Monday, February 27, 2023

கோவில்கோபுரத்தில்இருக்கும்_பொம்மைகளைபற்றி_உங்களுக்கு_தெரியுமா? கோவிலுக்கு சென்றால் இதை தரிசனம் செய்ய மறந்து விடாதீர்கள்

🔯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔯

#கோவில்கோபுரத்தில்இருக்கும்_பொம்மைகளைபற்றி_உங்களுக்கு_தெரியுமா? கோவிலுக்கு சென்றால் இதை தரிசனம் செய்ய மறந்து விடாதீர்கள், கோடி புண்ணியத்தை இழந்து விடுவீர்கள்!**_ 
 🌹கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறுவார்கள். 

🍁காலையில் எழுந்ததும் முதல் தரிசனமாக நீங்கள் கோவில் கோபுரத்தை கண்டால் அந்த நாள் முழுவதும் உங்களுக்கு #இலாபமும்_அதிர்ஷ்டமும் பெருகும். 

🍁கோபுர தரிசனம் செய்பவர்களுக்கு கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என்கிறது #ஆகமவிதிகள்! 

🍁இப்படி இருக்க கோபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பொம்மைகளுக்கு #பின்னால்இருக்கும்சூட்சமம்என்ன? என்கிற ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

🍁கோவிலுக்கு சென்றால் முதலில் #கோபுரம்வழியாகநுழைந்துபின்புகருவறையை_அடைவது_வழக்கம். இப்படி கோபுரங்கள் இருக்கும் கோவில்களுக்கு அதிக சக்தி உண்டு. 

🔥பெரிய பெரிய கோபுரங்கள் அமைத்து அதில் கலசங்களை வைப்பது காலா காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஒரு %#அற்புதமானஅறிவியல் ஆகும். இப்படி பார்த்து பார்த்து கம்பீரமாக எழுப்பப்பட்டிருக்கும் கோவில் கோபுரங்களில் இருக்கும் பொம்மைகளை என்றாவது நீங்கள் உற்று நோக்கியது உண்டா?

🔥எதற்காக கோபுரங்கள் முழுவதும் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது? 

🔥கோவில் கோபுர பொம்மைகளை எப்படி வேண்டுமானாலும் அமைத்து விடக் கூடாது. எந்தந்த இடங்களில், எந்தெந்த தெய்வ உருவங்கள் இடம் பெற வேண்டுமோ, அந்த அமைப்பின் படி இருந்தால் தான் அதற்கு அதிக சக்தி உண்டு. 

🍂கோபுரத்தின் மேல் பகுதியில் #சிவபெருமான் தொடர்புள்ள பொம்மைகளும்,  

🍂நடுப்பகுதியில் #விஷ்ணுபகவான் தொடர்புள்ள பொம்மைகளும், 

🍂அடிப்பகுதியில் பிரம்ம தேவர் தொடர்புள்ள பொம்மைகளும் அமைக்கப்பட்டு இருக்கும். 

🍂 மற்ற பகுதிகளில் ரிஷிகள், பூதகணங்கள், தேவதைகள், பக்தர்கள் ஆகியோரின் திருஉருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

⭕இப்படி ஒவ்வொரு பொம்மைகளையும் செதுக்கும் பொழுது அதில் இலக்கண விதி உண்டு. இந்த விதிக்கு *‘#பிரதிமாலஷணம்’* என்பது பெயராகும். 

⭕இந்த விதியின்படி கோபுர பொம்மைகள் செதுக்கப்பட வேண்டும். இதில் தெய்வ திருஉருவங்கள் அமைக்கப்படும் பொழுது அதன் கண்கள் ***#அனுக்கிரகபார்வையுடன்சாந்தமாக_அமைக்கப்பட்டுஇருக்கவேண்டும். தெய்வத்தின் திருமுகத்தை விட, **#உடல்பத்துமடங்குபெரியதாகஇருக்கவேண்டும்.

⭕அது போல மனித உருவங்கள் அமைக்கப்படும் பொழுது #முகத்தைக்காட்டிலும்_உடல்_எட்டுமடங்குஅதிகம்இருக்கவேண்டும்.

⭕ தேவதைகளின் திருஉருவம் ****#முகத்தைக்காட்டிலும்9மடங்குஉடல்பெரியதாகஅமைக்கப்பட்டிருக்கவேண்டும். 

🌳பூதகணங்கள், துவாரபாலகர்கள், அசுரர்கள் ஆகியோருடைய #கண்கள்உக்கிரமாகஅமைக்கப்பட்டிருக்கவேண்டும். 

⭕கோபுர பொம்மைகளில் இவர்கள் மட்டுமல்லாமல் தேவர்கள், பறவைகள், மிருகங்கள் கூட செதுக்கப்பட்டு இருக்கும். 

⭕இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் தெய்வம் அருள் புரிவார் என்பதையும், #எல்லோரும்இங்குசமம் என்பதையும் உலக மக்களுக்கு புரிய வைக்க இவ்வாறு கோவில் கோபுர பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளது.

💐கோவிலுக்கு செல்லும் பொழுது #கட்டாயம்கோபுரத்தைதரிசனம்செய்து_விட்டுவரவேண்டும்.

⭕ கோவிலுக்கு போனோமா, வந்தோமா என்றில்லாமல் கோபுரத்தில் இருக்கும் ஒவ்வொரு பொம்மைகளையும் பார்த்து #கண்குளிரரசிக்கவேண்டும். 

🙏கோபுரத்தை இவ்வகையில் தரிசனம் செய்த பின்பு, கோவிலுக்குள் சென்று மூலவரை வணங்க வேண்டும். 

🌺பின்பு எல்லா கடவுளரையும் வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வர வேண்டும். அதன் பிறகு கொஞ்ச நேரமாவது அங்கு அமர்ந்து விட்டு, பின்னர் வீட்டுக்கு புறப்படலாம். 

🍂 முறையாக ஒரு கோவிலை இந்த வகையில் தரிசனம் செய்தவர்களுக்கு மனதில் தீய எண்ணங்கள் எழுவதற்கு வாய்ப்பே கிடையாது.

🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...