Sunday, August 31, 2025

சேலம் மாநகர் சுகவனேசுவரர் கோயில்.

_சுகங்களை அள்ளிதரும் சுகவனேஸ்வரர் கோயில்..
சேலம் மாநகரின் மத்தியப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலம் சுகவனேசுவரர் கோயில்.
12ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சுந்தரபாண்டியன் மன்னர் காலத்தில் சுயம்புமூர்த்திக்கு கோயில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கிறது. கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் வாயில் வளைவு தெற்கு திசையை நோக்கியபடி உள்ளது. கோயில் முன்புறம் நந்தி மண்டபமும், வடபாகத்தில் வாகனமண்டபமும் உள்ளது. இதற்கெலாம் சிகரமாக மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

https://maps.app.goo.gl/nqq3cbDfKQrg6FGa6

பிரம்மதேவன் தன் படைப்பில் ஓவ்வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக இருக்க முடிகிறதென்பதன் ரகசியத்தை சொல்ல , அதை கேட்டு கொண்டிருந்த சிவநெறிகளில் சிறந்த சுகர்முனிவர் பிரம்மனின் ரகசியத்தை சரஸ்வதியிடம் சொல்ல , கோபம் கொண்ட பிரம்மன் சுகர்முனிவரை கிளியாக்கி சாபம் கொடுத்தார். சுயம்புமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபட சாபம் நீங்கும் என்பதால் எண்ணற்ற கிளிகளோடு சிவபெருமானை வழிபடும் வேளையில் வேடன் ஓருவன் கிளிகளை விரட்டியடிக்க , அவை புற்றின் மீது பதுங்கியது. கோபம் கொண்ட வேடன் புற்றை வெட்ட கிளிகள் எல்லாம் மடிந்தது. அந்நேரம் ராசகிளி (சுகர்முனிவர்) சுயம்பு மூர்த்தியின் முடிமீது சிறகை விரித்து காத்தது. வேடனால் வெட்டப்பட்டு கிளி இறக்க சுயம்புமூர்த்தியின் தலையில் இரத்தம் பீறிட்டது. சுயம்புவாகிய இறைவனை உணர்ந்த வேடன் அக்கணமே தன் வாளால் தன்னை தானே வெட்டி மாய்த்து கொண்டான்.

சிவனடி சேர்ந்த சுகர்முனிவர் கிளியுருவம் மறையப்பெற்று
 " பெருமானே நீங்கள் இந்த வனத்தில் சுகவனேஸ்வரராக இருந்து அனைத்து உயிர்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும்" என்ற வரத்தை கேட்டதனால் , இப்படி உருவானவர் சுகவனேஸ்வரர் என்கிறது தலவரலாறு .

வடக்கு பிரகாரத்தில் சண்டேசுவரர், சுவர்ணதுர்க்கா, வடகிழக்கில் பைரவர், சூரிய சந்நிதிகள் உள்ளன.
நவக்கிரகங்களில் ராகு, செவ்வாய் இடம்மாறி உள்ளதால் இவர்களை வழிபட நல்ல வரனும், உத்தியோகமும் கைகூடும்.
நவக்கிரக சக்தி மேல்தளத்தில் பல்லி, உடும்பு உருவங்கள் உள்ளதால் இதனை வழிபட பல்லி விழும் உபாதைகளிலிருந்து நிவர்த்தி பெறலாம்
இங்குள்ள விகடச் சக்கர விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட குழந்தைகளுக்கு ஏற்படும் உபாதைகள் நீங்கும் என்பது ஜதீகம்.

சோமாஸ்கந்தர், சந்திரசேகர், நாகர், விகடசக்ரவிநாயகர், வேதவியாசகர், சிவபக்த ஆஞ்சநேயர் சுகப்ரம்மரிஷி , சப்த மாதாக்கள், என எண்ணற்ற தெய்வங்கள் காட்சியளிப்பது சிறப்பாகும். மகாமண்டபத்தின் கீழ்கோபுர வாயிலை அடுத்து சுவர்ணாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. தவளைகள் இல்லாத தீர்த்த கிணறு இருப்பது வியப்பு. இது அமண்டு தீர்த்தம் ஆகும். கோயிலில் 5 காலபூஜைகளும் , பிரதோஷ காலத்திலும் நந்தி சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகமும், சனி மஹா பிரதோசத்தில் சிறப்பு யாகங்களும், விசேச அபிஷேக ஆராதனையும் நடைபெறும்.
கருவறையில் மூலவர் லிங்க உருவத்தில் அருள்பாளிக்கிறார்.
வைகாசி மாதத்தில் திருத்தேரோட்டம் களை கட்டும். கார்த்திகை தீப விழா, நவராத்திரி உள்பட அனைத்து விழாக்களும் கோயில் வளாகத்தில் கோலாகலமாக நடப்பது தனிச்சிறப்பு.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில் .

*தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவில் ..

திருக்கோயில்
அமைவிடம்

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.


தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் மூலவர் சங்கர ராமேஸ்வரர், அம்பிகை பாகம்பிரியாள்.
தல வரலாறு

தூத்துக்குடியின் பழம்பெயர் 'திருமந்திர நகர்' என்பதாகும். இங்குதான் சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு வரையறுத்ததாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த இடம் 'திருமந்திர நகர்' என்று அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் பசுமை நிறைந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார். அதுவே இந்த சங்கர ராமேஸ்வரர் கோவில் என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனை காசியப முனிவர், கவுதமர், பரத்வாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள்பெற்றுள்ளனர்.

பிற்கால குறுநில மன்னரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தார். இவருக்கு குழந்தைப்பேறு இல்லை. இதனால் மனம் வருந்திய மன்னன், காசி போன்ற புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று புனித நீராடி வந்தார். ஒரு சமயம் மன்னன் தனது பரிவாரங்களுடன் புனித நீராடச் செல்லும்போது, இறைவனது குரல் “பாண்டியா, திருமந்திர நகரில் உள்ள காசிக்கு நிகரான வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா" என அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து சங்கரராம பாண்டியன் வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி காசியப முனிவர் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு திருக்கோவில் ஒன்றை எழுப்பினார்.

கோவில் அமைப்பு

கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. இக்கோவிலை ஒட்டி பெருமாள் கோவிலும் உள்ளது. இறைவன் சன்னிதி முன்பு அர்த்தமண்டபம், மகா மண்டபம் உள்ளன. இத்தல இறைவன் லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியபடி இரண்டு திருக்கரங்களில் ஒரு கரத்தில் தாமரை ஏந்தியும், மற்றொரு கரத்தை இடையோடு தொங்க விட்டபடியும் பார்க்க ஒரு நாட்டிய மங்கைபோல் காட்சி அளிக்கிறார்.

இறைவன் எதிரில் உயர்ந்த கொடி மரம், நந்தி உள்ளன. அதனை கடந்தவுடன் வாசலின் இருபுறமும் சூரியன், சந்திரன் உள்ளனர். சூரியனை ஒட்டி அதிகார நந்தி கைகூப்பியபடி உள்ளார். கருவறை வாசலில் அழகிய விநாயகர் தனிச் சன்னிதியில் அருள்கிறார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகார சன்னிதிகளாக தென்புறம் அறுபத்துமூவர், தென்மேற்கில் விநாயகர், அடுத்து புறச்சுற்றில் கிழக்கு நோக்கிய பஞ்ச லிங்கங்கள் உள்ளன. எதிரில் சிறிய நந்திகளும் உள்ளன.

வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார். அருகில் தெற்கு நோக்கியபடி உற்சவ திருமேனியுடன் முருகன் சன்னிதியும் உள்ளது. வடப்புற சுற்றில் தெற்கு நோக்கிய இரு மாடங்களில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் உள்ளனர். அதே சுற்றில் தெற்கு நோக்கிய சனிபகவான் சன்னிதி உள்ளது. அழகிய மண்டபத்தில் வடகிழக்கில் நடராஜர் சிவகாமியுடன் உள்ளார். அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது. அதில் சனிபகவான் கையில் வில் அம்புடன் உள்ளார். மற்ற கிரகங்களும் கையில் ஆயுதங்களுடன் வாகனத்தில் உள்ளனர்.

இரண்டாம் பிரகாரத்தில் கன்னி விநாயகர், முருகன், ஐயப்பன் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலில் உள்ள 'வாஞ்சா புஷ்கரணி' என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம், வைகாசியில் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி, புரட்டாசியில் நவராத்திரி மற்றும் பாரிவேட்டை, ஐப்பசியில் திருக்கல்யாணம், கார்த்திகையில் சொக்கபனை ஏற்றுதல், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, தை மாதத்தில் தைப்பூசம் மற்றும் தெப்பத் திருவிழா, மாசியில் மகா சிவராத்திரி, பங்குனி மாதம் காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் மாங்கனி பெற்ற நிகழ்ச்சி என பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, August 30, 2025

திருமாணிக்குழி (திருமாணி)வாமனபுரீஸ்வரர் இங்கு பள்ளியறையே கருவறை

#பள்ளியறையே_கருவறையாக_இறைவன்_இறைவியை_விட்டு_இணைபிரியாமல் எப்போதும் சிவசக்தியாக இணைந்திருக்கும்  தேவாரம் மற்றும் திருப்புகழ் பெற்ற நடுநாட்டுத் தலமானதும், 
திருமால் 
வாமன அவதாரத்தில் சிவபெருமானை
வழிபட்ட இடமான கெடிலம் நதிக்கரையில் அமைந்துள்ள 
#கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
#திருமாணிக்குழி (திருமாணி)
#வாமனபுரீஸ்வரர் என்ற #மாணிக்கவரதர்
(உதவி நாயகர்)
#மாணிக்கவல்லி என்ற #அம்புஜாட்சிஅம்மன் 
(உதவி நாயகி)
திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 
திருமாணிக்குழி (திருமாணி) வாமனபுரீஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 
இது தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் 17வது தலங்களில் ஒன்றாகும்.

இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம் இங்கு மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக, அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. தீபாராதனையின் போது மட்டும் திரையை விலக்கி சற்று நேரம் மட்டும் இறைவனை தரிசிக்க அர்ச்சகர்கள் வாய்ப்பு தருவார்கள். அச்சமயம் மட்டுமே சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கும் பேறு கிடைக்கும். இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை, பூஜை முதலியன முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும். 

*மூலவர்:
வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், மாணிக்கவரதர்.  

*அம்பாள்: அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி.  

*தல மரம்:  கொன்றை மரம் -   

*தீர்த்தம் : சுவேத தீர்த்தம், கெடிலநதி.  

*வழிபட்டோர்: 
சம்பந்தர், அப்பர், சுந்தரர்,சேக்கிழார், திருமால்.

*பாடியவர்கள்:
அப்பர் ,சுந்தரர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் 

#திருஞானசம்பந்தர் பாடிய #திருமாணிக்குழி தேவாரப் பதிகம்:

"பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு
  பங்கர்புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல்
  வித்தகர் மகிழ்ந்துறைவிடங்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள
  வள்ளைபடர் அள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை
  சேருதவி மாணிகுழியே.    

சோதிமிகு நீறதுமெய் பூசியொரு
  தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறும்இசை பாடிவசி
  பேசும்அர னார்மகிழ்விடந்
தாதுமலி தாமரைம ணங்கமழ
  வண்டுமுரல் தண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகில்
  நீடுதவி மாணிகுழியே. 

*அருணகிரிநாதர் அருளிய திருமாணிக்குழி திருப்புகழ்:

"மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக
     நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி
          மணத்த வார்குழல் மாமாத ராரிரு …… கொங்கைமூழ்கி 
மதித்த பூதர மாமாம னோலயர்
     செருக்கி மேல்விழ நாடோறு மேமிக
          வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் …… பண்டநாயேன் 
பதித்த நூபுர சீர்பாத மாமலர்
     படைக்குள் மேவிய சீராவொ டேகலை
          பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் …… தங்குகாதும் 
பணக்க லாபமும் வேலொடு சேவலும்
     வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
          படைத்த வாகையு நாடாது பாழில்ம …… யங்கலாமோ 
கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
     நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
          கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் …… வஞ்சவேலா 
களித்த பேய்கண மாகாளி கூளிகள்
     திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
          கடித்த பூதமொ டேபாடி யாடுதல் …… கண்டவீரா 
குதித்து வானர மேலேறு தாறுகள்
     குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
          குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் …… வஞ்சிதோயுங் 
குளத்தி லூறிய தேனூறல் மாதுகள்
     குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
          குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு …… தம்பிரானே.

#புராண வரலாறு: 

திருமால் பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி). இத்தலத்தை சம்பந்தர் உதவிமாணிகுழி என்றே தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். இதனால் உதவி என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் மாணிகுழி என்னும் கோயிற் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட, இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் “உதவி” என்றே குறிக்கப் பெறுகின்றது.

*இங்குள்ள நாக தேவர்களால் வழிபட்ட தட்சிணாமூர்த்தி:

இங்குள்ள தட்சிணாமூர்த்தியை நாக தேவர்களே வழிபட்டதாகவும், அவரது சொற்பொழிவுகளால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது.

*மார்க்கண்டேயர் இங்கு 
 சிவனை வழிபட்டார்:

திருக்கடையூர் செல்வதற்கு முன்பு மார்க்கண்டேயர் இங்கு வந்து இறைவனை வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது.

*ஸ்தல விருக்ஷம்:

இந்த கோயிலின் ஸ்தல விருக்ஷம், கொண்டரை மரம் மிகவும் பழமையானது மற்றும் முந்தைய யுகங்கள் மூலம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

*கோயில் கட்டமைப்பின் பின்னணியில் உள்ள புராணக் கதைகள்:

சிவபெருமானின் சன்னதிக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் (மண்டபம்) உள்ள நான்கு தூண்கள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன என்று ஸ்தல புராணம் கூறுகிறது. அடுத்த மண்டபத்தில், ஆறு தூண்கள் ஆறு சாஸ்திரங்களைக் குறிக்கின்றன. தாழ்வாரங்களில் உள்ள 28 தூண்கள் 28 ஆகமங்களைக் குறிக்கின்றன.

*சிவபெருமானின் தரிசனத்தை 
சிவாச்சாரியார் உதவியுடன் செய்யலாம்:

இக்கோயிலில் சிவாச்சாரியார் உதவியின்றி இறைவனை தரிசனம் செய்ய முடியாத ஒரே சிவன் கோயில். பக்தர்கள் திரையை அகற்றியவுடன் 2 நிமிடங்கள் மட்டுமே இறைவனை வணங்கலாம். ஸ்தல புராணத்தின்படி, இந்த 2 நிமிட வழிபாடு 12 நாட்கள் சிவபூஜை செய்வதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. இந்த தரிசனம் ஒரு பிரதோஷ நாளில் நடந்தால், அது சிதம்பரத்தில் 3 முறையும், திருவண்ணாமலையில் 8 முறையும், பனாரஸில் (காசி) 16 முறையும் வழிபடுவதற்கு சமமாகக் கருதப்படுகிறது.

*சூரியன் சிவபெருமானுக்கு பூஜை செய்தது இங்கே:

மற்றொரு புராணக்கதையின்படி, இந்தக் கோயில் சூரிய பகவான் (சூரியக் கடவுள்) சிவபெருமானுக்கு தனது பூஜைகளைச் செய்வதற்காக எழுப்பப்பட்டது.

*சங்கமம்:

கெடிலம் நதி மகாலட்சுமி தேவியின் அருளைக் குறிக்கிறது, சரஸ்வதி தேவி ஸ்வேதா நதியின் வடிவத்தில் பாய்கிறார். இந்த இரண்டு நதிகளின் சங்கமப் புள்ளி திருமாணிக்குழி என்று நம்பப்படுகிறது.

*பள்ளியறையாக கருவறை சன்னதி:

சிவன் எப்போதும் அம்பாளுடன் இருப்பதாகவும், சிவகண பீமருத்திரரால் (முன் திரையில் அச்சிடப்பட்ட பீமங்காரன் என்றும் அழைக்கப்படுகிறது) பாதுகாக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. எனவே ஆரத்தி முதலில் பீமருத்திரருக்கு அனுமதி பெறவும், பின்னர் சிவனுக்கும் காட்டப்படும். ஆரத்திக்குப் பிறகு திரை மூடப்படும். சிவன் எப்போதும் அம்பாளுடன் இருப்பதால், இந்த கோவிலில் பள்ளியாறை இல்லை. 

*வழிபாட்டுத் தலம்:

மேலும், இந்த கோவிலில் சிவனை வழிபடுவது 16 முறை காசியையும், 3 முறை திருவண்ணாமலையையும், 3 முறை சிதம்பரத்தையும் வழிபட்டதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. 

*திருமாணிக்குழி:

திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடிமண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து வழிபட்டாராதலின் இக்கோயில் 'மாணிகுழி ' என்று பெயர் பெற்றது. (மாணி - பிரம்மசாரி)சுவாமி எப்போதும் இறைவியுடன் இருப்பதாக மரபாதலின், மூலவர் சந்நிதியில் எப்போதும் திரைப்போடப்பட்டுள்ளது. (இத்திரையின் மேற்புறத்தில் ஏகாதச ருத்திரர்களில் ஒருவராகிய பீமருத்திரர் உருவம் எழுதப்பட்டுள்ளது.) இந்தத் திரைக்கே அர்ச்சனை, பூஜை வழிபாடு மகாவிஷ்ணு மாணியாக - பிரம்மசாரியாக வழிபடுவதற்குக் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.இத்தலம் தேவாரப் பாடல்களில் "உதவிமாணிக்குழி" என்று குறிக்கப்படுகிறது. இதனால் 'உதவி ' என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் 'மாணிகுழி' என்னும் கோயில் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றச்செய்கிறது. (இதற்கேற்ப தலபுராணத்தில் வரும் செய்தி வருமாறு:-)

வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, இறைவன் அவ்வணிகனைத் திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார்; இதனால் இத்தலம் 'உதவி ' என்றும் இறைவன் 'உதவிநாயகர் ' இறைவி 'உதவி நாயகி ' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.கல்வெட்டிலும் சான்றாக, இத்தலம் 'உதவி ' என்றே குறிக்கப்பெறுகின்றது

அசுர மன்னனாக மகாபலி சக்கரவர்த்தி நல்லாட்சி புரிந்து நற்பெயரைப் பெற்றவனாகவும், அதிக வலிமை வாய்ந்த அரசனாகவும் இருந்தான். வாமனர் என்ற ஓர் ஏழை பிராமணனாக அவதாரம் எடுத்த நாராயணன் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்கிறார். மகாபலி தனது குருவான சுக்ராச்சாரியாரின் எச்சரிக்கையையும் மீறி அதற்கு சம்மதிக்கிறான். குட்டையாக இருந்த வாமனன் விசுபரூபம் எடுத்து நிற்கிறார். அவர் முதல் அடியை வானத்திலிருந்து பூமிக்கு வைக்கிறார், இரண்டாவது அடியை பூமியிலிருந்து பாதாள உலகத்திற்கு வைக்கிறார். மன்னன் மகாபலி, தன் வாக்கை நிறைவேற்ற முடியாமல், மூன்றாவது அடிக்கு தன் தலையைக் கொடுக்கிறான். வாமனன் அவன் தலையில் தன் காலை வைத்து அவனை பாதாளத்திற்கு அனுப்புகிறார். இருந்தாலும் தீராப் பழியாலும் தோசத்தாலும் நாராயணன் அல்லல்பட்டார். 
தனது துயர் நீங்க கெடில ஆற்றங்கரையான இத்ததலத்தில் ஈசனைப் பூசித்து தோசம் நீங்கப் பெற்றார் என்று நம்பப்படுகிறது. பிரம்மச்சாரியாக வாமன அவதாரம் எடுத்த நாராயணன் சிவனை பூசித்ததால் இத்தலம் திருமணிக்குழி (மணி என்றால் பிரம்மச்சாரி என்று பொருள்) என பெயர் பெற்றது என்று கூறப்படுகிறது.

தனக்கு ஏற்பட்ட தோசத்தை இங்கு வந்து சிவனை வழிபட்டு வாமனன் நீக்கிக் கொண்டதல், இத்தலத்திலேயே எத்தடையும் இல்லாமல் எப்போதும் பூசித்தபடி இருக்க விரும்புவதாக சிவனிடம் வாமனன் வேண்டினார். சிவனும் அவருக்கு அவ்வரத்தை அளித்தார். மேலும் வாமனன் வழிபடும்போது அவருக்கு இடைஞ்சல் நேராமல் இருந்து திரையாக காக்குமாறு பதினொரு ருத்திர்களில் ஒருவரான குபேர பீம ருத்திரரை பணித்தார். அதன்படி இத்தலத்தில் கருவறையை குபேர பீம ருத்திரர் திரையாக இருந்து மறைத்து வருகிறார் என்பது ஐதீகம். இதனால் கருவறை எப்போதும் குபேர பீம ருத்திரர் உருவம் கொண்ட திரையால் மூடப்பட்டிருக்கும். சிவனை வழிபட விரும்புபம் அடியார்கள் குபேர பீம ருத்திரரை வழிபட்டு அவரின் அனுமதி பெற்ற பின்பே திரையை நீக்கி தரிசனம் செய்ய முடியும். எனவே அவருக்கே முதல் பூசை செய்யபடும். அதுவும் ஒருசில நொடிகளுக்கு மட்டுமே ஆகும். பின்னர் மீண்டும் திரை மூடப்படும். இதனால் இங்குள்ள நந்திகூட பிற கோயில்களில் உள்ளதுபோல தலையை சாய்த்துக் கொண்டிருப்பது போல இல்லாமல் திரை நீங்கினால் உடனே பார்க்க ஏதுவாக தலையை நேராக வைத்திருப்பார்.

இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் வடக்கு நோக்கி உள்ளது.

திருவண்ணாமலையில் பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனாங் இங்கு உரோகினி நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

*கோவிலின் அமைப்பு: 

தலமும் கோயிலும் கெடில ந்தியின் தென் கரையில், காப்பர் குவாரி என்று அழைக்கப்படும் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன. கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். தெற்குப் வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்திலுள்ள பக்கவாட்டு வாயில் வழியே உள் பிரகாரத்தை அடையலாம். இந்த உள் பிரகாரத்தில் விநாயகர், 63 மூவர், சப்தமாதாக்கள், யுகலிங்கங்கள், பஜலட்சுமி சந்நிதிகள் ஆகியவை அமைந்துள்ளன. உள்ளே கருவறையில் மூலவர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார்.

தல சிறப்புகள்:

பெரிய புராணத்தில், சுந்தரர் கெடில நதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறிப்பிருந்தும் அப்பெருமான் பாடிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை.நடராச சபையிலுள்ள நடராசர் திருமேனியில் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்; அதைப் பார்க்கும்போது அவ்வடிவமாகத் தெரியவில்லை; குறுக்கும் நெடுக்குமாகச் சிறுகோடுகளாக ஏதோ ஒருவித அமைப்புள்ளது.சோழர்காலக் கட்டமைப்புடையது இக்கோயில்.இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம், பீமசங்கரக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்கள்.மூலவர் தரிசனத்திற்கு செல்லும் வாயிலில் வாமனாவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.ஆலய வழிபாட்டில் அர்ச்சனை, தீபாராதனை, பூசை முதலியன முதலில் பீமருத்திரருக்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடைபெறுகிறது.இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீபதரிசனம் நடைபெறுகின்றது.இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் குலோத்துங்கசோழன், விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாங் குலோத்துங்க சோழன், மூன்றாம் இராஜராஜ சோழன், இவர்கள் காலங்களிலும், பாண்டிய மன்னரில், விக்கிரம பாண்டியன் காலத்திலும், விசயநகர வேந்தரில் பிரதாபதேவ மகாராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இவற்றுள் இறைவர், திருமாணிகுழிமகாதேவர், உதவித் திருமாணி குழி ஆளுடையார், உதவித் திருமாணிகுழி மகாதேவர், திருமாணிகுழி உடையநாயனார், ஊர்செறி உதவி நாயகர் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். தேவாரத்தைப் போலவே, கல்வெட்டிலும் உதவித் திருமாணிகுழி என்று ஊரின் பெயர் குறிப்பிடப்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இறைவரின் பெயர்களில் மேற்குறித்த ஊர்செறி உதவி நாயகர் என்பது விஜயநகர வேந்தனாகிய ஸ்ரீ பிரதாபதேவமகாராயரின் (சகாப்தம் 1357) கல்வெட்டில் காணப்பெற்றுள்ளது

முதற்குலோத்துங்க சோழன் காலத்தில் இத்திருமாணிகுழி, விருதராசபயங்கர வளநாட்டு, மேற்காநாட்டு உதவித் திருமாணிக்குழி என்றும், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில், சயங்கொண்ட சோழவள நாட்டு உதவித் திருமாணிகுழி என்றும், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இராஜராஜ வளநாட்டு மேற்காநாட்டு உதவித் திருமாணிகுழி என்றும், குறிக்கப்பெற்றுள்ளது. எனவே முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் இவ்வூரைத் தன்னகத்துக்கொண்ட வளநாடு விருதராச பயங்கரவளநாடு என்னும் பெயரையும், இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சயங்கொண்ட சோழ வளநாடு என்னும் பெயரையும், மூன்றாங்குலோத்துங்க சோழன் காலத்தில் இராஜராஜ வளநாடு என்னும் பெயரையும் பெற்றிருந்த செய்தி புலனாகிறது.

இக்கோயிலிலுள்ள ``பூமாலை மிடைந்து`` என்று தொடங்கும் விக்கிரம சோழனுடைய மெய்க்கீர்த்தி மாத்திரம் அடங்கிய கல்வெட்டு சோழ மன்னர்களுக்குத் தில்லைச் சிற்றம்பலத்து இறைவன் குலதெய்வம் என்று குறிப்பிடுகின்றது. ``தன்குல நாயகம் தாண்டவம் பயிலும் செம்பொன் அம்பலஞ் சூழ்ந்த திருமாளிகையும் கோபுரவாசலில் கூடகசாலமும்..... பசும்பொன் மேய்ந்து`` என்பது இதை உணர்த்தும் கல்வெட்டுப் பகுதியாகும். (திருமழபாடியில் உள்ள விக்கிரமசோழனின் மெய்க்கீர்த்தியிலும் இச்செய்தி கூறப்பெற்றுள்ளது.)தில்லையம்பதி, சோழமன்னர்களுக்கு முடிசூட்டும் பதிகளுள் ஒன்றாகும். இப்பதியில் இரண்டாம் குலோத்துங்கசோழன் முடிசூட்டிக் கொண்டான் என்று இவ்வூரிலுள்ள (மாணிகுழியில் உள்ள) அம்மன்னனுடைய கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. ``ஸ்வஸ்தி ஸ்ரீ ராசகேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் தில்லைநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய ஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு அ (எட்டு) ஆவது ஜயங் கொண்ட சோழவளநாட்டு உதவித் திருமாணிகுழி உடையநாயனார் கோயில் தானத்தாற்கு மகனார் திருநட்சத்திரமான உத்திரட்டாதி நாள் தீர்த்தம் பிரசாதிக்க எழுந்தருளுகிற சித்திரைத் திருநாளைக்கும், விக்கிரம சோழன் சந்திக்கும் அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் நித்த நிவந்தங்களுக்கு விட்ட....`` என்பதாகும்.உதவித் திருமாணிகுழி உடையார் திருமடை விளாகத்தில், ஸ்ரீ காழிநாடுடையான் திருமடம் என்று ஒரு திருமடம் இருந்ததை முதற்குலோத்துங்க சோழனது 49 ஆம் ஆண்டுக் 1கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. அதற்கு மடப்புறமாக வானவன்மாதேவி நகரத்தார் நிலம் விட்டிருந்தனர்.

தியாகசமுத்திரக்கூடம் பெரும்பற்றப் புலியூர்க்கோயிலினுள் இருந்ததை விக்கிரம சோழனின் 12 - ஆம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது. இக்கூடத்தில் பள்ளிச்சோட்டை சோழகோனிலிருந்து, ஆறுவேலி நிலத்தைத் திருமாணிகுழி கோயிலில் எழுந்தருளு வித்த விக்கிரம சோழீச்சரமுடையார்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இருக்கும்படி விக்கிரம சோழன் கட்டளையிட்டிருந்தான்.இக்கோயில் கல்வெட்டில் மூன்றாங்குலோத்துங்க சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராசேந்திர சோழதேவன், இராசாக்கள் நாயகன் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளான். வீர பாண்டியன் கல்வெட்டு, இவ்வூரை நடுவில் மண்டலத்து திருமாணிகுழி எனக்குறிப்பிடுகின்றது. சோழமண்டலத்திற்கும் தொண்டை மண்டலத்திற்கும் நடுவில் உள்ளது ஆகையால் நடுவில் மண்டலம் (நடுநாடு) எனப்பெயர்.

சோழர்காலக் கட்டமைப்பிலான கோயில்.திரிசங்கு மகாராஜா, அரிச்சந்திரன் போன்ற சூரிய குல வம்சத்தினரால் இக் கோயில் சீரமைக்கப் பட்டுள்ளது.சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன் பெயர், உதவிநாயகர் , உதவி மாணிகுழி மகாதேவர் என்று குறிக்கப்படுகிறது.

இக்கோயில் பூலோக கைலாயம் என்றும், பூலோக வைகுண்டம் எனவும் தேவர்களாலும், ரிஷிகளாலும் போற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அம்பாள் சன்னதியில் காவல் தெய்வமாகக் கால பைரவர் வீற்றிருக்கின்றார். அம்பிகைக்குத் தனியாகக் கொடிமரம் விசேஷமாக இவ்விடம் காணப்படுகிறது.

அம்பிகை ஆலயத்தை வரகுண பாண்டியன் என்ற அரசரின் முன்னோர் வழியில் கடாவர்ம சுந்தர பாண்டியன் என்ற அரசன் திருப்பணி செய்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பார்க்கையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு முற்பட்ட சன்னதியாக இச்சன்னதி கருதப்படுகின்றது.

பால சாஸ்தா பக்தர்களுக்குக் காட்சி தருகின்றார். இது பஞ்சபூத தலத்தில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலைக்கு நிகரான தலமாகவும், தமிழகத்திலேயே இரண்டாவது மலை தீபக் ஏற்றக்கூடிய திருத்தலமாகவும் விளங்குகிறது. தீர்த்தமானது கெடிலடி என்று சொல்லக்கூடிய கருடன் நதியாகும். இக்கோயிலில் கார்த்திகை மாத ரோகிணி தீப பெருவிழா பத்து நாட்கள் விசேஷமாக நடைபெறுகின்றது.

*கல்வெட்டுகள்:

7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்த அசல் கோயில்  , பல்லவர்களால் கட்டப்பட்டிருக்கலாம், மேலும் சோழர்கள், விஜயநகரர்கள் காலத்தில் புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. கல்வெட்டுகளின்படி, இத்தலம் "உதவி" என்றும், சிவபெருமான் "உதவி நாயகர்", "உதவிமணிக்குழி மகாதேவர்", திருமாணிக்குழி மகாதேவர், உதவித்திருமாணிக்குழி உடைய நாயனார், ஊசேரி உத்தவி நாயக்கர் (விஜயநகர காலம்) என்றும் அழைக்கப்படுகிறார். பதிவுசெய்யப்பட்ட கல்வெட்டுகள் சோழர்கள் குலோத்துங்க சோழ-I, II & III, இராஜராஜன்-III, விக்ரம சோழன், பாண்டிய மன்னர் விக்ரம பாண்டியன், விஜயநகர மன்னர் பிரதபதேவ மஹாராயர் ஆகியோருக்கு சொந்தமானது. இத்தலம் விருத்தபயங்க வளநாட்டு மேற்கு நாடு உதவி திருமணிக்குழி, ராஜரவலநாட்டு மேற்கநாட்டு உதவி திருமணிக்குழி, ஜயங்கொண்ட சோழ மண்டலத்து சோழவள நாடு ஆகியவற்றின் கீழ் இருந்தது. 

விக்ரம சோழனின் 15-ஆம் ஆண்டு  ஆட்சிக்காலக் கல்வெட்டு (AR 148 of 1902 SII Volume VII- 772)  ஆதிசண்டேஸ்வர நாயனாரின் வழிபாட்டிற்கு 6 மா நிலம் காணிக்கையாகக் காணப்பட்டது, அதற்காக வானவன் மஹாதேவிபுர நகரத்தா வேலன், மோவோவில்லா சோழன், முடிகொண்ட சோழன் ஆகியோர் 200 கலம் நெல்களை வழங்கினர். வெள்ளாளன்.

விக்ரம சோழனின்  10 ஆம் ஆண்டு  ஆட்சிக் கல்வெட்டு அவரது மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது (AR149 of 1902 SII தொகுதி VII- 773) நடராஜர் சன்னதிக்கான தங்கத் தகட்டின் உறையைப் பதிவு செய்கிறது. 3 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு (AR 150 of 1902 SII தொகுதி VII- 774) நிலங்களையும் தங்கத்தையும் கொடையாகக் குறிப்பிடுகிறது. 4 ஆம் ஆண்டு  ஆட்சிக் கல்வெட்டு (AR 151 of 1902 SII தொகுதி VII- 775) 2 நிரந்தர விளக்குகளை எரிப்பதற்கான நன்கொடையைப் பதிவு செய்கிறது, அதற்காக 5 காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

ராஜாதி ராஜன் காலக் கல்வெட்டு (AR 153A of 1902 SII Volume VII- 778 ) இந்தக் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்ட நைவேத்தியம் பற்றி பதிவு செய்கிறது.

குலோத்துங்க சோழன்-II இன் 8ஆம் ஆண்டு  ஆட்சிக்காலக் கல்வெட்டு (155 of 1902 SII தொகுதி VII- 780) தில்லை / சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவரது மகன் ராஜராஜன்-II முடிசூட்டு விழாவைப் பதிவு செய்கிறது. பிறந்த நட்சத்திரத்தை உத்திரட்டாதி என்றும், அவரது பிறந்தநாளில் சிறப்பு பூஜைகள், விக்ரம சோழனின் சாந்திக்கு நைவேத்தியம் செய்தல் மற்றும்  62 மா நிலம் வாங்கிய பிறகு இந்த கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட வழிபாடுகள் என்றும் அது பதிவு செய்கிறது. 4 சுற்று எல்லைகளில் சூலக்கல் அமைத்து நிலம் தானமாக வழங்கப்பட்டது.

விக்ரம சோழாவின் 6ஆம் ஆண்டு  ஆட்சிக்காலக் கல்வெட்டு (AR 158 of 1902 SII Volume VII- 783) 12 ஆடுகள்/செம்மறியாடுகள் மற்றும் அதுவே சாவா மூவா பேராடு என்று மாற்றப்பட்ட ஒரு நிரந்தர விளக்கு எரிவதைப் பதிவு செய்கிறது. அதை சாத்தன் அரங்கன் பெற்றுக் கொண்டார். ஒரு ஆட்டுக்கு ஒரு நாழி நெய், மொத்தம் 12 நாழி நெய் கோவிலுக்கு சப்ளை செய்யப்படும்.  

குலோத்துங்க சோழாவின் 49 வது ஆண்டு ஆட்சிக்கால கல்வெட்டுகள் (AR 160 of 1902 SII Volume VII- 785) ஸ்ரீ காழி நாட்டுடையான் திருமடத்தின் இருப்பை பதிவு செய்கிறது. இதற்காக 40 காசு கடனாகவும், வட்டியாகவும் இந்த மடத்துக்கு கொடுக்கப்பட்டது.

வீர ராஜேந்திரனின் 7ஆம் ஆண்டு  ஆட்சிக்காலக் கல்வெட்டு (AR 164 of 1902 SII Volume VII- 791) திருநாட்டப்பெருமாளால் 4 பசுக்கள் தானமாக வழங்கப்பட்ட ஒரு சாந்தி தீபத்தின் கொடையைப் பதிவு செய்கிறது. 

பாண்டிய மன்னர் கோனேரிமை கொண்டனின் (விக்ரம பாண்டியன்) காலக் கல்வெட்டு (AR 168 of 1902 SII Volume VII- 795)  ராஜாவின் பெயரில் நிறுவப்பட்ட ராசக்கனாயன் சந்தி மற்றும் பிறந்தநாளுக்கு நைவேத்தியம் வழங்கியதைப் பதிவு செய்கிறது.

*அகத்தியர் சுயம்பு லிங்ககோவில்:

வாமனபுரீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவர் வழிபாடு செய்துள்ளார். இந்த திருத்தலத்திற்கு வந்தபோது, அகத்தியரால் உடனடியாக இறைவனைக் காண முடியவில்லை. இறைவனைக் காண்பதற்காக அவர் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம். இதனால் கோபம் அடைந்த அகத்தியர், அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையின் அடியில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். இந்த வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில், வாமனபுரீஸ்வரர் கோவில் அருகே அகத்தியர் சுயம்பு லிங்கக் கோவில் அமைந்துள்ளது.

அமைவிடம்:

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள 
திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து, திருவகீந்திபுரம் வழியாகப் பானூர், பண்ருட்டி செல்லும் பாதையில் திருவகீந்திபுரம் சென்று, அடுத்து, 'சுந்தரர்பாடி' என்னுமிடத்திற்கு அருகில் சாத்தாங்குப்பம் என்னும் வழிகாட்டி காட்டும் வழியில் சென்று, கெடிலநதிப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலேயே கெடிலநதியின் தென்கரையில் கேபர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள இத்தலத்தை அடையலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, August 29, 2025

அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில்,திருக்கானூர், மணல்மேடு, விஷ்ணம்பேட்டை – 613 105

அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில்,
திருக்கானூர், மணல்மேடு, விஷ்ணம்பேட்டை – 613 105
தஞ்சாவூர் மாவட்டம். 
*இறைவன்: செம்மேனிநாதர்/ கரும்பீஸ்வரர். 
*அம்மன்: சவுந்தரநாயகி/சிவயோகநாயகி அம்பாள்.            *தீர்த்தம்: கொள்ளிடம் மற்றும் வேத தீர்த்தம். 
*தலவிருட்சம்:    வில்வ மரம்.    

*திருக்கானூர் என்னும் ஊர்ப் பெயர் மாறி, இன்று மக்கள் குடியிருப்பு ஒரு சிலவே இருப்பதாலும், மணற் பகுதியை அடுத்திருப்பதாலும் மக்கள் இவ்விடத்தை மணல் மேடு என்றே வழங்குகின்றனர். இக்கூற்று உண்மை என்பது போல் தற்போது கோவிலின் மதில் சுவரை சுற்றி மணல்மேடு காணப்படுகிறது. 

*ஒரு சமயம் கொள்ளிடம் ஆற்றில்      பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது இக்கோயில் முழுவதும் மூழ்கி, மணலால் மூடப்பட்ட நிலையில் ஒரு கரும்பு மட்டுமே அங்கு முளைத்திருக்க அங்கு தோண்டியபோது மணலில் இக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

*இது பரசுராமரின் தோஷம் நீக்கிய தலம் ஆகும். ஒரு முறை பரசுராமர் இல்லாதபோது கார்த்தவீர்யார்சுனன் என்ற அரசன் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து, அவரது காமதேனு பசுவை பலவந்தமாக கவர்ந்து சென்றான்.  திரும்பி வந்த பரசுராமர் நடந்ததை கேட்டு கோபமடைந்து, கார்த்தவீர்யார்சுனனை கொன்று பசுவை மீட்டார். அத்துடன் 21 சத்திரியர்களையும் கொன்றார். இதனால் இவருக்கு “சத்திரிய தோஷம்’ ஏற்பட்டது. இந்த தோஷம் போக்குவதற்காக பரசுராமர் இத்தலத்தில் நீராடி ஈசனை வழிபட்டார். சிவனின் அருளால் பரசுராமர் தோஷம் நீங்கப்பெற்றார். 

*இத்தல இறைவனுக்கு கரும்பீஸ்வரர், செம்மேனிநாதர் தேஜோமயர், இஷுவனேஸ்வரர், செம்பேனியப்பர், முளைநாதர் ஆகிய பெயர்களும் உள்ளன.         

*அம்மன் சிவ தியானம் செய்ய பூவுலகில் இத்தலத்தை தேர்வு செய்து தியானத்தில் ஆழ்ந்தார். தியானத்தில் இருந்த அம்பாளுக்கு இறைவன் ஒளி வடிவாக காட்சியளித்தார். 
இதனால் இத்தல இறைவனுக்கு தேஜோமயர், செம்மேனியப்பர், என்றும் அம்பாளுக்கு சிவயோக நாயகி என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.   
கோவிலின் உள்ளே நுழைந்த உடன் வடபுறத்தில் தெற்கு நோக்கி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.  
*அம்பாள் திருமேனி சாளக்கிராமக் கல்லினால் ஆனது. 

*ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1, 2, 3-ந் தேதிகளில் சூரிய உதயத்தில், சூரியனின் ஒளி மூலஸ்தான இறைவன் மீது படும். 
இந்த 3 நாட்களிலும் காலை உதய நேரத்தில் சூரியபகவான் சிவனை பூஜிக்கும் விழா நடைபெறுகிறது. 

*இது மகாசிவராத்திரி நாளில் 1008 திருவிளக்கு பூஜை  நடக்கும் தலம்.                                

 *கணவனும், மனைவியும் இணைந்து இந்தக் கோயிலில் வந்து வழிபட்டால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை.

*திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் தல விருட்சம் வில்வ மரத்தின் இலைகளால் செம்மேனி நாதருக்கு அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்றும், 
சவுந்தரநாயகி அம்பாளுக்கு புத்தாடை அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி தீபமிட்டு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடும் என்றும், செம்மேனியப்பருக்கும், அம்பாளுக்கும் எருக்கமாலை அணிவித்து பால், தயிர், நெய், தேன், பன்னீர் அபிஷேகம் செய்ய சந்தானபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

*மேலும் சப்தமி நாளில் இக்கோவிலில் மூலவரையும், அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.

*இக்கோயில் இருந்த பகுதிக்கு பனிமதி மங்கலம், கரிகாற்சோழர் சதுர்வேதி மங்கலம் என வேறு பெயர்கள் இருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.   

*பண்டைய சோழ மன்னன் கரிகாலன் ஊர் இந்த கோவில் அமைந்துள்ள ஊர் என்றும், யானை மாலையிட்டு கரிகாற் சோழனை அழைத்துச் சென்றது இந்த ஊரில் இருந்துதான் என்றும் ஒரு செவிவழி செய்தி  தெரிவிக்கிறது. 
மேலும் இந்த கோவிலுக்கு முதலாம் ராஜேந்திர சோழன் நிலங்களை வழங்கி உள்ளதாகவும் கல்வெட்டு செய்தி கூறுகிறது.   

*இக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.  

*தஞ்சையில் இருந்து பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றால் கோயிலை அடையலாம்.           

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் .              

மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும்

மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும்
இல்லற வாழ்க்கை என்பது மங்கலகரமானது என்பது வள்ளுவரின் வாக்கு. 

மங்கலகரமான இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் என்கிற கனவு எல்லாருக்கும் இயல்பாகவே இருக்கும். 

பெற்றவர்களும் தங்கள் பிள்ளைக்கு சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற வேண்டுமே என்று விரும்புவார்கள்.

நியாயமான விருப்பம்தான் என்றாலும், பலருக்குப் பல்வேறு காரணங்களால் திருமண வாழ்க்கை அமைவதில் தடையோ தாமதமோ ஏற்படுகிறது. 

பொருளாதார வசதிக் குறைவினாலோ, தோஷங்களின் காரணமாகவோ பலருக்குத் திருமணம் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுகின்றன. 

காரணம் எதுவாக இருந்தாலும், திருமணத் தடை உள்ளவர்கள் வழிபட்டு, பலன் பெறக் கூடிய கோயில்களுக்கும் நம் நாட்டில் குறைவேயில்லை. 

அத்தகைய கோயில்களில் திருவாரூர் மாவட்டம் பெரியகுருவாடியில் அமைந்திருக்கும் 
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அருள்மிகு 
அகத்தீஸ்வரர் திருக்கோயில் குறிப்பிடத்தக்கது.

திருக்கோயில் வரலாறு

சூரிய வம்சத்தில் வந்த மன்னர் சகரன் அசுவமேத யாகம் செய்ய விரும்பினார். 

தேசம் முழுவதும் சகல லட்சணங்களும் பொருந்திய குதிரையை அனுப்பினார். 

அந்தக் குதிரை வழியில் காணாமல் போய்விட்டது. 

குதிரையைத் தேடி வரும்படி தன்னுடைய 60,000 பிள்ளைகளை அனுப்பினார் மன்னர். 

குதிரையைத் தேடிச்சென்ற 
சகர குமாரர்கள், தாங்கள் தேடிவந்த குதிரை கபில முனிவரின் ஆசிரம வாயிலில் இருப்பதைக் கண்டனர். 

`கபிலர்தான் குதிரையைக் கவர்ந்து வந்துவிட்டார்’ என்று தவறாக நினைத்து, அவரை பலவாறாக இழித்தும் பழித்தும் பேசியதுடன், அவரைத் தாக்கவும் முற்பட்டனர். 

சகர குமாரர்களின் தகாத செயல் கண்டு கோபம் கொண்ட கபில முனிவர், அவர்களைச் சாம்பலாகும்படி சபித்துவிட்டார்.   

பல நூறு வருடங்கள் அவர்கள் நரகத் துன்பத்தில் தவித்துக்கொண்டிருந்தனர். 

பிற்காலத்தில் சகரனின் வம்சத்தில் வந்த பகீரத மன்னர், கபில முனிவர் இட்ட சாபத்தின் காரணமாக நரகத்தில் துன்பப்படும் தன்  முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று விரும்பினார். 

தன் முன்னோர்களின் சாம்பல் மீது ஆகாச கங்கை படும்போதுதான் சாப விமோசனம் கிடைத்து, அவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையும் என்பதை குலகுருவின் மூலம் தெரிந்துகொண்டார் பகீரதன். 

ஆகாச கங்கையை பூமிக்கு வரவழைக்க, மகாவிஷ்ணுவை நோக்கிக் கடும்தவம் புரிந்தார். 

அவருடைய தவத்துக்கு இரங்கிய மகாவிஷ்ணு, பகீரதனுக்கு தரிசனம் தந்து, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். 

பகீரதன், ‘ஐயனே, என் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையாமல் துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள். 

அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்காக பூமிக்கு ஆகாச கங்கை வர அருள வேண்டும்’ என்று வரம் கேட்டார். 

மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் கொடுத்து மறைந்தார்.

மகாவிஷ்ணு அருளிய வரத்தின்படி கங்கையும் பூமிக்கு வரச் சித்தம் கொண்டாள். 

ஆனால், விண்ணில் இருந்து தான் வேகமாக இறங்கும்போது, அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் உலகம் அழிந்துவிடுமே என்று தயங்கினாள். 

தன்னுடைய தயக்கத்தை பகீரதனிடம் தெரிவித்தாள்.

அதற்கு பகீரதன், ‘தேவி, 
அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். 

நீங்கள் வேகமாகக் கீழே இறங்கும்போது, 
உங்களுடைய வேகத்தைத் தாங்கிக்கொள்ளும்படி சிவபெருமானை வேண்டிக் கொள்கிறேன்’ என்றார்.

சிவபெருமானின் தரிசனத்துக்காக மறுபடியும் கடும் தவம் இயற்றினார் பகீரதன். 

பகீரதனின் தவத்துக்கு இரங்கிய சிவனார், பகீரதன் முன்பு தோன்றி, ‘பகீரதா! உன்னுடைய தவம் கண்டு மகிழ்ந்தோம். 

நீ வேண்டும் வரம் என்ன?’ என்று ஏதும் அறியாதவர் போல கேட்டார்.

‘ஐயனே! தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை. 

என் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக, விண்ணில் இருக்கும் கங்கையைப் பூமிக்கு வரப் பிரார்த்தித்துக் கொண்டேன். 

கங்கா தேவிக்கும் சம்மதம்தான். 

ஆனால், கங்கை விண்ணில் இருந்து மிகவும் வேகமாகப் பாய்ந்து கீழிறங்கும்போது, தேவியின் வேகத்தை இந்தப் பூமி தாங்காது. 

எனவே, தாங்கள்தான் அருள்கூர்ந்து கங்கையைத் தங்கள் திருமுடியில் தாங்கி, வேகத்தைக் குறைக்க வேண்டும்’ என்று பிரார்த்தித்துக் கொண்டார். 

`அவ்வாறே ஆகட்டும்’ என்று திருவருள் புரிந்த சிவனார், விண்ணிலிருந்து வேகமாக இறங்கிய கங்கையைத் தம் திருமுடியில் தாங்கிக்கொண்டார். 

சிவபெருமான் கங்கா தேவியைத் தன் திருமுடியில் தாங்கிக்கொண்டதைக் கண்ட அன்னை பார்வதி, சிவபெருமானுடன் ஊடல் கொண்டாள். 

உலக மக்களின் நன்மையைக் கருதி தேவ தேவியர் நடத்தும் நாடகம்தான் இது!

அம்பிகையின் ஊடலைத் தணிக்கவும், இந்த உலகம் செழிக்கவும் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், திருமுடியில் இருந்த கங்கையை, தம்முடைய 
இரு விரல்களால் எடுத்து பூமியில் விடுத்தார். 

அதன் காரணமாக அவருக்கு, ‘கங்கா விசர்ஜன மூர்த்தி’ என்ற திருப்பெயரும் ஏற்பட்டது.

ஐயன் கங்காவிசர்ஜன மூர்த்தியாக அம்பிகை அகிலாண்டேஸ்வரியுடன் எழுந்தருளியிருக்கும் திருத்தலம்தான் பெரியகுடையூர் என்னும் பெரியகுருவாடி திருத்தலம்.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் - மன்னார்குடி சாலையில் திருவாரூரிலிருந்து சுமார்
20 கி.மீ. தொலைவிலுள்ளது பெரியகுருவாடி.

முற்காலத்தில் இந்தத் தலத்துக்கு வந்த அகத்தியர், ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 

அதன் காரணமாகவே இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. 

அம்பிகையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

பிற்காலத்தில் சோழ மன்னரான வீர ராஜேந்திர சோழனின் உடன்கூட்ட அதிகாரியாக இருந்த 
அரங்கன் திருச்சிற்றம்பலமுடையான், தான் பிறந்த ஊரான பெரிய குருவாடியில், அகத்தியர் வழிபட்ட இறைவனுக்கு கற்றளியாக ஓர் ஆலயம் அமைத்து வழிபட்டார். 

அவர் வேளாளர் மரபில் பிறந்தவர் என்பதால், உலகம் செழிக்கத் தம் திருமுடியில் இருந்து கங்கையைப் பூமியில் விடுவித்த சிவபெருமானின் ‘கங்கா விசர்ஜன’ திருவுருவத்தையும் 
அகத்தியர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத் திருமேனிக்குப் பின்புறம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். 

மேலும், காவிரியைத் தம் கமண்டலத்தில் இருந்து விடுவித்த அகத்தியரைப் போற்றும் வகையில் கோயிலுக்கு `அகத்தீஸ்வரம்’ என்னும் பெயரையும் சூட்டினார்.

காலப்போக்கில் முற்றிலும் சிதிலமடைந்துவிட்ட ஆலயத்தை, சில வருடத்துக்கு முன்புதான் ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

ஒரு காலத்தில் மிக பிரமாண்டமாக அமைந்திருந்த ஆலயம் இன்று சிறிய 
அளவில் எளிமையாகக் காணப்பட்டாலும், பரிபூரண சாந்நித்யத்துடன் திகழ்கிறது. 

ஆலயத்தின் கருவறையில் சதுர வடிவ ஆவுடையார்மீது லிங்கத் திருமேனியராகத் திருக்காட்சி தருகிறார் ஐயன் அகத்தீஸ்வரர். 

சிவலிங்க மூர்த்தத்துக்குப் பின்னால், கங்கையைத் தன் கைவிரல்களால் பூமியில் விடும் திருக்கோலத்தில் ஐயனும், ஊடல் தணிந்த நிலையில் அம்பிகையும் திருக்காட்சி தருகின்றனர். 

அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சந்நிதியில் எழிலுடன் திருக்காட்சி அருள்கிறாள்.

கருவறையில் ஐயனும் அம்பிகையும் காட்சி தருவதால், இந்தத் தலம் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

ஆலயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் வெங்கட்ராமனிடம் திருமணத் தடை நீங்க செய்யவேண்டிய பரிகாரம் குறித்து கூறியது.

‘`பல காரணங்களால் திருமணம் தடைப்பட்டு வருந்துபவர்கள், வளர்பிறை பஞ்சமி நாளில் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், தடை நீங்கி நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பது ஐதீகம். 

இரண்டு மாலைகளை வாங்கிக்கொண்டு வர வேண்டும். 

மாலைகளின் இரண்டு முனைகளையும் இணைக்காமல், 
சுவாமிக்கு  ஒரு 
மாலையையும், அம்பாளுக்கு ஒரு மாலையையும் அணிவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். 

பிறகு ஆணாக இருந்தால் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலையையும், பெண்ணாக இருந்தால் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலையையும் பெற்றுக்கொண்டு சென்று வீட்டுப் பூஜையறையில் வைத்துவிட வேண்டும். 

திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக கோயிலுக்கு வர வேண்டும். 

அப்போதும் இரண்டு மாலைகளை வாங்கி வர வேண்டும். 

அப்போது, முன்போல் இல்லாமல், இரண்டு மாலைகளின் நுனிகளையும் இணைத்து சுவாமிக்கும் அம்பாளுக்குச் சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்’’ என்றவர் தொடர்ந்து,

‘`ஈசனுடன் அம்பிகை கொண்ட ஊடல் தணிந்த தலம் என்பதால், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கும் தம்பதி, இந்தக் கோயிலுக்கு வந்து 27 நெய் தீபங்கள் ஏற்றி, அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், மறுபடியும் ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம். 

தன்  முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய விரும்பிய பகீரதனுக்கு அருளிய ‘கங்கா விசர்ஜன மூர்த்தி’ இங்கே உள்ளதால், இங்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், பித்ரு தோஷங்கள் நீங்கிவிடுவதாகவும் ஐதீகம். 

மேலும், திருப்பாற்கடலில் தோன்றிய ஜேஷ்டா தேவி இந்தக் கோயிலில் மகன் விருஷபன், மகள் நமனையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். 

நோய்களால் அவதிப்படுபவர்கள் 
ஜேஷ்டா தேவியை 
வழிபட்டால், நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது’’ என்றார்.

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?

திருவாரூர் - மன்னார்குடி சாலையில் திருவாரூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள லெட்சுமாங்குடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து சுமார் 
8 கி.மீ தொலைவில் உள்ள பெரிய குருவாடிக்கு மினி பஸ் மூலம் செல்லலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம்.

*அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம்.* 
ஒப்பிலியப்பன் கோயில் , விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும் , இது திருநாகேஸ்வரத்திற்கு அருகில் அமைந்துள்ளது , மேலும் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கும்பகோணத்தின் புறநகரில் உள்ள ஒரு கிராமமான திருவின்நகர் என்ற பழைய பெயராலும் அழைக்கப்படுகிறது . திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோயில், கி.பி 6-9 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஆழ்வார் புனிதர்களின் ஆரம்பகால இடைக்கால தமிழ் நியதியான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மகிமைப்படுத்தப்பட்டுள்ளது . இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 60 வது இடமாகக் கருதப்படுகிறது. விஷ்ணு ஒப்பிலியப்பனாகவும், அவரது துணைவியார் லட்சுமி பூதேவியாகவும் வணங்கப்படுகிறார் .

ஒப்பிலியப்பன் மார்க்கண்டேயர் முனிவருக்கும் , இந்து தெய்வங்களான பூதேவி, பிரம்மா மற்றும் சிவனுக்கும் தோன்றியதாக நம்பப்படுகிறது . இந்த கோயில் ஆறு தினசரி சடங்குகளையும் மூன்று வருடாந்திர விழாக்களையும் கடைப்பிடிக்கிறது. தமிழ் மாதமான "பங்குனி" (மார்ச்-ஏப்ரல்) இல் கொண்டாடப்படும் தேர் திருவிழா மிகவும் முக்கியமானது. இந்த கோயில் தமிழ்நாடு அரசின் இந்து மத மற்றும் அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது

 *புராணக்கதை* 

கோயில் எப்போது தொடங்கப்பட்டது என்பது கல்வெட்டுகள் மற்றும் பதிவுகளிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இடைக்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கோயிலுக்கு தாராளமான பரிசுகளைக் குறிக்கின்றன. திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதர் கோயிலில் இருந்து பதிவு செய்யப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் உள்ளன . மத்திய சன்னதியின் வடக்கு சுவரில் உள்ள 1911 ஆம் ஆண்டின் 211 என்ற எண் கொண்ட கல்வெட்டு, சோழ மன்னன் பரகேசரிவர்மன், அல்லது ராஜேந்திர சோழன் I (கி.பி 1012–44) கோயிலுக்கு ரத்தினங்கள் மற்றும் முத்துக்களால் ஆன தங்க நகைகளை பரிசாக வழங்கியதைக் குறிக்கிறது. சன்னதியின் தெற்கு சுவரில் 1911 ஆம் ஆண்டின் 218 என்ற எண் கொண்ட இரண்டாவது கல்வெட்டு, சோழ மன்னன் ராஜராஜ ராஜகேசரிவர்மன் I இன் 14 வது ஆண்டில் கோயிலுக்கு நிலம் நன்கொடையாக வழங்கியதைக் குறிக்கிறது

 *பிரார்த்தனை* 

இக்கோவிலில் வேண்டிக் கொண்டால் தம்பதியருக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை கூடும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

 *கோவில் திறக்கும் நேரம்* 

காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும்,

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

 *கோவில் முகவரி*

ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோவில்,

திருநாகேஸ்வரம், கும்பகோணம் - 612 204

தஞ்சாவூர் மாவட்டம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, August 27, 2025

வியாக்ரபுரீஸ்வரர் திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், 
திருப்பெரும்புலியூர், 
தஞ்சாவூர் மாவட்டம்-613204
*மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர்
*இறைவி: சௌந்தரநாயகி

*தல விருட்சம்: சரக்கொன்றை

*தீர்த்தம்: காவிரி தீர்த்தம், கோயில் தீர்த்தம்.                 

*பாடல் பெற்ற தலம்:
திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பாடிய தலம். 

*புலிக்கால் முனிவர் வழிபட்டதால், இத்தலம் திருப்பெரும்புலியூர் எனப் பெயர் பெற்றது. 

*வியாக்ரபாதர் புலிக்கால் முனிவராக வழிபட்ட ஐந்து புலியூர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.  அவை பெரும் பெற்ற புலியூர் (சிதம்பரம்), எருகத்தம் புலியூர் (ராஜேந்திரபட்டினம்), ஓமாம் புலியூர், திருப்பாதிரிப்புலியூர்,  பெரும்புலியூர்.

*வியாக்ரபாத முனிவர்  சிவபெருமான் மேல் தீராத பக்தி கொண்டவர். இந்த முனிவர் இறைவனுக்கு எளிதாக பூப்பறிக்க தன் கால்களை புலிக்கால்களாக மாற்றிக் கொண்டாராம். அதனாலேயே அந்த முனிவரின் உண்மை பெயர் மறைந்து ‘புலிக்கால் முனிவர்’ என அழைக்கப்பட்டார்.    

*பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். 
ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் உமா சகித மூர்த்தியின் திருமேனிகள் உள்ளன.          

*கணவனின், பழக்க வழக்கங்கள் பிடிக்காமல், அவனை விட்டுப் பிரிந்து வாழும் பெண்கள், உமா சகித மூர்த்தியின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள். ‘தாயே என் கணவனுக்கு நல்ல புத்தியைக் கொடு. அவர் திருந்தி என்னுடன் மீண்டும் வாழ அருள்புரிவாய்’ என கண்கள் கலங்க மன்றாடுகிறார்கள்.  

*தன்னை விட்டு பிரிந்து வாழும் கணவன் தன்னுடன் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மனமுருக அன்னையிடம்  வேண்டுகிறார்கள்.   

*கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை, அவள் கணவன் அங்கே போய் எத்தனை முறை அழைத்தாலும் வர மறுப்பதால் என்ன செய்வது என்று புரியாத கணவன்மார் இங்கே வருகிறார்கள். உமா சகித மூர்த்தியின் முன் நின்று மனமாற பிரார்த்தனை செய்கிறார்கள்.

*இவர்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. தம்பதிகள் இணைகின்றனர். இணைந்தவுடன் தம்பதியர்களாக இங்கு வருகின்றனர். 
இணைந்து காட்சி தரும் உமா சகித மூர்த்திக்கு அபிஷேக, ஆராதனை செய்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர். 

*இது மட்டுமல்ல நீதிமன்றம் வரை சென்ற விவாகரத்து வழக்குகள் கூட, உமா சகித மூர்த்தியை பிரார்த்தனை செய்தால், இடையிலேயே திரும்பப் பெறப்பட்ட சம்பவங்கள் ஏராளம் என இங்குள்ள பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.  

*இக்கோயிலின் கருவறை தாமரை மலர் போன்ற வட்ட அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

*இங்குள்ள நவகிரக சந்நிதியில் அனைத்து கிரகங்களும் சூரியனை நோக்கியவாறு உள்ளது சிறப்பு.

*இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், திருப்பூந்துருத்தி அருகே உள்ள திருப்பெரும்புலியூரில் அமைந்துள்ளது.
தஞ்சாவூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருவையாற்றுக்கு வடமேற்கே
 3-கி. மீ. தூரத்திலும் உள்ளது. திருவையாற்றிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திருவாரூர் தியாகராஜசாமி திருக்கோயில்.

*அருள்மிகு திருவாரூர் தியாகராஜசாமி திருக்கோயில்.

தியாகராஜர் கோயில், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவாரூரில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவ வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு சிவலிங்கம் கடவுளைக் குறிக்கிறது, மேலும் அவர் வான்மீகநாதர் என்று வணங்கப்படுகிறார். மரகத லிங்கம் என்று அழைக்கப்படும் அவரது சிலைக்கு தினசரி பூஜைகள் செய்யப்படுகின்றன.

இங்குள்ள முக்கிய தெய்வம் சோமாஸ்கந்த வடிவில் உள்ள ஸ்ரீ தியாகராஜர். அவரது துணைவியார் பார்வதி கொண்டியின் வடிவத்தில் காணப்படுகிறார். இந்த கோயில் பாடல் பெற்ற ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது, இது 7 ஆம் நூற்றாண்டின் தமிழ் படைப்பான தேவாரத்தில் போற்றப்படுகிறது, இது நாயன்மார்கள் என்று அழைக்கப்படும் துறவி கவிஞர்களால் எழுதப்பட்டது.
தியாகராஜர் கோயில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதால், நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழக அரசுக்குச் சொந்தமான இந்து சமய மற்றும் அறநிலையத் துறை இந்தக் கோயிலின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்கிறது. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோரின் தாயகமாக திருவாரூர் உள்ளது.

 *திருவாரூர் தியாகராஜர் கோவில் புராணம்*

இந்து புராணத்தின் படி, தியாகராஜரை மணக்க கமலாம்பிகா தேவி செய்த தவம் பலனளிக்காத இடம் இந்தக் கோயில். 

முச்சுகுந்தா என்ற சோழ மன்னன் இந்திரனிடம் வரம் பெற்று, சாய்ந்த விஷ்ணுவின் மார்பில் தியாகராஜ சுவாமி சிலையைப் பெற விரும்பினான் என்று புராணம் கூறுகிறது. ராஜாவை தவறாக வழிநடத்த, இந்திரன் வேறு ஆறு சிலைகளைச் செய்தார், ஆனால் மன்னர் இந்த இடத்தில் (திருவாரூர்) சரியான சிலையைத் தேர்ந்தெடுத்தார். மற்ற ஆறு சிலைகளும் திருநள்ளாறு, திரு நாகை, திரு காரையில், திரு வாய்மூர், திரு கொல்லி, திருமறைக்காடு ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன. இந்த ஏழு பகுதிகளும் சப்த விடங்க க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகின்றன

 *தியாகராஜர் கோவில் வரலாறு,*

பல்லவர்கள் முதன்முதலில் இந்தக் கோயிலை 7 ஆம் நூற்றாண்டில் நிறுவியதாக நம்பப்படுகிறது. கோயிலின் சமகால வரலாறு இடைக்கால சோழர்கள் காலம் வரை செல்கிறது. தியாகராஜர் சன்னதியின் வடக்கு மற்றும் மேற்கு சுவர்களில் காணப்படும் ஒரு கல்வெட்டு, முதலாம் ராஜேந்திரன் ஆட்சியின் 20 ஆம் ஆண்டு (1012 - 1044) தேதியிட்டது, கடவுள் வீதிவிடங்கர் அல்லது தியாகராஜருக்கு வழங்கப்பட்ட நகைகள் மற்றும் விளக்குகள் உள்ளிட்ட பரிசுகளை பட்டியலிடுகிறது. அனுக்கியார் பரவை நங்கையர் மன்னரின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் கல்லால் கட்டப்பட்டது என்பதையும் இது பதிவு செய்கிறது. 

ராஜராஜ சோழனின் தஞ்சாவூரில் உள்ள பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோயிலுக்கு இந்தக் கோயில் வளாகம் ஒரு உத்வேகமாக இருந்ததாகத் தெரிகிறது. கோயிலின் விவகாரங்களில் முக்கிய பங்கு வகித்த கடைசி சோழ மன்னர் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆவார். இது கி.பி 13 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நடந்தது. 

தற்போதைய கட்டமைப்பு 9 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது, அதே நேரத்தில் பின்னர் விரிவாக்கங்கள் சங்கம வம்சத்தின் விஜயநகர மன்னர்கள் (கி.பி 1336–1485), சாளுவர்கள் மற்றும் துளுவர்கள் (கி.பி 1491–1570) ஆகியோரால் செய்யப்பட்டிருக்கலாம்.

 *தியாகராஜர் கோயிலின் முக்கியத்துவம்* 

இந்தக் கோயிலில்தான் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சன்னதிகள் அல்லது சன்னிதிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயிலில், ஒன்பது நவக்கிரகங்களும் அல்லது கிரக தெய்வங்களும் தெற்கு நோக்கி ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. கடவுளால் அவர்கள் சாபத்திலிருந்து விடுபட்டதாகக் கூறப்படுகிறது, அதனால்தான் அவர்கள் தியாகராஜரை வழிபட்டனர்.

இந்தக் கோயிலில் ஏழு பிரகாரங்கள் (தாழ்வாரங்கள்) மற்றும் 100க்கும் மேற்பட்ட சன்னதிகள் உள்ளன. வளாகத்தில் 24க்கும் மேற்பட்ட கோயில்களும் 86 விநாயகர் சிலைகளும் உள்ளன. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இந்தக் கோயிலில் உள்ளது.

தியாகராஜர் கோயில், தெய்வத்தால் நிகழ்த்தப்படும் அஜப தானம் அல்லது மந்திரம் இல்லாமல் நடனம் ஆடுவதற்குப் பெயர் பெற்றது. சோழ மன்னர் முச்சுகுந்த, கடவுளர்களின் மன்னரான இந்திரனிடமிருந்து விஷ்ணுவின் மார்பில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ தியாகராஜ சுவாமியின் சிலையைப் பெற வரம் பெற்றார். ராஜாவை தவறாக வழிநடத்த இந்திரன் மேலும் ஆறு சிலைகளைச் செய்திருந்தார். இருப்பினும், மன்னர் திருவாரூரில் சரியான சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

மற்ற ஆறு சிலைகளும் வெவ்வேறு இடங்களில் நிறுவப்பட்டன. ஏழு தியாகராஜர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்போது நடனமாடும் என்று கூறப்படுகிறது. ஊர்வல தெய்வத்தை ஏந்தியவர்கள்தான் உண்மையில் நடனமாடுகிறார்கள்.

 *கோயில் நேரங்கள்* 

காலை: காலை 05.00 மணி - மதியம் 12.00 மணி (மதியம்).

மாலை: மாலை 04.00 மணி – இரவு 09.00 மணி.

 *தியாகராஜர் கோவிலுக்கு எப்படி செல்வது,* திருவாரூர்
விமானம் மூலம்

திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும், இது கோயிலிலிருந்து 123 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
ரயில் மூலம்

திருவாரூர் ரயில் நிலையம் கோயிலிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மேலும் இது மிக அருகில் உள்ளது.
சாலை வழியாக

இந்த நகரம் பெரும்பாலான முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களும் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, August 25, 2025

கண் நோய்கள் (குருடர்கள்) – சென்னை சிவன் கோயில், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயம்,


 1)கங்கை போன்ற புனித நிதிகளின் நீரில் உணவைச் சமைத்தால் அது மேலும் புனிதமாகிறது. 
கங்கை நீரைக் கொதிக்க வைக்கும் போது கங்கை உற்பத்தி ஸ்தலமான கோமுக் புனிதஸ்தலத்தில் அபூர்வமாகக் காணப்படும் வெந்நீர் ஊற்றிலிருந்து வரும் நீரின் தெய்வீகத் தன்மையை அது பெறுகிறது. 

இது கங்கை நீரை விடப் பன்மடங்கு புனிதமானதாகும். 

எனவே புனிதமான கங்கை நீரில் சமைத்த பிரசாதத்தை ஏழைகளுக்கு அளிப்பது மிகவும் விசேஷமானதல்லவா! அல்லது பிரசாதத்தில் சிறிது கங்கை நீரையேனும் சேர்க்கலாம்!

2)சில கோயில்களின் மூலவர்கள் குறிப்பிட்ட வியாதிகள் குணமாவதற்கென விசேஷ அனுக்ரஹம் புரிகின்றனர். 

அந்தந்தக் கோயிலில் அர்ச்சனை செய்த விபூதி, துளசி, வில்வ தளங்கள், குங்குமம், திருக்குள நீர், அர்ச்சனை செய்த தேங்காய் போன்றவற்றை அன்னதான உணவுடன் சேர்த்து அளித்தால் எழைகட்கும் திருவருள் பெற்றுத் தந்த ஆத்ம திருப்தியைப் பெறலாம்.

 நரம்பு வியாதிகள் - திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் பிரசாதம்.

தோல் நோய்கள், பால் நோய்கள், தொழுநோய் - சென்னையிலுள்ள கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் அர்ச்சனை செய்யப்பட்ட வில்வம் விசேஷமானது. இந்த வில்வத்தை அன்னதான உணவுடன் சேர்க்கலாம். பதினாறு தளங்களுக்கு மேல் காணப்படும் இந்த வில்வமர இலை அற்புதமானது. ஆனால் சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பெற்ற வில்வதளப் பிரசாதங்களையே பயன்படுத்த வேண்டும்,

கழுத்து நோய்கள் - குன்றத்தூர் திரு நாகேஸ்வரர் பிரசாதம்.

இருதய நோய்கள் - திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வரர் பிரசாதம்.

அனைத்து நோய்கள் குறிப்பாக அறுவை சிகிச்சைகள் - படேஸாஹிப் சமாதி (சின்னபாபு சமுத்திரம், பாண்டிச்சேரி) பிரசாதம்.

கண் நோய்கள் (குருடர்கள்) – சென்னை அருகே ஞாயிறு சிவன் கோயில், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயம், சென்னை அருகே சித்துக்காடு பெருமாள் ஆலயம் பிரசாதம், இங்குள்ள விருட்சக் கொடி சித்தர் தரிசனம்.

பல் நோய்கள் – மகோன்னத்த சித்தர் திருமழிசை ஜெகன்னாதப் பெருமாள் ஆலயம்.

எலும்பு நோய்கள் – சுதாதலீஸ்வர சித்தர் – மப்பேடு சிங்கீஸ்வரர் சிவாலயம் (சென்னை அருகில்)

3)ஓம்காரம் தன்வந்தரி காயத்ரீ, அஸ்வினி தேவர்கள் காயத்ரீ, திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம் போன்றவை ஜபித்துப் பாராயணம் செய்து, தொழு நோயாளிகட்கும், ஊனமுற்றோர்கட்கும் ஏனைய நோயாளிகட்கும் அன்னதானப் பிரசாதமளித்தல் அற்புதமான பலன்களைத் தரும். இவை தவிர திருப்பதி, சபரிமலை போன்ற திருத்தலக் கோயில்களின் பிரசாதத்தையும் அன்னதான உணவில் சேர்த்தல் நினைத்துப் பார்க்க இயலாத தெய்வத் திருவருளைப் பெற்றுத்தரும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

விநாயகரின் ஆறுபடை வீடுகள்...

விநாயகரின் ஆறுபடை வீடுகள்...
முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-

முதல்படை வீடு :-திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் `அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே `அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

இரண்டாம் படைவீடு :-விருத்தாசலம்

விருத்தாசலம் இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

மூன்றாவது படைவீடு :-திருக்கடவூர்

திருக்கடவூர் எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

நான்காம்படை வீடு :-மதுரை

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித்தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

ஐந்தாவது படைவீடு :-பிள்ளையார்பட்டி

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

ஆறாம்படை வீடு :-திருநாரையுர்

திருநாரையுரில் அருள்பாலிக்கிறார் பொள்ளாப் பிள்ளையார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானின் அற்புதத் தோற்றங்கள் பல. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.

விநாயகப் பெருமான் பல கோவில்களில் கருமை நிறத்தில் அருள்புரிந்தாலும், சில தலங்களில் வெண்மை, மஞ்சள், சிவப்பு, சந்தனம், பச்சை ஆகிய வண்ணங்களில் எழுந்தருளியுள்ளார்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, August 24, 2025

வடபழநிஆண்டவர் தண்டாயுதபாணி திருக்கோயில்

#தென்பழநிக்கு செல்ல முடியாதவர்கள் 
தமிழகத்தின் தலைநகரான #சென்னை_மாநகரில் 
உள்ள புகழ்பெற்ற முருகப் பெருமான் குடிகொண்ட #சென்னையம்பதி 
#கோடம்பாக்கம் 
#வடபழநி (வடபழனி)
#வடபழநிஆண்டவர் (#தண்டாயுதபாணி)
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 

சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கும் வடபழநியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.
இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது. மேலும், இது தமிழ்நாட்டின் கோடம்பாக்கத்தில் (கோலிவுட்) அமைந்துள்ளதாலும் தமிழ் திரைப்படத்துறையினர் வருகை அதிகமிருப்பதாலும் மக்களிடையே பிரபலமான கோவிலாக உள்ளது.
1890ம் ஆண்டு எளிய ஓலைகூரைக் கொட்டகையுடன் இக் கோயில் கட்டப்பட்டது. இன்று மக்களின் ஆதரவால் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7,000 தம்பதியர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

இக் கோவிலின் தலபுராணத்தில், முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் முதலில் இருந்த கொட்டகையை அவரின் சொந்த வழிபாட்டிற்காக அமைத்தார் எனவும், அங்கு தென்பழநி முருகனின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமயம் தீவீர வயிற்றுவலியால் அவதிப்பட்டார். அந்நோய் தீருவதற்கு அவர் தவறாமல் திருத்தணி மற்றும் திருப்போரூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். பின்னர், தென்பழநி யாத்திரையின் போது ஒரு சாது சொல்லியதற்கிணங்க, தான் தங்கியிருந்த கொட்டகையில் பழநி முருகனின் உருவப்படத்தை வைத்து வழிபடலானார். தன் நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கை செலுத்தினார். இதற்கு "பாவாடம்" என்று பெயர். பாவாடம் காணிக்கையால் அவருடைய வயிற்றுவலி நீங்கப்பெற்றார். மேலும், அவர் நாளடைவில் அந்த இடத்தில் முருகனின் தெய்வீக சக்தியை உணர்ந்தார். அதனால் அவர் பிறரிடம் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் நடந்தேறின. அதனால் மக்கள் அவர் சொல்வதை "அருள்வாக்கு" என்று எடுத்துக்கொண்டனர். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான நோய் தீருதல், வேலை வாய்ப்பு மற்றும் திருமணம் ஆக வேண்டி அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர் என்ற விபரம் கூறப்படுகிறது. அது முதல் அவர் அண்ணாசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார்.

அவருக்குப்பின், அவரின் பிரதான சீடரான இரத்தினசாமி செட்டியார் என்பவரால் 1865ம் ஆண்டு தென்பழநியில் உள்ளது போல சிலை செய்யப்பட்டு கோவில் கட்டப்பட்டது. ஒரு நாள் இரத்தினசாமி செட்டியாரின் கனவில் அண்ணாசாமித் தம்பிரான் தோன்றி தன்னைப்போலவே "பாவாடம்" தரித்துக் கொள்ளுமாறு பணித்தார். அதனால் இவரும் பாவாடம் தரித்து, குறி சொல்லும் ஆற்றலைப் பெற்று இரத்தினசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார். தற்போது உள்ள கர்ப்பக்கிருகம், உட்பிரகாரம் மற்றும் கருங்கல் மண்டபம் போன்றவை இரத்தினசாமித் தம்பிரானின் சீடரான பாக்கியலிங்கத் தம்பிரான் செங்குந்தர்[3] காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். இம் மூன்று தம்பிரான்களின் (சித்தர்கள்) சமாதியும் தமிழ்நாட்டில் உள்ள நெற்குன்றம் போகும் பாதையில் அமைந்துள்ளன. இங்கு சித்தர்கள் ஆலயம் அமைக்கப்பட்டு பௌர்ணமி பூசை மற்றும் குரு பூசை போன்றவை விமரிசையாக நடைபெறுகிறது. வடபழனி முருகன் கோவில் கிபி 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த வடபழனி முருகன் கோவில். தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் மிகவும் அற்புதமான வடபழனி முருகன் கோவில்.

#திருத்தலம் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோவில்

மூலவர் :வடபழநி ஆண்டவர் 
அம்மன் :ஸ்ரீவள்ளி,
தேவசேனா
தலமரம்:அவதும்பரவிருக்ஷம் (அத்திமரம்)
ஆகமம்: சிவாகமம்
தீர்த்தம் :குகபுஷ்கரணி (திருக்குளம்)
ஊர் :வடபழநி
மாவட்டம் :சென்னை

*வடபழநி ஆண்டவர் கோவில் வரலாறு:

திருமுருகன் திருத்தலங்களுள் தொன்மைவாய்ந்த தென்பழனியில் பழநியாண்டியாகவும், அவரே சென்னையம்பதியில் கோடம்பாக்கம் வடபழநியில் வடபழநியாண்டியாகவும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அளித்து கலியுக வரதனாகவும் எழுந்தளியிருப்பவர் அருள்மிகு வடபழநி ஆண்டவர்.

அருள்மிகு வடபழநி ஆண்டவர் சென்னை மாநகரின் மையப்பகுதியில் கிழக்கு மேற்கு ஆற்காடு சாலையில் இருந்து 100 அடி தொலையிலும், தென்புறம் ஆலந்தூர் மற்றும் வடபுறம் நெற்குன்றம் சாலையிலிருந்து 100 அடி தொலையிலும், கோயம்பேடு பேருந்து நிலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வடபழநியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும்.

#தல வரலாறு:

சென்னையிலுள்ள பழமையான கோவில்களில் வடபழனி முருகன் கோவிலும் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் முருகபக்தர்களிடையே வெகு பிரசித்தம். 
17ம் நூற்றாண்டின் இறுதியில் அண்ணாசாமி நாயக்கர் எனும் தீவிர முருகபக்தரால் இக்கோவில் கட்டுவிக்கப்பட்டுள்ளது. வறியவரான அவர் ஒரு ஓலைக்குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார். தலபுராணக்கதைகளின்படி நாயக்கர் ஒரு நாள் பூஜை செய்துகொண்டிருக்கும்போது அவருள் தெய்வீக சக்தி பரவுவதை உணர்ந்துள்ளார். சொல்வதெல்லாம் சித்திக்கும் சக்தியையும் அக்கணத்திலிருந்து பெற்றதை அவர் அறிந்துகொண்டார்.

இக்கோவில் தோன்ற மூல காரணமாக இருந்தவர் அண்ணாசாமி தம்பிரான். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர். (நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்). இவர், தான் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழநியிலிருந்து வாங்கி வந்த பழநி ஆண்டவர் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தவர். இவர் வைத்து பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தினசாமி தம்பிரான் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோவில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.

*பாக்யலிங்க தம்பிரான்: 

இப்போதுள்ள வடபழநி கோவிலின் கர்ப்ப கிரகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் மற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர். இவரும் வடபழநி கோவிலுக்கு பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோவில் மிகவும் புகழ் பெற்று விளங்கத் தொடங்கியது. இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோவிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது.

இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோவில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.

கோவிலுக்கென்று பிரத்யேக தீர்த்தக்குளத்துடனும் பெரிய வளாகத்தை கொண்டதாகவும் வடபழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த குளத்து நீருக்கு பிணி தீர்க்கும் குணம் உள்ளதாக நம்பிக்கை உள்ளது. முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன. பழநிக்கு செல்ல இயலாதவர்கள் இங்கு தங்களின் நேர்த்திக்கடன்களையும் செலுத்தி வழிபடுகின்றனர். இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது சிறப்பு.

*கோவிலின் அமைப்பு:

இக்கோவிலின் தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களில் சிவன் மற்றும் முருகனின் வடிவங்கள் சுதைச் சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன. கிழக்கில் இராஜகோபுரம் 112 அடி உயரமுடையது. இராஜகோபுரத்தினையடுத்து பலிபீடமும், கொடிமரமும் அமைந்துள்ளன. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மண்டபம், வாகன மண்டபம், உற்சவர் மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியன இக்கோவில்களின் கட்டிட அமைப்புகளாக உள்ளன.

இக்கோவிலில் கருவறை சதுரவடிவில் உள்ளது. கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அர்த்தமண்டபத்தின் இருபுறமும் வாயிற்காவலர்களின் சிற்பங்கள் உள்ளன. நுழைவாயிலின் மேற்புறம் யானைத்திருமகள் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்முகர், சண்டிகேசுவரர், துர்க்கை, வீரபாகு, வீரபத்திரர், பைரவர், காளி, வையாபுரி பாண்டியன், தேவார மூவர், மாணிக்கவாசகர் ஆகிய திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன.

மேலும் நடராசர், முருகன், வள்ளி, தேவசேனை, சிவகாமி, விநாயகர் ஆகிய செப்புத்திருமேனிகள் விழாக்காலங்களில் உலாப்படிமங்களாக வழிபடப்படுகின்றன. திருச்சுற்றில் அங்காரகன் (செவ்வாய்), சண்முகர், மீனாட்சி ஆகிய தெய்வங்களின் சிற்றாலயங்கள் வடக்குப்பக்கத்திலும், அருணகிரிநாதர் மற்றும் அனுமனின் சிறுகோவில்கள் கிழக்குப்பக்கத்திலும் அமைந்துள்ளன. இராஜகோபுரத்தின் எதிரே திருக்குளம் அமைந்துள்ளது. தலமரமான அத்திமரம் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது.

கருவறை விமானத்தின் தாங்குதளம் ஆறு அங்கங்களான உபானம், ஜகதி, முப்பட்டை குமுதம், கண்டம், பட்டிகை முதலிய உறுப்புகளைப் பெற்று விளங்குகிறது. சுவர்ப்பகுதியில் வேதிகை உறுப்பு காணப்படுகிறது. மேலும் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதி கோட்டங்களைப் பெற்று விளங்குகிறது. இக்கோட்டங்களில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, விநாயகர், வடபுறம் துர்க்கை ஆகிய இறைவடிவங்கள் இடம்பெற்றுள்ளன.

வாகன மண்டபத்தில் மயில், பூதம் ஆகிய வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சுற்றில் வடபுறம் உள்ள திருமண மண்டபத்தில் மேடை போன்ற அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இங்கு திருமணங்கள் நிகழ்த்தப்படுகின்றன. திருச்சுற்று முழுவதும் முழுத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டு மண்டபங்களாக பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் முன்புறம் அடியவர்கள் நின்று வணங்கத்தக்க முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

மகாமண்டபத்தின் மேற்கூரையின் விதானப்பகுதியில் முருகனின் பிறப்பு முதலான திருவிளையாடல்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. முருகனின் பிறப்பு, கார்த்திகைப் பெண்கள் வளர்ப்பு உள்ளிட்ட திருவிளையாடல்களும், முருகனின் அறுபடை வீடுகளான திருத்தலங்களும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

*திருவிழாக்கள்: 

சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் 11 நாட்கள் வீதி உலா பெருந்திருவிழா ஆனி, ஆடி, ஆவணி சுவாமி வீதி உலா ஐப்பசி கந்த சஷ்டி 6 நாட்கள் பங்குனி கிருத்திகை லட்ச்சார்ச்சனை 3 நாட்கள் தெப்பதிருவிழா 6 நாட்கள்.

*பிரார்த்தனை: 

இங்குள்ள வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க, வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வருகிறார்கள்.

*நேர்த்திக்கடன்: 

வேண்டியதெல்லாம் தரும் வடபழநி ஆண்டவர் சன்னதியின் முக்கிய நேர்த்திகடன் முடி காணிக்கையாகும். வேல் காணிக்கை, ரொக்கம் போன்றவற்றை உண்டியலில் செலுத்துகிறார்கள். தவிர உண்டியல் காணிக்கை இக்கோவிலின் மிக முக்கிய வருமானம் ஆகும். பால், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் ஆகிவற்றாலான அபிசேகங்கள் சுவாமிக்கு நேர்த்திகடனாக நடைபெறுகின்றன.

*தனிச் சன்னதிகள்:

இக் கோவிலில் பல தெய்வங்களுக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள் இங்கு உள்ளன.

இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மூலவர் பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு முருகன் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்று ஒரு தனிச் சன்னதி இருக்கிறது. மேலும் இங்கு தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.

இக்கோவில், திருமணங்களுக்கும் மத சொற்பொழிவுகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு விசாலமான மண்டபத்தைக் கொண்டுள்ளது. இது சென்னையில் உள்ள மக்கள் அடிக்கடி வரும் முருகன் ஆலயங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த கோவிலின் முன்புற இராஜ கோபுரத்தில், கந்த புராணக் காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் முன்புறம் திருக்குளம் உள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் 'தெப்போற்சவம்' நடைபெறுகிறது. இதன் கிழக்கு கோபுரம் 40.8.மீ உயரம் கொண்டது. இதில் 108 பரதநாட்டிய நடன அசைவுகள் காணப்படுகின்றன. இக்கோவிலின் தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.

*கோவிலின் சிறப்பு:

தங்க ரதம்: 
வைகாசி விசாகம்
பல முருகன் கோவில்களில் இல்லாத ஆஞ்சனேயர் சன்னதி இங்கு உண்டு.
மூன்று சித்தர்களால் பூஜிக்கப்பட்டு வளரப்பட்டது இந்தத் திருக்கோயில்.
தென்பழநி கோவிலுக்குச் செய்வதாக வேண்டிக்கொண்ட காணிக்கைகளை இக்கோவிலில் செலுத்துவது.

இங்கு தமிழ் மாதம் பன்னிரெண்டிலும் விழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் வைகாசி விசாகத் திருவிழா 11நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மற்றும் ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூசை மேற்கொள்ளப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா சூர சம்காரத்துடன் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆறு நாட்களிலும் முருகப் பெருமானுக்கு "லட்சார்ச்சனை" நடைபெறுகிறது. மேலும் மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகருக்கு 9 நாட்கள் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

*பூஜைக்காலம்:

1. பள்ளியறை – காலை 5.30 மணி
2. கால சந்தி – காலை 6.30 மணி
3. உச்சிக் காலம் – பகல் 12.00 மணி
4. சாயரட்சை – மாலை 5.00 மணி
5. அர்த்த ஜாம பூஜை – இரவு 9.00 மணி; செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 09.30 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெறும்.

கோவில் திறக்கும் நேரம்: 

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோவில் காலை 05:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.

வாழ்வளிக்கும் நாதனாய், வரமளிக்கும் தெய்வமாய், வாரி வழங்கும் வள்ளலாய்,ஸ்ரீ வடபழநி ஆண்டவரை வணங்கி எல்லா நலன்களும் பெருக. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

மதுரை மீனாட்சி அன்னையின் தெய்வீக ரகசியம் தெரியுமா?

மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா?
பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார்.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள்.

அந்த வரிசையில், மதுரையில் மீனாட்சி அம்மன் மொத்தம் 8 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள்.

சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும்.
ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.

முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம்.

பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்கி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல அதிசயங்கள் உள்ளது.

மதுரையில் மீனாட்சி தினமும் எட்டு விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.

அவை..

(1) திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி

(2) ப்ராத சந்தியில் – பாலா

(3) 6 – 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி

(4) 12 – 15 நாழிகை வரையில் – கெளரி

(5) மத்யானத்தில் – சியாமளா

(6) சாயரக்ஷையில் – மாதங்கி

(7) அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி

(8)பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும்.

காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்து, இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டுப் புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள்.

இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும். அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும்.

ஒரேநாளில் புவனேஷ்வரி, கௌரி, சியாமளா, மாதங்கி, பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களுக்கு மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியமாகும்.

வாழ்க்கையில் ஒரு முறையேனும் காணவேண்டிய காட்சி ஒன்று உண்டென்றால், அது அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜையாகும்.!!

எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது.

இரவு அர்த்த ஜாமத்தில்

மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.

இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறைக்கு வரும்.

பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை) நடக்கிறது.

உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை. ஆகவே தான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும்.

அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும். அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்கு மிக அருகில் காட்டுவர்.

அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.

மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும்.

அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டு விடுகிறது.

(மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)

இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.

அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சியாகும்

பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.

அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

குறிப்பாக திருமணமாகாதவர்கள் தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் உடனே மனம் போல திருமணம் நடப்பது உறுதி.

மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தல் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்.

பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சின்னஞ்சிறு சிறுமி அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை சந்தான பாக்கிய பலனை கட்டாயம் தருவாள் .

வியாபார நஷ்டம்,தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம்

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு முக்கிய இடமுண்டு…

இவையெல்லாவற்றையும்

விட புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே அன்னை ஸ்ரீமீனாட்சியை 

புவனேஷ்வரி,

கௌரி,

சியாமளா,

மாதங்கி,

பஞ்சதசி.

என எல்லா அலங்காரத்திலும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, August 23, 2025

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்* "திருவாடுதுறை"



நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான்,    இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை ..!
இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!

*இழந்த செல்வம் மீட்டு தரும்* " தென்குரங்காடுதுறை "

சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது.

*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்* "திருவாடுதுறை"

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே..!

*கடன், சங்கடங்கள் போக்கும்* " திருபுவனம் சரபேஸ்வரர் "

தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம் " சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.

*வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம்* "திருச்சேறை"

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு..!

*பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர* "வாஞ்ஸ்ரீசியய்ம்"

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள்.

*பிதுர் தோஷம் நீக்கும்* " ஆவூர் பஞ்ச பைரவர்கள் "கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர்.

இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ).
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்".
சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.

*மரண கண்டம் நீக்கும்* " திருநீலக்குடி "
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

*மாங்கல்ய தோஷம் நீக்கும்* " பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி"
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.

*கிரக தோஷங்கள் விலக்கும்* " சக்கரபாணி "

ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.

*பெண் பாவம் தீர்க்கும்* " திருவிசநல்லூர் "
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் " மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.

*தேவாரம் பெற்ற தலங்கள்*

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44
2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள் --- 52
3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள் --- 13
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள் ---- 02
5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் ---- 111
6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள் ---- 28
7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் ----- 25

மொத்தம் 275
இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள் 25

சிவஸ்தலத் தொகுதிகள்

வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்

1. *அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்*

1. திருக்கண்டியூர் ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர் ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர் --- தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி ---- சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை --- காமனை எரித்தது
8. திருக்கடவூர் ---- யமனை உதைத்தது

2. *பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்*

1. கேதாரம் (இமயம்) ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்) ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி) ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம் (மகாராஷ்டிரம்) ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்) ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்) ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்) --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்) ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்) ---- இராமநாதேஸ்வரர்

*முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம் ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை ---- நினைக்க முக்தி தருவது
4. காசி ---- இறக்க முக்தி தருவது

*பஞ்சபூத ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம் ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி ----- வாயு (வளி)
5. சிதம்பரம் ---- ஆகாயம் (விசும்பு)

*நடராஜருக்கான பஞ்ச சபைகள்*

1. திருவாலங்காடு --- இரத்தின சபை
2. சிதம்பரம் --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி --- தாமிர சபை
5, திருக்குற்றாலம் --- சித்திர சபை

*(வியாக்ரபாதர் வழிபட்டவை) புலியூர்கள்*

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்

*சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்*

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.

1. திருஆரூர் -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்
2. திருநள்ளாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. திருநாகைக்ரோணம் --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. திருக்கோளிலி -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. திருவாய்மூர் ---- நீலவிடங்கர் --- கமல நடனம்
7. திருமறைக்காடு --- புவனிலிடங்கர் --- கம்சபாத

*சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்*

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர் ---- ஆனந்த தாண்டவம்
2. திரு ஆரூர் ---- அசபா தாண்டவம்
3. மதுரை ---- ஞானசுந்தர தாண்டவம்
4. புக்கொளியூர் ----. ஊர்த்துவ தாண்டவம்
5. திருமுருகன் பூண்டி ---- பிரம தாண்டவம்

*சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்*

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

*காசிக்கு ஈடான ஸ்தலங்கள்*

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

*நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்*

1. நந்தி சங்கம தலம் --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்)
2. நந்தி விலகியிருந்த தலங்கள் ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3. நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் --- திருவெண்

பாக்கம்
4. நந்திதேவர் நின்ற திருக்கோலம் --- திருமாற்பேறு
5. நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி
6. திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
7. திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக

*சப்த ஸ்தான (ஏழூர் விழா) தலங்கள்*

1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

*திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்*

1. திருவோத்தூர் --- ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம் ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்
4. சிதம்பரம் --- கோவிந்தராஜப் பெருமாள்
5. திருநணா --- ஆதிகேசவப் பெருமாள்
6. சிக்கல் --- கோலவாமனப் பெருமாள்
7. திருநாவலூர் --- வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி --- நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம் --- கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்
11. திருப்பத்தூர் --- அரங்கநாதர்
12. திருவக்கரை --- அரங்கநாதர்

*ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்*

*உட்கோயில் கோயில்*

1. திருவாரூர் அரநெறி ---- திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் --- திருப்புகலூர்
3. மீயச்சூர் இளங்கோயில் ---- மீயச்சூர்

*காயாரோகணத் தலங்கள்*

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

*மயானத் தலங்கள்*

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

*கைலாயத் தலங்கள் தெட்சண கைலாசம்*

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

*பூலோக கைலாசம்*

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

*அழகிற் சிறந்த கோயில்கள்*

1. தேரழகு --- திருவாரூர்
2. வீதி அழகு --- திருஇடை மருதூர்
3. மதிலழகு --- திருவிரிஞ்சை
4. விளக்கழகு --- வேதாரண்யம்
5. கோபுரமழகு -- திருக்குடந்தை
6. கோயிலழகு – காஞ்சி

*பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு*

1. திருக்குற்றாலம் -- திருவனந்தல் சிறப்பு
2. இராமேச்சுரம் --- காலை பூசை சிறப்பு
3. திருஆனைக்கா --- மத்தியான பூசை சிறப்பு
4. திரு ஆரூர் --- சாயுங்கால பூசை சிறப்பு
5. மதுரை --- இராக்கால பூசை சிறப்பு
6. சிதம்பரம் --- அர்த்தசாம பூசை சிறப்பு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்

குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர், சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி, திருநீலகண்டயாழ்பாணர்.

நடராசர் அபிஷேக நாட்கள் 6

மார்கழி = ஆதிரை , சித்திரை = ஓணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை. ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

*ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்*

மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.

ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும் ஒரே தேவாரத் திருத்தலம்

திருநல்லூர்த் திருத்தலம்.

அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்

“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.

*திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு.*

திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.

*சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு*

1. மயூர தாண்டவம் - மயிலாடுதுரை
2. அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3. கடிசம தாண்டவம்- திருவக்கரை
4. சதுர தாண்டவம்- திருநல்நூர்
5. சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
6. லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி

அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.

சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி, சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர், கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.

*பெரிய கோபுரத் தலங்கள்*

திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி

*மண்டபங்கள் சிறப்பு*

வேலூர் - கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் - சபா மண்டபம்
பேரூர் - கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

*யானை ஏறாத மாடக் கோயில்கள் சில*

1. திருவானைக்காவல்
2. ஆக்கூர்
3. திருத்தேவூர்
4. திருக்கீழ்வேளூர்
5. சிக்கல்
6. வலிவலம்
7. அம்பர்மகாளம்
8. தண்டலை நீள் நெறி
9. திருநறையூர்
10. பழையாரை
11. திருமருகல்
12. வைகல்மாடக் கோயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14. குடவாசல்
15. புள்ளமங்கை
16. திருத்தலைச்சங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்சாய்க்காடு
20. திருவக்கரை
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துறை
23. ஆவுர்
24. திருவெள்ளாறை
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. பெருவேளூர்
28. கைச்சின்னம்
29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….

*பெரிய லிங்கம்*

கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.

திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.

*பெரிய நந்தி*

தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சி வீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.

*புகழ்பெற்ற கோயில்கள்*

கோயில் – சிதம்பரம்
பெரியகோயில்- தஞ்சை
பூங்கோயில் – திருவாரூர்
திருவெள்ளடை- திருக்குருகாவூர்
ஏழிருக்கை-சாட்டியக்குடி
ஆலக்கோயில்-திருக்கச்சூர்
கரக்கோயில்- திருக்கடம்பூர்
கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
மணிமாடம்- திருநறையூர்
தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
சித்தீச் சுரம்- திருநறையூர்.

*நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்*

1. திருஞானசம்பந்தர் - ஆச்சாள் புரம்
2. திருநாவுக்கரசர் - திருப்புகலூர்
3. சுந்தரர் - திருவஞ்சைக்களம்
4. மாணிக்கவாசகர் – தில்லை

*சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்*

1. மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்
2. அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
3. மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்.

*சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்*

1. மெய்கண்டார்- திருவண்ணாமலை
2. அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
3. மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
4. உமாபதி சிவம்- சிதம்பரம்

*பக்தர்கள் பொருட்டு*

திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்து பூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.

    நற்றுணையாவது அண்ணாமலையாரே 

 எங்கும்   நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர்

ஸ்ரீ சொர்ணகாளீஸ்வரர் தரிசனம்  !!  சிவகங்கை மாவட்டம் அடுத்துள்ள காளையார்கோவில் என்ற திருத்தலத்தில் சொர்ணகாளீஸ்வரர் என்ற பெயர் சிவ...