மூர்த்தி...தலம்....தீர்த்தம்..!
#தங்கம்_வாங்கிடும்_யோகம்_வேண்டுமா..?
பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை என்பது உலகவழக்கு. அதற்கேற்ப
பொன் வேண்டாதார் இந்த உலகில் எவருண்டு..? எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள் பெற்ற தேவார முதலிகள் கூட உலகநன்மைக்காக பதிகம் பாடி பொற்காசுகளையும்; பொற்கிழிகளையும் பெற்ற அருள்வரலாறுகள் ஏராளம்.
பொன் வாங்குவதற்கு திருமகள் அருள்
வேண்டும் என்பார்கள். அப்படியே சிரமப்பட்டு வாங்கிடும் தங்கம் நிலைக்க வேண்டும். இத்தகு அருளை வழங்கிடும் தலமாக விளங்குகிறது செம்பொன்னார்கோயில். திருமகள் தவமிருந்து சிவ பூஜை செய்த தலமாகையால் #லக்ஷ்மிபுரி என்றும்;
#ஸ்வர்ணபுரி என்றும் பெயர்பெற்ற தலம். எனவே இத்தலத்து இறைவன் #ஸ்வர்ணபுரீஸ்வரர் ; #ஸ்வர்ணலக்ஷ்மீஸ்வரர், #செம்பொன்பள்ளியார் என வழங்கப்பெறுகிறார். நவநிதிகளுக்கும் தலைவனான குபேரன் இத்தலத்தில் வழிபட்டுதான் சங்கநிதி மற்றும் பத்மநிதியைப் பெற்றதாக புராண வரலாறு.
இத்தலத்து ஸ்வயம்பு மூலவர் பதினாறு இதழ் கொண்ட தாமரைமலர் போன்ற அமைப்புடைய ஆவுடையில் எழுந்தருளியிருப்பது விசேஷம்.
சித்திரை மாதத்தில் ஏழாம் நாள் தொடங்கி பதினெட்டாவது நாள் வரை 12 நாட்கள் சூரியபகவான் தனது ஒளிக்கதிர்களால் அதிகாலையில் மூலவரை ஆராதிப்பது காணக்கிடைக்காத அரிய காட்சி. இந்நிகழ்வினை #சௌரவோற்சவம் என்கிற நிகழ்வாக இத்தலத்தில் கொண்டாடுவது குறிப்பிடத் தக்கது.
இத்தலத்தில் வழிபடுவோருக்கு ஸ்வர்ணயோகம் நிலைத்திடும் என்பது ஐதீக அடிப்படையிலான நம்பிக்கை.
#மருவார்குழலி/#சுகுந்தகுந்தளாம்பிகா சமேத ஸ்ரீ #ஸ்வர்ணபுரீஸ்வரர் ஆலயம் - #செம்பொனார்கோயில்
மயிலாடுதுறையிலிருந்து பொறையார் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இப்பாடல் பெற்ற தலம்.
No comments:
Post a Comment