Tuesday, September 30, 2025

ஏனாதி நாயனார் முக்தித் திருநாள்*, *உத்திராடம்**புரட்டாசி 15*

🔴    *ஏனாதி நாயனார்  முக்தித் திருநாள்*, *உத்திராடம்*
*புரட்டாசி  15*
*அக்டோபர்  1* 
              
பகைவன் என்று தெரிந்தும் உயிரை வாங்க வந்தவனின் *மேனியில் இருந்த சிவச் சின்னங்களை  மதித்துப்   பகைவனின்  விருப்பத்தை நிறைவேற்றியவர்கள்* ஏனாதி நாயனார் மெய்ப்பொருள் நாயனார்.      

     சிவச் சின்னங்களை சிவமாகவே கண்டு போற்றித் தொண்டு  செய்தவர்கள்  ஏனாதி நாயனார்,   மெய்ப் பொருள் நாயனார், புகழ்ச் சோழர் , சேரமான் பெருமாள், நரசிங்க முனை யரையர்,  கலிக் கம்பர்  மற்றும் பலர்.         
       
🕉️ *வேடம் கை தொழ  வீடு  எளிதாமே*  (சம்பந்தர்)
        
☸️    *மலிந்தவர் வேடமும்  ஆலயம் தானும்  அரன் எனத் தொழுமே* (சிவஞான போதம்)    
       
⚜️  *சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்* (திருவாசகம்) 

என விபூதி ருத்திராட்சம் சடை முடி ஆகியவற்றைக்  கண்டு *சிவ சிவ* என்று  போற்றி அவற்றின் புனிதம் காத்து உயிரையும் விட்டவர்கள்  நாயன்மார்.                                

⚜️ *ஒன்று அவன் தானே*                                        

🕉️   *சைவப் பெருமைத் தனி நாயகன்*                                          

⚜️        *அம்மையாய் நின்ற பேர் நந்தி தானே*  (திருமூலர்)      

⚜️ *யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான்* (திருவாசகம்)

என எல்லாம் கடந்த மெய்க் கடவுளை வழிபடும்  *சைவத் திரு நெறியில் சுவாமி அம்மன் என்றெல்லாம்  தனித் தனியே  இரண்டு தெய்வம்  இல்லை.*

சிவம் *ஒன்றே* *அப்பனாய்* *அம்மையாய்* உள்ளது.  

தாயுமான *சிவமே* *இறைவி* , சிவமே *இறைவன்* . 

ஆதலால்    அத்தெய்வம் இத் தெய்வம் என்று *இரண்டு பேச்சு பேசாமல்  சிவச் சின்னம்  கண்டு சிவனடியாரான பெருமைக்கு  ஆனந்தம் அடைந்து  தந்தை தாயாய் உள்ள சிவ பரம்பொருளின் மகிமை மட்டுமே  பேசி  வஞ்சனை இல்லாமல் தொழுது வழிபடும்  மெய்யடியார்களின் இயல்பினைத்* திருக் கன்றாப்பூர் பதிகம் முழுவதும் திருநாவுக்கரசர் விளக்குகிறார்.      
        
🔯     எவரேனும் தாமாக விலாடத்து இட்ட   *திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி* உவராதே      
        அவர் அவரைக் கண்ட போது *உகந்து அடிமைத் திறம் நினைந்து*  அங்கு *உவந்து* நோக்கி               
        *இவர் தேவர் அவர் தேவர் என்று இரண்டாட்டாது ஒழிந்து ஈசன் திறமே  பேணிக்*                              .             
        *கவராதே தொழும் அடியார்*  நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடு தறியைக் காணலாமே.        (அப்பர்  )                        

   ⚜️      ஆன *நீற்றுக் கவசம்* அடையப் புகுமின்கள்  (திருவாசகம்) 
       
  கங்காளன் பூசும் *கவசத் திருநீறு* (திருமந்திரம்)  
        
✡️    *மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப் பெற்றால்* 
          *வெந்து அறும் நோயும் வினையும்* வெவ்வழல் விறகு இட்டு அன்றே (அப்பர்)  
         
   என   உடல் நோய்,   உயிர்  நோய் ஆகிய  கர்மம் பிறவி  நீக்கி *உடலுக்கும் உயிருக்கும் கவசமாக இருக்கும்  மதுரை ஆலவாய் அழகனின்  விபூதி* மகிமையை  ஒரு திருப் பதிகம் முழுவதும் தெய்வ பாலகர்  போற்றுகிறார்.  
      
   *நீறு இல்லா நெற்றி பாழ்* என்றார் ஒளவையார்.
 
        *கொன்றை  வேந்தனுக்குப்  பூ தரும் கொன்றை மரம் போல் உருத்திராட்ச  நாயகனுக்கு கொட்டை மணி தரும் மரம்* என்று அறியாமல்,
          
   *சிவபெருமான்  நெருப்புக் கண்ணன் சூரியச் சந்திரச் சுடர் விழியன்  மாசு  இல்லா  அருள் விழியன்*  என்று தெரியாமல்,
  
*எல்லை யில்லாத ஆனந்தம்  ஈசன் குணம்*

*இவ்வளவு சிறப்பு மிக்க ஏனாதி நாயனார் முக்திக்கு திருநாள் நமது நெல்லிக்குப்பம் எய்தனூர்  ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும்*🙏🙏🙏🙏

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Monday, September 29, 2025

ஆயுத பூஜை என்பது நவமி திதி



ஆயுத பூஜை..
மற்றும்செய்யும்முறைகள்....

எப்போதும் ஆயுத பூஜை என்பது நவமி திதி நாளில் தான் வரும்....

 நண்பகல் வரையில் தான் உள்ளது,,,அதை கணக்கீடு செய்தே கீழே நேரம் தரப்பட்டுள்ளது.......
பஞ்சாங்கம்அடிப்படையில்..

மற்றபடி ஞாயிறு மாலை தான் எங்களால் செய்ய முடியும் என்பவர்கள் உங்கள் விருப்ப படி செய்யலாம்......

ஆயுத பூஜை தினங்களில் வீடு, கடை, அலுவலகங்களில் பூஜை செய்து பின்னர் திருஷ்டி சுற்றி பூசணி காயை சாலையில் உடைக்காமல், ஓரமாக உடைத்து போட வேண்டும்.

பூஜிப்பது எப்படி ?

சரஸ்வதி பூஜைக்கு முதல்நாளே (அதாவது இன்று) பூஜை அறையைக் கழுவி சுத்தம் செய்து அலங்கரித்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும்.

அதை பசுஞ்சாணத்தால் மொழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும்.

 அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு. பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.

சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும். பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது அம்பாளின் திருவடிவம் அல்லது திருவுருவப் படத்தை வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். 

அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு மாவிலைகளை மேலே வைத்து, பூஜையைத் துவங்க வேண்டும்.

நவமி திருநாளில் நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப் படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங் களையும் பூஜையில் வைத்து வழிபடுவது விசேஷம் என்று பார்த்தோம் அல்லவா. 

அதன்படி குழந்தைகளின் பாடப்புத்தகங்களையே மேடையாக அடுக்கி8, அதன் மீது அன்னையை எழுந்தருளச் செய்யும் வழக்கமும் உண்டு. சிலர், சரஸ்வதிதேவியின் திருமுன் புத்தகங்களை அடுக்கிவைப்பார்கள்.

இப்படி எல்லாம் தயார் செய்தபிறகு, பூஜை நல்லபடியாக நிறைவேறவும், பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்தருளும் படியும் மனதார மனதார வேண்டிக்கொண்டு, 

உரிய துதிப்பாடல்களைப் பாடி, வணங்கவேண்டும். பின்னர் முறைப்படி தூப, தீப ஆராதனைகளைச் செய்யவேண்டும். நைவேத்தியமாக பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபடவேண்டும்.

நன்றி,,,,

முடியாது என்பது வார்த்தையாக இருக்க வேண்டும்..!
முயற்ச்சியாக இருக்க கூடாது..!
முடியும் என்பது தன்னம்பிக்கையாக இருக்க வேண்டும்..!
தலைக்கனமாக இருக்க கூடாது..!

அனைவருக்கும் எங்கள் உள்ளங்கனிந்த ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகள்...!  

மக்களுக்கு நல்லக் கல்வி கிடைத்து வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று முன்னேற சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கட்டும்.    

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, September 28, 2025

நவராத்திரி எட்டாவது நாள் மகாகௌரி வழிபாடு

நவராத்திரி எட்டாவது நாள் மகாகௌரி வழிபாடு & பூஜைகள் பற்றிய பதிவுகள் :*
நவராத்திரியின் எட்டாவது நாளில் வழிபடப்படுவது மகாகௌரி தேவி.
அவர் தூய்மை, அழகு, அமைதி, ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக கருதப்படுகிறார்.

மகாகௌரி துர்கையின் மிக நயமான, பரிசுத்தமான வடிவமாகவும், குடும்ப வளம், ஆரோக்கியம், நல்ல மணவாழ்க்கை வேண்டிப் பிரார்த்திக்கப்படுபவராகவும் உள்ளார்.

இதுகுறித்து மேலும் விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

*தோற்றம் :* பசுமையான வெண்மையான நிறம் (கொங்குமலர் போல் ஒளிரும்).

*கைகள் :* நான்கு கைகள் — திரிசூலம், டமரு, வரமுத்ரை, அபயமுத்ரை.

*வாகனம் :* வெள்ளை காளை.

*சின்னம் :* வெண்மையான ஆடை, சுத்தம், கருணை.

*பூஜை முறை — படி படியாக*

*1. தூய்மை & நேரம்*

அதிகாலையில் குளித்து, வெண்மை நிற ஆடையுடன் பூஜை செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.

வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் கலசம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.

*2. படிமம்/அலங்காரம்*

மகாகௌரி தேவியின் படம் அல்லது துர்கையின் வெண்மையான அலங்கார வடிவம் வைத்து வழிபடலாம்.

வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு மலர்கள் அணிவித்தல் சிறப்பு.

*3. அபிஷேகம்*

பால், தயிர், தேன், சர்க்கரை நீர் கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

பின்பு சுத்தமான நீர் கொண்டு அலங்கரிக்கவும்.

*4. மலர் & பொருட்கள்*

மல்லிகை, வெள்ளை ரோஜா, செம்பருத்தி போன்ற மலர்கள்.

வெண்மை நிற துணி, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்கரிக்கவும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

இந்த சிவன் கோவிலுக்கு போனா எல்லா தோஷமும் போகும்

*இந்த ஒரு கோயிலுக்குப் போனா போதும், எல்லா தோஷமும் போகும்!*
தோஷங்களை ராகு - கேது தோஷம், பித்ரு தோஷம், அங்காரக தோஷம், பிரம்மஹத்தி தோஷம், மாங்கல்ய தோஷம் என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இப்படி, ஒவ்வொரு தோஷத்திற்கும் சில பரிகாரங்களும், சில ஆலயங்களுக்கும் சென்று இறை வழிபாடுகள் செய்வதன் மூலமாக தோஷ நிவர்த்தி பெற சிறப்பு பிராா்த்தனைகள் செய்வதும் உண்டு.

அந்த வகையில், பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள், திருவிடைமருதூா் சிவன் கோயிலில் அருள்பாலிக்கும் மகாலிங்கேஸ்வரரை வணங்கி தோஷ நிவர்த்தி பெறலாம். திருவிடைமருதூா், கும்பகோனத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் மாா்க்கத்தில் சுமாா் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தென்னாட்டு சிவ தலங்களில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். இங்கு நான்கு பிராகாரங்கள் உள்ளன. முதல் பிராகாரம் வெளிப்பிராகாரமாகும். இது அஸ்வமேத பிராகாரமாகும். ஏவல், பில்லி, சூன்யம், பேய், பைத்தியம் போன்ற உபாதைகள் நீங்க இந்த பிராகாரத்தை வலம் வர வேண்டும். ‘சிவாயநம’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை மெதுவாக உச்சரித்துக்கொண்டே, நிதானமாக இந்த பிராகாரத்தை சுற்றி வர வேண்டும்.

அடுத்து, கொடுமுடி பிராகாரம், பிரணவப் பிராகாரம், உள் பிராகாரம் என்ற மற்ற மூன்று பிராகாரங்களையும் வலம் வர வேண்டும். அப்படிச் செய்யும்போது தோஷங்கள் விலகிட மகாலிங்கேஸ்வரரை மனதில் நினைத்தபடி வலம் வந்து வழிபட்டு, பின்னர் பிருகு சுந்தரகுஜாம்பிகை அம்பாளையும் வழிபட வேண்டும்.

சிவன் அருள் பெற்ற வரகுண பாண்டியன் தோஷம் பெற்றபோது இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெற்றதாக வரலாறு உண்டு. இந்த ஆலயத்தில் விநாயகர், முருகப்பெருமான், நந்தி, சோமாஸ்கந்தர், தட்சிணாமூா்த்தி, ஆடலரசர், சண்டேஸ்வரர், பைரவர், நவகிரகம் என்ற பரிவார தேவதைகள் ஆகிய மூர்த்தங்கள் ஈஸ்வரனின் கருவறையைச் சுற்றி அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பாகும்.

ஆக, அருள்மிகு மகாலிங்கேஸ்வரரை வணங்கி வழிபட்டாலே சகல துன்பங்களும் விலகி விடும் என்பதே அனைவரது நம்பிக்கையாகும். திருவிடைமருதூா் மகாலிங்கேஸ்வரரை அவரது திருத்தலம் சென்று மனதார வேண்டுவோம், தோஷமில்லாமல் சந்தோஷ வாழ்க்கையை வாழ்வோம்!🍀

Saturday, September 27, 2025

சிவாலயத்தில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு....

சிவாலயத்தில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு....
1. எலுமிச்சை,
2. வெல்லம்,
3. அவல்,
4. மாதுளை,
5. நெல்,
6. தேங்காய்,
7. பசும்பால்..

இந்த ஏழு வகை பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
கல்வி கலைகளில் சிறக்க
குழந்தைகள் நன்றாகப் படிக்க, பெருமாள் கோயில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும்.
சரஸ்வதிதேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

தெய்வீக ரகசியங்கள்

1.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.

2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள்
ஒற்றுமையாக,அன்னியோன்யமாக வாழ்வார்கள்.

 3.குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

4.கொடிய கடன் தொல்லைகளுக்கு                 ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

5.ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

6.ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

7.வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

8.சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல்நீங்கும் 21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

9.கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

10.ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும், விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

11.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

12.பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

13.மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

14.கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில், செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

15.வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட, தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

16.சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி, அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

17.இரெட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.

18.செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

19.விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

20.ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

21.பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

22.புத்திர பாக்கியம் இல்லாதோர் 
6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

23.வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

24.பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

25.வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல்,அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

26.தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.

27.எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்...

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வெள்ளூர் திருக்காமேசுவரர் ஒற்றுமை, மாங்கல்ய பலம்



சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை திருக்காமேசுவரர்
தம்பதி ஒற்றுமை,  மாங்கல்ய பலம், திருமணத் தடை நீக்குதல், ஐஸ்வர்ய யோகம் போன்றவை அளிக்கக் கூடிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வெள்ளூரில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை திருக்காமேசுவரர் திருக்கோயில்.

திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முசிறிக்கு அருகில் அமைந்துள்ள இக்கோயில், பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. வேறெங்கும் காணாத வகையில், வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி காட்சியளிப்பது, சிவபெருமானை வழிபட்டுப் போகத்துக்கு சுக்ரன் அதிபதியானது இக்கோயிலில்தான். ராவணனுக்கு உடல் வலிமை கொடுத்து, ஈஸ்வர பட்டத்தைச் சூட்டியது இக்கோயில் இறைவன்தான். மேலும் குபேரன் திருக்காமேசுவரரை வழிபட்டுதான் தனாதிபதியாக மாறினார் என்ற சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு. 

வெள்ளூர் பெயர்க் காரணம்

முசுகுந்தனுக்கு சக்கரவர்த்தி பதவியையும் வாளாசுரனை வெல்லக்கூடிய ஆயுதங்களையும் கொடுத்து, வெற்றியைக் கொடுத்தது இத்திருக்கோயில்தான். அதனால்தான் இவ்வூர் வெள்ளூர் எனப் பெயர் பெற்றது. மேலும் காலபைரவரை வழிபட்டு வாளாசுரனை வென்றதாக வரலாறு. வாளாசுரனை அழிக்க முற்பட்ட முசுகுந்தனுக்கு வெற்றியை அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் இக்கோயிலின் கிழக்கு நுழைவுவாயில் அருகில் தரிசிக்கலாம்.

வெள்ளூர் திருக்காமேசுவரர் திருக்கோயில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது என்று திருக்கோயிலின் கல்வெட்டு கூறுகிறது.

தல வரலாறு

சிவபெருமானைவிட (ஈசன்) தானே உயர்ந்தவன் என்ற செருக்கு கொண்டு, பிரம்மாண்ட யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மாப்பிள்ளையான சிவபெருமானுக்கு யாகத்தில் கலந்துகொள்ள அழைப்பில்லை. ஆனாலும் தனது தந்தை நடத்தும் யாகத்தில் அழைப்பில்லாமல் சென்ற மகள் தாட்சாயினி (பராசக்தி), அங்கு போய் அவமானப்பட்டுத் திரும்பி வந்தாள். கூடவே தந்தைக்கு சாபமும் கொடுத்துவிட்டு வந்தாள்.

கோயிலின் கொடிமரம்
தன் அனுமதியில்லாமல் சென்றதால், அவரை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் சிவபெருமான். தன் தவறை உணர்ந்த பராசக்தி, மீண்டும் சிவபெருமானுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள்.  அப்போது, பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து, என்னை வழிபடு, உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும் என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்வதராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி திருநாமம் பூண்டு பர்வதமலையில் தவம் புரியத் தொடங்கினார். 

பார்வதியைப் பிரிந்த சிவபெருமான் கயிலையில் அசைவற்ற நிலையில் இருந்தார். இதனால் பிரபஞ்சத்தில் ஓரணுவும் அசையவில்லை. இதே நிலை தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடும் என அஞ்சிய பிரம்மாவும், விஷ்ணுவும் தேவர்கள் சூழ சிவபெருமானையும், பார்வதியையும் ஒன்றிணைக்க முயன்றனர். மன்மதனை அழைத்து சிவபெருமான் மீது காமபாணத்தை ஏவுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் சிவபெருமான் மீது பாணம் தொடுக்க மன்மதன் தயங்கினான்.  உடனே தேவர்கள் "நீ ஈசன் மீது காமபாணம் தொடுக்காவிட்டால், உனக்கு நாங்கள் சாபம் அளிப்போம்'' என்று மிரட்டினர். இதனால் பயந்துபோன மன்மதன், ஒரு புன்னைமர நிழலில் ஒளிந்து கொண்டு ஈசன் மீது அம்புவிட்டான்.

அவன் விட்ட அம்பு, வில்லிலிருந்து வெளியேறும் முன்பாகவே, அவனை தன்னுடைய நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்தார் சிவபெருமான்.  அதோடு மன்மதன் விட்ட பாணமும் திசைமாறி, பார்வதியின் மீது பட்டது. பார்வதியின் தவம் கலைந்தது. தன் அவதார நோக்கம் உணரப் பெற்றார் அவர். சிவபெருமானை அடைவதற்கான காமபாணம் தன் மேல் விழுந்ததால், பார்வதி சிவகாமசுந்தரியாகி, ஈசனுடன் கூடினாள். அதனால்தான் இறைவிக்கு சிவகாமசுந்தரி எனப் பெயர் ஏற்பட்டது. இந்த பெயர் கொண்டவரே இத்திருக்கோயில் இறைவியாகத் திகழ்கிறார். இறைவனின் திருநாமமும் அதனாலேயே காமேசுவரர் என்றானது.

மன்மதனுக்கு மீண்டும் உடல் அளித்த தலம் 

மன்மதனின் இழப்பை அவள் மனைவியான ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவரைத்  திரும்ப வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டாள். அதேவேளையில் மன்மதன் இல்லாததால், ஜீவராசிகளிடம் காதல் உணர்வு பெருகவில்லை. உயிர்ப் பெருக்கமும் நிகழவில்லை. எனவே மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து, 

ஈசனை  வணங்கும் கோலத்தில் அமைந்துள்ள மன்மதன், ரதி சிற்பம்
ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார் சிவபெருமான். அதனுடன் மன்மத மதனகளிப்பு மருந்து என்னும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார் சிவபெருமான். அதனாலேயே திருக்காமேசுவரருக்கு வைத்தியநாதர் என்ற திருநாமமும் உண்டு. 

தலப் பெருமை 

திருப்பாற்கடல் கடைந்த நிகழ்வின்போது அமுதம் பெறுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போட்டி வந்தது. அசுரர்களுக்கு அமுதம் போகாமல் இருப்பதற்காக, திருமால் மோகினி வடிவெடுத்து, தேவர்களுக்கு மட்டுமே அமுதத்தை வழங்கினார். அந்தவேளையில் மோகினியைப் பார்த்து சிவபெருமானே மோகித்ததால் ஐயப்பன் அவதரித்தார்.

வள்ளி-தெய்வசேனா சமேதராய் சுப்பிரமணியர்
இந்நிகழ்வை அறிந்த மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி கோபம் கொண்டு, வைகுந்தத்தைவிட்டே வெளியேறினாள். தன் கோபத்துக்கு காரணமான சிவபெருமானிடம் நியாயம் கேட்பதற்காக அவரை அழைத்தாள். ஆனால் ஈசன் அங்கு வராததால், பூலோகத்துக்கு வந்து வில்வாரண்ய சேத்திரம் எனப்படும் வெள்ளூருக்கு வந்து, ஈசனைக் குறித்து தவம் செய்தாள். அப்போதும் இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே தன்னையே ஒரு வில்வமரமாக மாற்றிக் கொண்டு, வில்வ மழையாகப் பொழிந்து சிவபெருமானை பூஜை செய்தாள். அதன் பின்னர் சிவபெருமான் மகாலட்சுமி முன்பு தோன்றி, ஐயப்பனின் அவதார நோக்கத்தை எடுத்துக் கூறி கோபத்தைத் தணித்து சாந்தப்படுத்தினார். மேலும் மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை சேர்த்து வைத்தார். வில்வமரமாகத் தோன்றி தன்னை அர்ச்சித்த காரணத்தால், ஸ்ரீவத்ச முத்திரைப் பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமி தேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கு அதிபதியாக்கினார்.

சிறப்பு வாய்ந்த ஐஸ்வர்ய மகாலட்சுமி

வேறெங்கும் காண இயலாத வகையில், தட்சிண பாகம் என்று கூறப்படும் வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய இடத்தில் வில்வமரத்தையும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும்  இக்கோயிலில் தரிசிக்கலாம்.

  ஐஸ்வர்ய மகாலட்சுமி
அபய, வரதம் கூடிய திருக்கரங்களோடு, மேலிரு கரங்கள் தாமரை மலர்கொண்டு காட்சி தருகிறார் ஐஸ்வர்ய மகாலட்சுமி. இங்கு லட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வமரத்துக்கு முதலில் பூஜை செய்கின்றனர்.

இறைவன் திருக்காமேசுவரர்

இத்திருக்கோயில் இறைவன் திருக்காமேசுவரர் என்றழைக்கப்படுகிறார். கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கும் இக்கோயில் இறைவனுக்கு வில்வாரண்யேசுவரர், ஐஸ்வர்யேசுவரர், லட்சுமிபுரீசுவரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்ற திருநாமங்களும் உண்டு. மன்மதன், ரதி, திருமகள், போகர், முசுகுந்த தேவேந்திரன் வழிபட்ட பெருமைக்குரியவர்.

திருக்காமேசுவரர் கருவறை சன்னதி கோபுரம்
சித்தர்களுக்கே எங்கு சென்றாலும் சித்திக்காத காரியம், திருக்காமேசுவரர் சன்னதியில் சித்தியாகும் என்பதால், மனிதர்கள் நினைக்கும் காரியங்கள் சித்தியாக திருக்காமேசுவரர் சன்னதியில் தவம் செய்வது சிறப்புக்குரியது எனக் கூறப்படுகிறது.

தன் மீது கோபம் கொண்ட மகாலட்சுமியைச் சாந்தப்படுத்தி, மகாவிஷ்ணுவுடன் சேர்த்து வைத்தது, ரதிதேவியின் வேண்டுதலை நிறைவேற்றி மன்தமனுக்கு உடல் வழங்கிய இறைவன் போன்ற பல்வேறு சிறப்புகளை அருள்மிகு  சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை திருக்காமேசுவரர் கொண்டிருக்கிறார். எனவே, கணவன்- மனைவி ஒற்றுமை, மாங்கல்ய பலம், ஐஸ்வர்ய யோகம் கிடைக்க இத்திருக்கோயில் இறைவனைப் பிரார்த்தனை செய்து, பலன் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

போகர்
மன்மதனுக்கு இழந்த உடலை  அளித்தல், மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அளித்தல், முசுகுந்த சக்கரவர்த்திக்கு வாளாசுரனை வெல்லக்கூடிய ஆற்றலை அளித்தல், போகர் உள்ளிட்ட பலகோடி சித்த மகான்களுக்கு அஷ்டமாசித்தி அளித்த திருக்கோயில் என்பதால், இன்றளவும் ஆண்கள் சட்டை, பனியன் போன்ற மேலாடைகளின்றி இறைவன் திருக்காமேசுவரைத் தரிசனம் செய்வது தொன்று தொட்டுத் தொடரும் வழக்கமாக உள்ளது.

திருக்காமேசுவரப் பெருமானின் பார்வை நமது சரீரத்தில் பட வேண்டும். அவ்வாறு படும்போது எவ்வளவு மனக் கஷ்டங்கள், நமது முயற்சிக்கான தடைகள் இருந்தால் அவை அனைத்தும் விலகி, எண்ணங்கள் சரியாகி விரைவில் கைகூடும் என்பது அனுபவபூர்வமான நிகழ்வாகும்.

இறைவி சிவகாமசுந்தரி

தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் அம்மனாக சிவகாமசுந்தரி அம்மன் தெற்கு நோக்கிய எழுந்தருளி, காட்சியளித்து வருகிறார். தன் மீது விழுந்த காமபாணத்தால் சிவபெருமானுடன் கூடியதால், பார்வதி தேவிக்கு சிவகாமசுந்தரி எனப் பெயர் வந்தது இக்கோயிலில்தான்.

சிவகாமசுந்தரி அம்மன் கருவறை சன்னதி விமானம்
தம்பதி ஒற்றுமை, மாங்கல்ய பலம் அளிக்கும் பரிகாரத் தலத்தின் இறைவியாக சிவகாமசுந்தரி திகழ்வதால், பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை இத்திருக்கோயில் இறைவி நிறைவேற்றித் தருவதாகக் கருதி, அவரை மனமுருக வழிபட்டுச் செல்கின்றனர்.

தவம் செய்தால் சித்தி கிடைக்கும் பூமி 

போகர் ஏழாயிரம் என்ற நூலில், சித்தர்கள் அனைவரும்  எங்கு சென்று தவம் செய்தாலும் சித்திக்காத காரியம், திருக்காமேசுவரர் சன்னதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தியாகும் என்பதால் போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோயிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், வெள்ளூர் திருக்காமேசுவரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்த பின்னரே, பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இன்றும் திருக்காமேசுவரர் திருக்கோயிலிலின் மகா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தைத் தரிசனம் செய்யலாம். திருக்கோயிலின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் கம்பீரமாக போகர் காட்சி தருகிறார். அரூபமாக இன்னும் எண்ணற்ற பல சித்தர்கள் தவம் செய்வதாக அகஸ்தியர் நாடியிலும், வசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்புக்குரியது.

மன்மதன் திருக்காமேசுவரப் பெருமானிடம் காமபாணத்தைப் பெற்று, அதை உயிரினங்கள் மேல் எவ்வாறு செயல்படுத்துவது என்ற விகிதாசாரம் தெரியாமல் திகைத்தார். உடனடியாக பைரவரை தியானித்து, அவரது பாதங்களில் காமபாணத்தினால் மலர்மாரி பொழிந்து வழிபட்டார். பைரவர் மகிழ்ந்து ஆவுடையார் மேல் நின்று ஞான பைரவராகக் காட்சி தந்து, காமபாணத்தை எந்தெந்த உயிர்களுக்கு எந்தெந்த  விகிதத்தில் செயல்படுத்த வேண்டுமென்ற ஞானத்தை மன்மதனுக்கு கொடுத்தார்.

ஸ்ரீ ஞான பைரவர், ஸ்ரீ கால பைரவர்
அதனால் இத்திருக்கோயிலில் காணப்படும் பைரவர் ஞானபைரவாகக் காட்சியளித்து வருகிறார். எனவே கல்வியில் சிறந்து விளங்க நினைக்கும் மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை ராகுகால நேரத்தில்  செவ்வரளி மாலை அணிவித்து ஞானபைரவரை வழிபட்டால் ஞான அபிவிருத்தி கிட்டும்.

கஜலட்சுமி

பரிகார சிறப்பு 

சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட தனது கணவர் மன்மதனுக்கான மனைவி ரதிதேவி முறையிட்டு, மீண்டும் அவனது உடலைப் பெற்ற திருக்கோயில் என்பதால் இத்திருக்கோயில் தம்பதியினர் ஒற்றுமைக்கான தலமாகத் திகழ்கிறது. மேலும் பெண்களின் மாங்கல்ய பலம் அளித்தல், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்தல், ஐஸ்வர்ய யோகம் கிடைத்தல் போன்ற பல்வேறு பரிகாரங்களுக்குரிய சிறப்புத் திருக்கோயிலாக வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில் விளங்குகிறது.

சண்டிகேசுவரர்
நேர்த்திக் கடன்

போகத்துக்கு அதிபதியான சுக்கிரன், ஜாதகத்தில் சரியில்லை என்றால், எவ்வளவு பெரிய கோடீசுவரராக இருந்தாலும் காரியத் தடை, மனக் குழப்பம், பொருளாதார வீழ்ச்சி, திருமணத் தடை, குழந்தையின்மை, வியாபார வீழ்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துவார். எனவே சுக்கிர தோஷம் நீங்க, சுக்கிரனுக்கு அதிபதியான மகாலட்சுமியை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையான விடியற்காலை 6 மணி முதல் 7 மணிக்குள் 16 வகையான அபிஷேகம் செய்து 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, வில்வமரத்தோடு சேர்த்து 16 முறை வலம் வந்தால் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் ஐஸ்வர்யம் பெருக வழிபடலாம். குழந்தை பாக்கியத்துக்கும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும், அமாவாசையன்று இறைவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து, இறைவன் திருக்காமேசுவரர், இறைவி சிவகாமசுந்தரி ஆகிய இருவரையும் வலம் வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம்.

விஷ்ணு துர்க்கை
தோஷம் நீங்க

தங்கம், வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகளைச் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அத்தோஷங்களை அகற்றுவதற்கு இத்திருக்கோயில் வந்து வழிபடுவது சிறப்பு. 

பிற சன்னதிகள் 

இக்கோயிலுக்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என இரு நுழைவுவாயில்கள் உள்ளன. கிழக்கு வாசல் வழியாக வந்தால் பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் பிரகாரம் திருமாளிகைப் பத்தியுடன் உள்ளது. சிவாலயத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளன. கோயிலின்  பிரகாரத்தின் தென் மேற்கில் போஷகணபதி சன்னதி, மேற்கில் வள்ளி-தேவசேனா உடனுறை சண்முகர் சன்னதி, சண்டிகேசுவரர், நவக்கிரக நாயகர்களின் சன்னதி போன்றவை அமைந்துள்ளன. தலபுராணத்தை எடுத்துரைக்கும் முகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும்  மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.

தென் மேற்கிலுள்ள போஷ கணபதி சன்னதி
தல விருட்சம் 

வெள்ளூர் திருக்காமேசுவரர் திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. அந்த வில்வமரத்தின் நிழலில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி எழுந்தருளியிருப்பது அதிலும் சிறப்பானதாகும். மேலும் இக்கோயில் தீர்த்தத்துக்கு ஐஸ்வர்ய தீர்த்தம் என்றும் பெயர்.

எப்படிச் செல்வது?

திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முசிறிக்கு அருகில் உள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்தும், டெல்டா மாவட்டங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1 டோல்கேட், நொச்சியம், திருவாசி, துடையூர், சிறுகாம்பூர், கிளியநல்லூர், வாய்த்தலை, குணசீலம், ஆமூர், அய்யம்பாளையம்  வழியாக வெள்ளூர் கோயிலை வந்தடையலாம்.

சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற வட மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் பெரம்பலூர், சிறுகனூர், சமயபுரம், நெ.1. டோல்கேட், நொச்சியம், திருவாசி, துடையூர் வழியாக மேற்கண்ட வழித்தடத்திலேயே வந்து கோயிலைச் சென்றடையலாம்.

கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் குளித்தலை வந்து அங்கிருந்து முசிறி வழியாகவும், நாமக்கல், சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் வருபவர்கள் முசிறி வழியாகவும் வந்து கோயிலுக்கு வந்தடையலாம்.

நடை திறப்பு

வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி,பஞ்சுப்பேட்டை, பெரிய காஞ்சிபுரம்-631502 காஞ்சிபுரம் மாவட்டம்.

அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், 
ஓணகாந்தன்தளி,
பஞ்சுப்பேட்டை, 
பெரிய காஞ்சிபுரம்-631502 காஞ்சிபுரம் மாவட்டம். 
*இறைவர்:   ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர்   

*இறைவியார்: காமாட்சி அம்மன்.  

*தலவிருட்சம்: வன்னி, புளியமரம்.

*தீர்த்தம் : விட்டுணு தீர்த்தம்  

*வழிபட்டோர்:ஓணன், காந்தன் (இவர்கள் வாணாசுரனின்     சேனாதிபதிகளாவர்), சலந்தரன், சுந்தரர் , சேக்கிழார் முதலியோர். 

*காஞ்சிபுரத்திலுள்ள பாடல் பெற்ற திருக்கோயில்கள் ஐந்தினுள் இத்திருக்கோயிலும் ஒன்று.                 *இங்கு சுந்தரர் பதிகம் பாடியுள்ளார். *இத்திருக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் சுந்தரரின் திருப்பாதம் உள்ளது. 
*இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, 'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' என்று தொடங்கும் பதிகம் பாடி பொன் பெற்றார் என்பது வரலாறு.
 மேற்படி பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும்போது, இறைவன் பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும்; அதனை அறிந்த சுந்தரர் அங்குச் சென்று பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார். 

*பொன் பொருள் வேண்டுபவர்கள், சுந்தரர் இத்தலத்தில் பாடிய பாடலை பாடினால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.     

*இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.               

*வாணாசுரனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் இருவர் வழிபட்ட தலம்; ஆதலின் இது ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது.                    

*ஒரு காலத்தில் அசுர வேந்தனான வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர். இவர்களில் ஓணன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தன் ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்றான்.              

இதே போல் காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப்பெற்றான். 

இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். 

 *ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில் வளாகத்தில் மூன்று சிவலிங்கத் திருமேனிகளை மூலவராகக் கொண்ட மூன்று சன்னதிகள் உள்ளன. அவை ஒரே நுழைவாயிலைக் கொண்டு அமைந்துள்ளன.     

*ஓணன், காந்தன்  இருவரும் இத்தலத்தில் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் அடுத்தடுத்து தனிச் சன்னதிகளாக உள்ளன. 
சலந்தரன் வழிபட்ட சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத்திருமேனி தனியே உள்ளது.  இக்கோயிலுக்கு வெளியேயிருந்த, சலந்தரன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனியை எடுத்துவந்து இங்கு தனிக்கோயிலாக ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பிற்கால பிரதிஷ்டையாகும். 

*காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனே பிரதான அம்பாளாக வீற்றிருப்பதால் இத்தலத்தில் உள்ள சிவாலயங்களில் அம்பாளுக்கு என்று தனி சந்நிதி இல்லை. 

*இக்கோயில் காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து சாலையில் (கோயில் உள்ள பகுதி பஞ்சுப்பேட்டை எனப்படும்) உள்ளது.
தொடர்பு :98944 43108 
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது.                

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, September 26, 2025

சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?



தென்னாடுடைய சிவனே போற்றி...
எந்நாட்டவா்க்கும் இறைவா போற்றி...
உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?

இறைவன்.

இறைவனை எப்பெயர் கொண்டு சிறப்பாக அழைக்கின்றோம்?

சிவபெருமான்.

சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?

சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.

சிவபெருமான் எப்படிப் பட்டவர்?

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; யார்க்கும் ஆட்படாதவர்.

சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?

சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல.

 ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர். அதனால் இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.

சிவபெருமானின் குணங்கள் யாவை?

சிவபெருமானின் குண விஷேசங்கள் எட்டுக்குணமென்று போற்றப்படும்.

 அவை

முழுதும் தன்வயத்தனாதல் (பிறருக்கு ஆட்படாதவர்)

இயற்கை அறிவினனாதல் (உள்ளதை உள்ளவாறே அறிதல்)

முற்றறிவு உடைமை (எல்லாவற்றையும் அறியும் திறம்)

தூய உடம்பினன்

இயல்பாகவே மலமற்றவன்

வரம்பில்லாத ஆற்றல் உடையவன்

வரம்பில்லாத அருள் உடையவன்

வரம்பில்லாத இன்பம் உடையவன்

சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.

படைத்தலாவது யாது?

ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.

காத்தலாவது யாது?

தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.

அழித்தலாவது யாது?

தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக்குதல்.
மறைத்தலாவது யாது?
ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்தல்.

அருளலாவது யாது?

ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச்
 சிவதத்துவத்தை விளக்குதல்.

தனு கரண புவன போகம் என்றது என்ன?

தனு - உடம்பு, கரணம் - மன முதலிய கருவி, புவனம் - உடம்புக்கு ஆதாரமாகிய உலகம், போகம் - அனுபவிக்கப்படும் பொருள்.

சிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்கிறார்?

தமது சத்தியைக் கொண்டு செய்கிறார்.

சத்தி என்னும் சொல்லுக்குப் பொருள் யாது?

வல்லமை

சிவபெருமானின் சத்தி யாவர்?

உமாதேவியார்
சிவபெருமான் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உமையோடு

 எழுந்தருளியுள்ள முதன்மைஇடம் யாது?

திருக்கயிலை மலை.

சிவபெருமான் உயிர்களுக்கு எவ்வெவ்விடங்களில் நின்று அருள் புரிகின்றார்?

சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்தும், சைவாசாரியாரிடத்திலும், சிவனடியாரிடத்திலும் நின்று அருள் செய்வார்.

சிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சமயத்திற்குப் பெயர் யாது?

சைவம்

சைவத்தில் தலையாய நூல்கள் யாவை?

திருமறைகளும், ஆகமங்களும், திருமுறைகளும்.

இவைகளில் விதிக்கப்பட்டன யாவை?

சிவ புண்ணியமும் சீவ (உயிர்) புண்ணியமுமாம்.

சிவ புண்ணியம் யாது?

சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாம்.

உயிர்ப் புண்ணியம் (சீவ நன்மை) யாது?

1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றன.

புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

சிவ புண்ணியங்களைச் செய்தவர் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர்.

பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல், இன்னும் பல.

பாவங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, September 24, 2025

திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் (தோன்றாத்துணைநாதன்) பெரியநாயகிஅம்மன்

நவராத்திரி 
மூன்றாம் நாளான இன்று 
உலகப் புகழ்பெற்ற 
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் ஒன்றானதும், 
உமையம்மை பாதிரி மரத்தினடியில் தவமிருந்த அரூபமாக ஈசனை வழிபட்ட இடமாகவும், பஞ்சபுலியூர் தலங்களில் ஒன்றானதும், வியாக்ரபாதர் என்ற 
புலிக்கால் முனிவர் தவமிருந்து பேறுபெற்ற  தலமானதும், 
அப்பர் சுவாமிகள் கரையேறிய இடமான கெடிலம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள 
*கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
#திருப்பாதிரிப்புலியூர்
#பாடலேஸ்வரர் (தோன்றாத்துணைநாதன்) திருக்கோயிலில் உள்ள 
#பெரியநாயகிஅம்மன் என்ற
#அருந்தவநாயகியை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். 

*மூலவர்:பாடலீசுவரர் (பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன்,கறையேற்றும்பிரான்), பாடலேஸ்வரர்
*அம்மன்:பெரியநாயகி ( பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரஹந்நாயகி)
*தல விருட்சம்:பாதிரிமரம்
*தீர்த்தம்:சிவகரை, பிரம்மதீர்த்தம், (கடல்)சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு
*புராண பெயர்:கடைஞாழல், கூடலூர் புதுநகரம்
*ஊர்:திருப்பாதிரிபுலியூர்
*மாவட்டம்:கடலூர்
*மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள் :

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் 

தேவாரப்பதிகம் :

முன்னநின்ற முடக்கான் முயற்கு அருள் செய்துநீள் புன்னைநின்று கமழ் பாதிரிப் புலியூருளான் தன்னைநின்று வணங்கும் தனைத்தவ மில்லிகள் மின்னைநின்ற பணி யாக்கைப் பெறுவார்களே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 18வது தலம்.

இது பல்லவ, சோழ காலங்களில் கட்டப்பட்டுள்ளது.

வழிபட்டோர்:

இத்திருகோவில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், திருநாவுக்கரசர் போன்றவர்கள் வழிபட்ட திருத்தலம் என்று கூறப்படுகின்றது. புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்றதாக நம்பப்படுகின்றது. இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

தல வரலாறு:

உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் திருவிளையாடல் நிகழ்ந்த திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே.ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பிராட்டி தன் திருக்கரங்களால் புதைத்தாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின.இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள்.அதற்கு இறைவன் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார்.அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக(உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம்.இறைவன் சித்தர் வடிவம் பூண்டு மக்களின் துன்பங்களை நீக்கிய தலம். 

தல சிறப்பு:

மகேந்திரவர்ம மன்னன் திருநாவுக்கரசரை கல்லில் கட்டிக் கடலில் போட்ட போது கல் தெப்பமாக மாறி திருப்பாதிரிப்புலியூரிலேயே கரை சேர்ந்ததாகக் கூறப்படுகின்றது. இதன் காரணத்தால் இவ்விடம்கரையேறவிட்ட குப்பம் எனவும் அழைக்கப்படுகின்றது. "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்" எனும் பதிகத்தை திருநாவுக்கரசர் இன்று பாடினார்.
அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும்.
காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவது இணையானது அதாவது சமனானது எனும் ஒருவித நம்பிக்கை இங்கு காணப்படுகின்றது.
திருவண்ணாமலையில் 08 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 03 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமனாகும்.
தமிழ்நாட்டில் ஆகம விதிப்படி நிறுவப்பட்ட சிறந்த சிற்பக்கலை நுணுக்கங்களை இக்கோயில் கொண்டுள்ளது.
பள்ளியறை சுவாமி கோயிலில் உள்ளது. இறைவி, பள்ளியறைக்கு எழுந்தருளுவது இங்குள்ள தனிச்சிறப்பாகும். 

தொன்னம்பிக்கை :

இங்கு சிவன் தாந்தோன்றியாய் சுயம்பு மூர்த்தியாக தோன்றுகிறார் என்று நம்பப்படுகின்றது. அப்பரைக் கல்லிலே கட்டி கடலிலே விட அது மிதந்து இத்தலத்தின் பக்கத்தில் கரைசேர்ந்தது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாதிரி மரத்தின் வடமொழிப்பெயர் பாடலம் என்பதாகும்.

கெடிலம் ஆறு தெற்கே வளைந்து, கிழக்கு நோக்கிச் சென்று கடலில் சேரும் இடத்திற்கு அருகில் இந்தக் கோயில் உள்ளது. அப்பர் இக்கோயிலுக்கு வழிபட வந்த காலத்தில், ஆற்றின் போக்கு முற்றிலும் வேறுபட்டதாக நம்பப்படுகிறது. துறவி தடையின்றி வழிபட, சிவபெருமான் நதியின் போக்கை மாற்றினார்.

இத்தலத்தின் பெயர் பாதிரி மற்றும் புலியூர் என இரண்டு பகுதிகள் உள்ளன. பத்திரி என்பது பத்திரி மரத்தைக் குறிக்கிறது, இது இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சமாகவும் உள்ளது (பழங்கால மரம் – ஆதி பத்திரி என்று அழைக்கப்படுகிறது – இன்றும் கோயிலின் பிரகாரத்தில் காணப்படுகிறது). வியாக்ரபாதர் இங்கு பதஞ்சலியுடன் சேர்ந்து வழிபட்டதால் இந்தப் பெயரின் புலியூர் பகுதி வந்தது. அவர்கள் ஒன்றாகச் சென்று வழிபட்ட ஒன்பது தலங்களும் கூட்டாக நவ-புலியூர் என்று அழைக்கப்படுகின்றன; அவை பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), திருப்பாதிரிப்புலியூர் (இக்கோயில்), சிறுபுலியூர், எருகத்தாம்புலியூர், பெரும்புலியூர், ஓமாம்புலியூர், அத்திப்புலியூர், தப்ளாம்புலியூர், கானத்தாம்புலியூர். பிற்காலத்தில் வியாக்ரபாதர் இங்கு முக்தி அடைந்தார் என்று நம்பப்படுகிறது.

வியாக்ரபாத முனிவரின் மகன் உபமன்யு தேவியை வழிபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது கால் மூர்த்தியின் மீது மோதியது. இருந்தபோதிலும், இங்குள்ள அம்மனை வழிபட்டாலே முக்தி கிடைக்கும் என்று அவர் சபிக்கப்பட்டார். ஒரு நாள், ஆதிராஜன் என்ற மன்னன் வேட்டையாடச் சென்று, பாதுகாப்புக்காக இந்த இடத்திற்குள் நுழைந்த முயலை விரட்டினான். தேவியின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, அது இங்குள்ள அம்மனிடம் பிரார்த்தனை செய்தது, மேலும் உபமன்யு தனது அசல் வடிவத்தை மீண்டும் பெற்றார்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோயிலில் முருகன் மீது பாடியுள்ளார்.

பெருங்கோயில், காரக்கோயில், ஞானர்கோயில், குடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், அழகோயில், மாடக்கோயில், பூங்கோயில் என 9 வகையான கட்டமைப்புக் கோயில் கட்டுமானங்களை இலக்கிய ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

இன்று நாம் காணும் கட்டிடக் கோயில் பல்லவர் காலத்திலிருந்தது, அதன் பிறகு சோழர்களால் புதுப்பிக்கப்பட்டது. கோவில் வகைகளில், இந்த கோவில் ஞானசர் கோயில் வகையின் கீழ் வருகிறது. ஞாழர் என்பது கொண்டை, கொங்கு, தேக்கு மற்றும் பத்திரி போன்ற குறிப்பிட்ட வகை மரங்களைக் கொண்ட மரங்களைக் குறிக்கிறது. ஞாஜர் கோயில்கள் என்பது தலைமை தெய்வம் அல்லது கோயிலே இந்த வகையான மரங்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் உள்ள அப்பரின் பதிகம் ஞாழர் கோயில் என்றும் குறிப்பிடுகிறது, அவர் காலத்தில் இந்தக் கோயில் மரத்தால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.

கோவிலில் சில பிரமாதமான கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் உள் சுவர்களில் அடிப்படை புதைப்பு படங்கள் உள்ளன. சுவாரஸ்யமாக, இங்கு விநாயகர் கையில் ஆயுதங்கள் ஏதுமின்றி காட்சியளிக்கிறார் – அதற்கு பதிலாக, அவர் பாதிரி மலர் மாலையுடன் காட்சியளிக்கிறார். இங்குள்ள சிவனை 3 முறை சிதம்பரத்திலும், 8 முறை திருவண்ணாமலையிலும், 16 முறை காசியிலும் வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகம்.

*தலபெருமை :

*கரையேறிய கதை : 

திருநாவுக்கரசர் எனும் அப்பரடிகளை மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பரடிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே' எனப் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயம் உற்று அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள்.

அந்நிலையில் அப்பரடிகள் திருப்பாதிரிப்புலியூருக்கு எழுந்தருளி பாடலநாதனாம் இறைவனை "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்' என்று பதிகம் பாடி வழிபட்டார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலமே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.

*பள்ளியறை: 

இறைவி அரூபமாக (உருவமில்லாமல்)இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு.

அண்ணல் ஆயிரங்கலைகளோடு உறையும் இடம் ஆதலால் அவனைப் பூசித்துத் தவமியற்றி மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.

ஐங்கரன் கரங்களில் ஆயிதமேதுமின்றி பாதிரி மலர்க் கொத்துக்கள் உள்ளது வேறு எங்கும் காணமுடியாது.

*சிவகரை தீர்த்த சிறப்பு : 

சிவன் சித்தராக இருந்து விளையாடி கை வைத்த இடம் இந்த சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்தது. வாஸ்துபடி ஈசாணி மூலையில் இந்த தீர்த்தம் இருப்பது விசேசம்.

மத்தியந்தன முனிவர் மகன் பூசித்து வழிபட்டபோது பாதிரி மரங்களின் மேலேறத்தகுதியாக இருக்கத் தனக்குப் புலிக்காலும், கையும் வேண்டிப் பெற்றுப் புலிக்கால் முனிவர் ஆன தலம் இதுவே

திருநாவுக்கரசை முதன்முதலில் “அப்பர்’ என்று ஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில்தான்.

அருணகிரிநாதர் முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார்.

அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர் , உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம்.

புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம்.இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.

இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்

தலவிநாயகர் : வலம்புரி விநாயகர். மேற்கு மதில் விநாயகரது மேல் திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர்க் கொத்துகளே காணப்பெறும்.

அம்பிகை இறைவனைப் பூசித்தபோது உதவி செய்த திருக்கோலம். அதனால் அவர் கன்னி விநாயகர் எனப் பெயர் பெறுகிறார்.

பொது தகவல்:

சப்தமாதாக்கள் சன்னதி இங்கு கோயிலை ஒட்டியே இருக்கும்.

சமயக்குரவர்கள் நால்வருள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்கள் காலத்திற்கு முன்பே இவ்வூர் தோன்றாத் துணைநாதரும் அவர் கோயில் கொண்டருளிய திருக்கோயிலும் மிகவும் சிறப்புடையதாக விளங்கி இருக்கிறது. 

சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன.

 இத்தலத்தில், திருக் கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம் உள்ளது.

 சோழர் காலக் கல்வெட்டுகள் 19ம், மற்றது இரண்டும் படி எடுக்கப்பட்டுள்ளன.

பிரார்த்தனை:

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

இத்தலத்தில் வேண்டிக்கொள்ளும் எல்லாவிதமான பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

விரதமிருந்து சிவகரைத்தீர்த்தத்தில் குளித்தால் நினைத்தது நிறைவேறுகிறது. மேலும் குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன் :

சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கள் கிழமைகளிலும் சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. தங்க கவசம் சாத்த 500 ரூபாய் செலுத்தி நேர்த்திகடன் செய்யலாம். தவிர சுவாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். அம்மாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்படுகிறது.

திருவிழா:

வைகாசி விசாகம் -10 நாட்கள் – வெள்ளி ரிஷப வாகனம், தங்க கைலாச வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு – 5 ஆம்நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி (தேர் அகலமாக இருப்பதால் யாரும் தெருவில் நடந்து செல்ல முடியாது. அந்த அளவு தெருவை தேர் அடைத்து செல்லுமாம்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் மிகச் சிறப்பான திருவிழா மகா சிவராத்திரி – மாசி மாதம் ஆடி பூரம், நவராத்திரி, திருவாதிரை உற்சவம், தை அமாவாசை, மாசி மகம் – 2 க்கும் கடல் தீர்த்தவாரி நடக்கும். தேவனாம்பட்டினம் என்ற ஊருக்கு சுவாமி செல்லும். பவுர்ணமி பஞ்சபிரகார வலம் வருதல் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தவிர பிரதோச காலங்களில் கோயிலில் மிக அதிக அளவில் பக்தர்கள் கூடுகிறார்கள். அப்பர் சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். 

அமைவிடம் : 

இது தற்பொழுது, கடலூர் எனப்படுகிறது. கோவில், திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்திற்கு அருகே உள்ளது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிருந்தும் கடலூருக்குப் பஸ் வசதி உள்ளது. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஆலயங்களில் வலம் வரும் முறைகளும் அவற்றின் பலன்களும்

*ஆலயங்களில் வலம் வரும் முறைகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள்* :
கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு, இறைனின் சன்னதியை வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி இறைவனை மட்டும் தரிசனம் செய்து விட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால் கோவிலை வலம் வருவது மிக முக்கியமானதாகும். 

அப்படி வலம் வரும் போது, மனதார இறைவனை நினைத்தபடி வலம் வந்தால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி, இறைவனிடம் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல்களால் நம்முடைய மனது சுத்தமாகும். நேர்மறையான ஆற்றல்கள் பெருவதால் நன்மைகள் அதிகம் நடக்கும்.

கோவில்களை வலம் வரும் போது ஒற்றை படை எண்ணிக்கையில் தான் வலம் வர வேண்டும். ஒவ்வொரு தெய்வத்தையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு ஏற்றாற் போல் பலன்களும் மாறுபடும். உதாரணமாக,

* விநாயகர் கோவில் - ஒரு முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும்.

* முருகன் கோவில் - 6 முறை வலம் வர வேண்டும். இதனால் எதிரிகள் தொல்லை நீங்கி, ஞானம் பெருகும்.

* அம்மன் கோவில் - 5 முறை வலம் வர வேண்டும். இதனால் வெற்றி, மனஅமைதி கிடைக்கும். வெள்ளிக்கிழமை துவங்கி, செவ்வாய்கிழமை வரை தினமும் அம்பிகையின் கோவிலுக்கு சென்று 5 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.

* சிவன் கோவில் - 5 முறை வலம் வந்தால் நினைத்தது நடக்கும். செல்வ வளம் பெருகும், பிறவா நிலை ஏற்படும்.

* பெருமாள் கோவில் - 3 முறை வலம் வர வேண்டும். இதனால் ஆட்சி அதிகாரம், செல்வாக்கு, அஷ்டலட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும்.

* நவகிரகங்கள் - ஒன்பது முறை வலம் வருவதால் ஜாதகங்களில் இருக்கும் குறைகள் நீங்கும்.

இப்படி எந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்று எத்தனை முறை வலம் வர வேண்டும் என தெரியாதவர்கள், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் பொதுவாக எந்த கோவிலுக்கு சென்றாலும் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

*வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும் :*

* 1 முறை - இறைவனிடம் நெருங்க செய்யும்

* 3 முறை - மனச்சுமை குறையும்

* 5 முறை - விருப்பங்கள் நிறைவேறும்

* 7 முறை - காரிய வெற்றி

* 9 முறை - எதிரிகள் தொல்லை நீங்கும்

* 11 முறை - ஆயுள் விருத்தி

* 13 முறை - பிரார்த்தனை நிறைவேறும்

* 15 முறை - செல்வம் பெருகும்

* 17 முறை - தானிய வளம் பெருகும்

* 19 முறை - நோய் தீரும்

* 21 முறை - கல்வி வளர்ச்சி

* 27 முறை - குழந்தை பாக்கியம்

* 108 முறை - சகல நலன்களும் கிடைக்கும்

*இதை மனதில் கொண்டு இனி ஆலய வழிபாட்டினைச் செய்து இறையுருள் பெறுவோம்*
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி

*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி*
*திருவிழா* வைகாசி விசாகம் - 12 நாட்கள் -10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். கந்த சஷ்டித் திருவிழா (சூரசம்காரம்) - 7 நாட்கள் - ஆயிரம் பக்தர்கள் கூடுவர் பங்குனி உத்திரம் - 4 நாள் திருவிழா - 25 ஆயிரம் பக்தர்கள் கூடுவர் தைப் பூசம் - 3 நாள் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.

*தல சிறப்பு* முருகப் பெருமானே தன் வேலினால் குத்தி உண்டாக்கிய சக்தி தீர்த்தம் இங்கு உள்ளது. சிவனை முருகன் பூஜித்த தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

*பொது தகவல்*

*திருப்புகழ் தந்த திருமுருகன்*

திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், அவர் அடியெடுத்துக்கொடுக்க "முத்தைத்தரு' எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின், அவர் வேறு பாடல் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி, "வயலூருக்கு வா!' என்றது. மகிழ்ந்த அருணகிரியார் இங்கு வந்தார். அப்போது, முருகன் அவருக்குக் காட்சி தரவில்லை. தான் ஏமாற்றமடைந்ததாக உணர்ந்தவர், "அசரீரி பொய்யோ?' என உரக்கக் கத்தினார்.

அப்போது, விநாயகர் அவர் முன் தோன்றி "அசரீரி உண்மையே!' எனச்சொல்லி, இங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின், இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல முருக தலங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடினார். இவ்வாறு, நமக்கு திருப்புகழ் என்ற ஒப்பற்ற பாடல்கள் கிடைக்க அருள் செய்தவர் இங்குள்ள முருகன் ஆவார்.

*எழுத்தாளர் கோயில்*

சிவன் சன்னதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். சுவாமி, மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும். கந்த சஷ்டியின்போது முருகன் தெய்வானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடக்கும்.

வள்ளி திருமணத்தின் போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோயில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாகக் காட்சி தருவர். அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம்.

*வாரியார் திருப்பணி*

முருகபக்தரான கிருபானந்த வாரியார், 1934ம் ஆண்டில், இக்கோயிலுக்கு வந்தார். அப்போது அர்ச்சகராக இருந்த ஜம்புநாத சிவாச்சாரியார், அவருக்கு சுவாமி தரிசனம் செய்து வைத்தார். இதில் மகிழ்ந்த வாரியார், ஐம்பது பைசாவை அவரிடம் காணிக்கை கொடுத்துச் சென்றார். அன்றிரவில் கோயில் நிர்வாகி ஒருவரின் கனவில் சந்நியாசி வடிவில் தோன்றிய முருகன், "ஐம்பது பைசா வாங்கியிருக்கிறாயே? அதை வைத்து கோபுரம் கட்ட முடியுமா?' என்று கேட்டார். வியந்த நிர்வாகி, மறுநாள் கோயிலுக்கு வந்தபோது, வாரியார் ஐம்பது பைசா கொடுத்ததை அறிந்தார். அவருக்கு அந்த காசை திருப்பி அனுப்பி விட்டார். அதன்பின், இங்கு வந்த வாரியார், நடந்ததை அறிந்து, கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார்.

*சதுர தாண்டவ நடராஜர்*

வழக்கமாக ஒரு பாதம் தூக்கி நடனமாடும், கோலத்தில் காட்சி தரும் நடராஜரை, இங்கு காலைத் தூக்காத கோலத்தில் தரிசிக்கலாம். இதை நடனமாடுவதற்கு முந்தைய நிலையாகும். எனவே, இவரது சடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவருக்கு "சதுரதாண்டவ நடராஜர்' என்று பெயர். மார்கழி திருவாதிரைத் திருநாள் இவருக்கு விசேஷமாக நடக்கும்.

*விசேஷ விநாயகர்*

அருணகிரிநாதருக்கு காட்சி தந்த "பொய்யா கணபதி விசேஷமான மூர்த்தியாவார். அருணகிரியார் இவரைப்போற்றி திருப்புகழில் காப்புச்செய்யுள் பாடியுள்ளார். யாருக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ, அந்த அளவிற்கு இவர் பொருளை சீராகக் கொடுப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இங்கு அருணகிரிநாதருக்கும் சன்னதி உள்ளது. ஆனி மூலத்தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார். சிவனுக்குரிய வன்னி மரம் இத்தலத்தின் விருட்சமாகும். கோயிலுக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

*பிரார்த்தனை* நாக சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருக்குளத்தில் (நாக சர்ப்ப தோஷம்) மூழ்கி முருகனை தரிசித்தால் திருமணத்தடை நீங்கி சுப காரியம் நடைபெறும். இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.

*நேர்த்திக்கடன்* முடி இறக்கி காது குத்தல், காவடி எடுத்தல், பால்க்குடம் எடுத்தல் சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கபிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருவபர்கள் இறைவனுக்கு செய்யலாம்.

*தலபெருமை*

*அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்*

இந்த வயலூரில் குடிகொண்டு இருக்கும் முருகப்பெருமான் ஒரு உண்மையை விளக்குகிறார். முருகப்பெருமான் தந்தையையும் தாயையும் முன்னிறுத்தி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை நமக்கு புகட்ட அன்றாடம் தாய் தந்தையர் காலில் பணிந்து பூசனை புரிந்து அருள் பெற்ற பாலகராய் காட்சி தருகிறார்.

*அருணகிரி நாதர்*

திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் "முத்தைத் திரு' பாடியபின்பு வயலூருக்கு வா என்று முருகன் செல்ல அதன்படி அருணகிரியார் இங்கு வந்துள்ளார். இங்குள்ள பொய்யாகணபதி தான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று செல்லப்படுகிறது. இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும் அறிவையும் பெற்றார். இத்தலத்து முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார். அத்தகைய பேரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம்.

*வாரியார் சுவாமிகள்*

எங்கும் நிறைந்த முருகப்பெருமான் வயலூர் தலத்தில் தமக்கு அருள் புரிந்தான் என்று தமிழ் கூறும் நல்லுலகு பூராவிலும் சென்ற நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முழக்கி வந்தவர் வாரியார் சுவாமிகள் வயலூரைப் பற்றி தமிழ் மக்கள் அறியும் படி செய்தவர் வாரியார். நான் அன்றாடம் வழிபட்டு வரும் வயலூர் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி சொற்பொழிவை தொடங்குகிறேன் என்று முன்னுரை வழங்கிய பின்பே சொற்பொழிவை தொடங்குவார். அந்த அளவு இத்தலத்துக்கும் வாரியாருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பு. இத் திருக்கோயில் பெருமளவு புகழ்பெற செய்ததற்கான அத்தனை பெருமையும் வாரியாருக்கே சாரும்.

சிவன் கோயிலில் முருகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தலம். மூலஸ்தானத்தில் முருகன் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்கு தேவமயில் என்று பெயர். ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள். இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது. ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய்தந்தையரை தனித்து நின்று பூஜை செய்வார். ஆனால் வயலூரில் தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூஜை செய்கின்ற தனிச்சிறப்பு வயலூர் தலத்திற்கு உண்டு.

வயலூரில் முருகக் கடவுள் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார். நடராஜர் சூரத்தாண்டவ மூர்த்தியாக உள்ளார். அருணகிரி நாதருக்கு கல்யாண கோலத்தில் குமாரராக காட்சி தந்ததால் தடைபட்ட கல்யாணங்கள் நடைபெறும். திருப்புகழை பாடும் தன்மையை தந்தது வயலூர் முருகனே என்பதால் அருணகிரி நாதருக்கு இத்தலத்தில் விஷேச ஈடுபாடு. வாரியார் சுவாமிகளின் தனிப்பட்ட ஈடுபாட்டால் புகழ்பெற்ற முருகன் திருத்தலம்.

*தல வரலாறு*

இப்பகுதியில் வேட்டையாட வந்த சோழ மன்னன் ஒருவர் தண்ணீர் தாகம் எடுத்து நீருக்கு அலைந்து இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு வரும் போது மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பு ஒன்றை கண்டு அதனை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி கரும்பை ஒடித்த போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது. அவ்விடத்தை தோண்டிப்பார்த்த போது சிவலிங்கம் இருந்ததாகவும் பின்னர் கோயில் எழுப்பியதாகவும் கர்ணபரம்பரை செய்தி கூறுகின்றது.

திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து கீழே விழுந்த அருணகிரி நாதரை காப்பாற்றி முத்தை திரு என்று அடிஎடுத்துக் கொடுத்த முருகப்பெருமான் வயலூருக்கு வா என்று அழைக்க இங்கு வந்து தான் முருகப்பெருமானை அருணகிரியார் பொய்யாகணபதியை வணங்கி கண்டு கொண்டார். அருணகிரி நாதருக்கு தன் வேலால் ஒம் என்ற பிரணவ மந்திரத்தை முருகப் பெருமான் எழுதினார். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கிருபானந்த வாரியாரின் தனிப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக உலகப் புகழ் பெற்ற கோயிலாக இன்று இக்கோயில் திகழ்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, September 23, 2025

கண் நோய்களைப் போக்கும் செம்பியன் களரி நேத்ரபதீஸ்வரர்...!

கண் நோய்களைப்  போக்கிகண்களுக்கு  கவசமாகும்  நேத்ரபதீஸ்வரர்...! 
தஞ்சை மாவட்டம், ஒரத்தூருக்கும் மேகளத்தூருக்கும் இடையில், செம்பியன்களரியில் அமைந்துள்ளது அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில்.

ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை நாளன்று இந்த ஈஸ்வரருக்கு தசாவனி தைலக்காப்பிட்டு, சாம்பிராணி தூபம் காட்டி, அத்திப் பழம் நிவேதனம் செய்து வழிபட, கண் தொடர்பான அனைத்து நோகளும்
நீங்கி, பூரண நலம் பெறலாம் என்பது பக்தர்களின் அனுபவக் கூற்றாகத் திகழ்கிறது.

கல்லணைக்குக் கீழே சற்றே உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி. ஒரு காலத்தில் வரலாற்றுப் புகழ் பெற்றிருந்த இந்த ஊரிலிருந்துதான்சொழ அரசின் சில நிர்வாக அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன. 

அச்சமயம், அரசின் நிர்வாக அலுவலகங்களும் இங்கு இருந்துள்ளன. ராஜராஜசோழனின் தாய் செம்பியன் மாதேவி கட்டியது, இந்த அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில். 

கருவறை மூலவர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்பாள் காமாட்சியம்மன் தெற்கு நோக்கி தனிச்
சன்னிதியிலும் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலின் எதிர்ப்புறம் வீடுகள் அமைந்திருக்க, மூன்று புறங்களிலும் பசுமை போர்த்திய வயல்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கின்றன. 

கோயிலின் நுழைவாயிலில் நந்தி, கருவறைக்கு வலது புறம் விநாயகரும், இடது புறம் சிவசுப்பிரமணியரும் வீற்றிருக்கின்றனர். 

பிராகார கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, ருத்ர துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

தனிச் சன்னிதியில் சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார். ஸ்தல விருட்சம் வில்வ மரத்தடியில் நாகர்சிலைகள்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அடுத்து வருகின்ற மூன்றாம் பிறை நாளன்று, அந்தியும் இரவும் சந்திக்கின்ற பொழுதினில் மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

அச்சமயம், கண் பார்வை தொடர்பான நோகளோடு வரும் பக்தர்களின் குறைபாட்டினைக் களைந்து அருள் பாலிக்கிறார் இத்தல ஈசன்.

மூன்றாம் பிறையன்று மூலவருக்கு, ‘தசாவனி தைலம்’ காப்பிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகின்றன. 

அது என்ன தசாவனி தைலம்? நீலி பிருங்காதி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, மருதாணி, செம்பருத்தி, தேங்கா எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெ, விளக் கெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகிய பத்து வித பொருட்களை அதனதன் சரிவிகிதத்தில் கலந்து உருவாக்குவதே, ‘தசாவனி தைலம்.’ இந்த தசாவனிதைலக் காப்பே மூலவருக்குச் சாத்தப்படுகிறது.

பிரார்த்தனைக்காக மூலவருக்குத் தைலக்காப்பிட விரும்புவோருக்கு இந்தத் தைலக்காப்பை கோயில் நிர்வாகமே ஏற்பாடு செய்து தருகிறது.

அன்று மாலை, இரவு கவிழும் சமயம், வானில் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கும் நேரம் பக்தர்கள் கோயிலின் கருவறை பின்புறம் உள்ள பிராகாரத்தில் சூழ்ந்து நின்று வானத்தையே பார்க்கின்றனர். 

வானில் மெல்லியக் கீற்றாகக் காட்சி தருகிறது மூன்றாம் பிறை நிலவு. பக்தர்கள் சூழ்ந்து நின்று மூன்றாம் பிறையினைத் தரிசித்து வணங்குகின்றனர்.

அதன் பின்னரே மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு தீபாராதனைகள் தொடங்குகின்றன.

அமாவாசை கழித்து, மூன்றாம் நாளின் இரவு 6.30 மணிக்கு மேல் 7.10 மணிக்குள் மூன்றாம் பிறை தெரியத் தொடங்கிவிடும். 

மழை நாட்கள் மற்றும் கருமேகம் சூழ்ந்த நாட்களில் மூன்றாம் பிறை தெரிய வாய்ப்பு கிட்டாது. அப்போது மேற்குறிப்பிட்ட நேரத்தைக் கணக்கில் கொண்டு, கோயிலில் மூன்றாம் பிறை வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மூன்றாம் பிறை வழிபாட்டு பூஜையின்போது, மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு அத்திப்பழ நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகிறது.

வழிபாட்டுக்குப் பிறகு மூலவரின் மீது சாத்தப்படும் தசாவனி தைலக்காப்பு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இது கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்குகிறது. பக்தர்கள் இதனை உச்சந்தலையிலும் இமைகள் மீதும் பூசிக் கொள்கின்றனர்.

இது, கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்து, பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. 

கண் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்ந்து மூன்றாம் பிறை வழிபாட்டினில் பங்கேற்று, தசாவனி தைலக் காப்பை உபயோகப்படுத்தி, கண் தொடர்பான பிரச்னைகளிலிருந்து விடுபடுகின்றனர்" என்கிறார்கள்.

அமைவிடம்: கல்லணைக்குக் கிழக்கே 14 கி.மீ., திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 12 கி.மீ., பூதலூரிலிருந்து 12 கி.மீ.தொலைவில் உள்ளது கோயில்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, September 22, 2025

போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் கோவில்

_போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் கோவில் !_
போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிருக்கப்பா நீயி... நீ பண்ண பாவம் உன்ன ஏழேழு ஜென்மத்துக்கும் பின்தொடரும்மா தாயின்னு.. ரைமிங்ல அடிச்சு டைமிங்ல விடுற பித்தலாட்டம் இல்லைங்க... நிஜமாவே முன் ஜென்மத்துல நம்பிக்கை இருக்கு' என்கிறீர்களா?

உண்மைதான்... முந்தைய பிந்தைய ஜென்மங்கள் இருக்குதுங்க... என் பாப்பா பேசுறது என் அம்மா மாதிரியே இருக்குமுங்க.. என்று பலர் கூற நாம் கேட்டிருப்போம். விசாரித்துப் பார்த்தால், அவரின் அம்மா இறந்த சில வருடங்களில் அவருக்கு குழந்தை பிறந்ததாக சொல்வார் அவர். இன்னும் சிலருக்கோ, புதிதாக சென்ற இடம் கூட ஏற்கனவே தான் இங்கு வந்திருப்பதுபோல நினைவுக்கு வரும். ஆனால் நீங்கள் வந்திருக்கவே மாட்டீர்கள்..

அப்போது ஏன் அப்படி நினைவு வருகிறது. முந்தைய ஜென்ம நினைவுகளாக இருக்கலாமோ. முன் ஜென்மத்தை அறிவியலால் இன்னும் நிரூபிக்க முடியவில்லை என்றாலும், அப்படி ஒன்று இல்லை என்று கூறிவிடமுடியாது.

முன் ஜென்மத்தில் பாவியாக பிறந்து பல பாவங்களைச் செய்து இறைவனின் சாபத்துக்குள்ளாகி, துர்மரணம் அடைந்தவர்கள் திரும்ப பிறக்கிறார்கள் என்று பல ஞானிகள் கூறியுள்ளனர்..

உங்களுக்கு கடன் தொல்லையா, உடல் நிலை பிரச்சனைகள் அடிக்கடி வருகின்றதா.. இது போன்ற பிரச்னைகள் தொடர்கதையால் வாழ்வையே வெறுக்கிறீர்களா.. இவையெல்லாம் முன்ஜென்ம பிரச்னைதான் என்கிறார்கள் இறைவன்மீது அதீத பக்திகொண்ட பெரியவர்கள்.

இந்த இந்த பாவத்துக்கு இந்த இந்த பரிகாரம் என்று எழுதிவைத்துள்ள நம் முன்னோர்கள், அந்த பாவத்தைக் கழுவ போக வேண்டிய கோவிலையும் கூறியுள்ளார்கள்.. அப்படிபட்ட ஒரு கோவிலுக்குத் தான் இன்று நாம் போகவிருக்கிறோம்.

திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்

முன்ஜென்ம பகைகளை போக்கி, பாவங்களை நீக்கி வருங்காலத்தை செம்மைபடுத்த நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோவில்களுள் ஒன்று இந்த திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.

வாழ்வில் நல்ல திருப்பம் வேண்டுமா, புதுவீடி கட்ட திட்டமா இந்த கோவிலுக்கு வந்து பாருங்க அப்றம் ஓஹோனு வாழ்வீங்க...

முக்கிய சிறப்புக்கள்

அக்னிக்கு உருவச்சிலை அமைந்துள்ள ஒரே திருத்தலம் இதுதான்

அப்பர், சம்பந்தர்,திருநீல நாயனார், முருக நாயனார், சிறுதொண்ட நாயனார் ஆகியோர் இணைந்து வணங்கிய தலம் இதுவாகும்.

முக்காலத்துக்கும் ஆசி அருள் வழங்கும் தலம்.. பண்ணிய பாவங்கள் போக்கும் தலம்

தல நம்பிக்கைகள்

கோவில் அமைந்துள்ள ஊரின் அருகில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காக்க அம்மன் வெண்ணிற புடவை அணிந்து வந்ததாகவும், அந்த பெண்ணையும் குழந்தையையும் மருத்துவச்சி போல காப்பாற்றியதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

வேண்டுதல்கள்

அம்மனுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால், சனி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது.

பிறவிப் பலன்

சதய நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த தலத்துக்கு ஒருமுறையாவது வந்தால் பிறவி பலனை அடைவதாக நம்பிக்கை.

போகரின் சமாதி

இங்கு ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. 18 சித்தர்கள் வந்து வழிபட்ட ஸ்தலம் என்னும் பெருமை இந்த கோவிலுக்கு உள்ளது. இதனால் அந்த சமாதி போகருடையதாக அநேகம் பேரால் கருதப்படுகிறது.

சந்நிதிகள்

பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என்கிறார்கள்.

எப்படி செல்லலாம்

நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து, டாக்ஸி வசதிகள் உள்ளன. அல்லது நீங்கள் சொந்த வாகனத்தில் வந்தால் வந்து அங்கிருந்து கும்பகோணத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் வரலாம். அல்லது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த புண்ணியதலம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, September 21, 2025

புரட்டாசி மாத நவராத்திரி பூஜை

புரட்டாசி மாத நவராத்திரி பூஜை பற்றிய பதிவுகள் :*
தமிழ் மக்களின் ஆன்மீக வாழ்வில் புரட்டாசி மாதம் மிகவும் சிறப்புமிக்க மாதமாகக் கருதப்படுகிறது.

அந்த மாதத்தில்தான் நவராத்திரி என்ற ஒன்பது நாட்கள் கொண்ட மகா விழா நடத்தப்படுகிறது. துர்கை, லட்சுமி, சரஸ்வதி தேவிகளின் அருளைப் பெறுவதற்காக நடைபெறும் இவ்விழா ஆவணியும் புரட்டாசியும் மாதங்களில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மேலும் விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

*நவராத்திரி தொடங்கும் காலம்*

மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாள் முதலே நவராத்திரி பூஜைகள் தொடங்குகின்றன.

அதாவது, பித்ரு தர்ப்பணங்கள் முடிந்து தெய்வ பூஜைக்கான நேரம் ஆரம்பிக்கிறது.

புரட்டாசி மாதத்தில் ஆரம்பிக்கும் இந்த நவராத்திரி சரத்நவராத்திரி என அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் மக்கள் கோலம் போட்டு, கலசம் வைத்து, கோலு படிகளை அமைத்து வழிபாட்டை தொடங்குகிறார்கள்.

*நவராத்திரி பூஜை முறைகள்*

*1. கலச ஸ்தாபனை (கலசம் வைப்பு)*

ஒரு நல்ல நாள், நல்ல நேரத்தில் கலசத்தை வைத்து, அதனை மங்கள பொருட்களால் அலங்கரிக்கிறார்கள்.

இதில் தேவி அம்மன் சக்தி வரவேற்கப்படுகிறது.

*2. கோலு அமைப்பு*

கோலு படிகளில் பல்வேறு பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு படியிலும் தெய்வ, ஆன்மீக, சமூக வாழ்க்கையை குறிக்கும் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.

இது பரம்பரை வழக்கத்தையும், தெய்வீகத்தையும் இணைக்கும் வழிபாடு.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, September 20, 2025

பித்ரு கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை தர்ப்பண

_பித்ரு கடன் தீர்க்கும் மகாளய அமாவாசை தர்ப்பண..._
ஒவ்வொரு அமாவாசையன்றும், நீத்தார் கடனை நிறைவேற்றும்போது...

‘ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந சபாந்தவஹா
தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா
உச்ரிஷ்டைஹி குஸௌதஹைஹி
த்ருப்யத் த்ருப்யத் த்ருப்யத்’

என உச்சரிக்கப்படும் ஸ்லோகத்தின் பொருள் என்ன தெரியுமா? ‘எனக்குத் தாயாகவோ, தந்தையாகவோ, சகோதரராகவோ, பிற உறவினராகவோ இல்லாவிட்டாலும் கூட, இவ்வுலகை விட்டு நீங்கியவர்களின் ஆன்மாக்கள் புண்ணியமடைய, இந்த அமாவாசை தினத்தில், தர்ப்பையோடு கலந்த நீரை அர்ப்பணிக்கிறேன்’ என்பதாகும்.

அமாவாசையன்று செய்யப்படும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளின் வழியாக, முன்னோர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. வருடந்தோறும் வரும் தை மற்றும் ஆடி என இரு அமாவாசைகள் முக்கியமென்றாலும், நவராத்திரியின் ஆரம்பத்தைக் குறிக்க மூன்றாவதாக வரும் மஹாளய பட்ச அமாவாசையும் முக்கியம் வாய்ந்ததாகும்.

‘மறந்தவனுக்கு மஹாளயத்தில் கொடு’ என்கிற மாதிரி, தை மற்றும் ஆடி மாத அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யாதவர்கள், மஹாளய பட்ச காலத்தில் நீத்தார் கடனை செய்கையில், முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழ்ந்து, ஆசிகளை வழங்குவார்கள்.

புரட்டாசி மாத ஆரம்பத்தில் வரும் அமாவாசை, மஹாளய பட்ச அமாவாசை ஆகும்.  அமாவாசைக்கு 15 நாட்கள் முந்திய பிரதமை திதியில் ஆரம்பித்து 15 நாட்களும், முன்னோர்களை வழிபட, பல வகை பலன்கள் கிடைக்கும். பிரதமையைத் தொடர்ந்து வரும் 15 திதி  நாட்களில், குறிப்பிட்ட திதி நாளில் ஒரு முறையும், மஹாளாய அமாவாசையன்று ஒரு முறையுமாக இரு நாட்கள் மஹாளய பட்ச  சமயம், நீத்தார் கடனைத் தீர்க்க தர்ப்பணம் செய்வது சிறந்ததாகும். ‘காருண்ய பிதாக்கள்’ என அழைக்கப்படும் முன்னோர்களின் ஆசிகளின் மூலம், பித்ரு தோஷம் மற்றும் பிற தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

மஹாளய பட்ச காலத்தில், முன்னோர்கள் மட்டுமல்ல; நாம் அளிக்கும் தர்ப்பணத்தை ஏற்பதற்காக தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அநேகர் காத்திருப்பது உண்டு. எல்லோருக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்து மஹாளய பட்ச தர்ப்பண வழிபாட்டை மேற்கொள்கையில், அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையும். மஹாளய பட்ச தர்ப்பணத்தை நீர் நிலைகள், கடலோரங்கள் போன்ற இடங்களில் செய்து, முடிந்தவற்றை தானம் செய்வதோடு, வாயில்லா பிராணிகள், பறவைகளுக்கு உணவளிப்பது மிகவும் அவசியமாகும்.

மஹாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, வைதிருதி, மகாவிய தீபாதம், அமிர்தா நவமி ஆகிய தினங்கள் தர்ப்பணம் செய்ய மிக உகந்ததாகும். இந்நாட்களில் செய்ய இயலாதவர்கள் ஏதாவது ஒரு நாளில் செய்யலாம்.

கொடை வள்ளல் கர்ணன், தன்னுடைய  முன்னோர்களுக்கு சிராத்தம் செய்யாததால், அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. எனவே, முன்னோர்கள் கர்ணனுக்கு சாபமிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சொர்க்கத்திற்கு சென்ற கர்ணனுக்கும் சாப்பாடு கிடைக்கவில்லை. பொன்னும், பொருளுமே தட்டில் விழுந்தன. யமதர்ம ராஜனிடம் இதற்குப் பரிகாரம் கேட்கையில், பூலோகம் சென்று, மஹாளய பட்ச சமயம், நீத்தார் கடன் தீர்க்க வழி கூறினார். கர்ணனும் அவ்வாறே செய்ய, பித்ரு கடன் அடைபட்டு சொர்க்கத்திற்கு திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கர்ணன் பூமியில் தங்கி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த 15 நாட்களே மஹாளய பட்ச காலமென அழைக்கப்படுகிறது.

எவ்வளவுதான் தான தர்மம் செய்தாலும், பித்ரு கடன் வழிபாடு செய்யாவிட்டால் பலன் கிடைக்காது. மஹாளய பட்ச 15 நாட்களும் உணவில் எளிமையைக் கடைப்பிடிப்பதோடு, அன்னதானம் அளித்து, இறை வழிபாடு செய்வது நன்மையை அளிக்கும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பெருமாள் கோவிலில் நவகிரகம் கூடுவாஞ்சேரி லட்சுமி நாராயணர்

திருமண வரம் அருளும் மாடம்பாக்கம் லட்சுமி நாராயணர்


பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
வெளியே பழமையான விளக்குத் தூண் காட்சி தருகிறது.
தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்கள் அதிக அளவில் அமைந்துள்ளன. சூராடிமங்கலம், பள்ளஈகை, நென்மேலி, துஞ்சம், பரனூர், பள்ளிக்கரணை, குன்னத்தூர், அம்மணம்பாக்கம், எச்சூர், அருங்குன்றம், குழிப்பாந்தண்டலம், திருநிலை முதலான ஊர்களில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருத்தலங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்துமே மிகப் பழமையான திருத்தலங்களாகும்.

இத்தகைய பழம்பெருமை வாய்ந்த தலங்களில் ஒன்றுதான், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில். இத்தலம் பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.


 கோவிலுக்கு வெளியே பழமையான விளக்குத் தூண் காட்சி தருகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்த இத்தலம், மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்தின் வெளிப்புறத்தில் ஒரு பக்கம் தும்பிக்கையாழ்வாரும், மற்றொரு பக்கம் காளிங்க நர்த்தனரும் வீற்றிருக்கிறார்கள்.

அவர்களை வணங்கி உள்ளே நுழைந்ததும், ராஜகோபுரத்தின் உட்புறத்தில் ஒரு புறம் சுதர்சனப் பெருமாளும், மற்றொருபுறம் நரசிம்மரும் பிரமாண்டமான சுதைச் சிற்ப வடிவத்தில் காட்சி தந்து மெய்சிலிர்க்க வைக்கிறார்கள். சக்கரத்தாழ்வாரை வணங்கி உள்ளே நுழைந்ததும், பலிபீடமும், கருடாழ்வார் சன்னிதியும் இருக்கிறது.

வெளித்திருச்சுற்றில் இடதுபுறத்தில் பக்த ஆஞ்சநேயர் ஒரு சிறிய சன்னிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். வலது புறத்தில் விஷேசமான நவக்கிரக சன்னிதி ஒன்று அமைந்துள்ளது. நவக்கிரக நாயகர்கள் தங்கள் வாகனத்தோடு காட்சி தந்து அருள்பாலிப்பது, விசேஷமானதாக கருதப்படுகிறது. மேலும் சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றை சக்கரத் தேரில், தனது மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவியரோடு காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும்.

கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபத்தோடு இத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது. முன்மண்டபத்தில் ஒரு சிறிய மாடத்தில் உடையவரும், அவருக்கு அருகில் காளிங்க நர்த்தனரும் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். கருவறையில் மூலவர் லட்சுமி நாராயணப் பெருமாள், கிழக்கு திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


 லட்சுமிதேவியை தனது இடது தொடையில் அமர்த்தி இடது கரத்தால் அணைத்தவாறும், வலது திருக்கரத்தினை பக்தர்களைக் காக்கும் அபயஹஸ்த நிலையில் வைத்தபடியும், திருமுகத்தில் புன்னகை தவழ மிக அழகிய திருக்கோலத்தில் இந்த பெருமாள் காட்சி தருகிறார்.

மேலும் மூலவர் சன்னிதியில் நவநீதகிருஷ்ணனும் இருக்கிறார். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத பெருமாளின் உற்சவ மூர்த்தியை தரிசிக்கலாம்.

லட்சுமிதேவியோடு இணைந்து காட்சி தரும் லட்சுமி நாராயணப் பெருமாளை தரிசிப்பதன் மூலம், குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்பதும், கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும் என்பதும் ஐதீகம்.

மேலும் பலவிதமான காரணங்களால் ஏற்படும் திருமணத் தடைகளும், இந்த ஆலயத்திற்கு வந்து மூலவரை தரிசிப்பதன் மூலமாக நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வைகானச ஆகம முறை பின்பற்றப்படும் இத்தலத்தில், தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் தல விருட்சமாக, வில்வ மரம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் திரு பவித்ர உற்சவம், திருப்பாவாடை மஹோத்சவம், தீபாவளிக்கு மறுநாள் கேதார கவுரி விரதம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், உறியடித் திருவிழா, திருக்கார்த்திகை தீப விழா, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள், திருக்கல்யாண உற்சவம், ஒய்யாளி சேவை மற்றும் பல வைணவ விழாக்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன.

ஜனவரி முதல் வாரம் மற்றும் புரட்டாசி மாதம் 4-வது வாரத்தில் பெருமாள் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கார்த்திகை தீப விழாவில் 1008 திருவிளக்குகள் ஏற்றப்படுகின்றன.

இந்த கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கூடுவாஞ்சேரியில் இருந்து மேற்கு திசை நோக்கி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மாடம்பாக்கம் திருத்தலம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, September 19, 2025

கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர், திருப்பழனம்.

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், 
திங்களூர், 
திருப்பழனம் அஞ்சல்,  
திருவையாறு வட்டம், 
தஞ்சாவூர் மாவட்டம் – 613 204.         
*இறைவன் : கைலாசநாதர் 

*இறைவி : பெரியநாயகி  

*தீர்த்தம் : சந்திர தீர்த்தம்           

*இத்தலம் ஒரு தேவார வைப்புத் தலமுமாகும். திருநாவுக்கரசரும், சுந்தரரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.   

*திருப்பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி உலக உயிர்களைக் காத்தார். இருந்தாலும் அப்பகுதியில் பரவிய நஞ்சின் தாக்கத்தினால் தேவர்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். அப்போது அமிர்தத்துடன் எழுந்து வந்த சந்திரன், தேவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான். அத்தகைய சந்திரனை, சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டார்.   

*தட்சன் தனது 27 புத்திரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 மனைவிகளும் தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். 

இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான்.              
ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து அருளினார். தட்சனின் சாபத்தால் நாள்தோறும் சிறிது சிறிதாக தேய்ந்து ஒருநாள் முழுமையாக மறையவேண்டிய (அமாவாசை) சாபத்திற்கு ஆளான சந்திரன், சிவனின் அனுக்கிரகத்தால் மீண்டும் வளர்ந்து ஒருநாள் பிரகாசிக்கும் (பவுர்ணமி) விமோசனத்தைப் பெற்ற தலமே திங்களூர் திருத்தலம்.      

*இத்தலத்தின் ஷேத்திர பாலகராக சந்திரன், மேற்கு திசை நோக்கி இறைவனைப் பார்த்தபடி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.  

*ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பெளர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும்.                 
 கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதை தொடர்ந்து தனி சன்னதியில் அமைந்துள்ள சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.         

*ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள் இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இங்குள்ள சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபட்டால், ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.        

"மனக்குழப்பம், தேவையற்ற பயம், தெளிவற்ற நிலை போன்றவற்றால் அவதிப்படுபவர்கள்,  ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புத்தி நடப்பவர்கள், மனநிலை கோளாறுகள், தாயுடன் கருத்து வேறுபாடு, நீரில் கண்டம், வெளிநாட்டு பயணத் தடை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தி பெற இங்கு வழிபடுவது சிறப்பு.  

*இது 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரத் தலம். திங்களூர் தலத்தில் அப்பூதி அடிகள்  திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்துவந்தார். ஒருமுறை, திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், தமது பெயரில் பாடசாலை, கோசாலை, தர்மசாலை, தண்ணீர்ப்பந்தல், அன்னசாலை எனப் பலவும் இருப்பது கண்டு வியப்புற்றார். இவற்றை அமைத்தவர் அப்பூதி அடிகள் என்பதை அறிந்து அவர் வீட்டுக்குச் சென்றார். திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக்கொண்டார். அதற்காக, வாழை இலை கொண்டுவரச் சென்ற, சிறுவனான அப்பூதி அடிகளின் மகன்  வாழைத்தோப்பில் பாம்பு கடித்து  இறந்துவிட்டான். மகன் இறந்தது தெரிந்தால், அப்பருக்கு அமுது படைப்பது தடைபடும் என்று கருதிய அப்பூதி அடிகள், மகன் இறந்ததை மறைத்து அப்பரை உணவு உண்ண அழைக்கிறார்.
அப்பர் தம்முடன் அப்பூதி அடிகளின் மகனையும் உணவு அருந்த அழைக்க, அப்பூதி அடிகள் மகன் இறந்துவிட்ட தகவலைச் சொல்கிறார். மகன் இறந்ததைக் கேட்ட அப்பர் பெருமான், “ஒன்று கொலாம்” என்று தொடங்கும் பதிகம் பாடி, இறந்த சிறுவனை உறக்கத்தில் இருந்து விழித்தவனைப்போல் எழச்செய்து உயிர்ப்பிக்கிறார். 

*திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் பத்தும் “விடம் தீரத்த திருப்பதிகம்” என்று போற்றப்படுகிறது.  

*சண்டிகேஸ்வரர்  இங்கு தனது மனைவியுடன் எழுந்தருளி இருப்பது அரிய காட்சியாகும்.      

*குழந்தைகளுக்கு முதன்முதலாக அன்னம் ஊட்டுவதற்கு (அன்னப்பிரசன்னம்) தமிழ்நாட்டில் மிகச்சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும். 

*திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், திருப்பழனம் (பாடல் பெற்ற தலம்) ஊரை அடுத்து சிறிது தூரம் சென்றால், திங்களூர் செல்லும் சாலை பிரிகிறது. அதில் சென்று ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.                            

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...

வில்வ மரம் பற்றிய தகவல்கள்... 1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்...