🌹மஹா சங்கடஹர சதுர்த்தி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌹சங்கடஹர சதுர்த்தியின் மகிமை
நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும்.
இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயக ரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திர ன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும்.
ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிக மிக உயர்வானது. அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது.
அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத்தியானிக்க வேண் டும். இரவு பூஜை முடித்தபின் கணேச நிவேதனத் தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.
🌹சதுர்த்தியின் மகிமை:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்து ரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்வி ரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும்.
காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற் கொண்டார். பாண்டவர்க்கு இவ்விர தத்தை உபதேசித்தவர் கண்ணபிரான்.
முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
பார்வதி பல ஆண்டுக்காலம் இவ்விரதத் தை மேற்கொண்டு தன் பதியை அடைந் தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இந்த விரதத்தினால் நல்ல பயன்கள் அடைந் திருக்கின்றனர்.
அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதம ரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விர தத்தின் மகிமையால் தான்.
"கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்.."
ஆனைமுகத்தோன் ஆறுமுகனின் அண்ணன் கணபதி பிறந்த தினம் சுக்கிலபட்ச சதுர்த்தி! அது விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படு வதை அனைவரும் அறிவீர்கள்.
மாதத்தில் மற்றுமோர் சதுர்த்தி உண்டு. அது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி. அதுவே சங்கடஹர சதுர்த்தி என சொல்ல ப்படுகிறது.
விநாயகர் எளிமையானவர். ஆற்றங்கரை க ளில் அரச மரத்தடியில் கூட எழுந்தருளி அருள்பாலிப்பவர். ஆனைமுகனை நினை த்து மஞ்சளில் பிடித்து வைக்கலாம். மண் ணிலே பிடித்து வைக்கலாம்.
எளிதாக கிடைக்கும் எருக்கம் பூ அருகம் புல் அவருக்கு பிடித்தமான பத்திரங்கள். இவரின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும்.
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி வரும் என்றாலும் வருடத்தில் விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தி யில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்தி கள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும். இதையே மாசி முதல் தை மாதம் வரையிலும் சிலர் கடை பிடிப்பர்.
சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல்.
சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களி ல் இருந்து விடுதலை அடையலாம்.
இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரக ன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான்.
எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப் படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனு டைய அருளினை யும் பெறலாம்.
பதியான சிவனை பிரிந்த பார்வதி சங்க டஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங் களில் கூறப்பட்டு ள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்ற தும் இந்த விரதம் இருந்துதான்.
பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும்.
விநாயகர் உலகை வலம் வந்தபோது, தன து அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, ‘நீ தேய்ந்து மறையக் கடவது’ என்று சபித்தார்.
பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயக ரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, பால சந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித் து சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார்.
அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி. ஆகவே, சதுர்த் தி திதி விநாயகருக்கு உகந்ததாயிற்று.
சங்கடம் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஹர என்றால் நீக்குதல். சங்கடத்தை நீக்கும் நன்னாளே சங்கடஹர சதுர்த்தி.
நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.
கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தி ல் நிலவைப் பார்த்ததால், அபவாதம் கிடை க்கப் பெற்றார். இதையடுத்து, தேய்பிறை சதுர்த்தி தினத்தில் கிருஷ்ணர் விநாயகரை வழிபட்டார்.
விநாயகர் அவருடைய அபவாதம் நீக்கி, அனுக் கிரகம் செய்தார். புருகண்டி முனிவர் என்றழை க்கப்பட்ட அவருக்கு விநாயகரின் தரிசன பாக்கியம் கிடைக்கி றது. அவர் சொற்படி, முனிவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து, அதன் பலனை விநாயகப் பெருமானுக்கே அர்ப்பணம் செய்கிறார்.
அதனால், பல காலமாக, நரகத்திலிருந்த தன் முன்னோர்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்று தந்தார். ஒவ்வொரு பூஜையின் முடிவி லும் அந்தப் பூஜைப் பலனை இறைவனுக்குச் சமர்ப்பிப்பதே சிறந்தது.
இதன் மூலம் சித்த சுத்தி ஏற்படுகிறது. ‘நான் பூஜை செய்கிறேன்‘ என்ற அகங்கா ரம் அகன் று, ‘அவனருளால் அவன் தாள் பணிகிறோம்‘ என்ற எண்ணம் தோன்றுகிறது.
நாம் செய்த புண்ணியச் செயல்களை இறைவ னுக்கு அர்ப்பணம் செய்தால் அவை பன்மடங் காக, நமக்குத் திரும்பக் கிடைக்கிறது.
புருகண்டி முனிவரின் மகிமை அறிந்து அவரைத் தரிசனம் செய்ய, தேவேந்திரன் வருகிறார். அவர், தரிசித்து முடித்துக் கிளம்பும் போது, விதி வசத்தால்,அவர் விமானம் மண்ணில் புதையுண்டு போக, முனிவர் தமது சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனை அவருக்கு க் கொடுத்து, விமானத்தை மீட்க வழி செய்கிறார்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்த வர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்கா வது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கட ங்கள் விலகி விநாயகரின் அருளா ல் நன்மை கள் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் ஆகும்.
சங்கட ஹர சதுர்த்தியன்று காலையில் காலை க்கடன்கள் முடித்து நீராடி உபவாச ம் இருந்து விநாயகர் சுலோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செ ய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகு ம் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரத த்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்னர் சிற்றுண்டி அருந்தலாம். இவ்வா று முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்க ள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் இருந்து மாலை யில் விநாயகர் ஆலயங்க ளுக்கு சென்று வழி பாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.
🚩"குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
🚩"முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment