ஸ்ரீஅமிர்தவல்லி சமேத ஸ்ரீசிதானந்தேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் . திருக்கோயிலை நோக்கிக் கைகூப்பி - கண்களை மூடித்தொழுதார் அமைச்சர். சில நொடிகள் நகர்ந்தன. கண் விழித்த அமைச்சருக்கு பெரும் அதிர்ச்சி. காண்பது கனவா!.. இதுவரைக்கும் காணப்படாத இவர் - இப்போது எப்படித் தோன்றினார்?.. எங்கிருந்து வந்தார்?.. மழை நீர் தழுவிச் செல்லும் வடவாற்றின் தென்கரைப் படித்துறையில், மழையில் நனைந்தபடி தவக்கோலத்தில் - சிவயோகத்தில் அமர்ந்திருந்த பெருந்துறவி ஒருவரைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர். வடவாறு வற்றினாலும் - வற்றாத கருணை வெள்ளத்தினை அவருடைய திருமுகத்தில் கண்டனர். அமைச்சரின் முகக்குறிப்பினை உணர்ந்த பணியாளர்கள் - பெரிய குடை ஒன்றினை மழையில் நனையும் துறவிக்கு ஆதரவாகப் பிடித்தனர். தவநிலை தடைப்பட்டது. துறவியார் மெல்ல கண் விழித்தார். அமைச்சரும் மற்றவர்களும் அவருடைய பாதம் தொட்டு வணங்கினார்கள். துறவியார் திருவாய் மலர்ந்தருளினார். ''...அஞ்ச வேண்டாம்!... எந்தத் தீங்கும் நேராது. சிவம் துணைக்கு வரும்!... உனக்கும் மாலை வரும்!...'' - மீண்டும் மோனத்தில் ஆழ்ந்தார். துறவியாரின் - திருவாக்கினால், அமைச்சரின் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓடக்கோலுடன் தயாராக நின்ற ஓடக்காரர்கள் கட்டுத் தறியிலிருந்து கயிறை அவிழ்த்தனர். ஓடங்கள் பயணித்தன. வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி - என வெள்ளப் பெருக்கில் ததும்பிய ஆறுகளைப் பரிசலில் கடந்து, பள்ளிஅக்ரஹாரம், சக்ர சாமந்தம், ராஜேந்திரம் ஆர்க்காடு, வேலூர், அம்மன் பேட்டை, அரசூர், கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, திருவையாறு, விளாங்குடி, திருமானூர் - என, ஊர் மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆதரவாக ஆறுதல் கூறி - ஆங்காங்கே அவர்களைக் கொண்டே ஆற்றின் கரைகளை சீர்படுத்தி - அவசர காலத்தில், உணவு, உறையுள், மருத்துவம், பாதுகாப்பு - என , மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயிர் விளைந்து செழித்த நிலங்களுக்குமாக, எல்லா ஏற்பாடுகளும் செம்மையாகச் செய்யப்பட்டன. அரசருக்கு செய்தி அறிவிக்க அவ்வப்போது - ஓலைதாங்கிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். சில தினங்களாயின. இதற்குள் மழையும் ஓய்ந்தது. கரு மேகங்களைக் கடந்து கதிரவன் முகங்காட்டினான். சொன்னார் - '' அதையும் செம்மையாய் செய்தீர்கள் அல்லவா!...'' பெருமதிப்புடைய நவரத்ன மாலையினை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார். ''செய்ததெல்லாம் குருநாதர்!..'' அன்று வடவாற்றங்கரையில் நடந்ததை அமைச்சர் விவரித்தார். அரசரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். வடவாற்றின் படித்துறையில் அதே நிலையில் குருநாதரைக் கண்டு தொழுது வணங்கினர் அனைவரையும் வாழ்த்தியருளினார் குருநாதர். மக்கள் வெள்ளமென வந்து அடி பணிந்தனர். அந்த மகானின் பார்வையினால் அனைவருக்கும் நலம் விளைந்தது.மக்கள் அந்த மகானை '' பாவா '' என்று அன்புடன் அழைத்து அகமகிழ்ந்தனர். பின்னர் '' பஞ்சநத பாவா '' என்று அறியப்பட்டு, பலகாலம் வீற்றிருந்தார். கலக்கமுற்றோருக்கும் கவலையுற்றோருக்கும் கதியற்றோருக்கும் - கரை காட்டும் கலங்கரை விளக்காக, கருணையின் விளக்காகத் திகழ்ந்தார் மகான் பஞ்சநத பாவா. அவரை அண்டினோர் எல்லாரும் அல்லல் தீர்ந்து - ஆனந்த வசப்பட்டனர். அனைவருக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்த - அந்த ஞானஒளியும் தன்னை ஒளித்துக் கொள்ளும் நாள் வந்தது. கண்ணீர் வெள்ளத்தில் மக்கள் வெள்ளம். அனைவருக்கும் நல்லாசி சுரந்த கருணையின் ஊற்று நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்தது. அப்படி ஆழ்ந்த நாள் - மாசி மாதத்தின் அமாவாசை தினம். மகாசிவராத்திரியன்று தவநிலையில் - சிவமாகப் பொலிந்த தவம், பொழுது விடிந்த வேளையில், விடிந்தது பொழுது என்று சிவநிலையினை எய்தியது. |
மாசி அமாவாசை தினம். நம் குருநாதருக்கு ஆராதனை நாள்.
தஞ்சை மாநகரின் ஒருபகுதியாக விளங்குவது வசிஷ்ட மகரிஷி சிவபூஜை நிகழ்த்திய கரந்தை எனும் கரந்தட்டாங்குடி.
பெருமை மிகு கரந்தையில் பழைய திருவையாறு சாலையில் வடவாற்றின் கரையில் அமைந்துள்ளது - ஸ்ரீ பஞ்சநதபாவா ஸ்வாமிகளின் அதிஷ்டானம்.
ஸ்ரீபஞ்சநதபாவா ஸ்வாமிகளின் நிர்விகல்ப சமாதி - பூமிக்குக் கீழ் பதினைந்தடி ஆழத்தில் சிறு குகை போல அமைந்துள்ளது.
தரை தளத்தில் இருந்து கீழே செல்ல படிக்கட்டுகள் உள்ளன.
கீழே இறங்கியதும் - அங்கே நிற்கலாம்.
சற்று முன்னே செல்ல வேண்டுமாயின் - தலை குனிந்தபடி செல்லவேண்டும்.
இன்னும் சற்று முன் செல்ல வேண்டுமாயின் - உடலை வளைத்து குனிந்தபடி செல்லவேண்டும்.
மூல லிங்கத்தின் அருகின் செல்ல வேண்டுமாயின் - மண்டியிட்டவாறு தான் செல்லமுடியும்.
மூலலிங்கத்தின் முன்பாக சற்று நேரம் அமர்ந்திருந்தாலே போதும். மனம் தானாகவே அமைதி அடையும். நிஷ்டையும் கை கூடும்.
அதிஷ்டான வளாகத்தில் - ''குருவே சரணம்!..'' என்று தஞ்சம் அடைந்த அணுக்கத் தொண்டர்களும் சிவகதியடைந்து நிலை கொண்டுள்ளனர்.மேத ஸ்ரீ சிதானந்தேஸ்வரர் திருக்கோயிலும் உள்ளன.
அதிஷ்டானத்தில் - குருபூஜை மாசி அமாவாசை அன்று வெகுசிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது.
மடத்தின் நிர்வாகிகளாலும் கோரக்கர் வழிபாட்டு மன்றம், குருவார வழிபாட்டு மன்ற அன்பர்களாலும் மற்றும் இறையன்பர்களாலும் - சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகளும் மதியம் விரிவான அன்னதானமும் நிகழ்கின்றது.
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தைக்கு நகர பேருந்துகள் இயங்குகின்றன. கரந்தைத் தமிழ்ச் சங்கம் அருகே இறங்கி - பாவாசாமி மடம் என்று கேட்டால் - குரு அருளால் - யாரும் வழிகாட்டுவார்கள்.
ஸ்ரீபாவாசாமி மடம் , கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தின் - பின்புறம் பழைய திருவையாறு பூக்குளம் சாலையில், வடவாற்றின் தென்கரையில் உள்ளது. கரந்தையிலிருந்து ஆட்டோவில் எளிதாக சென்றடையலாம்.
அதிஷ்டானத்தில் - குருபூஜை மாசி அமாவாசை அன்று வெகுசிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது.
மடத்தின் நிர்வாகிகளாலும் கோரக்கர் வழிபாட்டு மன்றம், குருவார வழிபாட்டு மன்ற அன்பர்களாலும் மற்றும் இறையன்பர்களாலும் - சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகளும் மதியம் விரிவான அன்னதானமும் நிகழ்கின்றது.
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தைக்கு நகர பேருந்துகள் இயங்குகின்றன. கரந்தைத் தமிழ்ச் சங்கம் அருகே இறங்கி - பாவாசாமி மடம் என்று கேட்டால் - குரு அருளால் - யாரும் வழிகாட்டுவார்கள்.
ஸ்ரீபாவாசாமி மடம் , கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தின் - பின்புறம் பழைய திருவையாறு பூக்குளம் சாலையில், வடவாற்றின் தென்கரையில் உள்ளது. கரந்தையிலிருந்து ஆட்டோவில் எளிதாக சென்றடையலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
