Tuesday, September 24, 2024

சிவபெருமான் என்றும் உள்ளவர் ,எங்கும் நிறைந்தவர் ,எல்லாம் அறிபவர்....



1.சிவபெருமானை முழமுதற் கடவுளாக கொண்டு வழிப்படும் சமயம் .
(சிவ சம்பந்த முடையது சைவம்).

2. சிவபெருமான் எப்படிபட்டவர் ?

சிவபெருமான் என்றும் உள்ளவர் ,எங்கும் நிறைந்தவர் ,எல்லாம் அறிபவர் , எல்லாம் வல்லவர் .

3. சிவபெருமான் உயிர்களுக்காக செய்யும் தொழில்கள் யாவை ?

1.படைத்தல் –மாயையிலிருந்து உடல், கருவிகள், உலகம்,நுகர்ச்சிபொருள்களைப் படைத்து உயிர்களுக்குக் கொடுத்தல்.

2.காத்தல் –படைக்கபட்டதை உயிர்கள் அனுபவிக்க ஒருகால எல்லைவரைகாத்து நிறுத்தி வைத்தல்.

3.அழித்தல் – உயிர்களுக்குக் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவைகளை மீண்டும் மாயையில் ஒடுக்குதல்.

4.மறைத்தல் – உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக சிவபெருமான் தன்னை மறைத்து உலகத்தை காட்டல் .

5.அருளுதல் – பக்குவம் அடைந்த உயிர்களுக்கு அருளை வழங்கி தன் திருவடியில் சேர்த்தல்.

4.சிவபெருமான் ஐந்தொழில்களையும் எதைக் கொண்டு செய்கிறார் ?

தம் சக்தியாகிய உமாதேவியாரை கொண்டு செய்கிறார்.

5. சிவபெருமானின் வடிவங்கள் எத்தனை வகை ?

1.அருவம்- கண்ணுக்கு புலனாகமல் சக்திருபமாய் இருந்து அருளல்(மந்திர ஒலி).

2.அருவுருவம் – முகம் ,கை, கால்,உறுப்புகள் இல்லாமல் தெரிவது(சிவலிங்கம்) .

3.உருவம் –முகம் முதலிய உறுப்புகளுடன் தெளிவாக தோன்றுவது (25 மகேசுவரவடிவங்கள்).

6.சைவ சமய சாதனங்கள் எவை ?

திருநீறு , திருவைந்தெழத்து , உருத்திராக்கம் .

7. திருவைந்தெழத்து எத்தனை வகைப்படும் ?

. திருவைந்தெழத்து மூன்று வகைப்படும் .

1.தூல திருவைந்தெழத்து –நமசிவாய .

2.சூக்கும திருவைந்தெழத்து – சிவாய நம.

3.காரணதிருவைந்தெழத்து – சிவயசிவ .

8. மணத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?

1.மானதசெபம் ,அகப்பூசை , திலாயம்

9.வாக்கால் செய்யு வழிப்பாடுகள் யாவை?

திருமுறைகள் ஒதுதல், ஒதுவித்தல் , நாமவளிகூறல் ,வாசகசெபம்.

10.காயத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?

ஆலயம்வலம்வருதல் , திருப்பணிசெய்தல் , நந்தவனம்அமைத்தல் , மாலை தொடுத்தல் ,ஆலயத்தை கூட்டி மெழகிடுதல் முதலியன .

11.இறைவனை அடையும் மார்க்கங்கள் எவை?

1.தாச மார்கம் – இறைவனுக்கு அடிமை பூண்டியற்றும் நெறியான இம்மார்கம் சரியை எனவும் கூறப்பெறும்.

2.சற்புத்திர மார்கம் – மகன் மைநெறி எனக் கூறப்படும் இம்மார்க்கம் கிரியை நெறியாகும் .

3.சகமார்க்கம் – தோழமை நெறிஎனப் பெறும் இம்மார்க்கம் யோகநெறி பாற்பட்டதாகும் .

4.சன்மார்கம் – ஞானநெறி எனப் பெறும் இம்மார்கம் குருசிஷ்ய பாவத்தை உணர்த்துவது .

12.குரு , லிங்க , சங்கம வழிபாடு என்றால் என்ன ?

சிவபெருமான் திருவடி நீழலைச் சென்றடைவதற்குரிய பல மார்க்கங்களில் குரு லிங்க சங்கம வழிப்பாட்டு நெறிகளும் குறிப்பிடத்தக்கனவாகும் .

1.குரு வழிப்பாடு – குருவை தரிசித்தலும் , குருவின் திருநாமத்தைச் செப்புதலும் , உபதேசத்தை கேட்டலும் , அவர் தம் அறிவுரையை சிந்தித்தலும் ஆகும் .

2.இலிங் வழிப்பாடு – சிவபெருமானுடைய அருவுருவமாகிய சிவலிங்கத்தைவழிபடுதலாகும் .

3.சங்கம வழிப்பாடு – சிவனடியார்களை சிவமாகவே கருதி வணங்கி வழிப்படுதல்.

13.தீக்கை என்றால் என்ன ?

சைவகுருமார்களால் ஏனையோர்க்கு அளிக்கப் பெறும் சைவ சமய அங்கீகாரச் சடங்கே தீக்கை ஆகும் .

14. .தீக்கை எத்தனை வகைப்படும் ?’

சமயதீக்கை ,விசேசதீக்கை,நிர்வாணதீக்கை ,ஆச்சார்யதீக்கை என நான்கு வகைப்படும்.

15.சைவ சமயத்தின் சிறந்த நூல்கள் யாவை?

தோத்திரமும் , சாத்திரமும் சைவத்தின் இரு கண்கள் போன்றது .

16. தோத்திரம் என்றால் என்ன ?

சிவபெருமானின் புகழைப் போற்றித்துதித்து நாயன்மார்களும் அடியார்களும் பாடியுள்ள பாடலகள் தோத்திரம் அல்லது திருமுறைகள் எனப்படும் .

17. திருமுறைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

திருமுறைகள் பன்னிரன்டு வகைப்படும் , அவை முதலாம் திருமுறைமுதல் பன்னிரன்டாம் திருமுறைவரை பெயர் சொல்லி வ.ழங்கப்படும் .

18.திருஞானசம்பந்தர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?

முதல் மூன்று திருமுறைகள்.

திருஞானசம்பந்தர்

19.திருநாவுக்கரசர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?

நான்கு , ஐந்து , ஆறாம் திருமுறைகள்.

திருநாவுக்கரசர்

20.சுந்தரர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?

ஏழாம் திருமுறைஆகும் .

சுந்தரர்

21.எட்டாம் திருமுறை யாவது யாது ?

திருவாசகமும் , திருக்கோவையாரும் அருளியவர் மாணிக்கவாசகர் .

மாணிக்கவாசகர்

22.திருவாசகத்தின் பெருமை என்ன ?

மாணிகவாசகர் அருள சிவபெருமான் அதனைத்தன் திருக்கரங்களினால் எழதிக் கையொப்பமிட்டுவைத்தவை திருவாசகப்பாடல்கள் .

23.ஒன்பதாம் திருமுறை எதைக் குறிக்கும்?

திருவிசைப்பா , திருப்பல்லாண்டைக்குறிக்கும் .

24. ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்கள் யாவர் ?

திருமாளிகைத்தேவர் , சேர்ந்தனார் , கருவூர்தேவர் , பூந்துருத்திகாடவநம்பி , கண்டராதித்தர் ,வேணாட்டிகள் , திருவாலிஅமுதனார் , புருடோத்தமநம்பி,சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் .

25. பத்தாம் திருமுறை யாவது யாது ?

திருமூலர் அருளிச் செய்துள்ள திருமந்திரம் .

26. பதினோராம் திருமுறையாவது யாது ?

சைவ சமயப் பிரபந்தத்திரட்டு என இருபத்திரண்டு வகைசிற்றிலக்கியங்களால் ஆனது .

27. பதினோராம் திருமுறையின் ஆசிரியர்கள் யாவர் ?

திருவாலவாயுடையார் , காரைகாலம்மையார் , ஐயடிகள் காடவர்கோன் , சேரமான் பெருமான்நாயன்னார் , நக்கீரதேவர் , கல்லாடதேவர் , கபிலதேவர் , பரணதேவர், இளம் பெருமானடிகள் , அதிராவடிகள் , பட்டினத்து அடிகள் , நம்பியாண்டார்நம்பிகள் .

காரைகாலம்மையார்
சேரமான் பெருமான்நாயன்னார்

28.பதினோரம் திருமுறையின் சிறப்பு என்ன ?

தமிழ்சங்கத் தலைமைப் புலவரான சோமசுந்தரக்கடவுள் பாணபத்திரக்காக சேரமன்னுக்கு வரைந்த திருமுகப்பாசுரம் இடம் பெற்றுள்ளது , திருமறைகள் பாடியவர்களில்ஒரேபெண்புலவரான காரைக்கால் அம்மையாரின் பதிகங்களைப் பெற்றது .

29.பன்னிரண்டாம் திருமுறையாவது யாது ? அதை பாடியவர் யார் ?

பன்னிரண்டாம் திருமுறை‘பெரியபுராணம்’ ஆகும் . இதை பாடியவர் சேக்கிழார் .

சேக்கிழார்

30.சாத்திரங்கள் என்றால் என்ன ? அவை எத்தனை ?

சைவ சித்தாந்த முப்பெரும் உண்மைகளை கூறும் நூல்கள் சாத்திரங்களாகும் அவை பதிநான்கு .

31. பதிநான்கு . சாத்திர நூல்கள் எவை ? அதன் ஆசிரியர் யார் யார் ?

1.திருவுந்தியார் – திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் .

2.திருக்களிற்றுப்பாடியார் – திருகடவூர் உய்யவந்த தேவநாயனார் .

3.ஞானபோதம் – மெய்கண்டார் .

4.சிவஞானசித்தியார் – அருணந்தி சிவாச்சாரியார் .

5.இருபாஇருபது - அருணந்தி சிவாச்சாரியார் .

6.உண்மை விளக்கம் – திருவதிகைமனவாசகம்கடந்தார்.

7.சிவப்பிரகாசம் - உமாபதிசிவம்

8.திருவருட்பயன் - உமாபதிசிவம்

9.வினாவெண்பா - உமாபதிசிவம்

10.போற்றிப்பஃறொடை - உமாபதிசிவம்

11.கொடிக்கவி - உமாபதிசிவம்

12.நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவம்

13.உண்மை நெறி விளக்கம் - உமாபதிசிவம்

14.சங்கற்ப நிராகரணம் – உமாபதிசிவம்

32.சைவசமயத்தில் சிறந்து விளங்கிய அருளாளர்கள் யாவர் ?

அறுபத்து மூன்று நாயன்மார்களும் சைவத்தில் சிறந்த அருளாளர்களாக விளங்கினார்கள் . 

தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கலைக்களஞ்சியம், சைவசமய தோத்திர வினாவிடை , சைவ சமயக்கல்வி, தருமபுர ஆதீனம், 
சைவ சமய வரலாறும் பன்னிரு திருமுறை வரலாறும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சிவ தாண்டவம்.சிவபெருமான் ஆடிய நடனம்.....

சிவ தாண்டவம். 1.சிவபெருமானின் காளிகா தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது? காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்ப...