Monday, September 16, 2024

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...


12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின் 
108 திருப்பதிகளில்
(வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்கிய_திவ்ய_தேசங்களின் (#திருப்பதிகளின்) 
#மூலவர்களை தரிசிப்போம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

உலகம் முழுவதும் ஏராளமான பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆனாலும் மிகவும் போற்றப்படுவது சில கோயில்கள் மட்டுமே. அதிலும் திவ்ய தேச தரிசனம் மோட்ஷத்தை தரும் என வைணவர்கள் சொல்கிறார்கள்.

ஒருமுறை வைகுண்டத்திற்கு பெருமாளை தரிசிக்க சென்ற பிரம்ம தேவர், "வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீங்கள் வாசம் செய்கிறீர்?" என கேட்டார். அதற்கு பெருமாள், " ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச" என பதிலளித்தார்.

ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. பெருமாள் நித்ய வாசம் செய்யும் இடங்கள் பூலோகத்தில் 107, வைகுண்டத்துடன் சேர்த்து 108. பெருமாள் நித்ய வாசம் செய்வதாக அவரே திருவாய் மலர்ந்தருளிய இடங்களுக்கு தான் திவ்யதேசங்கள் என்று பெயர். இதில் பூலோக வைகுண்டம் என்றும், திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கொண்டாடப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில்.

108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, வைகுண்டம் 1 என உள்ளன. திவ்ய தேசங்களில் 27 ல் கிடந்த திருக்கோலத்திலும், 21ல் இருந்த திருக்கோலத்திலும், 60 ல் நின்ற திருக்கோலத்திலும் திருமால் அருள்பாலிக்கிறார். 79 திவ்ய தேசங்கள் கிழக்கு நோக்கியும், 19 திவ்ய தேசங்கள் மேற்கு நோக்கியும், 3 திவ்ய தேசங்கள் வடக்கு நோக்கியும், 7 திவ்ய தேசங்கள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.

​108 திவ்ய தேசங்கள்:

1. ஸ்ரீரங்கம் (ஸ்ரீரங்கநாதர் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (திருச்சி)

2. திருஉறையூர் (அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி) தமிழ்நாடு (திருச்சி)

3. தஞ்சை (நீலமேகம் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)

4. சுந்தர்ராஜப்பெருமாள் (வடிவழகியநம்பி - அழகியவல்லி) தமிழ்நாடு (திருச்சி)

5. உத்தமர் கோயில் (புருஷோத்தமன் - பூர்ணவல்லி) - தமிழ்நாடு (திருச்சி)

6. திருவெள்ளரை (புண்டரீகாக்ஷன் - பங்கயச் செல்வி) - தமிழ்நாடு (திருச்சி)

7. புள்ளபூதங்குடி (வல்வில் ராமன் - பொற்றாமறையாள்) - தமிழ்நாடு (கும்பகோணம்)

8. கோயிலடி (அப்பக்குடத்தான் - இந்திராதேவி(கமலவல்லி)) - தமிழ்நாடு (திருச்சி)

9. ஆதனூர் (ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

10. தேரழுந்தூர் (ஆமருவியப்பன் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

11. சிறு புலியூர் (அருமாகடல் - திருமாமகள்) - தமிழ்நாடு (சீர்காழி)

12. திருச்சேரை (சாரநாதன் - சாரநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

13. தலைச்சங்காடு (நாண்மிதியப்பெருமாள் - தலைச்சங்கநாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)

14. கும்பகோணம் (சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி) - தமிழ்நாடு (குடந்தை)

15. கண்டியூர் (ஹரசாபவிமோசனர் - கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)

16. ஒப்பிலியப்பன் (ஒப்பிலியிப்பன் - பூமிதேவி) - தமிழ்நாடு (குமப்கோணம்)

17.திருக்கண்ணபுரம் (சௌரிராஜன் - கண்ணபுரநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

18. திருவாலி,திருநகரி (வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

19. நாகப்பட்டினம் (சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி) - தமிழ்நாடு (நாகப்பட்டினம்)

20. நாச்சியார்கோயில் (நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார்) - தமிழ்நாடு (குமபகோணம்)

21. நாதன் கோயில் (ஜகந்நாதர் - செண்பகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

22. மாயவரம் (பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

23. சிதம்பரம் (கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

24. சீர்காழி (தாடாளன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

25. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) (ஜகத்ரட்சகன் - பத்மாசநவல்லி)- தமிழ்நாடு (கும்பகோணம்)

26. திருக்கண்ணங்குடி (லோகநாதன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

27. திருக்கண்ணமங்கை (பக்தவத்சலன் - அபிசேகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

28. கபிஸ்தலம் (கஜேந்த்ரவரதர் - ரமாமணிவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

29. திருவெள்ளியங்குடி (கோலவில்லி ராமர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

30. மணிமாடக் கோயில் (சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

31. வைகுந்த விண்ணகரம் (வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

32. அரிமேய விண்ணகரம் (குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

33. தேவனார் தொகை (தேவநாயகர் - ஸமுத்ரதநயா) - தமிழ்நாடு (சீர்காழி)

34. வண்புருடோத்தமம் (புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

35. செம்பொன் செய்கோயில் (செம்பொன்னரங்கர் - சவேதபுஷ்பவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

36.திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால் - செங்கமலவல்லி) தமிழ்நாடு (சீர்காழி)

37. திருமணிக்கூடம் (மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)

38. திருக்காவளம்பாடி (கோபாலக்ருஷ்ணன் - செங்கமலநாச்சியார்)- தமிழ்நாடு (சீர்காழி)

39. திருவெள்ளக்குளம் (ஸ்ரீநிவாஸன் - பத்மாவதி) - தமிழ்நாடு (சீர்காழி)

40. திருபார்த்தன் பள்ளி (தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன்) - தமிழ்நாடு (சீர்காழி)

41.திருமாலிருஞ்சோலை (அழகர் - சுந்தரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

42. திருக்கோட்டியூர் (சௌம்யநாராயணர் - மஹாலக்ஷ்மி) - தமிழ்நாடு (சிவகங்கை)

43. திருமெய்யம் (சத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார்) - தமிழ்நாடு (புதுக்கோட்டை)

44. திருப்புல்லாணி (கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி)- தமிழ்நாடு (ராமநாதபுரம்)

45. திருத்தண்கால் (தண்காலப்பன் - அன்னநாயகி) - தமிழ்நாடு (சிவகாசி)

46. திருமோகூர் (காளமேகம் - மோஹனவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

47. கூடல் அழகர் கோயில் (கூடலழகர் - மதுரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

48. ஸ்ரீவில்லிபுத்தூர் (வடபத்ரசாயி - ஆண்டாள்) - தமிழ்நாடு (ஸ்ரீவில்லிபுத்தூர்)

49. திருக்குருகூர் (நவதிருப்பதி) (ஆதிநாதர் - ஆதிநாதவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

50. தொலைவில்லிமங்கலம் (இரட்டைத் திருப்பதி, நவதிருப்பதி) (அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

51. வானமாமலை (நவதிருப்பதி) (தோத்தாத்ரி நாதர் - ஸ்ரீவரமங்கை) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

52. திருப்புளிங்குடி (நவதிருப்பதி) (காய்ச்சினவேந்தன் - மலர்மகள்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

53. திருப்பேரை (நவதிருப்பதி) (மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

54. ஸ்ரீவைகுண்டம் (நவதிருப்பதி) (கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

55. திருவரகுணமங்கை(நத்தம்)(நவதிருப்பதி) (விஜயாஸனர் - வரகுணவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

56. திருக்குளந்தை (நவதிருப்பதி) (மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

57. திருக்குறுங்குடி (வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

58. திருக்கோளூர் (நவதிருப்பதி) (வைத்தமாநிதி - கோளூர்வல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

59. திருவனந்தபுரம் (அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலக்ஷ்மி) - கேரளம் (கோவளம்)

60.திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) (திருக்குறளப்பன் - கமலவல்லி)- தமிழ்நாடு (கன்னியாகுமரி)

61. திருக்காட்கரை (காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி) - கேரளா (கோட்டயம்)

62. திருமூழிக்களம் (திருமூழிக்களத்தான் - மதுரவேணி) - கேரளா (கோட்டயம்)

63. திருப்புலியூர் (மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

64. திருச்செங்குன்றுர் (இமையவரப்பன் - செங்கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

65. திருநாவாய் (நாராயணன் - மலர்மங்கை நாச்சியார்) - கேரளா (திருச்சூர்)

66. திருவல்லவாழ் (கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து) - கேரளா (கோட்டயம்)

67. திருவண்வண்டுர் (பாம்பணையப்பன் - கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

68. திருவட்டாறு (ஆதிகேசவன் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கன்னியாகுமரி)

69. திருவித்துவக்கோடு (உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி) - கேரளா (திருச்சூர்)

70. திருக்கடித்தானம் (அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

71. திருவாரன்விளை (திருக்குறளப்பன் - பத்மாசனி) - கேரளா (கோட்டயம்)

72. திருவஹீந்திபுரம் (தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி) - தமிழ்நாடு (கடலூர்)

73. திருக்கோவலுர் (திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார்) - தமிழ்நாடு (கடலூர்)

74. திருக்கச்சி (வரதராஜன் - பெருந்தேவி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

75. அஷ்டபுஜகரம் (ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

76. விளக்கொளி பெருமாள் (தூப்புல்) (தீபப்ரகாசர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

77. திருவேளுக்கை (முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

78. திருப்பாடகம் (பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

79. திருநீரகம் (ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

80. நிலாத்திங்கள் (நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

81. திரு ஊரகம் (உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

 
82. திருவெக்கா (யதோத்தகாரி - கோமளவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

83. திருக்காரகம் (கருணாகரர் - பத்மாமணி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

84. திருக்கார்வானம் (கள்வர்பெருமாள் - கமலவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

85. திருக்கள்வனூர் (ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

86. திருப்பவளவண் (பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார்)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

87. பரமேச்சுரவிண்ணகர் (பரமபதநாதன் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

88. திருப்புட்குழி (விஜயராகவன் - மரகதவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

89. திருநின்றவூர் (பத்தவத்ஸலர் - ஸுதாவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

90. திரு எவ்வுள் (வைத்ய வீரராகவர் - கனகவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

நேபாளம், உத்தராஞ்சலிலும் திவ்ய தேசங்கள் உள்ளன
91. திருநீர்மலை (நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை) - தமிழ்நாடு (சென்னை)

92. திருவிடவெந்தை (நித்யகல்யாணர் - கோமளவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

93. திருக்கடல்மல்லை (ஸ்தலசயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார்) - தமிழ்நாடு (சென்னை)

94. திருவல்லிக்கேணி (பார்த்தசாரதி - ருக்மணி)- தமிழ்நாடு (சென்னை)

95. திருக்கடிகை (சோளிங்கர்) (யோகநரசிம்மர் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

96. திருவேங்கடம் (திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை) - ஆந்திரப் பிரதேசம்

97. அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) (லட்சுமிநரஸிம்ஹன் - செஞ்சுலக்ஷ்மி) - ஆந்திரப் பிரதேசம்

98. திருவயோத்தி (சக்ரவர்த்திதிருமகன் - சீதாபிராட்டி) - உத்தரப்பிரதேசம்

99. நைமிசாரண்யம் (தேவராஜன் - ஹரிலக்ஷ்மி) - உத்தரப்பிரதேசம்

100. சாளக்கிராமம் (ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி) - நேபாளம்

101. பத்ரிகாச்ரமம் (பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி) - உத்தராஞ்சல்

102. தேவப்ரயாகை (நீலமேகம் - புண்டரீகவல்லி) - உத்தராஞ்சல்

103. திருப்ரிதி (பரமபுருஷன் - பரிமளவல்லி) - உத்தராஞ்சல்

104. திரு த்வாரகை (கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார்) - குஜராத்

105. வடமதுரை (கோவர்தனகிரிதாரி - சத்யபாமா) - டெல்லி

106. திருவாய்ப்பாடி (நவமோஹன க்ருஷ்ணன் - ருக்மணி,சத்யபாமா) - டெல்லி

107. திருப்பாற்கடல் (க்ஷீராப்திநாதன் - கடலமகள் நாச்சியார்) - புவியில் இல்லை

108. பரமபதம் (பரமபதநாதன் - பெரியபிராட்டியார்) - நாதன் திருவடி

#புரட்டாசி மாத சிறப்பு:

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக புரட்டாசி மாதம் சனிக்கிழமை வந்தால் சொல்லவே வேண்டாம். எல்லோரது வீட்டிலும் தளிகையும், கோவிந்தா கோவிந்தா என்ற நாமமும் நிச்சயமாக உச்சரிக்கும். வருடத்தில் 12 மாதங்கள் இருக்க, புரட்டாசி மாதத்தில் மட்டும் பெருமாளுக்கு எதற்காக இத்தனை சிறப்பு பூஜை புனஸ்காரங்கள். என்றைக்காவது நீங்கள் யோசித்து உள்ளீர்களா. இதற்கான வரலாற்று ரீதியான ஒரு கதையை இந்த நன்னாளில் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முன்பொரு காலத்தில் தொண்டைமான் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பெருமாள் பக்தன். தன்னுடைய அரண்மனையில் தங்கத்தால் செய்த பெருமாளை வைத்து, அனுதினமும் தங்க புஷ்பத்தால், வெள்ளி புஷ்பத்தால், அன்றாடம் பூஜித்து பெருமாளை வழிபடுவது மன்னனுடைய வழக்கமாக இருந்து வந்தது.

வழக்கம்போல ஒரு நாள் காலை எழுந்து மன்னன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, எப்போதும்போல் பெருமாள் சிலைக்கு முன்பு வந்து அமர்ந்து, தயாராக இருக்கும் பூக்களை எடுத்து பூஜை செய்ய தொடங்கினான். ஆனால், மன்னன் எடுத்துப் போடக் கூடிய தங்க புஷ்பங்களும், வெள்ளி புஷ்பங்களும் வாசனை மிகுந்த மலர்களும் திடீரென்று களிமண் பூக்களாக மாறின.

மன்னன் புஷ்பத்தை எடுத்து பெருமாள் பாதங்களில் முதல் முறை போடும் போது, அந்த பூ, களிமண் பூவாக மாறி பெருமாள் பாதங்களில் விழுகிறது. இரண்டாவது முறை சோதித்து பார்க்கின்றான். இரண்டாவது முறையும், தங்கம் வெள்ளி பூக்களும் களிமண் பூக்கள் ஆகவே மாறுகின்றது. இந்த மன்னனுக்கு ஒரே குழப்பம். சரி என்ன செய்வது. ஆரம்பித்த பூஜையை நிறைவு செய்ய வேண்டும் அல்லவா. பூஜையை அரைகுறை மனதோடு நிறைவு செய்கின்றான். காலையில் இந்த பூஜையை முடித்த மன்னனுக்கு மனதில் ஏகப்பட்ட குழப்பம். ‘தான் செய்த பூஜையில் ஏதாவது தவறு நடந்திருக்குமோ. பெருமாளுக்கு ஏதாவது குறை வைத்திருக்கின்றோமோ’ என்ற ஏகப்பட்ட கேள்விகள் மன்னனின் மனதில் எழுகின்றது.

அன்றைய நாள் முழுவதும் சரியாகவே செல்லவில்லை. மனக் குழப்பத்தோடு அரைகுறை வேலைகளை செய்து எப்படியோ நாளை கடத்தி விட்டான். இரவு தூங்கும்போது பெருமாளை வேண்டிக் கொள்கின்றான். என்னுடைய பூஜையில் ஏதாவது குறை இருந்தால் என் கனவிலாவது வந்து அதை தெரியப்படுத்த வேண்டும், நாராயணா! என்று கூறிவிட்டு தூங்க சென்றான் மன்னன்.

தன்னுடைய பக்தனின் வேண்டுதலுக்கிணங்க பெருமாள், மன்னனுடைய கனவில் தோன்றி ‘உன்னுடைய குழப்பத்திற்கு எல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால், நீ நாளை பீமாவை போய் காண வேண்டும்’. என்று கூறிவிட்டு, பெருமாள் மறைந்துவிட்டார். மன்னனுக்கு தூக்கமும் கலைந்துவிட்டது. இந்த பீமா யாராக இருக்கும் என்ற குழப்பமும் மன்னனின் மனதில் எழுந்தது.

மறுநாள் அதிகாலை வேளையிலேயே எழுந்த மன்னன் தன்னுடைய வேலை ஆட்களை அனுப்பி, தன்னுடைய நாட்டில் பீமா யார் என்று விசாரித்து, பீமையா வாழும் இடத்தையும் கண்டுபிடித்து விட்டான் மன்னன். இந்த பீமா என்பவன் வயது முதிர்ந்த ஒரு குயவன். குயவன் என்றால் மண்பானை செய்வார்கள் அல்லவா, அவர்களை தான் குயவன் என்று சொல்லுவார்கள்.

இந்த குயவனும் ஒரு பெருமாள் பக்தன் தான். ஆனால் இந்த குயவனால், வாசனை மிகுந்த பூக்களைக் கொண்டு கூட பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய முடியாது. மனதார தினம்தோறும் பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவன் தான் குயவன்.

குயவனை தூரத்தில் நின்று பார்க்கின்றார் மன்னன். அந்த குயவன் பானை செய்து கொண்டு இருக்கின்றான். பானை செய்யும் போது ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற நாமத்தை உச்சரித்துக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்கின்றான். அந்த சமயம் பார்த்து அவனுக்கு முன்னால் பெருமாள் காட்சி தருகின்றார். பெருமாளைப் பார்த்து அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் கையிலிருந்த களிமண்ணில், பூக்களை செய்து பெருமாள் பாதங்களில் போட்டு பெருமாளை வணங்கினான். அந்தக் குயவன்.

மன்னனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கோவில் கட்டி, தங்க பூக்களால் வெள்ளி பூக்களால் அர்ச்சனை செய்த என்னுடைய கண்ணுக்கு பெருமாள் தரிசனம் கொடுக்க வில்லை. ஆனால், சாதாரண குயவன் இவனுடைய பக்திக்கு பெருமாள் காட்சி தருகிறார் என்றால், *அந்த குயவனுடைய பக்தியில் எவ்வளவு உன்னதம் இருக்க வேண்டும்.* என்று நினைத்து, பெருமிதம் அடைகின்றான் மன்னன்.

அந்த மன்னனுக்கு அப்போது தான் புரிந்தது. *பக்தி என்பது நாம் இறைவனுக்கு கொடுக்கக் கூடிய பொருட்களில் அல்ல. நம்முடைய சுயநலம் இல்லாத உண்மையான மனதும், சுயநலம் இல்லாத வேண்டுதலுமே உண்மையான பக்தி கான எடுத்துக்காட்டு என்பதை மன்னன் மனதா உணர்ந்து விட்டான்.*

இப்போது உங்களுக்கும் புரிகின்றதா? *இறைவழிபாட்டிற்கு உண்மையான மனது தான் முக்கியம். ஜாதி மதம் இனம் பணம் காசு இவைகளைப் பார்த்து என்றுமே இறைவன் அருளாசியை கொடுப்பது கிடையாது.* இந்த கதையை உணர்த்தும் வகையில், இன்றும் திருப்பதியில் மண்பாண்டங்களில் சில நைவேத்தியங்களை பிரத்தியேகமாக வைத்து பெருமாளுக்கு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

பெருமாள் தரிசனத்தைப் பெற்ற குயவனுக்கு அன்றைய தினம் மோட்சமும் கிடைத்தது. இந்த சம்பவம் நடந்த அந்த நன்னாள் புரட்டாசி மாத சனிக்கிழமை. புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று யார் பெருமாளை நினைத்து கொண்டு, பெருமாள் வழிபாடு செய்து கொண்டே இருக்கிறார்களோ, அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் கோவிந்தா கோவிந்தா நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

புரட்டாசி மாதத்தின் முதல் நாள். இந்தக் கதையை படியுங்கள்...

_புரட்டாசி_மாதத்தின்_முதல்_நாள். அன்றைய தினம் இந்தக் கதையை படித்தால், செய்த பாவங்கள் அத்தனையும் நீங்கி, உங்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.*
புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக புரட்டாசி மாதம் சனிக்கிழமை வந்தால் சொல்லவே வேண்டாம். எல்லோரது வீட்டிலும் தளிகையும், கோவிந்தா கோவிந்தா என்ற நாமமும் நிச்சயமாக உச்சரிக்கும். வருடத்தில் 12 மாதங்கள் இருக்க, புரட்டாசி மாதத்தில் மட்டும் பெருமாளுக்கு எதற்காக இத்தனை சிறப்பு பூஜை புனஸ்காரங்கள். என்றைக்காவது நீங்கள் யோசித்து உள்ளீர்களா. இதற்கான வரலாற்று ரீதியான ஒரு கதையை இந்த நன்னாளில் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
🌹
முன்பொரு காலத்தில் தொண்டைமான் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பெருமாள் பக்தன். தன்னுடைய அரண்மனையில் தங்கத்தால் செய்த பெருமாளை வைத்து, அனுதினமும் தங்க புஷ்பத்தால், வெள்ளி புஷ்பத்தால், அன்றாடம் பூஜித்து பெருமாளை வழிபடுவது மன்னனுடைய வழக்கமாக இருந்து வந்தது.
🌹
வழக்கம்போல ஒரு நாள் காலை எழுந்து மன்னன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, எப்போதும்போல் பெருமாள் சிலைக்கு முன்பு வந்து அமர்ந்து, தயாராக இருக்கும் பூக்களை எடுத்து பூஜை செய்ய தொடங்கினான். ஆனால், மன்னன் எடுத்துப் போடக் கூடிய தங்க புஷ்பங்களும், வெள்ளி புஷ்பங்களும் வாசனை மிகுந்த மலர்களும் திடீரென்று களிமண் பூக்களாக மாறின.
🌹
மன்னன் புஷ்பத்தை எடுத்து பெருமாள் பாதங்களில் முதல் முறை போடும் போது, அந்த பூ, களிமண் பூவாக மாறி பெருமாள் பாதங்களில் விழுகிறது. இரண்டாவது முறை சோதித்து பார்க்கின்றான். இரண்டாவது முறையும், தங்கம் வெள்ளி பூக்களும் களிமண் பூக்கள் ஆகவே மாறுகின்றது. இந்த மன்னனுக்கு ஒரே குழப்பம். சரி என்ன செய்வது. ஆரம்பித்த பூஜையை நிறைவு செய்ய வேண்டும் அல்லவா. பூஜையை அரைகுறை மனதோடு நிறைவு செய்கின்றான். காலையில் இந்த பூஜையை முடித்த மன்னனுக்கு மனதில் ஏகப்பட்ட குழப்பம். ‘தான் செய்த பூஜையில் ஏதாவது தவறு நடந்திருக்குமோ. பெருமாளுக்கு ஏதாவது குறை வைத்திருக்கின்றோமோ’ என்ற ஏகப்பட்ட கேள்விகள் மன்னனின் மனதில் எழுகின்றது.
🌹
அன்றைய நாள் முழுவதும் சரியாகவே செல்லவில்லை. மனக் குழப்பத்தோடு அரைகுறை வேலைகளை செய்து எப்படியோ நாளை கடத்தி விட்டான். இரவு தூங்கும்போது பெருமாளை வேண்டிக் கொள்கின்றான். என்னுடைய பூஜையில் ஏதாவது குறை இருந்தால் என் கனவிலாவது வந்து அதை தெரியப்படுத்த வேண்டும், நாராயணா! என்று கூறிவிட்டு தூங்க சென்றான் மன்னன்.
🌹
தன்னுடைய பக்தனின் வேண்டுதலுக்கிணங்க பெருமாள், மன்னனுடைய கனவில் தோன்றி ‘உன்னுடைய குழப்பத்திற்கு எல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால், நீ நாளை பீமாவை போய் காண வேண்டும்’. என்று கூறிவிட்டு, பெருமாள் மறைந்துவிட்டார். மன்னனுக்கு தூக்கமும் கலைந்துவிட்டது. இந்த பீமா யாராக இருக்கும் என்ற குழப்பமும் மன்னனின் மனதில் எழுந்தது.
🌹
மறுநாள் அதிகாலை வேளையிலேயே எழுந்த மன்னன் தன்னுடைய வேலை ஆட்களை அனுப்பி, தன்னுடைய நாட்டில் பீமா யார் என்று விசாரித்து, பீமையா வாழும் இடத்தையும் கண்டுபிடித்து விட்டான் மன்னன். இந்த பீமா என்பவன் வயது முதிர்ந்த ஒரு குயவன். குயவன் என்றால் மண்பானை செய்வார்கள் அல்லவா, அவர்களை தான் குயவன் என்று சொல்லுவார்கள்.
🌹
இந்த குயவனும் ஒரு பெருமாள் பக்தன் தான். ஆனால் இந்த குயவனால், வாசனை மிகுந்த பூக்களைக் கொண்டு கூட பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய முடியாது. மனதார தினம்தோறும் பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவன் தான் குயவன்.
🌹
குயவனை தூரத்தில் நின்று பார்க்கின்றார் மன்னன். அந்த குயவன் பானை செய்து கொண்டு இருக்கின்றான். பானை செய்யும் போது ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற நாமத்தை உச்சரித்துக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்கின்றான். அந்த சமயம் பார்த்து அவனுக்கு முன்னால் பெருமாள் காட்சி தருகின்றார். பெருமாளைப் பார்த்து அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் கையிலிருந்த களிமண்ணில், பூக்களை செய்து பெருமாள் பாதங்களில் போட்டு பெருமாளை வணங்கினான். அந்தக் குயவன்.
🌹
மன்னனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கோவில் கட்டி, தங்க பூக்களால் வெள்ளி பூக்களால் அர்ச்சனை செய்த என்னுடைய கண்ணுக்கு பெருமாள் தரிசனம் கொடுக்க வில்லை. ஆனால், சாதாரண குயவன் இவனுடைய பக்திக்கு பெருமாள் காட்சி தருகிறார் என்றால், *அந்த குயவனுடைய பக்தியில் எவ்வளவு உன்னதம் இருக்க வேண்டும்.* என்று நினைத்து, பெருமிதம் அடைகின்றான் மன்னன்.
🌹
அந்த மன்னனுக்கு அப்போது தான் புரிந்தது. *பக்தி என்பது நாம் இறைவனுக்கு கொடுக்கக் கூடிய பொருட்களில் அல்ல. நம்முடைய சுயநலம் இல்லாத உண்மையான மனதும், சுயநலம் இல்லாத வேண்டுதலுமே உண்மையான பக்தி கான எடுத்துக்காட்டு என்பதை மன்னன் மனதா உணர்ந்து விட்டான்.*
🌹
இப்போது உங்களுக்கும் புரிகின்றதா? *இறைவழிபாட்டிற்கு உண்மையான மனது தான் முக்கியம். ஜாதி மதம் இனம் பணம் காசு இவைகளைப் பார்த்து என்றுமே இறைவன் அருளாசியை கொடுப்பது கிடையாது.* இந்த கதையை உணர்த்தும் வகையில், இன்றும் திருப்பதியில் மண்பாண்டங்களில் சில நைவேத்தியங்களை பிரத்தியேகமாக வைத்து பெருமாளுக்கு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
🌹
பெருமாள் தரிசனத்தைப் பெற்ற குயவனுக்கு அன்றைய தினம் மோட்சமும் கிடைத்தது. இந்த சம்பவம் நடந்த அந்த நன்னாள் புரட்டாசி மாத சனிக்கிழமை. புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று யார் பெருமாளை நினைத்து கொண்டு, பெருமாள் வழிபாடு செய்து கொண்டே இருக்கிறார்களோ, அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் கோவிந்தா கோவிந்தா நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவிலில் ஆவணி சதுர்த்தசி நடராஜர் மஹாபிஷேகம்..

சிவாலயங்களில் ஆறு கால பூஜை ( திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜை, காலசந்தி எனப்படும் காலை பூஜை,  உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜை, சாயரட்சை எனப்படும் சாயங்கால பூஜை, ராக்காலம் எனப்படும் இரவு பூஜை அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை) நடப்பது போல நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். இந்த ஆறு பூஜைகளும் தேவர்களின் ஒரு நாளில் நடக்கும் ஆறு கால பூஜை என்பது ஐதீகம்.நடராஜர் அபிஷேகம் மாசி சதுர்த்தசி , சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய ஆறு தினங்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதில் இன்று நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவிலில் ஆவணி சதுர்த்தசி நடக்கும் மஹாருத்ர மஹாபிஷேகம் ராக்கால பூஜையாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

Sunday, September 15, 2024

சந்திர கிரகணம் யாருக்கு பாதிப்பு?

சந்திர கிரகணம் செப்டம்பர் 18, 2024 அன்று நிகழ உள்ளது. இது ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும், இது உலகின் பல பகுதிகளிலும் தெரியும்.

சந்திர கிரகணம் எப்போது நிகழ்கிறது?
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 06:11 மணிக்கு நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் காலை 10.17 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 6 நிமிடங்களாகும்


இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா - உலகின் இரவுப் பகுதியிலிருந்து சிறப்பாகப் பார்க்கப்படும். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கிரகணம் தெரியாது.. மேலும் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் பெனும்பிரல் கட்டம் மட்டுமே தெரியும்.


சந்திர கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:



1. கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் பகவானி நினைத்து வழிபட வேண்டும்


2. கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். 


3. கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது. 




4. குறிப்பாக கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.


5. கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.


கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை: 


1. உணவு மற்றும் தண்ணீரில், தர்ப்பை அல்லது துளசி இலைகளை போட வேண்டும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம். 


2. கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபடுவதால், கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும். 


3. கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுதால் நன்மை உண்டாகும். 


4. சந்திரகிரகணம் முடிந்தவுடன்வெள்ளை பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும்.

5. இந்தியாவில் உள்ள கோவில்களில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

வெள்ளப்பக்கம் அருள்மிகு சிவலோகநாதர் கோயில்....

வெள்ளப்பக்கம் அருள்மிகு சிவலோகநாதர்
தென்னாடுடைய சிவனே போற்றி                                                       என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்துள்ள இயற்கை சூழல் நிறைந்த வெள்ளப்பக்கம் கிராமத்தில் கங்கை கொண்ட கோபுரத்தை கட்டிய இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் ஸ்ரீ சிவகாமசுந்தியுடன் சிவலோகநாதர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் தீராத நோய்களும்; தீரும் என்பதும் ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் திருமணத்தடைகள் விலகும் என்பதும் இத்தலத்தின் ஐதீகம். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் அன்னதானம் செய்தும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். இத்தலத்தின் தலவிருட்சமாக பன்னீர் மரமும் தீர்த்தமாக ஈசான்ய தீர்த்தம் உள்ளது.


கோவிலுள்ள பலிப்பீடம் தாண்டி கோஷ்டத்தில் மகாகணபதி பாலமுருகன் லிங்கோத்பவர் வள்ளி தெய்வாணையுடன் சுப்ரமணியசுவாமி மற்றும் நந்திதேவர் உள்ளார். இங்கு தனி சனீஸ்வரன் (திருநள்ளாறுபோல்) கிழக்கு முக தனி சனீஸ்வர பகவனாக காட்சியளிக்கிறார்.

விண்ணுக்கொரு மருந்தாய் வேதவிருப்பொருளாய் கண்ணுக்கினியனாய் விளங்கிடும் எல்லாம் வல்ல சிவபெருமான் உலகின் உயிர்கள் அனைத்தையும் பாதுகாக்க திருவுள்ளம் கொண்டு இம்மண்ணுலகில் எழுந்தருளியுள்ளார். ஆதியும் அந்தமுமில்லா அந்த அருட்பெரும் ஜோதியை கசிந்துருகிப் பாடிய சிவநெறியாளர்கள் ஆட்கொண்ட அருட்காட்சியை இம்மண்ணுலகம் கண்டுள்ளது. நமசிவாய என்றும் ஒலி முழங்கும் சிவதலங்கள் பல இப்புண்ணிய பூமியாகிய பரதக் கண்டத்தில் தெய்வமணம் கமழும் தமிழகத்தில் சிவபெருமான் தனது பரிவாரங்களோடு எழுந்தருளியுள்ள நடுநாட்டின்கண் மூர்த்தி தலம் தீர்த்தம் இம்மூன்று நிலைகளாலும் சிறப்புற்றது.

பழம் பெருமை வாய்ந்த நெல்லிக்குப்பம் வெள்ளப்பாக்கம் வான்பாக்கம் ஆகிய அழகிய கிராமங்களில் பூலோகம் சிவலோகம் கைலாயம் ஆகிய சிவாலயங்கள் பிறந்துவாழ்ந்து முக்தியடையக்கூடிய மனிதன் மூன்று நிலைகளையும் குறிக்கக்கூடிய கோவில்கள் முக்கோண வடிவில் 3 கிலோ மீட்டார் தொலைவில் அமைந்திருப்பது நம் நடுநாட்டுத்தலத்தில் தான் என்பது உலக வியப்புக்குரியதாகும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்...

ஞாயிறு பிரதோஷம்... ராகுகால பிரதோஷ தரிசனம்! சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி

ஞாயிறு பிரதோஷம் என்ன விசேஷம் ஞாயிறு பிரதோஷம்... ராகுகால பிரதோஷ தரிசனம்! சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி  சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி  கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி என்று சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள். இது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும்.

ஞாயிற்றுக்கிழமையில், ராகுகால வேளையில், பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்யுங்கள். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள்.

. இந்த நாளில், சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள். இது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும்.

பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
குறிப்பாக, நந்திதேவர்தான் பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன். எனவே நந்திதேவருக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.
 ஞாயிற்றுக்கிழமை, பிரதோஷம். மாலையில் குடும்பத்துடன் சிவாலயம் சென்று தரிசியுங்கள். முடிந்தால் வில்வமும் செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்வோம். கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தியுங்கள்.

இந்தநாளில், பிரதோஷ தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி.
 நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி
வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி
செவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

Saturday, September 14, 2024

கடலூர் திருக்கழிப்பாலை வேதநாயகி சமேத பால்வண்ணநாதர் ஆலயம்....




கடலூர் மாவட்டம் திருக்கழிப்பாலை என்ற திருத்தலத்தில் வேதநாயகி சமேத பால்வண்ணநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தத் தலம் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 4-வது தலமாக சிறப்பிக்கப்படுகிறது. இந்த ஆலய இறைவனை, திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரும், திருப்புகழில் அருணகிரிநாதரும் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

புராண காலத்தில் இந்தத் தலம் வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் ஆறு, கடலுடன் கலக்கும் பகுதியில் இருந்துள்ளது. ஒருமுறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இவ்வாலயம் சிதையுண்டு போனது. இதையடுத்து பக்தர்கள் இத்தல மூர்த்தியை அதே பகுதியில் உள்ள மற்றொரு இடத்தில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது.

தல புராணம்
கபில முனிவர் பூலோகத்தில் உள்ள ஒவ்வொரு தலமாக சென்று சிவபெருமானை தரிசனம் செய்து வந்தார். அதன் ஒரு பகுதியாக வில்வ வனமாக இருந்த இத்தலத்திற்கும் வந்தார். பின்னர் அங்கேயே தங்கியிருந்து சிவபூஜை செய்ய விருப்பம் கொண்டார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் உள்ள மணல், வெள்ளை வெளேர் என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டார். அதற்கான காரணத்தை அவர் தேடியபோது, அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் பசுக்கள் அனைத்தும், மேய்ச்சல் முடிந்து திரும்பும்போது, அந்தப் பகுதி மணலின் மீது தாமாக பால் சுரப்பதை வழக்கமாக கொண்டிருந்தது. அந்த பால் எங்கும் பரவியதால் அங்குள்ள மணல் வெள்ளையாக இருப்பதை அறிந்து கொண்டார்.

பின்னர் அந்த வெண்ணிற மணலைக் கொண்டே ஒரு சிவலிங்கம் செய்து, அதனை அங்கு பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்து வந்தார். ஒரு முறை அந்த வழியாக சகரன் என்ற மன்னன் குதிரை மீது வந்தான். அப்போது குதிரையின் கால் குளம்பு பட்டு, சிவலிங்கத்தின் மீது பெரிய பள்ளம் விழுந்தது. சிவ பூஜைக்காக வந்த முனிவருக்கு, சிவலிங்கத்தின் மீது இருந்த பள்ளத்தைப் பார்த்ததும் வருத்தம் மேலிட்டது. பிளவுபட்ட அந்த லிங்கத்தை மாற்றி, புதிய லிங்கம் செய்து வழிபட முடிவு செய்தார். அதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது, அம்பாள் சமேதராக சிவபெருமான் கபில முனிவருக்கு காட்சி கொடுத்தார்.

‘முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்யப்பட்ட இந்த லிங்கத்தை, மாற்றாமல் இப்பொழுது இருக்கும் நிலையிலேயே வைத்து வழிபடுங்கள். தேவலோகத்து பசுவான காமதேனுவே, பசுவடிவில் இங்கு வந்து பால் சொரிந்தது. பால் கலந்த மண்ணில் செய்யப்பட்ட இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களையும், வாழ்வில் மேன்மையையும் அடைவார்கள்’ என்று சிவபெருமான் கூறினார். இதையடுத்து கபில முனிவர், அந்த சிவலிங்கத்தைக் கொண்டே தனது வழிபாட்டைத் தொடர்ந்தார். பால் கலந்த மணலில் செய்யப்பட்டதால், இந்த இறைவனுக்கு பால்வண்ணநாதர் என்று பெயர் வந்தது. லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதி இன்றளவும் “வெள்ளை மணல்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஆலய அமைப்பு

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. ராஜகோபுரத்திற்கு முன்னதாக பாதி உருவம் மண்ணில் புதைந்த நிலையில், கருங்கல் கொண்டு செய்யப்பட்ட நந்தி சிலை உள்ளது. உட்பிரகார நுழைவு வாசலில் இருபுறமும் அதிகார நந்தியும், அவரது துணைவியாரும் இடம்பெற்றுள்ளனர். பிரகாரத்தில் தென்மேற்கு பகுதியில் மகா விநாயகர் சன்னிதியும், அடுத்ததாக உள்ள மண்டபத்தில் பாலகணபதி, நாகர், ஆத்மலிங்கம் ஜோதிலிங்கம், கிராதமூர்த்தி, மகாவிஷ்ணு, மெய்ப்பொருள் நாயனார் மற்றும் நால்வரும் வீற்றிருக்கின்றனர். தொடர்ந்து தனி சன்னிதியில் வள்ளி-தெய்வானையுடன் சண்முகரும், கஜலட்சுமி, புவனேஸ்வரியும் எழுந்தருளியுள்ளனர்.

இதையொட்டி வாகன மண்டபமும், கோமுகம், அதன் அருகில் சண்டேஸ்வரர் சன்னிதியும் அமைந்துள்ளது. கருவறை கோஷ்டத்தில் தெற்கு நோக்கி ஜெயவிநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்குநோக்கி லிங்கோத்பவர், வடக்கு நோக்கி பிரம்மா, துர்க்கை, ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தின் வெளிப்புறத்தில் பிரகாரசுற்று முடியும் இடத்தில் மற்றொரு துர்க்கை வீற்றிருக்கிறார். இந்த துர்க்கை சதுரா துர்க்கை என்று அழைக்கப்படுகிறார். நான்கு யுகங்களுக்கு முற்பட்டதாக கூறப்படும் இந்த துர்க்கையின் இடது கரம் சேதமடைந்திருக்கும் காரணத்தால், ஆலயத்திற்குள் வைக்காமல் மண்டபத்தின் வெளியில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய உற்சவ காலத்தில் இந்த துர்க்கைக்கு வெள்ளியாலான திருக்கரம் பொருத்தப்படுகிறது. ஆலயத்திற்கு வடகிழக்கில் உள்ள மண்டபத்தில் காலபைரவர், நவக் கிரகங்கள், சன்னிதியும் சூரியர் சந்திரர் திருமேனிகளும் இடம்பெற்றுள்ளன.

இத்தல இறைவனை கபில முனிவர், அருணகிரிநாதர், திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், வால்மீகி முனிவர் மற்றும் ஏராளமான அடியார்கள் வழிபட்டுள்ளனர். அகத்தியருக்கு, சிவபெருமான் தனது திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. பிரகார தரிசனம் முடித்து பலிபீடம், கொடிமரம், தனி மண்டபத்தில் இருக்கும் நந்தி ஆகியோரை தாண்டி உள்ளே சென்றால் மகாமண்டபத்தின் வட கிழக்கில் பள்ளியறையும், வடமேற்கில் நடராஜர், சிவகாமி அம்பாள் சன்னிதியும் உள்ளது. இங்குள்ள நடராஜர் சடைமுடி அள்ளிமுடித்த கோலத்தில் காட்சியளிப்பதும், சிவகாமி அம்மன் தனது தோழிகளான விஜயா, சரஸ்வதி ஆகியோருடன் சேர்ந்திருப்பதும் எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.

அபிஷேக பால் பிரசாதம்

கருவறையில் மூலவர் பால்வண்ணநாதர் கிழக்கு நோக்கி காட்சியளித்து அருள்பாலிக்கிறார். அவருக்குப் பின்னால் சிவனும், பார்வதியும் திருமணக்கோலத்தில் இடம்பெற்றுள்ள காட்சி கல் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. குதிரையின் கால்குளம்பு பட்டு பிளவுபட்ட லிங்கத்திற்கே இன்றளவும் பூஜை நடத்தப்படுகிறது. குதிரைக் குளம்படிபட்ட பள்ளம், இரண்டு லிட்டர் பால் பிடிக்கும் அளவில் உள்ளது. தினசரி அபிஷேகத்திற்கு பின்னர், இதில் தேங்கி நிற்கும் பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் பாலை பருகினால், அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

நாள்தோறும் நான்குகால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், சிவாலயங்களுக்கே உரித்தான மாதாந்திர உற்சவங்கள் மற்றும் வருடாந்திர உற்சவங்கள் அனைத்தும் நடத்தப்படுகின்றன.

காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். இத்தல விருட்சம் வில்வ மரமாகும். தல தீர்த்தம் பஞ்சாக்கர தீர்த்தம் ஆகும்.

சிதம்பரத்திலிருந்து ஜெயங்கொண்டபட்டிணம் செல்லும் பேருந்தில் சென்றால் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் திருக்கழிப்பாலை திருத்தலத்தை அடையலாம். ஆட்டோ மூலமாகவும் பயணம் மேற்கொள்ளலாம். இந்த ஆலயத்திற்கு அருகில் சிதம்பரம் ரெயில் நிலையம் உள்ளது.

பைரவ தரிசனம்

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் பெருமைப்பெற்ற இத்தலத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது. அது இந்தக் கோவிலின் தென் கிழக்கு மண்டபத்தில் தனி சன்னிதியில் அமைந்துள்ள பைரவர். சிவனின் அறுபத்து நான்கு மூர்த்திகளில், ருத்திர ரூபமாக கூறப்படும் கால பைரவர், சிவ ஆலயங்கள் அனைத்திலும் இடம்பெற்றிருப்பார்.

இத்தலத்தில் உள்ள பைரவர், காசியில் உள்ள கால பைரவரைப் போல நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார். 4 அடி உயரம் கொண்ட பைரவர், 27 மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து சிங்கப் பல்லுடன் வீற்றிருக்கிறார். காசியில் உள்ள எட்டு பைரவர்களையும் வடிவமைத்த சிற்பியே, இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது. இவரை தரிசித்தால் காசியிலுள்ள பைரவரை தரிசித்த பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. 

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திருத்தணிகையின் பெருமை

திருத்தணிகையின் பெருமை  புராண முக்கியத்துவம்
குன்றுதோராடும் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக முருகப் பெருமானின் கிரீடத்தில் ஜொலிக்கும் வைரக்கல்லாக இத்திருத்தலம் பிரகசமாக உள்ளது. முருகக் கடவுளின் பெயர் தணிகாச்சலம் எனவும் கூறப்படுகிறது. முருகப் பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மனுடன் செய்த பெரும் போரும் வள்ளிய்ம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுகோபமும் தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் தணிகை எனப் பெயரமைந்தது. தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் இதற்குத் தணிகை என் பெயரமைந்தது.
முருகப் பெருமான் தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல் திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாக வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கிறார். மேலும், இக்கடவுளை ஐந்து குறிப்பிட்ட தினங்களில் தொடர்ந்து வழிபடும் பக்தர்கள் கடவுளின் ஆசியை பெற்றும் அவரது வாழ்கையில் அரிய பேறுகளை பெற்றவர்கள் ஆகிறார்கள்.

திரேதா யுகத்தில் ராவணனை போரில் வென்று அதனால் ஏற்பட்ட பாவத்திற்கு பரிகார பூஜைகள் செய்ய ராமேஸ்வரம் சென்று திரும்பும் வழியில், சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கிணங்க,  திருத்தணிகையில் முருகப் பெருமானை வழிபட்டு மனச் சாந்தி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது. துவாபர யுகத்தில் அர்ஜுனன் தென் பகுதிக்கான தீர்த்த யாத்திரை செல்லும் வழியில் இந்திருக்கோயில் சுவாமியை தரிசித்து ஆசி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
திருத்தணிகையில் முருகனை வழிபட்டு தாரகாசூரனால் கவரப்பட்ட தமது சக்கரம் மற்றும் சங்கு முதலியவற்றைத் திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம், மலையின்மேல் கோயிலுக்கு மேற்கே உள்ளது.

திருத்தணிகையில் பிரம்மதேவர் முருகப் பெருமானைப் பூஜித்துப் படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலை திரும்பப் பெற்றார்.  மேலும்,  சூரபத்மனால் கவரப்பட்ட தமது செல்வங்களையும் முருகன் அருளால் திரும்பப்பெற்றார். கலைமகளும் இந்தலத்தில் முருகனைப் பூஜித்தாள். கிழக்கே மலையடிவாரத்திலிருந்து மலைமேல் ஏறிச் செல்லும் வழியில், பாதித் தொலைவில் மலைபடிகளை அடுத்த வடபக்கத்தில் பிரம்மதேவர் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இது பிரம்மசுனை என அழைக்கப்படுகிறது. இதன் தென்கரையில் பிரம்மேசுவரர் கோயில் அமைந்துள்ளது.

சூரபத்மனால் தேவலோகத்திலிருந்து கவர்ந்து கொண்டு செல்லப்பெற்ற, சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, சிந்தாமணி, கற்பகதரு முதலிய செல்வங்களை மீண்டும் பெறுவதற்காக இந்திரன் முருகனை இங்கு பூஜித்தான். திருத்தணிகை மலைக்குத் தென்புறத்தில் உள்ள ஒரு சுனையில்,  நீலோற்பல மலர்க்கொடியை நட்டு வளர்த்து அதன் பூக்களைக் கொண்டு காலை, மாலை, நண்பகல் என்று மூன்று வேளைகளிலும் இந்திரன் முருகனை பூஜித்தான். அதுபோல் அவன் ஸ்தாபித்து,  வணங்கி அருள் பெற்ற விநாயகருக்குச் செங்கழுநீர் விநாயகர் என்று பெயர். அவனால் உண்டாக்கப் பெற்ற நீலோற்பல மலர்ச்சுனை இந்திர நீலச்சுனை என்னும் பெயர் பெற்ற தீர்த்தமாக மலைக்கோயிலின் தெற்கு வாயிலுக்கு நேராக இருக்கின்றது. இது கல்கார தீர்த்தம் என்வும் அழைக்கப்படுகின்றது. இத்தீர்த்தகத்தின் நீர்தான் சுவாமியின் திருமுழுக்கிற்கும், திருமடைப்பள்ளிக்கும் மற்றும்  பூஜை செய்வதற்கும் தனிச்சிறப்பாகப் பயன் படுத்தப்படுகிறது. அதனால் இத்தீர்த்தத்தைத் தொலைவிலிருந்து தொழுதல் வேண்டுமேயன்றி வேறு எவ்வகையிலும் நாம் பயன்படுத்துதல் ஆகாது.

பதி, பசு, பாசம் என்னும் இறை, உயிர், தளை ஆகிய முப்பொருள் இயல்புகளைக் கூறும் சைவ சித்தாந்த் நுட்பங்களை இங்கு முருகனை வழிபட்டுத் திருநந்தித் தேவர் அறிவுறுத்தப் பெற்றார். அவன் பொருட்டு முருகப் பெருமான் வரவழைத்த “சிவதத்துவ அமிர்தம்” என்னும் நதியே இப்பொழுது நந்தியாறு என் அழைக்கப்படுகிறது.முருகனின் அருளைப் பெற நந்தி தேவர் யாகம் புரிந்த குகை நந்தி குகை என அழைக்கப்படுகிறது.

தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த போது மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தினை நாணாகவும் கொண்டு கடைந்தனர். அங்ஙனம் கடைந்த போது வாசுகி நாகத்தின் உடலில் பல வடுக்களும், புண்களும், தழும்புகளும் ஏற்பட்டு பெரிதும் துயர் விளைவித்தன. ஒரு சுனையில் நாள்தோரும் முறையாக நீராடி முருகனை வழிபட்டு, வாசுகி நாகம் அத்துயரங்களினின்று நீங்கி உய்த்தது. ஆதிசேச தீர்த்தம் விஷ்ணு தீர்த்ததிற்க்கு மேற்கே மலைப் பாதைக்குத் தென்புறம் இருக்கிறது.இங்கு முருகனை வழிபட்டு, அகத்திய முனிவர் முத்தமிழ்ப் புலமையும், சிவஞானத் தெளிவும் பெற்றார். அவர் உண்டாக்கிய அகத்திய தீர்த்தம் ஆதிசேச தீர்த்தத்திற்குத் தென் கிழக்கில் உள்ளது.

இலக்கிய முக்கியத்துவம்
சற்றேற்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த தவயோகியாகிய அருணகிரிநாதர் இத்திருத்தலத்தின் பெருமையை திருப்புகழ் எனும் நூலின் மூலம் பாடல்கள் அமைத்து பாராட்டியுள்ளார். இவர் தமது பாடல்களில் தணிகை மலையை கைலாய மலைக்கு ஒப்பிட்டும் புகழ்ந்துள்ளார். 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சிறந்த தவயோகியும் சித்தருமான இராமலிங்க வள்ளலார் சுவாமிகள், அருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்பட்டவர். தமது திருவருட்பா நூலில் திருகோயிலின் முருகப் பெருமானைப் பற்றிப் பாடியிருப்பதும் திருத்தணிகை முருகனின் அருங்காட்சியினை சென்னையிலுள்ள தமது இல்லத்தில் கண்ணாடியில் கண்டு தரிசித்து அருள் பெற்றதையும் உணர முடிகிறது. மேலும், மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் தணிகை மலையில் தமக்கு சங்கீத ஞானம் வேண்டி முருகனை பூஜித்த போது முருகப் பெருமான் அவர் நாவில் அட்சர ஆசி அருளி அவருக்கு பாடும் திறனை வழங்கினார். அன்னாரும்,  முதல் பாட்டாக ”ஒம் குரு குஹாய நம” என்று முதல் அடி எடுத்து பாடலைத் தொடுத்தார். இவ்வாறு பல அதிசயங்கள் தணிகை மலையில் பற்பல அருளாலர்களுக்கு முருகப் பெருமானால் அருளப்பட்டுள்ளதால் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும், பெருமை வாய்ந்ததாகவும் திருத்தணி தலம் விளங்குகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

கல்விச் செல்வத்தை வழங்கும் லெஷ்மி ஹயக்ரீவர் ஞானமும் கல்வியும்....

ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது பெருமாள் ஆலயங்களில் ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.

மது, கைடபர் என்ற அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். படைக்கும் தொழிலை வேதத்தின் துணை கொண்டு நடத்திவந்தார் பிரம்மா. இந்நிலையில் வேதத்தைத் திருடிக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டனர் அசுரர்கள். தேவர்களால் மீட்க இயலாத வேதத்தை மகாவிஷ்ணு, ஹயக்ரீவ குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி, அசுரர்களுடன் போரிட்டு மீட்டார்.

அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.
புத்தி பலம் அதிகரிக்கும்
கல்வி தடை நீங்கும்
புதன் பகவான் புத்திகாரகன். புதனின் அதிதேவதை விஷ்ணு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தை காக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியின் குரு என புராணங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவ மூர்த்தியை வணங்குவதன் மூலம் கல்வியறிவையும் பெருக்குவதோடு
லட்சுமி ஹயக்ரீவர்
கலைகளில் சிறக்கலாம்
அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும் விதமாக சில தலங்களில் தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர் அருள்புரிகிறார்.

இந்த வடிவம் ‘லட்சுமி ஹயக்ரீவர்' எனப்படுகிறது. கல்வியிலும் இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் ஹயக்ரீவரை வணங்கலாம்.

நினைவாற்றல் அதிகரிக்கும்
புத்திசாலித்தனம்
படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன்  பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.


புதன்,சந்திரன்
திருவோண நட்சத்திரத்தில் வழிபாடு
ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. அறிவுக்கும்  திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபட ஞானமும் அறிவும் மேம்படும்,ஞாபக சக்தி அதிகரிக்கும்.

ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி
ஸ்ரீஹயக்ரீவர் ஆலயங்கள்
‘ஓம் வாகீஸ்வராய வித்ம ஹேஹயக்ரீவாய திமஹி தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்' என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால்,கல்வியில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம். செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவரை வணங்கலாம். கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.  ஹயக்ரீவ ஜெயந்தி நாளில் அவரை வழிபடுவோம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

சிவனுக்கு பால் அபிஷேகம் ஏற்படும் ஆச்சர்ய நன்மைகள்...

_சிவனுக்கு பால் அர்பணிப்பதால் ஏற்படும் ஆச்சர்ய நன்மைகள்_


வழிபாடுகளிலே மிகவும் சிறப்பான வழிபாடு சிவ வழிபாடு. அதுவும் லிங்கத்தை வழிபடுவதென்பது மிகவும் புனிதமானதாக பரிசுத்தமானதாக கருதப்படுகிறது. காரணம் சிவபெருமான் கடவுளுக்கெல்லாம் கடவுள் என்பதாலேயே மஹாதேவன் எனவும் அழைக்கப்படுகிறார். ஆன்மா கர்ம வினைகளிலிருந்து விடுபடுவதற்கு சிவ வழிபாடே மிகவும் உகந்தது.

சிவனுக்கு நீராலும், பாலாலும் அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால் அதை காட்டிலும் சில சிறப்பு அபிஷேகங்கள் நாம் சந்திக்கும் கடுமையான சவால்களில் இருந்து நம்மை காக்க உதவும். அந்த சிறப்பு அபிஷேகங்கள் யாதெனில், ஒரு சில இடங்களில் கரும்பு சாரினால் சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதற்கான காரணம், பொருளாதார ரீதியான பிரச்சனைகள் நீங்க வேண்டுமெனில், கரும்பு சாரினால் அபிஷேகம் செய்வது நன்மை தரும் என சொல்லப்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் மேம்படவும், ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும் சிவ லிங்கத்திற்கு தேனால் அபிஷேகம் செய்தால் நல்ல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி மிகவும் குறிப்பாக நம் குழந்தைகளின் உடல் நலத்திற்கும் வாழ்க்கை மேம்பாட்டிற்கு பிரார்த்திக்கிற போது சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்கின்றனர் ஆன்மீக பெரியோர்கள்.

வேதங்களின் படி, சிவலிங்கத்திற்கு எண்ணை காப்பு சாற்றுவது மிகவும் நல்ல விதமான பலன்களை நமக்கு அளிக்கும். சிவபெருமான் கர்ம வினைகளில் இருந்து முக்தி அளிப்பவர். எனவே ஒருவர் செய்யக்கூடிய வழிபாட்டின் இறுதி நிலை என்பது முக்தியை அடைவதே ஆகும். உலக இன்பங்களில் இருந்து விடுபட்டு துன்பம் எனும் பெருங்கடலில் இருந்து மீண்டும் இறைவனை அடையும் பாதையில் நம் ஆன்ம சுத்தம் என்பது மிகவும் அவசியம். பால் மற்றும் கங்கை நீர் இந்த இரண்டு புனித பொருட்களாலும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்கிற போது ஒருவரின் ஆன்மா சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்படுதல் என்றால் தீய எண்ணங்களில் இருந்து விடுதலை பெறுகிறது. எதிர்மறையான ஆற்றலில் இருந்து நம்மை காக்கிறது.

இந்த கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனுக்கு மிக உகந்த நாளாக கருதப்படுவதால். சோமாவார விரதமிருந்து சிவனுக்கு பாலை அர்பணம் செய்து அபிஷேகம் செய்து வழிபடுவதால் ஒருவரின் மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகிய மூன்று நிலைகளிலும் புத்துணர்வை பெறுவார்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Friday, September 13, 2024

வஜ்ரகண்டீஸ்வரர் வீரமாங்குடி தஞ்சாவூர்...



வஜ்ரகண்டீஸ்வரர்
மூலவர்: வஜ்ரகண்டீஸ்வரர்

 அம்பாள் / தாயார்: மங்களாம்பிகை

தெய்வம்: சிவன் 
விருக்ஷம்: வில்வம் 

வயது (ஆண்டுகள்): 

1000-2000

நேரம்: 7 முதல் 12 & 4 முதல் 8 வரை 

கோவில் தொகுப்பு:

சுவாமிமலை பரிவார தேவதா ஸ்தலம்

நகரம் / நகரம்: வீரமாங்குடி

 மாவட்டம்: தஞ்சாவூர்

 தற்போதைய இடம் தஞ்சாவூர் (21 கி.மீ.) அரியலூர் (30 கி.மீ.)

கும்பகோணம் (33 கிமீ) பெரம்பலூர் (56 கி.மீ.) 

இடம்

ஸ்தல புராணம் மற்றும் கோவில் தகவல்கள்

விளம்பரங்கள்

இந்த விளம்பரத்தைப் புகாரளிக்கவும்

வஜ்ராசுரன் என்ற அரக்கன் மனிதர்களாலும் தேவர்களாலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். இந்த வரத்துடன் ஆயுதம் ஏந்திய அசுரன் முனிவர்களையும் தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான், இறுதியில் அவர்கள் உதவிக்காக சிவனிடம் சென்றனர். ஒரு கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சிவாச்சாரியார் ஒருவரை, அசுரனை எதிர்த்துப் போரிடுவதற்காக இறைவன் நியமித்தார். பாதிரியார் அசுரனுடன் ஈடுபட்டார், மேலும் அவர் பிந்தையவரின் உயிரைப் பறிக்கத் தொடங்கினார், அசுரர் சிவனிடம் கருணைக்காகவும், அவரது தவறுகளை மன்னிக்கும்படியும் கெஞ்சினார். எப்பொழுதும் போல், சிவா - அசுதோஷ், விரைவில் மகிழ்ந்தவர் - அசுரனை மன்னித்து அவருக்கு ஒரு வரம் அளித்தார். சிவபெருமான் இந்த இடத்தில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று அசுரர் கேட்டுக் கொண்டார். சிவன் இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார், எனவே வஜ்ரகண்டேஸ்வரராக இருக்கிறார்.

மங்களாம்பிகை அம்மன் திருமணம் செய்ய விரும்பும் பெண்களாலும் , திருமண மகிழ்ச்சிக்காக புதுமணத் தம்பதிகளாலும் வழிபடப்படுகிறார் .

சிவன் திருவையாறு முதல் சுவாமிமலை வரை பயணம் செய்த கதையுடன் இக்கோயில் இணைக்கப்பட்டுள்ளது . முருகனிடம் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்க விரும்பிய சிவன், அவரைச் சீடனாக சுவாமிமலைக்கு வரச் சொன்னார். குரு ஸ்தலத்திற்கு உபதேசம் செய்யச் செல்லும்போது, ​​உலகப் பற்றுகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, சிவா தனது ஆளுமை மற்றும் அவரது பரிவாரங்களின் பல்வேறு அம்சங்களை பல்வேறு இடங்களில் விட்டுச் சென்றார். வீரமாங்குடியில் நவகிரகங்களும் அவர்களின் துணைவியரும் பின்தங்கினர்.

கோவில் மிகவும் எளிமையானது, ஆனால் பழமையானது மற்றும் அமைதியான சூழ்நிலையை அளிக்கிறது. கட்டிடக்கலையின்படி பார்த்தால், இக்கோயில் ஆரம்பகால இடைக்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது , ஒருவேளை கிபி 10 ஆம் நூற்றாண்டு. பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சில பிற்காலச் சேர்த்தல்களும் உள்ளன .

இங்கு த்வஜஸ்தம்பம் இல்லை, மேலும் ஒரு சிறிய மண்டபத்தில் பலி பீடம் மற்றும் நந்தி ஆகிய இரண்டும் உள்ளன. இதற்கு அப்பால் கர்ப்பக்கிரகம் மற்றும் அம்மன் சன்னதியை உள்ளடக்கிய மகா மண்டபம் உள்ளது. சுவாரஸ்யமாக, அம்மனுக்கு தெற்கில் தனி நந்தி உள்ளது. இது கோயிலின் அமைப்பு மற்றும் உருவப்படத்தில் சில பாண்டியர்களின் செல்வாக்கைக் குறிக்கிறது.

மகா மண்டபத்தின் உள்ளே சிவன்-சூரியனின் அழகிய விக்கிரகம் உள்ளது - சூரியன் வடிவில் சிவன். கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றி அசல் கோஷ்டங்கள் இல்லை. தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி சன்னதி, வடக்கு நோக்கிய துர்க்கை சன்னதி, இவை இரண்டும் பின்னர் சேர்க்கப்பட்டவை. பிரகாரத்தில் விநாயகர், முருகன் தனது துணைவியார்களான வள்ளி, தெய்வானையுடன், வரதராஜப் பெருமாள் ( கருடன் - தலை சற்று சாய்ந்த நிலையில் - விஷ்ணுவை நோக்கிய நிலையில், விஷ்ணுவின் வாகனமாகத் திகழ்ந்ததில் மகிழ்ச்சி) மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளனர்.

வடகிழக்கு மூலையில் தனி நவக்கிரகம் சன்னதி உள்ளது. திருவையாறு முதல் சுவாமிமலை வரை சிவனின் நடைபயணத்தின் ஸ்தல புராணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், நவக்கிரகம் சன்னதியில் உள்ள சுவாரசியமான அம்சம் என்னவென்றால் , அனைத்து நவக்கிரக தெய்வங்களும் தங்கள் துணைவியருடன் காட்சியளிக்கின்றன. நவக்கிரகம் சன்னதியே எண்கோண பீடத்தில் உள்ளது.

அம்மன் சன்னதியின் தெற்கு வாசலில், மகா மண்டபத்தின் உச்சியில், கைலாசத்தில் எழுந்தருளியிருக்கும் காட்சியின் அழகிய பூச்சுப் பிரதிபலிப்பு, விநாயகர் சிவன் மற்றும் பார்வதியிடம் இருந்து மாம்பழத்தைப் பெற்றதைப் போல, முருகன் தனது மயிலின் மீது தெற்கு நோக்கிச் செல்வதை சித்தரிக்கிறது. அவனது உலகத்தின் மூன்று சுற்றுகள்!

உங்கள் வருகைக்கான பிற தகவல்கள்

கோவிலின் நுழைவாயிலில் உள்ள வீட்டில் உள்ள பெண்மணி - பராமரிப்பாளராகவும் இருக்கிறார் - அவர் ஒரு சிறந்த இறைவனின் பக்தர், மேலும் சாதாரண கோவில் நேரத்திற்கு வெளியே வருகை தரும் ஆர்வமுள்ள பக்தர்களுக்கு நியாயமான வரம்புகளுக்குள் கோவிலை திறக்க தயாராக இருக்கிறார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம். 

குங்கிலியக்கலய நாயனார்ஆவணி மூலம் திருக்கடவூர்....


குங்கிலியக்கலய நாயனார்
ஆவணி மூலம்
#அவதாரத்_தலம்:
திருக்கடவூர்
#முக்தித்_தலம்:
திருக்கடவூர்

காவிரி பாயும் சோழவளநாட்டில் திருக்கடவூர் என்ற ஒரு தலம் உண்டு. அது இறைவன் வீரஞ் செய்த எட்டுத் தலங்களில் ஒன்றாதலின் கடவூர் வீரட்டானம் என்று பெயர் பெறும். காலனை உதைத்த வீரம் இங்கு நிகழ்ந்துள்ளது. இத்தலத்தில் மறையவர்கள் சிறந்து வாழ்வார்கள். அவர்களுள் கலயனார் என்ற பெரியார் ஒருவர் இருந்தார். அவர் சிவனடி பேணும் சிறந்த அன்புடையவர். நல்லொழுக்கத்திற் சிறந்தவர். அத்தலத்தே எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, விதிப்படி குங்கிலிய தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று அழைத்தனர்.
அந்நாளிலே திருவருளாலே அவருக்கு வறுமை வந்தது. அதன் பின்னரும் அத்திருப்பணியை வழுவாது செய்து வந்தனர். வறுமை மிகவே தமது நல்லநிலம முழுவதையும், அடிமைகளையும் விற்றுப் பணிசெய்தனர். வறுமை மேலும் முடுகியதனால் தாமும், மனைவி, மக்களும் சுற்றமும் உணர்வுக்கான பொருள் ஒன்றும் இன்றி இரண்டு நாள் உணவின்றி வருந்தினார்கள். இதுகண்ட மனைவியார் கணவனார் கையிற் குற்றமற்ற மங்கல நாணில் அணிந்த தாலியை எடுத்துக் கொடுத்து "இதற் நெல்கொள்ளும்" என்றனர். அதனைக் கொண்டு அவர் நெல்கொள்ளச் சென்றபோது எதிரில் ஒரு வணிகன் ஒப்பில்லாத குங்கிலியப் பொதிகொண்டு வந்தான். அதனை அறிந்த கலயனார் "இறைவனுக்கேற்ற மணமுடைய குங்கிலியம் இதுவாயின் இன்று நல்ல பேறுபெற்றேன். பெறுதற்கரிய இப்பேறு கிட்ட வேறுகொள்ளத்தக்கது என்ன உள்ளது? என்று துணிந்து பொன் பெற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியினைத் தருமாறு வணிகனைக் கேட்டார். அவனும் மகிழ்ந்து அவர் தந்த தாலியைப் ஏற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியை கொடுத்துச் சென்றான். கலயனார் சிந்தை மகிழ்வுடன் விரைந்து சென்று கோயிற் களஞ்சியத்தில் அப்பொதியின் குங்கிலியத்தைச் சேமித்து வைத்தார். தூபத் திருப்பணி செய்துகொண்டு சிவசிந்தையுடன் அங்கேயே தங்கினார்.

அன்று இரவு மனைவியாரும், மக்களும் பசியால் மிகவருந்தி அயர்ந்து தூங்கினர். அப்போது இறைவனுடைய திருவருளினாலே குபேரன் தனது செல்வத்தைப் பூமியில் கொண்டுவந்து நிறைத்து கலயனாரது மனை முழுவதும் பொற்குவியலும் நெற்குவியலும் அரிசி முதலிய பிற எல்லா வளங்களுமாக ஆக்கி வைத்தனன். இதனை இறைவன் அம்மையாருக்குக் கனவில் உணர்த்த, அவர் உணர்ந்து எழுந்து செல்வங்களைப் பார்த்தனர்; அவற்றை இறைவரின் அருள் என்று கண்டு கைகூப்பித் தொழுதனர்; தனது கணவனாரிற்குக் திருவமுது சமைக்கலாயினார். திருக்கோயிலில் இருந்த கலயனார்க்கு "நீ பசித்தனை! உன் மனையிற் சென்று பாலின் இன் அடிசில் உண்டு துன்பம் நீங்குக" என்று இறைவர் கட்டளை இட்டு அருளினார். அத்திருவருளை மறுப்பதற்கு அஞ்சிக் கலயனார் மனையில் வந்தனர். செல்வமெல்லாங் கண்டனர்; திருமனையாரை நோக்கி "இவ்விளை வெல்லாம் எப்படி விளைந்தன?" என்று கேட்க, அவர் "திருநீலகண்டராகிய எம்பெருமானது அருள்" என்றார். கலயனார் கைகூப்பி வணங்கி "என்னையும் ஆட்கொள்ள எம்பெருமான் திருவருள் இருந்தபடி இதுவோ? என்று துதித்தனர். மனைவியார் பரிகலந்திருத்திக் கணவனாரைச் சிவன் அடியார்களோடு இருத்தித் தூபதீபம் ஏந்திப் பூசித்து இன்னமுதூட்டினார். அது நுகர்ந்த கலயனார் இன்பமுற்றிருந்தார். இவ்வாறு இறைவரருளால் உலகில் நிறைந்த செல்வமுடையவராகி அடியவர்களுக்கெல்லாம் நல்ல இனிய அமுதூட்டியும் உதவியும் வாழ்ந்திருந்தன.

இந்நாளில் திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி, தாடகை என்ற அரச மாதுக்கு அருளும் பொருட்டு சாய்ந்தது. சாய்ந்தவாறே இருந்தது. அதனைச் சாய்வுபோக்கி கண்டு கும்பிட வேண்டுமென்று ஆசை கொண்ட சோழமன்னன் யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிரப்பண்ண முயன்றனன். இறைவர் நேர் நிற்கவில்லை. யானைகளும் இளைத்து வீழ்ந்தன. அரசன் மிகவும் கவலையோடிருந்தான். இதனைக் கேள்வியுற்ற குங்கிலியக்கலய நாயனார், நாதனைக் நேர்காணும் பணியில் நின்ற அரசனை விரும்பித் திருக்கடவூரின்றும் சென்று திருப்பனந்தாளிற் சேர்ந்தனர். சேனைகள் இளைத்து வீழ்ந்து எழமாட்டா நிலைகண்டு மனம் வருந்தினார்.

 இவ்விளைப்பிலே நானும் பங்குகொண்டு இளைபுறவேண்டும் என்று துணிந்தார். இறைவரது திருமேனிப் பூங்கச்சிற்கட்டிய பெரிய வலிய கயிற்றினை தம் கழுத்திற் பூட்டி இழுத்து வருந்தலுற்றார். இவர் இவ்வாறு செய்து இளைத்த பின் இறைவர் சரிந்து நிற்க ஒண்ணுமோ? இவர் தமது அன்பின் ஒருமைப்பாட்டினைக் கண்டபோது அண்ணலார் நேரே நின்றார். தேவர்கள் விண்ணில் ஆரவாரித்துப் பூமழை பெய்தனர். வாடியசோலை தலைமழை பெய்து தழைப்பது போல யானை சேனைகள் களித்தன. சோழ மன்னன் கலயனாரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி மேருவை வில்லாக வளைத்துப் புரமெரித்த கடவுளின் செந்நிலை காணச் செய்தீர்! திருமாலுங் காணாத மலரடியிணைகளை அன்புடைய அடியாரே அல்லலால் நேர்காண வல்லார் யார்? என்று துதித்தான். பின்னர் அரசன் இறைவர்க்குப் பிறபணிகள் பலவும் செய்து தனது நகரத்திற்குச் சென்றான். அரசன் சென்ற பின்னரும் கலயனார் சிலநாள் இறைவனை பிரிய ஆற்றாது அங்கு தங்கி வழிபட்டுப் பின் திருக்கடவூர் சேர்ந்தனர்.

திருக்கடவூரிலே தூபத்திருப்பணி செய்திருக்கும் நாளில் ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடைய அரசுகளும் அத்திருத்தலத்திற்கு எழுந்தருளினார்கள். மிக்கமகிழ்ச்சி பொங்கக் கலயனார் அவர்களை எதிர்கொண்டு அழைத்து வந்தார். தமது திருமனையில் அவர்களது பெருமைக்கேற்றவாறு இன்னமுது அளித்து வழிபட்டார். அதனால் அவர்களது அருளே அன்றி இறைவரது அருளும் பெற்றார். இவ்வாறு கலயனார் அரசனுக்கும், அடியவர்களுக்கும் ஏற்றனவாய்த் தமக்கு நேர்ந்த பணிகள் பலவும் செய்து வாழ்ந்திருந்து சிவபெருமானது திருவடி நிழலிற் சேர்ந்தார்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Thursday, September 12, 2024

இறைவனார் மண் சுமந்தது எங்கே எப்படி❓

உலகை ஆளும் ஈசன் 
மாணிக்கவாசகரை காப்பாற்றும் பொருட்டு வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தி, 
#ஏழை_வந்தியம்மைக்காக_பிட்டுக்கு_மண்_சுமந்து_பிரம்படி_பட்ட_திருவிளையாடல் புராணம். 

உலகப் புகழ்பெற்ற மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 
ஆவணி மூல திருவிழாவான ,
சிவபெருமான் நிகழ்த்திய
64 திருவிளையாடல்களில் ஒன்றான #வைகையில்_வெள்ளப்_பெருக்கும்
உலகை ஆளும் 
#ஈசன்_ஏழை_வந்தியம்மைக்காக_பிட்டுக்கு_மண்சுமந்து_பிரம்படி_பட்ட_திருவிளையாடலும்  நிகழ்வு:

மண் சுமந்த படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கும், வந்தி மூதாட்டிக்கும் அருள் செய்யும் நோக்கில் தன்னுடைய திருமுடியில் மண்ணினைச் சுமந்து வந்து பிரம்படி பட்ட வரலாற்றினை விளக்குகிறது.

மண் சுமந்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் அறுபத்தியோராவது படலமாக அமைந்துள்ளது.

#கரையை அடைக்க முயற்சி:

மாணிக்கவாசகரை காப்பாற்றும் நோக்கில் இறைவனார் வையையில் வெள்ளப்பெருக்கினை உண்டாக்கினார். வையையில் ஏற்பட்ட வெள்ளமானது ஆற்றின் கரையை உடைத்து வெளியேறத் தொடங்கியது.

இதனைக் கண்டதும் காவலர்கள் அரிமர்த்தன பாண்டியனிடம் விவரத்தை எடுத்துரைத்தனர். அரிமர்த்தன பாண்டியனும் குடிமக்களுக்கு ஆற்றின் கரையை அடைக்குமாறு ஆணையிட்டான்.

அரசாங்க ஏவலர்கள் பாண்டிய நாட்டு குடிமக்களுக்கு ஆற்றின் உடைபட்ட கரையினை அளந்து தனித்தனியே கொடுத்து பெயர்களை பதிவு செய்து கொண்டு அவரவர் பங்கினை அடைக்க உத்தரவிட்டனர்.

மக்களும் வைக்கோல், பசுந்தளை, மண்வெட்டி, கூடை ஆகியவற்றைக் கொண்டு தாங்களாகவும், கூலிக்கு வேலையாள் அமர்த்தியும் ஆற்றின் கரையினை அடைக்கத் தொடங்கினர்.

#வந்தியின் வேண்டுதல்:

அப்போது பாண்டிய நாட்டில் தென்கிழக்குத் திசையில் வந்தி என்னும் மூதாட்டி பிட்டு விற்று வசித்து வந்தாள்.  அவள் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவள்.

தினமும் தான் செய்யும் முதல் பிட்டினை இறைவனாருக்குப் படைத்துவிட்டு அப்பிட்டினை சிவனடியாருக்கு வழங்கி ஏனைய பிட்டுகளை விற்று வாழ்ந்து கொண்டிருந்தாள்.

வந்தி பாட்டிக்கும் ஆற்றின் கரையை அடைக்குமாறு பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. வந்தியோ மூதாட்டி ஆதலால் தன் பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க தகுந்த கூலியாளைத் தேடிக் கொண்டிருந்தாள்.

கூலியாள் கிடைக்காததால் வந்தி மிகவும் கலக்கமுற்று சொக்கநாதரிடம் “ஐயனே, நானோ வயதானவள். என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க கூலியாள் கிடைக்கவில்லை.

ஆதலால் இன்னும் என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரை அடைபடாமல் உள்ளது. எனவே அரசனின் கோபத்திற்கு நான் உள்ளாகலாம். ஆதலால் என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்று” என்று வேண்டினாள்.

#இறைவனார் மண் சுமந்தது:

இந்நிலையில் இறைவனார் வந்திக்கு அருள் செய்ய விருப்பம் கொண்டார். ஆதலால் மண் சுமக்கும் கூலியாள் போல் வேடமிட்டு கையில் மண்வெட்டியும், திருமுடியில் கூடையையும் சுமந்து கொண்டு பிட்டு விற்றுக் கொண்டிருக்கும் வந்தியின் இடத்தினை அடைந்தார்.

“கூலி கொடுத்து என்னை வேலைக்கு அமர்த்துபவர் உண்டோ” என கூவிக்கொண்டு வந்தியை நெருங்கினார்.

உடனே வந்தி இறைவனாரிடம் “என்னுடைய பங்கான ஆற்றின் கரையை அடைக்க முடியுமா?” என்று கேட்டாள்.

“சரி. அப்படியே செய்கிறேன். எனக்கு கொடுக்கும் கூலி யாது?” என்று கேட்டாள். “நான் விற்கும் பிட்டினை உனக்கு கூலியாகத் தருகிறேன்.” என்று கூறினாள். இறைவனாரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் வந்தியிடம் “நான் தற்போது பசியால் மிகவும் களைப்புற்றுள்ளேன். ஆதலால் நீ எனக்கு உதிர்ந்த பிட்டை எல்லாம் தற்போது தருவாயாக. நான் அதனை உண்டு பசியாறிய பிறகு கரையை அடைக்கிறேன்.” என்று கூறினார்.

வந்தியும் அதற்கு சம்மதித்து பிட்டினைத் தந்தாள். இறைவனார் அதனை உண்டு சற்று களைப்பாறிவிட்டு கரையினை அடைக்கச் சென்றார்.

வையையின் கரையினை அடைந்து ‘நான் வந்தியின் கூலியாள்’ என பதிவேட்டில் குறித்துக் கொள்ளச் சொன்னார்.

பின்னர் கரையை அடைப்பது போல் நடித்துக் கொண்டும், மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டியும், மரநிழலில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டும் வந்தியிடம் பிட்டை வாங்கி உண்டும் பொழுதைப் போக்கினார்.

அரசாங்க காவலர்கள் வந்தியின் பங்கு அடைப்படாமல் இருப்பதைக் கண்டனர். வந்தியின் கூலியாளான இறைவனாரிடம் “ஏன் வந்தியின் பங்கு இன்னும் அடைக்கப்படாமல் உள்ளது. இதற்கு என்ன காரணம்?” என்று கேட்டனர்.

அச்சமயத்தில் வையையின் கரை அடைப்பட்டிருப்பதைக் காண அவ்விடத்திற்கு அரிமர்த்தன பாண்டியன் வந்தான்.

நடந்தவைகளைக் கேட்டறிந்தான். உடனே கோபம் கொண்டு பிரம்பால் இறைவனாரை அடித்தான்.

இறைவனார் உடனே மண்ணினை உடைப்பில் கொட்டிவிட்டு மறைந்தருளினார். பாண்டியன் இறைவனை அடித்ததும் அடியானது அங்கிருந்த பாண்டியன் உட்பட எல்லோரின் முதுகிலும் விழுந்தது. எல்லோரும் திடுக்கிட்டனர். அரிமர்த்தன பாண்டியன் கூலியாளாக வந்தது இறைவனே என்பதை உணர்ந்தான்.

இறைவனாரின் திருவாக்கு
அப்போது “பாண்டியனே, தூயநெறியில் உன்னால் தேடப்பட்ட செல்வம் முழுவதும் என்னுடைய அடியவர்களின் பொருட்டு மாணிக்கவாசகரால் செலவழிக்கப்பட்டது.

ஆதலால் நாம் நரிகளை பரிகளாக்கி உம்முடைய இடத்திற்கு அனுப்பினோம். பரிகளெல்லாம் மீண்டும் நரிகளானதால் மாணிக்கவாசகரை நீ தண்டித்தாய். அதனைப் பொறுக்காமல் வையை யாம் பொங்கி எழச்செய்து கரையினை உடைக்கச் செய்தோம்.

வந்தியின் கூலியாளாய் வந்து அவளிடம் பிட்டு வாங்கி உண்டு உன்னிடம் பிரம்படி பட்டோம். நீ மாணிக்கவாசகரின் உள்ளப்படி நடந்து கொண்டு நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து எம்மை வந்தடைவாயாக.” என்று திருவாக்கினைக் கூறினார்.

அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரைச் சந்தித்து தன்னை மன்னித்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான்.

மாணிக்கவாசகரோ அதனை மறுத்து தில்லைஅம்பலத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதே தன்னுடைய விருப்பம் என்பதைக்கூறி தில்லைவனம் சென்று பாடல்கள் பாடி மகிழ்ந்து இறுதியில் இறைவனாரின் சோதியில் கலந்தார்.

இறைவனாரின் ஆணைப்படி சிவகணங்கள் வந்தியை சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றனர். அரிமர்த்தபாண்டியன் சகநாதன் என்னும் புதல்வனைப் பெற்று இறைவனாரின் திருவடியை அடைந்தான்.

*மண் சுமந்த படலம் கூறும் கருத்து:

இறைவனாரிடம் பேரன்பு கொண்டவர் எல்லோரும் இறைவனாரின் அருளுக்கு பாத்திரமானவர் ஆவர்.

இறைவனார் எல்லோரிடம் இருக்கிறார் ஆகியவை இப்படலம் கூறும் கருத்தாகும்.

பாடல்:

"பண்சு மந்தமறை நாட ரும்பொருள் பதஞ்சு மந்தமுடி யார்மனம்
புண்சு மந்ததுயர் தீர வந்தபரி நகரி ளாயடவி போனபின்
விண்சு மந்தசுர நதியெ னப்பெருகு வித்த வையையிது விடையவன்
மண்சு மந்துதிரு மேனி மேலடி வடுச்சு மந்தகதை யோதுவாம்.

கருங்க டற்றிரை யிடைக்கி டந்துகழல் கலமெ னக்கன முகடளாய்
வரும்பு னற்பரவை யுட்கி டந்துநகர் மறுகி யுட்கமற வேலினான்
ஒருங்க மைச்சரை விளித்து நீர்கரை சுமந்தொ துக்கிவரு மோதநீர்ப்
பொருங்க தத்தினை யடக்கு வீரென வமைச்சருந் தொழுது போயினார்.

கட்டு வார்கரை யுடைப்ப* நீர்கடுகல் கண்டு நெஞ்சது கலங்குவார்
மட்டி லாதமுனி வென்னை யன்னையினி யாறு கென்றெதிர் வணங்குவார்
கொட்டு வார்மண லுடைப்ப டங்கமகிழ் கொள்ளு வார்குரவை துள்ளுவார்
எட்டு மாதிரமு மெட்ட வாயொலி யெழுப்பு வார்பறை யிரட்டுவார்.

இந்நிலை யூரி லுள்ளார் யாவர்க்குங் கூலி யாளர் 
துன்னிமுன் னளந்த வெல்லைத் தொழின்முறை மூண்டு செய்வார் 
அந்நிலை நகரின் றென்கீழ்த் திசையுளா ளளவி லாண்டு 
மன்னிய நரைமூ தாட்டி யொருத்தபேர் வந்தி யென்பாள்.

நெட்டரவக் கச்சுடையாய்! நீலநிறத் திருமாதின் 
வட்டமுலைத் தழும்புபட வந்தணையும் திருமார்பா! 
கட்டிய செஞ்சடையாய்! உன்கண்ணருள் கொண்டு எப்பொழுதும் 
பிட்டினை விற்று உண்பேற்கும் பேரிடும்பை உளதாமோ?  - திருவாதவூரடிகள் புராணம் 

துணையின்றி மக்க ளின்றித் தமரின்றிச் சுற்ற மாகும்
பணையின்றி யேன்று கொள்வார் பிறரின்றிப் பற்றுக் கோடாம்
புணையின்றித் துன்பத் தாழ்ந்து புலம்புறு பாவி யேற்கின்
றிணையின்றி யிந்தத் துன்ப மெய்துவ தறனோ வெந்தாய் - திருவிளையாடல் புராணம் 

தந்தைதாய் பிறரின்றி வருகின்ற தனிக்கூலி
மைந்தனார் வாய்மலருங் குரல்கேட்டு வந்தியுந்தன்
சிந்தையா குலமிழந்து நல்கூர்ந்தார் செல்வமகத்
தந்தபோ தெழுமகிழ்ச்சி தலைக்கொள்ளப் புறம்போந்தாள்

அன்னையெனத் தன்பாலின் னருள்சுரந்து வருகாளை
தன்னையழைத் தெனக்களந்த கரையடைத்துத் தருவாயோ
என்னவிசைத் தனளாக வடைக்கின்றே னெனக்கன்னை
பின்னையதற் கிடுங்கூலி யாதென்றார் பெருமுதியாள்.
பிட்டிடுவே னுனக்கென்றா ளதற்கிசைந்து பெரும்பசியாற்
சுட்டிடநான் மிகமெலிந்தேன் சுவைப்பிட்டி லுதிர்ந்தவெலாம்
இட்டிடுவா யதுமுந்தத் தின்றுநா னிளைப்பாறிக்
கட்டிடுவே னின்னுடைய கரையென்றார் கரையில்லார்.

இவ்வண்ண மிவரொருகா லிருகான்மண் சுமந்திளைத்துக்
கைவண்ண மலர்கன்றக் கதிர்முடிமேல் வடுவழுந்த
மைவண்ண னறியாத மலரடிசெம் புனல்சுரந்து
செவ்வண்ணம் படைப்பவொரு செழுந்தருவின் மருங்கணைந்தார்.  

தருமேவு மலைமகளுஞ் சலமகளு மறியாமற்
றிருமேனி முழுதுநில மகடீண்டித் திளைப்பெய்தக்
குருமேவு மதிமுடியைக் கூடையணை மேற்கிடத்தி
வருமேரு வனையார்தம் வடிவுணர்ந்து துயில்கின்றார்  

அத்தருவே யாலநெடுந் தருவாக வலைபுரட்டித்
தத்திவரும் புனலடைப்பார் சனகாதி முழுதுணர்ந்த
மெய்த்தவராய்க் கண்களிப்ப மெய்யுணர்ச்சி மோனமயச்
சுத்தவுருத் தெளிவிப்பா ரெனத்துயிலுந் துயிலுணர்ந்தார்.

அருளினா லுலக மெல்லா மாக்கியு மளித்து நீத்து
பெருவிளை யாடல் செய்யும் பிறைமுடிப் பெருமா னிங்ஙன்
ஒருவிளை யாடல் செய்ய வோச்சுகோற் கைய ராாகி
அருகுநின் றேவல் கொள்வா ரடைகரை நோக்கப் புக்கார்.
    

நெட்டலை யொதுங்கி யோட நிவப்புற வரைபோ லிட்டுக்
கட்டிய கரைக ளெல்லாங் கண்டுகண் டொப்பு நோக்கி
அட்டமே செல்வார் திங்க ளாயிரந் தொழுதாள் பேரால்
விட்டபங் கடைப டாமை கண்டனர் வெகுளி மூண்டார்.

வந்திக்குக் கூலி யாளாய் வந்தவன் யாரென் றோடிக்
கந்தர்ப்ப னெனநேர் நின்ற காளையை நோக்கி யேடா
அந்தப்பங் குள்ள வெல்லா மடைபட்ட தெவனீ யின்னம்
இந்தப்பங் கடையாய் வாளா திருத்தியா றம்பீ யென்றார்.

வேறுரை யாது தம்மை யுணர்ந்தவர் வீறு தோன்ற
ஈறிலா னிறுமாப் பெய்தி யிருந்தன னாக மேலிட்
டாறுவந் தடுத்த பங்கி லடைகரை கல்லிச் செல்ல
மாறுகொண் டோச்ச வஞ்சி மயங்கினார் வலிய கோலார்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

மணவாளன் பெருமாள்கோயில் திருக்கோழி உறையூர்...

அழகிய மணவாளன் பெருமாள்கோயில்* *(திருக்கோழி அல்லது நாச்சியார் திருக்கோவில்),*திருக்கோழி,உறையூர்,திருச்சிராப்பள்ளி*மாவட்டம்,தமிழ்நாடு மாநிலம்..*
தமிழக கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த வைணவஸ்தலம்
*(திருக்கோவில் வரலாறு துவாபர யுகத்திலிருந்து தொடர்கிறது நமக்கு கிடைத்த தரவுகளின் படி பதிவு செய்துள்ளேன்)* 1600 ஆண்டுகள் முதல்3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைணவ ஸ்தலம்,திருக்கோவில் முழுக்க முழுக்க எம்பெருமான் மகாவிஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .

*(108 திவ்ய தேசங்களில் 2 வது திருக்கோவில் ஆகும்)*


🛕புராண பெயர்கள்:
திருக்கோழி,உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர், உறையூர்


🛕 புராண காலத்தில் இந்த பகுதியை
திருக்கோழி,திரு உறையூர் என்றும் அழைத்தனர்..
*(ஒரு தைரியமான கோழி வலிமை பொருந்திய ஒரு யானையை தன் அலகால் கொத்தி விரட்டியடித்ததாகக் வரலாறு எனவே இப்பெயர் பெற்றது)*


🛕தீர்த்தம்:
கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி


🛕ஆகமம்:
பாஞ்சராத்ரம்


🛕பாடல் வகை:
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்


🛕 திருக்கோவில்
சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது..


🛕துவாபர யுகத்தில் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்தசோழன் தமக்கு புத்திர பாக்கியம் அருள திருவரங்கத்து பெருமாளை வேண்டி வர தாயார் தாமரை ஓடையில் சிறு குழந்தையாகக் கிடக்க, கமலவல்லி எனப்பெயரிட்டு தம் மகளாக வளர்த்த மன்னன், கமலவல்லி திருமணக்கோலத்தில் அரங்கநாதனுன் மறைந்த பின்னர் திருமண நினைவாக நந்தசோழ மன்னர் எழுப்பிய திருக்கோயில்
கலியுகத்தில் மண்ணில் மறைந்த இப்பகுதியை மீட்டு சோழ மன்னன் இப்பொழுதிருக்கும் பெருமாளையும் தாயாரையும் பிரதிஷ்டை செய்து அமைத்த திருக்கோயிலே தற்போது உள்ளது..


🛕திருப் பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். 


🛕நாயன்மார்களில் புகழ் சோழர், கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர்.


🛕பிற்காலப் பாண்டியர்கள் , விஜயநகர மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் பங்களிப்புடன், 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இடைக்காலச் சோழர்களால் திருக்கோவில் புனரமைக்கப்பட்டது..


🛕 திருக்கோவில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றது..


🛕 புராணத்தின் படி 

🌷அரசன் காட்டில் வேட்டையாடும்போது 1000 இதழ்கள் கொண்ட தாமரை தொட்டியில் குழந்தையைக் கண்டான். 

🌷தாமரையிலிருந்து பிறந்த குழந்தை என்பதால், அரசனால் கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்தார்..


🌷 ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலின் மூலவராகிய ரங்கநாதரின் வடிவில் இருந்த விஷ்ணுவை கமலவல்லி காதலிக்கும் நேரம் வந்தது .



🌷 சோழ மன்னன் அவளை மணமகனாக இங்கு தோன்றிய ரங்கநாதரை உடனடியாக திருமணம் செய்து வைத்தான். அழகிய மணவாளன் என்று பொருள்படும் அழகிய மணவாளனாக விஷ்ணு அவதரித்ததால் இங்கு கட்டப்பட்ட கோயிலுக்கு அழகிய மணவாளன் கோயில் என்று பெயர்.



🌷 இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் சேர்த்தி சேவை விழாவாக கொண்டாடப்படுகிறது. 


🌷ஒரு யானையும் இந்த இடத்தில் சண்டையிட்டு, கோழி வெற்றி பெற்றது. கோழி வென்றதால், அந்த இடம் கோழியூர் என்று அழைக்கப்பட்டது.


🛕  நிச்சுலாபுரி என்ற மற்றொரு பெயரும் உண்டு. 

🌷மன்னன் ரவிவர்மராஜாவை வழிபட்ட இடமாகவும் இந்த கோவில் கருதப்படுகிறது..



🛕மத்திய சன்னதியில் விஷ்ணுவின் உருவம் அழகிய பெருமாள் அமர்ந்த நிலையில் உள்ளது. 


🌷கமலவல்லி நாச்சியாரின் சந்நிதி வடக்கு நோக்கியிருக்கும் ஒரே திவ்யதேசம் இதுவே .



🌷 மகான்களான ராமானுஜருக்கும் நம்மாழ்வார்க்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன .

🌷நம்மாழ்வார் சன்னதியின் உள் சுவர்களில் ஓவியங்கள் உள்ளன . 



🌷1800 களின் முற்பகுதியில் வர்ணம் பூசப்பட்ட கோயில்களில் விஷ்ணு, வைஷ்ணவ ஆச்சார்யர்கள், ஆழ்வார்கள், வைணவ புராணங்கள், அம்பரீஷனால் சொல்லப்பட்ட நீதி மற்றும் தர்மத்தின் சட்டம் ஆகியவற்றின் மத்ஸ்ய மற்றும் நரசிம்ம அவதாரங்களின் உருவங்கள் உள்ளன...



🛕தினமும் ஆறு முறை கோயில் சடங்குகள் நடைபெறுகின்றன:
🛕ஒவ்வொரு சடங்குக்கும் மூன்று படிகள் உள்ளன: அழகிய மணவாளன் மற்றும் கமலவல்லி இருவருக்கும் அலங்காரம்,நெய்வேதனம் (உணவு பிரசாதம்) மற்றும் தீப ஆராதனை காட்டப்படுகின்றது. 



🌷கோவிலில் வாராந்திர, மாதாந்திர மற்றும் பதினைந்து நாட்கள் சடங்குகள் செய்யப்படுகின்றன..


🌷இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தின் போது சேர்த்தி சேவை, இல்லத்திருவிழா கொண்டாடப்படுகிறது .



🌷 ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலின் பங்குனி உத்திர திருவிழாவின் ஒரு பகுதியாக, ஸ்ரீரங்கம் கோவில் உற்சவ மூர்த்தியான நம்பெருமாள், நாச்சியார் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, கோவிலில் உள்ள சேர்த்தி மண்டபத்தில் நாச்சியார் மற்றும் நம்பெருமாள் திருவுருவங்கள் அலங்கரிக்கப்படும்.



🌷 விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.


🌷 ஆழ்வாரின் தலையில் ஒரு பரிவட்டம்  கட்டப்பட்டு, மாலையால் அலங்கரிக்கப்பட்டு, ஒரு சால்வை தோளில் போர்த்தப்பட்டு, புனிதமான சந்தனக் கட்டை அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது, இவை அனைத்தும் ஆழ்வாரின் முகத்தில் புன்னகையைத் தருவதாக நம்பப்படுகிறது. 



🌷ஒரு மணி நேரம் கழித்து, ஆழ்வார் திருவுருவம் நம்மாழ்வார் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஆழ்வார்களின் திருவடியான அமலாநதிபிரான் பாடல்களுடன் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்பட்டது . அழகிய மணவாளப் பெருமாள் கோவிலில், அரையர் சேவை , வேதபாராயணம் ( வேத பாராயணம் ), சிறப்பு திருமஞ்சனம் (அபிசேகம்) மற்றும் கோவிலுக்குள் ஊர்வலம் உள்ளிட்ட 10 நாள் திருவிழாவுக்கு இணையாக கொண்டாடப்படுகிறது.


🌷கோவில் நேரங்கள்:

🌷பக்தர்கள் தினமும் காலை 5 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ..


🌷 மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை 
*(அழகிய மணவாளப் பெருமாளுடன் அவரது துணைவியார் வழிபாடு செய்யலாம்.)* 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Wednesday, September 11, 2024

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

_வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்_

'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னகத்தே கொண்ட லிங்கம் சில கோயில்களில் காணமுடிகிறது. 

மும்மூர்த்திகள் அரசமரத்திலும் இருக்கின்றனர். அதே போல் குத்துவிளக்கிலும் உறைகின்றனர்; கோமாதாவிலும் இருக்கின்றனர். 

வில்வமரத்தின் இலைகளைப் பார்த்தால் அவை மூன்று மூன்றாக சேர்ந்தபடி இருக்கும். இந்த வில்வத்திலும் மும்மூர்த்திகள் இருக்கின்றனர். வில்வத்தின் இடதுப்பக்க இலை பிரம்மா என்றும், வலதுப்பக்க இலை விஷ்ணு என்றும் நடுவில் இருப்பது சிவன் என்றும் சொல்லப்படுகிறது 

சைவத்தில் இருப்பது போலவே வைணவத்திலும் இந்த வில்வம் திருமகளுக்கு அர்ச்சிக்கப்படுகிறது. இலக்குமி விஷ்ணுவின் மார்பை அலங்கரிக்கிறாள். ஆகையால் திருவஹீந்திரபுர தாயாருக்கு வில்வ இலை அர்ச்சனை நடக்கிறது. கும்பகோண சக்ரபாணி கோயிலிலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வில்வ அர்ச்சனை நடக்கிறது. 

வில்வ இலைக்கு ஒரு தனிச்சிறப்பும் உள்ளது. நாம் ஒருமுறைப் பூஜித்த பூக்களைத் திரும்பவும் உபயோகப்படுத்துவதில்லை. அவைகளை எடுத்துக்களைந்து விடுகிறோம். ஆனால் ஒருமுறை பூஜைக்கு உபயோகித்த வில்வ இலைகளை அலம்பி தூயமைப்படுத்தி மறுபடியும் பூஜைக்கு உபயோகப்படுத்தலாமாம். ஆனால் அதற்குரிய காலவரை ஒரு ஆறுமாதம் தானாம். 

ஆனால் இவைகள் சுத்தமான சூழ்நிலையில் வளர்ந்த மரங்களாக இருக்கவேண்டும். சுடுகாட்டின் அருகில் இருந்தாலும் சேர்க்கக்கூடாது. 

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது. 

அதுவும் ஞாயிறு அன்று வில்வத்தினால் அர்ச்சிக்க மிகச்சிறப்பாம். சோமவாரம் என்றுச்சொல்லப்படும் திங்கள் அன்று சிவனுக்குத் துளசியால் அர்ச்சிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. வில்வமரத்தின் எல்லா பாகமுமே பூஜைக்கு உரியது ஆகிறது. 

வில்வ இலை அர்ச்சனைக்கும், வில்வப்பழம் அபிஷேகத்திற்கும், மரத்தின் கட்டை ஹோமம் யாகத்திற்கும், வேர் மருந்துக்கும் உபயோகப்படுகிறது வில்வபழத்தின் சதுப்பை நீக்கி உபயோகித்தப்பின், அதன் குடுப்பையைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீசூர்ணததையும், திறுநீற்றையும் ஒரு டப்பாப்போல் வைத்துக்கொள்கிறார்கள் பக்தர்கள். இதனால் மருத்துவக்குணம் அதில் கலக்கிறது என்றும் நம்பப்படுகிறது. 

சிவன் என்பது நெருப்பு. நாம் நெருப்பாக சிவன் இருக்கும் அண்ணாமலை க்ஷேத்ரத்தைப் பார்க்கிறோம். இந்த நெருப்பாய் சுடும் இடத்தில் சூட்டைத்தணிக்க வில்வ இலை உதவுகிறது. 

அரச மரத்தைப்பூஜிப்பது போலவே வில்வ மரத்தையும் பூஜிப்பது வழக்கம். வில்வமரத்தை வழிப்பட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கிறதாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

ஸ்ரீநகரிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இடம் கீர் பவானி கோவில்....



🌊 காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இடம் கீர் பவானி கோவில். இக்கோவிலை சுற்றியுள்ள மரங்களும் சுனையும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும். 
🌊 இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை அளிக்கும் கீர் என்ற இனிப்பு பதார்த்தத்தையும் பாலையும் கொண்டு இக்கோவில் இப்பெயரை பெற்றது. இந்த கோவிலில் பவானி அம்மன் சிவனோடு அருள்பாலிக்கிறார். 

🌊 இந்த கோவிலில் உள்ள குளத்தின் நீரில் பக்தர்கள் அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த குளத்தில் இருக்கும் நீரானது பச்சை, இளஞ்சிவப்பு, கருப்பு, நீலம் என பல்வேறு நிறங்களில் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது.

🌊 எந்த நிறத்தில் நீர் மாறினாலும் பிரச்சனை இல்லை. ஆனால் குளத்தின் நீர் கறுப்பு நிறத்தில் மட்டும் மாறவே கூடாது என்கிறார்கள். குளத்தின் நீர் கறுப்பு நிறத்தில் மாறினால் அது அழிவிற்கான அறிகுறியாம். 

🌊 ஆகையால் நீர் கறுப்பு நிறத்தில் மாறும் அறிகுறி தெரிந்தாலே சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுமாம். எவ்வளவு பெரிய ஆபத்தையும் முன்கூட்டியே உணர்த்தும் ஒரு அதிசய குளமாகவே இது பார்க்க முடியும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, September 10, 2024

முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள்

முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் என்ன அதன் சிறப்பம்சம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..*
*1:ஞானசக்திதரர்*

*முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் வீடான திருத்தணியில் எழுந்தருளக்கூடிய முருகப்பெருமானின் வடிவத்திற்கு ‘ஞானசக்திதரர்’ என்று பெயர். இவரை வழிபடுவதால் நல்ல ஞானமும், நினைத்த காரியங்களுக்கு வெற்றியைத் தருவார்.*

*2:கந்தசாமி*

*பழனி மலை மீது நின்ற கோலத்தில் பாலதண்டாயுதபாணியின் திருவடிவத்தில் காட்சி தருவதை ‘கந்தசாமி’ வடிவமாகும். இந்த வடிவத்தை வழிபடுவதால் சகல காரியங்கள் சித்தியாகும்.*

*3:ஆறுமுக தேவசேனாபதி*

*ஈரோடு சென்னிமலையில் முருகன் கோயிலில் ‘ஆறுமுக தேவசேனாபதி’ என்ற வடிவத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். இந்த முருகனை வழிபடுவதால் மங்களங்கள் உண்டாகும்.*

*4:சுப்பிரமணியர்*

*நாகப்பட்டினம் திருவிடைகழியில் அருள்பவர் ‘சுப்பிரமணியர்’ திரு உருவில் அருள்கிறார். சுப்பிரமணியனை வணங்கினால் வினைகள் விலகி, ஆனந்தத்தை அருள்வார்.*

*5:கஜவாகனர்*

*மேல்பாடி, திருமருகல், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகிய கோயில் கோபுரத்தில் யானை மீது அருளக்கூடிய கஜவாகனர் முருகப்பெருமானை தரிசிக்க முடியும். இவரை வழிபட்டு வர துன்பங்கள் விலகி நற்பலன் கிடைக்கும்.*

*6:சரவணபவர்*

*சென்னிமலை, திருப்போரூர் உள்ளிட்ட திருத்தலங்களில் ‘சரவணபவர்’ திருவடிவை நாம் தரிசிக்க முடியும். இவரை தரிசித்து வர மங்கலங்களை அருள்வார். கொடை, ஒலி, சாத்வீகம், வீரம் உள்ளிட்ட நற்குணங்களை அருளக்கூடியவர்.*

*7:கார்த்திகேயன்*

*கார்த்திகேயரை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்கள் பெறலாம். குறிப்பாக கார்த்திகை நட்சத்திரத்தில் வழிபட்டால் மேலும் விசேஷமானது. இவரை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலும், தாராசுரம் ஐராவதீஸ்வாரர் கோயிலிலும் தரிசனம் செய்ய முடியும்.*

*8:குமாரசாமி*

*குமாரசாமி முருகனை வழிபடுவதால் ஒருவரின் ஆணவம் பொடிபடும். கங்கை கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் குமாரசாமி திரு உருவத்தை பஞ்சலோக விக்கிரகமாக தரிசிக்கலாம்.*

*9:சண்முகர்*

*திருச்செந்தூர்க் கோயிலில் சண்முகர் திருவுருவில் காட்சி தருகிறார். இவரை வழிபட சிவ பார்வதியை வணங்கிய பலன் கிடைக்கும்.*

*10:தாரகாரி*

*முருகனுக்கு `தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் இந்த திருப்பெயர் வந்தது.இவரை வழிபட்டு வர உலக மாயைகளிலிருந்து விடுதலை தருவார். தாரகாரி உருவத்தை விராலி மலையில் உள்ள முருகன் கோவிலிலும் தரிசிக்கலாம்.*

*11:சேனானி*

*பகை, பகைவர்கள், பொறாமையை அழித்து நல்ல எண்ணத்தை அருளக்கூடியவர் முருகனின் ‘சேனானி’ திருவுருவம். இவரை தேவிகாபுரம் ஆலயத்தில் தரிசிக்கலாம்.*

*12:பிரம்மசாஸ்தா*

*முருகனின் பிரம்மசாஸ்தா திருவுருவத்தை வணங்கினால் கல்வி, கேள்வியில் சிறப்படையலாம். பிரம்மசாஸ்தா திருவுருவை காஞ்சிபுரம் குமரகோட்டம், ஆனூர், சிறுவாபுரி, பாகசாலை உள்ளிட்ட இடங்களில் பிரம்மசாஸ்தா திருவுருவை தரிசிக்கலாம்.*

*13:வள்ளிகல்யாணசுந்தரர்*

*திருமணத் தடைகளை அகற்றக்கூடிய வள்ளிகல்யாணசுந்தரர் திருவுருவை திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் தரிசிக்கலாம்.*

*14:பாலசுவாமி*

*திருக்கண்டியூர், திருச்செந்தூர், ஆண்டாள் குப்பம் ஆகிய கோயில்களில் பாலசுவாமி திருவுருவத்தை தரிசிக்க முடியும். இவரை தரிசித்தால் உடல் அங்கக் குறைபாடுகளை அகற்றுவார். அதே போல் தீராத நோய் விலகும்.*

*15:சிரவுபஞ்சபேதனர்*

*திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் சிரவுபஞ்சபேதனர் திருவுருவம் பார்க்க முடியும். இந்த இறைவனை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் நீங்கும்.*

*16: சிகிவாகனர்*

*சிகி என்றால் மயில். மயில் வாகனத்தை கொண்ட தெய்வம் முருகன். மயில் மீது அமர்ந்து அழகாக காட்சி தருபவர் சிகிவாகனர். இவரை வணங்கி வந்தால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைத் தருவார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...