Friday, June 23, 2023

_தாமிரபரணி நதிக்கரையை சுற்றியுள்ள கோவில்கள் பற்றிய விவரங்கள்._

_தாமிரபரணி நதிக்கரையை சுற்றியுள்ள கோவில்கள் பற்றிய விவரங்கள்._


தமிழகத்தின் தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல தல புராணங்கள் கூறுகின்றன

மிகவும் பழமையான சிவ தலங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.!

அத்தகைய புராணங்களில், 
தாமிரபரணி மகாத்மியம், 
நவசமுத்திர மகாத்மியம், 
சிவசைல மகாத்மியம்,
திருப்புடை மருதூர் மகாத்மியம்,
திருக்குற்றால தலபுராணம், 
தென்காசி தலபுராணம், 
கருவை தலபுராணம் 
திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்*

*1. காந்திமதி நெல்லையப்பர் கோவில்*

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்

இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது.

மேலும் திருநெல்வேலி அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில்
இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பபெற்றதுக்கது.

இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

*2. சபை சிவாலயங்கள்*

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ர சபை - திருக்குற்றாலம்

தாமிர சபை- திருநெல்வேலி

*3. முப்பீட தலங்கள்*

அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்

ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்

வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

*4. பஞ்ச ஆசன தலங்கள்*

ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்

களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்

நான்குநேரி - திருநாகேஷ்வரர்
திருக்கோயில்

விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்

செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்

சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)

கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்

தாருகாபுரம் - நீர் தலம்

தென்மலை- காற்று தலம்

தேவதானம் - ஆகாய தலம்

*5. காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்*

சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்

ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்

கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்

திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்

பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

*6. இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்*

களக்காடு- சத்யவாகீசர்
பத்தை - குலசேகரநாதம்
பதுமனேரி - நெல்லையப்பர்
தேவநல்லூர் - சோமநாதம்
சிங்கிகுளம் - கைலாசநாதம்

*7. நவ சமுத்திர தலங்கள்*

அம்பாசமுத்திரம்
ரவணசமுத்திரம்
வீராசமுத்திரம்
அரங்கசமுத்திரம்
தளபதிசமுத்திரம்
வாலசமுத்திரம்
கோபாலசமுத்திரம்
வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

*8. பஞ்ச பீட தலங்கள்*

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

கூர்ம பீடம் - பிரம்மதேசம்
சக்ர பீடம் - குற்றாலம்
பத்ம பீடம் - தென்காசி
காந்தி பீடம் - திருநெல்வேலி
குமரி பீடம் - கன்னியாகுமரி.
இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

*9. சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)*

பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்

அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்

திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்

கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்

முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது

கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
தச வீரட்டானத் தலங்கள் 
(மேற்கு சிவாலயங்கள்)

சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்

கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்

சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்

மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்

ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்

தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்

அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்

காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் 
(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)

*10. வாலி வழிபட்டத் தலங்கள்*

திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்

நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்
பாபநாசம் - சூரியன்

சேரன்மகாதேவி - சந்திரன்

கோடகநல்லூர் - செவ்வாய்

குன்னத்தூர் - இராகு

முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

*11. வேறு சில ஆலயங்கள்*

இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.

நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது...!!!.*

*உலகை ஆளும் பரம்பொருள் சிவபெருமானே சக்தியை உலகமெங்கும் பரப்புவோம்.!*

*அனுதினமும் சிவநாமத்தை ஜெபிப்போம் வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்.!*

*ஓம் நமசிவாய வாழ்க*
*தென்னாடுடைய சிவனே போற்றி!*
*என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!*
*மேன்மைகொள் சைவ் நீதி விளங்குக உலகமெல்லாம்🙏

No comments:

Post a Comment

Followers

1008 ஆயிரத்து எட்டு லிங்கங்களின் பட்டியல்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல...