Sunday, December 31, 2023

காசி அன்னபூரணி எப்படி உருவானாள் தெரியுமா?

காசி அன்னபூரணி எப்படி உருவானாள் தெரியுமா? காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன்; தனஞ்செயனோ தரித்திரன். ஒரு நாள் மணிகர்ணிகை துறையில் நீராடி, விஸ்வேஸ்வரர்- விசாலாட்சியை தரிசித்து விட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த தனஞ்செயன், தன்னை அன்னதோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான். அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி தந்து, ‘‘தனஞ்செயா, முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜகுமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள் வேட்டைக்குச் சென்று, காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்தனர். அப்போது அவர்களைக் கண்ட முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை உபசரித்தார். முனிவர் வழங்கிய அன்னம் சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது. ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத் தோன்றியது. எனவே, சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். அப்படி அன்னத்தை அவமானப்படுத்தியதாலே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். அன்னத்தை அவமதிக்காத சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான். நேம நியமங்கள் வழுவாமல் விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்ன தோஷ நிலை மாறி அவள் அருள் பெறலாம்!’’ என்றார். அதன் பின் தனஞ்செயன் அன்னபூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அணுகி யாரைப் பூஜிக்கிறார்கள் என்று கேட்டான் தனஞ்செயன். பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த சிவனின் பசிப்பிணி அகல பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு கபாலத்தை நிரப்பினள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர் அவர்கள். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரத முறைகளை விளக்கினர். அதன்படி காசிக்கு வந்த தனஜ்செயன், விரதம் இருந்து அன்னபூரணியின் அருள் பெற்றான்.
‘‘இந்த விரதத்தை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. உனக்கு அருள் பாலிக்க நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்கிறேன்!’’ என்றாள்.
அதனால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்த அன்னபூரணி ஆலயம்.!

Saturday, December 30, 2023

நமது இந்து தர்மத்தில் கூறியபடி தெய்வங்களுக்குள் பிரிவினை பார்க்காமல் வணங்குவோம்!

அப்போது சிவனைத்தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன் என்று இருந்த காலம்! நான் திருவனந்தபுரம் சென்றபோது  அனந்த பத்மநாபசுவாமி மேற்கு கோபுரவாசலில் ஒரு மேன்சனில் தங்க இடம் கிடைத்தது! அப்போது கோவிலில் இவ்வளவு பொக்கிசம் இருக்கிறது என்று வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது!
     நான் தங்கியிருந்த விடுதியில் ஒரு ஐயரும் தங்கியிருந்தார். வக்கீலான அவர் தினமும் பத்மநாபசுவாமியை காணச்செல்வார். பலமுறை என்னை  தரிசனத்திற்கு அழைப்பு விடுத்தார், நான் சென்றதில்லை!
   அவர் அழைக்கும்போதெல்லாம் நான் "சிவபெருமானைத்தவிர யாரையும் வணங்க மாட்டேன்" எனக்கூறிவிடுவேன்!
     ஒருமுறை ஐயர் " நீங்கள் ஒரே  ஒரு முறை வந்து அனந்த பத்மநாபனை வணங்கிப்பாருங்கள் தம்பி"  என்றார்! மேலும் சிவபெருமான் முழுமுதற் கடவுள் என்றாலும், நம்மை காக்கும் கடவுள் திருமால்தான், எனவே அவருடைய அருளும் வாழ்விற்கு அவசியம், எனவே நீங்கள் அவரையும் வணங்க வேண்டும், அப்பொழுதுதான் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.! எல்லா பிரச்சனைகளிலிருந்தும் காக்கும் கடவுளான மகாவிஷ்ணு நம்மை காப்பார் என்றார்!
     மேலும், ஐயர்,  'சிவனை வணங்கும் குலத்தில் பிறந்த தான் விஷ்ணுவை வணங்குவதாகவும், அனைத்தையும் ஈஸ்வர சொரூபமாக பார்க்க வேண்டும் என்றும் கூறினார்!
     ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு ஸ்பெசலிஸ்ட் மருத்துவர்கள் இருப்பது போல, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை வணங்குவது ஒரு மனிதனின் வாழ்வின் பாதுகாப்புக்கு அவசியம் என்றார்!
   இதனால் மனமாற்றம் அடைந்த நான், முதன்முறையாக பத்மநாபசுவாமியை தரிசிக்க சென்றேன், நடை அடைத்துவிட்டார்கள்!
    மீண்டும் ஒருவாரம் கழித்து 2வது முறையாக சென்றேன்! நான் போய் நிற்கவும் சரியாக நடை அடைத்து விட்டார்கள்!
   பின் வேறொருநாளில் 3வது முறையாக சென்றேன்! ஸ்ரீரங்கம் கோவிலில் போல அனந்த சயனத்தில் படுத்திருக்கும் பெருமாள், என் கண்ணிற்கு தெரியவில்லை! இருட்டாகவும் கருப்பாகவும் இருந்ததால்! ஆனால் பெருமாளிற்கு முன்பு இருந்த சிறிய உற்சவ மூர்த்தி சிலையே தெரிந்தது!
     அன்று மாலை ஐயரிடம் "என்ன இவ்வளவு பெரிய கோவிலில் இவ்வளவு சிறிய சிலை உள்ளது, பெரிய பெருமாள்சைிலை எங்கே? எனக்கேட்டேன்?" 
   அதன் பிறகுதான் அனந்த பத்மநாபன் விக்கிரகம்  3 வாசல்களில் தரிசிக்கும் அளவிற்கு மிகப்பெரியது என்பதை விளக்கினார்!
    நான்காவது முறை சென்றபோது அனந்த பத்மசுவாமி என்னை மன்னித்து காட்சி கொடுத்தார்! 
    அன்றுமுதல் இன்றுவரை சிவபெருமானோடு சேர்ந்து மகாவிஷ்ணுவையும் வணங்கி வருகிறேன்! 
    எனக்கு மகாலட்சுமியின் அருளால் அவசியமான எல்லா செல்வங்களும் படிப்படியாக வந்து சேர்ந்தது!   
    நம்மில் பலர் சிவனை வணங்குபவர்கள் விஷ்ணுவை வணங்குவதில்லை! அல்லது விஷ்ணுவை வணங்குபவர்கள் சிவபெருமானை வணங்குவதில்லை! அது தவறானது!
    இருவரும் வேறு வேறு சக்தி உள்ளவர்கள் என்றாலும் நம்முன்னோர்கள் சிவன் கோவில்களுக்குள் விஷ்ணு கோவில்களையும் காரணம் இல்லாமல் கட்டி வைக்கவில்லை! 
   சிதம்பரம், திருநெல்வேலி, திருச்செந்தூர் போன்ற பல கோவில்களில் பெருமாள் சன்னதி உள்ளது! 
    நமது இந்து தர்மத்தில் கூறியபடி தெய்வங்களுக்குள் பிரிவினை பார்க்காமல் வணங்குவோம்!

யானை ஏறாதத் திருப்பணி’நடைபெற்ற ஈசன் கோவில்!!! காரணம் தெரிந்து கொள்வோம்...!

‘யானை ஏறாதத் திருப்பணி’
நடைபெற்ற ஈசன் கோவில்!!!   
காரணம் தெரிந்து கொள்வோம்...!
திருச்சிக்கு அருகே உள்ள தலம் திருவானைக்காவல். இங்கு சிவபெருமான் வெண் நாவல் மரத்தடியில் அமர்ந்திருந்தார். 

அப்போது நாவல் மரத்தின் இலைகள் காய்ந்து சருகுகளாய் அவர் மேல் விழுந்தன.

இதைக் கண்ட சிலந்தி ஒன்று பதறியது. ‘சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா?’ என்று எண்ணிய சிலந்தி, அதை தடுக்க முயற்சி செய்தது.

சிவபெருமானின் தலைக்கு மேல் தன் எச்சிலால் பந்தல் போல் வலை பின்னி, காய்ந்த இலைகள் அவர் மேல் விழாமல் தடுத்தது.

அங்கு யானை ஒன்று தினந்தோறும் காவிரி நீரை தன் துதிக்கையில் சுமந்து வந்து இறைவனை நீராட்டி வந்தது. சிலந்தி வலையைக் கண்ட யானைக்கு கோபம் வந்தது. வெகுண்ட அந்த யானை அந்த வலையை அறுத்து எறிந்தது. 

மீண்டும் மீண்டும் சிலந்தி வலை அமைக்க, யானை கோபங்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வலையை அறுத்து எறிந்தது.

கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் நீரால் யானை வழிபடும் போது அதன் துதிக்கையினுள் புகுந்து கடித்தது. வலி தாங்காத யானை, துதிக்கையை தரையில் வேகமாக அடிக்க சிலந்தி இறந்தது; யானையும் இறந்தது. இருவரையும் ஆட்கொண்டார் இறைவன்.

இறைவன் அருளால் அந்த சிலந்தி மறுபிறவியில் சோழ மன்னராகிய சுபதேவருக்கும் கமலாவதிக்கும் மகனாகத் தோன்றியது. 

அந்த மகனே கோச்செங்கட் சோழன். இந்த மன்னன் தன் முற்பிறவியின் நினைவால் யானைகள் புக முடியாத யானைகள் தீங்கு செய்ய முடியாத மாடக் கோவில்களை கட்ட முடிவு செய்தான். 

யானை ஏற முடியாத கட்டுமலை போன்ற அமைப்புடைய உயரமான மாடக் கோவில்களை அமைத்தான். 

இத்திருப்பணி ‘யானை ஏறாதத் திருப்பணி’ என்று பெயர் பெற்றது. இந்தச் சோழன் 70-க்கும் மேற்பட்ட மாடக் கோவில்களைக் கட்டினான். தான் முற்பிறவியில் வழிபட்ட திருவானைக் கோவில் ஆலயத்தை முதலில் கட்டினான்.

இந்த மன்னன் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்று தான் பனமங்கலத்தில் உள்ள வாரணபுரீஸ்வரர் ஆலயம். இங்குள்ள இறைவன் வாரணபுரீஸ்வரர். இறைவி வடிவாம்பிகை. அன்னையின் இன்னொரு பெயர் வடிவுடையம்மன்.

கீழ்திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் இறைவனை தரிசிக்க, 12 படிகள் ஏறி வலது புறம் திரும்ப வேண்டும். அங்கு மகா மண்டபம் அடுத்த கருவறையில் கிழக்கு நோக்கி, வாரணபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

சுயம்புவான இந்த மூலவர் திருமேனி 3½ அடி அளவு ஆவுடையாரின் மேல் பகுதியில் பக்தர்கள் வழிபடும் வகையிலும், பூமிக்கு அடியில் 13 அடியும் உள்ளதாக சொல்லப்படுகிறது. 

சுமார் 19½ அடி உயர இறைவனின் இந்த திருமேனி, உளிபடாதது ஆகும். ருத்திராட்சத்தின் மேற்பரப்பு மேடும் பள்ளமாய் இருப்பது போல் இறைவனின் முழு மேனி அமைப்பு காணப்படுகிறது.

சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பு இறைவனுக்கு இங்கு மிகவும் விசேஷமான நாளாகும். அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை இறைவனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

அரிசி மாவு, திரவியப் பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி மற்றும் பழங்கள் என 21 வகை அபிஷேகங்கள் செய்யப்படும். இந்த அபிஷேக நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, கடன் நிவர்த்தி ஆகும் என்பதும், தொழிலில் அபிவிருத்தி உண்டாகும் என்பதும் நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் கற்பூரம் ஏற்றுவது கிடையாது. தீபாரதனை மட்டுமே. இங்கு சிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும். மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, மாத சிவராத்திரிகளில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனை செய்யப்படுகிறது

இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் மேற்கில் கணபதி, வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர், வடக்கில் சண்டிகேஸ்வரர், வட கிழக்கில் நவக்கிரக நாயகர்கள், கிழக்கில் காலபைரவர் சன்னிதி காணப்படுகின்றன.

இறைவனின் சன்னிதிக்கு இடது புறம் அன்னை வடிவுடையம்மன் தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்கள் தாமரை மலரை தாங்கி நிற்க, கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரை காட்டுகின்றன. நவராத்திரியின் போது தினமும் அன்னையை வித விதமாக அலங்கரிப்பார்கள். 

ஆடி மற்றும் தை மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடிப் பூரம் அன்று அன்னையை வளையல்களால் அலங்கரிப்பார்கள். பின் அந்த வளையல்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அன்றைய தினம் முளை கட்டிய பாசிப்பயிறை அம்மன் மடியில் கட்டி, பின் அதை பிள்ளைப் பேறு வேண்டுபவர்களுக்கும், திருமணம் கைகூட வரம் கேட்கும் பெண்களுக்கும் பிரசாதமாகத் தருகின்றனர்.

பங்குனி உத்திரம் அன்று பால் காவடி, அலகு காவடி சுமந்து வரும் பக்தர்கள், அக்னி பிரவேசம் செய்து முருகனை வேண்டுகின்றனர். 

மறுநாள் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் வீதியுலா வருவார். இங்குள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஹோமம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு எதிரிகள் பயம் விலகும்.

ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். இங்கு மணிவிழா, சதாபிஷேகம் போன்றவை செய்யப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயத்தில், தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. 

ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

பித்ரு தோஷ பூஜை :

இந்த ஆலயத்தில் அனைத்து திங்கட் கிழமைகளிலும் இறைவனுக்கு பித்ரு தோஷ நிவர்த்தி ஆராதனை நடைபெறுகிறது.

ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், நீராடி ஈர உடையுடன் இந்த பூஜையில் கொள்வதுடன், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின் ஈர உடையை தானம் செய்து விட்டு, புது உடை அணிந்து கொள்ள அவர்கள் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

இந்த பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்பவர்கள், தட்டில் பூ, பழம், தேங்காய், திரிநூல், எண்ணெய், பச்சரிசி, வெல்லம், கருப்பு எள் ஆகியவற்றை வைக்க வேண்டியது அவசியம். 

பித்ரு தோஷ பூஜை செய்தவர்கள், வீடு திரும்பியதும், வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும்.

அமைவிடம் :

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் பனமங்கலம் உள்ளது . 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

வான்மீகிக்கு தரிசனம் அளித்த இறைவன்



*வான்மீகிக்கு தரிசனம் அளித்த இறைவன்*

வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள்.
உமையொரு பாகனும் அப்படியே தந்தருளினார். அதன்படியே இத்தலம் திருவான்மியூர் என்றாயிற்று.
வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள்.

ராமாயணத்தை இயற்றிய வான்மீகி முனிவர் முதலில் வேடனாக இருந்தவர்.

தனக்கு உபதேசிக்கப்பட்ட ராம நாமத்தை தன்னை கரையான் புற்று மூடி மறைக்கும் வரை உறுதியுடன் ஜெபித்தார்.

அதனாலேயே அவரை வான்மீகி என்றழைத்தனர்.

வான்மீகி முனிவர் ஆயிரம் ஆண்டுகள் தவமியற்றினார்.

ஆதிகாவியமாகிய ராமாயணத்தையும் இயற்றினார்.

அக்காரணங்களால் தாமும் அமரத்துவம் பெற்றதை எண்ணி வான்மீகர் சற்றே கர்வம் கொண்டார்.

அச்சமயத்தில் அவரைக் காண அழியா வரம் பெற்ற சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் வந்தார்.

சிவபக்தரான மார்க்கண்டேயர் வான்மீகியிடம், "வான்மீகரே, அமர்த்துவம் எய்த ஆயிரம் ஆண்டுகள் தவம் எதற்கு? ஒருநாள் ஒரு பொழுது சிவபூஜை செய்தால் போதுமே!" என்றார்.

ராம பக்தரான வான்மீகர் அதனை கேட்டு சினம் கொள்ளவில்லை. தாமும் சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டார்.

அதற்கான வழியை மார்க்கண்டேயரும் அவரிடத்தில் தாங்கள் தென்னகத்து செல்லும் பொழுது ஓரிடத்தில் நான் இங்கு இருக்கிறேன் என்று அசிரீரி கேட்கும்.

அந்த இடத்தில் தவமியற்றினால் விரைவில் சிவதரிசனம் கிடைக்கும் என்றார்.

அதன்படியே தென்னகம் வந்த வான்மீகிக்கு நான் இங்கு இருக்கிறேன் என உணர்த்தி இறைவன் அருள்பாலித்த திருத்தலம் தான் திருவான்மியூர்.

இத்தலத்தில் இறை தரிசனம் பெற்ற வான்மீகி தான் தரிசனம் பெற்ற கடற்கரை தலம் எனது பெயராலேயே அழைக்கப்பட வேண்டும்.

சிவபெருமானின் சடையில் உள்ள கங்கையின் ஒரு பகுதி அங்கு தீர்த்தமாக தங்க வேண்டும்.

ஈசன் தன் தாண்டவக் கோலங்களை தான் (வான்மீகர்) காணும்படி ஆடியருள வேண்டும் என சிவபெருமானிடம் மூன்று வரங்கள் கேட்டார்.

உமையொரு பாகனும் அப்படியே தந்தருளினார். அதன்படியே இத்தலம் திருவான்மியூர் என்றாயிற்று.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

108 வைணவ திவ்ய தேசங்களில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில், 63-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலம் பூதத்தாழ்வாரின் அவதாரத் தலமாகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த கடற்கரை நகரமாக விளங்கிய மாமல்லபுரத்தில் பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் சிறப்பாக போற்றப்படுகின்றன.
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திருமங்கையாழ்வார் பாசுரம்:
பாராய துண்டு மிழ்ந்த பவளத் தூனை
படுகடலில் அமுதத்தைப் பர்வாய்க்கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போரெற்றினைப்
புனர் மருதமிற நடந்த பொற்குன்றினை
காரானை யிடர் கடிந்த கற்பகத்தைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.
மூலவர்: ஸ்தலசயனப் பெருமாள்
உற்சவர்: உலகுய்ய நின்றான்
தாயார்: நிலமங்கைத் தாயார்
தல விருட்சம்: புன்னை மரம்
தீர்த்தம்: புண்டரீக புஷ்கரிணி
விமானம்: கனகாக்ருதி விமானம்

தல வரலாறு
மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஏழாம் அரசனான மல்லேஸ்வரனின் ஆட்சியின் தினமும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஒருநாள் திடீரென்று இத்திட்டம் நிறுத்தப்பட்டதால், மக்கள் பசியால் வாடினர். கோபமடைந்த அடியார்கள், மன்னரை முதலையாக மாறும்படி சபித்தனர். அதன்படி புண்டரீக புஷ்கரிணியில் முதலையாக வாழ்ந்து வந்தார் அரசர்.

அப்போது இப்பகுதிக்கு வந்து, புண்டரீக மகரிஷி தவம் புரிந்து வந்தார். தவம் செய்து முடித்ததும், அருகில் உள்ள தடாகத்தில் இருந்து தாமரை மலர்களைப் பறித்து, திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க எண்ணினார். அப்போது மகரிஷியிடம், தனது சாபத்துக்கு விமோசனம் அருளும்படி அரசர் (முதலை) வேண்டினார். மகரிஷி தாமரை மலர்களைப் பறித்துத் தருமாறு அரசரிடம் கூறினார். அரசரும் பூக்களைப் பறித்து மகரிஷியிடம் கொடுத்தார். அதன்படி பூக்களைப் பறித்து ஒரு கூடையில் நிரப்பி, அதை எடுத்துக் கொண்டு கிளம்பினார். செல்லும்வழியில் கடல் குறுக்கே இருந்ததால், இரவு பகலாக தன் கைகளால் கடல்நீரை வெளியே இறைக்கத் தொடங்கினார்.



கை சோர்ந்த நிலையில் இருக்கும்போது, “பரந்தாமா! நான் கொண்ட பக்தி உண்மையானால் கடல்நீர் வற்றி, எனக்கு பாதை கிடைக்கட்டும். அதுவரை இந்தப் பூக்கள் வாடாமல் இருக்கட்டும்” என்று திருமாலை வேண்டினார் மகரிஷி. அப்போது ஒரு முதியவர் அவர் முன்னர் வந்து, “கடல்நீரை இறைப்பது சாத்தியம் அன்று. எனக்கு பசிக்கிறது. உணவு தாருங்கள்” என்று கேட்கிறார்.

உடனே மகரிஷி, உணவு கொண்டு வருவதாகக் கூறி, மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். மகரிஷி திரும்பி வருவதற்குள், அவர் கொடுத்துச் சென்ற பூக்களையெல்லாம் சூடிக் கொண்டு, கடலிலேயே ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில் முதியவர் காட்சியளித்தார்.



திருமாலைக் கண்டு ஆனந்தமடைந்த மகரிஷி, தான் என்றும் அவரது திருவடி அருகே அமர வேண்டும் என்றும், உலகில் அனைத்து உயிர்களும் பசி இல்லாமல் சுகமாக வாழ வேண்டும் என்றும், மல்லேஸ்வரனின் சாபம் நீங்க வேண்டும் என்றும் வேண்டினார். அவ்வாறே வரமளித்தார் திருமால். மல்லேஸ்வரனும் சாப விமோசனம் பெற்று மீண்டும் தினமும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியைத் தொடங்கினார். மகரிஷிக்கு சயன கோலத்தில் காட்சி அளித்ததால் இத்தல பெருமாள் ‘தலசயனப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார் என்று பிரம்மாண்ட புராண வாக்கியத்தில் சேத்ர காண்டம் பகுதியில் கூறப்பட்டுள்ளது.

ஏழு கோயில் நகரம்

ஒரு காலத்தில் இவ்விடத்தில் 7 கோயில்கள் இருந்ததால், இத்தலம் ஏழு கோயில் நகரம் என்று அழைக்கப்பட்டது. கடல் சீற்றத்தால், நகரம் முழுவதும் அழிந்துவிட்டதால், பல ஆண்டுகள் கழித்து பல்லவ மன்னர் ராஜசிம்மன் 3 கோயில்களைக் கட்டினார். அதில் 2 கோயில்கள் கடல் சீற்றத்தில் அழிந்துவிட்டன. மீதமுள்ளது இக்கோயில் மட்டுமே. 14-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலைக் கட்டியுள்ளார். கருங்கல் தூண்கள் (ஸ்தூபி) அமைத்து கட்டப்பட்ட இக்கோயிலில் நான்கு கரத்துடன் சயன கோலத்தில் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாள் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். உற்சவர் தாமரை மொட்டுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.



பெருமாளின் இருபுறமும் நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். 12 ஆழ்வார்கள், ஆஞ்சநேயர், ராமபிரான், லட்சுமி நரசிம்மர், கருடன் ஆகியோருக்கு இக்கோயிலில் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

இத்தல பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்டநாதனை தரிசித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி விழா, சித்திரை பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படும். திருமணத் தடை நீங்க ஏராளமான பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்வது வழக்கம். புண்டரீக புஷ்கரிணி தீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்ப உற்சவம் நடைபெறும். மகாளய அமாவாசை தினத்தில் பக்தர்கள் பலர் வந்திருத்து, தம் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பர்.


பிரதோஷம், சுவாமி நட்சத்திர தினம், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளைகளில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ருணவிமோசன ஸ்தோத்திரம்’கூறினால் வாழ்வு சிறக்கும். கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் – ஈரோடு

ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில் – ஈரோடு
இறைவன் :  ஆருத்ர கபாலீஸ்வரர்

இறைவி : வாராணி அம்பாள்

தலவிருச்சம் : வன்னி மரம்

ஊர் : கோட்டை, ஈரோடு

மாவட்டம் : ஈரோடு , தமிழ்நாடு

இக்கோயில் அமைந்திருக்கும் பகுதியை கோட்டை என்று கூறுவார்கள் , பழங்காலத்தில் இந்த பகுதியை மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் .
இறைவன் கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார் . இறைவன் மற்றும் இறைவிக்கு என இரண்டு ராஜகோபுரங்கள் இக்கோயிலுக்கு உள்ளன .

இக்கோயிலை சோழர்கள் கட்டியதாக இங்குள்ள 800 வருடங்கள் பழமையான கல்வெட்டில் காணப்படுகின்றது . இறைவனின் மீது ஆண்டு தோறும் மாசி மாதம் 25 ,26 ,27 தேதிகள் சூரிய ஒளி விழுகிறது . முதன் முதலில் தமிழகத்தில் தமிழில் அர்ச்சனை நடைபெற்ற கோயிலாகும் .

வரலாறு :

தேவ குருவின் சாபத்தால் ரம்பை , ஊர்வசி மானிட பிறவியாக சிறுநல்லாள்  , பெருநல்லாள் என பெயரோடு பூலோகத்தில் பிறந்தார்கள் பிறந்தார்கள் .அவர்கள் இத்தலத்தில் இறைவன் மற்றும் இறைவியை மனமுருக வழிபாடு செய்தார்கள் . அவர்களின் அன்புக்கு இறங்கிய ஈசன் ,இந்திரன் மூலம் பூந்துறை நாட்டில் பொன்மாரி பொழிய வைத்து பாவம் போக்கினார் என்று வரலாறு கூறுகிறது .

இவர்கள் வறுமையில் வாடியபோது இறைவன் அவர்களின் வறுமையை போக்க பொன் மயமான இருமலைகளை தானமாக வழங்கினார் . அந்த மலைகள் தற்போது  மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூருக்கு மேற்கே இரட்டை மலைகளாக காட்சிதருகின்றன . இப்போது பொன்மலை ,கனககிரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது .

இக்கோயிலை சூரிய பகவான் வழிபட்டார் எனவே சூரிய வழிபாடு இங்கு சிறப்பாக நடைபெறுகிறது . முன்மண்டபத்திருக்கும் ,மடப்பள்ளிக்கும் இடையே சூரியன் தன் இருபெரும் தேவியரோடு காட்சி தருகிறார் . இக்கோயிலின் தென்மேற்கு பகுதியில் கன்னி விநாயகர் உள்ளார் .

இக்கோயில் அருகிலேயே கஸ்தூரி ரங்கநாத பெருமாள் கோயில் உள்ளது . சைவ வைணவத்திற்கு எடுத்துக்காட்டாக இவ்விடம் அமைந்துள்ளது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்

Friday, December 29, 2023

அருள்மிகு ஶ்ரீ நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம்-626 145, ராஜபாளையம் , விருதுநகர்.




*அருள்மிகு ஶ்ரீ நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில், தேவதானம்-626 145, ராஜபாளையம் , விருதுநகர்.*

🙏🏻தென்னாடுடைய  சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🏻


தென்னிந்திய  கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 800 ஆண்டுகள் முதல் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .



🛕 மூலவர் : நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி.


🛕அம்மன் : தவமிருந்த நாயகி.


🛕தல விருட்சம் : நாகலிங்க மரம்.


🛕தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்.



🛕மாவட்டம் : விருதுநகர்.



🛕தல வரலாறு :
சிவபக்தனான வீரபாகு பாண்டிய மன்னனுக்கும் விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்தது. 


🛕விக்கிரமசோழன் பாண்டிய மன்னன் 
மீது பலமுறை போர் தொடுத்தும் அவனை வெல்ல முடியவில்லை. 
எனவே வஞ்சகத்தால் அவனைக் கொல்ல முடிவெடுத்தான்.



🛕அவனுடன் நட்பு கொள்வதாகக் கூறி நச்சு கலந்த ஆடையை பரிசாக கொடுத்து அனுப்பினான். அந்த ஆடையை அணிந்தவர் எரிந்து சாம்பலாகி விடுவர். 



🛕இறைவன் அருளால் சோழனின் சதித்திட்டத்தை பாண்டிய மன்னன் அறிந்தான்.



🛕தனக்கு பரிசாக கொடுத்தனுப்பிய நச்சு ஆடையை அதைக் கொண்டு வந்த சேவகனுக்கே போர்த்தி விட்டான். சேவகன் எரிந்து சாம்பலானான். 




🛕நச்சு ஆடையை அணியவிடாமல் பாண்டியனைக் காப்பாற்றிய சிவனுக்கு பாண்டியன் கோவில் எழுப்பினான்.




🛕நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி என்று பெயர் சூட்டினான். இதன் பிறகு சோழன் பார்வை இழந்தான். தன் தவறை உணர்ந்துஇ தனக்கு மீண்டும் பார்வை கிடைக்க தேவதானம் வந்து பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு சிவனை வழிபட்டான்.



🛕அதன் காரணமாக விக்கிரம சோழனுக்கு தேவதானம் தலத்தில் ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வையை சிவன் அருளினார். மற்றொரு கண்ணுக்கும் பார்வை வேண்டும் என்று அவன் உருக்கத்துடன் வேண்டினான்.



🛕அப்போது அசரீரி ஒலித்தது. இன்னும் ஒரு கோவிலை இவ்வூர் அருகில் எழுப்பினால் பார்வை கிடைக்கும் என்றது. அதன்படி சேத்தூர் என்ற இடத்தில் கோவில் கட்டினான். பார்வையும் கிடைத்தது.



🛕தல சிறப்பு :
கண் கெடுத்தவர் கண்கொடுத்தவர் கொழுந்தீஸ்வரர் என மூன்று சிவன் சன்னதிகள் இங்குள்ள குன்றின் மேல் உள்ளன. 



🛕இந்த சன்னதிகளை வழிபட்டால் கண் பார்வை குறை தீர்ந்து பார்வை முழுமையாக கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது.


🛕சிலருக்கு புண் ஏற்பட்டு ஆறாத தழும்புகள் இருந்தால் கொழுந்தீஸ்வரரை 11 வாரங்கள் தொடர்ந்து பூஜித்தால் குணமாகும் என்கிறார்கள்.


🛕இந்தக் கோவிலைச் சுற்றியுள்ள பஞ்சபூத ஸ்தலங்களான சங்கரன்கோவில் (நிலம்), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்தநல்லூர் (நெருப்பு), தென்மலை (காற்று), தேவதானம் (ஆகாயம்) இவற்றை ஒரே நாளில் தரிசிக்க முடியும்


🛕. மாத சிவராத்திரிகளில் இந்த கோவில்களை வழிபடுவது மிகவும் சிறப்பு.



🛕பிரகாரத்தில் பிரம்மா, தவக்கோல பிரம்மா, தட்சிணாமூர்த்தி, சப்தகன்னியர், நந்தி, நடராஜர், நவக்கிரகம், பெருமாள், சனீஸ்வரர், சூரியன், வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. 



🛕கோயில் அருகிலேயே சிவகங்கை தீர்த்த குளம் அமைந்துள்ளது.



🛕பிரார்த்தனை
கண்பார்வை குறை உள்ளவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள், ஆறாத தழும்புகளுடன் புண் உள்ளவர்கள் குணமடைய இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.



🛕நேர்த்திக்கடன்:
குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் நாகலிங்க பூவை பசும்பால் அல்லது மோரில் கலந்து பருகினால் பலன் கிடைப்பதாக நம்பிக்கை.



🛕தலபெருமை:
நாகலிங்க பூ பிரசாதம்: குழந்தை பேறு இல்லாத பெண்கள், தலைக்கு குளித்த ஐந்தாவது நாள் தம்பதி சமேதராக கோயிலுக்கு வரவேண்டும். 



🛕கோயில் வளாகத்திலுள்ள நாகலிங்க மரத்திலுள்ள மூன்று பூக்களை பறித்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அந்தப் பூக்களை பிரசாதமாக பெற்று சென்று பசும்பால் அல்லது மோரில் கலந்து மூன்று நாட்கள் இரவில் பருக வேண்டும். இப்படி செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.




🛕கண்பார்வை குறை தீர வழிபாடு: கண் கெடுத்தவர், கண்கொடுத்தவர், கொழுந்தீஸ்வரர் என மூன்று சிவன் சன்னதிகள், இங்குள்ள குன்றின் மேல் உள்ளன. இந்த சன்னதிகளை வழிபட்டால் கண் பார்வை குறை தீர்ந்து பார்வை முழுமையாக கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது.



🛕ஆறாத தழும்பும் ஆறும்: அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக மக்கள் நலமாக இருக்க பார்வதிதேவி பரமேஸ்வரனை நோக்கி ஊசியில் தவம் இருந்தாள். இதனால் இங்குள்ள அம்பாள் தவமிருந்த நாயகி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள். 


🛕குன்றின் மேல் உள்ள கொழுந்தீஸ்வரரை
மான் ஒன்றும், ஒரு பசுவும் வாயால் மலர்களை எடுத்து வந்து பூஜித்து
வழிப்பட்டதாம். 


🛕ஒரு நாள் இரண்டும் ஒரே நேரத்தில் பூஜித்த போது, தவறி போய்
பசுவின் குழம்பு சுவாமியின் சிரசில் பட்டது.



🛕 அந்தத்தடம் இன்றும் லிங்கத்தின்
சிரசில் காணப்படுகிறது. சிலருக்கு புண் ஏற்பட்டு ஆறாத தழும்புகள் இருந்தால்
பார்க்கவே கஷ்டமாக இருக்கும். 



🛕இத்தகயை தழும்புகள் மறைய,
கொழுந்தீஸ்வரரை 11 வாரங்கள் தொடர்ந்து பூஜித்தால் குணம் கிடைக்கும்
என்கிறார்கள்.



🛕தல வரலாறு:
சிவபக்தனான வீரபாகு பாண்டிய மன்னனுக்கும் விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்தது. 


🛕விக்கிரமசோழன், பாண்டிய மன்னன் மீது பலமுறைபோர் தொடுத்தும், அவனை வெல்ல முடியவில்லை. எனவே வஞ்சகத்தால் அவனைக் கொல்ல முடிவெடுத்தான். அவனுடன் நட்பு கொள்வதாகக் கூறி, நச்சு கலந்த ஆடையை பரிசாக கொடுத்து அனுப்பினான்.



🛕 அந்த ஆடையை அணிந்தவர் எரிந்து சாம்பலாகி விடுவர். இறைவன் அருளால் சோழனின் சதித்திட்டத்தை பாண்டிய மன்னன் அறிந்தான். தனக்கு பரிசாக கொடுத்தனுப்பிய நச்சு ஆடையை, அதைக் கொண்டு வந்த சேவகனுக்கே போர்த்தி விட்டான். 


🛕சேவகன் எரிந்து சாம்பலானான். நச்சு ஆடையை அணியவிடாமல் பாண்டியனைக் காப்பாற்றிய சிவனுக்கு, பாண்டியன் கோயில் எழுப்பினான். 


🛕நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி என்று பெயர் சூட்டினான். இதன் பிறகு, சோழன் பார்வை இழந்தான். தன் தவறை உணர்ந்து, தனக்கு மீண்டும் பார்வை கிடைக்க, தேவதானம் வந்து பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு, சிவனை வழிபட்டான். அதன் காரணமாக விக்கிரம சோழனுக்கு தேவதானம் தலத்தில் ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வையை சிவன் அருளினார். மற்றொரு கண்ணுக்கும் பார்வை வேண்டும் என்று அவன் உருக்கத்துடன் வேண்டினான். அப்போது அசரீரி ஒலித்தது. 



🛕இன்னும் ஒரு கோயிலை இவ்வூர் அருகில் எழுப்பினால் பார்வை கிடைக்கும் என்றது. அதன்படி சேத்தூர் என்ற இடத்தில் கோயில் கட்டினான் பார்வையும் கிடைத்தது.




🛕சிறப்பம்சம்:
 கண் கெடுத்தவர், கண்கொடுத்தவர். கொழுந்தீஸ்வரர் என மூன்று சிவன் சன்னதிகள் இங்குள்ள குன்றின் மேல் உள்ளன. 


🛕பிரம்மா இத்தலத்தில் தவக்கோலத்தில் இருப்பது தனி சிறப்பு.
ஓம்நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, December 28, 2023

வீட்டில் பல்லி இருந்தால் பண கஷ்டம் வருமா? அல்லது தரித்திரம் பிடிக்குமா?

வீட்டில் பல்லி இருந்தால் பண கஷ்டம் வருமா? அல்லது தரித்திரம் பிடிக்குமா? என்பது உங்களுக்கு தெரியுமா ?
படம் ஸ்ரீரங்கம் கோயில் பல்லி சொர்க்கவாசல் கதவுக்கு பல்லி அருகில் அமைந்துள்ளது
கரப்பான் பூச்சி, வண்டு, தும்பி, பல்லி ஆகியவை இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால், சிலருக்கு அவை இருப்பது பிடிக்காது. ஏனென்றால், கரப்பான் பூச்சிகள் பல விதமான நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். இன்னும் சிலருக்கு வீட்டிற்குள் பல்லி இருப்பது பிடிக்காது. அதை அடித்து வெளியில் துறத்தாமல் நாம் வீட்டிற்குள் நுழைவது இல்லை. ஆனால், சிலர் பல்லி என்ன செய்யப்போகிறது வீட்டில் உள்ள பூச்சிகளை சாப்பிட்டு ஓரமாக இருக்கட்டும் என பரிதாபம் பார்த்தும் விடுவதுண்டு. இவை பெரும்பாலும் ட்டின் சுவர்கள் மற்றும் மூலைகளில் காணப்படுகின்றன. யாரையும் தொந்தரவு செய்வதில்லை.
வீட்டிற்குள் பல்லி  இருப்பதை கண்டாலே நம்மில் பலருக்கும் பிடிக்காது. அதை அடித்து வீட்டை விட்டு துரத்தினால் மட்டுமே பலரது மனம் நிம்மதியாகும். ஆனால், ஜோதிட ரீதியாக வீட்டிற்குள் பல்லி இருப்பது பண வரவையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அந்தவகையில், பல்லியைப் பார்ப்பது சுபம் என்று சிலர் அசுபம் என்றுகூறுகின்றனர். பல்லியை பார்ப்பது நல்லதா கெட்டதா என இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.
பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. புதிய வீட்டின் பூஜையறையில் வெள்ளி பல்லி சிலைகளை பயன்படுத்தி பூஜை செய்வது உண்டு. ஏனென்றால், பல்லி வீட்டின் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என நம்ப்படுகிறது. இவ்வளவு ஏன், தமிழகத்தில் பல்லிக்கு என தனி கோயில் உள்ளது.
காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு பெருமாள் கோயிலில் தங்க பல்லி உள்ளது. இதனை தொட்டு தரிசனம் செய்து விட்டு வந்தால் நல்ல நிகழ்வுகள் நிகழும்.
பூஜையறை மற்றும் வரவேற்பு அறை
வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் அது மிகவும் மங்களகரமானதுஒரு விஷயம். எதிர்க்காலத்தில் அதிக பணவரவை பெறப்போகிறீர்கள் என்பதையும், உங்களுக்கு எந்த பணத்தடைகளும் இருக்காது என்பதையும் இது குறிக்கிறது
. தீப திருநாள் தீப திருநாளான தீபாவளி அன்று
வீட்டில் பல்லியை இருந்தால், ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, இதனால் மகத்தான மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவீர்கள்.
மூன்று பல்லிகள்
வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை சேர்த்து பார்ப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டம். அதாவது, உங்கள் பூஜை அறையில் மூன்று பல்லிகளை ஒன்றாக பார்த்தால் அது மிகவும் மங்களகரமான ஒரு விஷயம். இதனால், உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்கு பல்லி தென்பட்டால், அது மிகவும் மங்களகரமானதாக நம்பப்படுகிறது. அதேமாதிரி நீங்கள் பல்லியை அடிக்கடி பார்க்கிறீர்கள் என்றால் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம்.
சில கோயில்களில் மரத்தை சுற்றி பலர் நின்று கொண்டு எதையோ கைகாட்டி பார்ப்பதை பார்த்திருப்போம். அது வேறு எதுவும் அல்ல, கோயில்களில் உள்ள விருச்ச மரங்களில் பல்லியை பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமம். அதேபோல் வீட்டின் நிலைவாசலில் பல்லியைப் பார்ப்பதும் மிகவும் விசேஷமான ஒன்று.
பல்லி வீட்டில் இருப்பதினால் பயப்பட தேவையில்லை. அது அனைத்தும் நல்ல சகுனம் தான். நமக்கு நன்மையை மட்டும் தான் அளிக்கும். அது சில நேரம் சத்தம் எழுப்பலாம் அதுவுமே நல்ல விஷயம்தான். அந்த சத்தம் எந்த இடத்தில் இருந்து வருகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி பல்லி சத்தம் எழுப்புகிறது என்பதைக் கூட நல்ல விஷயமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இனிமேல் உங்கள் வீட்டில் பல்லியை பார்த்தால் அதனை அடித்து விரட்டாதீர்கள்.

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?*

*சிவபுராணம் என்றால் என்ன? 
அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?*
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் சிறப்பு.

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

12 *சிறப்பு - 1* 
"நமசிவாய "என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

13. *சிறப்பு - 2* சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் *வாழ்க* என முடியும்.

14. *சிறப்பு - 3* 
அதை அடுத்த 5 வரிகள் *வெல்க* என முடியும்.

15. *சிறப்பு -4* 
அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.

16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களைக் குறிக்கிறது.

17. சிவபுராணத்தின் 32 வது வரியில் *மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்* என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

18. திருவாசகத்தின் 18 வது வரியான *அவன் அருளாலே அவன் தாள் வணங்கி* என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

19. ரமண மகிஷி , திருவண்ணிமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.

பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

 *சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்* 

மனம் தெளிவாகும்
மகிழ்ச்சி பொங்கும்

ஓம் நமசிவாய .
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, December 27, 2023

திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கும். திருவோணம் நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்தது.

திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கும். 
திருவோணம் நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்தது. 
இருபத்திஏழு நட்சத்திரங்களில் திரு என்ற அடைமொழிகொண்டு இறை தன்மையோடு விளங்கும் நட்சத்திரங்கள் இரண்டு. ஒன்று திருவாதிரை சிவனுக்கு உகந்த நட்சத்திரம் மற்றொன்று திருவோணம் விஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம். 

நம் குல பெண்கள் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாதிரை நாச்சியாரை நினைத்து தங்கள் மாங்கல்ய பலத்திற்காக திருமாங்கல்ய நோன்பை மேற்கொள்கின்றனர் .இந்த நாளை ஆதிரை நாள் என்றும் ஆருத்ரா தரிசன நாள் என்றும் சொல்வதுண்டு.

இந்நாளில் திருவாதிரை நட்சத்திரத்தின் பலன்களும் திருவோண நட்சத்திரத்தின் பலன்களும் ஒன்று சேர்வது சிறப்பு.

திரு+ஆ+திரை திரு என்றால் திருமகள், ஆ என்றால் காமதேனு திரை என்றால் அலை அதாவது திருமகளின் செல்வமும்,காமதேனுவின் செல்வமும்,கடல் அலை போல் திரண்டுவரும் என்பது பொருள்.

*திருவாதிரை நோன்பு வழிபடும் விதம் :*

திருவாதிரை நட்சத்திரத்தின் முன் இரவு பிரம்ம முகூர்த்தத்தில் பத்தினி சாப்பாடு என்று சிறிதளவு உணவு மட்டும் உண்டு தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.

அன்றைய நாளில் பச்சரிசியும் வெல்லமும் ஏலக்காயும் கலந்த மாவில் மாங்கல்ய கச்சாயம் (அடை) என்ற இனிப்பை பயபக்தியோடு அவரவரின் குலதெய்வத்தை நினைத்து கொண்டு ஒற்றை படை எண்ணிக்கையில் தயார் செய்ய வேண்டும்.

அதன் பிறகு ஏழு வகை காய்கறிகளுடன் வடை, பாசிப்பருப்புடன் கலந்த பாயசம் கொண்டு தலைவாழை இலை படையல் செய்ய வேண்டும்.

*கோலமிடும் முறை :*

அவரவர் குலதெய்வ படத்திற்கு முன்பாக பச்சரிசி மாவில் மஞ்சள் கலந்து இரண்டு வீடு அமைப்பில் கோலமிடுதல் வேண்டும். 

அந்த கோலத்தின் மேல் ஒருபகுதியில் கண்ணாடி ,சீப்பும் மறுபகுதில் நிலாப்பிறை திருமாங்கல்யம் ஓம் வடிவங்கள் வரைந்து அதன்மீது மாங்கல்ய கச்சாயம் (அடை) மற்றும் ஏழுவகை காய்கறிகளுடன் வடை பாசிப்பருப்புடன் கலந்த பாயசம் கொண்டு தலைவாழை இலை போட்டு இறைவனுக்கு படைக்க வேண்டும்.

படையலுக்கு முன்பு மஞ்சள் பால் குலதெய்வ விபூதிகலந்த நிறைசெம்பு தண்ணிர் அதற்கு முன்பு வெற்றிலை, பாக்கு, இரண்டு குத்துவிளக்குகள், தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் பூ, இவைகளை வைத்து சாம்பிராணியுடன் கற்பூர தீபாராதனை காட்டி 
மணி மற்றும் சங்கு நாதத்துடன்பூஜிக்க வேண்டும்.

*நிலாப்பிறை பார்த்தல் :*

வீட்டின் முன் பகுதியில் 3 கால் முக்காலி கொண்டு அதன் மேல் மாங்கல்ய கச்சாயம் (அடை) வைத்து மஞ்சள்பால், விபூதி கலந்த நிறைசெம்பு தண்ணீர் அதற்கு முன்பு வெற்றிலை, பாக்கு, இரண்டு குத்து விளக்குகள், தாலிக்கயிறு, மஞ்சள் குங்குமம் பூ இவைகளை வைத்து சாம்பிராணியுடன் கற்பூர தீபாரதனை காட்டி பூஜைக்கு வேண்டும்.

அந்த நிறைசெம்பு தண்ணீரில் சுமங்கலி பெண்கள் ஒற்றைப்படையில் விரல்களை வைத்து திருவாதிரை பாடல்கள் பாடி திருவாதிரை நாச்சியாரையும் குலதெய்வத்தையும் வணங்க வேண்டும்.

திருவாதிரை பூஜை முடித்த பிறகு படையலில் உள்ள மஞ்சள் தாலிக்கயிறு ஒன்றை எடுத்து தாங்கள் கணவரின் பாத நமஸ்காரம் செய்து அவர்கள் கையால் சுமங்கலி பெண்கள் திருமாங்கல்யம் சூட்டிக்கொள்ள வேண்டும்.

புதுமன தம்பதியினர் பட்டு உடுத்தி திருவாதிரை நோன்பின் போது வழிபடலாம். கணவன் மனைவி இரண்டு பேரும் உங்களது வீட்டில் பெரியோர்கள் இருந்தால் அவர்கள் காலில் விழுந்த ஆசி பெற வேண்டும்.

*ஆருத்ரா தரிசனம் காணுதல் :*

விட்டில் பூஜை முறைகளை முடித்துக் கொண்டு குடும்பத்துடன் ஆருத்ரா தரிசனம் காண அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வர வேண்டும்.

*விரதம் முடித்தல் :*

சிவன் கோயிலுக்கு சென்று வந்த பிறகு வீட்டில் இறைவனுக்கு படைத்த படையலை பெண்கள் உண்ட பிறகு தான் கணவர் மற்றும் குடும்பத்தினர் உண்டு திருவாதிரை நோன்பு முடிக்க வேண்டும்.

*தானம் செய்தல் :*

மாங்கல்ய கச்சாயத்தை தவிர மற்ற கச்சாயம் உணவு காய்கறிகள் பதார்த்தங்கள் மற்றும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கயிறு, மஞ்சள் குங்குமம் இவைகள் அனைத்தும் மற்ற சுமங்கலி பெண்கள் வயதானவர்கள் குழந்தைகள் அனைவருக்கும் தம் வசதியை போல் வழங்கலாம்.

*திருவாதிரை நோன்பின் பயன்கள் :*

திருவாதிரை நோன்பு இருப்பதால் தீர்க்க சுமங்கலி பாக்கியமும் சந்தான (புத்திர) பாக்கியமும், திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு திருமண பாக்கியமும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும், குலதெய்வ கடாட்சமும் நமக்கு கிடைக்கும் என்பது முன்னோர்களின் வழி வழி வந்த உண்மையாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

ஶ்ரீ மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் பெத்தவநல்லூர், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்*.

 ஶ்ரீ  மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் பெத்தவநல்லூர், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்*.

🙏🏻தென்னாடுடைய  சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🏻


தென்னிந்திய  கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 800 ஆண்டுகள் முதல்1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. 

🛕திருவிழா:
கார்த்திகை, பவுர்ணமி, சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், பிரம்மோற்சவம், நவராத்திரி விழா, சோம வார பூஜை, தனுர் பூஜை, ஆருத்ரா தரிசனம், 1008 திருவிளக்கு பூஜை, மகா சிவராத்திரி விழா, பங்குனி உத்திர திருவிழா



🛕தல சிறப்பு:
மிகவும் பழமையான இந்தக் கோயில் ஓர் பிரார்த்தனை ஸ்தலமாகும். குழந்தைப் பெறப் போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை வேண்டிக் கொண்டால், சிவநேசி என்ற பெண்ணுக்கு புத்திரப்பேறு பெற உதவியது போல் அனைத்து தாய்மார்களுக்கும் தானே உதவிடுவார்.



🛕இந்த சிவாலயத்தின் உள்ளே நுழைந்ததுமே விநாயகர், முருகன், பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என அனைவருமே நம்மை ஆசிர்வதிப்பது போன்ற அமைப்பு. ஸ்தல விநாயகர் கன்னி மூலையில் இருந்தபடியே அருள்பாலிக்கிறார். 



🛕கிழக்கு பார்த்து அமைந்த இந்த சிவலாயத்தில் நந்தி தேவரை வணங்கி விட்டு மாயூர நாதரை தரிசிக்க செல்வோம். இந்த உலகிற்கே நான்தான் தலைவன் என்பது போன்ற ராஜஅலங்காரத்தில் இறைவன் காட்சி தருகிறார்.



🛕அவரிடம் நமக்கு வேண்டியதை கேட்டுப் பெற வேண்டும் என்ற நினைப்புடன் சென்றால், மாயூர நாதரைப் பார்த்தவுடன் அவரை தரிசித்தாலே நமது பிறப்பு அர்த்தமுள்ளதாக அமைந்து விட்டது என்ற திருப்தி ஏற்படுகிறது. அருகிலுள்ள அன்னை அஞ்சல் நாயகியை தரிசிக்க செல்வோம். 



🛕அங்கு சென்று அந்த தலைவியை பார்த்தால் அதற்கு மேல் அழகே இல்லை என்பது போன்ற ஒரு திருக்காட்சி. அம்மை, அப்பன் இருவரின் சன்னதிக்கு நடுவில் சோமஸ்கந்தர் சன்னதி, அதன்பின் நவகிரகங்களை வழிபட்டு பின் கொடி மரத்தின் இடதுபுறம் சென்றால் நாயன்மார்கள் சிவனை சேவித்தபடி காட்சி தருகிறார்கள்.



🛕இவர்களையெல்லாம் தரிசித்த பின் கொடிமரத்தின் கீழ் வடக்கு நோக்கி நமஸ்காரம் செய்தால், நமக்கு மேல் குருபகவான் 12 ராசிகளுடன் நமது எதிர்காலத்தை வளமுள்ளதாக அமைக்க தாயாராக இருக்கிறார். 



🛕நாம் கொடிமரத்தின் முன் உள்ள ஆமை மீது கைவைத்து தான் இறைவனை நமஸ்காரம் செய்கிறோம். ஆமையானது னது சிவனின் ஆபரணத்தில் ஒன்று. மேலும் தண்ணீரில் இருக்கும் வரை ஆமை நன்றாக சுற்றித்திரியும். ஆனால் கரைக்கு வந்தவுடன் தன் உடலை ஓட்டிற்குள் அடக்கி அமைதியாகி விடும். அதுபோலவே நாமும் வெளியில் இருக்கும் வரை நமது எண்ணங்களை அலைபாய விட்டாலும், சிவ சன்னதி உள்ளே வந்தவுடன் மனதை அடக்கி இறைவனை வழிபட்டு அவனருள் பெற வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த நமஸ்கார வழிபாடு. வில்வமே இக்கோயில் தல விருட்சமாகும்.



🛕பிரார்த்தனை
பிரிந்து வாழும் தம்பதியினர். குழந்தைப் பெறப்போகும் தாய்மார்கள்
இக்கோயிலுக்கு வந்து மாயூர நாததை வேண்டிக் கொண்டால், புத்திரப்பேறு பெற தாய்மார்களுக்கு தானே உதவிடுவார் என்பது நம்பிக்கை.



🛕நேர்த்திக்கடன்:
தம்பதியினர் இக்கோயிலுக்கு வந்து 48 நாட்கள் சுவாமி அம்மனுக்குரிய
பள்ளியறை பூஜையின் போது ஏலக்காய் போட்ட தித்திப்பான பால்
நைவேத்தியம் செய்து வழிபட்டால் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்.



🛕முன்னொரு காலத்தில் சிவநேசி என்ற பெண் சிவன் கோயில் வழியாக தன் தாய் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தாள் சிவநேசிக்கு அது பேறுகால சமயம் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். அங்கிருந்த சிவன் கோயில் வாசலில் அமர்ந்து அழுது புரண்டாள்.



🛕 இந்த துன்பத்தை கண்ட கருணை வடிவான சிவன் தானே அந்த பெண்ணின் தாய் உருவில் வந்து புத்திரப்பேறு உதவினார். அத்துடன் குழந்தையை பெற்ற பெண்ணின் தாகம் தீர காயல்குடி நதியை வரவழைத்து அதன் நீரை மருந்தாக பருகவும் உதவினார். (இந்த நதியே தற்போது இந்தக் கோயிலின் தீர்த்தமாக உள்ளது)



🛕தன் பெண்ணின் பிரசவ செய்தியை கேள்விப் பட்ட தாய், சிவனே தன் உருவில் தாயாக வந்து பிரசவம் பார்த்ததை அறிந்து இறைவனை நினைத்து வழிபட்ட போது, சிவன் உமையவள் சமேதராய் காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.



🛕ஒரு பெண் பிரசவ வலியால் துடித்த போது, அருகில் யாருமில்லாத நிலையில் சிவபெருமானே மருத்துவச்சியாக மாறி அவளுக்குப் பிரசவம் பார்த்த அதிசயம் நிகழ்த்திருக்கிறது



🛕அந்த இடம், பெத்தவநல்லூர் அந்த சம்பவத்தை முதலில் பார்த்துவிடுவோம். ராஜபாளையம் அருகே தீவிர சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார் அவரைப் போலவே அவரது மனைவி சிநேசியும் சிவனையே நேசித்து பூசித்து வந்தாள். 



🛕நிறைமாத கர்ப்பிணியான அவள், சற்று தொலைவில் குன்றைவூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு தலைப்பிரசவத்திற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள் தற்போது பெத்தவநல்லூர் என்று அழைக்கப்படும் இடத்தை நெருங்கியபோது, திடீரென்று அவளுக்குப் பிரசவ வலி தொடங்கியது. வலி தாங்காமல் இடுப்பைப் பிடித்தவாறு, அம்மா என்று அலறியபடி மங்கிக் கீழே விழுந்தாள் அவள்
ஆள் நடமாட்டம் இல்லாத இடமென்பதால் அவளது அபயக் குரல் மற்றவருக்குக் கேட்கவில்லை. என்றாலும், நீக்கமற எங்கும் நிறைந்தவரான




🛕சிவ
பெருமானுக்குக் கேட்டது அவளது நிலை கண்டு மணமிரங்கிய மகேசன். அவளது தாயார் கோலத்தில், மருத்துவச்சியாக வடிவெடுத்து வந்து சிவநேசிக்கு உதவினார். 


🛕பிரசவம் நல்லபடியாக முடிந்தது. அவள் தாகத்தால் வருந்தியபோது. இறைவன் தன் திருவடி பெருவிரல் நகத்தால் தரையைக் கீற, அந்த இடத்தில் நதி ஒன்று உருவானது. அதிலிருந்து நீரைப் பருகி தாகம் தணித்துக்கொண்டாள் சிவநேசி சட்டென்று மறைந்துபோனார் சர்வேஸ்வரன், அந்த சமயம் பார்த்து, வீட்டிற்கு வருவதாகச் சொன்ன மகள் இன்னும் வரவில்லையே என்ற பதைபதைப்புடன் அவளைத் தேடி சிவநேசியின் தாய் வந்துகொண்டிருந்தாள். வழியில், பிரசவம் முடிந்த மகளைப் பார்த்து பதட்டத்துடன் பிரசவம் நல்லபடியாக முடிந்ததா? பிரசவம் பார்த்தது யார்? என்று கேட்டாள் சிவநேசியின் தாய் என்னம்மா உளறுகிறாய்? நீதானே கொஞ்ச நேரத்திற்கு முன்பு எனக்குப் பிரசவம் பார்த்தாய் என்று குழப்பத்துடன் கேட்டாள் சிவநேசி, தாய்க்கு ஒன்றும் புரியவில்லை.

அப்போது ரிஷப வாகனத்தில் உமையுடன் எழுந்தருளிய ஈசன். என் பக்தையின் அபயக் குரல் கேட்டு மருத்துவச்சியாக வந்து பிரசவம் பார்த்தது நானே! சிவநேசியின் தாகம் தீர்த்த நதி இனி காயல் குடி நதி என்று அழைக்கப்படும் என்று கூறி மறைந்தார். அதன் பிறகுதான் இறைவனே மருத்துவச்சியாக அங்கு வந்து பிரசவம் பார்த்தது அவர்களுக்குப் புரிந்தது. 



🛕பெற்றவளாக அதாவது பெற்ற தாயாக ஈசன் எழுந்தருளியதால் பெற்றவள் நல்லூர் என அழைக்கப்பட்ட தலம் இன்று பெத்தவநல்லூர் என அழைக்கப்படுகிறது.



🛕சிறப்பம்சம்: மிகவும் பழமையான இந்தக் கோயில் ஓர் பிரார்த்தனை ஸ்தலமாகும் குழந்தைப் பெறப் போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை வேண்டிக் கொண்டால், சிவநேசி என்ற பெண்ணுக்கு புத்திரப்பேறு பெற உதவியது போல் அனைத்து தாய்மார்களுக்கும் நானே உதவிடுவார்.



🛕திருக் கோவில் 
முகவரி:

அருள்மிகு ஶ்ரீ மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் பெத்தவநல்லூர், ராஜபாளையம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

இடம்கொண்டீஸ்வரர் கோவில், வேப்பத்தூர், தஞ்சாவூர்

இடம்கொண்டீஸ்வரர் கோவில், வேப்பத்தூர், தஞ்சாவூர்
 இடம்கொண்டீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் அருகே உள்ள வேப்பத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும்.  மூலஸ்தான தெய்வம் இடம்கொண்டீஸ்வரர் / ஆதி மகாலிங்கேஸ்வரர் என்றும், தாயார் ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்.  இத்தலம் பழங்காலத்தில் கல்யாணபுரம் என்று அழைக்கப்பட்டது.  இக்கோயில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.  திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல்களில் இக்கோயிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதால் இக்கோயில் தேவார வைப்பு ஸ்தலம் என்று கருதப்படுகிறது.

 புராணக்கதைகள்

 ஸ்தல புராணத்தின்படி, காஷ்யப முனிவர் இந்தப் பக்கம் வந்தார்.  பசுமை மற்றும் அமைதியான சூழலை அவதானித்த அவர், இங்கு தபஸ் செய்ய முடிவு செய்தார்.  அவர் தியானத்தில் இருந்தபோது, ​​ஒரு வானத்தின் குரல் அவருடைய தவத்தின் நோக்கத்தைக் கேட்டது.  சிவன் மற்றும் பார்வதியின் திருமண உடையில் தரிசனம் செய்ய விரும்புவதாக காஷ்யபர் பதிலளித்தார்.  உரிய காலத்தில் நிறைவேற்றப்படும் என்று குரல் கொடுத்தார்.  அது எப்போது நடக்கும் என்று முனிவர் கேட்டபோது, ​​முதலில் திருமண அலங்காரத்தில் இறைவனும் தாயாரும் லிங்கம் தோன்றும் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

 தமிழ் மாதமான தை மாதத்தில் ஒரு பௌர்ணமி நாளில், கணித்தபடி, லிங்கம் தோன்றியது, பின்னர் தம்பதிகள் தங்கள் திருமண உடையில்.  இந்த லிங்கம் முதலில் திருவிடைமருதூரில் உள்ள லிங்கமாக இருந்து காஷ்யப ரிஷிக்கு அளித்த வாக்கை நிறைவேற்றும் வகையில் இறைவன் இங்கு பெயர்ந்து திருவிடைமருதூரில் புதிய லிங்கம் எழுந்தருளினார்.  எனவே இத்தலத்தில் உள்ள லிங்கம் ஆதி மகாலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.  அவர்கள் திருமண அலங்காரத்தில் தோன்றியதால், அந்த இடம் கல்யாணபுரம் என்று அழைக்கப்பட்டது.

 இந்த இறைவனுக்கு இடம்கொண்டீஸ்வரர் என்று பெயர் வைத்ததற்கும் ஒரு சுவாரஸ்யமான காரணம் உண்டு.  அவர் திருவிடைமருதூரில் இருந்து காஷ்யப ரிஷி முன் தோன்றியபோது, ​​மற்றொரு மகாலிங்கேஸ்வரருக்கு முந்தைய தலத்தில் இடம் கொடுத்தார்.  அவர் இடம் கொடுத்ததால் (தமிழில் இடம்), இடம் கொண்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.  தமிழ் இலக்கணத்திலும் பாவனையிலும் உறுதியாகப் போனால் அது இடம் கொடுத்தீஸ்வரராகத்தான் இருக்க வேண்டும்.

 கோவில்

 மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய ஆலயம்.  மூலஸ்தான தெய்வம் இடம்கொண்டீஸ்வரர் / ஆதி மகாலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.  அவர் கருவறையில் சிவலிங்க வடிவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.  அன்னை ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.  தனி சன்னதியில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.  கருவறைக்கு அருகில் அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் உள்ளன.  நுழைவாயிலில் நந்திகேஸ்வரருக்குப் பின்னால் பலிபீடம் உள்ளது.

 பிரகாரத்தில் விநாயகர், முருகன், அவரது துணைவியார் வள்ளி, தேவசேனா, கிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கா பரமேஸ்வரி, மகாலட்சுமி மற்றும் காஷ்யப முனிவர் சன்னதிகள் உள்ளன.  சனிபகவான், சூரியன், சந்திரன், நால்வர் என போற்றப்படும் நான்கு சைவ துறவிகள், பைரவர் மற்றும் நவகிரகங்கள் என ஒன்பது கிரகங்களுக்கும் சன்னதிகள் உள்ளன.

 கோவில் திறக்கும் நேரம்
 கோவில் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 திருவிழாக்கள்

 செப்டம்பர்-அக்டோபரில் புரட்டாசி நவராத்திரி;  நவம்பர்-டிசம்பர் மாதங்களில் திரு கார்த்திகை;  அக்டோபர்-நவம்பரில் ஐப்பசி அன்னாபிஷேகம்;  டிசம்பர்-ஜனவரியில் மார்கழி திருவாதிரை;  பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி;  மாதாந்திர பிரதோஷங்கள்;  கார்த்திகை மாத திங்கட்கிழமைகள் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழா நாட்களாகும்.

 பிரார்த்தனைகள்

 மக்கள் தங்கள் மனதில் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற இறைவனையும் அன்னையும் பிரார்த்தனை செய்கிறார்கள்.  பக்தர்கள் இறைவனுக்கும் அன்னைக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை சமர்பித்து வழிபடுகின்றனர்.

 தொடர்பு கொள்ளவும்
 இடம்கொண்டீஸ்வரர் கோவில்,
 வேப்பத்தூர், திருவிடைமருதூர்,
 தஞ்சாவூர் மாவட்டம் – 612 102 . 


ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள்

ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள்

நமக்கு ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒரு நாள். ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நமக்கு ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒரு நாள். ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். 1. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில், மாலையில் அபிஷேகம் 2. ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் 3. ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம். 4. புராட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில், மாலையில் அபிஷேகம். 5. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் 6. மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம். அபிஷேகங்கள் நடைபெறும் போது நடராஜரை கண்டு வணங்கி வழிபடுவது மிகவும் நல்லது. விசேஷமானது . நெல்லிக்குப்பம் பூலோகநாதர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற நடராஜர் அபிஷேகம் அலங்காரம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. 

ஓம் நமசிவாய  
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

திருச்செந்தூரில் வழிபட செல்லும் முறை பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.

 திருச்செந்தூரில் வழிபட செல்லும் முறை பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.
திருச்செந்தூருக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கும் முன்பு முதலில் கடலில் நீராட வேண்டும். பின் ஈரத்துணியுடனேயே கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றில் 1 ரூபாய் கட்டணம் செலுத்தி கிணற்று படிகளில் இறங்கி அங்குள்ள ஊற்றில் 2 வாளி தண்ணீர் நம் மேலே ஊற்றுவார்கள். அதில் குளித்துவிட்டு பின்னர் உடை மாற்றுபவர் மாற்றலாம் இல்லையென்றால் அருகிலுள்ள குளியல் அறையில் குளித்துவிட்டு உடை மாற்றிக்கொள்ளலாம்.
பின் நேரடியாகக் கோவிலுக்கு செல்லாமல் அருகிலுள்ள மூவர் (மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமிகள்)  சமாதிக்கு சென்று வணங்கி விட்டுத்தான் முருகரை காண செல்ல வேண்டும். இவர்கள் யார் என்ற கேள்வி கட்டாயம் எழும்! சிதிலமடைந்திருந்த திருச்செந்தூர் திருக்கோயிலை புனரமைத்தவர்கள்.

மேலும், வாக்கு சொல்பவர்கள், ஜோதிடம் பார்ப்பவர்கள், பரிகாரம் செய்பவர்கள் இவர்களுக்கு ஏற்படும் தோஷங்களுக்கு மூவர் சமாதுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். சென்று விளக்கேற்றுவது நன்மை. பின் கோயிலுக்கு வரும் வழியில் முன் பக்கமே பொருள் பாதுகாப்பு அறை உள்ளது. அதைக் கடந்து கோயிலை நோக்கி வந்தால் காலணி பாதுகாக்க அறை உள்ளது. அங்கு தேங்காய், பழம், பூக்கள் மாலைகள் வாங்கலாம். திருச்செந்தூரில் விலை அதிகம். தூத்துக்குடிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் பூக்கள் வெளி மாவட்டங்களில் இருந்துதான் வருகிறது.

பின் முருகர் கோயிலுக்கு வந்து இலவச தரிசனம் அல்லது கட்டண தரிசனம் செய்யலாம். அர்ச்சனை செய்பவர்கள் சீட்டு வெளியில் கவுண்டரிலேயே வாங்கிக் கொள்ளவும். கட்டண தரிசனம் மூலம் முருகனின் கர்பகிரகம் எதிரே உட்காந்து தரிசனம் செய்ய அனுமதிப்பார்கள்.

கோயில் உள்ளே செல்வதற்கு முன் டிக்கெட் கவுண்டரில் நுழையும் முன் உங்களை அர்ச்சகர்களே 100/- அல்லது 200/- கொடுத்தால், நேரடியாக அழைத்துச் செல்கிறேன் என்று அழைப்பார்கள். அவர்களோடு போனால் வரிசையில் நிற்கும் நேரம் குறையும். நிறைய அர்ச்சகர்கள் அங்கே இருப்பார்கள். இவ்வளவு அர்ச்சகர்களை வேறு கோயிலில் காண முடியாது. நீங்கள் கொடுக்கும் பணத்தில் கோயிலுக்கும் இவர்களுக்கும் பகிர்ந்து எடுத்துக்கொள்வார்கள். டிக்கெட் எடுத்து வரிசையில் செல்ல கொடுக்கும் பணம் 100% கோயிலுக்கு சேரும். இவர்கள் மூலமாக சென்றால் 60%, 40%. உள்ளே சென்று மூலவரை தரிசனம் செய்து விட்டு அருகில் ஒரு குகை பாதை போல் இருக்கும். அங்கே கதவு திறந்திருந்தால் 5 ரூபாய் அங்கேயே டிக்கெட் எடுத்துக் குனிந்து செல்ல வேண்டும். மூலவரை வலமிருந்து இடமாக சுற்றுவது போல் இருக்கும். உள்ளே சென்றால் ஒரே ஆவுடையில் ஐந்து லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்கத்தை தரிசனம் செய்யலாம்.

கூட்டமாக இருக்கும் நாட்களில் பஞ்சலிங்க தரிசனம் விடுவதில்லை. மூலவர்கள் இரண்டு உண்டு. 2-வது வள்ளி தேவ சேனா சமேத சண்முக முருகரை காணலாம். தரிசனம் முடித்து பிரகாரம் வந்து வலமிருந்து இடமாகச் சென்று மேதா குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும். சூரசம்ஹார போரில் இங்கிருந்து முருகருக்கு ஆலோசனை வழங்கியதால் இது குருவின் இருப்பிடம் ஆகும். ஆலங்குடி போன்று குருப்பெயர்ச்சிக்கு இங்கும் பெரிய விஷேசமாய் இருக்கும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆமை வாகனத்தில் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றார். செல்வம், ஆன்ம பலம் செழிக்க இவரை வணங்குதல் வேண்டும்.

பின் அருகில் வள்ளி சன்னதி தரிசனம் முடித்து வலமாக சுற்றி வந்து தெய்வானை சன்னதியை தரிசனம் செய்து விட்டு சண்டிகேஸ்வரர் தரிசனம் முடித்து சனீஸ்வரர் சன்னதி பைரவர் அருகருகே உள்ளது. தரிசனம் செய்து விட்டு வெளிப்பிரகாரம் வந்து மீண்டும் வலமிருந்து இடமாகப் பிரகாரம் சுற்றினால் ராஜகோபுரம் நோக்கி விநாயகர் வீற்றிருப்பார் அவரை தரிசித்து கடந்து சென்றால் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் அவரை தரிசித்து அருகில் சகஸ்ர லிங்கமாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசித்து விட்டு  வந்த வழியே திரும்பி பிரகாரம் வர வேண்டும்.

அங்கே பெருமாள் நாராயணன் சன்னதி உண்டு. பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வருகிற வழியில் கொடிமரம் அருகே கோவில் சுவரில் ஒரு துளை இருக்கும். அந்த ஓட்டையில் உங்கள் காதுகளை வைத்தால் வெளிப்புறத்திலிருந்து வரும் கடல் காற்று ஓம் என்று ஒலிக்கும். கவனித்தால் நீண்டதாய் ஓம் எனும் ப்ரணவ மந்திரம் ஒலிப்பதைக் கேட்டு அருள் பெறலாம். பின் கொடிமரம் வணங்கி முருகருக்கு நன்றி சொல்லி அருகில் கல்யாண விநாயகரை வணங்கி தரிசனத்தை முடிக்கலாம்!

மேலும் அருகிலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள்

திருச்செந்தூரிலிருந்து 15 கிமீ தூரத்தில் குலசேகரபட்டனத்தில் ஸ்ரீ முத்தாரம்மன்கோயில் உள்ளது. தசரா பண்டிகை உலக பிரசித்தி பெற்ற கோயில் இது.

திருச்செந்தூரிலிருந்து 33 கிமீ தூரத்தில் ஸ்ரீ வைகுண்டம் உள்ளது. பெருமாள் ஸ்ரீகள்ளபிரான் அவதாரமாக இருக்கிறார். சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அற்புத கோயில் இது. 108 திவ்ய தேசத்தில் 44 வது திவ்ய தேச கோயில்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Tuesday, December 26, 2023

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்ததது.



ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்ததது
 
மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும் தான் திரு என்னும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில் ஆருத்ரா என்று கூறுவார்கள். ஆருத்ரா தரிசனத்திற்குக் காரணமான புராணக் கதை ஒன்றை இங்குப் பார்ப்போம்.

பஞ்ச பூதங்களின் இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கும் ஸ்ரீ சிவபெருமானை நிந்தித்து, ஒருமுறை தாருகாவனத்தில், முனிவர்கள் ஒன்று கூடி, முக்கண்ணனுக்கு எதிராக வேள்வி ஒன்றை நிகழ்த்தினார்கள். அதாவது, அவர்களின் கோட்பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது. கடவுள் என்பவர் கிடையாது என்பதுதான். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டி, கயிலைநாதன், பிட்சாடனர் ரூபமெடுத்து, பிட்சைக் கேட்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பிட்சாடனரைக் கண்ட முனி பத்தினிகள் அனைவரும், அவரின் பின்னால் போகத் தொடங்கினார்கள்.

இச்செயலைக் கண்ட முனிவர்கள், மிகுந்த கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தார்கள். வேள்வித்தீயினில், மத யானை, மான், உடுக்கை, முயலகன். தீப்பிழம்பு ஆகியவற்றைத் தருவித்து, அனைத்தையும், ஸ்ரீ சிவபெருமான் மேல் ஏவி விட்டார்கள். சர்வேசன் ஆனவர், மத யானையைக் கொன்று அதன் தோலைத் தரித்துக் கொண்டார். மான், உடுக்கை, அக்னி அனைத்தையும் தானே சுவீகரித்துக் கொண்டார். முயலகனின் மேல் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடி, முனிவர்கள் உண்மையை அறியச் செய்தார். அதுவே ஆருத்ரா தரிசனம் என்று கூறப் படுகிறது.

ஸ்ரீ நடராஜப் பெருமாள் 108 நடனங்களை ஆடி இருக்கிறார். அவர் தனியாக ஆடியது 48. ஸ்ரீ உமா தேவியுடன் சேர்ந்து ஆடியது 36. தேவர்களுக்காக ஆடியது 12. ஸ்ரீ திருமாலுடன் ஆடியது 9. முருகனுடன் ஆடியது 3. 

பஞ்ச பூதங்களான ஆகாயம் என்பதற்கு சிதம்பரம் என்றும். அக்னி என்பதற்கு திருவண்ணாமலை என்றும், நீர் என்பதற்கு திருவானைக்காவல் என்றும், காற்றுக்கு காளஹஸ்தி என்றும் , நிலத்திற்கு காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்றும் இவைகளின் பெருமைகளைக் கூறும் வண்ணம்  இந்த புண்ணியத் தலங்கள் அமைந்திருக்கின்றன.  இதில் சிதம்பரம் தான் முதன்மையாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ரீ முக்கண்ணனுக்கு வருடத்தில் ஆறு முறைகள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூன்று முறைகள் திதியன்றும், மூன்று மறைகள் நட்சத்திரம் அன்றும் செய்யப்படும் அபிஷேகத்தில், திருவாதிரை அன்று செய்யப்படும் அபிஷேகமே விசேஷமாகச் சொல்லப்படுகிறது. 

ஆருத்ரா தரிசனம் அன்று களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது? 

முந்தைய காலத்தில் சேந்தனார் என்கிற பெயர் கொண்ட விறகு வெட்டி ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவ பக்தர். தினமும் ஒரு சிவ பக்தருக்கு ஆகாரம் அளித்துவிட்டுத் தான் உண்ணுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் நல்ல மழை பெய்ததில், வெட்டிய விறகெல்லாம் ஈரமாகி விட்டது. அதை விற்க முடியாமல் போனதால், கையில் பணம் இல்லாமல் போனது. அதனால் மனைவிடம் வீட்டு சிலவிறகு பணம் கொடுக்க முடியாமல் போனது.

அன்றைய தினம் ஒரு சிவபக்தர், சேந்தனாரின் இல்லம் வந்து, பிட்சைக் கேட்டார். அவரின் மனைவி, வீட்டில் இருந்த அரிசி மாவையும் வெல்லத்தினையும்  சேர்த்து களி  செய்தார். வீட்டில் மிகுதியிருந்த ஏழு காய்களில் கூட்டு ஒன்றினைச் செய்து, சிவனடியாரின் பசியைப் போக்கினார். பிறகே இருவரும் உண்டார்கள். அடுத்த நாள் கோயிலை வழக்கம் போல் திறந்த அர்ச்சகர், பகவானின் கருவறையில் களியும் கூட்டும் சிதறி இருப்பதைப் பார்த்தார். பிறகு உண்மையை உணர்ந்தார். சேந்தனாரின் பக்தியை உலகுக்குத் தெரியப்படுத்த ஆண்டவனே பிட்சாடனர் ரூபத்தில் வந்தார் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

பஞ்சபூத ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்கள், முதலில் சிதம்பரம், அடுத்து காளஹஸ்தி, அடுத்து திருவண்ணாமலை, அடுத்து திருவானைக்காவல், அடுத்து காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்கிற கிராமத்தில் முடிக்க வேண்டும். ஸ்ரீ நடராஜப் பெருமானின்  ஆடல் கலையைத் தரிசித்தாலே புண்ணியம் என்று கூறப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம் அன்று களி, கூட்டு செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நைவேத்தியம் செய்து சமர்ப்பித்து, முடிந்தவரை சிவ ஸ்தோத்திரங்களைக் கூற வேண்டும். நோன்பு மேற்கொள்கிறவர்கள் , மார்கழி திருவாதிரையில் நோன்பைத் தொடக்கி, ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் அன்றும் நோன்பு மேற்கொண்டு ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். எல்லாம்வல்ல ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜப் பெருமான் எல்லா வளங்களையும் அனைவருக்கும் அருளட்டும்.

எங்கும் நிறைந்த இனிய ஈசனின் பேரருளால்  🙏

இனிய ஈசன் அருளுடன்பதிவு செய்ய  நல் வாய்ப்பு அளித்தமைக்கு  சிவ வாழ்த்துக்களைக் கூறி  🙇

🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம்.  சிவமே என் வரமே. சிவனே  சரணாகதி . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌺🌺

 🌺அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் . 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள #திருத்தெளிச்சேரி (கோவில்பத்து)(பிரமவனம், முத்திவனம்)#பார்வதீஸ்வரர் .

சிவனும் பார்வதியும் உழவராக வந்து விதை தெளித்த இடமான, தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,சூரிய பகவான் வழிபட்ட தலமான, உமையம்மை சிவனை பூஜித்து அவருடன் இணைந்த தலமான புதுச்சேரி மாநிலத்தில் #காரைக்கால் மாவட்டத்தில் உள்ள #திருத்தெளிச்சேரி (கோவில்பத்து)(பிரமவனம், முத்திவனம்)
#பார்வதீஸ்வரர் 
(பார்ப்பதீஸ்வரர்)
(சமீவனேசுவரர்)
#சுயம்வரதபஸ்வினி
(பார்வதியம்மை, சத்தியம்மை)
திருக்கோயில் வரலாறு:

திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில் (கோயிற்பத்து) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 50ஆவது சிவத்தலமாகும்.

மூலவர்:பார்வதீஸ்வரர்
அம்மன்:பார்வதியம்மை (சுயம்வர தபஸ்வினி)
தல விருட்சம்:வில்வம், வன்னி
தீர்த்தம்:சத்தி, சூரிய தீர்த்தம்
புராண பெயர்:திருத்தெளிசேரி, காரைக்கோயிற்பத்து
ஊர்:திருத்தெளிச்சேரி
மாவட்டம்: காரைக்கால் 
மாநிலம்:புதுச்சேரி

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்:

"கோடடுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும் சேடடுத்த தொழிலின் மிருதெளிச் சேரியீர் மாடடுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையைத் தோடடுத்த மலர்ச்சடை என்கொல்நீர் சூடிற்றே.

_திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டுத் தென்கரைத்தலங்களில் இது 50 வது தலம்.

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் புத்த நந்தியின் தலையில் இடி விழுந்தது என்பது தொன்நம்பிக்கை. தவம் செய்வதற்கு உகந்த இடம் எனப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள இறைவன் பார்வதீசுவரர்,இறைவி பார்வதியம்மை. இங்குள்ள மூலவர் லிங்கம், பிரமலிங்கம், மகாலிங்கம், ராஜலிங்கம், பாஸ்கர லிங்கம் என்று பல்வேறு திருப்பெயர்களால் அழைக்கப்படுகிறது.

#தல சிறப்பு:

இங்கு சிவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 13 வது தேவாரத்தலம் ஆகும்.

இங்குள்ள சிவபெருமான் நான்கு "யுகங்களை" கண்டதாக நம்பப்படுகிறது. ஸ்தல புராணத்தின்படி, இத்தலம் கிரேத யுகத்தில் பிரம்ம வனம், திரேதா யுகத்தில் சமீவனம் என்றும், துவாபர யுகத்தில் என்றும் ஆனந்த வனம் என்றும், தற்போதைய கலியுகத்தில் முக்தி வனம் என்றும் அறியப்பட்டது.

இத்தலத்தின் வரலாற்றுப் பெயர்கள் - முக்தி ஸ்தலம், சிவத்தலம், சூரியத்தலம், குஹாத்தலம் மற்றும் கௌரித்தலம்.

#புராண வரலாறு:

பார்வதி தேவி, பிரம்மா, இந்திரன், புனித மார்க்கண்டேயர், அர்ஜுனன் மற்றும் சூரியன் ஆகியோர் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. 

சூரியனின் மனைவி சாயாதேவி, தன் கணவன் தன்னிடம் பாசம் காட்டாததை எண்ணி மிகவும் வருத்தப்பட்டாள். மகரிஷி நாரதர் அவளது நிலையைத் தன் தந்தையிடம் தெரிவித்தபோது, அவர் கோபமடைந்து சூரியனைச் சபித்தார். சூரியன் தனது ஒளிரும் மகிமையை இழந்தான், இந்த சாபத்திலிருந்து விடுபடுவதற்காக அவன் பல கோவில்களுக்குச் செல்ல ஆரம்பித்தான். இத்தலம் வந்து நீரூற்றை உருவாக்கி பார்வதீஸ்வரரை வழிபட்டார். இறைவன் அவனது பிரார்த்தனைக்கு பதிலளித்து சாபத்திலிருந்து விடுவித்தான். சூரியன் "பாஸ்கரன்" என்றும் அழைக்கப்படுவதால், இங்குள்ள இறைவன் "பாஸ்கர லிங்கம்" என்றும் போற்றப்படுகிறார், மேலும் இந்த இடம் பாஸ்கர ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான பங்குனியில் (மார்ச்-ஏப்ரல்) 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சூரியன் இந்த கோவிலின் சிவனை லிங்கத்தின் மீது செலுத்தி வழிபடுவதாக நம்பப்படுகிறது .

இந்த இடத்துடன் தொடர்புடைய மற்றொரு புராணக்கதை பார்வதி தேவி சம்பந்தப்பட்டது. தன் தந்தையான தக்ஷன், சிவபெருமானுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்காததால் அவள் மீது கோபம் கொண்டாள். இதன் காரணமாக, அவள் இனி தக்ஷனின் மகள் என்று அழைக்கப்பட வேண்டும். சிவபெருமான் அவளை திருத்தெளிச்சேரியில் காத்யாயன முனிவரின் மகளாக பூமியில் பிறக்கும்படி அருளினார். அவள் இங்கே கடுமையான தவம் செய்தாள், அவள் திருமண வயதை அடைந்தாள், அவள் சிவபெருமானின் பக்கத்தில் இடம் பிடித்தாள். அவள் இங்கே தவம் செய்தாள் (தமிழில் "தபஸ்"), அவள் "ஸ்ரீ தபஸ்வினி" என்று போற்றப்படுகிறாள். சிவபெருமான் இங்கு பார்வதி தேவியை மணந்ததால், அவர் "ஸ்ரீ பார்வதீஸ்வரர்" என்றும் போற்றப்படுகிறார்.

மற்றொரு புராணக்கதை என்னவென்றால், பருவமழை இல்லாததால், இந்த பகுதி வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போதைய ஆட்சியாளரான சோழ மன்னன், மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்ற சிவபெருமானிடம் வேண்டினான். சிவபெருமான் இத்தலத்திற்கு ஒரு விவசாயி வேடத்தில் வந்து வயல்களை உழுது நெல் விதைகளை விதைத்ததாக நம்பப்படுகிறது. இந்த வயல்களில் மகத்தான விளைச்சல் கிடைத்தது மற்றும் மக்கள் பட்டினியின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இறைவனே இங்கு விதைகளை விதைத்தால், இந்த இடம் "திரு தெளி செர்ரி" - "தெளி" என்றால் விதைத்தல், "செரி" என்ற இடம் மற்றும் "திரு என்பது தமிழில் மரியாதைக்குரிய முன்னொட்டு என்று அழைக்கப்பட்டது.

திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரரை வழிபட்ட பிறகு, புனித திருஞானசம்பந்தர் இந்தக் கோயிலைக் கவனிக்காமல் இத்தலத்தின் வழியாகச் சென்றதாக நம்பப்படுகிறது. பின்னர் விநாயகர் துறவியை 10 முறை அழைத்து, அவரை திரும்பி இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ததாக நம்பப்படுகிறது. விநாயகர் துறவி என்று அழைக்கப்பட்டதால், அவர் "கூவி அழித்த பிள்ளையார்" என்று போற்றப்படுகிறார். (“கூவி அழித்த” என்றால் தமிழில் சத்தமாக அழைப்பது என்ற பொருள்). இந்த இடம் "கூவி அழித்த" என்றும் குறிப்பிடப்பட்டது, ஆனால் காலப்போக்கில் அது "கோயில் பாத்து" என்று மாறிவிட்டது.

 திருஞானசம்பந்தர் இத்தலத்திற்குச் சென்றபோது, அவரைப் போதிமங்கை என்ற இடத்தில் பிற மதத்தைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் அவரைத் துன்புறுத்தத் தொடங்கினர் மற்றும் சிவபெருமானின் சக்தியைக் கேள்வி எழுப்பினர். துறவி சிவபெருமானிடம் தீர்வுக்காக முறையிட்டார். இறைவனின் கட்டளையால் அவர்கள் மீது ஒரு இடி விழுந்தது என்று நம்பப்படுகிறது, ஆனால் அவர்கள் இன்று சைவம் தங்கள் மதத்தை விட உயர்ந்ததல்ல என்று வாதிட்டனர். சம்பந்தரை விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்தனர். சம்பந்தர் அந்த சவாலை ஏற்று தம் சீடர் ஒருவரை விவாதத்தில் கலந்து கொள்ளச் சொன்னார். சீடர் மட்டும் அவர்களை தோற்கடித்தார். அவர்கள் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு சைவ மதத்தைத் தழுவியதாக நம்பப்படுகிறது.

இந்த இடத்துடன் தொடர்புடைய மற்றொரு புராணக்கதை அர்ஜுனன் - அர்ஜுனன் இந்த இடத்திற்குச் சென்று சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. சிவபெருமான் வேட்டைக்காரன் வடிவில் அவருக்கு தரிசனம் அளித்தார். அர்ஜுனன் இறைவனையும் தீர்த்தத்தையும் தன் பெயரால் அழைக்குமாறு இறைவனிடம் வேண்டினான். சிவபெருமான் அவரது விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார், எனவே இறைவன் "ஸ்ரீ பால்குண லிங்கம்" என்றும், அந்த தீர்த்தம் பால்குண தீர்த்தம் என்றும்.

வசிஸ்டர் முனிவரின் ஆலோசனையின்படி, அம்பரீஷா என்ற மன்னன் இங்குள்ள சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து குழந்தை பாக்கியம் பெற்றதாக நம்பப்படுகிறது. இதனால் இங்குள்ள இறைவன் "ஸ்ரீராஜ லிங்கம்" என்றும் அழைக்கப்படுகிறார்.

#பொது தகவல்:

கோயில் எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. இரண்டு பிரகாரத்துடன் ஐந்து நிலை ராஜ கோபுரம். மேற்கு பார்த்த சிவன். கோயிலின் இடது பக்கம் மகா மண்டபம், அர்த்த மண்டம் உள்ளது. இதையடுத்து கருவறையில் நான்கு யுகம் கண்ட பார்வதீஸ்வரர் அருளுகிறார். அம்மன் தெற்கு பார்த்து தனி சன்னதியில் உள்ளார். கோயில் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், மகாலட்சுமி, லிங்கோத்பவர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நடராஜர், சந்திரசேகரர், சமயக்குரவர்கள், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், துர்க்கை, அறுபத்து மூவர் ஆகியோர் உள்ளனர். சனிபகவான் தனி சன்னதியில் அருளுகிறார். இத்தல விநாயகர் சம்பந்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

#தலபெருமை:

ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது பட்டு பூஜை நடக்கிறது. பார்வதிதேவி காத்யாயன முனிவரின் மகளாக அவதரித்து, இத்தல இறைவனை வழிபட்டு அவருடன் கலந்தாள். பார்வதியம்மை என்றும், “சுயம்வர தபஸ்வினி’ என்றும் பெயர் பெற்று, திருமண வரம் தரும் நாயகியாக அருளுகிறாள். சிவபெருமான் இத்தலத்தில் கிராதமூர்த்தி என்னும் பெயரில் வேடன் வடிவில் அருளுகிறார். திருஞான சம்பந்தர் தன் அடியார்களுடன் இப்பகுதிக்கு வந்த போது, வேறொரு மதத்தை சேர்ந்தவர்கள் அவரைத் தடுத்தனர். இதனால் வருந்திய சம்பந்தர், இறைவனிடமே இதுபற்றி முறையிட்டு பாடினார். இறைவனின் கட்டளையால் தடுத்தவர்களின் தலையில் இடி விழுந்தது. ஆனாலும், அவர்கள் திருந்தவில்லை. “சாரிபுத்தன்’ என்பவரின் தலைமையில் சம்பந்தருடன் தங்கள் மதமே உயர்ந்தது என்றும், சைவம் தாழ்ந்தது என்றும் வாதிட்டனர். இதை மறுத்து சம்பந்தர் பேசி, அவர்களது வாதத்தை முறியடித்தார். பின்னர் அந்த தரப்பினரும் சைவர்களாக மாறினர்.

அம்பரீஷ ராஜா இத்தல இறைவனை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றார். இதனால் இத்தல இறைவனுக்கு “ராஜலிங்கம்’ என்ற பெயரும் உள்ளது. பல்குணன் வழிபட்டதால் “பல்குணன்’ என்றும், சூரியன் வழிபட்டதால் “பாஸ்கர லிங்கம்’ என்றும் திருநாமங்கள் உண்டு.

இத்தலம் கிருதயுகத்தில் பிரம்மவனம் என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் என்றும், துவாபர யுகத்தில் ஆனந்தவனம் என்றும், கலியுகத்தில் முக்தி வனம் என்றும் அழைக்கப்படுகிறது.

சோழநாட்டில் சரிவர மழை பெய்யாததால் பஞ்சம் ஏற்பட்டது. மன்னன் இத்தல இறைவனிடம் வேண்டினான். இதையேற்ற சிவபெருமான், பார்வதிதேவியுடன் உழவன் வேடத்தில் வந்து, நிலங்களில் விதை தெளித்துச் சென்றார். பயிர் சிறப்பாக விளைந்து பஞ்சம் நீங்கியது. இறைவனே விதை தெளித்து சென்றதால் இத்தலம் “திருத்தெளிசேரி’ ஆனது.

#கூவி அழைத்த பிள்ளையார்: 

சம்பந்தர் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை தரிசித்து விட்டு இத்தலத்தின் வழியாக சென்றார். அவர் இங்கிருந்த கோயிலைக் கவனிக்கவில்லை. உடனே இத்தலத்து பிள்ளையார் சம்பந்தரை பத்து முறை கூப்பிட்டு இங்குள்ள இறைவனை பாடும்படி கூறினார். அதன்பின் சம்பந்தர் பதிகம் பாடினார். பிள்ளையார் பத்து முறை கூவி அழைத்ததால் இத்தலம் “கூவிப்பத்து’ எனப்பெயர் பெற்றது. காலப்போக்கில் “கோயில் பத்து’ என மாறிவிட்டது.

#தல வரலாறு:

சூரியபகவான் தனது துணைவியான சாயா தேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால், அவள் மிகுந்த வருத்தமடைந்தாள். இதனை நாரதர் மூலம் அறிந்த அவளது தந்தை சூரியனை சபித்து விட்டார். இதனால், சூரியன் தனது ஒளியை இழந்து வருந்தி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி பார்வதீஸ்வரரை வழிபட்டான். இவனது வழிபாட்டிற்கு மகிழ்ந்த இறைவன் சாபத்தை நீக்கி அருளினார். சூரியன் வழிபட்டதால், இதனை “பாஸ்கரத்தலம்’ என்கின்றனர்.

#அமைப்பு:

இங்குள்ள சிவபெருமான் பார்வதி தேவியுடன் "ஸ்ரீ கிருதமூர்த்தி"யாக ஊர்வலம் செல்லும் சிலை மிகவும் அழகாகவும் தனித்துவமாகவும் உள்ளது. சிவபெருமான் தோளில் கலப்பையுடன் ஒரு விவசாயியின் வடிவத்திலும், பார்வதி தேவி விவசாயியின் மனைவியாகவும் காட்சியளிக்கிறார்.

இந்த கோவிலில், பார்வதி தேவி, விவசாயி வடிவில் இருக்கும் இறைவனை வழிபடுவது போன்ற "ஸ்தல புராணத்தின்" புராணக்கதைகளை சித்தரிக்கும் சில அழகிய திருவுருவங்கள். சூரியன் மற்றும் ஞானசம்பந்தர் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வணங்குகின்றனர். வேட்டைக்காரன் வடிவில் காணப்படும் சிவபெருமானை அர்ஜுனன் வழிபடுவதை சித்தரிக்கும் மற்றொரு நிவாரணம் உள்ளது. 

காரைக்கால் அம்மையார் பிறந்த தலமும், காரைக்காலில் இவளுக்கென்று தனி ஆலயமும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் "மாங்கனி திருவிழா" மிகவும் பிரபலமான திருவிழாவாகும். 

ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம் பலி பீடம் ஆகியவை உள்ளன. முன் மண்டபத்தில் இரு புறமும் ஓவியங்கள் காணப்படுகின்றன. கருவறைக்குச் செல்வதற்கு முன்பாக உள்ள வாயிலின் வலது புறத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், இடது புறத்தில் விநாயகரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக வலப்புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. கருவறையில் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். மூலவர் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, நடன கணபதி ஆகியோர் உள்ளனர். கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் பைரவர் சூரியன், நவக்கிரகம், அம்பாள் பூசை வேட ரூபம், பிடாரியம்மன், கிராதமூர்த்தி அம்பாள், 63 நாயன்மார் ஆகியோர் உள்ளனர். இச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

#திருவிழாக்கள்:

இந்த கோவிலில் தமிழ் மாதமான ஆவணியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) நெல் விதைப்பு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இங்கு கொண்டாடப்படும் மற்ற முக்கிய பண்டிகைகள் -

தமிழ் மாதமான மாசியில் (பிப்-மார்ச்) மகா சிவராத்திரி.

தமிழ் மாதமான புரட்டாசியில் (செப்டம்பர்-அக்டோபர்) நவராத்திரி

தமிழ் மாதமான மார்கழியில் (டிசம்பர்-ஜனவரி) திருவாதிரை மற்றும்

பங்குனி உத்திரம் தமிழ் மாதமான பங்குனியில் (மார்ச்-ஏப்ரல்).

பிரதோஷமும் தொடர்ந்து அனுசரிக்கப்படுகிறது.

கோவில் நேரங்கள்:

காலை 07:00 முதல் மதியம் 12:00 வரை மற்றும் மாலை 04:00 முதல் இரவு 08:30 வரை.

#சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: 
இங்கு சிவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது.

  ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் தென்பெண்ணை ஆறு ஆராத்தி விழா.

தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பெண்ணை ஆறாக பிறந்து, 430 கிமீ தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தமிழக ஆறுகள்
தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளத்திற்குப் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ2 ஆகும். மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்.*ஆரத்தி விழா பினாகினி என்னும் தென்பெண்ணை ஆற்றில் கங்கா ஆரத்தி விழா*

 *கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரத்தில் எழுந்தருளியுள்ள விஸ்வநாதபுரீஸ்வரருக்கு* அபிஷேக ஆராதனை செய்து கும்ப கலசம் கொண்டு சிவ வாத்திய முழங்க வீதி வழியாக சென்று தென்பெண்ணை ஆற்றில் கங்கா ஆரத்தி செய்யப்பட்டது
 இயற்கை சீற்றம் தற்பொழுது  தமிழகத்தின் தலைநகரம் தென் மாவட்ட பகுதிகளை ஆட்டி படைத்து கொண்டுள்ள இத்தருணத்தில் நமது கடலூர் மாவட்டத்தில் *பெரும்சீற்றும் (இன்று சுனாமி தினம்) ஏற்படாத சுபிச்சமான மழை பொழிய* சரியான வேண்டுதலுக்கு ஏற்ற இடமாக கருதி தென்பெண்ணை ஆற்றில் ஆரத்தி விழா செய்யப்பட்டது

 பொதிகை மலையில் தவத்தில் அமர்ந்திருக்கும் நந்தி தேவர் வெப்பம் தாலாது அன்னை பொன்னியம்மன் இடம் வேண்டுதல் வைக்க அன்னை அய்யன் சிவபெருமானிடம் கூறி நந்தி தேவரின் வெப்பத்தை போக்கும் மாரு கேட்டுக் கொள்ள அதன் பொருட்டு அய்யனின் ஜடாமுடியில் அமர்ந்திருக்கும் கங்கை பெருக்கெடுத்து சிவனுடைய பினாகினி என்னும் அம்பின் வழியாக நந்தி தேவர் தலையில் தீர்த்தம் விழா தீர்த்தமே நதியாக வெளிப்பட்டு பல மாவட்டங்களை கடந்து  வழியில் பல தீர்த்தங்களை உள்ளடக்கி *ராம லக்ஷ்மண தீர்த்தம் காசிப முனிவர் தீர்த்தம் கண்ணனார் தீர்த்தம் கபிலர் தீர்த்தம் சூரிய தீர்த்தம் எமன் தீர்த்தம்* என பல தீர்த்தங்களை உள்ளடக்கிய தென்பெண்ணை ஆறு கடலூர் மாவட்டம் வங்கக்கடலில் கலக்கின்றபடியால் இந்நதியில் நமது வேண்டுதலை பஞ்சபூதங்களின் சீற்றம் தாக்காத வண்ணம்   மார்கழி பௌர்ணமி நாளில் சிறப்பாக ஆரத்தி எடுக்கப்பட்டது

 இந்நிகழ்ச்சியினை *தமிழ் முதல் தேதி வழிபாட்டு குழுவும்*

 *புண்ணியர் பேரவை ஆன்மீக அறக்கட்டளை* ஆன்மீக அன்பர்களும்

 *விஸ்வநாதபுரம் கிராம மக்களும்*

 ஏற்பாடு செய்து அதற்கு துணையாக திருக்கண்டீஸ்வரம் *நடன பாதீஸ்வரர் ஆலய அர்ச்சகர் சேனாபதி குருக்கள்* வழிகாட்டுதலில் மிகச் சிறப்பாக இன்று நடைபெற்றது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

தொண்டவாடா அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் நேரங்கள், வரலாறு

Thondavada Agastheeshwara Swamy Temple or Sri Maragadhavalli Sameetha Shri Agastheeswara Swamy Temple or Mukkoti Temple is a sacred Siva temple that lies at the confluence of three rivers Swarnamukhi, Bhima and Kalyani in Chandragiri Mandal near the temple town Tirupati, Andhra Pradesh. The distance from Thondavada Siva temple is 11.2 km from Tirupati, RTC Bus stand and 11.3 km from Tirupati Railway station. The Siva lingam in this temple was installed by Agasthya Mahamuni and so it is called Agastheeswara lingam. This temple faces east and has almost all Parivara Devatas installed in well-built places like Lord Ganesha, Lord Subramaniyam.
The temple has three entrances and a grand compound wall. The Dwarapalakas at the entrance of the sanctum sanctorum are beautifully sculptured. They stand tall to add grandeur to the hall. Inside the second prakara, there is a separate shrine for Mother Parvati called here by the name of Vallimata. There is a tank outside the compound for the convenience of visiting pilgrims. The nearby village was named Tondavada by the kings of Chandragiri, as it was the place used as a rest house for visitors and keeping elephants also.

Just opposite the Aalaya (temple) and in the middle of the river there is a mandapam built. In this, you can see the beautiful statues of Balaji, Ayyappa, Ganapati, etc., installed. There is also a small shrine of Lord Sri Rama, Sita, Lakshmana and Anjaneya that is built in recent times near the tank. All these places are worth visiting.

Sri Agastheswara Swamy Temple 

This temple has an inscription engraved on its wall. It is dated in the 31st year of Kulothunga Chola, but this is not a foundation inscription. This inscription may be helpful at best in setting the latter limit i.e. 1100-01 AD for its foundation. This temple square on the plan has an ekatala and a square sikhara among the five types described above.Thondavada Agastheeshwara Temple

This temple may be classified under the type I represented by the Irugisvara temple at Yatavakili. The points of similarities are the square plan and the square sikhara, the absence of niches on the walls, niches with griva with nandis at the corners.

The most important difference, however, is the protruding niche on the griva where the sthambha and the kirthimukha are more prominent and the placement of sculpture in the niches is subdued, while in the temple at Yatavakili the figure is more prominent, the sthambha is almost absent and the kirthimukha is less pronounced.

The niche appears to be an integral part of the griva in the Irugisvara temple at Yatavakili unlike in the Agasthyeswara temple. This is later in date than the Chandramalliswara temple at Yatavakili which, though renovated in the time of Rajaraja III. It appears to have retained the features of its original construction during the time of Rajendra I.

In the River next to the temple, there is a footprint of Sri Venkateswara (Swami Vaari Padhaalu).

Tondavada Temple Uniqueness:

Unlike other temples, here Goddess Maragadhavalli appears to the left-hand side of Lord Agastheeshwara Swamy temple resembling the sitting posture of a Bride and a Bridegroom in marriage as per the Hindu religious practice. This could be visualized in most ancient temples only.

Instead of Navagrahas, the Sapthamathrukas were installed here. They are Kowmari, Vaishnavi, Vaarahi, Bramhi, Mahedri, Maheshwari and Chamundi. The same blessings are available to those who worship the Sapthamathrukas instead of Navagrahas. If one visits this temple could realize the sanctity of the ancient temple.Agastheeshwara Temple Thondavada

Agastheeshwara Thondavada (Mukkoti) Timings:
Morning: 6:00 AM to 1:30 PM
Evening: 3:30 PM to 7:30 PM

Mukkoti Temple Seva Timings:
Abhishekam to Parivar Gods – 6:00 AM to 7:00 AM
Abhishekam to Swamy Varu and Amma Varu – 7:00 AM to 9:00 AM
Naivedyam – 11:30 AM
Deeparadhana, Naivedyam – 4:30 PM
Naivedyam, Ekantha Seva – 7:30 PM

Thondavada Agastheeshwara Temple History:

According to legends, after Sri Srinivasa and Goddess Padmavati Amma marriage, sage Agasthya told them to stay in his ashram.

He performed Nityapoojas to Lord Shiva in this place, which is nothing more than the present “Mukkoti Agasthyeswara Swamy temple”.

The sage Agasthya did penance here for Lord Shiva and caused the source of the river “Suwarnamukhi” from there.

How to reach Sri Agastheshwara Swamy Temple by Bus:
A.P.S.R.T.C local buses to Chandragiri are available from Tirupati Bus station and Tirupati Railway Station.

AP Gov buses to Chittoor, Pakala, Kanipakam goes via Mukkoti.
T.T.D runs buses are also available for a nominal fee.
Buses which goes to Talakona, Ramgampeta, Piler, Bakarapeta goes via Kaloor Crossroad and from Kaloor Cross Mukkoti Temple is just 1.2 km, so you can reach the temple by Share Auto or Auto.

 517505.

H8WR+QCJ Mukkoti Agastheeswaralayam, Tirupati Rd, Thondavada, Tirupati, Andhra Pradesh 517505

 தொண்டவாடா அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் நேரங்கள், வரலாறு
 தொண்டவாடா அகஸ்தீஸ்வர ஸ்வாமி கோயில் அல்லது ஸ்ரீ மரகதவல்லி சமீத ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி கோயில் அல்லது முக்கொடி கோயில் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் கோயில் நகரமான திருப்பதிக்கு அருகிலுள்ள சந்திரகிரி மண்டலத்தில் ஸ்வர்ணமுகி, பீமா மற்றும் கல்யாணி ஆகிய மூன்று நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ள ஒரு புனித சிவன் கோயிலாகும்.  தொண்டவாடா சிவன் கோவிலில் இருந்து திருப்பதி, RTC பேருந்து நிலையத்திலிருந்து 11.2 கி.மீ மற்றும் திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து 11.3 கி.மீ தொலைவில் உள்ளது.  இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் அகஸ்திய மகாமுனியால் நிறுவப்பட்டதால் அகஸ்தீஸ்வர லிங்கம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது மற்றும் கிட்டத்தட்ட அனைத்து பரிவார தேவதைகளும் விநாயகர், சுப்பிரமணியம் போன்ற நன்கு கட்டப்பட்ட இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

 கோவிலுக்கு மூன்று நுழைவாயில்கள் மற்றும் பெரிய சுற்றுச்சுவர் உள்ளது.  கருவறையின் நுழைவாயிலில் உள்ள துவாரபாலகர்கள் அழகாகச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர்.  அவை மண்டபத்திற்கு பிரமாண்டம் சேர்க்கும் வகையில் நிமிர்ந்து நிற்கின்றன.  இரண்டாவது பிரகாரத்தில் வள்ளிமாதா என்ற பெயரில் பார்வதிதேவிக்கு தனி சன்னதி உள்ளது.  பக்தர்கள் வருகைக்கு வசதியாக வளாகத்திற்கு வெளியே ஒரு தொட்டி உள்ளது.  பார்வையாளர்கள் மற்றும் யானைகளை பராமரிக்கும் இடமாக இருந்ததால், அருகில் உள்ள கிராமம் சந்திரகிரி மன்னர்களால் தொண்டவாடா என்று அழைக்கப்பட்டது.

 ஆலயத்தின் (கோவில்) எதிரில், ஆற்றின் நடுவில் ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  இதில், பாலாஜி, ஐயப்பன், கணபதி போன்ற அழகிய சிலைகள் நிறுவப்பட்டுள்ளதைக் காணலாம்.  ஸ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோரின் சிறிய சன்னதியும் இந்த குளத்தின் அருகே சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது.  இந்த இடங்கள் அனைத்தும் பார்க்க வேண்டியவை.

 ஸ்ரீ அகஸ்தேஸ்வர ஸ்வாமி கோவில்

 இந்த கோவிலின் சுவரில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.  இது குலோத்துங்க சோழனின் 31 ஆம் ஆண்டைச் சேர்ந்தது, ஆனால் இது ஒரு அடித்தள கல்வெட்டு அல்ல.  இந்த கல்வெட்டு அதன் அடித்தளத்திற்கு பிந்தைய வரம்பை அதாவது 1100-01 கி.பி.  திட்டத்தில் உள்ள இந்த கோவில் சதுரம் மேலே விவரிக்கப்பட்ட ஐந்து வகைகளில் ஒரு ஏகாதலையும் சதுர சிகரத்தையும் கொண்டுள்ளது. தொண்டவாடா அகஸ்தீஸ்வரர் கோவில்

 யாதவக்கிளியில் உள்ள இருகீஸ்வரர் கோவிலின் நான் குறிப்பிடும் வகையின் கீழ் இந்த ஆலயம் வகைப்படுத்தப்படலாம்.  ஒற்றுமையின் புள்ளிகள் சதுரத் திட்டம் மற்றும் சதுர சிகரம், சுவர்களில் இடங்கள் இல்லாதது, மூலைகளில் நந்திகளுடன் க்ரீவா கொண்ட இடங்கள்.

 எவ்வாறாயினும், மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால், ஸ்தம்பமும் கீர்த்திமுகமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கிரிவாவின் மீது நீண்டு நிற்கும் இடமாகும், மேலும் சிற்பங்களின் இடங்கள் அடக்கப்படுகின்றன, அதே நேரத்தில் யாதவாகிலியில் உள்ள கோவிலில் உருவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஸ்தம்பம் கிட்டத்தட்ட உள்ளது.  இல்லை மற்றும் கீர்த்திமுகம் குறைவாக உச்சரிக்கப்படுகிறது.
 அகஸ்தியேஸ்வரர் கோவிலில் உள்ளதைப் போல் அல்லாமல் யாதவக்கிளியில் உள்ள இருகீஸ்வரர் கோவிலில் உள்ள கிரிவாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த இடம் தோன்றுகிறது.  மூன்றாம் இராஜராஜனின் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட யாதவகிளியில் உள்ள சந்திரமல்லீஸ்வரர் கோயிலை விட இது பிற்காலத்தில் உள்ளது.  முதலாம் இராஜேந்திரனின் காலத்தில் அதன் அசல் கட்டுமானத்தின் அம்சங்களை இது தக்கவைத்துக்கொண்டதாகத் தெரிகிறது.

 கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றில் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் (சுவாமி வாரி பாதாளு) கால் தடம் உள்ளது.

 தொண்டவாடா கோயிலின் தனிச்சிறப்பு:

 மற்ற கோயில்களைப் போலல்லாமல், இங்கு மரகதவல்லி தேவி அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலின் இடது புறத்தில் இந்து மத நடைமுறைப்படி மணமக்கள் மற்றும் மணமகன் அமர்ந்திருக்கும் தோரணையை ஒத்திருக்கிறார்.  பெரும்பாலான பழமையான கோவில்களில் மட்டுமே இதைப் பார்க்க முடியும்.

இங்கு நவக்கிரகங்களுக்குப் பதிலாக சப்தமாத்ருக்கள் நிறுவப்பட்டுள்ளனர்.  அவை கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, பிராமி, மஹேத்ரி, மகேஸ்வரி மற்றும் சாமுண்டி.  நவகிரகங்களுக்குப் பதிலாக சப்தமாத்ருக்களை வழிபடுபவர்களுக்கும் இதே புண்ணியம் கிடைக்கும்.  இந்த கோவிலுக்கு சென்றால் பழமையான கோவிலின் புனிதத்தன்மையை உணர முடியும்.அகஸ்தீஸ்வர கோவில் தொண்டவாடா

 அகஸ்தீஸ்வர தொண்டவாடா (முக்கொடி) நேரங்கள்:
 காலை: 6:00 AM முதல் 1:30 PM வரை
 மாலை: 3:30 PM முதல் 7:30 PM வரை

 முக்கொடி கோவில் சேவை நேரங்கள்:
 பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் - காலை 6:00 முதல் 7:00 மணி வரை
 ஸ்வாமி வருக்கும் அம்மாவுக்கும் அபிஷேகம் - காலை 7:00 முதல் 9:00 மணி வரை.
 நைவேத்யம் - காலை 11:30 மணி
 தீபாராதனை, நைவேத்தியம் - மாலை 4:30 மணி
 நைவேத்தியம், ஏகாந்த சேவை - இரவு 7:30 மணி

 தொண்டவாடா அகஸ்தீஸ்வரர் கோவில் வரலாறு:

 புராணங்களின் படி, ஸ்ரீ ஸ்ரீநிவாஸர் மற்றும் தேவி பத்மாவதி அம்மா திருமணத்திற்குப் பிறகு, அகஸ்திய முனிவர் அவர்களை தனது ஆசிரமத்தில் தங்கும்படி கூறினார்.

 இத்தலத்தில் சிவபெருமானுக்கு நித்யபூஜைகள் செய்தார், இது தற்போதுள்ள "முக்கொடி அகஸ்தியேஸ்வர ஸ்வாமி கோவில்" தவிர வேறில்லை.

 அகஸ்திய முனிவர் இங்கு சிவபெருமானை வேண்டி தவம் செய்து, அங்கிருந்து "சுவர்ணமுகி" என்ற நதியை உண்டாக்கினார்.

 பேருந்து மூலம் ஸ்ரீ அகஸ்தேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு செல்வது எப்படி:
 திருப்பதி பேருந்து நிலையம் மற்றும் திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சந்திரகிரிக்கு A.P.S.R.T.C உள்ளூர் பேருந்துகள் உள்ளன.

 சித்தூர், பாகால, காணிப்பாக்கம் செல்லும் ஆந்திர அரசு பேருந்துகள் முக்கொடி வழியாக செல்கின்றன.
 T.T.D இயங்கும் பேருந்துகளும் பெயரளவு கட்டணத்தில் கிடைக்கின்றன.
 தலகோனா, ராம்கம்பேட்டா, பைலேர், பக்கராப்பேட்டை செல்லும் பேருந்துகள் காலூர் குறுக்கு சாலை வழியாகவும், கலூர் கிராஸில் இருந்து முக்கொடி கோயிலில் இருந்து வெறும் 1.2 கி.மீ தொலைவில் உள்ளதால், ஷேர் ஆட்டோ அல்லது ஆட்டோ மூலம் கோயிலை அடையலாம்.

 தொண்டவாடா அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் முகவரி:
 ஸ்ரீ அகஸ்தேஸ்வர ஸ்வாமி கோவில்,
 முக்கொடி (தொண்டவாடா கிராமத்திற்கு அருகில்),
 திருப்பதி (கிராமப்புறம்),
 சித்தூர் மாவட்டம்,
 ஆந்திரப் பிரதேசம் - 517505.

ஓம்நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா. இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

Followers

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

_வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்_ 'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னக...