Monday, August 22, 2022

ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.

🌹 🌿 தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் 
🌹 🌿 திருவாரூரில் தியாகராஜர் 
🌹 🌿 திருநெல்வேலியில் நெல்லையப்பர் 
கோமதி அம்மன் சங்கரநாராயணன் சங்கரன்கோவில்
🌹 🌿 திருவையாறில்
ஐயாறப்பர் 
🌹 🌿 திருவண்ணாமலையில் அண்ணாமலையார் 
🌹 🌿 திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர் 
🌹 🌿 திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் 
🌹 🌿 திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்
🌹 🌿 திருக்கருகாவூரில் முல்லைவனநாதர் 
🌹 🌿 திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர் 
🌹 🌿 திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர் 
🌹 🌿 திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர் 
🌹 🌿 திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர் 
🌹 🌿 திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர் 
🌹 🌿 திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்
🌹 🌿 திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர் 
🌹 🌿 திருச்சியில் தாயுமானவர் 
🌹 🌿 திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர் 
🌹 🌿 திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் 
🌹 🌿 திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர் 
🌹 🌿 திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்
🌹 🌿 திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்
🌹 🌿 திருமழபாடியில் வைத்தியநாதர் 
🌹 🌿 திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்
🌹 🌿 திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர் 
🌹 🌿 திருவண்டுதுறையில் வண்டுறைநாதர்
🌹 🌿 திருமாணிக்குழியில் வாமனபுரீஸ்வரர் 
🌹 🌿 திருவாளப்புத்தூரில் மாணிக்கவண்ணர் 
🌹 🌿 இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.
🌹 🌿 'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதற்கே மூச்சு வாங்குது.
🌹 🌿 இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர் , வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதன், மேலகோட்டையுரில்  கோமதிஸ்வர் என ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே இருக்கும்.
🌹 🌿 தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63. 
🌹 🌿 ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.
🌹 🌿 தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.
🌹 🌿 எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.
🌹 🌿 இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.
🌹🌿நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் அரன் நாமம் சூழ்க
====

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...