Wednesday, November 1, 2023

_இருபத்தி ஏழு நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!_

_இருபத்தி ஏழு நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!_


ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிர்ஷ்ட கற்கள், அதிர்ஷ்ட தெய்வங்கள் இருக்கும். அது போலவே நட்சத்திரத்திற்கும் அதிர்ஷ்ட தெய்வங்கள், கற்கள், கோயில்கள் என அனைத்தும் இருக்கும்.

தெய்வதிற்கும் நிகரானது எதுவுமில்லை எத்தனை சோதனைகள் வந்த போதிலும் இறைவனை வணங்குவதே ஒரே வழியாகும். ஈசனை வணங்கினால் எந்தத் துன்பமும் நேராது ‘சிவசிவ’ என்று சொன்னால் சிக்கல்கள் தீரும் ‘ஓம் நமச் சிவாய’, என்ற சொல்லுக்குரிய சிவனை எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ரூபங்களில் பார்ப்பது சிறந்தது என்று பார்ப்போம்.

1. அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன்

2. பரணி - சக்தியுடன் கூடிய சிவன்

3. கிருத்திகை - சிவன் தனியாக

4. ரோகிணி - பிறை சூடியப் பெருமான்

5. மிருகசீரிஷம் - முருகனுடைய சிவன்

6. திருவாதிரை - நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்

7. புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

8. பூசம் - நஞ்சுண்டும் சிவன்

9. ஆயில்யம் - விஷ்னுவுடன் உள்ள சிவன்

10. மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்

11. பூரம் - அர்த்தநாரீஸ்வரர்

12. உத்திரம் - நடராஜ பெருமான் - தில்லையம்பதி

13. அஸ்தம் - தியாண கோல சிவன்

14. சித்திரை - பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்

15. சுவாதி - சகஸ்ரலிங்கம்

16. விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்

17. அனுஷம் - இராமர் வழிபட்ட சிவன்

18. கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்

19. மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

20. பூராடம் - சிவ சக்தி கணபதி

21. உத்திராடம் - ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்

22. திருவோணம் - சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்

23. அவிட்டம் - மணக்கோலத்துடன் உள்ள சிவன்

24. சதயம் - ரிஷபம் மீது சத்தியுடன் உள்ள சிவன்

25. பூரட்டாதி - விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்

26. உத்திரட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

27. ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள சிவரூபங்களை வழிபட்டு வந்தால் எப்போதும் துன்பம் இல்லை.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...