Friday, October 20, 2023

சுடுகாட்டில் சிவன் ஏன் ???

🔥🕉️ #சுடுகாட்டில் சிவன் ஏன் ???
 🔥🙏🏼#மாபெரும் கருணையை உணரவேண்டி !!!!

#நமசிவாய

🕉️🔱🔥 #சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி !!! ?? என்று இன்று பலர் குழம்பி !!! மற்றவர்களையும் குழப்பி ??? மெய் உணராமல் இருப்பவர்கள், மெய் உணரவேண்டி ஈசன்  திருவருளால் இப்பதிவு.

🙏🏼#மெய் உணர்ந்து, மெய்யை பற்றி இன்புறும் அடியார்கள் பாதம் பணிகிறேன்,

👹#சுடுகாடு :

உயிராகிய மெய், இருந்த கூடுஆகிய உடலை விட்டு பிரிந்த பின், கூடுஆகிய உடலை ( பயனற்ற கூட்டை ) நெருப்பு கொண்டு எரிக்கும் இடம்.

👹🔥 #சுடுகாட்டில் உயிரின் நிலை :

உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம், உயிர்யற்ற உடல் பிணம் ( சவம் ),
50 – 60 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும்போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் பரிதவிக்கும், ( 1 ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு பிரியும்போது ஏற்படும் உணர்வு போல -  50 – 60 ஆண்டு காலம் இருந்த கூடு )

🙏🏼#தமக்கு என்றும் நிரந்தரம் நினைத்து பேணி காத்த உறவுகள் அனைத்தும் உடலை எரித்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டனர், இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமது இல்லை என்று மெய்யை உணர்ந்து  பரிதவிக்கும் போது.

🔥#சுடுகாட்டில் சிவம் :

உயிர் பரிதவிக்கும் போது மாபெரும் கருணையாளன் நம்பெரும் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அபயம் அளிக்கிறார்,

🙏🏼#இதை_உணர்த்தவே அப்பர் பெருமான் “ திருஅங்கமாலை “ தேவாரத்தில்

“”உற்றார் ஆருளரோ - உயிர் கொண்டு போகும்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ. “”

🔥🙏🏼#மிக_தெளிவாக கூறியுள்ளார்.

யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்ப்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் கருணையுடன் அடைக்கலம் தந்து அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று கூறுவது எவ்வளவு சிறுமை !!! என்று உணருங்கள் .

👹🔥🙏🏼#சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை, அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன், நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெருமும் கருணையோடு காக்கிறான் என்று உணர்த்தவே, ஈசன் திருவருளால் இப்பதிவு.

🔥#உய்வு_பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு

🔥#திருச்சிற்றம்பலம்🔥

No comments:

Post a Comment

Followers

சிறுநீரக கோளாறு குணமடைய பஞ்ச நதன நடராஜர்" ஸ்தலம் ஊட்டத்தூர்.

உங்களுக்கு கிட்னி  பழுதா? சிறுநீரக கோளாறா? குணமடைய வேண்டி சென்று தரிசிக்க  வேண்டிய கோயில். பஞ்ச நதன நடராஜர்" ஸ்தலம் ஊட்டத்த...