Sunday, November 2, 2025

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...
1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்றும் பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்கள். அந்த நாட்களில் வில்வ மரத்தின் அருகே போகக் கூடாது. 

2)பொதுவாக, வில்வ மரத்தின் வாசனை, அதன் வேர்களில் உள்ள குளிர்ச்சி ஆகியவற்றுக்கு பாம்புகள் வரும். அதனாலேயும் பயப்படுவர்கள். ஆனால், வீட்டில் வில்வ மரத்தை வைத்துக் கொள்வது மிகவும் விசேஷம். தவ விருட்ஷோத பில்வ: என்று சூக்தத்தில், மகாலட்சுமி அந்த மரத்தில் நித்யவாசம் செய்வதாகச் சொல்கிறது. 

எனவே, "யார் வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க்கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்."

சிவனுக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்...

வில்வத்தில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்கள் உள்ளன. இதில் மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஒவ்வொரு வில்வத்திலும் மும்மூர்த்திகள் நித்தியவாசம் செய்வதாக ஐதீகம். 

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதயமாவதற்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். 

வில்வத்துக்கு தோஷம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தின் மீது தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் சிறப்பினைத் தரும்.

வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்தாக சொல்லப்படுகிறது.

தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை,

வில்வம்) என்று வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது.

வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிட்டும்.

வில்வ இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும் கிளைகளே வேதங்கள் என்றும் வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகிறது. 

சிவ பூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.

ஒரு வில்வ தனத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது.

இருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்ந்த வகை. இதன் காய்கள் சற்றே ஆப்பிள் பழம் போன்று

தோற்றம் அளிக்கும். இலைகளை சிவார்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி யாகத்திற்கு

பயன்படுத்துவார்கள்.

வடநூலார் இதை ஸ்ரீபலம் (மகாலட்சமி ரூபம்) என்று புகழ்வர்.

இந்த பழத்தால் யாகம் செய்வதால் ஐஸ்வர்யத்தின் வடிவாக விளங்கும். யாகாக்னி தேவன் திருமகளது கருணையை விரைவில் பெற்றுத்தருவார். 

மிகப்பெரிய யாகங்கள் நடக்கும் போது 108 ஓமப் பொருட்களில் வில்வப்பழமும் ஒன்றாகிறது.

வீட்டில் அகண்ட வில்வ மரம் வளர்த்து வந்தால் அது பெரிதாகி கனி கொடுத்த பிறகே பூஜை செய்த அதன் இலைகள் அருகதை உடையது. ஆனால் வளரும் செடியை பூஜை செய்வதால் அதுவரை குடும்பத்தில் துர் சக்திகள் விலகத்தொடங்கும்.

படிப்படியாக பொருட்சேர்க்கை ஏற்படும்.

இதை வளர்த்து வரும் அனைவருமே நலமாக இருப்பதாக கூறி உள்ளனர்.

வில்வம் வளர்த்தால் செல்வம் வளரும்

சமீப காலங்களில் வில்வத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது. சிவலிங்கம் வீட்டில் பூஜிக்கக்கூடாது என்று விரும்பியபடி

பேசி வருகின்றனர். வில்வ மரம் எங்கு வளர்க்கப்படுகிறதோ அங்கே மகாலட்சுமி நிரந்தரமாக வசிப்பாள்.

பார்ச்சூன் ட்ரீ எனப்படும் அதிர்ஷ்ட வில்வமரத்தை விதையிட்டு வளர்த்து பூஜை செய்வதால் கடன் தொல்லைகள் அகன்று செல்வம்

அதிகமாகும்.

வளர்ப்பு முறையும் வழிபாடும்:

ஒரு பூத்தொட்டியில் பசும் சாணம் மண் கலந்து மூன்று நாட்கள் விதையை உள்ளே வைத்து அமாவாசை தினத்தில் எடுத்து ஈர மண்ணில் புதைக்க வேண்டும். 

45 நாட்கள் காத்திருந்தால் விதை முளைத்து வெளிவரும். விதை எல்லோரும் போடலாம்.சிலருக்கே அது முளைக்கும் யோகம் வரும்.  விதை

முளைத்து வந்ததும் உரமிட்டு வளர்த்து பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி துதி கூறி கற்கண்டு,தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வழிபடலாம். வில்வ விருட்சம் முன் அமர்ந்து விநாயகரை வணங்கினால் வளமே பெருகும்.

இவைகள் தான் எனக்கு தெரிந்த தகவல்கள். மேலும் பல நன்மைகள் உண்டு..
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, November 1, 2025

நீங்கஅருள் தரும் குலதெய்வம். வழிபாட்டின் பலன்கள்

குலதெய்வ வழிபாடு .
         
தீராத கஷ்டங்கள் நீங்கஅருள் தரும் குலதெய்வம். வழிபடலாம் வாங்க.!

குலதெய்வ வழிபாட்டின் பலன்கள் 

நம் குலத்தைக் காக்கும் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபட வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

உங்களுடைய வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படுகிறதா? எந்த ஒரு நல்ல காரியத்தையும் நடத்த முடியவில்லையா? பிள்ளைகளுக்கு திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் இல்லையா? குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறதா?  இது போன்று தொடர்ந்து வீட்டில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறதா? அதை சரிசெய்யலாம் வாங்க.

சுப நிகழ்ச்சி நடைபெற கொடுக்க வேண்டிய தானம்:

பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் பொருள் வெல்லம்.  மலிவான விலையில் நம்மால் வாங்க முடிகின்ற பொருளில் ஒன்று. அதை உங்களால் முடிந்த அளவு வாங்கி குலதெய்வ கோவிலுக்கு, உங்கள் கையால் தானம் கொடுங்கள்.  குலதெய்வ கோவிலில் நிர்வாகம் இருந்தால் அங்கும் தானம் கொடுக்கலாம். 

பின் இனிப்பான வெல்லத்தில் குலதெய்வத்திற்காக பிரசாதம் செய்து வழிபட வேண்டும். குறைந்த அளவு 1 கிலோ வெல்லம் வாங்கலாம்.  அதிகபட்சம் உங்களுடைய விருப்பம்.

எப்போதெல்லாம் குலதெய்வ கோவிலுக்கு செல்கிறீர்களோ, அப்போதெல்லாம் வாங்கி வைத்த வெல்லத்தை வீட்டிலிருந்து எடுத்து செல்ல வேண்டும்.

குறிப்பாக, குலதெய்வ கோவில் இருக்கும் இடத்தில் இருந்து வெல்லம் வாங்க கூடாது. நாம் வீட்டில் இருந்து தான் எடுத்து செல்ல வேண்டும்.

முடிந்தால் மாதந்தோறும் வீட்டில் இருக்கும் ஒருவர் மட்டும் குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த வெல்லத்தை தானம் செய்து வர,  உங்களுடைய வீட்டு சுப நிகழ்ச்சிகளில் எந்த தடையும் ஏற்படாது.

வீட்டில் நடக்கும் எல்லா விஷயங்களுமே இனிப்பான வெல்லத்தை போல் இனிமையாக நடக்கும்.

தீராத சுமை நீங்க எளிய பரிகாரம்: 

வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது தீராத கடன் சுமை இருந்தாலும், தீராத உடல் உபாதைகள் இருந்தாலும்,  கரைக்க முடியாத கட்டியிருந்தாலும் சில நாட்களிலேயே பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போக எளிய முறை ஒன்றை வாங்க பார்க்கலாம். 

குலதெய்வ கோவிலில் குளம் இருந்தால் அந்த குளத்தில் உங்கள் கையாலேயே ஒரு கட்டி வெல்லத்தை போட்டு கரைத்து விடுங்கள்.

உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தண்ணீரில் கரைந்த வெல்லம் போல கரைந்து போக வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள்.

கஷ்டங்கள் இருந்தாலும், உடல் உபாதைகளாக இருந்தாலும் ஒரு சில நாட்களில் உங்களை விட்டு கரைந்து போய்விடும்.


Followers

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...

வில்வ மரம் பற்றிய தகவல்கள்... 1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்...