Saturday, November 19, 2022

விநாயகரின் வாகனங்கள்

விநாயகரின் வாகனங்கள்...!
விநாயகர் என்றால் நமது ஞாபகத்திற்கு முதலில் வருவது, 
விநாயகரின் வாகனமான எலிதான். பொதுவாக குண்டாக இருப்பவரை பிள்ளையார் என்று பலரும் கேலி செய்வது வழக்கம்.

அப்படி கொழுக் மொழுக்கென்று இருக்கும் பிள்ளையார் எதற்காக சின்னஞ்சிறு எலியில் மேல் பயணம் செய்கிறார் என்று தெரியுமா?? 

விநாயகரின் வாகனங்கள்: 

விநாயகரின் வாகனம் என்று அனைவராலும் அறியப்படுவது எலி மட்டுமே. ஆனால், விநாயகர் எலியை மட்டும் வாகனமாகப் பயன்படுத்தவில்லை. ஆரம்ப காலங்களில் விநாயகருக்கென்று தனியாக வாகனம் எதுவும் வர்ணிக்கப்படவில்லை.

முத்கல பூர்ணா என்ற இந்து நூலில் விநாயகரின் 8 அவதாரங்களை கூறியிருப்பர். அதில், 5 அவதாரங்களில் விநாயகர், எலியையே வாகனமாக பயன்படுத்துவார்.

வக்ரதுண்டா என்ற அவதாரத்தில் சிங்கத்தையும், விகட அவதாரத்தில் மயிலையும், விக்னராஜா அவதாரத்தில் புனிதமான பாம்பையும் வாகனமாக பயன்படுத்துவார். 

அதேபோல், கணேஷ பூர்ணா என்ற இந்து நூலில், விநாயகர் எலி, சிங்கம், மயில் மற்றும் குதிரை ஆகியவற்றை வாகனங்களாக பயன்படுத்துவதாகவும், ஜெயின் மத நம்பிக்கைகளில் விநாயகர் எலி, யானை, ஆமை, ஆடு மற்றும் மயில் ஆகியவற்றை வாகனங்களாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

எலியை வாகனமாக்க காரணம்:

விநாயகரின் அவதாரங்களை வர்ணிக்கும் கணேஷ பூர்ணாவில் கூறியுள்ளது என்னவெனில், “கருஞ்சா என்ற இசைக்கடவுள், ஒருநாள் இந்திர லோகத்திற்கு சென்றார். அப்போது, அவர் தவறுதலாக அங்கிருந்த வமதேவா என்ற முனிவரின் காலை மிதித்துள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த முனிவர், அவரை எலியாக மாற்றி சாபம் விடுத்தார். எலியாக மாறிய கருஞ்சா, மலையளவிற்கு மிகவும் பெரிதாக இருந்துள்ளார். இதனால், கருஞ்சா வழியில் இருந்த அனைத்தும் சேதமடைந்தன. 

இந்நிலையில், விநாயகர் தங்கியிருந்த மகரிஷி பரஷாரின் ஆசிரமத்திற்கு வந்த கருஞ்சா, அங்கிருந்த அனைத்தையும் நாசம் செய்துள்ளார். 

இதனால் கோபமடைந்த விநாயகர், கருஞ்சாவுக்கு பாடம் புகட்ட, தனது பாசக்கயிற்றை வீசி, அதனை தன் காலடியில் பணியச் செய்தார். 

பின்னர் கருஞ்சா, விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, அதனை தன் வாகனமாக விநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். இருப்பினும், விநாயகரின் எடையை கருஞ்சாவால் தாங்க முடியவில்லை. கருஞ்சா வேண்டிக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, விநாயகர் தனது எடையை இலகுவாக்கினார். 

விவாசயத்தைக் காத்த விநாயகர்:

இதுதவிர, பழங்காலங்களில் விவசாயமே அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்தது. அப்போது, எலிகள் விவசாய நிலத்தை நாசம் செய்ததால், அவற்றை வீழ்த்த விநாயகர் அவற்றை வாகனங்களாக பயன்படுத்தியதாகவும் கதைகள் உள்ளன. 

மற்றொரு நம்பிக்கை என்னவென்றால், எலிகள் மிகவும் சிறியதாக இருப்பதாலும், அவற்றால் எந்த சிறு துளையிலும், இருள் சூழ்ந்த இடங்களிலும் நுழைய முடியும் என்பதாலும், விநாயகர் இருளை நீக்கவும், மூலை முடுக்கில் உள்ள தீய சக்திகளை அழிக்கவும் எளிதாக இருக்கும் என்பதற்காக எலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது...!

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...