Thursday, November 30, 2023

திருவாலங்காடு, சிதம்பரம் - இறைவன் காளியுடன் நடனமாடியது.

*சிவபெருமான்  தாண்டவம் ஆடிய முக்கிய இடங்கள் என்ன தெரியுமா?"*
*சிவபெருமான் யோக நிலை மற்றும் தாண்டவ நிலை என இரண்டு நிலையில் காணப்படுகிறார்.*

*இதில் யோக நிலை பொருள் இல்லாத நிலை என்றும் தாண்டவ அல்லது லாஸ்ய நிலை பொருள் சார்ந்த நிலை என்று அழைக்கப்படுகிறது.*

*மதுரை - வரகுன பாண்டியனுக்கு காலமாறி (வலதுபாதம்) தூக்கி ஆடியது.*
 
*கீள்வேளூர் - அகத்தியருக்கு 10 கைகளுடன் நடராஜர் கால்மாறி (வலதுபாதம்) தூக்கி ஆடியது.*

*திருவாலங்காடு, சிதம்பரம் - இறைவன் காளியுடன் நடனமாடியது.*
 
*மயிலாடுதுறை - அம்பாள் மயில் வடிவம் கொண்டு ஈசன் முன்பு கௌரி தாண்டவம் ஆடினார்.*
 
*திருப்புத்தூர் - சிவன் லட்சுமிக்கு கௌரி நடனத்தை ஆடி காட்டியது.*
 
*திருவிற்கோலம் - காளி அம்மன் ஆலங்காடு பெருமானோடு தர்க்கித்து ரக்ஷா நடனம் ஆடி மகா தாண்டவம் ஆடியது.*
 
*திருவாவடுதுரை - இறைவன் வீர சிங்க ஆசனத்தில் சுந்தர நடனம் மகா தாண்டவம் ஆடியது.*
 
*திருக்கூடலையாற்றார் - பிரம்மனுக்கு நர்த்தனம் செய்து காட்டியது.*
 
*திருவதிகை - சம்பந்தருக்கு இறைவன் திருநடனம் ஆடிகாட்டியது - இறைவி பாட இறைவன் ஆடியது.*
 
*திருப்பனையூர் - ஊரின் புறந்தே சுந்தரமூர்த்திக்கு நடன காட்சி தந்தது.*

*திருவுசாத்தானம் - விஸ்வாமித்திரருக்கு நடன காட்சி தந்தது.*
 
*திருக்களர் - துர்வாச முனிவருக்கு பிரம்ம தாண்டவம் ஆடி காட்டியது.*
 
*திருவான்மியூர் - வான்மீகி முனிவர்க்கு இறைவன் பிரம்ம தாண்டவ நடன காக்ஷியும் கல்யாண காட்சியும் அருளியது...*

*சிவாய நம*

*இவை எல்லாம் நம்பெருமான் செயலன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!*

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...