Sunday, November 30, 2025

கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகள்.

கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்
கைசிக ஏகாதசி.....!!! 

கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும்  "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு வைகுண்ட பிராப்தி  நிச்சயம்.  அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி".

மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான "வைகுண்ட ஏகாதசி". 

மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான "கைசிக ஏகாதசி".  மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.

கைசிக ஏகாதசி மஹாத்மியம் :-

கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் "ஸ்ரீ வராக மூர்த்தியே" கூறுவதாக உள்ளது. இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்.

ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார். 

மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த "கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு" உரைத்தார். பகவான் கூறியது.

தென் பாரத தேசத்தில், மகேந்திர பர்வதத்தைக் கொண்ட திவ்யதேசம் "திருக்குறுங்குடி". இங்கு பிறந்த ஒருவன், பூர்வ ஜென்ம பலத்தால் "திருக்குறுங்குடி நம்பியான அழகிய நம்பி" மீது அளவில்லா பக்தியுடன் இருந்தான்.   பத்து ஆண்டுகள், ஒவ்வொரு இரவும் கையில் வீணையுடன், மலை ஏறி, பிரம்ம முகூர்த்தத்தில், பகவான் அழகிய நம்பியை "திருப்பள்ளியெழுச்சி" செய்து வந்தான்.   இந்த புண்ணியவானே "நம்பாடுவான்".

நம்பாடுவான் என்பவன் நல்ல கவிதிறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால், அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். வாசல் வரை வந்து நிற்பதற்கு மட்டுமே நம்பாடுவானுக்கு அனுமதி உண்டு.

கோயிலின் வாசலிலிருந்து பகவானைப் பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும், அழகிய நம்பியான பெருமாள் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பாடல்களை எல்லாம் அவர் கேட்டு கொண்டிருக்கிறார், அதுவே போதும். அதிலே எனக்குப் பரமதிருப்தி! என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான் நம்பாடுவான்.

"கைசிகம்" என்ற பண்ணில் நம்பியின் புகழைப் பாடி மகிழ்வான். 
நம்பாடுவான் தினமும் விடியற் காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளைப் பாடுவான். 

இவனது பெருமையையும் பிரதிபலன் கருதாத பக்தியையும் "ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம்பாடுவான்" எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான். இந்த மஹாத்மியம் "கைசிக புராணம்" என்ற நாமம் தாங்கி வராஹ புராணத்தில் உள்ளது. 

ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி துவாதசி இரவில், ஒரு யாமத்திற்கு மேல் வீணையும், கையுமாய் எம்பெருமானைத் துயிலெழுப்ப மலையேறினான்.  அந்த இரவு நேரத்தில் நடு வழியில், பூர்வத்தில் "சோமசர்மா" என்பவன் அந்தணணாய் இருந்து, யாகம் ஒன்றில் செய்த பெரும் பிழையால் பிரம்மராக்ஷஸனாய் திரிந்தான்.  அந்த பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். தான் பத்து தினங்கள் பட்டினியாய் அலைவதாயும், அவனே தனக்கு தெய்வம் தந்த உணவு என்றான் நம்பாடுவானிடம். பிரம்மராக்ஷஸன் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் பிரம்மராக்ஷஸன் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால், பயப்படவில்லை. 

பிரம்மராக்ஷஸனை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுப்பித், துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான். ஆனால், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே ,எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது. 

நம்பாடுவானோ தான் இறைவனை திருப்பள்ளியெழுச்சி செய்ய மலையேற வழிவிடுமாறு மன்றாடினான்.  பிரம்மராக்ஷஸனோ காது கொடுத்து கேட்கவே இல்லை.  எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரம்மராக்ஷஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் நம்பாடுவான்.   இதற்கு மேல் என்ன சொன்னாலும், பிரம்மராக்ஷஸன் கேட்கப் போவது இல்லை என்று உண்மைச் சூழ்நிலையான தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்து கொண்டான் நம்பாடுவான். 

உடனே, பிரம்மராக்ஷஸனைப் பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து "திருப்பள்ளியெழுச்சி" பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான். அதற்கு பிரம்மராக்ஷஸன் பலமாக சிரித்து, "சண்டாளனே!  பிறவிக்கு ஏற்ப அதத்யம் செய்கிறாய். இந்த பிரம்மராக்ஷஸன் கையில் மீண்ட எவன் மறுபடியும் திரும்பி வருவான்.? என்றதோடு மட்டுமல்லாமல், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய்சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பி விடுவாய்"" என்றது.

அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான பாவங்களைச் சொல்லி, நான் மீண்டும் வராவிடில் இந்தப் பாவங்கள் என்னை வந்தடையும் என்றான் நம்பாடுவான்.   (ஒரு பாவத்தை விட அடுத்த பாவம் கொடியது என்ற வரிசையில் சொல்லி சபதம் இட்டான் நம்பாடுவான்).    17 வது சபதம் வரை சற்றும் மசியாத பிரம்மராக்ஷஸன் 18 வதாக நம்பாடுவான் செய்த சபதம் "மிகக் கொடிய பாவம்" என்று அறிந்து, நம்பாடுவானை மலையேறிச் செல்ல வழிவிட்டது. 

அப்படி என்ன சபதங்கள் செய்தார் நம்பாடுவான்?????

மலையேறி எம்பெருமான் அழகியநம்பியைத் தரிசித்து நான் திரும்ப வரவில்லை என்றால் : 

1. சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும். 

2. பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.

3. எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்.

4. எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன். 

5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில்  அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன். 

6. எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிறானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும். 

7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும். 

8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு ஏதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு அவனுக்கு கொடுக்காமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன். 

9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன். 

10.ஒரு பொருளை தானமாக கொடுப்பதாகக் கூறி, பின்பு  மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையக்கடவேன். 

11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன். 

12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன். 

13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும். 

14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை  வயதான காலத்தில் தனியே விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும். 

15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் "மகா பாவம்" என்னை வந்தடையட்டும். 

16. எவன் பிரம்மஹத்தி தோஷம் செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, விரதத்திற்கு பங்கம் பண்ணுகிறானோ இப்படிப்பட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன். 

17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிறானோ அவனது பாவத்தை அடைவேன். 

இந்த "17 சபதங்கள்" நம்பாடுவான் சொல்லியும் கூட பிரம்மராக்ஷஸன் அசைந்து கொடுக்கவில்லை. 

18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேஸ்வரனான அந்த "ஸ்ரீமன் நாராயணனையும்" மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும். 

இந்த பதினெட்டாவது சபதத்தைக் கேட்டதும் பிரம்மராக்ஷஸன் திகைத்து நின்றது. அது மிகக் கொடிய பாவம் என்று அறிந்து கொண்டது பிரம்மராக்ஷஸன். 

நம்பாடுவான் மேலே சொன்ன சபதங்களைக் கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தைப் புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை என்று உணர்ந்தது. இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது.   பிரம்மராக்ஷஸன் வழிவிடவும் நம்பாடுவான் அழகிய நம்பியைக் காணும் ஆவலில் ஓடோடி மலையேறினான்.  நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம்பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது. 

பெருமாளே! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை உன்னைப் பாட வந்து விட்டேன். இதுவே, எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாகப் பாடினான். ஏனெனில், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை உண்டு விட்டால், அவரது உயிர் பிரிந்து விடும் அல்லவா!  இறைவனை இனிமேல் காண முடியாது என்று மிகவும் உருக்கமாகப் பண் இசைத்து பாடினார் நம்பாடுவான். உள்ளிருந்த "அழகிய நம்பி பெருமாள்" நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார்.   தான் ஆட்கொள்ள வேண்டிய தனது பக்தனின் திருமுகத்தைத் தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத், தான் அளிக்கும் மதிப்புதான் என்ன?  என்று யோசித்தார். 

எம்மை நம்பாடுவானான அவன் காண இயலாதிருந்தும், அவனை நாம் பார்த்து அருள்புரிவோம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது. 

"விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும்!  அதை விட நான் அவனைக் காண வேண்டும் !!!  விலகு" என்று தனது பார்வையைச் சற்றே கொடிமரத்தை நோக்கி பார்வையாலேயே சற்று விலக்கினார்.

எம்பெருமான் அழகியநம்பிக்குத் தான் தன் பக்தர்களின் மேல் எப்பேர்ப்பட்ட அன்பு! கருணை! பாசம் எல்லாம். தன் பக்தன் என்னைக் காணாவிடிலும், நான் அவனைக் கண்டு அவனுக்கு என் தரிசனத்தைக் கொடுப்பேன் என்று பார்வையாலேயே கொடிமரத்தை விலக்குகிறார் எம்பெருமான்.

கொடிமரம் விலகிய அடுத்த நொடியே "பளிச்சென்று ஓர் ஒளி உள்ளே இருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தன் கண் முன்னே, தான் பார்ப்பது நம்பிதானா" என்று உள்ளம் குதூகலித்தான் நம்பாடுவான்.  ஆஹா! பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன பாக்கியம் வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம். 

நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது.  அதைவிடத் தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்மராட்சசனை நோக்கி விரைந்தான்.  இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு பிரம்மராக்ஷஸனிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் அதிகமாகக் காணப்பட்டது.  நம்பாடுவான் பிரம்மராக்ஷஸனை நோக்கி வேகமாகச் செல்லும் பொழுது, ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, "யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்?.  நீ செல்லும் திசையில் ஒரு பிரம்மராட்க்ஷஸன் இருக்கிறான்! அங்கே போகாதே"" என்று கூறினான். 

நம்பாடுவானும், "சுவாமி அடியேனுக்கு அந்த பிரம்மராட்க்ஷஸனைப் பற்றித் தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான். 

அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த பிரம்மராக்ஷஸன் நல்லவன் இல்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என்று சொன்னார்.

நம்பாடுவான் "சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னைச் செல்ல அனுமதியுங்கள்" என்று வேண்டினான். 

தன் உயிரான பிராணனை விட்டாவது சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டுச் சந்தோசம் அடைந்த "சுந்தரபுருஷன்" உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான். 

அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை!! எம்பெருமான் பூமிபிராட்டிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் ரூபமான சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்மராட்க்ஷஸனையும் ஒருங்கே கடாஷித்து அருள்புரிய எண்ணினார் வராஹமூர்த்தி.

நம்பாடுவானும் பிரம்மராட்க்ஷஸன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் அழகிய நம்பி பெருமாளை வாயாறப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறி நின்றான். பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த பிரம்மராட்க்ஷஸனுக்கு, நம்பாடுவான் வந்த பின்பு பசியே இல்லாமல் இருந்தது. நம்பாடுவானைப் புசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிரம்மராக்ஷஸனுக்கு வரவில்லை. அதற்குப் பதிலாக மற்றொன்றை நம்பாடுவானிடம் பிரம்மராக்ஷஸன் கேட்டது.

"ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனான, ஸ்ரீமந்நாராயணரான
அழகியநம்பியை போற்றிப் பாடிய பாட்டின் பலனை எனக்குக் கொடுத்தால் நான்உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.

அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தைக் காக்க வேண்டும்... ஆகவே என்னை புசித்துக்கொள்... நான் பாடிய "கைசிகப் பண்" ஆகிய இந்த பாட்டின் பலனைக் கொடுக்க மாட்டேன் என்றான். 

அதற்கு பிரம்மராட்க்ஷஸன் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னைப் புசித்து விடு என்று கூறினான். 

பிரம்மராட்க்ஷஸனும், "அப்பா! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை இந்த பிறவியான பிரம்மராட்க்ஷஸன்  ஜன்மத்திலிருந்து காப்பாற்று" என்று மன்றாடியது. 

"நீ பிரம்மராட்க்ஷஸனாகப் பிறக்கக் காரணம் என்ன?" என்று கேட்டான் நம்பாடுவான். 

அப்பொழுது பிரம்மராட்க்ஷஸனுக்குத் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. பூர்வ ஜென்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன்.  பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது பிரம்மராட்க்ஷஸனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன்.  தயை கூர்ந்து என்னைக் காப்பாற்று என்று நம்பாடுவானைச் சரண் அடைந்தது. 

தன்னை அண்டிய அந்த பிரம்மராட்க்ஷஸனிற்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான். 

அதன்படியே, "நேற்றிரவு கைசிகம் என்ற பண்" பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்குக் கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜென்மத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவாய் என்று கூறினான் நம்பாடுவான். 

நம்பாடுவானின் வரத்தை பெற்ற பிரம்மராட்க்ஷஸன் ராட்க்ஷஸ ஜென்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோட்சத்தை அடைந்தது. நம்பாடுவானும் நெடுங்காலம் அழகியநம்பி பெருமாளைப் போற்றிப் பாடி, கால முடிவில் திருநாடு (பரமபதம்) அடைந்தான். 

ஸ்ரீரங்கத்தில் அரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த "பராசர பட்டர்" என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதைக் கேட்டு சந்தோசமடைந்த அரங்கன், பராசர பட்டருக்கும் பரமபதத்தைத் தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார். 

ஒவ்வொரு கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது. 

அப்பேற்பட்ட இந்த "கைசிக மகாத்மியத்தை" கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள் என்று பூமி பிராட்டிக்கு "வராஹ பெருமாளே சொன்ன சத்தியம்" இந்த மஹாத்மியம். 

வராஹமூர்த்தி கூறுவது :-

நம்பாடுவானும் கால முடிவில் "திருநாடு பெற்றான்" என்ற வராஹமூர்த்தி, மேலும் பூமிதேவியிடம் உரைப்பது :-

எவனொருவன் கார்த்திகை சுக்லபட்சத்து துவாதசி அன்று நம் சன்னிதியில் இந்த கைசிக மஹாத்மியத்தை வாசிக்கின்றானோ!!!! அல்லது செவி மடுக்கிறானோ (கேட்கிறானோ)!!! அவன் நமக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஆத்மானுபாவம் பண்ணிக் கொண்டிருப்பான்!!!!

என்று பூமிதேவி தாயாரிடம் இந்த "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" பற்றி எடுத்துரைத்தார். பூமிதேவி தாயாரும் பகவான் சொன்னதைக் கேட்டு ஆனந்தமடைந்தார்.   

விசேஷம் :-

பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக வேண்டும் என்பதே இந்த வராஹ புராணத்தின் உள்ளீடான "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" என்பதன் சாரமாகும்.

இந்த கைசிக ஏகாதசியன்று எம்பெருமானின் அனைத்து திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களிலும் விசேஷமாக நடைபெறும். 

 ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-

ஸ்ரீரங்கம் கோவிலில்  "கைசிக ஏகாதசி" நடைபெறுகிறது. அதோடு 365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு அன்று இரவு முழுவதும் சாற்றப்படும். 

இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் "கைசிக புராணம்" விடிய விடிய வாசிக்கப்படும்.  மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும். இந்த காணக்கிடைக்காத காட்சியை "ஸ்ரீரங்கம்" சென்று தரிசித்திடுங்கள்.

திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிக ஏகாதசி சேவிக்கப்படுவதுடன், அன்று இரவு நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.  திருக்குறுங்குடியில் வருடந்தோறும் இந்த நம்பாடுவானின் "கைசிகப்பண்" மற்றும் வராஹ மூர்த்தி காட்சி கொடுத்தல் போன்றவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று மட்டுமா சொல்ல வேண்டும்? நாம் அனைவரும் "பாக்கியசாலிகள்" "புண்ணியவான்கள்" என்று கூட சொல்லலாம்!.

அறிவாளிகள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களில் இருந்து இனிமேலாவது விலகிக் கொள்ள வேண்டும்.  மறுபடியும் பல பாவங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் சாரம்சம். 

உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்.

இப்பிறவியில் எல்லா கஷ்டங்களும் நீங்கி, மகிழ்ச்சியாகிய சந்தோசத்தை அனுபவித்து, அனைத்து செல்வங்களையும் பெற்று, எம்பெருமானின் கருணையைப் பெற்று ஆனந்த வாழ்வு நம் அனைவரும் வாழ அவர் அருள் நம் அனைவரையும் வழி நடத்தட்டும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தீராத வயிற்று வலி நோய்கள் தீர சுந்தரேஸ்வரர்.

அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோவில்
திருக்கலிகாமூர் 

இந்நாளில் இத்தலம் அன்னப்பன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. வயிற்று வலி மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீர வழிபட வேண்டிய தலமிது.

சீர்காழி வெண்காடு சாலையில் மங்கைமடம் என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்து திருநகரி செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

இப்பகுதியில் வாழ்ந்து வந்த வணிகன் ஒருவன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான்.  தென் திருமுல்லை வாயில் சென்று அத்தல இறைவனிடம் வேண்ட, இறைவன் அருளால் வயிற்று வலி நீங்கியது.
பின்பு அவன் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்று கொண்டிருந்தான்.  அப்போது அவன் மீனவர் வலையில் சிக்கிய ஒரு அழகிய அம்பாள் சிலையைக் கண்டான். அதனை எடுத்து வந்து வழிபட அவனது வயிற்று வலி முற்றிலும் மறைந்தது. இறைவன் அசரிரீயாக இட்ட ஆணைபடி அம்பாளை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். 

ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஜோதிடம் கற்க விரும்புபவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Saturday, November 29, 2025

லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தல்

1. லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தல்
லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம்; மையப்பகுதி விஷ்ணு பாகம், நுனிப்பகுதி சிவபாகம். 
இதில் சிவபாகம் சற்றுப் பெரியதாக இருக்க வேண்டும். லிங்கத்தை அமைத்தல் :

 1) உப்பினாலும், நெய்யினாலும் செய்தல், 

2) துணி, மண் ஆகியவற்றாலும் தற்காலிகமாக அமைத்து வழிபடல். 

3) சுட்ட மண்ணினால் லிங்கம் அமைத்தல். 

4) மரம், பாறை ஆகிய ஒன்றால் செய்யப்படுவது மிகச் சிறந்தது. 

5) பவழம், தங்கம் ஆகியவற்றால் ஆன லிங்க வழிபாடு அதிக பலன்களைத் தரும்.

 6) வெள்ளி, பித்தளை, செம்பு, துத்தநாகம், பாதரசம் ஆகியவற்றால் ஆனவை புனிதமானவை. 

7) உலோக நடுவில் ரத்தினங்கள் இழைக்கப்பட்ட லிங்கங்களை வழிபடுவோர் புகழ், வெற்றி அடைவர். அவர்கள் மனோரதம் நிறைவேறும்.
ஈசன் எங்கும் ஆராதிக்கப்படுவர். 

சாஸ்திர முறைப்படி, குறிப்பிட்ட அளவுகளில் லிங்கங்களை அமைக்க வேண்டும். பரமன் ஆராதனைக்கான இடம் ஆலயமுன் அமைதல் வேண்டும். பஞ்ச கவ்யத்தால் அனைத்தும் தூய்மைப்படுத்தல் படவேண்டும். 

ஆராதிப்பவர்கள் பவித்திரம், மோதிரம், கங்கணம் அணிந்திருக்க வேண்டும். முறையான மரக்கொம்புகளாலேயே பந்தல் அமைக்க வேண்டும். நரசிம்ம மந்திரத்தால் பூ பரிக்கிரகம் செய்த பின் சடங்குகளைச் செய்ய வேண்டும். பந்தலின் வடமேற்கு மூலையில் ஹோம குண்டம் அமைக்கப்பட வேண்டும். எந்தத் தெய்வம் பிரதிஷ்டை ஆனாலும் உடன் அரி, அயன், அஷ்டதிக் பாலகர்களையும் ஆராதனம் செய்து பூஜிக்க வேண்டும். முடிவில் சாந்தி ஹோமம் புரோகிதர்க்கு கோதானம், சுவர்ணதானம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் பஜனை, தியானத்தில் ஈடுபட வேண்டும். பக்தி, சிரத்தையுடன் பரமனை ஆராதிக்க வேண்டும். திருஉருவை பிரதிஷ்டை செய்பவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு வைகுந்தவாசத்தை அணிகிறார்கள்.
12. ஆலயங்களுடன் திருக்குளங்கள்
ஆலயத் தடாகங்கள் வருண சாந்நித்யத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதற்காக வருணன் திருஉருவைத் தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் ஆகியவற்றால் அமைக்க வேண்டும். வலதுகரம் அபயஹஸ்தம், இடதுகையில் நாகபாசம்-அன்ன வாகனம்-அவரைத் தொடர்ந்து நதிகள், சர்ப்பங்கள் வருவதாக உருவாக்க வேண்டும். குடத்தில் வருணனை ஆவாகனம் செய்ய வேண்டும். வருண சாந்நித்தியத்தை உண்டாக்க வேண்டும். புரோகிதரைக் கொண்டு ஹோமகுண்டம் அமைத்து ஹோம காரியங்களைச் செய்ய வேண்டும். புனித குடங்களில், புனித நீர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். அக்குடங்களில் கிழக்குக் கடல் நீர், தென்கிழக்கு கங்கை நீர், தெற்குக்கு மழைநீர், தென் மேற்குக்கு ஊற்று நீர், மேற்குக்கு ஆற்று நீர், வடமேற்குக்கு நதி நீர், வடக்குக்குக் காய் கனிகள் பிழிந்த நீர், வடகிழக்குப் புனித தீர்த்தநீர் என்று நிரப்பி ஆராதிக்க வேண்டும் (எல்லாக் குடங்களிலும் ஆற்று நீரையும் நிரப்பலாம்.)
விதிப்படி பூஜைகள் முடித்து குடங்களின் நீரை கிழக்கிலிருந்து தொடங்கி உரிய மந்திரங்கள் கூறி விஷ்ணுவின் அம்சமான வருண சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ÷ஷாடசோபசாரங்கள் சமர்ப்பித்து, சிலையைத் தடாகத்தின் நடுவே நீருக்குள் பூமியில் புதைத்து விட வேண்டும். அதனால் நீர் புனிதமாகும், வருணன் சாந்நித்தியமும் ஏற்படும். பஞ்ச கவ்யத்தை எடுத்து மந்திரத்துடன் தடாகத்தில் நீரில் சேர்க்க வேண்டும். குளம் வெட்டி புனித நீரை உண்டாக்குபவர் ஒரு நாளிலேயே பல அசுவமேத யாகங்கள் செய்த புண்ணியத்தை அடைவர். குளம் வெட்டுவது சிறந்த தானம். அத்துடன் நந்தவனத்தையும் அமைக்க வேண்டும். இதனால் சொர்க்க வாசம் ஏற்படும்.
13. நீராடும் விதி முறைகள்
நீரில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். அப்போது புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதாகத் தியானம் செய்து கொள்ள வேண்டும். ஸ்நானங்கள் பல வகை. தன் இரு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு கிழக்கு நோக்கி சிறிது நேரம் கண் மூடி நிற்க தேகம் சூரியக் கிரணங்களால் புனிதமடைகிறது. மழை நீரிலும் இந்த ஸ்நானம் செய்யலாம். இது அக்னயக ஸ்நானம். உடலை மண்ணைக் கொண்டு தூய்மை செய்து கொள்வது மலஸ்நானம் எனப்படும். அதன் பின்னர் நீராடல் விதிஸ்நானம் கோதூளி கொண்டு தூய்மை பெறுவது மகேந்திர ஸ்நானம் ஆகும். கலசமந்திரம் (அக்கினி (அ) வருணன்) எனப்படும் ஒன்பது மந்திரங்களை உச்சரித்து தலையில் நீர் ஊற்றி கொள்ளும் ஸ்நானம் மந்திர ஸ்நானம் எனப்படும். விஷ்ணுவுக்குப் புனிதமான மந்திரத்தைக் கூறி, தேவைப்படும் போதெல்லாம் மனத்தில் தியானித்தல் மனோஸ்நானம்.
மூன்று காலங்களிலும் சந்தியை வழிபட வேண்டும். பரம சந்தியை எனப்படும் சந்தியா தேவியை ஞானிகள் இரவில் தம் இதயத்தில் இருந்து தியானிப்பர். வலது கை ஆள்காட்டி விரல் நுனியில் பிதுருக்கள் இடம், சுண்டு விரலின் நுனிப்பகுதி பிரஜாபதியின் இடம், கட்டை விரல் நுனிப்பகுதி பிரமன் இடம். இடது உள்ளங்கை அக்கினிக்குப் புனித இடம். வலது உள்ளங்கை சோமனுக்கானது. விரல்கள் சேரும் இடங்கள் மகரிஷிகளுக்குப் புனித இடம். நீராடும் போது அகமர்ஷணம் என்னும் கர்மா செய்வதால் நம் தேகம் பாவம் நீங்கி புனிதமடைகிறது. மேலும், அக்கினிதேவன் வசிஷ்டருக்கு சிவன், சூரியன், கபிலைப் பசு ஆராதனை விவரம் கூறினார். ஆச்சாரியார் சீடனுக்கு தீøக்ஷ அளிக்கும் முறையையும் கூறினார். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Friday, November 28, 2025

அருணாச்சலேஸ்வரர் திருக்கார்த்திகை மகாதீபம் வரலாறு.

🔥#திருக்கார்த்திகை_மகாதீபம்🪔
நினைத்தாலே முக்தி தரும் பஞ்சபூத அக்னி தலமான, தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்றான, பல யுகங்கள் கடந்து இன்றுவரை நிலைத்திருக்கும்
திருமாலும் பிரம்மனும் அடிமுடி காண முடியா உலகப் புகழ்பெற்ற 
#திருவண்ணாமலை 
#அண்ணாமலையார் (#அருணாச்சலேஸ்வரர்) 
#உண்ணாமுலையம்மை திருக்கோயில்
#திருக்கார்த்திகை_மகாதீபம் வரலாறு:

கார்த்திகை தீபமானது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருநாளானது 03.12.2025 புதன்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. திருக்கார்த்திகை அன்று வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளை அகல் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கார்த்திகை திருநாளில் மாலை 6 மணி அளவில் அகல் விளக்கினால் வீடுகள் தோறும் ஜொலித்து காணப்படும். இந்த தீப திருநாளானது 3 நாட்கள் அனைவராலும் கொண்டாடப்படும். நாம் விளக்கு ஏற்றுவதற்காக ஊற்றப்படும் எண்ணெயும், அதில் இடப்படும் திரியும் தன்னைக் கரைத்துக் கொண்டு நமக்கு பிரகாசமான ஒளியை தருகிறது. இது போல மனிதர்களும் தன்னலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த கார்த்திகை தீபம் உணர்த்துகிறது.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விட்டுணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். 

ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இருவரும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடத்தினர். உலகாளும் ஈசனான சிவபெருமானின் முடியை பிரம்மா பார்த்து வருவது எனவும், அவரது பாதத்தை விஷ்ணு பார்த்து வருவது எனவும் முடிவு செய்தனர். அன்னப்பறவை உருவமெடுத்து சிவனின் முடியைக் காண உயரே பறந்தார் பிரம்மா. விஷ்ணுவோ, பன்றி உருவமெடுத்து, பூமியைத் தோண்டி சிவனின் பாதத்தை தேடி பாய்ந்தார். பிரம்மா உயரே பறக்க பறக்க சிவன் உயர்ந்து கொண்டே போனார். விஷ்ணு கீழே போசுப்போக சிவனின் கால்கள் நீண்டு கொண்டே போனது. இருவருமே தோல்வியடைந்து சிவபெருமானிடம் செய்வதறியாது நின்றனர். அப்போது சிவன் இருவரிடமும், இந்த உலகில் யாருமே பெரியவர் இல்லை, நமது மனதில் இருக்கும் அகங்காரமே இது போன்ற போட்டிகளுக்கு காரணமாகிறது என்றார். இதைக்கேட்ட பிரம்மா, விஷ்ணுவின் மனதில் ஒளி பிறந்தது. அப்போது சிவனும் ஜோதி வடிவமாய் காட்சி தந்தார். தங்களுக்கு கிடைத்த இந்த ஜோதி வடிவக்காட்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென இருவரும் வேண்டினர். கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தருவதாக அருள்பாலிக்கின்றார் சிவபெருமான்.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. கார்த்திகை தீப விழாவினை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக பிரித்து கோவில் மற்றும் வீடுகளில் கொண்டாடுவர்.

#குமராலய தீபம்: 

கார்த்திகை மாதத்தில் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.

#விஷ்ணுவாலய தீபம்: 

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு கோவில்களில் கொண்டாடப்படும் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.

#சர்வாலய தீபம்: 

ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

#கார்த்திகை மாதம்:

தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது தான் சிறப்பு: இவை 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்.

#கார்த்திகை நாள்:

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

#திருவண்ணாமலை கார்த்திகை தீபம்:

திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபம் ஏற்றிய பிறகு, மாலையில் மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் திருவண்ணாமலை மலையானது 2668 அடி உயரத்தை கொண்டுள்ளது.

இந்த மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலையில் தான் சக்தியும், சிவனும் அர்த்தநாரிஸ்வர கோலத்தில் கலந்தனர். கார்த்திகை தீபமன்று நாம் வீட்டில் ஏற்றும் தீப விளக்கானது தீப ஒளியானது யார் மீது படுகிறதோ அவர்களுக்கு மறுபிறவியில் எந்த ஒரு துன்பமும் நடக்காது. இறைவன் மகாபலிக்கு முக்தி அளித்தபோது ‘கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்ற மகாபலியின் விருப்பத்தினை, நிறைவேற்றி இறைவன், மகாபலியை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். இப்படியாக மகாபலியின் வாழ்க்கையானது இறைவனின் திருவருளை சென்றடைந்தது.

#பரணி தீபம்:

காலை 4 மணியளவில் 5 மடக்குகளில் (அகல்) தீபம் ஏற்றி வைப்பார்கள். இதுவே பரணி தீபம் ஆகும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இத்தீபம் ஏற்றுவதால் "பரணி தீபம்"எனப்படுகிறது. 5 மடக்குகளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும்.

தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

இக்கொப்பரையை 1668-இல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரையாகச் செய்து கொடுத்தார். பின்பு 1991-இல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் (மீனவர்) ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3௦௦௦ கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது.

இம்மகாதீபம் ஏற்றுகின்ற உரிமை பர்வத ராஜகுலத்தினர் பெற்றுள்ளனர். இவர்கள் "செம்படவர்கள்" எனப்படுவர். சிவன் படையினர் செம்படவர்கள். இதன் நினைவாக இவர்களுக்கு இவ்வுரிமை வழங்கபடுகிறது. இவர்கள் தங்களுக்குள் முறை போட்டுகொண்டு ஆண்டுதோறும் மலைமீது தீபம் ஏற்றுகின்றனர்.

கார்த்திகை தீபம் ஏற்றும் முறை:

கார்த்திகை தீப திருநாள் அன்று வீட்டில் கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றினால் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். மேற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றினால் கடன் தொல்லை முற்றிலும் நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத் தடை நீங்கும். தெற்குத் திசை நோக்கி எப்போதும் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.

தீபமன்று வீட்டில் 27 விளக்குகள் ஏற்றி வைத்தால் நல்லது. சிலர் தங்களுடைய வீட்டில் கார்த்திகை அன்று குத்து விளக்குகளில் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த நாளில் நைவேத்தியமாக இறைவனுக்கு அவல், கடலை நெல்பொரி, அப்பம் போன்ற உணவுகளை படைத்தது மகிழ்வார்கள்.

விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் நீங்கள் மனதில் நினைத்த செயல்கள் அனைத்தும் நடக்கும்.

விளக்கில் இரண்டு முகம் வைத்து ஏற்றினால் வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோசம் நிலைக்கும்.

மூன்று முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றி வர அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.

கார்த்திகை அன்று வீடு அலங்காரம்:

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீட்டின் உள் புறம் மற்றும் வெளியிலும் சிறிய விளக்குகளில் தீபமேற்றி அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

விரதம் இருக்கும் முறை:

கார்த்திகை விளக்கீடு: கார்த்திகையின் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகல் நேரத்தில் மட்டும் ஒரு வேலை உணவு சாப்பிட்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர்.

மறுநாள் காலையில் நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாத சிறப்பு:

தமிழ்நாட்டில் கார்மேகம் எனும் சோணைமழை பொழியும் மாதத்தை தான் கார்த்திகை மாதம் என்று சொல்கிறோம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலை நேரத்தில் தோன்றக்கூடியதை கார்த்திகை மாதம் என்று சொல்லப்படுகிறது.

கார்த்திகை மாத பண்டிகைகளில் முக்கியமானதாக விளங்குவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கார்த்திகை தீபத்தைப் பற்றி பல்வேறு விதமானச் செய்திகளைக் நம்மால் காணமுடியும். அதில் இட்டுக் கட்டுக் கதைகளுக்குப் பின்னால் இருக்கும் புராணக் கதைகளையும் உண்டு.

#முதல் கதை: 

கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ள சான்றினைத்தான் முக்கியச் சான்றாக இந்த புராண கர்த்தாக்கள் காட்டுகிறார்கள். அதன்படி, தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்து நின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும், அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களை பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தை தொடங்கினர். அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார்.

இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள் என்பது கதை.

#இரண்டாம் கதை: 

சூரனை கொல்ல வேண்டும் என்ற தேவர்கள் சிவனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதை ஏற்ற அவர் அதற்கான காலம் விரைவில் வரும், சூரனை அழிக்க தமது படைப்பில் ஒருவன் வருவான் என வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தமது படைப்பை உருவாக்க தமது மனைவி சக்தியுடன் புணரத் தொடங்குகிறார். புணர்ச்சி நிற்கவில்லை. யுகம் யுகமாகத் தொடர்கிறது. அப்படி தொடரும் போது மானாகவு, யானையாகவும் இன்னும் பல மிருகங்களாவும் உருவெடுத்து புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர் சக்தியும் சிவனும். இவர்களின் செய்கையினால் தேவலோகம் தடுமாறுகிறது. இவர்களின் புணர்ச்சியை எப்படி நிறுத்துவது என்றுத் தெரியாமல் தேவர்கள் கவலைப்படுகிறார்கள்.

இருவரின் புணர்ச்சியினால் உருவான வியர்வை துளிகள் லட்சக்கணக்கில் பெருகி வழிகின்றன, அதிலிருந்து தேவ கணங்கள் உருவாகின்றன, முன்னணி படையணிகள் தோன்றுகின்றன, இறுதியில் சிவன் தனது சுக்கிலத்தை தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்த குழந்தைகள் கார்த்திகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள்.

அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன் பிறந்தநாள்.

#மூன்றாவது கதை: 

சப்த ரிஷிகளின் மனைவிகளின் அழகில் மயங்கிய அக்னிபகவானுக்கு அந்த பெண்கள் மீது அடக்க முடியாத மோகம் உண்டானது. அதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவனது மனைவி சுவாகாதேவி தனது கணவன் முறைத் தவறி நடந்துக் கொண்டால் சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்து போனாள். அதனால் தானே ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு, தன் கணவன் ஆசையை நிறைவேற்றிளாள். ஆனால் வசிட்டரின் மனைவி அருந்ததியைப் போல அவளால் உருமாற முடியவில்லை. எனினும் சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை பெண்கள் என்று பெயர். இப்பெண்கள்தான் கார்த்திகேயனை வளர்த்தார்கள் என்பது ஒரு கதை.

கார்த்திகை விழா:

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத் திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

கோவிலில் தீபம் ஏற்றுதல்:

மலையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்குத் தீபதரிசனம் காண்பிக்கப்படும். இந்நேரத்தில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் இத்தீபத்தைக் காண அலைமோதும். தீபம் ஏற்றும் நேரம் நெருங்கியவுடன் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுவார். இறைவன் தேவிக்கு தன்னுடைய இடப்பக்கம் அளித்து இன்று காட்சி அளித்தார். அதன் நினைவாக 3 நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வந்து தரிசனம் தருவார். பின்பு உடனே மலையில் 6 மணிக்குத் தீபம் ஏற்றுவர். அப்பொழுது "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று முழக்கம் இடுவர்.

கார்த்திகை தீபத்தன்று மலைவலம் வருதல் மிகவும் சிறப்பானது. அந்நாளில் வலம் வருதல் அவர்களுக்குப் பாவவிமோசனம் நிச்சயம் கிடைக்கும். கர்ம வினைகளைப் போக்கும். என்பது அந்நகர மக்களின் நம்பிக்கை.

#கார்த்திகை தீப சொக்கபனை:

அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜை தடைபெற்று, சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். சுட்டகப்பனை எனும் சொல்லே சொக்கபனையாக மருவியுள்ளது. சுட்டகம் என்பது வறட்சி, உலர்ந்த தென்னை பனை, கமுகு, வாழை இவற்றின் தண்டினை தீபதண்டமாக ஆலயங்களில் பனை மற்றும் தென்னை ஓலைகளால் சுட்டகப்பனை எனும் சொக்கப்பனையில் அக்னி மூட்டி, எரியும் ஜுவாலையில் ஜோதி சொரூபமாக இறைவனை வழிபடுவதாக வரலாறு இருந்து வருகிறது.

திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப் படுவதின் நோக்கம் “நான்” அகந்தையுடன்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். நமக்கும் மேலாக ஒருவன் இருக்கிறான். ஆணவத்துடன் இருந்தால், நமக்கு அவன் புத்தி புகட்டுவான் என்ற அரிய தத்துவத்தை விளக்க இந்த விழா எடுக்கப்படுகிறது.

இப்படியாக நாம் கார்த்திகை தீப விழாவன்று விளக்கேற்றி நாம் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளாமல், இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எந்த கஷ்டமும் இன்றி வாழ இறைவனை வேண்டி இந்த கார்த்திகை தீபத்தை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வோம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, November 27, 2025

சபரிமலை ஐயப்பன் கோவிலின் ஆன்மிக வழிபாட்டு முறைகள்

🙏 சபரிமலை ஐயப்பன் கோவிலின் ஆன்மிக வழிபாட்டு முறைகள் 🙏
🛕 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இக்கோவிலில் பல விதமான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

🕉️ முக்கிய பூஜைகள்:

உஷத் கால பூஜை: இது நாளின் தொடக்கத்தை குறிக்கிறது. அதிகாலையில் நடைபெறும் இந்த பூஜை, பக்தர்களுக்கு புத்துணர்ச்சியையும், நாள் முழுவதும் ஐயப்பனை நினைத்து வாழும் உத்வேகத்தையும் அளிக்கிறது.

🌞உச்சி கால பூஜை: இது மிகவும் சக்தி வாய்ந்த காலமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், ஐயப்பனின் சன்னிதி மிகவும் பிரகாசமாக இருக்கும்.

🌙அத்தாழ பூஜை: இரவு நேரத்தில் நடைபெறும் இப்பூஜையில் உண்ணியப்பம் மற்றும் பானகம் நிவேதனம் செய்யப்பட்டு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும்.
 படி பூஜை: இது 18 படிகளிலும் நடைபெறும் ஒரு சிறப்பு வழிபாடு. ஒவ்வொரு படியும் ஐயப்பனின் ஒரு பரிமாணத்தை குறிக்கிறது. இந்த பூஜையில் கன்னி சாமிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

🌄 உதயாஸ்தமன பூஜை: இது சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களில் நடைபெறும் ஒரு சிறப்பு பூஜை. இது இயற்கையுடனான ஐக்கியத்தை குறிக்கிறது.

பூஜைகளின் சிறப்பு அம்சங்கள்:

சபரிமலை பூஜைகள் தந்திரி முறையில் நடத்தப்படுவதால் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. தந்திரி என்பவர் குறிப்பிட்ட சடங்குகள் மற்றும் மந்திரங்களை அறிந்த ஒரு ஆன்மிக குரு ஆவர்.

பூஜைகளின் போது பல்வேறு வகையான நைவேத்தியங்கள் ஐயப்பனுக்கு படைக்கப்படுகின்றன. இந்த நைவேத்தியங்கள், பக்தர்களின் பக்தியின் அடையாளமாகும்.

 பூஜைகளில் பக்தர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பக்தர்கள் பூஜைகளில் பங்கேற்று, ஐயப்பனை நேரடியாக தரிசிக்கலாம்.

 ஐயப்ப பக்தியின் அடையாளம்.. 🌴பாவங்களை நீக்கும் தென்னம்பிள்ளை.
                  சபரிமலைக்கு தென்னம்பிள்ளையை எடுத்து செல்வது ஏன்? 

சபரிமலைக்கு தென்னம்பிள்ளையை எடுத்து செல்வது ஏன்? 

🌴 தென்னம்பிள்ளை என்பது ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு நேர்த்திக்கடன். இதற்கு பல ஆன்மிக மற்றும் சமூக காரணங்கள் உள்ளன.

 ஆன்மிக காரணங்கள்:

✨ தென்னம்பிள்ளை என்பது பக்தரின் பக்தியின் அடையாளமாகும். இது ஐயப்பனிடம் முழு மனதாக அர்ப்பணிக்கப்படும் ஒரு நேர்த்திக்கடனாகும்.

 புராணக் கதை:

 புராணங்களின்படி, ஐயப்பன் தனது தவத்தின் போது தென்னம்பிள்ளையை உணவாக உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பக்தர்கள் தங்களது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக தென்னம்பிள்ளையை அர்ப்பணிக்கின்றனர்.

 பாவங்கள் நீங்கும்:

🌟 தென்னம்பிள்ளையை அர்ப்பணிப்பதன் மூலம் பக்தர்களின் பாவங்கள் நீங்கி, மனம் தூய்மை அடையும் என நம்பப்படுகிறது.

 வரம் பெறும் நம்பிக்கை:

🙏 தென்னம்பிள்ளையை அர்ப்பணிப்பதன் மூலம் ஐயப்பனிடம் இருந்து வரம் பெறலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது


🎋 பழக்கவழக்கங்கள்:

🛤️ சபரிமலை யாத்திரை என்பது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் ஒரு பழக்கவழக்கமாகும். இதில் தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஒரு முக்கியமான பகுதியாகும்.

🌿 தென்னம்பிள்ளையின் கலாச்சார முக்கியத்துவம்:

🎋 தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஐயப்ப பக்தர்களின் கலாச்சார அடையாளமாகும்.

📿 ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம்: 

🕉️ ஓம் மஹாத்யுதயே நம
🕉️ ஓம் கோப்த்ரே நம
🕉️ ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
🕉️ ஓம் கதா தங்காய நம
🕉️ ஓம் கதா க்ரண்யை நம

🕉️ ஓம் ரிக்வேத ரூபாய நம
🕉️ ஓம் நக்த்ராய நம
🕉️ ஓம் சந்த்ர ரூபாய நம
🕉️ ஓம் வலாஹகாய நம
🕉️ ஓம் தூர்வாச்யாமாய நம

✨ ஸ்லோகத்தின் முக்கியத்துவம்:

🌞இந்த ஸ்லோகம் ஐயப்பனின் பல அம்சங்களை போற்றுகிறது. அவர் ஒரு ஒளி, பாதுகாப்பாளர், புகழ்பெற்றவர், வீரர், வேதங்களின் சாராம்சம், நட்சத்திரம், சந்திரன் மற்றும் துர்வாச முனிவரின் அருளைப் பெற்றவர் என போற்றப்படுகிறார்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, November 26, 2025

அழகியசிங்கபெருமாள் திருவேளுக்கை திவ்ய தேசம் - 46

#அழகியசிங்கபெருமாள் #திருவேளுக்கை திவ்ய தேசம் - 46
மூலவர்: முகுந்த நாயகன், அழகிய சிங்கர்
தாயார்: வேளுக்கை வல்லி
தீர்த்தம்: கனக சரஸ், ஹேமசரஸ்
பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: திருவேளுக்கை, வேளுக்கை
ஊர்: காஞ்சிபுரம்
மாநிலம்: தமிழ்நாடு
மங்களாசாசனம் : பேயாழ்வார்

புராண வரலாற்றின் படி பிருகு முனிவருக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம். பேயாழ்வார் இத்தலத்தினை, உப்பிலியப்பன் கோயில், கும்பகோணம், திருப்பதி போன்ற தலங்களுக்கு இணையாகப் பாடியுள்ளார். இதிலிருந்து இத்தலத்தின் சிறப்பை அறியலாம்.
ஆழ்வார்களைத் தவிர சுவாமி தேசிகனும் இப்பெருமாளை #காமாஸீகாஷ்டகம் என்ற ஸ்லோகத்தால் போற்றியுள்ளார். இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும். இதனை ‘காமாஷிகா நரசிம்ம சன்னதி' என்றும் அழைப்பார்கள்.

திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுகிற அவதாரம் நரசிம்ம அவதாரம். பெருமாளின் காக்கும் குணம் உடனே வெளிப்பட்ட அவதாரம். பக்தனின் வார்த்தையை பகவான் உடனே காப்பாற்றிய அவதாரம். ‘வேள்' என்ற சொல்லுக்கு ‘ஆசை' என்று பொருள். இரணியனை வதம் செய்த பின் பகவான் நரசிம்மர் அமைதியை விரும்பினார். அவர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் ‘வேளிருக்கை' என்றாகி, காலப்போக்கில் வேளுக்கை என்றாகி விட்டது. 

ஒருமுறை பிரம்மா யாகம் செய்த போது யாகத்தை அழிக்க அரக்கர்கள் வந்தனர். பிரம்மா பெருமாளிடம் இந்த யாகம் சிறப்பாக நடக்க அருள்புரியுமாறு வேண்டினார். பிரம்மாவின் வேண்டுதலை ஏற்றார் பெருமாள். முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அதே திருக்கோலத்துடன் #ஹஸ்திசைலம் என்ற குகையிலிருந்து புறப்பட்டு வேள்வியை அழிக்க வந்த அசுரர்களை விரட்டினார். அவர்கள் காஞ்சியில் இந்த இடத்தில் காணாமல் போய்விட்டார்கள். அங்கேயே மேற்கு நோக்கி அமர்ந்து யோக நரசிம்மராகி விட்டார். இவருக்கு ஆள் அரி, முகுந்த நாயகன் என்ற திருநாமங்களும் அவதாரம் எடுத்த
அதே திருக்கோலத்துடன் #ஹஸ்திசைலம் என்ற குகையிலிருந்து புறப்பட்டு வேள்வியை அழிக்க வந்த அசுரர்களை விரட்டினார். அவர்கள் காஞ்சியில் இந்த இடத்தில் காணாமல் போய்விட்டார்கள். அங்கேயே மேற்கு நோக்கி அமர்ந்து யோக நரசிம்மராகி விட்டார். இவருக்கு ஆள் அரி, முகுந்த நாயகன் என்ற திருநாமங்களும் உண்டு. 

நரசிம்மரின் மேல் உள்ள விமானம் கனக விமானம். இந்த பெருமாளை பிருகு முனிவர் தரிசனம் செய்துள்ளார். கோயில் சுற்று ப்பிரகாரத்தில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார் நரசிம்மரின் உக்கிரம் தாளாது சற்றே தலை சாய்ந்து பயத்துடன் இருப்பது மிகவும் அதிசய அமைப்பாகும். இங்கு துன்பங்கள் விலக பெருமாளிடம் பிரார்த்திக்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றுகின்றனர்.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது.

திறக்கும் நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை
முகவரி
அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம் - 631501 காஞ்சிபுரம் மாவட்டம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, November 25, 2025

27 நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் மரம்

27 நட்சத்திரம் அதிர்ஷ்டம் தரும் மரம்

நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்

நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை,பாவ கதிர்களை கிரகிக்கும் சக்திவிருட்சங்களுக்கு 
உண்டு..உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால்நட்டு ,நீரூற்றி வளர்த்து  
வாருங்கள்.அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளம்பெறும். 

உங்கள்பாவக் கதிர்களை
கிரகித்து, உங்களுக்கு அற்புதமான  ஒரு  ஆன்ம  தொடர்பை இந்த  மரங்கள் செய்யும்.

சிலமரங்களை  வீட்டில்  வளர்க்க முடியாது. உங்கள் கண்படும்  இடங்களில், உங்கள் தோட்டத்திலோ,  சாலை  ஓரங்களிலோ, இல்லைஆன்மிக ஸ்தலங்களில், 
ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமி மலை) தென்மேற்குப்பகுதியில் சூரியக்கதிர்கள்  படும்  இடத்தில்  
நட வேண்டும் 

அந்த மரக்கன்றையும் அவரதுபிறந்த  நட்சத்திரம் உதயமாகும்  நாளில்  நடுவது  மிகநன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டுஊறிய நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,அம்மரக்கன்று வளர,வளர அதைநட்டவரின் வாழ்க்கை மலரும் அந்த மரக்கன்றை நட்டவரின்  பிறந்த ஜாதகத்தில்  இருக்கும் அனைத்து  தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும். 

அம்மரக்கன்று  பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும். 

அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும் .

கர்ம வினைகளை வெற்றிகொள்ள  ‘விருட்ச சாஸ்திரம் ’இப்படி ஒரு  வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரியவிருட்சம் எனப்படும் மரம் எதுவெனப்பார்ப்போம்

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள்.

சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.

அருகில் இருக்கும் 
சித்தமருத்து-வரையோ, அல்லது, கூகுள்லெயோ  தேடிப்பாருங்கள் இல்லையா, அந்தநட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல 
விருட்சங்கள் உண்டு.

அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது, நீங்கள்
அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. 

ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது. 

திருவண்ணாமலை சென்றால், 
அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்.  

உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு. உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் .. 

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள் இவை :

அஸ்வதி – எட்டி
பரணி -- நெல்லி
கார்த்திகை – அத்தி
ரோகிணி ---  நாவல்
மிருகசீரிஷம் --- கருங்காலி
திருவாதிரை - செங்காலி
புனர்பூசம் - மூங்கில்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - புரசு
உத்திரம் - இலந்தை
அஸ்தம் - மகாவில்வம்
சுவாதி - மருதம்
சித்திரை - அகண்ட வில்வம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழம்
கேட்டை - பராய்
மூலம் - மரா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
அவிட்டம் – வன்னி
சதயம் – கடம்பு
பூரட்டாதி -- மா
உத்திரட்டாதி – வேம்பு
ரேவதி – இலுப்பை

ஒவ்வொரு மரத்தையும் நட்சத்திர அதிதேவதையுடன் பூஜை செய்தால் வாழ்வில் நலம் பெருகும்.

வருஷாதி விருட்சங்கள்
பிரபவ                      - கருங்காலி மரம்
விபவ                       - அக்ரூட்மரம்
சுக்ல                         - அசோக மரம்
4.ப்ரமோதூத
பிரஜோர்பத்தி       - பேயத்தி மரம்
ஆங்கீரஸ்              - அரசுமரம்
திருமுக                  - அரைநெல்லி
பவ                            - அலயாத்தி
யுவ                           - அழிஞ்சில் மரம்
தாது                          - ஆச்சாமரம்
ஈஸ்வர                   - ஆலமரம்
வெகுதான்ய         - இலந்தை மரம்
பிரமாதி                  - தாளைபனைமரம்
விக்ரம                   - இலுப்பை மரம்
விஷு                     - ருத்திராட்சம்
சித்ரபானு             - எட்டி மரம்
யுவபானு              - ஒதியம்
தாரண                    - கடுக்காய் மரம்
பார்த்திவ               - கருங்காலி மரம்
வியய                     - கருவேலமரம்
சர்வஜித்                - பரம்பை மரம்
சர்வதாரி              - குல்மோகூர்மரம்
விரோதி                - கூந்தல் பனை
விக்ருதி                - சரக்கொன்றை
கர                           - வாகை மரம்
நந்தன                   - செண்பகம்
விஜய                   - சந்தனம்
ஜய                         - சிறுநாகப்பூ
மன்மத                 - தூங்குமூஞசி மரம்
துன்முகி              - நஞ்சுகண்டாமரம்
ஏவிம்பி                - நந்தியாவட்டை
32.விளம்பி 
விகாரி                 - நாவல்
சார்வரி                - நுணாமரம்
பிலவ                   - நெல்லி மரம்
சுபகிருது            - பலா மரம்
சோபாகிருது    - பவழமல்லி மரம்
குரோதி                 - புங்கம் மரம்
விசுவாவக        - புத்திரசீவிமரம்
பராபவ                - புரசுமரம்
பிலவங்க           - புளிய மரம்
கீலக                    - புன்னை மரம்
சவுமிய               - பூவரசு மரம்   
சாதாரண           - மகிழமரம்
விரோதிகிருத -  டம்பை
பரீதாபி               - மராமரம்
பிரமாதீச            - மருதமரம்
ஆனந்த              - மலைவேம்பு
ராட்சஸ            - மாமரம்
நள                       - முசுக்கொட்டை மரம்
பிங்கள              - முந்திரி
காளயுக்தி        - கொழுக்கட்டை மந்தாரை
ஸித்தார்த்தி   - தேவதாரு
ரவுத்ரி               - பனை மரம்
துன்மதி            - ராமன்சீதா
துந்துபி             - மஞ்சள் கொன்றை
ருத்ரோத்காரி- சிம்சுபா
ரக்தாக்ஷி
குரோதன        - சிவப்புமந்தாரை
அட்சய             - வெண்தேக்கு

இது போன்ற தெய்வீக மரங்களை வளர்த்து வணங்கி வந்தால் வாழ்வில் வளம் பெறலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சங்கடங்களை உடனடியாக நீக்குவார் சக்கரத்தாழ்வார்

சங்கடங்களை உடனடியாக நீக்குவார் சக்கரத்தாழ்வார்
சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ??

திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.

திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.

பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மாராக அவதரித்தார்.

தாயின் கருவில் இருந்து வராததாலும் கருடருடன் வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர்.

பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.

நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார்.

அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாரின் தலை நெருப்புபோல ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

பாதங்கள் சக்கரத்ததைப்போல சுழன்று அருள் செய்ய எப்போதும் ஆயத்த நிலையில் இருக்கும்.

சக்கரத்தாழ்வாரை ஆறின் மடங்குகளான எண்ணிக்கையில் 6, 12, 24, 48 என்று வலம் வருதல் நலம்.

சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நாளையென்பது
நரசிம்மருக்கு
கிடையாது என்பர்.

துன்பத்திலிருந்து
விடுபட்டு உடனடியாக
நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும்
நரசிம்மரையும்
ஒரு சேர வழிபடுவது
மிகச் சிறப்பு.

இதன் அடிப்படையில்தான் சக்கரதாழ்வர்க்கு பின் நரசிம்மர் இருப்பார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

நவபுலியூரின் இரண்டாம் ஆலயமான திருப்பாதிரிப்புலியூர்.

நவபுலியூர் 02 : திருப்பாதிரிபுலியூர
இந்திய தமிழகத்தின் இந்து ஆலயங்களெல்லாம் மிக மிக தொன்மையானவை, ஒவ்வொன்றும் எக்காலத்தில் உருவானதென அறியமுடியாதபடி பழமையானவை, ஒவ்வொரு ஆலயத்துக்கும் தனி சிறப்பும் தத்துவமும் தனித்துவமான ஆற்றலும் உண்டு
அப்படி ஒரு அபூர்வமான ச்கதி நிலையமே நவபுலியூரின் இரண்டாம் ஆலயமான திருப்பாதிரிபுலியூர

அன்று "கடை ஞாழலூர்" என்றும் இன்று கடலூர் என்றும் அழைக்கபடும் அந்த ஊரில்தான் இந்த சக்தியான ஆலயம் ஸ்தாபிக்கபட்டிருக்கின்றது

சோழ மன்னர்களும் பல்லவர்களும் பாண்டியர்களும் நாயக்கர்களும் மராட்டிய மன்னர்களும் கண்போல் காத்துவந்த தலம் இது
இது தேவாரம் பாடபட்ட தலம், சம்பந்தபெருமான் பாடுகின்றார்

"போதினானும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள்
ஆதிநாலும் அவலம் இல்லாத அடிகள் மறை
ஓதிநாளும் இடும் பிச்சை ஏற்றுண்டுணப் பாலதே".

அப்படியே அப்பர் பெருமானும் பாடுகின்றார்

"கருவாய்க் கிடந்து உன்கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய் பொலியச் சிவாய நம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி  பாதிரிப் புலியூர் அரனே."

பாதிரி மரங்கள் நிறைந்திருந்த இந்த பகுதியில் யார் இந்த ஆலயத்தை தொடங்கிவைத்தார்கள் என்றால் அதை அன்னை சக்தியே சிவனின் திருவுளத்துக்க்கு ஏற்ப ஸ்தாபித்து கொடுத்தார்

அவ்வளவுக்கு பெரும் பெருமை கொண்ட ஆலயம் இது

இந்த ஆலயம் சிவாலயமாக கருதபட்டாலும் அன்னைக்கான தலமாக இருக்கவேண்டும் என திருவுளம் கொண்ட  பெருமான், ஒரு நாடகம் நடத்தினார்

அதன்படி அவரும் தேவியும் அமர்ந்திருந்த நேரம், சிவனின் கண்களை விளையாட்டாக பொத்தினார் தேவி, தேவர்களே உலகை காக்க இமையா கண்களை பெற்றவர்கள், அவர்கள் கண் இமைக்கும் நொடியில் கூட உலகம் மாறிவிடும் கடமை தவறிவிடும் என்பதால் ஒரு நொடி கூட கண்ணை மூடாதபடி திறந்த கண்ணோடு இருப்பார்கள், அவர்கள் கண் இமைக்காது

தேவர்களுக்கே அப்படி என்றால் சிவபெருமான் எப்படி இருக்கவேண்டும்? அவர் கண்ணை மறைத்தால் என்னாகும்?

எங்கும் இருள் உண்டாயிற்று, அன்னை சட்டென அஞ்சி கைகளை எடுத்தாலும் பெரும் குழப்பம் வந்தது
இந்த குழப்பத்துக்கு காரணமான நீ பூலோகம் செல் என சாபமிட்டார் சிவன், தேவி தவறை உணர்ந்து மன்றாடினாள்

அவள் மேல் இரக்கம் கொண்ட சிவபெருமான் , நீ போய் எல்லா ஆலயங்களையும் வணங்கு, எங்கே உன் இடது கண்ணும் இடது தோளும் துடிக்குமோ அங்கே நீ இழந்த நிலையினை மீட்பாய், என்னை அடைவாய் என பரிகாரமும் சொன்னார்

தேவி பூலோகம் வந்து தானாக உருவாகிய எல்லா லிங்கங்களையும் தரிசித்து வழிபட்டாள், இந்த லிங்கத்தை அதாவது பாதிரி மரங்கள் நிரம்பிய இந்த இடத்தில் இருந்த லிங்கத்தை வணங்கியபோது அவளின் இடது கண்ணும் தோளும் துடித்தது, அன்னை அங்கே சாபம் நீங்கி சிவனை அடைந்தாள்

எந்த பாதிரி மரத்தடியில் அவள் தவமிருந்தாளோ அந்த மரத்தின் பெயராலே அவ்வூர் திருப்பாதிரிபுலியூர் என்றாயிற்று
அந்த மரம் அதாவது அன்னை எந்த மரத்தடியில் தவமிருந்தாளோ அது இன்றும் உண்டு.

அங்கிருந்துதான் தொடங்குகின்றது இந்த ஆலய வரலாறு, இது சிவனை அன்னை மீண்டும் அடைந்த இடம் என்பதால் பிரிந்தவர் சேரவும், இழந்ததை கொடுக்கும் தலமாகவும் விளங்குகின்றது

கடைஞாழல், கன்னிவனம், பாடலவுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாதிரிப்பதி, புலிசை என இதற்கு பல பெயர்கள் உண்டு
அப்படியான இந்த தலத்தில்தான் புலிக்கால் முனிவர் புலிபோல் விடாபிடியாக தவமிருந்த காரணத்தால் புலியூர் எனும் பெயரும் சேர்ந்துகொண்டது

அன்னை சிவனை வேண்டி தவமிருந்தபோது சில காட்சிகளை அரூபமாய் கண்டாள், பெரும் பெரும் ஞானியரும் ரிஷிகளும் தெய்வீக பாடகர்களும் வந்து சிவனை பாடுவதையும் அதிலே அவர் மகிழ்வதையும் கண்டாள்

அதனால் பாடலை ஏற்று மகிழும் சிவனை பாடலீஸ்வரர் என அவளே பெயரிட்டாள், அந்த பாடலீஸ்வரரை நோக்கி தவமிருந்ததால் அவள் அருந்தவ நாயகி என்றுமனாள்

இந்த தலத்தின் பெருமை இன்னும் நீண்டது, புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிவனின் உத்தரவுக்கு ஏற்ப இங்கு வந்து வணங்கி பலன் பெற்றார்கள்

அப்படியே வியாக்ரபாதரரின் மகன் உபமன்யு இங்கு தவமிருந்தார், சில சாபம் காரணமாக முயல் வடிவம் பெற்ற அவர் இங்கேதான் தவமிருந்து தன் இழந்த வடிவினை மீட்டெடுத்தார்

அகத்தியர், கங்காதேவி, அக்னிபகவான் என பலர் வந்து சிவனை பணிந்து இழந்ததை எல்லாம் மீட்டார்கள்

காலம் காலமாக இப்படி பலர் வந்து வழிபட்டு இழந்ததை மீட்ட ஆலயத்தில், பிரிந்தவர் இங்கு வந்து முறையிட்டு வழிபட்டு மறுபடி சேர்ந்த ஆலாய்த்தில்தான் அப்பர் பெருமானுக்கு பெரும் அதிசயம் செய்தார் சிவ‌பெருமான்

அப்பர் பெருமான் வாழ்வில் எல்லோரும் அதிசயிக்குமிடம் அல்லது பெரும் அற்புதமான இடம் அவரை கல்லை கட்டி கடலில் இட்டபோது அவர் கம்பீரமாய் கட்டுமரமாய் மிதந்து கரையேறிய காட்சி

அந்த அதிசயமே அப்பர் பெருமானை பணிந்து சமண மன்னன் மகேந்திர வர்மனை சைவத்தை ஏற்றுகொள்ள செய்தது
அப்பர் சுவாமிகள் முதலில் மதம் மாறிமருணீக்கினியார் என சமணராக மதம் மாறி பெரும் சமண பண்டிதராக அவர் வலம் வந்ததும் இந்த திருபாதிரிபுலியூரில்தான்

அங்கேதான் அவருக்கு நஞ்சூட்டி கொல்வது, அதிவெப்பமான சுண்ணாம்பு காளவாயில் அவரை தள்ளியும் அவர் பிழைத்தது என பல கொடுமைகள் நடந்தன‌

கடைசியாக அவரை கல்லைகட்டி கடலில் இட்டதும் அங்கேதான், ஆனால் அவர் கல்லோடு மூழ்கவில்லை. அந்த கல் கட்டுமரம்போல் மிதந்து அவரை கரையேற்றியது

அந்த இடம் இன்றும் "கரையேறிய குப்பம்" என அழைக்கபடுகின்றது, "சோற்றுனை வேதியன் சோதியில் வானவன்" என்ற பதிகத்தை பாடியபடியே கரை ஏறினார் அப்பர் சுவாமிகள்

கரையேறி அவர் பாடிய தலம் இதுதான், அந்த பாடல்தான் " 'ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் பாடல்

அதாவது இந்த ஆலயத்து சிவனேதான் தன்னை காப்பாற்றி தன்னோடு சேர்த்துகொண்டான், கடலில் மடிய இருந்த தன்னை இந்த சிவன் மீண்டும் தன்னோடு சேர்த்துகொண்டார், இழந்த பாக்கியத்தை கொடுத்தான் என அவர் பணிந்தது இந்த ஆலயம்தான்
சிவன் தனக்கு தாயாய் வந்தான், சக்திவடிவாய் அன்னையாய் வந்தான் என, தாயினை பாடுவது போல் " 'ஈன்றாளுமாய்" என பாடினார் அப்பர் சுவாமிகள்

இந்த ஆலயம் பிரிந்தோரை சேர்க்கும் இழந்ததை கொடுக்கும் என அன்னையாலும் ரிஷிகளாலும் வணங்கபட்ட ஆலயம், இங்கிருக்கும் முருகபெருமான் சன்னதிக்கு அருணகிரி நாதரும் வந்து பாடியிருகின்றார்
இந்த தலம் சந்திரன் ஆதிக்கம் கொண்ட தலம், இதனால் இங்கு சந்திரனுக்கு தனி சன்னதி உண்டு
நாம் முன்பே பார்த்தபடி நவபுலியூரும் நவகிரகங்களின் அருளை அருள்பவை, சிதம்பரம் சூரியனுக்கு என்பது போல சந்திரனுக்கானது இந்த திருப்பாதிரிபுலியூர்
பிரபஞ்ச ரீதியாக வானியல் ரீதியாக சந்திரன் மகா முக்கிய கிரகம்
காலத்தின் அதிபதி யாராக இருந்தாலும் காலத்தின் அளவை சொல்பவன் சந்திரனே, அவ்வகையில் சந்திரனை முன்னிட்டே நாள், திதி,மாதம் என எல்லாமும் நிர்ணயிக்கபடுகின்றது
கால பைரவராக கால்த்தின் அதிபதி சிவன் என்றால் சூரியன் சிவன் அம்சம் என்றால், சந்திரன் காலத்தை அளந்து காட்டும் சக்தி தேவியின் அம்சம்

பவுதீக ரீதியாக சந்திர சுழற்சியாலே மழை பொழிகின்றது, பருவம் மாறுகின்றது, பூமியோடு சேர்ந்து சூரியனை சுற்றும் நிலவு இல்லையேல் பூமி இல்லை, அது இயங்காது

சந்திரனின் ஈர்ப்பு விசையே பூமியில் பல மாறுதல்களை செய்து  இயக்குகின்றது, அதுதான் பருவகாலமாகின்றது
ஜாதகரீதியாகவும் இன்னும் பல தொடர்புகள் ரீதியாகவும் சந்திரனுக்கும் மானுட மனதுக்காமன் தொடர்பு மிக மிக நெருக்கமானது

அதற்கு முன் சிவன் தலையில் சந்திரன் அமர்ந்த கதையும் அதில் இருக்கும் உண்மையினையும் காண வேண்டும்

சந்திரனுக்கு 27 மனைவியர் அதாவ்து 27 நட்சத்திரங்களும் மனைவியர் என்பதும் ஒரு சாபத்தால் சந்திரன் பிறை நிலவாய் சிவனிடம் அடைக்கலாகி அவரின் சிரசில் அமர்ந்து சிவன் கண்காணிப்பில் கடமையாற்றுகின்றான் என்பதும் புராண செய்தி
இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், 27 நட்சத்திரகாரர்களுக்கும் சந்திரன் தொடர்பு உண்டு, சந்திரன் இல்லாமல் ஜாகதகமே இல்லை

சந்திரன் இருக்குமிடமே தாயின் ஸ்தானத்தை குறிப்பதாக ஜோதிட நுணுக்கங்கள் சொல்லும், அவ்வகையில் தாய் எனும் சக்தி அருளை பெற சந்திரன் அருள அவசியம்

தேவியின் அருளை பெற சந்திரன் அவசியம்

இன்னும் சந்திரனாலே மனதின் உணர்ச்சிகள் எண்ணங்கள் எழுகின்றன, சந்திரனே மனதிடம் மனோபலத்துக்கான அதிபதி என்பதும் ஜோதிடம் சொல்லும் உண்மை

சந்திரன் மனதுக்கான கிரஹம், பவுர்னமி அமாவாசையில் கடல்மட்டம் எழுவதும் குறைவதும் கண் காணும் உண்மைகள்
அதாவது நீரானது பவுர்னமி அன்று பொங்குகின்றது,அப்படி நீரால் இயங்கும் உடலிலும் நீரில் மிதக்கும் மூளையிலும் சில மாறுபாடுகள் வரும்

அதனாலே சிலருக்கு பவுர்னமி அன்று ஒருவித அதீத எழுச்சிகள் வரும் நிலையற்ற தன்மை வரும், அமாவாசையில் அது தலைகீழாகும்

இதெல்லாம் மனம் சம்பந்தபட்டது சந்திரன் என்பதற்கான பெரும் சான்றுகள், அதனாலே ஜாதகத்தில் சந்திரன் இருக்குமிடம் முக்கியமானது

மனம் சரியாக இருந்தாலே புத்தியும் செய்யும் தொழிலும் சரியாகும் செல்வம் வாய்க்கும், இதனாலே சந்திரன் செல்வத்துக்கும் அடையாளமான கிரஹமானார்

திருப்பதி ஸ்தலம் சந்திரனின் தலம் என அழைக்கபடுவது அப்படித்தான்

சந்திரன் கால நேரத்தை அளந்து தரும் கிரஹம், உணர்ச்சிகளின் அதிபதி, இன்னும் தெளிவாக சொல்லபோனால் ஈர்ப்பு விசைகளை கட்டுபடுத்துபவர்

பூமியின் ஈர்ப்பு விசை எப்படி சந்திர கிரஹணம், அமாவாசை, பவுர்ணமியில் மாறுமோ இன்னும் வள்ர்பிறை தேய்பிறையில் மாறுமோ அப்படி மனம் கொள்ளும் பற்றுகளில் இருந்தும் அதனை விடுவிக்கவும் கட்டிவைக்கவுமான சக்தி சந்திரனுக்கு உண்டு
சந்திரனின் பார்வையே ஒரு பொருளை பற்றவும் செய்யும், மனம் விரும்பும் ஒன்றை துறக்கவும் செய்யும்

இதனாலே பற்றற்ற கோலத்துக்கு செல்ல சந்திரன் அருள் அவசியம், இறைவனை பற்றி நிற்க அந்த அருள் அவசியம்
அப்பர் கடல்நீரில் மிதந்தார் என்பது சிவனருளில் நடந்த ஒரு அதிசயம் மட்டும் அல்ல, அங்கும் விஞ்ஞான ரீதியாக சந்திரனின் கரங்கள் உண்டு

பூமி எல்லா பொருளையும் ஈர்க்கும் ஆனால் சந்திரனின் சக்தியால் அந்த ஈர்ப்பில் மாறுபாடு காட்டமுடியும், பவுர்ணமியில் கடல் பொங்குவது அப்படித்தான்

அப்பர்  க்டலில் வீசபட்டபோது சிவன் சந்திரனை நோக்க சந்திரன் தன் ஈர்ப்பு சக்தியால் அவரை மிதக்கவைத்தார், அந்த இடத்தில் புவியின் ஈர்ப்பு சக்தி மீறி சந்திரனின் சக்தி பெருகி நின்றதால் அவர் மிதந்தார்

அதுதான் அங்கு நடந்த அதிச்யம், அதனால்தான் அங்கிருக்கும் சந்திரனுக்கு சக்தியும் அதிகம்

இதைத்தான் சிவன் நடத்திய திருவிளையாடலில் காணமுடியும், தேவிக்கு என்ன சொல்லி அனுப்பினார் சிவன்?

எங்கே இடது கண்ணும் இடது தோளும் துடிக்குமோ அங்கே உன் சாபம் தீரும் என்றார், அது கவனிக்கதக்கது
ஏன் அப்படி சொன்னார் சிவன்?

மானிட உடலின் இடபாகத்தில்தான் இதயம் உண்டு அதன் அருகே சிதம்பர தத்துவம் சொன்ன மனம் உண்டு, அந்த மனதில்தான் சந்திரனின் உணர்ச்சிகள் பிரதிபதிக்கும்

சந்தோஷம், அழுகை, மகிழ்ச்சி சோகம் என எது என்றாலு இதயம் பக்கம் உணர்வதும் அதனால்தான்

மனம் அங்கேதான் இருக்கின்றது, மனதுக்கு சக்தி கொடுப்பவன் சந்திரன் எங்கே மனோபலம் பெறுகின்றாயோ அங்கே உன் சாபம் தீரும் என சொல்லி அனுப்பினார் சிவன்

இறைவனும் இறைவியும் விளையாடும் நாடகங்கள், திருவிளையாடல்கள் அவர்களுக்கானது அல்ல அது மக்கள் பின்பற்றி நடந்து அந்த பாடத்தை கற்று ந்ன்மைகளை அடையவேண்டும் என்பதற்காக‌

அப்படி இந்த தலம் சந்திரனுக்கானது, சந்திரனால் மனம் பலம் பெறும், ஜாதகத்தில் சந்திரனாஓ இல்லை இதரரீதியாக‌ மனோபலம் குறைந்தவர்களாக இருந்தால் இங்கு வந்து மனபலம் பெற்று செல்லலாம்

இது மனோபலம் அருளும் ஆலயம்

முன்பே பார்த்தபடி சந்திரன் என்பது தாய்ஸ்தானத்தில் இருப்பது, அதனாலே சந்திரனாலே பூமியில் அழை பெய்யும், சந்திரனாலே நேரம், திதி என எல்லாம் வகுக்கபடும், மாதம் வரை காட்டுவது சந்திரனே

சந்திரனே பாச உணர்ச்சிகளுக்கு அதிபதி, தாயினை விட அன்பினை கொட்டுவார் யாருமில்லை

இங்கே சிவனை விட சக்தி பலமாக இருக்கின்றாள், சந்திரனின் அம்சத்தில் அள்ளி கொடுக்க தயாராக இருக்கின்றாள், சூரியன் சிவனின் அம்சம் என்றால் சந்திரன் அன்னையின் அம்சம்

அதனால் இங்கு வழிபட்டால் அன்னையின் அருளோடு சந்திரனின் அருளும் பூரணமாகும், அதனால் மனோபலமும் இதர பலங்களும் வாய்க்கும், தெளிவான தைரியமான மனம் வாய்க்கும் என்பது இந்த ஆலயத்தின் தத்துவம்

புலிக்கால் முனிவர் அதற்கு விளக்கமாக வழிகாட்டுகின்றார்

குட்டிபுலியினை தாய் தொலைவில் இருந்தே கண்காணிக்கும், குட்டி தனியாக விளையாடுவது போல தோன்றினாலும் தாய் தள்ளி இருந்து தன் கண்காணிப்பிலே வைத்திருக்கும்

அப்படி அன்னை தன் பக்தர்களை எப்போதும் கண்காணிக்கின்றாள், புலிபோல் தள்ளி இருந்து ஆனால் பாசமாக காக்கின்றாள், தன் பக்தர்களுக்கு எந்த சோதனையும்  அவள் வரவிடமாட்டாள், ஆபத்தில் அவளே வந்து காப்பாள் என்பதை திருபாதிரிபுலிபூர் சொல்கின்றது

லவ்கீக வாழ்வில் தாய்போல் நின்று எல்லா நலமும் தைரியமும் மன அமைதியும் பலமும் தரும் அந்த ஆலயத்தின் அன்னை துறவிகளுக்கும் ரிஷிகளுக்கும் பற்றற்ற மனமும் தரும் அன்னை அதனை சந்திரன் மூலம் தருவாள் என்பதை சொல்கின்றது அந்த ஆலயம்

கடலூரில் இருக்கும் அந்த திருப்பாதிரிபுலியூர் ஆலயம், இழந்ததை தரும் ஆலயம், அப்படித்தான் தேவி நீங்கிய கையாலத்தை கொடுத்தது, சாபம்பெற்ற உபமன்யு முனியின் தோற்றத்தை கொடுத்தது

புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலிக்கும் ஞானத்தை கொடுத்தது, அப்பர் சுவாமிகளுக்கு மீண்டும் சைவத்தில் பெரும் இடம் கொடுத்தது

பிரிந்தவர்களை சேர்த்துவைக்கும் தலமும் அதுதான், மனதால் மாற்றமும் தெளிவும் கொடுத்து நல்வாழ்வு அருளும் ஆலயமும் அதுதான்

சந்திர பரிகாரம், சந்திரனுக்கான குறைகள் இருப்பினும், பிரிந்தவர் கூட தடை இன்னும் பல்வேறு மனசிக்கல்களால் பாதிக்கபட்டு இருப்பினும் அங்கே உடனே நலம் கிடைக்கும், அன்னை அருந்தவ நாயகி அதனை அருள்வாள்

பாதிரிமரம் பூக்கும் ஆனால் காய்க்காது, அப்படி அங்கு வழிபடுவோர்க்கு பிறவி இல்லை என்பதும் இன்னொரு ஐதீகம்
கர்மம் கழிக்க வந்த வாழ்வினை நன்முறையில்  வாழ, சரியாக வாழ்ந்து செல்ல  மனபலம் அவசியம், மனோபலமே ஒருவனை வழிநடத்தும், சந்திரன் அதை அருள்வார். அது கொடுக்கும் பலமே மனோசக்தி, தாயாய் நின்று காக்கும்பெரும் சக்தி

சிதம்பரத்தில் ஆத்ம பலம் பெற்று இங்கே மனோபலம் பெற்று அந்த இருமுனிவர்களும் அடுத்த மூன்றாம் தலத்துக்கு சென்றார்கள், அதை அடுத்து காணலாம். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

குழந்தை பேறு அருளும் துவாக்குடி சோழீஸ்வரர் திருக்கோவில்.

குழந்தை பேறு அருளும் துவாக்குடி சோழீஸ்வரர் திருக்கோவில்...!
இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் தங்கை கோமளவள்ளி. தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய மன்னன், அவளது ஜாதகத்தை அரச ஜோதிடரிடம் காட்டிக் கணிக்கச் சொன்னான்.

ஜோதிடர் சொன்னச் செய்தி, மன்னனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோமளவள்ளியின் ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பதாகவும், அதற்கு உரிய பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று ஜோதிடர் கூறினார்.

மன்னன்.. தாம் வணங்கும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டான்.

அப்போது ‘ஓர் ஆலயம் கட்டு. உன் தங்கையின் தோஷம் விலகும்’ என்ற அசரீரி ஒலித்தது. அந்த அசரீரியை தெய்வத்தின் குரலாய் உணர்ந்த மன்னன், ஓர் ஆலயம் கட்டி முடித்தான்.
இரண்டாம் குலோத்துங்கச் சோழனான, அந்த மன்னன் கட்டிய ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சோழீஸ்வரர். இறைவிக்கு தன் தங்கை கோமளவள்ளியின் பெயரையே சூட்டினான். அந்த ஆலயமே துவாக்குடியில் உள்ள சோழீஸ்வரர் திருக்கோவில். இது செவிவழி கேட்ட வரலாறு.

ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் விசாலமான நடைபாதை. நடுவே நந்தியம்பெருமான் அருள்பாலிக்கிறார். 

அடுத்து இறைவியின் மகாமண்டபம் உள்ளது. மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகப்பெருமானும் துவாரபாலகராக கொலுவிருக்க, மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை கோமளவள்ளியின் சன்னிதி உள்ளது. 

கருவறையில் அன்னை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்கள் தாமரை மலரை சுமந்து நிற்க, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரையுடன் காணப்படுகிறது.

அடுத்து இறைவனின் மகாமண்டபம் உள்ளது. மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர், சிவகாமி அம்மன் திருமேனிகள் சிலையாக வடிவமைக்கப்பட்டு கண்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. பொதுவாக சிவாலயங்களில் மகாமண்டபத்தில் நடராஜர்-சிவகாமி திருமேனிகள் செம்பு உலோகத்திலோ அல்லது பஞ்சலோக உலோகத்திலோ ஆனதாக இருக்கும். ஆனால் இங்கு விக்கிரகமாக இருப்பது சிறப்பு அம்சமாகும்.

மகா மண்டபத்தின் கிழக்கு திசையில் சூரியனும், சந்திரனும் அருள் பாலிக்க, அர்த்த மண்டபத்தில் விநாயகரும், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமானும் வீற்றிருக் கின்றனர்.

கருவறையில் இறைவன் சோழீஸ்வரர், சிவலிங்க திருமேனியில் கீழ்திசை நோக்கி அமர்ந்து அருள்புரிகிறார். திருச்சுற்றில் தெற்கில் நால்வர், நந்தி, மேற்கில் மகாகணபதி, வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமியும், கிழக்கில் கால பைரவரும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நவக்கிரக நாயகர்கள் தங்கள் துணைவியருடனும் வாகனத்துடனும் அருள்பாலிப்பது அபூர்வ அமைப்பாகும்.

தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சமான வில்வ மரம் தழைத்தோங்கி கிழக்கு பிரகாரத்தில் செழுமையாக காட்சித்தருகிறது.

பிரதோஷம் இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று சுமார் 200 பேருக்கு அன்னதானமாக, இலை போட்டு விருந்து படைப்பது வழக்கமாக உள்ளது. 

புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் என விருந்து கோலாகலமாக நடைபெறுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நவராத்திரி 9 நாட்களும், சிவராத்தி அன்றும் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும்.

நாக தேவன் இத்தல இறைவன் இறைவியை வேண்டி தனது சாபம் நீங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆலயம் நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.

அதனால்தானோ என்னவோ நாகராஜாக்கள் சர்வசாதாரணமாக கருவறைக்கு செல்வதும், இறைவனின் திருமேனியில் ஊர்ந்து விளையாடுவதும் பக்தர்கள் இங்கு அடிக்கடி காணும் காட்சியாகும். இந்த நாகங்கள் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்வதில்லை.

நாகதோஷம் உள்ளவர்கள் இறைவன் இறைவிக்கு பாலாபிஷேகமும், மாதுளம் பழ அபிஷேகமும் செய்வதுடன், இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஏழு மாதங்கள் வடைமாலை சாத்தி செவ்வரளி மலையிட்டு பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் தானே விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

தோஷம் நிவர்த்தி ஆனதும் இறைவன் இறைவிக்கு வேட்டி, சேலை சாத்தி, பொங்கல், தயிர்சாதம் படைத்து அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்யும் தம்பதியர்களுக்கு விரைவில் அந்த பேறு கிட்டுகிறது. 

அந்த குழந்தைக்கு ஒரு ஆண்டு நிறைவு பெறும்போது ஆலயத்திற்கு அழைத்து வந்து ஆயுசு ஹோமம் செய்கின்றனர். பின்னர் ‘அன்னப்ரசனம்' எனப்படும் குழந்தைக்கு முதன்முதலாக உணவு ஊட்டும் வைபவமும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

ஹோமம் செய்ய வேண்டும் என எண்ணும் பக்தர்கள், தங்கள் வீட்டில் போதுமான இடவசதி இல்லாதவர்கள் இந்த ஆலயம் வருகின்றனர்.

ஆலயத்திலேயே கணபதி ஹோமம், ஆயுள் அபிவிருத்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ம்ருத்ஞ்ஜய ஹோமம் முதலிய ஹோமங்களை இறைவன் இறைவி முன்னிலையில் நடத்தி பயன்பெறுகின்றனர்.

ஆவணி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும், பங்குனி மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனியில் ஒளி வெள்ளத்தால் அபிஷேகம் செய்யும் காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயம், காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு கஜலட்சுமிக்கு ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், பெண்கள் வளையல் அலங்காரம் செய்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர்.

திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள துவாக்குடியில் உள்ளது இந்த ஆலயம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, November 24, 2025

கஞ்சமலை சித்தர் கோவில் அற்புதங்கள்.

கஞ்சமலை சித்தர் கோவில் அற்புதங்கள் !   சித்தர் திருமூலருக்குச் சிஷ்யனாக இருந்தவர்தான் காலங்கிநாதர் என அழைக்கப்பட்ட கஞ்சமலை சித்தர்.
 தமிழகத்தில் எனக்குத் தெரிந்தவரை பல பிரசித்தி பெற்ற கோயில்கள், சித்தர்கள் சித்தியடைந்த தலமாக இருக்கின்றன. ஆனால், சித்தரே இறைவனாக இருந்து அருள்பாலிக்கும் சிறப்பு சித்தர்கோயிலுக்கு உள்ளது.

 கஞ்சமலை சித்தர் கோவில் கட்டிய மன்னர் தாரமங்கலமத்தை ஆட்சி செய்த மன்னர் ( பூவாணிய நாடு ) கெட்டிமுதலி மன்னர் ஆவார். இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும். இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன.

 மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. "ஞானசற்குரு பால முருகன்' என இவரை அழைக்கின்றனர்.

 இக்கோயிலுக்கு அமாவாசையன்று தான் பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர். அமாவாசை கோயில் என்ற பெயர் கூட இதற்கு உண்டு. தீராத நோயுள்ளவர்கள் அன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோயிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டலாம்.

 மிகுந்த மூலிகை வளம் கொண்டது கஞ்சமலை.  

 தங்கம், இரும்பு, தாமரை ஆகியவற்றின் பெயர் கஞ்சம். இங்கு உயர்தர இரும்பு படிவம் ஏராளமாக உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத கஞ்சமலை இரும்பைக் கொண்டுதான் மாவீரன் அலெக்ஸாண்டரின் வாள் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. 

 நான் மலை உச்சிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்த பொழுது கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 20 மாணவர்கள் இந்த மலைக்கு வந்திருந்தார்கள். 

 அனைவரது கையிலும் சுத்தி வைத்துக் கொண்டு இந்த மலையில் கிடைக்கும் வெள்ளை நிறம் மற்றும் கருப்பு நிறம் போன்ற சிறிய கல்களை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். 

 நான் விசாரித்த பொழுது project சம்பந்தமாக வந்துள்ளோம் என்று சொன்னார்கள் நான் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. மலை முழுவதும் இரும்புத்தாது (Magnetite, Grunerite & Quartz) அதனாலேயே இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள்ளது. ஆனால் இந்த மலையில் அரசாங்கத்தால் கனிமவள திட்டப்பணி 1 சதவிகிதம் கூட நடத்த முடியவில்லை.

 சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ள.

 இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் நிறைய உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை இராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.

 இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை 5 ரூபாய்க்கு வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். 

 மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். இராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப்படும் என்று அங்கு இருப்பவர்கள் சொன்னார்கள்.

 இக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படுகின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.

 ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள்.

 சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர் எனவும் . சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி இக்கஞ்சமலையில் பொதிந்து , காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் இக்கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று நம்பபடுகிறது.

இங்குள்ள பொன்னி ஓடையில் கிடைத்த பொன்னைக் கொண்டு,  சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி என பல்வேறு மூலிகைகள் உள்ளன. 

 சுமார் காலை 6:30 மணி அளவில் சித்தர் கோவில் இருந்து மலை உச்சிக்கு போவதற்கு பயணத்தை தொடங்கலாம். 

மலை அடிவாரத்தில் அங்கு ஒரு சிறிய ஓலை குடிசையில் மேற்கு திசையை நோக்கி சிவருமான் லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அங்கிருந்து தான் மலை உச்சிக்கு செல்வதற்கு படிக்கட்டுகள் தொடங்குகிறது. ஆனால் கொஞ்ச தூரம் தான் அந்தப் படிக்கட்டுகள் உள்ளது அதிலும் பாதி சேதமடைந்து விட்டது. 
 அடிவாரத்திலிருந்து மலை உச்சியை அடைவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும் . போகும் வழியில் எங்கும் தண்ணீர் வசதிகள் கிடையாது. 

 அங்கங்கே சிறிய ஓடைகள் இரண்டு மூன்று தென்பட்டாலும் எதிலும் தண்ணீர் இல்லை. மழைக்காலங்களில் அதில் தண்ணீர் வருவதற்கு அறிகுறிகள் தெரிகிறது. 

 சதுரகிரி, பருவதமலை போன்ற மலைகளில் நமக்கு சில இடங்களில் கடினமான ஏற்றம் வரும் பின்பு சமமான பாதை வரும் ஆனால் இந்த மலையில் அதுபோன்ற ஏற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் சிறு ஏற்றம் சிறு இறக்கம் வந்து கொண்டே இருக்கும் பாதையானது மலையை சுற்றிப் போய்க் கொண்டே இருக்கும்.

 இரண்டு மணி நேரம் பயணங்களுக்கு பிறகு ஒரு வழியாக மலை உச்சியை அடையலாம் . அங்கு ஒரு சிறிய கோவிலில் 18 சித்தர்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள். 

 காலங்கி சித்தர் கூடுவிட்டு கூடு பாய்வது மற்றும் அஷ்டமாசித்திகளை அறிந்தவர். காற்றையே உடலாகக் கொண்டவர். இவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலை செய்த போகரின் குரு. 

 திருமந்திரம் எழுதிய திருமூலரின் சீடர். இவர் இங்குள்ள மூலிகை மரபில் உண்டு முதுமையில் இருந்து இளமை தோற்றத்திற்கு திரும்பியது இந்த மலையில் தான். அதனாலேயே இந்த மலைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு "இளம்பிள்ளை"என்று பெயர் பெற்றது. திருமூலரின் உத்தனவின்படி இங்கேயே இருந்து அருள்பாலிக்கிறார். இங்கு உள்ள மூலிகைகளை வைத்து சித்தர்களால் இரும்பை தங்கம் ஆக்க முடியும். இப்படிபட்ட மூலிகை யார் கண்ணுக்கும் தென்படாது. மந்திரம் சொல்லியே அணுகவேண்டும்.

 இந்த இடத்தில் தான் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இரசவாத ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள ஒரு பாஷாணத்தை போகர் பழனி மலை முருகன் சிலை செய்ய பயன் படுத்தி உள்ளார். ஒன்பது பாஷாணகளில் இதுவும் ஒன்று.

 இன்றும் சித்தர்களின் அருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் இங்கு மலை உச்சிக்கு வந்து முழு இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 மலை உச்சியில் வடக்கு புறத்தில் தியானமேடை போல ஒரு இடம் உள்ளது. இரவில் பல இடங்களினூடே 'விசுவிசு'-வென நுழைந்து வந்து அந்த இடத்தில் வீசும் காற்று, 'ஓம்' எனும் ஒலியோடு வெளியாகும். அந்த அனுபவம் கேட்டுணர்வதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

 அந்த இடத்திற்கு அருகில்தான் அவ்வைப்பிராட்டி கருநெல்லி மரத்திலிருந்து 12 வருடங்களுக்கு ஒருமுறை காய்க்கும் கருநெல்லியை பறித்துச் சென்று தகடூரை ஆண்ட மன்னன் அதியமானுக்கு தந்தாக வரலாறு.

 அது விளைந்த இடமும் , இங்கு தான் அங்கவை, சங்கவை திருமணம் நடந்ததும், அகத்தியர் இங்கிருந்துதான் பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், அவரே குறிப்பிடுகிறார்.

சித்தர்களின் அருளாசி அங்கே இன்றும் பூரணமாக நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

 சிவபெருமான் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும். சுழுமுனை சித்தர் குகை, அகத்தியர் குகை, காலங்கி குகை ஆகியவைகளை உள்ளடக்கியது.

 ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கஞ்சமலையில் வகிக்கும் சித்த புருஷர்கள் ஜோதி வடிவில் கஞ்சமலையை வலம் வருவதைத் தரிசிக்கலாம். இரவு பதினோரு மணிக்கு மேல் கஞ்சமலையின் மேல்பகுதியில் சிறிய அளவில் நட்சத்திரம்போல் ஜோதிகள் காணப்படுமாம். அவை மெதுவாக நகர்ந்து மலையை வலம் வரும் என்று சொல்லப்படுகிறது. எல்லாரது கண்களுக்கும் ஜோதி தென்படாதாம். இந்தத் தரிசனத்தைக் காண்பவர்கள் பாக்கியவான்கள். நான் அடுத்த முறை இரவில் சென்று பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

 இத்தனை சக்திவாய்ந்த இந்த சித்தர் கோவிலை அனைவரும் வந்து தரிசிக்க வேண்டும்.

 சித்தேஸ்வர சுவாமி கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் நேரம் முழுவதும் கோயில் திறந்திருக்கும். அமாவாசை நாளன்று 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சித்தரை வழிபடுகின்றனர். பவுர்ணமி கிரிவலமும் உண்டு.

 சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது இக் கோவிலின் தல சிறப்பம்சமாகும். 

 அமைவிடம்: சேலம் பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து இளம் பிள்ளை என்ற கிராமத்துக்குச் செல்லும் ரோட்டில் 19 கி.மீ., சென்றால் கஞ்சமலை சித்தர் கோயிலை அடையலாம்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...