Wednesday, November 26, 2025

அழகியசிங்கபெருமாள் திருவேளுக்கை திவ்ய தேசம் - 46

#அழகியசிங்கபெருமாள் #திருவேளுக்கை திவ்ய தேசம் - 46
மூலவர்: முகுந்த நாயகன், அழகிய சிங்கர்
தாயார்: வேளுக்கை வல்லி
தீர்த்தம்: கனக சரஸ், ஹேமசரஸ்
பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: திருவேளுக்கை, வேளுக்கை
ஊர்: காஞ்சிபுரம்
மாநிலம்: தமிழ்நாடு
மங்களாசாசனம் : பேயாழ்வார்

புராண வரலாற்றின் படி பிருகு முனிவருக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக் கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம். பேயாழ்வார் இத்தலத்தினை, உப்பிலியப்பன் கோயில், கும்பகோணம், திருப்பதி போன்ற தலங்களுக்கு இணையாகப் பாடியுள்ளார். இதிலிருந்து இத்தலத்தின் சிறப்பை அறியலாம்.
ஆழ்வார்களைத் தவிர சுவாமி தேசிகனும் இப்பெருமாளை #காமாஸீகாஷ்டகம் என்ற ஸ்லோகத்தால் போற்றியுள்ளார். இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும். இதனை ‘காமாஷிகா நரசிம்ம சன்னதி' என்றும் அழைப்பார்கள்.

திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுகிற அவதாரம் நரசிம்ம அவதாரம். பெருமாளின் காக்கும் குணம் உடனே வெளிப்பட்ட அவதாரம். பக்தனின் வார்த்தையை பகவான் உடனே காப்பாற்றிய அவதாரம். ‘வேள்' என்ற சொல்லுக்கு ‘ஆசை' என்று பொருள். இரணியனை வதம் செய்த பின் பகவான் நரசிம்மர் அமைதியை விரும்பினார். அவர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் ‘வேளிருக்கை' என்றாகி, காலப்போக்கில் வேளுக்கை என்றாகி விட்டது. 

ஒருமுறை பிரம்மா யாகம் செய்த போது யாகத்தை அழிக்க அரக்கர்கள் வந்தனர். பிரம்மா பெருமாளிடம் இந்த யாகம் சிறப்பாக நடக்க அருள்புரியுமாறு வேண்டினார். பிரம்மாவின் வேண்டுதலை ஏற்றார் பெருமாள். முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அதே திருக்கோலத்துடன் #ஹஸ்திசைலம் என்ற குகையிலிருந்து புறப்பட்டு வேள்வியை அழிக்க வந்த அசுரர்களை விரட்டினார். அவர்கள் காஞ்சியில் இந்த இடத்தில் காணாமல் போய்விட்டார்கள். அங்கேயே மேற்கு நோக்கி அமர்ந்து யோக நரசிம்மராகி விட்டார். இவருக்கு ஆள் அரி, முகுந்த நாயகன் என்ற திருநாமங்களும் அவதாரம் எடுத்த
அதே திருக்கோலத்துடன் #ஹஸ்திசைலம் என்ற குகையிலிருந்து புறப்பட்டு வேள்வியை அழிக்க வந்த அசுரர்களை விரட்டினார். அவர்கள் காஞ்சியில் இந்த இடத்தில் காணாமல் போய்விட்டார்கள். அங்கேயே மேற்கு நோக்கி அமர்ந்து யோக நரசிம்மராகி விட்டார். இவருக்கு ஆள் அரி, முகுந்த நாயகன் என்ற திருநாமங்களும் உண்டு. 

நரசிம்மரின் மேல் உள்ள விமானம் கனக விமானம். இந்த பெருமாளை பிருகு முனிவர் தரிசனம் செய்துள்ளார். கோயில் சுற்று ப்பிரகாரத்தில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார் நரசிம்மரின் உக்கிரம் தாளாது சற்றே தலை சாய்ந்து பயத்துடன் இருப்பது மிகவும் அதிசய அமைப்பாகும். இங்கு துன்பங்கள் விலக பெருமாளிடம் பிரார்த்திக்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றுகின்றனர்.

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது.

திறக்கும் நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை
முகவரி
அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம் - 631501 காஞ்சிபுரம் மாவட்டம்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...