Tuesday, May 27, 2025

சிவ ஆலயங்களில் கனி தரும் தல விருட்சங்கள்.

பக்தியை ஏற்படுத்தும் ஆலயங்களில் கனி தரும் தல விருட்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்* .....
*ஔவையாருக்கு சுட்டபழம் உதிர்த்துத் தந்தானே முருகன், அந்த நாவல் மரம், பழமுதிர்சோலையில் தலவிருட்சமாக விளங்குகிறது. இந்த நாவல் மரம் கந்தசஷ்டி நாட்களில் மட்டுமே கனிகளைத் தருகிறது என்பது வியப்பான தகவல்.

*திருவையாற்றிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது சங்கம க்ஷேத்திரம் எனும் திருக்கூடலூர். ஆடுதுறைப்பெருமாள் அருளும் இத்தலத்தின் தலவிருட்சம் பலாமரம்.

*ஜம்பு முனிவரால் வளர்க்கப்பட்ட வெண்நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்டது, ஜம்புகேஸ்வரம் எனும் திருவானைக்காவல். இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரரை நவகிரக ஜன்னல் என்ற அமைப்பின் மூலம் தரிசித்த பின்னரே ஆலய வலம் வருவது நடைமுறையில் உள்ளது.

*நான்கு புறங்களிலும் நான்கு வகை சுவைகளுடன் பழங்கள் தரும் அதிசய மாமரம், *காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்* ஆலயத் தலவிருட்சமாகும்.

*காழிச்சீராம விண்ணகரம் எனும் *சீர்காழி தாடாளன் ஆலயத்தின்* தல விருட்சம் பலாமரம். இத்தல பெருமாளின் திருவடியின் கீழ் மகாபலியின் பேரன் நமுச்சியை தரிசிக்கலாம்.

**தஞ்சாவூர் திருப்பழனம் ஆபத்சகாயர் ஆலயத்தில்* கதலி வாழை மரமே தல விருட்சம். பங்குனி, புரட்டாசி மாத பவுர்ணமி தினங்களிலும் அதற்கு முன்பின் தினங்களிலும் சந்திரன் தன் கிரணங்களால் இத்தல ஆபத்சகாயரை ஆராதிக்கின்றார்.

**திருச்சி மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் ஆலயத்தில்* , பெயருக்கேற்றபடி (வடமொழியில் ஆம் என்றால் மாம்பழம்)
😮😮😮😮😮 மாமரமே தலவிருட்சம். இத்தல கோஷ்டத்தில் அருளும் துர்க்கை, தன் காலடியில் மகிஷன் இல்லாமல் அருள்வது அபூர்வமானது.

*திருநீலக்குடி மனோக்ஞ்ய நாத சுவாமி ஆலயத்தில் வன்னி, கூவிளம், நொச்சி, விளா, மாவிலங்கை ஆகிய *ஐந்து மரங்கள் தலமரங்களாகத் திகழ்வதால்* பஞ்சவில்வவனேசர் என ஈசன் வணங்கப்படுகிறார். தற்போது ஆலயத்தில் பலாமரமும் ஆறாவது தல மரமாகத் திகழ்கிறது.

*திருவையாற்றுக்குக் கிழக்கே சந்திரன் வணங்கி பேறு பெற்ற திங்களூர் கயிலாயநாதர் ஆலயத்தின் தலவிருட்சங்கள் வாழையும் வில்வமும். அப்பூதியடிகள் மகன் மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டி இறக்க திருநாவுக்கரசர் *ஒன்றுகொலாம்* பாடி அவனை பிழைக்கச் செய்த தலம் இது.

*நாகராஜனுக்கு திருமால் திருவருள் புரிந்த *நாகப்பட்டினத்தில் அருளும் சௌந்தரராஜப் பெருமாளை* அழகியார் என ஆழ்வார்கள் போற்றிப் பாடியுள்ளனர். இங்கு தல விருட்சம் மாமரம்.

**திருக்கழுக்குன்றத்தின் தல விருட்சம்* வண்டுவகை வாழையாகும். ஐந்தாம் திருவிழாவில் வாழை மரங்கள் கட்டிய சப்பரத்தில் வேதபுரீஸ்வரர் திரிபுரசுந்தரியுடன் எழுந்தருள்வார். அச்சேவை கதலீவிருட்ச சேவை எனப்படுகிறது.

**திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில்* திருஞானசம்பந்தரால் ஆண் பனைமரம் பெண் பனைமரமாகி, காய்த்த அற்புதம் நடந்தது. அந்த பனைமரமே ஆலயத்தின் தல விருட்சம். திருவோத்தூர் தலபுராணத்தில் இப்பனை மரம் ஈசனின் அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

**குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில்* குறும்பலாவே தலவிருட்சம். அந்த மரத்திற்கு தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. புகழ்பெற்ற குற்றாலக்குறவஞ்சியிலும் இம்மரத்தின் பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

பஞ்ச சபைகளில் இரண்டாம் சபை தாமிர சபை

பஞ்ச சபைகளில் இரண்டாம் சபை தாமிர சபை "ஏனைவெண் கொம்பொடு மெழில் திகழ் மத்தமு கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார...