண்டர் - வளைந்த துதிக்கை கொண்டவர்
♥ 14. சூர்ப்பகர்ணர் - முறம் போன்ற காது
கொண்டவர்
♥ 15. ஹேரம்பர் - ஐந்து முகங்களை கொண்டவர்
♥ 16. ஸ்கந்த பூர்வஜர் - கந்தன் எனும் முருகனுக்கு
முன் பிறந்தவர்.
♥ சிறப்புமிக்க சில விநாயக ஸ்தலங்கள்..
♥ மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய் களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.
♥ ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்குப் பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்குப் பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.
♥ கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.
♥ திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.
♥ மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.
♥ விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.
♥ நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.
♥ தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.
♥ கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
♥ சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.
♥ சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறை களைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.
♥ தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.
♥ சென்னை திருமயிலை கபாலீச்சரத்தில் நர்த்தன விநாயகரை தரிசிக்கலாம்
♥ ஓம் விநாயகனே போற்றி
♥ விநாயகரைப் பணிவோம்
♥ வினைகள் நீங்கப் பெறுவோம்…
No comments:
Post a Comment