Wednesday, November 29, 2023

இத்தல சிவலிங்கத்தின் மீது பசு வந்து அணைந்து பால் சொரிந்ததால் இத்தலம்,* பசுவும் - தேவர்களும் வழிபட்ட சிவாலயம்:”*



”பசுவும் - தேவர்களும் வழிபட்ட சிவாலயம்:”*
*தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ளது பசுவந்தனை.*

*இந்த ஊரில் கயிலாசநாத சுவாமி கோவில் இருக்கிறது.*

*இத்தல இறைவனின் பெயர் கயிலாசநாதர்.*

*இறைவியின் பெயர் ஆனந்தவல்லி அம்மன்.*

*ஆலய தல விருட்சம் வில்வ மரம்.*

*இத்தல சிவலிங்கத்தின் மீது பசு வந்து அணைந்து பால் சொரிந்ததால் இத்தலம்,* 

*’பசுவந்தனை’*

*என்று அழைக்கப்படுகிறது.*

*கயிற்றாறு (தற்போது கயத்தாறு என்று அழைக்கப்படுகிறது) என்னும் பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஆநிரைகளை (பசுக்களை) போற்றி வந்தான்.*

*பசுக்கூட்டங்கள் மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம்.*

*அந்த பசுக் கூட்டத்தில் இருந்த ஒரு பசு மட்டும் அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து விட்டு பின்னர் தனது கூட்டத்தில் புகுந்து சேர்ந்து விடும்.*

*அந்த பசு மாட்டில் மட்டும் பால் குறைவதை அறிந்த மன்னன் தனது காவலர்களை அனுப்பி,*

*‘உண்மை என்ன?’*

*என்று கண்டறிந்து வருமாறு ஆணையிட்டான்.*

*மன்னனின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட காவலர்கள் அந்த மாட்டை கண்காணிக்கத் தொடங்கினர்.*

*அப்போது தான் பசு தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வந்தது தெரியவந்தது.*

*இறையுணர்வு மிக்க தனது பசு பால் சொரிந்த இடத்தை சென்றடைந்த மன்னன் அங்கிருந்த சிவலிங்கத்தை கண்டு பணிந்து பயபக்தியுடன் வணங்கினான்.*

*இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன் வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்வதைக்கண்டு மெய் உருகிப் போனான்.*

*பசுபால் சொரிந்து வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தான்.*

*அதன்படி அந்த இடத்தில் ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதருக்கு சிறியதாக ஒரு ஆலயத்தை அமைத்தான்.*

*அதனை சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்து நகரமாக்கினான்.*

*பசுவந்து நீராடிய குளமாதலால்,*

*’சிவ தீர்த்தம்’*

*என்றும்,*

*‘கோசிருங்கவாவி’*

*என்றும் அழைக்கப்படுகிறது.*

*இத்திருக்கோவிலில் சுவாமிக்கும் - அம்மனுக்கும் நடுவே பாலமுருகன் சன்னிதி அமையப் பெற்றுள்ளது.*

*இதனால் இந்த ஆலயம்,*

*’சோமஸ்கந்தர் தலம்’*

*என்றும் போற்றப்படுகிறது.*

*இந்த ஆலயத்தில் சஷ்டியப்த பூர்த்தி (60 வயது கடந்தவர்களுக்கும்,)*

*சதாபிஷேகம் (80 வயது கடந்தவர்களுக்கும்…)*

*திருமணம் நடைபெறுவது மிகச்சிறப்பு வாய்ந்ததாகும்.*

*இக்கோவிலில் சுவாமி சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார்.*

*இத்தல இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகப் பாலை வாங்கி சாப்பிட்டால் தீராத நோய்கள் கூட தீரும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.*

*இந்த ஆலயத்தில்,*

*’சித்திரைப் பெருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூர வளைகாப்பு விழா, நவராத்திரி விழா, கந்த சஷ்டி திருவிழா, திருவாதிரை, மகா சிவராத்திரி விழா’*

*ஆகியவை முக்கிய திருவிழாக்களாகும்.*

*இங்கு நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெற்று வருகிறது…*

*அமைவிடம் :*

*கோவில்பட்டியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும்,*

*தூத்துக்குடியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும்,*

*திருநெல்வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.!*

*”ஓம் ஶ்ரீ பசுவந்தனையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கயிலாசநாதர் திருவடிகளை போற்றி பண்பாடுவோமாக..!!”*

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...