Saturday, January 31, 2026

வாழ்க்கை வளம் பெற வள்ளலார் கூறிய போதனைகள்.

வள்ளலார்_கூறிய_அற்புதமான வாழ்க்கை_போதனைகள்......
🪔வள்ளலாரின் மிக முக்கியமான இரண்டு அம்சங்களான 'பசிப்பிணி போக்கும் சேவை' மற்றும் 'அருட்பெருஞ்ஜோதி அகவல்' பற்றி விரிவாகக் காண்போம்:🪔🪔🪔

🔥1. பசிப்பிணி போக்கும் சேவை (சத்திய தருமச்சாலை)
வள்ளலார் "பசி" என்பதை ஒரு பெரும் நோயாகக் கருதினார். பசியோடு இருப்பவனுக்குத் தத்துவம் பேசுவது வீண் என்று அவர் நம்பினார்.
 
🔥அணையாத அடுப்பு: 1867-ஆம் ஆண்டு வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார். அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு,150 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தினமும் பசி போக்கி வருகிறது.
 
🔥* ஜீவகாருண்யம்: "பசியினால் இளைத்து வரும் ஏழைகளுக்கு ஆகாரங் கொடுப்பதே மேலான புண்ணியம்" என்பது அவர் வாக்கு.
 
🔥* மரணமிலாப் பெருவாழ்வு: ஒரு மனிதன் ஆன்மீகத்தில் உயர வேண்டுமென்றால், முதலில் அவன் உடல் பசியின்றி இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் அடிப்படை விதி.

🔥2. அருட்பெருஞ்ஜோதி அகவல்
வள்ளலார் பாடிய பாடல்களிலேயே மிகவும் புனிதமானதாகவும், உயர்ந்ததாகவும் கருதப்படுவது இந்த 'அகவல்' ஆகும்.
 
🔥* மிக நீண்ட பாடல்: இது 1596 வரிகளைக் கொண்ட ஒரே பாடலாகும்.

🪔🪔🪔அனுபவப் பதிவு🪔🪔🪔: 
அவர் இறைவனை (அருட்பெருஞ்ஜோதி) எப்படிக் கண்டார், அவருக்குள் ஏற்பட்ட ஆன்மீக மாற்றங்கள் என்ன என்பதை இதில் விவரித்துள்ளார்.🪔🪔

🔥* மந்திர வரி: > "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி"🪔

🪔என்னும் புகழ்பெற்ற வரிகள் இந்த அகவலில் இருந்தே கிடைத்தன.🪔
🔥3. வள்ளலாரின் முக்கியமான புரட்சிகரமான கருத்துக்கள்:
 
🔥சாதி மறுப்பு: "சாதியும் மதமும் சமயமும் பொய்" என்று துணிச்சலாகக் கூறினார்.
 
🔥உயிர்க்கொலை எதிர்ப்பு: இறைவனுக்கு உயிர்களைப் பலியிடுவதைக் கடுமையாக எதிர்த்தார். 

🔥புலால் (இறைச்சி) உண்பதைத் தவிர்க்கச் சொன்னார்.

🔥 ஒளி வழிபாடு: சிலைகளை வணங்குவதை விட, அறிவாகிய ஒளியை (ஜோதி) வணங்குவதே சிறந்தது என்றார்.

🔥"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" 🔥

என்ற அந்த ஒற்றை வரி, அனைத்து உயிர்கள் மீதும் அவர் கொண்டிருந்த எல்லையற்ற கருணையை உணர்த்துகிறது.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
#வாழ்க்கை_நிகழ்வு
#வடலூர்_சத்திய_ஞானசபையில் #நேரடியாக_எடுத்த_பட #தொகுப்புக்கள்...

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
*தேவைக்கு செலவிடு........
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......
*அவர்களிடம் அன்பாய் இரு.......
*அவ்வப்போது பரிசுகள் அளி......
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........
*அடிமையாகவும் ஆகாதே.........
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!
*அதைப்போல
*பெற்றோரை மதிக்காத குழந்தைகள்,உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......
உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக் கொள்ளலாம்.. 
பொறுத்து கொள்.
அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,கடமை ,அன்பை அறியார்.

அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு ஆனால்......நிலைமையை அறிந்து அளவோடு கொடு எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே 

*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி வைத்திராதே....நீ எப்போது இறப்பாய் என-எதிர்பார்த்து காத்திருப்பர்.....எனவே கொடுப்பதை கொடுத்து விடு,தரவேண்டியதை பிறகு கொடு.

*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,

*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு....
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..நண்பர்களிடம் அளவளாவு.

*நல்ல உணவு உண்டு....நடை பயிற்சி செய்து.....உடல் நலம் பேணி......இறை பக்தி கொண்டு......குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!

*வாழ்வை கண்டு களி...ரசனையோடு வாழ்.....வாழ்க்கை வாழ்வதற்கே,

நான்கு நபர்களை புறக்கணி....
மடையன்
சுயநலக்காரன்
முட்டாள்
ஓய்வாக இருப்பவன்

நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே.....
பொய்யன்
துரோகி
பொறாமைக்கைரன்
மமதை பிடித்தவன்

நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே.... 
அனாதை
ஏழை
முதியவர்
நோயாளி

நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே.....
மனைவி
பிள்ளைகள்
குடும்பம்
 சேவகன்

நான்கு விசயங்களை ஆபரணமாக அணி....
பொறுமை
சாந்த குணம்
அறிவு
அன்பு

நான்கு நபர்களை வெறுக்காதே.....
தந்தை
தாய்
சகோதரன்
சகோதரி

நான்கு விசயங்களை குறை.....
உணவு
தூக்கம்
சோம்பல்
பேச்சு

நான்கு விசயங்களை தூக்கிப்போடு....
துக்கம்
கவலை
இயலாமை
கஞ்சத்தனம்

நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு......
மனத்தூய்மை உள்ளவன்
வாக்கை நிறைவேற்றுபவன்
கண்ணியமானவன்
உண்மையாளன்

நான்கு விசயங்கள் செய்.....
தியானம் , யோகா
நூல் வாசிப்பு
உடற்பயிற்சி
சேவை செய்தல்

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை நாமும் கடைபிடிப்போம்.....

-ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

வடலூரில் 158 ஆண்டுகளாக அணையாத அதிசய அடுப்பு

*158 ஆண்டுகளாக அணையாத அடுப்பு*
 தினமும் 1,000 பேருக்கு வயிறார அன்னதானம்!
அருட் பெரும் ஜோதி வள்ளலாரை பற்றி அறியாதவர்கள் கூட அவரின் 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' எனும் இந்த பிரபல வாக்கியத்தை நிச்சயம் கேட்டு இருப்பார்கள். கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு, மே மாதம் 23-ம் தேதி வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய இந்த அணையா அடுப்பு. இது நிச்சயம் தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய அற்புத இடமாகும்!
தமிழக ஆன்மீக தலைவர்களில் மிகவும் பிரதானமானவர் - வள்ளலார்
தமிழ்ச் சங்கத்தில் வாழ்ந்த பல ஆன்மிக தலைவர்களுள் இராமலிங்கம் எனும் வள்ளலாரும் ஒருவர். உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். இந்த உலகத்தில் நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும் பரவ வேண்டும் என்று கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கிய வள்ளலார்கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர்ப்பலியை தடுத்து நிறுத்தினார். மக்களின் பசியை போக்குவதற்காக தருமசாலையை தொடங்கினார். சமய சமரச சுத்த சன்மார்க்கம், சத்திய ஞானசபை போன்றவற்றை நிறுவியுள்ளார்.

இன்று வரை எரியும் 1867 ஆம் ஆண்டு மூட்டப்பட்ட அடுப்பு
ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவரையும் தாக்கும் பிணி பசி என்று நம்பியவர் திரு. வள்ளலார் அவர்கள். அதைப் போக்குவதே மாபெரும் தருமம் என்று போதனை செய்தார். அதற்குத் தானே முன்னுதாரணமாகுமாறு, 1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ம் நாள் வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவினார். அப்போது, அவர் கையால் மூட்டப்பட்டதுதான் இங்கு உள்ள அணையா அடுப்பு'.


தினமும் 1000 பேருக்கு அன்னதானம்
இன்றுவரை, தருமச்சாலையின் தனிச்சிறப்பு அந்த அணையா நெருப்பு. பலரின் பசியைப் போக்குவதே அதன் பொறுப்பு. கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் சுனாமி, புயல், வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தபோதும் தடையின்றி மக்களுக்கு உணவு வழங்கி ஆதரித்துள்ளது இந்த தருமசாலை. எந்தச் சூழலிலும் இந்த நெருப்பு அணைந்தது இல்லை. இங்கு தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு, ஒவ்வொரு வேளைக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கபடுகிறது. 
கொரோனா காலகட்டத்திலும் பசியை போக்கிய அணையாத நெருப்பு
"உலகத்தில் தர்மம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது, இந்த அடுப்பு உள்ளவரை தர்மம் அணையாது" என்று வள்ளலார் சொன்னது போலவே தர்மத்தின் துணையால் அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது ஏழைகளுக்குச் சோறு படைக்கும் அடுப்பு. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில், தினந்தோறும் வழங்கப்பட்ட அன்னதானம் பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டது. ஆனால், வடலூர் தர்மசாலை மட்டும் எந்த ஒரு தடங்கலுமின்றி ஆதரவற்றவர்களின் பசிப்பிணியை அனுதினமும் போக்கிக் கொண்டிருக்கிறது. அனைவரையும் முடக்கி வைத்திருந்த கொரோனா கால கட்டத்திலும் கூட தினமும் 1500 பேருக்கு அன்னதானம் வழங்கி பசியை போக்கியது இந்த அணையாத நெருப்பு.

அள்ள அள்ள குறையாத தானியங்கள்
158 ஆண்டுகளாக அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற எரிந்துகொண்டே இருக்கிறது வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு. அதை அணையாமல் காப்பாற்ற ஆயிரக்கணக்கான தர்ம சிந்தனையுள்ள நெஞ்சங்கள் அங்குள்ள தானியக் களஞ்சியங்களை நிரப்பிக்கொண்டே இருக்கின்றன.எந்த நேரத்திலும் சுமார் ஆறு மாதங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றைச் சேமிப்பில் வைத்திருப்பதால், தொடர்ந்து உணவு வழங்க முடிகிறது என்கின்றனர் ஆலய நிர்வாகிகள்.
அனைவரும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆலயம்
யோகா' தியானம் போன்றவற்றில் அக்கறை கொண்டு ஞான நிலை அடைந்த வள்ளலார், அவர் உலக மக்கள் அனைவருக்கும் தக்க பல உயரிய கொள்கைகளை உலகத்திற்கு வலியுறுத்து சென்றுள்ளார். வள்ளலார் அவர்கள் அவரின் ஆன்மிக கொள்கை இன்றளவும் அவர்கள் பரப்பப்பட்டு பின்பற்று வருகின்றன. இந்த ஆலயத்திற்கு வாழ்வில் ஒருமுறையேனும் நாம் சென்று வர வேண்டும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Friday, January 30, 2026

உஜ்ஜீவநாத சுவாமி திருக்கோயில்,திருகற்குடி,உய்யக்கொண்டான் மலை,

அருள்மிகு உஜ்ஜீவநாத சுவாமி திருக்கோயில்,
திருகற்குடி,
உய்யக்கொண்டான் மலை,
PIN-620 102.  
திருச்சி மாவட்டம்.      
*இறைவர்:   உஜ்ஜீவநாதஸ்வாமி,  முக்தீசர்.  

*இறைவியார்:  அஞ்சனாக்ஷி (மைவிழியம்மை), பாலாம்பிகை.         

*தல மரம்:  வில்வமரம்.   

*தீர்த்தம் :  பொன்னொளி ஓடை, குடமுருட்டி (தஞ்சை மாவட்டத்தில்     ஓடும் ஆறு அல்ல), ஞானவாவி, எண்கோண தீர்த்தம், நாற்கோணதீர்த்தம் என்பன.  

*வழிபட்டோர்: கரன், நாரதர், உபமன்யு முனிவர், மார்க்கண்டேயர்.  

*இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர்  திருஞானசம்பந்தர் , சுந்தரர் பாடிய  மூன்று பதிகங்கள் உள்ளன.   
*இறைவன் கல்லில் - மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது.  தற்போது மக்கள் வழக்கில் உய்யக்கொண்டான்மலை என்று வழங்குகிறது.    

 *மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையாரில் அழகாக காட்சித் தருகிறார்.        

*மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும்படி சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்.  சிவபெருமான் அவர் முன் தோன்றி, உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா என்று கேட்டபோது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும்போது, மிருகண்டுமுனிவர் அவனுடைய ஆயுள் விவரத்தைக் கூறி, இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார்.

 மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தார்.  மார்க்கண்டேயரின் பக்தியை மெச்சி, ஆடி பவுர்ணமி நாளில் ஈசன் இத்தல கருவறையை விட்டு வெளியே வந்து மார்க்கண்டேயருக்கு காட்சி கொடுத்து அவரது உயிரைக் காப்பதாகவும் வரம் கொடுத்தார். 

*மார்க்கண்டேயருக்காக ஈசன் கருவறையை விட்டு வெளியே வந்ததற்கு அடையாளமாக, சுவாமியின் திருப்பாதம்  கருவறைக்கு இடது புறம் உள்ள கொடிக்கம்பத்தின் கீழே அமைந்திருக்கிறது.  

*மார்க்கண்டேயருக்கு, ஆடி பவுர்ணமி இரவில் சிவபெருமான் காட்சி கொடுத்ததால், அந்த நாளில் இங்கு சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெறும். பின்பு மார்க்கண்டேயருக்கு, ஈசன் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடத்தப்படும். மேலும் ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும், இத்தல ஈசனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.  

* இத்தல இறைவனை  வழிபடுவோருக்கு எமபயம் இல்லை.   

*உஜ்ஜீவ நாதருக்கு பாலாபிஷேகமும், அவரது திருப்பாதத்திற்கு பானகமும் படைத்து வேண்டிக்கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.    
ஈசனுக்கு நெய், மிளகு, சீரகம் சேர்க்கப்பட்ட அன்னம் படைத்து வழிபட்டால், தீராத நோய்களும் குணமாவதுடன், தீர்க்காயுள் கிடைக்கும். 
 *பிள்ளைகளை நல்வழியில் கட்டுப்படுத்தவும், குறைந்த அறிவுத்திறன், மெதுவாக புரிந்து கொள்ளும் திறன் போன்ற பாதிப்பு உள்ள குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து, பவுர்ணமி நாளில் அன்னைக்கும், சுவாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் குறைகள் அகலும் என்பது ஐதீகம்.  

*குன்றின் படிகள் ஏறி உட்சென்றால், முதலில் மேற்கு நோக்கிய அஞ்சனாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது.  இவள் பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்துபோய் உள்ளது. எனினும், அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு, இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால், புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை செய்துள்ளனர். புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 
இரு அம்பாளுக்கும் நித்திய பூஜை நடைபெற்று வருகிறது.     

*இத்தல அஞ்சனாட்சி அம்மனை வழிபட சகல விதமான கண் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.  

*அருணகிரிநாதர் அருளிய     திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன.  முருகப்பெருமானுக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வழிபட்டால், தந்தை- மகன் உறவு பலப்படும்.       

*கோவிலில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய கல்வெட்டுகள் உள்ளன.        

*பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோவிலுக்குப் பல தானங்களும், திருப்பணிகளும் செய்திருக்கிறான்.  

*நந்திவர்ம பல்லவனுக்கு இத்தலத்திலுள்ள ஜ்யேஷ்டாதேவியே குலதெய்வம். இந்த ஜ்யேஷ்டாதேவியை தரிசித்தால், விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். 

*ராவணனுடைய சகோதரர்களில் ஒருவனான கரன், இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றான். இங்கே கரன் வழிபட்ட சிவலிங்கம் 'இடர்காத்தார் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.  

*தருமபுரம் ஆதீனத்தின் கீழ் இந்தக் கோயில் இருக்கிறது.               

*கி. பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது  பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருந்த யுத்த அரணாக இக்கோயில் விளங்கியது.  

*திருச்சியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவில்  இத்தலம் அமைந்திருக்கிறது.     
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

மன்மதனை எரித்தத் தலம் திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர்

மன்மதனை எரித்தத் தலம்.
 
காமனைத் தகனம் செய்த இடம் 'விபூதிக்குட்டை ' என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாவேயுள்ளது.

மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம். மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் ஒன்றான தாமரை பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.

திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். 
அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது.

அமைவிடம்:- மயிலாடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.
 திருவேள்விக்குடி - கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் 
இக்கோயிலுக்கு அருகில் உள்ள 32 கோயில்கள்:- 

I. மயிலாடுதுறை to திருஆப்பாடி

1. குத்தாலம் (திருத்துருத்தி) – உக்தவேதீஸ்வரர் திருக்கோயில் 
தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருவேள்விக்குடி - கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில் (NCN023)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
குத்தாலத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

3. திருஎதிர்கொள்பாடி - ஐராவதேஸ்வரர் திருக்கோயில் (NCN024)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருவேள்விக்குடியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 

4. திருமணஞ்சேரி - உத்வாக நாதர் திருக்கோயில் (NCN025)
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருஎதிர்கொள்பாடியிலிருந்து  500 மீ தொலைவில் உள்ளது. 

5. பந்தனைநல்லூர் – பசுபதிநாதர் திருக்கோயில் (NCN035)
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருமணஞ்சேரியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. 

6. திருப்பனந்தாள் - செஞ்சடையப்பர் திருக்கோயில் (NCN039)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
பந்தனைநல்லூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருஆப்பாடி - பாலுகந்த ஈஸ்வரர் திருக்கோயில் (NCN040)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்பனந்தாளலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

II. மயிலாடுதுறை to திருக்கடையூர் மயானம்

1. திருவிளநகர் - துறைகாட்டும் வள்ளலார் திருக்கோயில் (SCN040)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருப்பறியலூர் (பரசலூர்) - வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (SCN041)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
திருவிளநகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 

3. செம்பொனார்கோவில் - சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN042)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்பறியலூரியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. 

4. திருக்கடைமுடி (கீழையூர்) - கடைமுடிநாதர் திருக்கோயில் (NCN018)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
செம்பொனார்கோயிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருநனிபள்ளி (புஞ்சை) - நற்றுணையப்பர் திருக்கோயில் (SCN043)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கடைமுடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருதலைச்சங்காடு - நான்மதிய பெருமாள் திருக்கோயில் (திவ்யதேசம்)
திருநனிபள்ளியிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருதலைச்சங்காடு - சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் (SCN045)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
நான்மதிய பெருமாள் கோயிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

8. மேலப்பெரும்பள்ளம் (திருவலம்புரம்) - வலம்புரிநாதர் திருக்கோயில் (SCN044)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருதலைச்சங்காட்டிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

9. கீழப்பெரும்பள்ளம் - நாகநாதஸ்வாமி திருக்கோயில்
(கேது பரிகார தலம்)
மேலப்பெரும்பள்ளத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

10. திருஆக்கூர் - தான்தோன்றியப்பர் திருக்கோயில் (SCN046)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
கீழப்பெரும்பள்ளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது. 

11. திருக்கடையூர் – அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் (SCN047)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருஆக்கூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 

12. திருக்கடையூர் மயானம் - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN048)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கடையூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

III. மயிலாடுதுறை to அம்பர் பெருந்திருக்கோவில்

1. திருமீயச்சூர் - மேகநாதசுவாமி திருக்கோயில் (SCN056)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
மயிலாடுதுறையிலிருந்து  18 கி.மீ தொலைவிலும், பேரளம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.

2. திருமீயச்சூர் இளங்கோயில் - சகலபுவனேஸ்வரர் திருக்கோயில் (SCN057)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
(திருமீய்ச்சூர் மேகநாதசுவாமி கோயிலின் உள்ளே திருமீய்ச்சூர் இளங்கோயில் தலம் உள்ளது).

3. செதலபதி (திருதிலதைப்பதி) - மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில் (SCN058)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருமீயச்சூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

4. கூத்தனூர் - சரஸ்வதி திருக்கோயில் 
செதலபதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

5. கொத்தவாசல் – ஆபத்சகாயஸ்வரர் திருக்கோயில்
(63 நாயன்மார்களுள் ஒருவரான கோச்செங்கட்சோழர் கட்டிய மாடக்கோயில்)
கூத்தனூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

6. அம்பர் மாகாளம் - மாகாளநாதர் திருக்கோயில் (SCN055)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
கொத்தவாசலில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. 

7. அம்பர் பெருந்திருக்கோவில் - பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN054)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
அம்பர் மாகாளத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

IV. மயிலாடுதுறை to திருக்கோழம்பம்

1. தேரழுந்தூர் (திருவழுந்தூர்) - தேவாதிராஜன் திருக்கோயில் 
(திவ்ய தேசம்)
மயிலாடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. 

2. தேரழுந்தூர் (திருவழுந்தூர்) -  வேதபுரீஸ்வரர் திருக்கோயில் (SCN038)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
தேவாதிராஜன் கோயிலில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

3. திருக்கோழம்பம் - கோகிலேஸ்வரர் திருக்கோயில் (SCN035) 
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
தேரழுந்தூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. 

V. மயிலாடுதுறை to நீடூர்

1. கோழிக்குத்தி - வானமுட்டி பெருமாள் திருக்கோயில் 
மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.  

2. அன்னியூர் (பொன்னூர்) - ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (NCN022)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)    
கோழிக்குத்தியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3. குறுக்கை - வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (NCN026) * * * * * (பதிவில் காணும் கோயில்)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
அன்னியூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

4. நீடூர் - அருட்சோமநாதேஸ்வரர் திருக்கோயில் (NCN021)  
குறுக்கையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, January 29, 2026

ஸ்ரீ பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ ஜெயனும் ஸ்ரீ விஜயனும் யார்?

முனிவர்கள் வைகுண்டத்துக்கு வந்தனர். வாசலில் ஜெயனும், விஜயனும் காவல் காத்துக் கொண்டிருந்தனர். வாயில் காப்பவர்களே! ஸ்ரீமன் நாராயணனே எங்கள் குல தெய்வம். நாங்கள் அவரைக் காண நீண்டகாலம் தவமிருந்தோம். இன்று வைகுண்டத்தின் வாசலுக்கு வந்து விட்டோம். இது நாங்கள் பெற்ற பெரிய பேறு. நாராயணனை பார்த்து விட்டால் வைகுந்த பதவியும் பெற்று விடுவோம். பிறப்பற்ற இன்ப வாழ்க்கை பெற நாராயணனின் தரிசனமும், கரிசனமும் அவசியமல்லவா? வைகுண்டக்கதவை திறவுங்கள், என்றனர். வாயில் காப்பவர்கள் அவ்வளவு எளிதாக யாரையும் அனுமதிப்பார்களா? அவர்களிடம், நாராயணன் நீங்கள் வருவது பற்றி எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. அவரைப் பார்க்க நீங்கள் முன் அனுமதி பெற்றது பற்றிய தகவலும் இல்லை. உஹூம்...உங்களை அனுமதிக்க முடியாது. நீங்கள் போகலாம், என்றனர். முனிவர்கள் கெஞ்சிப் பார்த்தனர். தம்பிகளே! நீங்கள் இப்படி செய்வது முறையா? பூலோகத்தில் இருந்து கால் கடுக்க நடந்தே வந்தோமப்பா! நீ திரும்பச் சொல்கிறாயே! நாங்கள் தபஸ்விகள்...ஒன்றுமறியாதவர்கள் இல்லையப்பா!. ஜெய, விஜயர்கள் அசைந்து கொடுக்கவில்லை. நீங்கள் யாராயிருந்தால் எங்களுக்கென்ன? நாராயணன் சொல்லியுள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் போகலாம், என்றதோடு கழுத்தை பிடித்து வெளியே தள்ளினர். முனிவர்களுக்கு ஆத்திரம் வந்து விட்டது. கத்த ஆரம்பித்து விட்டனர். ஏ! நாராயணா! நீ பாற்கடலில் பள்ளி கொண்டு அப்படியே உறங்கிப் போய் விட்டாயா? உன் காவலர்கள் செய்யும் அட்டூழியம் கண்ணுக்கு புலப்படவில்லையா? இதுதான் நீ பக்தர்ளை வரவேற்கும் லட்சணமா? நீ எழுந்து வா! இல்லாவிட்டால் நாங்கள் இங்கேயே உயிர் துறப்போம், என்று சத்தம் போட்டனர். நாராயணன் இதெல்லாம் தெரியாதவரா? தெரிந்து தானே நாடகமாடுகிறார்....அவர் பதறிப் போய் ஓடி வருவது போல நடித்தார். முனிவர்களே! என்ன நடந்தது? என்று அப்பாவித்தனமாகக் கேட்டார். முனிவர்கள் நாராயணனைக் கண்டதும் நடந்ததை மறந்து விட்டனர்.

அவரது கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினர். ஐயனே! தங்கள் தரிசனம் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த ஏழைகளின் அபயக்குரல் கேட்டு, ஓடோடி வந்த எம்பிரானே! தங்களைக் கண்டோம். ஆனால் எம்பிராட்டி லட்சுமி தாயாரை பார்க்க முடியவில்லை. வைகுண்டத்தின் வாசலே இப்படி அழகு பொங்க இருக்கிறது என்றால், உள்ளே இருக்கும் பாற்கடலின் அழகு, ஆதிசேஷன் தங்களுக்கு குடை பிடித்திருக்கும் அழகு இவற்றையெல்லாம் பார்த்திருக்கலாம். தாங்கள் எங்களை வைகுண்டத்துக்குள் அழைத்துச் செல்லுங்கள், என்றனர். முனிவர்கள் சொன்னதை நாராயணன் கவனமாகக் கேட்டுக் கொண்டார். ஜெய, விஜயர்களை அழைத்தார். முட்டாள்களே! என்னைக் காண வருபவர்களின் தராதரத்தை அறிந்து அவர்களை அனுமதிக்க வேண்டாமா? வைகுண்டத்திற்கு முதன் முதலாக வந்த அவர்களைத் தடுத்து, நிறுத்திய நீங்கள் மனிதர்களாக பிறப்பீர்களாக, என்றார். ஜெய, விஜயர்கள் நாராயணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். நாராயணன் மசியவில்லை. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். நீங்கள் பூலோகத்தில் கொடியவர்களாக பிறந்து, என்னையே எதிர்த்து போரிட்டு மடிந்தால் மூன்று பிறவி எடுக்க வேண்டும். நல்லவர்களாகப் பிறந்தால், ஏழுபிறவி எடுக்க வேண்டும். இதில் எது வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், என்றார். அப்படியே முனிவர்கள் பக்கம் திரும்பி, முனிவர்களே! தாங்கள் தபஸ்விகள். எனவே கோபம் உங்களை விட்டு ஒழிந்திருக்க வேண்டும். உங்களை வாயில் காப்பவர்கள் தடுத்தனர் என்பதற்காக, ஆத்திரத்தில் சத்தம் எழுப்பி, வைகுண்டத்தின் அமைதி குலைய காரணமாக இருந்தீர்கள். நீங்கள் பூலோகத்தில் எனது பக்தர்களாக பிறந்து, கோபத்தை ஒழித்து வைகுண்டம் திரும்ப வேண்டும், எனச் சொல்லி விட்டு மறைந்தார். அவர்களில் ஒருவர் தான் பிரகலாதன் என்ற பெயரில் பூமியில் அவதரித்தார். ஜெயன் இரண்யகசிபு என்ற பெயரிலும், விஜயன் இரண்யன் என்ற பெயரிலும் சகோதரர்களாக பூமியில் தோன்றினர். இரண்யகசிபுவை திருமால் வராக அவதாரம் எடுத்துக் கொன்றார். இரண்யன் கடும் தவத்தால், பிரம்மனிடம் ஒரு வரம் பெற்றான். தன்னை எப்பேர்ப்பட்ட பலசாலியும் எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாது என்ற வரம் பெற்றான். இதனால் இவன் உலகையே ஆளும் மன்னன் ஆனான்.

எல்லாரும் இரண்யாய நமஹ என்று சொல்லும்படி கட்டளையிட்டான். இவனது வயிற்றில் பிறந்தான் பிரகலாதன். திருமாலின் பக்தனாக வளர்ந்தான். இரண்யாய நமஹ என்பதை சொல்ல மறுத்து விட்டான். உலகைக் காக்க ஒரு மனிதனால் முடியாது. காக்கும் கடவுளான விஷ்ணுவால் மட்டுமே முடியும், என்று அவன் தந்தையிடம் வாதிட்டான். குருகுலத்திற்கு சென்று மற்ற பிள்ளைகளுக்கும் ஓம் நாராயணாய நமஹ, என்றே சொல்லிக் கொடுத்தான். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் தினமும் சண்டை தான். மகனை கொன்றுவிடும்படி ஏவலர்களுக்கு கட்டளையிட்டான். ஆனால் விஷம் கொடுத்தும், கடலில் தூக்கி வீசியும் கூட பிரகலாதன் அழியவில்லை. கலங்கிப் போன இரண்யன், ஒருமுறை,இந்தத் தூணில் நாராயணன் இருக்கிறானா? எனக் கேட்டான். தூணில் என்ன? உங்கள் உடம்பில் ஒட்டியிருக்கும் சிறு தூசியில் கூட அவன் தான் இருக்கிறான், என்றான் மகன். ஆத்திரத்தில் தூணை எட்டி உதைத்தான் இரண்யன். தூண் உடைந்தது. உள்ளிருந்து நரசிம்மராக வெளிப்பட்டார் பகவான். பாதியளவு சிங்கத்தின் உருவம், பாதியளவு மனித உருவத்துடன் உருவெடுத்து வந்தார் அவர். இரண்யனுடன் போரிட்டுக் கொன்றார். ஆயுதம் ஏதும் அவர் கொண்டு வரவில்லை. அவரது நகமே ஆயுதமாயிற்று. நகத்தால் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டார். பெற்ற தந்தை தன்னால் தானே அழிந்தார் என கதறி அழுதான் பிரகலாதன். தாயை அமங்கலி ஆக்கி விட்டோமே...அவள் முகத்தில் எப்படி விழிப்பது? கதறி அழுத பிரகலாதனை அள்ளி அணைத்துக் கொண்டார் நரசிம்மர். பிரகலாதனிடம் முற்பிறவி கதையை எடுத்துச் சொன்னார். இருந்தாலும் அவன் மனம் தாங்கவில்லை. அன்னையோ தீக்குளிக்க தயாரானாள். பிரகலாதனை பார்க்கக் கூட அவள் விரும்பவில்லை. இறைவா! உன்னை நம்பிய என் நிலையை பார்த்தாயா? என் தந்தைக்கு உயிர்கொடு. இனியும் மானிடனாய் பிறக்கச் செய்யாதே! என பிரார்த்தித்தான். அவர்களை குடும்பத்துடன் வைகுண்டம் அழைத்துச் சென்றார் பெருமாள். பிரகலாதன் இன்றும் சரித்திரத்தில் வாழ்கிறான்.

பிரகலாதனின் முற்பிறவி!

துவாரகையில் வசித்த சிவசர்மா, வேத சாஸ்திரங்களை கற்று புலமை பெற்றவராக திகழ்ந்தார். அவருக்கு ஐந்து மகன்கள். அவர்களுக்கு குருவாக இருந்து வேதத்தை கற்றுக் கொடுத்தார் சிவசர்மா. வேதம் பயில்பவர்கள் குருவுக்கும் பெற்றோருக்கும் மரியாதை செய்ய வேண்டும். தன் மகன்கள் அவ்வாறு இருக்கின்றனரா என சோதிக்க நினைத்தார் சிவசர்மா. அதற்காக ஒரு தந்திரம் செய்தார். தன் மனைவி, இறந்து கிடப்பதைப் போல ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, மூத்த மகன் யஜ்ஞசர்மாவை அழைத்தார். அவனிடம், உன் தாய் இறந்துவிட்டாள். அவளது உடலை வாளால் வெட்டி வீசி விடு! என்றார். அவனும் அப்படியே செய்தான். பின் ஒரு அழகிய பெண்ணை படைத்து, இரண்டாவது மகன் வேதசர்மாவை அழைத்தார். அவனிடம் அப்பெண்ணை, தனக்கு மணம் செய்து தரும்படி கேட்டார். வேதசர்மா அவளிடம், தன் தந்தையை மணந்து கொள்ளும்படி கேட்டான். அவளோ மறுத்தாள். அவள் மனதை மாற்றுவதற்காக, எதைக் கேட்டாலும் தருவதாகச் உறுதியளித்தான் வேதசர்மா. அவள் அவனது தலையைக் கேட்டாள். அவனும் தன் தலையை வெட்டிக் கொடுத்து விட்டான்.

அடுத்து மூன்றாவது மகன்  தர்மசர்மாவை அழைத்தார். அவனிடம் வெட்டபட்ட வேதசர்மாவின் தலையை கொடுத்து, பத்திரமாக வைத்திரு என்றார். அவன் அதை வாங்கி தர்மதேவதையை வணங்கி, அண்ணனை உயிர்ப்பித்தான். நான்காவது மகன் விஷ்ணுசர்மாவை சோதிக்க வேண்டியநிலை. சிவசர்மா அவனிடம், நான் ஒரு அழகியை மணக்க விரும்புகிறேன். ஆனால், வயதாகிவிட்டது. மீண்டும் இளமையைப் பெற அமிர்தம் உண்டால் மட்டுமே முடியும். எனவே, தேவலோகம் சென்று அமிர்தம் பெற்று வா என்றார். அவனும் தேவலோகம் சென்றான். இந்திரன் மேனகை எனும் தேவலோக பெண்ணை அனுப்பி அவனது கவனத்தை திசைதிருப்ப முயன்றான். அவனோ தன் வேலையில் மட்டும் கவனமாக இருந்து, இந்திரனிடம் அமுதம் பெற்று. தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த சிவசர்மா நான்கு மகன்களையும் அழைத்தார். தன் மனைவியை உயிர்ப்பித்து, தான் அவர்களை பரிசோதித்ததை கூறினார். மகன்களும் மகிழ்ந்தனர். அவர்களை விஷ்ணுலோகத்திற்கு அனுப்பி விட்டார் சிவசர்மா. ஐந்தாவது மகன் சோமசர்மா விஷ்ணுவின் மீது அதீத பக்தியுடையவன்.

ஒருசமயம் சிவசர்மா அவனிடம், நானும், உன் தாயாரும் தல யாத்திரை செல்கிறோம். நாங்கள் திரும்பும் வரையில் இந்த அமுதத்தை பத்திரமாக வைத்திரு! என்று சொல்லி சென்றார். சிலநாட்கள் கழித்து திரும்பிய சிவசர்மா, கலசத்தில் இருந்த அமுதத்தை மறையச் செய்துவிட்டு, மகனிடம் அமுதம் தரும்படி கேட்டார். அமுத கலசத்தை பார்த்த அதில் அமுதம் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். விஷ்ணுவை பிரார்த்தித்தான். அமுதகலசம் நிரம்பியது. அதனை தன் பெற்றோரிடம் கொடுத்தான். அமுதம் உண்ட இருவரும் சோமசர்மாவை வாழ்த்திவிட்டு, விஷ்ணுலோகம் சென்றனர். பின் பூலோகத்தில் தனித்து வாழ்ந்த சோமசர்மா, தவ வாழ்க்கையில் ஈடுபட்டான். ஒருசமயம் அவனது தவத்தை கெடுக்க வந்த அசுரர்களைக் கண்டு பயத்திலேயே உயிர் விட்டான். அந்த அசுரகுலத்தை வேரறுக்க மறுபிறவியில் அதே குலத்தில், இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனாக பிறந்தான். நரசிம்ம அவதாரம் தோன்றவும் காரணமாக இருந்தான். மகாவிஷ்ணுவின் அருளையும் பெற்றான்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, January 28, 2026

முருகப்பெருமானின் புகழ் பாடும்மருதமலை முருகன் கோவில்.


முருகப்பெருமானின்புகழ் பாடும்
திருக்கோவில்கள்.....
6. மருதமலை முருகன் கோவில்.
★ தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீதுஇக்கோயில் அமைந்துள்ளது. இந்தமலைமேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச்சேர்ந்தது. முருகனின் ஏழாவதுபடைவீடாகக்கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்குவேட்டுவ கவுண்டர் மன்னர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலைமுருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற தலமான திருமுருகன் பூண்டிகோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.
★ மருதமலையில் அமைந்துள்ள, இந்த திருக்கோவில் சங்க காலத்தில் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் இந்த கோவில் "மருதாசல மூர்த்தி திருக்கோவில்" எனறு  குறிப் பிட்டுள்ளதைக் காணலாம். முற்கால த்தில் கொங்கு நாட்டில் வாழ்ந்த ஒரு வர் இளம் வயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடி க்கு மருந்து தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரைப் பாம்பாட்டி என்றுஅழைத்தனர். ஒருசமயம்இவர், மிக நீண்ட காலம் வாழ்ந்து தனது கொடிய விஷத்தை நாகரத்தினமாக மாற்றும் தன்மையுடையது என நம்பப்படும் பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார்.
★ அங்கு பதினென்சித்தர்களுள்ஒருவரான சட்டைமுனிவர் அவருக்குகாட்சிதந்து, விஷப்பாம்புகளை பிடிப்பது பெரியவிஷயமல்ல. “உடலுக்குள்இருக்கும்குண்டலினிஎன்னும்  பாம்பை கண்டறிவதுதான்பிறப்பின்பயனாகும். அதைவிடுத்து காட்டில்திரியும்பாம்புகளை தேடி அலைவது வீண் வேலையே!” எனக் கூறினார். அவரது சொல் கேட்ட பாம்பாட்டிச்சித்தர் ஞானம் பெற்றார். உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகப்பெருமான் அவருக்கு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். பக்தர்கள் இவரை, பாம்பாட்டி சித்தர் என்று அழைக்கின்றனர்.
★ இவருக்கு முருகன் காட்சியளித்த திருவுருவம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியராக ஆதிமூல ஸ்தானத்தில் அருள்பாலிக்கிறார். பாம்பாட்டி சித்தர்பிரதிஷ்டைசெய்து வழிபட்ட முருகன் தண்டாயுதபாணியாக கருவறையில் அருள்பாலிக்கிறார்.சிவபெருமானே அண்ணாமலையாக இருப்பது போல் முருகப்பெருமானே மருதமலையாக இருப்பதால்   இம்மலைகுறையோடுவரும் பக்தர்களின் உடல் மற்றும் மனஉளைச்சல்கள்,பாசவினைகள் இரண்டையும் நீக்குவதாக நம்பப்படுகிறது.
★ புனிதமான இந்த மருதமலையில் மருத்துவ மூலிகைகள் நிறைந்திருப்பதால் இதன்இதமான காற்றும், அமைதியான சூழலும் பக்தர்களின் மனதில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் தருகிறது. சித்தர்களும்முனிவர்களும் இந்தமலையை நாடிவந்து தவம் புரிந்ததோடு தெய்வீக அருமருந்தான ‘காயகல்பம்’ தேடி இங்கு வந்தனர். மேலும் கச்சியப்ப முனிவர் எழுதிய பேரூர் புராணத்தின்படி, ‘காமதேனு’ என்ற விண்ணுலகப் பசு இம்மலையின் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து வந்ததாகவும், மருதம் மரத்தடியில் உள்ள ஊற்றுகளில் நீர் அருந்தியதா கவும் கருதப்படுகிறது.
★ பேரூர் புராணம் கொங்கு நாட்டில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலை நீலிமலை மற்றும் மருதமலை ஆகியவற்றை முறையே சிவன், பார்வதி மற்றும் சுப்ரமணியரின் வெளிப்பாடுகளாகவும், மூன்று மலைகளும் சோமாஸ்கந்தத்தின் வடிவில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. முருகப்பெருமானே மலை ரூபத்தில் காட்சியளிக்கிறார் என்பது ஐதீகம். இங்குதான் அசுரன் சூரபத்மனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சுப்பிரமணியரை அணுகி அசுரனை அழிக்கும்படி வேண்டினர். தேவரைக்காக்கும் பொருட்டே முருகப் பெருமான சுயம்பாக தோனறினார் என்பது ஐதீகம்.
★ மருதமலை மருதாசலமூர்த்தி திருக்கோவில் பெயர்க் காரணமாக பின்வரும் கதையைக் கூறுகின்றார் கள். இது உண்மையாகக்கூட இருக் கலாம். ஒருமுறை மருத மலையில் உலவிய சித்தர் ஒருவர் கோடையின் தாக்கத்தால் அதிக களைப்பாலும் தாகத்தாலும் தவித்து அங்கிருந்த மருதமரம் ஒன்றின் நிழலிலமர்ந்து, முருகப்பெருமானிடம் தண்ணீர் வேண்டினார். முருகனின் அருளால் அதிசயம் போல, அவர் அமர்ந்திருந்த மருதமரத்தின் வேர்களில் இருந்து நீர் வெளியேறியது. சித்தர் மனமகிழ்ந்து முருகனை, மருதம் மற்றும் ஜலத்தின் (நீர்) இறைவன் என்று போற்றினார்.  காலப்போக்கில் மருதஜலபதி மருதாசலபதி ஆனது. மருதமரங்கள் நிறைந்திருப்பதால் இநத மலையை மருதமலை எனறும் சொல்வதுண்டு.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, January 27, 2026

கண் நோய் தீர்க்கும் கருணை கோயில்கள்

கண் நோய் தீர்க்கும் கருணை கோயில்கள்
🍃🌺#திருக்காளத்தியப்பருக்காக தன் கண்ணையே தானமாகத் தந்தான், கண்ணப்பன் எனும் வேடன். அந்த காளஹஸ்தி தலத்தின் காளத்தியப்பர், கண்ணொளி அருள்வதில் நிகரற்றவர்.
 
🍃🌺# திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கார
வாசல் கண்ணாயிரநாதர், நான்முகனுக்கு
ஆயிரம் கண்களோடு தரிசனம் தந்தவர். இவரை அரைக்கீரைத் தைலத்தால் அபிஷேகித்து,
அத்திப்பழம் நிவேதித்தால் கண் உபாதைகள் நீங்கும்.

🍃🌺# விக்கிரவாண்டி  பனையபுரம் சிபிச்சக்ரவர்த்தி, புறாவிற்காகத் தன் சதையையே அறுத்துக் கொடுத்த தலம்,  இங்கு நேத்ர உத்ராணேஸ்வரர் எனும் பெயரில் அருளும் ஈசன் பக்தர்களின் பார்வைக் குறைபாடுகளைக் களைகிறார்.

🍃🌺# மதுரை மடவிளாகம் தெக்கன் எனும் பார்வையற்ற வேடுவனின் பிரார்த்தனைக்கு இணங்கி, அவனுக்குக் கண் பார்வை தந்த ஈசன், வைத்யநாதர் என்ற பெயரில் அருள்கிறார்.
 
🍃🌺# தஞ்சை கஞ்சனூர் அருகே உள்ள திரிலோக்கிக்குப் பக்கத்தில் கீழ்ச்சூரியமூலை சூர்ய கோடீஸ்வரரை கண்ணொளிக்கு அதிபதியான சூரிய பகவானே வணங்கியிருக்கிறார். பருதியப்பர் என தமிழிலும், பாஸ்கரேஸ்வரர் என வடமொழியிலும் அழைக்கப்படும் இந்த ஈசனை வணங்க கண் பாதிப்புகள் நீங்கும்.
 
🍃🌺# தேனி  வீரபாண்டியில் கௌமாரியாக அம்பிகை அருள்கிறாள். முல்லையாற்றில் நீராடி, இந்த அம்பிகையை வணங்கினால் கண் நோய்கள் காணாமல் போகின்றன. மதுரை, வீரபாண்டிய மன்னனுக்குப் பார்வை அருளியவள் இந்த தேவியே!

🍃🌺# தஞ்சாவூர், பேராவூரணி, ரெட்டவயலில் கண்ணாயிரமூர்த்தி எனும் பெயரில் சிவபெருமான் ஆலயம் கொண்டருள்கிறார். ஆண்கள் மட்டுமே வழிபடும் இத்தலம், பக்தர்களின் கண் காக்கிறது.

🍃🌺#  மதுராந்தகம், கருங்குழியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கிணாரில் இந்திரனின் உடம்பில் ஏற்பட்ட கண் அடையாளங்களை நீக்கிய நேத்ரபுரீஸ்வரரை தரிசிக்கலாம். இந்திரன் தன் வாகனமான ஐராவதத்தின் மேல் அமர்ந்தபடி ஈசனுக்கும் நந்திக்கும் இடையில் காட்சி தருகிறார். கிணாரும் கண் நோய் தீர்க்கும் பரிகாரத் தலமே.

🍃🌺#திருவாரூர்  மயிலாடுதுறை சாலையில், திருமருகல் வழியில், திருப்பயத்தங்குடியில் ஆட்சி புரியும் நேத்ராம்பிகை, பஞ்சதனதாவாணன் எனும் பார்வையற்ற பக்தருக்கு கண் பார்வை தந்தருளியவள். அஞ்சனாட்சி என்றும் வணங்கப்படும் இந்த அம்பிகையின் பெயரே பக்தர்களை கண் நோய்களிலிருந்து காப்பவள் என சொல்கிறது.

🍃🌺# காஞ்சிபுரம் அருகே கூரத்தில் அருளும் கூரத்தாழ்வார் தரிசனம், கண் பார்வைக் கோளாறுகளை அறவே நீக்கும்.  தன் குருநாதர் ராமானுஜரின் உயிரைக் காக்க தன் கண்களையே தந்த அத்யந்த சீடன், இந்த கூரத்தாழ்வான்.
 
🍃🌺# கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருவெள்ளியங்குடியில் சுக்கிரன் இழந்த கண்ணை பெற்றான். அவருக்கு கண்ணொளி தந்த தீபம் இன்றளவும் நேத்ர தீபமாக தொடர்ந்து எரிந்து வருகிறது. அதில் எண்ணெய் ஊற்றி வேண்டுவோரின் கண் உபாதைகள் விலகுகின்றன.
 
🍃🌺# விருதுநகர், சாத்தூர் அருகே அருளும் இருக்கன்குடி மாரியம்மன், கண்கண்ட தெய்வம் மட்டுமல்ல; பக்தர்களின் கண்நோய்களையும் விரட்டுபவள்.
 
🍃🌺# திருவாரூர், கொரடாச்சேரிக்கு அருகில், கண் கொடுத்தவனிதம் தலத்தில் அருளும் நயனவரதேஸ்வரர், ஒரு பெண் பக்தைக்காக அவள் குழந்தைக்கு பார்வை அருளியவர். கண்ணொளி அருளும் பேரருளாளன் இவர்.
 
🍃🌺# திருச்சி, சமயபுரம் மாரியம்மனுக்கு கண்மலர் வாங்கி சமர்ப்பித்தால் கண் நோய்கள் நீங்குகின்றன.
🍃🌺# புன்னைநல்லூர் துளஜா மகாராஜாவின் மகளின் கண்ணில் விழுந்த பூவை தன் கற்பூர தீபத்தை தரிசிக்கும்போது விழச் செய்து அவளுடைய கண்கண்ட தெய்வமாகத் திகழ்பவள் புன்னைநல்லூர் மாரியம்மன். தஞ்சாவூர்  திருவாரூர் பாதையில் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

🍃🌺# கோவை, அவிநாசியில் கருவலூர் மாரியிடம் கண் பிரச்னைகளை சமர்ப்பிக்க அவை  காணாமல் போய்விடுகின்றன.
 
🍃🌺# கும்பகோணத்திற்கு அருகே, முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலையில் நேத்ர விநாயகர் தனிச் சந்நதி கொண்டு, அஞ்சனக் குறைகளை அகற்றுகிறார்.

🍃🌺# திருக்கச்சூர் சிங்கப்பெருமாள் கோயில்  ஸ்ரீபெரும்புதூர் பாதையில், உள்ள இருள்நீக்கும் அம்பிகை, பக்தர்களின் கண் இருளை நீக்குகிறாள்.
 
🍃🌺# திருவையாறு  கல்லணை சாலையில், மேகளத்தூரில்  நேத்ரபதீஸ்வரரும், காமாட்சியும், கண் குறைகளை தீர்த்தருள்கிறார்கள்.

🍃🌺# சிவகங்கை  நாட்டரசன் கோட்டையில் அருளும் கண்ணாத்தாள், கண்ணொளி இழந்த தன் பக்தர்களுக்கு பார்வை அருளும் பரோபகாரி.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

சிவாலயங்களில் அங்கப்பிரதட்சிணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம்

சிவாலயங்களில் அங்கப்பிரதட்சிணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது 
 இழந்த செல்வம் / பொருளை மீண்டும் பெற சிவபுரநாதர் கோவில், 

சிவபுரம் சிவகுருநாதசுவாமி, கோயில் 

1) கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை சென்று, சாக்கோட்டையில், "பட்டாமணி ஐயர் ஸ்டாப்" இடத்திற்குப் பக்கத்தில் பிரியும் (சிவபுரி) கிளைப் பாதையில் (மண் பாதையில்) சென்று, வழியில் மலையப்பநல்லூர் ஆலமரத்துப் பிள்ளையாரை வணங்கியவாறே 2 A.e. சென்றால் சிவுரபத்தை அடையலாம். கோயில் வாயில்வரை காரில், பேருந்தில் செல்லாம்.

2) கும்பகோணம் - திருவாரூர், கும்பகோணம் - மன்னார்குடிச் சாலையில் சாக்கோட்டை சென்று -வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு அருகில் பிரியும் சாலையில் 2 A.e. சென்று சிவபுரம் அடையலாம்.

திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூசித்த தலம். குபேரன் இராவணன் பட்டினத்தார் அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட தலம்.

இவ்வூரிலுள்ள பட்டினத்து விநாயகர் கோயிலில் பட்டினத்தார் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. பட்டினத்தாரின் தமக்கை இவ்வூரில் வாழ்ந்தார்.

'குபேரபுரம்', 'பூகையிலாயம்', 'சண்பகாரண்யம்', என்பன தலத்தின் வேறு பெயர்கள். இவ்வூரில் பூமிக்கடியில் ஓர் அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். இதனால்தான் ஞானசம்பந்தர் முதலியோர் இத்தலத்தில் நடக்காமல், அங்கப்பிரதட்சணம் செய்து சுவாமியை தரிசித்துப் பின்பு ஊர் எல்லைக்கு அப்பால் தள்ளி நின்று பெருமானைப் பாடியதாக வரலாறு. அவ்வாறு பாடிய இடம் இன்று 'சுவாமிகள் துறை' என்றழைக்கப்படுகிறது. (அரிசொல் ஆறு) அரிசிலாறு பக்கத்தில் ஓடுகின்றது. பழைமையான கோயில்.

இறைவன் - சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், சிவபுரநாதர்.

இறைவி - ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி.

தலமரம் - சண்பகம் (இப்போதில்லை)

தீர்த்தம் - சந்தர தீர்த்தம் - எதிரில் உள்ளது.

சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற பதி.

ஐந்து நிலைகளையுடைய பழமையான ராஜகோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே உள்ளது. உள்கோபுரம் மூன்று நிலைகளுடன் காட்சி தருகின்றது. உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சந்நிதி - கிழக்கு நோக்கியது. முன்னால் விசாலமான கல்மண்டபம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவரில் சந்நிதியைப் பார்த்தவாறு சூரிய சந்திரன் உருவங்கள் உள்ளன. விசாலமான பிராகாரம்.

கோஷ்ட மூர்த்தமாக நடன விநாயகரும், பக்கத்தில் தட்சிணாமூர்த்தியும் அடுத்து இலிங்கோற்பவரும், பிரமனும், துர்க்கையும் உள்ளனர். தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண் பன்றியாக இருந்து வழிபட்ட சிற்பம் - (சிவ லிங்கம், வெண்பன்றி வாயில் மலருடன், திருமால்) - உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்தூத திருத்தாண்டகத்தில் "பாரவன்காண்" என்று தொடங்கும் பாடலில் "பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண்" என்று பாடியுள்ளார்.

வெளிச் சுற்றில் விநாயகர் சந்நிதியும், அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. தீர்த்தக் கிணற்று நீர் சுவையாக உள்ளது. மூலவர் கம்பீரமான சற்றுப் பெரிய சிவலிங்கத் திருமேனி. மகாவிஷ்ணு பூசித்தது, வழிபடுங்கால் உள்ளத்தில் ஒருவித மனநிறைவு உண்டாகின்றது. முன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. நின்ற திருக்கோலம். நகரத்தார் இக்கோயிலை அற்புதமாகக் கற்கோயிலாகக் கட்டியுள்ளனர்.

கார்த்திகைச் சோமவாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றது. இங்குள்ள நடராஜர் திருமேனி மிகவும் அழகானது. இத்திருவுருவச் சிலைதான் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டுவிட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய அரசின் பெரு முயற்சியால் திரும்பக் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு கருதி, திருவாரூர்ச் சிவாலயத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வேறொரு நடராஜத் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளவித்து வழிபட்டு வரப்பெறகின்றது. நடராஜப் பெருமானுக்கு எதிரில் உள்ள நால்வர் பிரதிஷ்டையில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார்.

இங்குள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு காலைசந்தி, அர்த்தசாமம் ஆகிய காலத்தில் அபிஷேகம் செய்து வடமாலை சாத்தி - தயிர்சாதமும் கடலையுருண்டையும் நிவேதித்து சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்து வந்தால் - வழக்குகளில் வெற்றி, தீராத நோய் தீரும் என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

குபேரன் பூசித்த வரலாறு வருமாரு,

ஒருமுறை இராவணன், துய்மையற்றவனாய் இறைவன் வழிபட வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். உண்மையறியாது குபேரன் இராவணனுக்காகப் பரிந்து பேச, நந்தி சாபமளித்தார். தளபதி என்னும் பெயருடன் பேராசைக்காரனாக இறைவனை வழிபட்டு வந்தான். ஒரு நாள் வடக்குப் பிராகாரத்தில் கோமுகம் அருகில் காணப்பட்ட செப்புப் பட்டயத்தில் இருந்த சுலோகத்தைப் படித்தான் மாசி மாதத்தில் சிவராத்திரி, சோமாவாரம், பிரதோஷம் இவை மூன்றும் சேர்ந்து வரும் நாளில் உடற் குறையில்லாத ஆண் குழந்தையை பெற்றோர் பிடிக்க அரிந்து - ரத்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று அறிந்தான். அவ்வாறே வறுமையால் வாடிய தம்பதிகட்குப் பொருள் தந்து அவர்களைச் சம்மதிக்க வைத்து - மன்னன் வாள் கொண்டு அரியும்போது - குழந்தை, அன்னை சிங்கார வல்லியை வேண்டிட, அத்தாயும் இறைவனிடம் வேண்டினான். இறைவன் மகிழ்ந்து தளபதியின் சாபம் நீங்கவே இவ்வாறு நேர்ந்ததாக அருளி, தளபதியைக் குபேரனாக்கினார். இதை நினைவூட்டும் வகையில் பெருமான் முடியில் ரத்தத்துளி இருப்பதைக் காணலாம்.

தாயாக வந்த இந்திராணியும் - தந்தையாக வந்த இந்திரனும் - குழ்தையாக வந்த அக்னியும், கிழக்குப் பிராகாரத்தில் சிவலிங்கத் திருமேனி தாங்கி இருப்பதாகவும் கூறுவர்.

(ஆதாரம் - கோயில் வரலாறு)

"சுருதிகள் பலநல மதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு

உருவிய லுலகவை புகழ்தர வழி யழுகுமெயுறு பொறியழி

அருதவ முயல்பவர் தனதடியடை வகை நிலையரனுறை பதி

திருவயர் சிவபுர நினைபவர் திகழ்குலனில னிடைநிகழுமே." (சம்பந்தர்)

'பாரவன்காண் பாரதனிற் பயிரானான்காண்

பயிர் வளர்க்குந் துளியவன்காண் துளியினின்ற

நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித்தான்காண்

நிலவேந்தர் பரிசாகநினைவுற் றோங்கும்

பேரவன்காண் பிறைஎயிற்று வெள்ளைப் பன்றி

பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும்

சிரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்

சிவனவன்காண் சிவபுரத்துஎம் செல்வன்தானே." (அப்பர்)

"ஓழிவற நிறைந்த ஒருவ போற்றி

செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி."

(திருவாசகம் - போற்திருவக)

-தரிசனத்தெக்

காலஞ்சிவ புரத்தைக் காதலித்தோர் தங்கமுதி

யேலுஞ் சிவபுரத்தில் எம் மானே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சிவகுருநாதசுவாமி திருக்கோயில்

சிவபுரம் - சாக்கோட்டை அஞ்சல் - 612401

கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 67-வது தலமாக இருப்பது சிவபுரம். ஆதி சங்கராச்சாரியாரின் தாயார் பிறந்த ஊர் என்ற பெருமை உடையது இத்தலம்.

இறைவன் பெயர்: சிவபுரநாதர்

இறைவி பெயர்: சிங்காரவல்லி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் மூன்றும் என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

கும்பகோணம் - திருவாரூர் சாலையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் சுமார் 3 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில்

சிவபுரம், சாக்கோட்டை அஞ்சல்,

கும்பகோணம் வட்டம்,

தஞ்சாவூர் மாவட்டம் - 612 401.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிவபுரம் என்று சிவபெருமானின் நாமத்தினைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பினைப் பெற்ற ஒரே தலம் இதுவேயாகும். அரிசிலாற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இவ்வாலயம் 5 நிலை ராஜகோபுரத்தையும், 2 பிராகாரங்களை உடையதாகவும் அமைந்துள்ளது. ராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் உள்ள இரண்டாவது பிராகாரத்தில் கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் காணலாம். இந்தப் பிராகாரத்தின் வலதுபுறம் பைரவர் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. 

மூன்று நிலை உள்ள 2-வது கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் முதல் பிராகாரம் உள்ளது. உள்கோபுரத்தில் உட்சுவரில் சந்நிதியைப் பார்த்தவாறு சூரிய சந்திரரின் உருவங்கள் உள்ளன. எதிரே முன் மண்டபம், அதன் பின் இறைவன் கருவறையில் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். மூலவர், கம்பீரமான சற்றுப் பெரிய சிவலிங்கத் திருமேனி. இவர் மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவர். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமி மீது விழுகிறது. கோஷ்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

ஒருமுறை நந்தியின் சாபத்துக்கு ஆளாகி வராகமாக உருமாறிய மகாவிஷ்ணு, இத்தலத்தில் இறைவன் வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார். தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் சுவரில் இத்தல வரலாறாகிய திருமால் வெண்பன்றியாக இருந்து சிவனை வழிபட்ட சிற்பம் உள்ளது. இந்நிகழ்ச்சியை அப்பர் பெருமான் இத்தலத்துத் திருத்தாண்டகத்தில் பாரவன்காண் என்று தொடங்கும் பாடலில் (6-ம் திருமுறை, 87-வது பதிகம், 6-வது பாடல்) பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும் சீரவன்காண் என்று பாடியுள்ளார். 

பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்

பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற

நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித்தான் காண்

நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்

பேரவன்காண் பிறை எயிற்று வெள்ளைப் பன்றிப்

பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும்

சீரவன்காண் சீருடைய தேவர்க்கு எல்லாம்

சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே. 

முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இங்குள்ள நடராசர் திருமேனி மிகவும் அழகானது. இத்திருவுருவச் சிலைதான் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டது. பின்பு அது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய அரசின் பெருமுயற்சியால் திரும்பக் கொண்டுவரப்பட்டு பாதுகாப்புக் கருதி, இப்போது திருவாரூர் சிவாலயத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது வேறொரு நடராஜர் திருவுருவம் சிவகாமியுடன் எழுந்தருளுவித்து வழிபட்டு வரப்படுகிறது. நடராஜப் பெருமானுக்கு எதிரில் உள்ள நால்வர் சந்நிதியில் பரவையாரும் இடம் பெற்றுள்ளார்.

வெளிப் பிராகாரத்தில் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள பைரவர் விசேஷமான மூர்த்தி. இவருக்கு 11 தேய்பிறை அஷ்டமியில் தயிர்சாதமும், வடைமாலையும் சார்த்தி அர்ச்சனை செய்துவந்தால் தீராத நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற, இழந்த பொருள் மற்றும் செல்வத்தை திரும்பப் பெற, தொழில் வளம் பெற பலன் கிட்டும். ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி ஆகிய சனி உபாதைகளும் 11 தேய்பிறை அஷ்டமியில் இத்தலத்து இறைவனையும், பைரவரையும் வழிபட நீங்கும். 

இத்தலத்தில், கோவிலுக்கு எதிரிலுள்ள சந்திர தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்தில் நீராடுவது சிறப்பாகும். குபேரன், ராவணன், அக்னி முதலானோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். ஒருமுறை நந்தியெம்பெருமானின் சாபத்துக்கு ஆளான குபேரன் தனது பதவியை இழந்தான். குபேரன் பூவலகில் தனபதி என்ற பெயருடைய மன்னனாகப் பிறந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். தீபாவளி நாளில் இத்தலத்தில் குபேர பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இங்கு வந்து இத்தல இறைவனை வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம்.

திருப்புகழ் தலம்

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் மயிலுடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் காலணிகளுடன் விளங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

இத்தலத்தில் பூமிக்கடியில் ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். ஆகையால், இத்தலத்தைக் காலால் மிதிப்பதற்கு அஞ்சி திருஞானசம்பந்தர் அங்கப்பிரதட்சிணம் செய்து இறைவனை வழிபட்டார். பின்பு ஊர் எல்லையைத் தாண்டிச் சென்று அங்கிருந்தபடி இத்தல இறைவனை பதிகம் பாடி வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சிணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, January 25, 2026

தங்கம் சேரும் யோகம் தரும் மாற்றுரைவரதர் நோய் தீர்க்கும் சர்ப்ப நடராஜர்.

*திருச்சி, திருவாசி: தங்கம் சேரும் யோகம் தரும் மாற்றுரைவரதர் கோயில்; நோய் தீர்க்கும் சர்ப்ப நடராஜர்...* 
திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருவாசி திருக்கோயில். இங்குதான் ஈசன், மாற்றுரைவரதர் என்று போற்றப்படுகிறார். அவருக்கு பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர் என்கிற திருநாமங்களும் உண்டு.

பிரபஞ்ச வடிவான ஈசன் உருவமற்றவர். அவரை உருவத்தோடு வழிபடுவதும் உண்டு. அதேபோல அவரை அருவுருவமாகவும் வழிபடுவோம். பெரும்பாலும் ஆலயங்களில் சிவபெருமான் லிங்க ரூபமாக அருவுருவமாகவே அருள்பாலிக்கிறார். அப்படி எழுந்தருளும் லிங்கங்களிலும் பல்வேறு விதமான திருமேனிகள் உண்டு. அவற்றில் மிகவும் சிறப்பான சகஸ்ர லிங்கம்.

ஒரு லிங்கத்துனுள் ஆயிரம் லிங்கங்கள் உள்ளது போன்ற அமைப்பு. பல ஆலயங்களில் நம்மால் சகஸ்ர லிங்கங்களை தரிசிக்க முடியும் என்றாலும் முதன் முதலில் சகஸ்ர லிங்கம் உருவான தலம் ஒன்று உண்டு. அதன் பின்னணியில் உணர்வு பூர்வமான சம்பவம் ஒன்றும் உண்டு.

அந்தத் தலம் திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருவாசி திருக்கோயில். இங்குதான் ஈசன், மாற்றுரைவரதர் என்று போற்றப்படுகிறார். அவருக்கு பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர் என்கிற திருநாமங்களும் உண்டு.

முன்னொரு காலத்தில் ஆயிரம் ரிஷிகள் ஈசனை எண்ணி இத்தலத்தில் தவமிருந்தனர். அவர்களின் கடும் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து வேண்டும் வரம் யாது என்று கேட்டார்.

அதற்கு அந்த முனிவர்கள், ஈசனைக் கண்டபின் இந்த உலகில் அடையவேண்டியது ஒன்றும் இல்லை. தம்மை அவரோடு சேர்த்துகொள்ளுமாறு வேண்டினர். ஈசனும் மனம் குளிர்ந்து அவர்கள் அனைவரையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார்.

லிங்க ரூபமான ஈசனின் திருமேனியில் ஆயிரம் ரிஷிகளும் லிங்கங்களாக மாறி சேர்ந்தனர். அதுவே உலகின் முதல் சகஸ்ரலிங்கம்.

இத்தலத்துக்கு திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருநாமமும் உண்டு. தேவாரத் தலங்களுள் 62-வது தலம் இது. இங்கு வேதங்களின் பொருளை உணர்ந்துகொள்ள அம்பிகை அன்னமாக மாறிவந்து ஈசனை வழிபட்டாள்.

ஈசனும் அம்மையின் தவத்தில் மகிழ்ந்து காட்சி கொடுத்து வேதப் பொருளை எடுத்துரைத்தார். அன்னை, அன்னப்பறவையாக இங்கு வந்து அமர்ந்த பொய்கையே ‘அன்னமாம் பொய்கை’ என்கிறது தல வரலாறு.

இங்கு அருளும் அம்பிகைக்கு பாலாம்பிகை என்பது திருநாமம். சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் அவருடைய வலக்கை பாகத்தில், சந்நிதி கொண்டிருக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கியதைப் போல அமைந்திருப்பது சிறப்பம்சம்.

ஈசன் கருணாமூர்த்தியாக அருளும் தலம் இது. ருத்திராட்சப் பந்தலின் கீழே அருளும் இந்த சிவனை வழிபட்டால் செல்வம் சேரும். தங்க நகைகள் சேரும் யோகம் வாய்க்கும். இதற்கு சாட்சியாக சுந்தரமூர்த்தி நாயனாரின் சரிதம் ஒன்று உண்டு.

சுந்தரமூர்த்தி நாயனார் ஒவ்வோர் சிவாலயமாகச் சென்று தரிசனம் செய்துவந்தார். அவருடன் அடியார் பெருமக்கள் பலரும் சேர்ந்து பயணித்தனர்.

அவர்களுக்கு உணவு வழங்க வேண்டியதன் பொருட்டு சுந்தரர் ஈசனிடம் ஒவ்வொரு தலத்திலும் பொன் கேட்பார். அவர் அதைக் கொடுத்ததும் அதைக்கொண்டு அடியார்களுக்கு அன்னம்பாலிப்பார்.

ஒருமுறை திருவானைக்கா தலத்தில் சிவனை தரிசித்துவிட்டு இத்தலம் வந்தபோது கைவசம் இருந்த பொன் தீர்ந்துபோனது. வழக்கம்போல் சுந்தரர் சிவனை நினைத்துப் பாடினார். ஆனால் பொன் கிடைக்கவில்லை. சுந்தரர் கோபம் கொண்டார். சிவனை இகழ்ந்து பாடுவதுபோல் பாடினார்.

உடனே சிவனும் ஒரு பொன் முடிப்பைக் கொடுத்தார். இம்முறை சுந்தரருக்கு ஈசன் கொடுத்தபொன் தரமானதுதானா என்கிற சந்தேகம் வந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஈசன் ஒரு சாமானியராக வந்து அந்தத் தங்கத்தை வாங்கி உரசிக் காட்டி, "சுத்தத் தங்கம்தான். போதுமா" என்று கேட்டுவிட்டு உடனே மறைந்துவிட்டார்.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

இக்காட்சியைக் கண்டு வியந்துப்போன வந்தது ஈசனே என்று புரிந்துகொண்டார். ஈசனை எண்ணி மீண்டும் ஒரு பதிகம் பாடித் துதித்தார். இந்த நிகழ்வை சிவனை மறுபடியும் தான் இகழ்ந்து பாடவில்லை என்ற அர்த்தத்தில் பதிகம் பாடினார். தங்கத்தின் தரத்தை உரைத்ததனாலேயே இந்த ஈசனுக்கு 'மாற்றுரைவரதர்' என்ற திருநாமம் உண்டானது.

‘துணி வளர் திங்கள் துலங்கி விளங்க’ என்ற திருஞானசம்பந்தர் பதிகம் பாடப்பெற்ற இடம் இதுவே. வலிப்பு நோயையும் குழந்தைகளுக்கு வரும் நோய்களையும் தீர்த்துவைக்கும் திருத்தலம் இது.

கொல்லிமழவன் எனும் அரசனின் மகளுக்குப் பிடித்திருந்த வலிப்பு நோயை இங்குதான் சம்பந்த பெருமான் நீக்கினார். இங்குள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்குச் சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.
திருவாசியில் அருளும் நடராஜர் விசேஷமானவர். இவரின் திருவடியில் முயலகனுக்குப் பதில் சர்ப்பம் உள்ளது. இந்தத் திருக்கோலம் மிகவும் அபூர்வமானது. வேறு எங்கும் தரிசிக்க முடியாதது. நோய்களை நாகமாக்கி அதை ஈசன் மிதித்து ஆடுவதாக ஐதிகம்.

இந்த சர்ப்ப நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை 48 நாள்கள் தொடர்ந்து பூசிவர நரம்புப் பிரச்னைகள், வாதநோய், வலிப்புநோய், வயிற்றுவலி, சர்ப்ப தோஷம், மாதவிடாய்ப் பிரச்னைகள் முதலியன விலகும் என்கிறார்கள் பக்தர்கள்.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

அம்பிகை கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகிகளின் முன் தொட்டில் கட்டி வழிபட்டால் பிள்ளை வரம் கிட்டும் என்பதும் நம்பிக்கை. திருவாசி ஆலயத்தில், கிரக மூர்த்தியர் சூரியனை நோக்கியே அமைந்துள்ளனர். சூரியதேஷம் உள்ளவர்கள் இத்தல நவகிரகங்களை வழிபடுவது சிறப்பு.

இங்கு தனிச்சந்நிதியில் அமைந்துள்ள சண்டிகேஸ்வரிக்கு உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அபிஷேகம் செய்து வழிபட தம்பதிகள் ஒற்றுமை கூடும் எனவும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள் என்பதும் நம்பிக்கை.

இங்கு வள்ளி, தெய்வனை சமேத முருகன், கஜலட்சுமித் தாயாருக்கும் இங்கு தனிச் சந்நிதி உண்டு.

பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்தின் சிற்ப சிறப்புகள் அலாதியானவை. மகிமை வாய்ந்த இந்தத் திருக்கோயிலுக்கு வாய்ப்பிருப்பவர்கள் சென்று தரிசனம் செய்து வாருங்கள். ஈசன் அருளால் நோய் நொடி நீங்கி ஆரோக்கிய வாழ்வும் ஐஸ்வர்யமும் ஸித்திக்கும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் . 


மேற்கு நோக்கிய சிவாலயம் விளக்கம்

மேற்கு நோக்கிய சிவதரிசனம் விளக்கம்;
                 மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற ரிஷி தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம். இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன. மேற்குப் பார்த்த லிங்கம் உள்ள ஆலயங்கள்  தோஷ நிவர்த்தி தலங்களாக விளங்குகிறது. 

தேடிப் பிடித்து 41 மேற்கு நோக்கிய சிவ திருத்தல விவரங்களைக் கீழே தந்துள்ளேன். என்குரு திருமூலர் பெருமானின் பேரருளோடு....
(1) அருள்மிகு  கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை
(2) அருள்மிகு  மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை
(3) அருள்மிகு  இருதயாலீஸ்வரர், திருநின்றவூர், சென்னை
(4) அருள்மிகு பாலேஸ்வரர், பாலேஸ்வரம், செங்கல்பட்டு மாவட்டம்
(5) அருள்மிகு   வராஹீஸ்வரர், தாமல், காஞ்சீபுரம் மாவட்டம்
(6) அருள்மிகு  திருமேற்றளீஸ்வரர், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம் மாவட்டம்
(7) அருள்மிகு  காசி விஸ்வநாதர், கிருஷ்ணசமுத்திரம், திருவள்ளூர் மாவட்டம்
(8) அருள்மிகு  ஜலநாதீஸ்வரர், தக்கோலம், வேலூர் மாவட்டம்
(9) அருள்மிகு வாலீஸ்வரர், குரங்கனில்முட்டம், திருவண்ணாமலை மாவட்டம்
(10) அருள்மிகு  அதுல்நாதீஸ்வரர், அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம்
(11) அருள்மிகு  மருந்தீசர், திருஇடையாறு, விழுப்புரம் மாவட்டம்
(12) அருள்மிகு  வீரட்டீஸ்வரர், திருக்கோயிலூர், விழுப்புரம் மாவட்டம்
(13) அருள்மிகு  சிஷ்டகுருநாதர், திருத்துறையூர், கடலூர் மாவட்டம்
(14) அருள்மிகு  வைத்தியநாதீஸ்வரர், வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
(15) அருள்மிகு  அமிர்கடேஸ்வரர், திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
(16) அருள்மிகு  சுவர்ணபுரீஸ்வரர், செம்பனார்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம்
(17) அருள்மிகு  கடைமுடிநாதர், கீழையூர், நாகப்பட்டினம் மாவட்டம்
(18) அருள்மிகு  தர்மபுரீஸ்வரர், குருகத்தி, நாகப்பட்டினம் மாவட்டம்
(19) அருள்மிகு  பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி, காரைக்கால்
(20) அருள்மிகு  மனுநாதேஸ்வரர், மருதவஞ்சேரி, திருவாரூர் மாவட்டம்
(21) அருள்மிகு  விஸ்வநாத சுவாமி, தட்டாத்தி மூலை, திருவாரூர் மாவட்டம்
(22) அருள்மிகு  கோணேஸ்வரர், குடவாயில், திருவாரூர் மாவட்டம்
(23) அருள்மிகு  அபிவிருத்தீஸ்வரர், அபிவிருதீஸ்வரம், திருவாரூர் மாவட்டம்
(24) அருள்மிகு  கண்டீஸ்வரர், திருக்கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்
(25) அருள்மிகு  இராமலிங்கேஸ்வரர், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம்
(26) அருள்மிகு  தர்மபுரீஸ்வரர், பழையாறை, தஞ்சாவூர் மாவட்டம்
(27) அருள்மிகு  இராமநாதசுவாமி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
(28) அருள்மிகு  உக்தவேதீஸ்வரர், திருத்துருத்தி (குத்தாலம்), தஞ்சாவூர் மாவட்டம்
(29) அருள்மிகு  தாயுமானவசாமி, திருச்சிராப்பள்ளி
(30) அருள்மிகு  ஜம்புகேஸ்வரர், திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்
(31) அருள்மிகு  கைலாசநாதர், கற்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
(32) அருள்மிகு  உய்யகொண்டார், உய்யகொண்டான் திருமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
(33) அருள்மிகு  வம்சோத்தாரகர், பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்
(34) அருள்மிகு  காசி விஸ்வநாதர், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்
(35) அருள்மிகு  மன்னீஸ்வரர், அன்னூர், கோயம்பத்தூர் மாவட்டம்
(36) அருள்மிகு  நீலகண்டேஸ்வரர், இருகூர், கோயம்பத்தூர் மாவட்டம்
(37) அருள்மிகு  திருமுருகநாதசுவாமி, திருமுருகன்பூண்டி, கோயம்பத்தூர் மாவட்டம்
(38) அருள்மிகு  இரத்தினகிரீஸ்வரர், ஐயர்மலை, கரூர் மாவட்டம்
(39) அருள்மிகு விஸ்வேஸ்வரன்
பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டம்
(40) அருள்மிகு கைலாசநாதர்
தாரமங்கலம் சேலம் மாவட்டம்
(41) அருள்மிகு  திருக்காளத்தீஸ்வரர், திருக்காளத்தி, ஆந்திரா

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் "தச வீரட்டான ஸ்தலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.  இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும்.  இந்த பத்து ஸ்தலங்களுள் ஒன்பது ஸ்தலங்கள் திருநெல்வேலி அருகிலும், பத்தாவது ஸ்தலமான 
திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில் 
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலும் அமையப்பெற்றுள்ளது.

தச வீரட்டான ஸ்தலங்கள் எனப்படும் மேற்கு திசை நோக்கிய சிவாலயங்கள்:
(1) பக்த ஸ்தலம்: சிவசைலம் அருள்மிகு  சிவசைலப்பர் திருக்கோவில்.
(2) மகேச ஸ்தலம்: வழுதூர் அருள்மிகு  அக்னீஸ்வரர் திருக்கோவில்.
(3) பிராண லிங்க ஸ்தலம்: கோடகநல்லூர்  அருள்மிகு
அவிமுக்தீஸ்வரர் திருக்கோவில்.
(4) ஞானலிங்க ஸ்தலம்: சிங்கிகுளம் அருள்மிகு  கைலாசநாதர் திருக்கோவில்.
(5) சரண ஸ்தலம்: மேலநத்தம் அருள்மிகு  அக்னீஸ்வரர் திருக்கோவில்.
(6) சகாய ஸ்தலம்: ராஜவல்லிபுரம் அருள்மிகு  அக்னீஸ்வரர் திருக்கோவில்.
(7) பிரசாதி ஸ்தலம்: தென்மலை அருள்மிகு  திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோவில்.
(8) கிரியாலிங்க ஸ்தலம்: அங்கமங்கலம் அருள்மிகு  நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோவில்.
(9) சம்பத் ஸ்தலம்: காயல்பட்டினம் அருள்மிகு  மெய்கண்டேஸ்வரர் திருக்கோவில்.
(10) பஞ்சாக்ர ஸ்தலம்: திற்பரப்பு அருள்மிகு  மகாதேவர் திருக்கோவில்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, January 24, 2026

ரத சப்தமி என்றால் என்ன? தை மாதம் வளர்பிறை சப்தமி.



*ரத சப்தமி திருநாள்*
ரத சப்தமி என்றால் என்ன?
தை மாதம் வளர்பிறை சப்தமி. 

காலபுருஷ கணிதத்தின்படி சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்தை நோக்கி பயணிக்கிறார்.  சூரியன் தனது ரதத்தை வடதிசை நோக்கி செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாள்தான் 'ரத சப்தமி'. இன்று சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. 

சூரிய நாராயண பெருமாளை வழிபடும் விதமாக பெருமாள் கோயில்களில் சிறப்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இந்த நாளில் சூரியனை வணங்குவதற்கு முன் காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக் கொண்டு குளிப்பது  ஐதீகம். இதற்குக் காரணமான நிகழ்ச்சி 

முன்பொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் எனும் முனிவர் வசித்து வந்தார். அவர் மூன்று காலத்தையும் உணர்ந்தவர். அவரிடம் பலரும் சென்று தங்கள் எதிர்காலத்தைக் கணித்து சொல்லும்படி கேட்பார்கள். 

அவரும் கணித்துச் சொல்வார். அவர் சொல்வது அப்படியே நடப்பதால், அவருடைய புகழ் பல இடங்களுக்கும் பரவியது. ஒருமுறை, சந்நியாசி ஒருவர் காலவ முனிவரைப் பார்க்க வந்தார். அவர் காலவ முனிவரிடம்,  'எல்லோருடைய எதிர்காலத்தைப் பற்றியும் சொல்லும் நீங்கள், உங்கள் எதிர்காலம் பற்றி அறிந்ததுண்டா?' என்று கேட்டார். காலவ முனிவருக்குத் தூக்கி வாரிப்போட்டது. 
காலவ முனிவரும் கண்களை மூடியபடியே தியானிக்கிறார். அவருக்கு எதிர்காலத்தில் தொழுநோய் ஏற்படும் என்பது அப்போதுதான் புலப்பட்டது. கண் திறந்து பார்த்தபோது எதிரே இருந்த அந்த சந்நியாசியைக் காணவில்லை. சந்நியாசியாக வந்தவர் யமதர்மராஜன். 

நாட்கள் செல்லச்செல்ல காலவ முனிவருக்கு என்னவோ போலிருந்தது. அவர் நவகிரகங்களை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினார். காட்சி தந்த நவகிரகங்களிடம் தமக்குத் தொழுநோய் வராமல் இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அவர்களும் அவருக்கு வரம் கொடுத்தனர். ஆனால் பிரச்னை வேறு விதமாக திசை மாறியது. நவகிரகங்கள் என்பவை இறைவனின் ஏவலுக்குக் கட்டுப்படும் கருவிகள் மட்டுமே. வரம் அளிக்கும் அளவு வல்லமை பெற்றவர்கள் அல்ல. இவர்களது இந்தச் செயல், படைப்புக் கடவுளான பிரம்மாவுக்குத் தெரியவந்தது.

 நவகிரகங்களின் செயலில் கோபம் கொண்ட பிரம்மதேவர், 'காலச் சக்கரத்தை இப்படி ஆளாளுக்கு இயக்கினால் எப்படி? 
காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழுநோய் உங்களுக்கு வரட்டும்' என்று சாபம் கொடுத்து விட்டார். அழுது அரற்றிய நவகிரகங்களிடம் 'இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாது' எனவும் கூறிச் சென்றார். ஆனால் ஓர் உபாயத்தை நவகிரகங்களுக்குக் கூறியருளினார்.

'நீங்கள் பூமிக்குச் சென்று, அங்கே அர்க்கவனம் என்னும் இடத்தில் தங்கி, கார்த்திகை மாதம் தொடங்கி 78 நாள்கள் விரதம் இருங்கள்'' என்று கூறினார். நவகிரகங்களும் அவர் சொல்லியபடியே அர்க்கவனத்துக்கு வரும் வழியில், அகத்திய முனிவரைச் சந்தித்தனர். அவர் நவகிரகங்களுக்கு சில வழிபாட்டு முறைகளைக் கூறினார்.
'திங்கள்கிழமைதோறும் எருக்க இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு புசியுங்கள். மற்ற நாள்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள். 
எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி புசித்து வந்தால் தொழுநோய் குணமாகும்' என்றார் அவர். அவரே தொடர்ந்து,

'ரத ஸப்தமி (தை மாதம்) நாளில் ஏழு எருக்க இலைகள், எள், மஞ்சள் அட்சதை ஆகியவற்றைத் தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் நவகிரக தோஷம் விலகும்'என்றும் கூறினார்

இன்றும் நம்மைப் பாதுகாத்து கொள்ளவும், நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறவும், ரத சப்தமி அன்று எருக்க இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்வது நல்லது'' என்று  கூறினார்.

சூரிய பகவானை ஆராதிக்கும் ரதசப்தமி திருநாளில், அவரது அதிதேவனான நாராயணனும் கொண்டாடப்படுகிறார்.

அதனால்தான் திருமலை திருப்பதியில், இந்த நாளில் 'ஒரு நாள் பிரமோற்சவ விழா' நடத்தப்படுகிறது.
"ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.



ரத சப்தமி (RathaSapthami)
தாத்பர்யம்

பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று வேத வியாசரிடம் கேட்டார்.

அதற்கு வியாசர் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்கு அநீதி செய்வது மட்டும் பாவமில்லை, அதர்மம் செய்பவர்களை கண்டும் கண்டிக்காமல் இருப்பதும் பாவம். துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோதும், அவள் காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் உன் அங்கங்கள் சும்மா இருந்தன என்றார். 

*செயல்படாத தர்மம் அதர்மத்தை விட மோசமானது*. அந்த பாவத்தினால் தான் நீ விரும்பியபடி மரணம் ஏற்படவில்லை என்று கூறினார். நான் செய்திருக்கும் மாபெரும் பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் என்று பீஷ்மர் கேட்டார். அதற்கு வியாசர் யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே அந்தப் பாவம் அவரை விட்டு அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது. 

இருந்தாலும் அநீதியை எதிர்க்காத உன் கண்கள், காதுகள், வாய், தோள்கள், கைகள், கால்கள் அனைத்திற்கும் மேலாக தர்மத்தை சிந்தனை செய்யாத உன் தலை என அங்கங்கள் அனைத்தும் தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்றார். 

அதற்கு பீஷ்மர், என் அங்கங்களை பொசுக்க சாதாரண அக்னி போதாது சூரிய பகவானின் வெப்பத்தை பிழிந்து என் அங்கங்களை பொசுக்க உதவுங்கள் என்றார். அப்போது தான் என் பாவம் தொலையும் என்று வேண்டினார். 

உடனே வேத வியாசர் *சூரியனின் முழு சக்தியும் உள்ள எருக்கன் இலைகளால்* பீஷ்மரின் அங்கங்களை மூடினார். 

இந்த எருக்கன் இலைகள் சூரிய சக்தியை உன் உடலில் பாய்ச்சும், நீ புனிதம் அடைவாய் என்றார். பின் பீஷ்மர் தியானத்தில் அமர்ந்து அந்நிலையிலேயே முக்தி அடைந்தார். 🙏

அந்தப் புனித நாளே *ரதசப்தமி RathaSapthami* 

பீஷ்மர் நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்துவிட்டாரே அவருக்கு யார் பித்ரு கடன் செய்வது என்று தருமர் வருந்தினார்.

அதற்கு வியாசர், ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும் பரிபூர்ண தூய்மை உள்ள துறவிக்கும் நீத்தார் கடன் என்பது அவசியமே இல்லை, அவர்கள் நற்கதியையே அடைவார்கள் என்று கூறினார். 

வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர் கடன் அளிக்கும் என்றும் கூறினார். 

ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்து நீராடுபவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவர், பீஷ்மருக்கு நீர் கடன் அளித்ததால் புண்ணியமும் அடைவர் என்று கூறினார். 

எனவே ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு 7 எருக்கன் இலைகளை அட்சதை சேர்த்து தலை, கண்கள், தோள்பட்டைகள், கால்களில் வைத்துக் கொண்டு நீராடினால் பாவத்தில் இருந்து விடுபடலாம். அன்று சூரிய பகவானுக்கும் பீஷ்மருக்கும் தூய்மையான நீரினை உள்ளங்கையில் ஏந்தி அர்க்யம் சமர்ப்பிக்க வேண்டும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைக்க சவுந்தரேஸ்வர் திருப்பனையூர்.

பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கும்
அருள் புரியும்சவுந்தரேஸ்வர் 
திருக்கோயில்
திருப்பனையூர்...!
மூலவர் : சவுந்தரேஸ்வரர் (அழகியநாதர், தாலவனேஸ்வரர்)

அம்மன்/தாயார் : பிரஹந்நாயகி, பெரியநாயகி

தல விருட்சம் : பனைமரம்

தீர்த்தம் : பராசர தீர்த்தம், அமிர்த தீர்த்தம்

வழிபட்டோர் : சுந்தரர், கரிகாலச் சோழன், சப்தரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி,

தேவாரப் பாடல்கள் :- திருஞானசம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 73வது தலம்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 136 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தலத்தில் சுந்தரருக்கு சிவபெருமான் நடனக் காட்சியருளினார் என்பது தொன்நம்பிக்கை.

தந்தை இளஞ்சேட் சென்னியை இழந்த கரிகாலன் தாயத்தார் எதிரிகளுக்குப் பயந்து இரும்பிடர்தலையார் என்ற புலவரின் உதவியோடு தங்கிய தலம்.

தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன.

தல வரலாறு:

பழமையான கோயில், சிறிய ஊர். கரிகாற் சோழன் வளர்ந்த ஊர், முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன்.

இவன் சிறியவனாக இருக்கும் போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார்.

தந்தையை  இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய "இரும்பிடர்த்தலையார்' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார்.

இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தார் கரிகாலச் சோழன். 

ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் "துணையிருந்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார். 

பனை மரத்தை தலமரமாகக் கொண்ட ஊர்களாக வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர் என்ற ஐந்து ஊர்களும் அமையும். 

அவை பஞ்சதல சேத்திரங்கள் எனப்படுகின்றன.

தலமரங்களாகிய இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன.

இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன. 

பனைமரங்களை மிகுதியாக உடைய ஊரானதால் தாலவனம் என்றும் இத்தலத்திற்கு பெயருண்டு. தாலம் என்பது பனை மரத்தைக் குறிக்கும்.

சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுக்கோளின்படி, திருப்புகலூர் சிவபெருமான்  பொன் பெற்று "தம்மையே புகழ்ந்து" என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர்  வரலானார். 

அப்போது ஊரின் எல்லையில்  சிவபெருமான் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, 'அரங்காடவல்லார் அழகியர்' என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். 

இந்நகிழ்ச்சியின் நினைவாக இன்றும், ஊர்க்கு வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் 'சந்தித்த தீர்த்தம்' என்னும் பெயருடன் திகழ்கின்றது. 

சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார்  இதன்  நினைவாக, இங்கு உள்ள விநாயகரும் 'மாற்றுரைத்த விநாயகர் ' என்றழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு:
இக்கோயில் கி.பி.11 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும், கல்வெட்டில் இக்கோயில் ""இராசேந்திர சோழப் பனையூர்'' என்று குறிக்கப் பெறுகின்றது.

கல்வெட்டில் இறைவன் திருப்யெர் 'பனையடியப்பன்' பனங்காட்டிறைவன்' என்று குறிக்கப்பெறுகின்றது.

கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது- ராஜகோபுரமில்லை. வாயில்மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது.

உள்நுழைந்ததும் பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி - தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது சதுர ஆவுடையார் சிவபெருமான் ,இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார். 

சிவலிங்கத் திருமேனி அழகுடன் சற்று உயரமாக அருட்பொலிவுடன் விளங்குகின்றது. மூலவர் சந்நிதி மண்டபத்துள் நால்வர் பிரதிஷ்டை நடராஜர் சந்நிதி உள்ளன.

வலதுபுறம் பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம் - தெற்கு நோக்கியது. இத்தலத்தின் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

முன்னால் துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளதுபிரகாரத்தில் பராசர முனிவர் உருவம் உள்ளது ,

விநாயகர் சன்னதி உள்ளது. கோஷ்ட மூர்த்தமாக, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரமன், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சன்னதி உள்ளது.

இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்புடையது- இடக்கை
யில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.

சிறப்புக்கள் :
பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள்.
திருவிழா:
சிவராத்திரி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, திருவாதிரை.

அமைவிடம் -

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பனையூர்.

நன்னிலத்தில் இருந்தும் சுமார் 3 கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். பேரளம் - திருவாரூர் பேருந்து சாலை வழியில் சன்னாநல்லூரைக் கடந்து மேலும் சென்றால் "பனையூர்" என்று கைகாட்டி உள்ளது. குறுகலான அக்கிளைப் பாதையில் 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Friday, January 23, 2026

சங்கு சக்கரத்துடன் காட்சி அளிக்கும் அம்மன்.

#சங்கு_சக்கரத்துடன் காட்சி அளிக்கும் #அம்மன்: 
#பெருமாளைப் போலவே காட்சி அளிக்கும் அதிசயம்

 இன்று நாம் தரிசிக்கவிருப்பது ஒரு அபூர்வமான திருக்கோலம். பொதுவாக சங்கு மற்றும் சக்கரத்தை நாம் மகாவிஷ்ணுவின் கைகளில் தான் பார்த்திருப்போம். ஆனால், ஒரு பெண் தெய்வம் விஷ்ணு அம்சமாக சங்கு சக்கரம் ஏந்தி அருள்பாலிக்கும் அதிசயத்தை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிளநகரில் காணலாம்.
யார் இந்த அன்னை? 
இத்தல நாயகி அருள்மிகு வேயுறுதோளியம்மை. மூங்கிலைப் போன்ற அழகான தோள்களை உடையவள் என்பதால் இப்பெயர். இவள் அன்னை பார்வதியின் வடிவம் என்றாலும், தன் பக்தர்களைக் காக்க மகாவிஷ்ணுவின் ஆயுதங்களான சங்கு மற்றும் சக்கரத்தைத் தாங்கி "நாராயணி" அம்சமாக இங்கே காட்சி தருகிறாள்.
ஏன் இந்த கோலம்? 
தீய சக்திகளிடமிருந்து பக்தர்களைக் காக்கவும், அவர்களுக்கு வரும் தடைகளைத் தகர்க்கவும் அன்னை எப்போதும் விழிப்புடன், தயார் நிலையில் இருப்பதை இக்கோலம் உணர்த்துகிறது. சிவபெருமானின் சரிபாதியான அன்னை, ஹரியின் அம்சமாகவும் விளங்குவது சைவ-வைணவ ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஆலயத்தின் மற்ற சிறப்புகள்: 
துறைகாட்டும் வள்ளலார்: ஆற்றில் வெள்ளம் வந்தபோது #திருஞானசம்பந்தருக்கு வழி காட்டியதால், இத்தல ஈசனுக்கு 'துறைகாட்டும் வள்ளலார்' என்று பெயர்.
குழந்தை பாக்கியம்: தல விருட்சமான விழல் செடியில் தாலிச்சரடு அல்லது தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வழிகாட்டும் இறைவன்: உங்கள் வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் திசை தெரியாத நிலையில் இருந்தால், இந்த 'துறை காட்டும்' ஈசனை வணங்கினால் நிச்சயம் நல்வழி பிறக்கும்.
அமைவிடம்
அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில்,
திருவிளநகர் (ஆறுபாதி), மயிலாடுதுறை - செம்பொனார்கோவில் வழி,
நாகப்பட்டினம் மாவட்டம்.
வாழ்க்கையில் ஒருமுறை தரிசிக்க வேண்டிய அற்புதமான தலம்! 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, January 22, 2026

திக்குவாய், ஊமைத்தன்மை நீக்கும் அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்...!வாணியம்பாடி

திக்குவாய், ஊமைத்தன்மை நீக்கும் அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்...!
வாணியம்பாடி
இறைவன் :- அதிதீஸ்வரர்

இறைவி :- பெரியநாயகி, பிரகன் நாயகி

தல விருட்சம் :- அகண்ட வில்வமரம்

தீர்த்தம் :- சிவதீர்த்தம்

புராண பெயர் :- வாணியம்மைபாடி
     
  இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்.  

தல வரலாறு :-
     
  பிரம்மா சரஸ்வதியிடம், உலக உயிர்களை படைக்கும் நான் தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள், எனக் கூறினார். 
இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார்.

 வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள்.

 வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப் படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். 

ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். 

எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.

 செல்லும் வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் தங்கினார். 

இதனால் மகிழ்ந்த சிவனும்,பார்வதியும் வாணிக்கு அருள்செய்து அவளைப்பாடும்படி கூறினர்.

 வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். (கலை)வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூர் வாணியம்பாடி 
ஆனது.  

இக்கோயில் பல்லவப்பேரரசர்களால் கட்டப்பட்டது. மூன்று நிலை மேற்கு ராஜகோபுரமும், ஐந்து நிலை கிழக்கு ராஜகோபுரமும் உள்ளது. சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் உள்ளது சிறப்பு.  
   
பிரார்த்தனை :-     
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன் :- 
     
  பால், தேன், நதிநீர், அன்னம் ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.  
     
  மேற்கு நோக்கிய இந்தக் கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். ராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காச்ய முனிவரின் தர்ம பத்தினி அதிதி. இவள் புனர்பூசம் நட்சத்திரம் தோறும் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களை பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. 

எனவே புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வாணியம்பாடி. 

மாதம் தோறும் புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகைசாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும்.

புதுவீடு, வாடகை வீடு பால் காய்ச்சுதல் போன்ற விருத்தியாககூடிய செயல்களை இந்த நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், பள்ளிமாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இங்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை. 

ஆசிரியர்கள் தங்கள் தொழிலை துவங்கும் முன்பும் இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு. 

ஹோட்டல் தொழில் செய்பவர்கள் அடிக்கடி இங்கு வந்து அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். இதனால் தங்களது தொழிலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீங்கும் என்பது நம்பிக்கை.  

திருவிழா :- 
     சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை.  
     
நடைதிறக்கும் நேரம் :-
     
  காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.  
    
முகவரி

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
வாணியம்பாடி, (பழைய வாணியம்பாடி)        வேலூர் மாவட்டம்.

Wednesday, January 21, 2026

தமிழக அதிசய சிவ விஷ்ணு ஆலயங்கள்

அதிசய_ஆலயங்கள்
🏛️திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

🏛️ #மதுரை_மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன.வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

🏛️கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.

🏛️ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள்.வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.

🏛️மூலவரே வீதிவலம் வருவது,சிதம்பரம் நடராஜர் மட்டுமே. 

🏛️மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.

🏛️கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோவில் உள்ளது.இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார்.ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும்,மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார்.சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.

🏛️சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி,ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும்,ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.

🏛️சைவர்களுக்குரிய திருவாதிரையும்,வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.

🏛️எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும்,திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

🏛️இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத்.மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள்.நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள்.நவம்பரில் கோவிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள்.அந்த தீபம் மீண்டும் கோவில் திறக்கப்படும்வரை அதாவது,ஆறு மாதம் எரிந்து கொண்டே இருக்கும்.

🏛️காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.

🏛️குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது.இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

🏛️நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில் தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

🏛️ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது.தட்டினால் வெண்கல ஓசை வரும்.

🏛️சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி.இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை.இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.

🏛️தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில்,குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும்.இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை.திருநீறு தானாகவே விளையும்.மற்ற திருத்தலங்கள்,கதிர்காமம்,மருதமலை,திருநீற்று மலை,கங்கை கரையில் உள்ள திருவருணை.

🏛️ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.

🏛️சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.

🏛️தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி.இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

🏛️அம்மன் சந்நிதி இல்லாத கோவில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

🏛️கிருஷ்ணகிரி மாவட்டம்,தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர்.இங்குள்ள நூற்று ஒன்று சாமி மலை மீது உள்ள குகையில் ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு இருக்கிறது.இதில் இளநீர் விட்டு தீபமேற்றினால் அது பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.

🏛️ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும்.சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும்.அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம்.ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

🏛️திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)திருக்கோவிலில்,6 நாழிகைக்கு ஒரு முறை சிவலிங்கம் வர்ணம் மாறுகிறது.

🏛️திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது.சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயத்தையும் இங்கே பார்க்கலாம்.
🏛️திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததும்,தாமரை மலரைக் கொண்டு சிவபூஜை செய்தார்,முருகப்பெருமான்.அதை உணர்த்தும் வகையில் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

ஒத்தாண்டேஸ்வரர் திருமழிசை, திருவள்ளூர்

ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம் கரிகாலப்பெருவளத்தான், இத்தலத்திற்கு அருகிலுள்ள மற்றொரு தலத்தில் சி...