நவராத்திரி
மூன்றாம் நாளான இன்று
உலகப் புகழ்பெற்ற
உமையம்மை பாதிரி மரத்தினடியில் தவமிருந்த அரூபமாக ஈசனை வழிபட்ட இடமாகவும், பஞ்சபுலியூர் தலங்களில் ஒன்றானதும், வியாக்ரபாதர் என்ற
புலிக்கால் முனிவர் தவமிருந்து பேறுபெற்ற தலமானதும்,
அப்பர் சுவாமிகள் கரையேறிய இடமான கெடிலம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள
*கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
#திருப்பாதிரிப்புலியூர்
#பாடலேஸ்வரர் (தோன்றாத்துணைநாதன்) திருக்கோயிலில் உள்ள
#பெரியநாயகிஅம்மன் என்ற
#அருந்தவநாயகியை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻
திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.
*மூலவர்:பாடலீசுவரர் (பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன்,கறையேற்றும்பிரான்), பாடலேஸ்வரர்
*அம்மன்:பெரியநாயகி ( பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரஹந்நாயகி)
*தல விருட்சம்:பாதிரிமரம்
*தீர்த்தம்:சிவகரை, பிரம்மதீர்த்தம், (கடல்)சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு
*புராண பெயர்:கடைஞாழல், கூடலூர் புதுநகரம்
*ஊர்:திருப்பாதிரிபுலியூர்
*மாவட்டம்:கடலூர்
*மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள் :
அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர்
தேவாரப்பதிகம் :
முன்னநின்ற முடக்கான் முயற்கு அருள் செய்துநீள் புன்னைநின்று கமழ் பாதிரிப் புலியூருளான் தன்னைநின்று வணங்கும் தனைத்தவ மில்லிகள் மின்னைநின்ற பணி யாக்கைப் பெறுவார்களே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 18வது தலம்.
இது பல்லவ, சோழ காலங்களில் கட்டப்பட்டுள்ளது.
வழிபட்டோர்:
இத்திருகோவில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், திருநாவுக்கரசர் போன்றவர்கள் வழிபட்ட திருத்தலம் என்று கூறப்படுகின்றது. புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்றதாக நம்பப்படுகின்றது. இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
தல வரலாறு:
உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே.ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின.இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள்.அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார்.அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக(உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம்.இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.
தல சிறப்பு:
மகேந்திரவர்ம மன்னன் திருநாவுக்கரசரை கல்லில் கட்டிக் கடலில் போட்ட போது கல் தெப்பமாக மாறி திருப்பாதிரிப்புலியூரிலேயே கரை சேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. இதன் காரணத்தால் இவ்விடம்கரையேறவிட்ட குப்பம் எனவும் அழைக்கப்படுகின்றது. "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்" எனும் பதிகத்தை திருநாவுக்கரசர் இன்று பாடினார்.
அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும்.
காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவது இணையானது அதாவது சமனானது எனும் ஒருவித நம்பிக்கை இங்கு காணப்படுகின்றது.
திருவண்ணாமலையில் 08 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 03 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமனாகும்.
தமிழ்நாட்டில் ஆகம விதிப்படி நிறுவப்பட்ட சிறந்த சிற்பக்கலை நுணுக்கங்களை இக்கோயில் கொண்டுள்ளது.
பள்ளியறை சுவாமி கோயிலில் உள்ளது. இறைவி, பள்ளியறைக்கு எழுந்தருளுவது இங்குள்ள தனிச்சிறப்பாகும்.
தொன்னம்பிக்கை :
இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது. அப்பரைக் கல்லிலே கட்டி கடலிலே விட அது மிதந்து இத்தலத்தின் பக்கத்தில் கரைசேர்ந்தது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாதிரி மரத்தின் வடமொழிப்பெயர் பாடலம் என்பதாகும்.
கெடிலம் ஆறு தெற்கே வளைந்து, கிழக்கு நோக்கிச் சென்று கடலில் சேரும் இடத்திற்கு அருகில் இந்தக் கோயில் உள்ளது. அப்பர் இக்கோயிலுக்கு வழிபட வந்த காலத்தில், ஆற்றின் போக்கு முற்றிலும் வேறுபட்டதாக நம்பப்படுகிறது. துறவி தடையின்றி வழிபட, சிவபெருமான் நதியின் போக்கை மாற்றினார்.
இத்தலத்தின் பெயர் பாதிரி மற்றும் புலியூர் என இரண்டு பகுதிகள் உள்ளன. பத்திரி என்பது பத்திரி மரத்தைக் குறிக்கிறது, இது இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சமாகவும் உள்ளது (பழங்கால மரம் – ஆதி பத்திரி என்று அழைக்கப்படுகிறது – இன்றும் கோயிலின் பிரகாரத்தில் காணப்படுகிறது). வியாக்ரபாதர் இங்கு பதஞ்சலியுடன் சேர்ந்து வழிபட்டதால் இந்தப் பெயரின் புலியூர் பகுதி வந்தது. அவர்கள் ஒன்றாகச் சென்று வழிபட்ட ஒன்பது தலங்களும் கூட்டாக நவ-புலியூர் என்று அழைக்கப்படுகின்றன; அவை பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), திருப்பாதிரிப்புலியூர் (இக்கோயில்), சிறுபுலியூர், எருகத்தாம்புலியூர், பெரும்புலியூர், ஓமாம்புலியூர், அத்திப்புலியூர், தப்ளாம்புலியூர், கானத்தாம்புலியூர். பிற்காலத்தில் வியாக்ரபாதர் இங்கு முக்தி அடைந்தார் என்று நம்பப்படுகிறது.
வியாக்ரபாத முனிவரின் மகன் உபமன்யு தேவியை வழிபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது கால் மூர்த்தியின் மீது மோதியது. இருந்தபோதிலும், இங்குள்ள அம்மனை வழிபட்டாலே முக்தி கிடைக்கும் என்று அவர் சபிக்கப்பட்டார். ஒரு நாள், ஆதிராஜன் என்ற மன்னன் வேட்டையாடச் சென்று, பாதுகாப்புக்காக இந்த இடத்திற்குள் நுழைந்த முயலை விரட்டினான். தேவியின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, அது இங்குள்ள அம்மனிடம் பிரார்த்தனை செய்தது, மேலும் உபமன்யு தனது அசல் வடிவத்தை மீண்டும் பெற்றார்.
அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோயிலில் முருகன் மீது பாடியுள்ளார்.
பெருங்கோயில், காரக்கோயில், ஞானர்கோயில், குடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், அழகோயில், மாடக்கோயில், பூங்கோயில் என 9 வகையான கட்டமைப்புக் கோயில் கட்டுமானங்களை இலக்கிய ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
இன்று நாம் காணும் கட்டிடக் கோயில் பல்லவர் காலத்திலிருந்தது, அதன் பிறகு சோழர்களால் புதுப்பிக்கப்பட்டது. கோவில் வகைகளில், இந்த கோவில் ஞானசர் கோயில் வகையின் கீழ் வருகிறது. ஞாழர் என்பது கொண்டை, கொங்கு, தேக்கு மற்றும் பத்திரி போன்ற குறிப்பிட்ட வகை மரங்களைக் கொண்ட மரங்களைக் குறிக்கிறது. ஞாஜர் கோயில்கள் என்பது தலைமை தெய்வம் அல்லது கோயிலே இந்த வகையான மரங்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் உள்ள அப்பரின் பதிகம் ஞாழர் கோயில் என்றும் குறிப்பிடுகிறது, அவர் காலத்தில் இந்தக் கோயில் மரத்தால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.
கோவிலில் சில பிரமாதமான கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் உள் சுவர்களில் அடிப்படை புதைப்பு படங்கள் உள்ளன. சுவாரஸ்யமாக, இங்கு விநாயகர் கையில் ஆயுதங்கள் ஏதுமின்றி காட்சியளிக்கிறார் – அதற்கு பதிலாக, அவர் பாதிரி மலர் மாலையுடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள சிவனை 3 முறை சிதம்பரத்திலும், 8 முறை திருவண்ணாமலையிலும், 16 முறை காசியிலும் வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகம்.
*தலபெருமை :
*கரையேறிய கதை :
திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே' எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயம் உற்று அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள்.
அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்' என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.
*பள்ளியறை:
இறைவி அரூபமாக (உருவமில்லாமல்)இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு.
அண்ணல் ஆயிரங்கலைகளோடு உறையும் இடம் ஆதலால் அவனைப் பூசித்துத் தவமியற்றி மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.
ஐங்கரன் கரங்களில் ஆயிதமேதுமின்றி பாதிரி மலர்க் கொத்துக்கள் உள்ளது வேறு எங்கும் காணமுடியாது.
*சிவகரை தீர்த்த சிறப்பு :
சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்தது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருப்பது விசேசம்.
மத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிபட்டபோது பாதிரி மரங்களின் மேலேறத்தகுதியாக இருக்கத் தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம் இதுவே
திருநாவுக்கரசை முதன்முதலில் “அப்பர்’ என்று ஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான்.
அருணகிரிநாதர் முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார்.
அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம்.
புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம்.இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.
இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்
தலவிநாயகர் : வலம்புரி விநாயகர். மேற்கு மதில் விநாயகரது மேல் திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர்க் கொத்துகளே காணப்பெறும்.
அம்பிகை இறைவனைப் பூசித்தபோது உதவி செய்த திருக்கோலம். அதனால் அவர் கன்னி விநாயகர் எனப் பெயர் பெறுகிறார்.
பொது தகவல்:
சப்தமாதாக்கள் சன்னதி இங்கு கோயிலை ஒட்டியே இருக்கும்.
சமயக்குரவர்கள் நால்வருள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே இவ்வூர் தோன்றாத் துணைநாதரும் அவர் கோயில் கொண்டருளிய திருக்கோயிலும் மிகவும் சிறப்புடையதாக விளங்கி இருக்கிறது.
சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன.
இத்தலத்தில், திருக் கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் உள்ளது.
சோழர் காலக் கல்வெட்டுகள் 19ம், மற்றது இரண்டும் படி எடுக்கப்பட்டுள்ளன.
பிரார்த்தனை:
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.
மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
இத்தலத்தில் வேண்டிக்கொள்ளும் எல்லாவிதமான பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.
விரதமிருந்து சிவகரைத்தீர்த்தத்தில் குளித்தால் நினைத்தது நிறைவேறுகிறது. மேலும் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள்.
நேர்த்திக்கடன் :
சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கள் கிழமைகளிலும் சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. தங்க கவசம் சாத்த 500 ரூபாய் செலுத்தி நேர்த்திகடன் செய்யலாம். தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். அம்மாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்படுகிறது.
திருவிழா:
வைகாசி விசாகம் -10 நாட்கள் – வெள்ளி ரிஷப வாகனம், தங்க கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு – 5 ஆம்நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி (தேர் அகலமாக இருப்பதால் யாரும் தெருவில் நடந்து செல்ல முடியாது. அந்த அளவு தெருவை தேர் அடைத்து செல்லுமாம்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் மிகச் சிறப்பான திருவிழா மகா சிவராத்திரி – மாசி மாதம் ஆடி பூரம், நவராத்திரி, திருவாதிரை உற்சவம், தை அமாவாசை, மாசி மகம் – 2 க்கும் கடல் தீர்த்தவாரி நடக்கும். தேவனாம்பட்டினம் என்ற ஊருக்கு சுவாமி செல்லும். பவுர்ணமி பஞ்சபிரகார வலம் வருதல் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோச காலங்களில் கோயிலில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். அப்பர் சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும்.
அமைவிடம் :
இது தற்பொழுது, கடலூர் எனப்படுகிறது. கோவில், திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திற்கு அருகே உள்ளது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிருந்தும் கடலூருக்குப் பஸ் வசதி உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.