உலகிலேயே சிவபெருமானுக்கு என்று முதலில் உருவாக்கப்பட்ட ஆலயம் #உத்தரகோசமங்கை ஆலயம். நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவான கோயிலும் இதுதான்.
நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட கோயிலும் இதுதான். ஆயிரம் சிவனடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்ற ஆலயமும் இதுவேதான். சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேத ஆகமங்களின் இரகசியங்களைப் போதித்தது இந்தத் தலத்திலேயே.
மூவாயிரம் ஆண்டுகளாக பூத்துக்குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயமும் இதுதான்.
"தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்ற வாக்கியம் உருவாவதற்கு காரணமான இருந்த இடமும் இதுதான்.
உலகிலேயே முதல் #மரகத_நடராஜர் சிலை நிறுவப்பட்ட ஆலயமும் இதுதான். இப்படி பல பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாக இருக்கும் ஆலயம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள
திரு உத்தரகோசமங்கை மங்களநாதர், மங்களநாயகி திருக்கோயில்.
உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சிலை "சுயம்பு லிங்கம்" மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்படுகிறது.
இக்கோயில் மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் உமாமகேஸ்வரர் சன்னதி முன்பு தம்பதியர் இணைந்து வழிபாடு செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
திருவிளையாடல் புராணத்தில் வரும் "வழியில் மீன் பிடித்த படலம்" என்னும் வரியில் இத்தலத்தை தான் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நகரம் சிறிதுகாலம் பாண்டிய மன்னரின் காலத்தில் அவர்களது தலைநகரமாக விளங்கியது.
ஆரம்ப காலகட்டத்தில் சிவபுரம், தெட்சிண கயிலாயம் , சதுர்வேதி, மங்கலம் , இலந்திகைப்பள்ளி, பத்திரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்கிரபுரம் , மங்களபுரி ஆதிசிதம்பரம் என்றெல்லாம் இத்தலம் அழைக்கப்பட்டதாம்.
இக்கோயிலில் மங்களநாதர், மங்களநாயகி இதுவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாணலிங்கத்தை தரிசனம் செய்தால் அதற்கான முழுமையான பலன் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
இங்குள்ள மூலவருக்கு மங்களநாதர் , மங்களேஸ்வரர் , காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவர் என்னும் பெயர்களும் உள்ளன.
இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை , சுந்தரநாயகி போன்ற பல பெயர்களும் உள்ளன.
இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில்இராட்சதன் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் இடம் பெற்றுள்ளது. மண்டோதரி பிறந்த இடமும் இந்த உத்தரகோசமங்கை என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் குறிப்பின் மூலம் இத்தலம் இராமாயணத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட ஆலயம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மண்டோதரி சிறந்த சிவபக்தையாவாள். இராட்சதன் இராவணனுக்கும், மண்டோதரிக்கும் இத்தலத்திலேயே திருமணம் நடைபெற்றதாகக் கூறுவர். இத்தலத்தில் சுவாமியை, அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம்.
இக்கோயிலில் ஆதிகாலத்து வராகிக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. பிரதோஷ நாளன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகிறார்கள். காரணம் இக்கோவில் சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் தாழம்பூ மாலை கட்டி வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம் .
இத்தலத்தில் உள்ள கோயில் குளத்தில் உள்ள மீன்கள் கடல் வாழ் மீன்களாகும். சிவபெருமானால் பரதநாட்டியக் கலையை முதல்முதலாக உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இடம் இத்தலம் ஆகும்.
உத்தரகோச மங்கை_ மங்களநாதரைத் தரிசித்தால் நமக்கு அனைத்து விதமான நற்பலன்களும் கிடைக்கும்; இறுதியில் முக்தியும் கிடைக்கும். ஆண்டு முழுவதும் சந்தன காப்பால் மூடப்பட்டிருக்கும் மங்கநாதரை ஆருத்ரா தரிசனம் அன்று மட்டுமே, மரகத நடராஜரின் பச்சை திருமேனியை நாம் தரிசிக்க முடியும். எண்ணற்ற அதிசயங்களைக் கொண்ட
இக் கோயிலின் மங்களநாதரையும், மங்கள நாயகியையும் தரிசிக்கவே நாம் பிறவிகளில் புண்ணியங்கள் பலவும் செய்திருக்க வேண்டும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment