Monday, September 19, 2022

விபூதியால் என்ன நன்மை ?

சிவமயம் சிவாய நம 🙏🌺🙏

#விபூதி_பூசுவதால்_ஏற்படும்_நன்மைகள்

  நெற்றியில் அணியும் திருநீறு விளக்கும் உயர்ந்த தத்துவம் என்னவென்றால் நாடாண்ட மன்னனும்‌ நூல் பல கற்ற பண்டிதரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவார்கள் என்பதாகும். 

  மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகமாக இருப்பதால், அதன் வழியாக அதிக சக்தி வெளிப் படுவதோடு  இயற்கையின் மற்ற சக்தி அம்சங்களையும் தமக்குள் ஈர்த்துக் கொள்ளும் வர்ம பகுதியாகவும் அது உள்ளது.

  சூரிய கதிர்களின் சக்தி அலைகளை ஈர்த்து, நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீறு நன்றாக செய்யும். அதனால் நெற்றியில் திருநீறு பூசுவது என்பது பல உள்ளர்த்தங்களை கொண்டதாக அறியப்படுகிறது. 

  இரட்சை, சாரம், விபூதி, பஸ்மம், பசிதம் என்று திருநீறுக்கு பல பெயர்கள் உள்ளன. நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து, இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீற்றுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.

  அது போல் ஆன்மீகத்தில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு சம்பிராதயமும் ஏன் செய்கிறார்கள் ? என்பதை
தெரிந்து செய்தால் நாம் சீக்கிரமாக கடவுளுக்கு அருகில் செல்ல முடியும்.

   விபூதி நம் சைவர்களது புனித அடையாள சின்னம்
எவராக இருந்தாலும் இந்த உடல் ஒரு நாள் மரணத்திற்கு பிறகு இறுதியில் தீயில் வெந்து ஒரு பிடி சாம்பலாக போகிறது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

   ஆகையால்  தூய்மையான அறநெறியில் இறை சிந்தனையோடு வாழ வேண்டும்.

  பசுவின் சாணத்திலிருந்து சுட்டு தயாரிக்கப்படுவது திருநீறு.

   விபூதி அணியாமல் செய்யும் சிவபூஜை , ஜெபம்,பிதுர் கர்மம் ,தேவர்களின் யாகம் முழுமை அடையாது.

ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு உகந்தது விபூதி.

திரு என்றால் மகா லக்ஷ்மி.
விபூதியை திருநீறு என்று அழைக்கிறார்கள்.

விபூதியை எந்த திசை பார்த்து பூச வேண்டும் ?

நீரில்லா நெற்றி பாழ் ‘என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

சைவர்கள்  திருநீறும் ,
வைணவர்கள் திருமண்ணும் அவசியம் நெற்றியில் இருக்க வேண்டும்.

  வடக்கு திசை ,கிழக்கு திசை நோக்கி நின்று கீழே சிந்தாமல் ,மூன்று விரல்களால் (நடு விரல் ,
மோதிர விரல் ,ஆள் காட்டி விரல் )பூச வேண்டும்.

விபூதி நிலத்தில் சிந்துவது பாவம்.

   திருநீறு பூசும் போது நமசிவாய,சிவாயநம,சிவயசிவ,
சிவசிவ, திருச்சிற்றம்பலம்,
தில்லையம்பலம்  என்றும் உதடு பிரியாமல் மனம் ஒன்றி சொல்ல வேண்டும்.

  திருமணமாகாத பெண்கள் விபூதி பிரசாதத்தை கழுத்தில் பூச வேண்டும்.

இதனால் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் ஏற்படும்.

எப்போது விபூதி பூசலாம் ?

காலை, மாலை ,பூசைக்கு முன்னும் ,பின்னும் ,உணவு உண்பதற்கு முன்னும் ,பின்னும் ஆலயம் செல்வதற்கு முன் ,இரவில்
உறங்க போவதற்கு முன் ,விபூதி தரிக்க வேண்டும்.

மூன்று படுக்கை வசக் கோடு பூசுவதை “திரிபுண்டரம் “எனப்படும்.

  இன்னும் விபூதியின் மகிமையை அறிய ஒரு இதோ உங்களுக்காக ஒரு  புராண கதை.

‘பர்னாதன்’ என்ற சிவபக்தன் இருந்தான்.

உணவு தண்ணீர் மறந்து சிவனை நினைத்து 
கடும்தவம் இருந்தான்.

ஒரு நாள் ,அவனுக்கு கடுமையான பசி ஏற்பட்டது.

தவத்தை கலைத்துகண் திறந்து பார்த்தான்.

அவனைச் சுற்றி சிங்கங்களும்,
புலிகளும் பறவைகளும் என பல உயிரினங்களும் காவலுக்கு இருந்தன.

பறவைகள் பழங்களை பறித்து கொண்டு வந்து ,அவன் முன் வைத்தது. 

பசி தீர சாப்பிட்டான்.

மீண்டும் தவம் செய்ய துவங்கினான் பலவருடங்கள் கடந்தோடியது.

தவம் முடிந்து சிவ வழிபாட்டை தொடங்கினான்.

ஒரு நாள் தர்பை புல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது.

அவன் பதற்றம் இல்லாமல் இருந்தான்.

ஆனால் அவனை என்றும் காத்து அருளும் ஈசனின் மனம் பதறியது.

சிவபெருமான் வேடன் உருவில் பர்னாதனின் கையைப் பிடித்து பார்த்தார்.

என்ன ஆச்சரியம் ரத்தம் கொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது.
வந்தது தேவர்களுக் கெல்லாம் தேவர் மஹாதேவர் என்பதை அவன் அறிந்தான் .

ரத்தத்தை நிறுத்தியது யார்?என்பதை அறிவேன் சுவாமி

உங்கள் சுய ரூபத்தை எனக்கு காட்டுங்கள் என்று பர்னாதன் வேண்டினான். 

சிவபெருமானும் காட்சி கொடுத்தார்.

உனக்காகவே சாம்பலை உருவாக்கினேன்.

அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என அழைக்கப்படட்டும் உன் நல் தவத்தால் விபூதி உருவானது.

அக்னியை யாரும் நெருங்க முடியாதது போல இந்த விபூதியை பூசுபவர்களை துஷ்ட சக்தி நெருங்காது.

விபூதி என் அம்சம் என்று கூறி அவனுக்கு ஆசி வழங்கினார் சிவபெருமான்.

#விபூதி_பிள்ளையார்

  மதுரையில் உள்ள மீனாக்ஷி அம்மன் கோவிலில் அமைத்துள்ள விபூதி பிள்ளையார்.

  இந்த பிள்ளையாருக்கு நம் கையால் விபூதி அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும்.

  இவரை வணங்கினால் ,
வாழும் காலத்தில் பொருளும் பிறவா நிலையும் கிடைக்கும் என்பது
பக்தர்களது நம்பிக்கை.

நீங்களும் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு போனால் பிள்ளையாரை தரிசனம் செய்யுங்கள்.

விபூதியால் என்ன நன்மை ? என்று ஸ்ரீராமன் அகஸ்தியரிடம் கேட்டார்.

பகை ,தீராத வியாதி ,மனநல பாதிப்பு ,செய் வினை பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து பூசினால்
அனைத்தும் விலகும் என்று உபதேசம் செய்தார் அகஸ்தியர்.

சரி விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகளை பார்ப்போம்.

கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. 

இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில் இருந்து  காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
 
*திருநீறு பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை:*
 
வெள்ளை நிற விபூதி மட்டும் வைக்க வேண்டும். முகத்தை அண்ணாந்து வைத்து நிலத்தில் சிந்தாமல் நடு மூன்று விரல்களினால் நெற்றி  நிறைய பூசவேண்டும்.
 
நடந்து கொண்டோ படுத்துகொண்டோ பூசக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதி பெறும்போது அவர்களை வணங்கி பெறுதல்  வேண்டும்.

வடக்கு கிழக்குமுகமாக நின்று தான் திருநீறு பூசவேண்டும். தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும்  பேசிக்கொண்டும் திருநீறு பூசக்கூடாது.
 
விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து வைக்கக்கூடாது. கோயிலில் விபூதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும்.
 
வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபூதி இடக்கூடாது. ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது.

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

சிவ ஓம் நமசிவாய 🙏🌺🙏

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...