Friday, April 18, 2025

உத்திராபதி மல்லாரி என்ற நாதஸ்வர இசை முழங்க வெளிவே வரும் உத்திராபத ிதேவராஜ ாஆலயம்.

உத்திராபதி_தேவராஜா_ஆலயம் குறித்த அனுபவ_பதிவு ..
உத்திராபதி_தேவராஜா_ஆலயம்
இறையுணர்வை யாவராலும் உணரும் தன்மையோடு உயிர்ப்புடன் இறையின் இருப்பை அனுபவிக்கும் அற்புத தலமே #திருச்செங்காட்டான்குடி என்ற #அதியற்புத_தலமாகும் ..

கும்பகோணம் மற்றும் திருவாரூர் இருந்து காரைக்கால் செல்லும் வழியே !! திருமருகல் என்ற தலத்தில் இறங்கி !! அங்கே இருந்து கிராமத்து சாலையில் சுமார் 5 KM வந்தால் அடைய கூடிய அற்புத தலமே இந்த திருச்செங்காட்டான்குடி என்ற திருத்தலம் ஆகும் ..

வாழ்வில் ஒருமுறையேனும் !! கொஞ்சம் பொறுமையாய் இருந்து அனுபவித்து வரவேண்டிய அற்புத தலமே இந்த திருச்செங்காட்டங்குடி ஆகும் ..

எந்த ஆன்மாவுக்கு பக்குவம் இருக்கின்றதோ !! அவ்வான்மாவை ஈர்த்து அருளும் அற்புத தலமே இது ..
எவ்வளவோ புகழ்பெற்ற கோவில்கள் எல்லாம் இருக்க ..
" ஏதோ ஓர் மிக சின்ன கிராமத்தில் இருக்கும் இந்த கோவிலை பற்றி சொல்லவும் வேண்டுமோ ?? " என்று கேட்டால் 
" கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும் !! " என்ற உள்ளுணர்வின் உந்துதலே இப்பதிவு ..

எல்லா ஆலயத்திலும் திருப்பள்ளியெழுச்சி என்று இறையை எழுந்தருள செய்யும் சடங்கும் !! பள்ளியறை என்ற சடங்கும் இருக்கும் ..

இங்கும் அந்த சடங்கு உண்டு !! 
ஆனால் 
இந்த சடங்கு முறையெல்லாம் கடந்து ..
இறை என்ற பேராற்றல் என்றும் நிறைந்து இருக்கும் தலமே இது !! 

திருச்செங்காட்டான்குடி வரலாற்றில் இறைவனே காபாலிக ( பைரவ ) ரூபம் கொண்டு, வந்து அமர்ந்து இருந்ததாக சொல்லப்படும் ஆத்தி மரம் இங்கே , பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கு !! 

ஏதோ கண்ணுக்கு காட்சி என்று நினைத்து விடாதீர்கள் !!

அந்த மரம் இறையின் பூரண தன்மையை உள்வாங்கி !! இன்றும் அதன் அடிநிழல் !! 
அதன் சபரிசம் ( தீண்டல் ) !! 
அதில் இருந்து உதிரும் இழை முதற்கொண்டு !! 
நீங்கள் கேட்காதே கூட உங்களுள் அது இறையின் தன்மையை ஊடுருவ செய்து !! 
உங்களை பூரணமாய் அணுவணுவாக ஆக்கிரமித்து !! 
உங்களுள் விவரிக்க இன்றுவரையில் வார்த்தைகள் இல்லாத ஓர் உணர்வு நிலைக்கு உங்களை இட்டு சென்று !! 
உங்களுள் பேரமைதி என்ற நிலையில் இருத்தும் என்பது உறுதி .. 

அந்த மரத்தை பார்த்த வண்ணமே , 
அந்த தலத்திற்கு எழுந்தருளி தனது தன்மையை இந்த கணம் வரையில் வைத்து அருளும் ..
உத்திராபதி என்ற தேவராஜா என்ற ஞானராஜா என்ற மூர்த்தமும் அந்த மரத்தை நோக்கியே இருக்கும் ..

உண்மையில் அந்த ஆலயம் ..
ஓர் சிறிய கிராமத்தில் !! வெகுசொற்ப மக்கள் வாழும் இடத்தில் !! 
இன்றைய நாகரிக தன்மைகள் அற்ற விதத்தில் ..
யாரும் அவ்வளவு தூரம் தேடி வராத விதத்தில் ..

அந்த ஆலயமே ஓர் ரிஷிகளுக்கு எல்லாம் ரிஷி !! தேவர்களுக்கு எல்லாம் தேவனாகிய மஹாதேவன் !! அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருக்கும் ஓர் ஞானசாலையில் நுழைவது போலவே ஓர் உணர்வை தரும் ..

சிலருக்கு பெரும் பயத்தையும் தரும் !! உலகியல் மாயை உடைக்கும் போது உள்ளுணர்வாய் எழும் அந்த பயம் !!

வருடத்திற்க்கு இரண்டே திருவிழாதான் !! அப்போது மட்டுமே அந்த தேவராஜா உத்திராபதி வெளியே வருவார் !! 

அதுவும் வேறு எந்த கோவிலும் இல்லாதவாறு !!
சாமீ நடுநிசி என்று சொல்ல படும் அதிகாலை  2,30 மணிக்கு மேலே !! 
வேறுயெங்கும் இசைக்கப்படாத வாத்தியங்கள் முழங்க ..
உத்திராபதி மல்லாரி என்ற நாதஸ்வர இசை முழங்க வெளிவே வருவார் ..
அவர் வரும் அழகும் உணர்வும் அச்சத்தை கெடுக்கும் அச்சமாக இருக்கும் ..

மற்ற நாட்களில் அவர் சூட்சமாக நள்ளிரவு வலம் வருவதாக ஐதீகம் !! 

ஏதோ அந்த மண்ணை மிதித்து !! அந்த கோவிலை கண்ணால் தரிசிக்க கூட ஓர் ஆழ்ந்த உள்ளுணர்வு நம்மை ஆள தொடங்கி விடும் ..

ஏதோ மற்ற ஆலயத்துக்கு சென்று வந்தால் !! சிறிது நேரத்திலோ !! சில நாட்களிலோ !! அது நம்முள்ளே உண்டாக்கிய மாற்றம் மாறிவிடும் ..

ஆனால் 
இந்த திருச்செங்காட்டான்குடி என்ற இத்தலத்தில் சிறிது நேரம் இருந்து !! சாமியை தரிசித்து !! அந்த ஆத்தி மரத்தின் நிழலில் தீண்டலில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு !! அங்கே சாமி சன்னதிக்கு வலது புறம் உள்ள !! " ஜெபதபா "  மண்டபத்தில் சிறிது நேரம் அமைந்து இருந்து வர ..

அந்த உணர்வு தரும் ஆளுமை உங்கள் உயிர்வரையில் ஊடுருவி நின்று !!
உங்கள் உயிரோடு கலந்த உணர்வாய் என்றும் உங்கள் வாழ்நாள் முழுவதும் !! இந்த உடல் கடந்த நிலையிலும் உங்களை விட்டு நீங்காத ஆத்மஞானமாய் உங்களுள் என்றும் மிளிரும் ..

அது எல்லாம் சரி !! 
அங்கே போன என்ன கிடைக்கும் ?? - நம்ம மைட் வாய்ஸ் ..

போன கொடுத்தே கொல்லுவான் அந்த ஆளு - நம்ம பாஷையில் ..
நினைப்பது எல்லாம் கொடுப்பான் !! அள்ளி அள்ளி கொட்டுவான் !! 
நினைத்து பெற்று என்ன செய்வாய் என்ற நான் எனது போன்ற ஆணவத்தை கொல்லுவான் ..

அச்சமே நம் வாழ்வின் ஓட்டம் !! ஆட்டம் !! போன்ற அனைத்தின் மூலமாக இருக்க ..
அந்த அச்சத்தையே அச்சம் கொண்டு அகற்றி அமைதி என்றால் என்ற சொல்கடந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் ருசிக்க செய்வான் ..

வேறு என்ன வேண்டும் ??

சிந்தையில் நினையுங்கள் !! 
" வர வழிசெய் நாதா " என்றும் வேண்டுங்கள் !! 
உங்கள் பக்குவம் தொடங்கும் !! 
ஈர்ப்பு கிட்டும் !! 
கண்டிப்பாக திருச்செங்காட்டங்குடி உங்களை உள்வாங்கும் ..

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலை முருதேஸ்வர் கோயில்.

 🌹முருதேஸ்வர் கோயில்  உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நா...