Wednesday, October 18, 2023

ஒரே கோவிலில்* *மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ள கேட்ட வரம் தரும் மகாவிஷ்ணு* .....

🌹🌺 *ஒரே கோவிலில்*  *மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ள கேட்ட  வரம் தரும் மகாவிஷ்ணு* .....
 *பற்றி  விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------------
🌹🌺நாமக்கல் மலையும் அதன் மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது.

🌺மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும் மலை மேல் கோட்டையின் உள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ளார்.இப்படி மூன்று அவதாரம் பெற்றிருப்பினும்,நரசிம்மரே இங்கு பிரதானம்.

🌺முதலில் கோவிலுக்கு முன்னே #அனுமார் கிழக்குத் திசை நோக்கியவராக 18 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.அடுத்து நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் உள்ள சந்நிதி.

🌺நரசிம்மர் மிகவும் கம்பீரமாக பெரிய சிம்மாசனம் ஒன்றின் மீது அமர்ந்து உள்ளார். நரசிம்மர் ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக உள்ளார்.

🌺திரிவிக்கிரமர்,வராகர்,வாமனர்,
அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களில் இடம் பெற்றுள்ளனர்.

🌺நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு சாளரத்தின் வழியே அனுமாரைக் காணலாம்.ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரது பாதங்களைப் பார்த்து இருப்பது போல் அமைந்துள்ளது.

🌺கோட்டையின் மேற்கு புறம் அரங்கநாதரைத் தரிசிக்கலாம்.அரங்கநாதர் கார்கோடகன் மேல் தெற்கே தலையும் வடக்கே காலும் நீட்டிச் சயனித்திருப்பதைக் காணலாம்.காலடியில் சங்கரநாராயணரைக் காணலாம்.சற்றுப் பின்னால் அரங்கநாயகி தாயாரைக் காணலாம்.

🌺கீழே இறங்கி வந்தால் கமலாலயம்.அது அனுமனுக்குத் தாகம் தீர்த்தது.அடுத்து மலையேறினால் வரதராஜரைத் தரிசிக்கலாம்.

🌺இரண்யனை வதம் செய்த நரசிம்மர் யாரும் நெருங்க இயலாதபடி உக்கிரம் பொங்கக் காட்சி தந்ததைக் கண்டு பிரகலாதன் வேண்டுதலுக்கு இணங்க சாந்தமூர்த்தியாகி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர,திருமகள் தனது நாயகனைப் பிரிந்ததால் இந்தக் கமலாலயத்தில் தவம் புரிய,சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த அனுமன் கண்டகி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம நரசிம்மரையும் எடுத்துக் கொண்டு வர,இந்தக் கமலாலயத்தைக் கண்டதும் தனது தாகம் தீர்த்துக் கொள்ள நினைத்து நரசிம்மரை கையிலிருந்து கீழே வைக்க,தாகம் தீர்ந்ததும் நரசிம்மரைத் தூக்கினால் நரசிம்மர் வரவில்லை.எவ்வளவு முயன்றும் அனுமனால் முடியவில்லை.

🌺இங்கே தான் நரசிம்மரை நினைத்து லட்சுமியும் தவம் புரியவே,அவளுக்கு நரசிம்மர் அருள் புரியவே இங்கே தங்கி விட்டதாகக் கூறுவர்.

🌺அற்புதச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட நாமக்கல் நரசிம்மர் கேட்ட வரம் தரும் விஷ்ணுவாகக் கருதப்படுகிறார்.

🌺நரசிம்மரை கூப்பிய கரங்களுடன் சேவித்தவாறு #ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தவண்ணம் எழுந்து அருள்கின்றார்.

🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க* 
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

No comments:

Post a Comment

Followers

எந்த அலங்காரத்தில் பழநி முருகனை தரிசனம் செய்யலாம்

*பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்களும்* எந்த அலங்காரத்தில் பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் என்பதற்கான விபரங்களும்.... ...