Sunday, March 31, 2024

திருநள்ளாறு ஸ்தல விருச்சம் - தர்பை

திருநள்ளாறு ஸ்தல விருச்சம் - தர்பை 
திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்தில் ஆதிபுரி என்பது பெயராகும்.அங்குள்ள சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராண வரலாறு சொல்கிறது.பிரம்மதேவர் பூஜித்த சிவனுக்கு தர்ப்பாரண்யேஸ்வரர் ‘’ என்பது பெயராகும்.இங்குள்ள ஸ்தல விருட்சம் தர்ப்பை ஆகும்.

இங்கு தர்பை மட்டுமே காடு போல் அமைந்துள்ளது இங்குள்ள லிங்கம் சுயம்புவாக தோன்றியதாகும்.முசுகுந்த சக்கரவர்த்தி ஆண்ட காலத்தில் அந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்துள்ளார்.இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு நளவிடங்கர்’’நளேஸ்வரம்’என்று பற்பல பெயரும் உண்டு.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம். 

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம் மற்றொரு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம் மற்றொரு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது. அதாவது, கொங்கண தேசத்தில் சிருங்கி பேரர் என்பவருக்கு ஹேமன் மற்றும் சுக்லன் என்று 2 மகன்கள் இருந்தனர். இருவரும் கவுதம முனிவரிடம் வேதம் கற்று வந்தனர். இவர்களின் அன்றாட வேலை என்னவென்றால், முனிவர் பூஜைக்கு தேவையான நீரும், யாகம் செய்ய குச்சிகளும் கொண்டு வந்து தருவது ஆகும். ஒருமுறை அவர்கள் இருவரும் கொண்டு வந்த நீரில் 2 பல்லிகள் இருந்ததை முனிவர் கண்டார். கோபமடைந்த முனிவர் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சாபமிட்டார். சீடர்களும் தங்களது தவறினை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர். முனிவரும் மனம் இறங்கி, ‘நீங்கள் இருவரும் அத்திகிரி மலையில் உள்ள வரதராஜரை நோக்கி தவம் செய்யுங்கள். அவர் உங்களை காப்பாற்றுவார். சாப விமோசனமும் கொடுப்பார்’ என்று கூறினார். சீடர்களும் அவ்வாறே செய்து சாப விமோசனம் பெற்றனர். அவர்கள் நினைவாக இந்த கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட 2 பல்லிகள் உள்ளன.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன். 

Saturday, March 30, 2024

பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் #ஸ்ரீநாராயண தீர்த்தர்

#ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்!

 
மண், மனை, வாழ்க்கை துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று, சாஸ்திரம் கூறுகிறது. இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.

பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் #ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற துறவி. ஒருநாள், இவரது சீடர்கள், ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர்.
'இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன...' என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார். அதற்கு சீடர்கள்,

 'குருவே... காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார். அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை...' என்றனர்.

உடனே நாராயண தீர்த்தர், 'இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம்...' என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.
இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார். வலியின் வேதனை தாளாமல், பகவானை நோக்கி, தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். 

அதன் விளைவாக, பெருமான், பூபதிராஜபுரம் எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, 'நாராயண தீர்த்தரே... நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய். அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய். அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய். அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய். நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய்.
'அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய்.
'நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன. அதே சமயம். உணவுப்பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது...' என்றார்.

இதன் பின், பகவான் கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, 'கிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் பாடல்களைப் பாடி, தன் துயரம் தீர்த்தார் நாராயண தீர்த்தர். தவறு செய்தவர்கள், அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இறைவன் அருளால் மட்டுமே, துயரம் தீரும் என்பதை விளக்கும் வரலாறு இது.

திருமாலை ஆண்டானும்,திருமலை ஆண்டானும்
இந்த மாசி மகத்தில் தான்,
உடையவரின் ஐந்து ஆசார்யர்களுள் ஒருவரான திருமலை ஆண்டான் என்னும் ஞானபூரணர் அவதரித்தார்.
திருமாலிருஞ்சோலையில் அவதரித்த இவரின் முன்னோர்களில் ஒருவரான
கண்ணுக்கினியான் என்பவர் காலத்தில்,மலையாள நாட்டில் இருந்த மாந்திரீகர்கள் சிலர் தங்கள் கண்களில் மாந்திரீக மையிட்டு
வந்து,அழகரின் சக்தியை அபகரிக்க திட்டமிட்டனர்.இதை அறிந்த கண்ணுக்கினியான் அவர்கள் பிரசாத த்தில் நிறைய மிளகுதூள்
தூவிவிட்டார்.அவர்கள்சாப்பிடும் போது கண்ணில் நீர் வழிந்து மை கரைந்து விட்டது.எனவே அவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இவ்வாறாக அவர் திருமாலைக் காப்பாற்றியதால் திருமாலை ஆண்டான் என்ற பெயர் ஏற்பட்டது.
அவர் சந்த தியினர் அனைவரும் இந்தப் பட்டப் பெயரை வைத்துக் கொண்டனர்.இன்றும் திருமாலை ஆண்டான் வம்சத்தவர் தான் அழகர் கோயில் புரோகிதர்களாக உள்ளனர்.
சித்திரைத் திருவிழாவில் அழகர் மதுரைக்குச் செல்லும் போது,அழகர் பல்லக்குக்கு முன்னால்.ஆண்டான் வம்சத்தினர் இன்னொரு பல்லக்கில்
செல்வார்கள்.அங்கு "ஆண்டான் பல்லக்கு முன்னே,அழகர் பல்லக்கு பின்னே" என்று ஒரு சொல்வடையும் உண்டு.
திருமலைத் தெய்வமான திருவேங்கடவரின் அடையாளங்களை மாற்றி,தவறான அர்த்தம் கூறி அவர் பெருமாளே அல்ல என்று பலர் வாதிட்டனர்.அந்த நேரத்தில் தேசிகேந்திரன் ராமானுஜர் தலையிட்டு,திருவேங்கடவர்,பெருமாளின் இலட்சினைகளான சங்கு,சக்கரங்களை ஏந்தச் செய்தார்(ஒரு நாள் இரவு அவர் பெருமாள் அல்ல,வேறு கடவுள் என்று சொன்னவர்களும்,ராமானுஜரும்
வேங்கடவரின் கருவறையில் வேறு,வேறு கடவுளரின் இலட்சினைகளையும்,சங்கு,சக்கரத்தையும் வைத்துப் பூட்டிவிட்டு வந்துவிட்டனர்.மறு நாள் காலையில் கதவைத் திறந்து பார்க்கும் போது,சீனிவாசப் பெருமாள் சங்கு,சக்கரங்களை ஏந்திக்கொண்டு பெருமாளாகச் சேவை சாதித்தார்.
இதனால் உடையவரை அப்பனுக்கு சங்காழி அளித்த ஆசார்யர் என்று கொண்டாடினர்.
எனவே திருமலைப் பெருமாளை நிலைநிறுத்திய உடையவரை
'திருமலை ஆண்டான்'என்றும் போற்றலாமே!! மேலும் கண்ணுக்கினியான் திருமாலை ஆண்டானின் முன்னோர் என்றால்,மனத்துக்கு இனியான்(ஶ்ரீராம பிரான்) இலட்சுமண முனியின் முன்னோர் என்றும் கொள்ளலாமேதிருமாலை ஆண்டானும்,திருமலை ஆண்டானும்
இந்த மாசி மகத்தில் தான்,
உடையவரின் ஐந்து ஆசார்யர்களுள் ஒருவரான திருமலை ஆண்டான் என்னும் ஞானபூரணர் அவதரித்தார்.
திருமாலிருஞ்சோலையில் அவதரித்த இவரின் முன்னோர்களில் ஒருவரான
கண்ணுக்கினியான் என்பவர் காலத்தில்,மலையாள நாட்டில் இருந்த மாந்திரீகர்கள் சிலர் தங்கள் கண்களில் மாந்திரீக மையிட்டு
வந்து,அழகரின் சக்தியை அபகரிக்க திட்டமிட்டனர்.இதை அறிந்த கண்ணுக்கினியான் அவர்கள் பிரசாத த்தில் நிறைய மிளகுதூள்
தூவிவிட்டார்.அவர்கள்சாப்பிடும் போது கண்ணில் நீர் வழிந்து மை கரைந்து விட்டது.எனவே அவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இவ்வாறாக அவர் திருமாலைக் காப்பாற்றியதால் திருமாலை ஆண்டான் என்ற பெயர் ஏற்பட்டது.
அவர் சந்த தியினர் அனைவரும் இந்தப் பட்டப் பெயரை வைத்துக் கொண்டனர்.இன்றும் திருமாலை ஆண்டான் வம்சத்தவர் தான் அழகர் கோயில் புரோகிதர்களாக உள்ளனர்.
சித்திரைத் திருவிழாவில் அழகர் மதுரைக்குச் செல்லும் போது,அழகர் பல்லக்குக்கு முன்னால்.ஆண்டான் வம்சத்தினர் இன்னொரு பல்லக்கில்
செல்வார்கள்.அங்கு "ஆண்டான் பல்லக்கு முன்னே,அழகர் பல்லக்கு பின்னே" என்று ஒரு சொல்வடையும் உண்டு.
திருமலைத் தெய்வமான திருவேங்கடவரின் அடையாளங்களை மாற்றி,தவறான அர்த்தம் கூறி அவர் பெருமாளே அல்ல என்று பலர் வாதிட்டனர்.அந்த நேரத்தில் தேசிகேந்திரன் ராமானுஜர் தலையிட்டு,திருவேங்கடவர்,பெருமாளின் இலட்சினைகளான சங்கு,சக்கரங்களை ஏந்தச் செய்தார்(ஒரு நாள் இரவு அவர் பெருமாள் அல்ல,வேறு கடவுள் என்று சொன்னவர்களும்,ராமானுஜரும்
வேங்கடவரின் கருவறையில் வேறு,வேறு கடவுளரின் இலட்சினைகளையும்,சங்கு,சக்கரத்தையும் வைத்துப் பூட்டிவிட்டு வந்துவிட்டனர்.மறு நாள் காலையில் கதவைத் திறந்து பார்க்கும் போது,சீனிவாசப் பெருமாள் சங்கு,சக்கரங்களை ஏந்திக்கொண்டு பெருமாளாகச் சேவை சாதித்தார்.
இதனால் உடையவரை அப்பனுக்கு சங்காழி அளித்த ஆசார்யர் என்று கொண்டாடினர்.
எனவே திருமலைப் பெருமாளை நிலைநிறுத்திய உடையவரை
'திருமலை ஆண்டான்'என்றும் போற்றலாமே!! மேலும் கண்ணுக்கினியான் திருமாலை ஆண்டானின் முன்னோர் என்றால்,மனத்துக்கு இனியான்(ஶ்ரீராம பிரான்) இலட்சுமண முனியின் முன்னோர் என்றும் கொள்ளலாமே

தஞ்சாவூர் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் (பசுபதிநாதர்)இராஜ_குருபகவான் திருக்கோயில் வரலாறு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான, 
வசிஷ்ட மகரிஷி குருபகவானை ராஜ குருவாக வழிபட்ட தலமான, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட, பிரளய காலத்தில் அழியாமல் திட்டாக தோன்றிய இடமான குரு பரிகார தலமான 
திட்டை என்னும் 
#தென்குடித்திட்டை 
#வசிஷ்டேஸ்வரர் (பசுபதிநாதர்)
#உலகநாயகியம்மை (சுகுந்த குந்தளாம்பிகை)
#இராஜ_குருபகவான் திருக்கோயில் வரலாறு:
நவக்கிரகங்களில் சுபக்கிரகமாகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குரு என்று போற்றப்படும் பிரகஸ்பதி, தன் பக்தியாலும் கடும் தவத்தாலும் நவக்கிரகத்தில் ஒரு கிரகமாகவும் சுபக்கிரகமாகவும் வரத்தைப் பெற்றார். அவருக்கு சிவனார் அளித்த வரம் இது என்று போற்றுகின்றன புராணங்கள்.

ஒருவரின் வாழ்க்கையில், குருவின் கடாட்சம் மிக மிக அவசியம். குருவின் பார்வை இருந்தால்தான் வாழ்வில் அடுத்தடுத்த முன்னேற்றம் கிடைக்கும். பார்வதிதேவி, சிவனாரைத் திருமணம் புரிந்துகொள்ள விரும்பினார். ஆனால், நினைத்த மாத்திரத்தில் அது ஈடேறவில்லை. குரு பலம் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் என்பதை உணர்ந்த உமையவள், குருவை நோக்கி தவமிருந்தாள்; குருவின் அருளைப் பெற்றாள். பிறகு சிவபெருமானை கரம்பற்றினாள் என விவரிக்கிறது சிவபுராணம்.

ஆலங்குடி, திருச்செந்தூர், பட்டம ங்கலம், தக்கோலம், திருவலிதாயம், இலம்பையங்கோட்டூர், கோவிந்தவாடி அகரம், முன்னூர் போன்ற சிறந்த குரு பரிகாரத் தலங்களின் வரிசையில் குரு பகவான் ராஜ குருவாக அருள்பாலிக்கும் தென் குடித்திட்டை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருத்தலமும் மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு பரிகாரத் தலமாகும்.

தஞ்சாவூருக்கு அருகில் திட்டை எனும் திருத்தலம் அமைந்திருக்கிறது. திட்டை என்றால் மேடு என்று அர்த்தம். திட்டை திருத்தலத்தில் தான், உமையவள் குருவின் பேரருளைப் பெற்றாள் என்கிறது ஸ்தல புராணம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர். வசிஷ்டர் முதலான ரிஷிகளும் முனிவர்களும் தவமிருந்து வரம் பெற்ற திருத்தலம் இது.

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், தாயார் உலகநாயகியம்மை.

இத்தலத்தில் சிவலிங்கத்தினை வசிட்ட மாமுனிவர் வழிபட்ட காரணத்தினால் மூலவர் விசிஷ்டேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு பசுபதிநாதர், பசுபதீஸ்வரர் என்ற வேறுப் பெயர்களும் உள்ளன. தாயார் உலகநாயகி சுகுந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை என்ற பெயர்கலால் அழைக்கப்படுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 15வது சிவத்தலமாகும்.

தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

ராஜகுரு என்று போற்றப்படும் குரு பகவான், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். நான்கு வேதங்களும் ஈசனை வழிபட்ட தலம் எனும் பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திட்டை. தென்குடித் திட்டை என்றும் சொல்லுவார்கள்.

திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய திருத்தலம் இது. காமதேனுப் பசு வழிபட்டு வரங்களைப் பெற்ற திருத்தலம் என்றும் ஜமதக்னி முனிவர் முதலானோர் தவமிருந்து பலன் பெற்றனர் என்றும் இந்தத் தலத்தைப் போற்றி சிலாகிக்கிறது ஸ்தல புராணம்.

*மூலவர்: வசிஷ்டேஸ்வரர் (பசுபதிநாதர்)

*அம்மன்: சுகுந்த குந்தளாம்பிகை (உலகநாயகியம்மை)

*தல விருட்சம்: முல்லை,வெண் செண்பகம்,செவ்வந்தி 

*தீர்த்தம்:   பசு தீர்த்தம்,சூல தீர்த்தம் (இதற்கு சக்கர தீர்த்தம் என்ற பெயரும் உண்டு)

*புராண பெயர்: திருத்தென்குடித்திட்டை 

*ஊர்: தென்குடித்திட்டை 

*மாவட்டம்: தஞ்சாவூர் 

*பாடியவர்கள்: அப்பர் சுவாமிகள் மற்றும் திருஞானசம்பந்தர் 

*திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்:

"முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.
ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே..

ஞானசம்பந்தர் தேவாரம்!

ரிக்,யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் ஈசனிடம் சென்று தங்களது குறைகளைக் கூறி கலங்கி நின்றன. இந்த வேதங்கள் ஈசனது திருவடிகளைப் பணிந்து வணங்கிய திருத்தலமே தென்குடித்திட்டை என்று தமது தேவாரப் பாடல் மூலம் பாமாலை சூட்டி நெகிழ்ந்துள்ளார் ஞானசம்பந்தப் பெருமான்.

“முன்னைநான் மறையவை முறை முறை குறையொடும்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் றன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.”

பொருள்:-

“நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையில் தொழுது போற்ற , உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன் திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து செந்நெல் விளையும் வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும்.”

ஈசனின் திருநாமங்கள்.

காவிரி நதி தீரத்தில் அமைந்த இத்தலத்தில் ராமபிரானின் குல குருவான வசிஷ்ட மகரிஷி குடில் அமைத்து இத்தல ஈசனைக் குறித்து தவம் இயற்றி வழிபாடுகள் செய்துள்ளார். இதனால் இத்தல இறைவனுக்கு வசிஷ்டேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. ஈசன் தானே தோன்றிய சுயம்பு மூர்த்தி என்பதால் “ஸ்ரீ சுயம்பூதேஸ்வரர்” என்றும் தேவலோகப் பசுவான காமதேனு வழிபட்டதால் “பசுபதீஸ்வரர்” என்றும் இத்தல இறைவன் வணங்கப்படுகின்றார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரத புரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற திருநாமங்களும் திட்டை ஈசனுக்கு வழங்கப்படுகின்றன.

இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, முருகன், நான்கு வேதங்கள், பைரவர், சூரியன், சனீஸ்வர பகவான், எமன், பரசுராமர், இந்திரன், ஆதிசேஷன், காமதேனு, வசிஷ்ட மகரிஷி, கௌதம மகரிஷி மற்றும் ஜமதக்னி மகரிஷி ஆகியோர் ஈசனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.சோழ மன்னன் விஜயன் என்பவன் இந்திரனைப் போன்ற உயர் நிலையினை அடைய அஸ்வமேத யாகத்தைப் போல நூறு மடங்கு பலன் கொண்ட ருத்ர பாசுபத யாகத்தை இத்தலத்தில் செய்துள்ளான்.

*ஈசனின் திருமேனி மீது நீர் சொட்டும் அற்புதம்!

திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்தில் சுயம்பு வடிவில் எழுந்தருளியிருக்கும் லிங்கத்தின் மீது எழுப்பப்பட்டுள்ள கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது தட்சனின் நட்சத்திரப் பெண்களை மணந்த சந்திரன், தினம் ஒரு கலையாகத் தேய்ந்து அழியும் சாபத்தினை தட்சனிடம் பெற்றான். தன் குறை தீர்க்க திங்களூர் சென்று கயிலாய நாதரை வணங் கிய சந்திரனுக்கு பாப நிவர்த்தி ஏற்பட்டது. ஈசனும் முற்றாமதியைத் தன் தலையில் சூடி பிறை சூடிய பெருமான் ஆனார்.

திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்குத் திட்டையிலும் தன் நன்றியறிதலைத் தெரிவிக்கின்றார் சந்திரன். தான் பெற்ற சாப விமோசனத் திற்கு நன்றிக்கடனாக திட்டை ஈசனின் கருவறை மீது சந்திரகாந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றார் சந்திரன். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும். இன்றும் ஒரு நாழிகைக்கு ஒரு முறை ஈசனின் திருமேனி மீது நீர் சொட்டும் அற்புதத்தை இத்தலத்தில் காணலாம். உலகின் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அதிசயம் இது.

*ஸ்ரீ மங்களாம்பிகை:

கோயிலின் முன் வலது புறம் தென் திசை நோக்கி அகிலமெல்லாம் அருளாட்சி செய்யும் உலகநாயகி அம்பிகை திருச்சந்நிதி அமைந்துள்ளது.

மகாபிரளய காலத்தில் இப்பூவுலகை காத்தருள ஈசனுடன் அம்பிகை இத்தலத்தில் தோன்றியதால் உலகநாயகி என்ற திருநாமத்துடனும், சகல மங்கலங்களையும் அருள்வதால் மங்களாம்பிகை மற்றும் மங்களேஸ்வரி என்ற திருநாமங்களுடன் அம்பிகை வணங்கப்படுகின்றார். “சுகந்த குந்தளாம்பிகை” என்ற திருநாமமும் அம்பிகைக்கு வழங்கப்படுகின்றது.

இந்த அம்பிகையின் அருள்திறன் குறித்த நிகழ்ச்சி ஒன்று இத்தல மக்களிடையே கூறப்படுகின்றது.

கும்பகோணத்தில் சோமநாதன் என்ற சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவரது இல்லத்திற்கு வந்த ஜோதிடர் ஒருவர் தங்களது மகள் இளம் வயதில் விதவையாகி விடுவாள் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்ட சோமநாதன் மிகவும் மனம் வருந்தினார்.

சிறிது காலத்திற்குப் பிறகு திட்டையில் உள்ள ஒருவருக்கும் சோமநாதன் மகளான மங்களாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வாழ வந்த நாள் முதல் திட்டை ஈசன் மற்றும் அம்பிகையை அனுதினமும் வழிபட்டு வருவதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார் மங்களா. தனது மாங்கல்ய பலம் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதே மங்களாவின் ஒரே பிரார்த்தனை.

ஒரு பௌர்ணமி நாளில் மங்களாவின் கணவனுக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. கோயிலுக்குச் சென்ற மங்களா ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டுத் தன் கணவனைக் காத்தருள வேண்டும் எனக் கண்ணீர் மல்கி வேண்டி நின்றாா். மங்களாவின் பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய அம்பிகை, அவளது முன் தோன்றி பிரசாதத்தை வழங்கி “இதனைக் காலன் வரும்போது அவன் வரும் திசையை நோக்கி எறி! உன் கணவன் காப்பாற்றப்படுவார்; நீயும் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்,” எனக்கூறி மறைந்தார். அம்பிகையின் ஆணைப்படி செய்தாள் மங்களா. காலன் திரும்பி ஓட நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள் மங்களா.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இத்தலத்தில் அம்பிகை ஈசனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அருட்காட்சி தருகின்றார். ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்ற கருத்திற்கு ஏற்ப மாதொரு பாகனுக்கு நிகராக திருக்கோலம் கொண்டுள்ளார் அம்பிகை.அம்பிகை சந்நிதியின் மேல் விதானத்தில் 12 ராசிகளுக்கான கட்டங்கள் உள்ளன. அந்தந்த ராசிக்காரர்கள் தங்களது ராசிக் கட்டத்திற்கு நேராகக் கீழே நின்று அம்பிகையை வணங்கிட சகல தோஷங்களும் நீங்கப் பெறுகின்றது என்பது ஐதீகம்.

*மஹா விஷ்ணு உருவாக்கிய புனித தீர்த்தம்.

ஸ்ரீ மஹா விஷ்ணு அறிதுயிலில் ஆழ்ந்திருந்த போது “மது, கைடபர்” என்ற இரு அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தினர். தேவர்கள் எம்பெரு மானான ஸ்ரீ மஹா விஷ்ணுவிடம் முறையிட்டனர். உறங்குவது போல் யோகு செய்த பெருமான் கண் விழித்து அசுரர்களை எதிர்த்துப் போர்புரிந்தார். அப்போது இளைப்பாற தன் சக்ராயுதத்தால் ஒரு புனித தீர்த்தம் ஏற்படுத்தி அதில் நீராடி ஈசனை வழிபட்டு அசுரர்களை அழித்தார் ஸ்ரீமஹாவிஷ்ணு. ஸ்ரீ மஹா விஷ்ணுவால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் “சக்கர தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் புனித தீர்த்தத்தோடு “பசு தீர்த்தம்” “சூல தீர்த்தம்” ஆகிய தீர்த்தங்களும் இத்தலத்தில் உள்ளன. பசு தீர்த்தத்தின் ஒரு துளி நீரானது நமது சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது என்றும் சூல தீர்த்தம் முக்தியைத் தரவல்லது என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

*குரு பாா்க்க கோடி நன்மை!

மகத்தான சுபபலம் கொண்ட குரு பகவான், தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பாா்க்கும் இடங்களைத் தன் பாா்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவா். மேலும், ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களைத் தமது பாா்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவா் குருபகவான். எனவே தான் “குரு பாா்க்க கோடி நன்மை” என்ற பழமொழி ஏற்பட்டது.பிரம்ம தேவனின் புதல்வரான குரு பகவான் திட்டை தலத்தில் அருள்பாலிக்கும் ஈசனுக்குக் கொன்றை மலா் மாலை அணி வித்து, முல்லை மற்றும் வெள்ளெருக்கு மலரால் அா்ச்சித்து வரம் பெற்றுள்ளாா். ராஜகுருவாக அருள்பாலிக்கும் இவர் சுவாமிக்கும் அம்பிகைக்கும் இடையில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கின்றார்.

சிவபெருமானைப் போன்று குருபகவானுக்கும் காளை வாகனம் உண்டு. தன் இரு கரங்களில் ஜப மாலையும் கமண்டலமும் கொண்டு முன் வலது கரத்தில் அபய முத்திரை காட்டியும் இடது கரத்தில் யோக தண்டம் ஏந்தியும் காட்சி தருகின்றார் குரு பகவான்.குரு பகவானுக்கு இத்தலத்தில் ஆண்டு தோறும் குரு பெயர்ச்சி விழாவும், லட்சார்ச்சனையும், குரு பரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தலத்தில் ஈசனையும் அம்பிகையையும் குரு பகவானையும் ஒருசேர வழிபட்டால் கல்விச்செல்வம், பொருட்செல்வம், மழலைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

*கோயில் வரலாறு:

திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. “ஓம்” என்ற மந்திர ஓடத்தில் இறைவன், இறைவி இருவர் மட்டும் ஏறி வர, அது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம் ஆகும். ஆதிகாலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. இறைவன், இறைவியுடன் விரும்பிக் குடியிருக்கும் திட்டுகள் குடித்திட்டை எனப்படும். அவற்றுள் ஒன்று சீர்காழி. மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் “ஓம்” என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் “ஹம்” என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் “ஞானமேடு” எனவும் “தென்குடி திட்டை” எனவும், சீர்காழி வடகுடி திட்டை எனவும் வழங்கலாயிற்று. வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து இத்தல ஈஸ்வரனை பூஜித்தமையால் இத்தல ஈஸ்வரன் “வசிஷ்டேஸ்வரர்” எனப் பெயர் பெற்றார். அம்பாள் “உலகநாயகியம்மை.”

திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆறு ஆதார ஞானம் அருளி அதற்கு மேல் ஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார். எனவே இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும், உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார். சூரியன், ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் இலிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்புகிறார். இதேபோல் உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரியன் வசிஷ்டேஸ்வர் திருமேனியில் படுகிறான். இவ்விரு காலங்களில் சுவாமிக்கு சூரிய பூஜை நடப்பது சிறப்பாகும். மூலஸ்தானத்தில், வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும். பிரகாரத்தில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் ஐந்து இலிங்கங்கள் உள்ளது.

குரு ஸ்தலங்களில் முக்கியமான தலம் இது. பொதுவாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் குருபகவான், இத்தலத்தில் நின்ற நிலையில் தனி சன்னதியில் ராஜகுருவாக இருக்கிறார். இங்கே வந்து தன்னை வேண்டுவோருவோருக்கு உடனடியாக சென்று உதவ வேண்டும் என்பதற்காக குருபகவான் நின்ற நிலையிலேயே அருள்பாலிக்கிறார் என்கின்றனர். நின்ற நிலையிலுள்ள குருவை வழிபட்டால் மேடைப் பேச்சில் பயம் இருக்காது என்பது நம்பிக்கை.
குருபெயர்ச்சியால் ஜாதக ரீதியாக பாதிக்கப்படலாம் என கருதுவோர் மட்டுமின்றி, கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள் இங்கு குருபகவானை வழிபடுகின்றனர். குருபகவானை, வசிஷ்டர் ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.

*புராணம்:

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ‘ஸ்ரீவயம்பூதேஸ்வரர்’ என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் ‘வசிஷ்டேஸ்வரர்’ என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் ‘பசுபதீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு. திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், திட்டை குரு பகவான் ‘ராஜகுரு’வாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர், வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு.

காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் - திட்டில் - அமைந்துள்ள ஊராதலின் திட்டை எனப் பெயர் பெற்றது.

  உலகப் பிரளய காலத்தில் இப்பகுதி திட்டாகத் தோன்றியதென்றும், இறைவன் சுயம்பாக வெளிப்பட்டு அருள்புரிந்தான் என்பதும் வரலாறு. இதனால் 'குடித்திட்டை' எனப் பெயர் பெற்றது எனவும் கூறுவர்.

  சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலின் ரதபுரி - தேரூர் என்றும்; காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும்; ரேணுகை வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் விளங்குகிறது.

*தொன்மை:

திட்டை எனும் சொல் மேடு எனவும் பொருள்ப்படும். பிரளய காலத்தில் இவ்வுலகம் நீரால் சூழப்பட்டபோது திட்டை மற்றும் சீர்காழி ஆகிய சிவதலங்கள் பாதிக்கப்படவில்லை. உலகப் பிரளய காலத்தில் இப்பகுதிகள் திட்டாகத் தோன்றியபடியால் சீர்காழியை வட திட்டை எனவும் வசிஷ்டேஸ்வரர் கோயில் பகுதியை தென் திட்டை அல்லது தென்குடித்திட்டை எனவும் அழைக்கலானார்கள். இறைவன் சுயமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மூலவர் சுயம்புத் திருமேனி. பிரமரந்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது நீர் சொட்டுவது இத்தலத்தில் வியப்புக்குரிய ஒன்றாகும். 25 மணித்துளிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சுவாமிமீது இன்றும் சொட்டுகிறது. தொன்றுதொட்டு, சுவாமியின் விமானத்துள் சந்திரகாந்தக்கல் இருந்து வருவதாகவும், 1922-ல் இவ்விமானத்தைப் பழுதுபார்த்துக் கட்டும்போது அக்கல் அப்படியே வைத்துக் கட்டப்பட்டுள்ளதாகவும், அதுவே சந்திரனின் ஈரத்தை வாங்கித் தேக்கி வைத்துச் சொட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

  
 இத்தல புராணம் சமஸ்கிருதத்தில் "தக்ஷிண குடித்வீப மஹாத்மியம்" என்ற பெயரில் உள்ளது. திரு. வி. பத்மநாபன் என்பவர் கிரந்தத்தில் உள்ள "சுயம்பூதேஸ்வரர் புராணத்தை" - இத்தலபுராணத்தை தமிழாக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

  
 (இத்திருக்கோயிலை 1926-ல் கற்கோயிலாகக் கட்டிய பலவான் குடிகிராமம் ரா. கு. ராம, இராமசாமி செட்டியாரின் உருவம் அவர் மனைவியுடன், கைகுவித்து வணங்கும் நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.)

*சிறப்புக்கள்:

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் காலையில் சூரியபகவான் ஒளி இந்த இறைவன் மீதுபடுகிறது.
இறைவன் மீது 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் விழுகிறது. இக்கோயிலில் சிவலிங்க வடிவில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் உள்ள உட்புற கோபுரத்தில் சந்திர காந்தக் கல் வைத்து கட்டப்பட்டுள்ளத நம்பப்படுகின்றது. 24 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த சந்திர காந்தக்கல்லால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கல்லிலிருந்து ஒரு சொட்டு நீராய் இறைவன் வசிஷ்டேஸ்வரர் மீது விழுகிறதாக கூறப்படுகின்றது. சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கிய சிவபெருமான் தன்னுடைய தலையில் சந்திரனை வைத்துக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக சந்திரன் இவ்வாறு 24 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சொட்டு நீரை இந்த இறைவன் மீது விழுமாறு செய்கிறார் என தொன்நம்பிக்கை (ஐதிகம்).
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது.

*திட்டைத் தல முருகன்.

திட்டை என்பது ஞானமேடு ஆகும். மனித உடலானது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி,ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகன் தன்னை வணங்குபவர்களுக்கு இந்த ஆறு ஆதாரங்களையும், அதற்கும் மேலான ஞானமாகிய மெய்யுணர்வையும் அளித்துப் பேரானந்தப் பெருவாழ்வில் நிலைபெற அருளுகின்றார். எனவே திட்டை முருகப்பெருமான் உடலால் தென்குடியாகவும், உயிரால் ஞான மேடு எனப்படும் திட்டையாகவும் அருள்பாலிக்கின்றார்.

*திருக்கோயிலின் பழைமை.

பத்தாம் நூற்றாண்டு மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகள் இத்தலத்தில் உள்ளன. குலோத்துங்க சோழ மன்னரால் இத்தலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என இத்தலத்தின் கல்வெட்டுகளிலிருந்து அறியமுடிகின்றது. 1922 ஆம் ஆண்டில் செட்டி நாட்டைச் சார்ந்த நகரத்தார் குடும்பத்தின் ஸ்ரீ ராமசாமி செட்டியார் அவர்களால் இத்தலம் முழுவதும் கற்றளியாக புனரமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இத்தலம் சிறப்பாக நிர்வாகம் செய்யப் பட்டு வருகின்றது.

*கோவில் அமைப்பு:

இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவதுவாக சுயம்பு லிங்கமாக காணப்படுகின்றார். முதல் பிரகாரமாக மூலவர் வசிஷ்டேஸ்வரர் கோவில் கிழக்கே நோக்கியபடி அமைந்துள்ளது. இராஜகோபுரம் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. இறைவன் வசிஷ்டேஸ்வரர் சிவலிங்க வடிவில் காணப்படுகின்றார். முன்னால் செப்பினாலான நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. கொடிமரம் கருங்கல்லால் செதுகபட்டுள்ளது. இறைவி தெற்கு நோக்கி நின்ற வடிவில் காணப்படுகின்றார் கோவிலின் முன்னால் செப்பால் ஆன நந்தி மற்றும் பலிபீடம் உள்ளது. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. குரு பகவானிற்கு தெற்கு நோக்கி தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். தீர்த்தம் இக்கோவிலின் முன்புறம் உள்ளது. சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலாகவும் இது விளங்குகின்றது.

நவக்கிரகங்களில் சூரியன்-ராஜா. சந்திரன்- ராணி. செவ்வாய் கிரகம் - சேனாதிபதி. புதன் - இளவரசர். குரு பகவான் - ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளனர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும், குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமணத்தடை உள்ளவர்களும் இதர கிரக தோஷங்களால் துன்பப் படுபவர்களும் இத்தலத்தில் வழிபாடுகள் செய்ய குருபகவான் அனுக்ரஹம் செய்கின்றார். சஞ்சலத்தோடு வரும் அன்பர்களின் மன இறுக்கங்களை நீக்கி மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றார் இத்தலத்தின் குரு பகவான். அவிட்ட நட்சத்திர நாட்களில் திட்டை குரு பகவானை வணங்குவது மிகவும் சிறப்பாகும்.

தென்குடித்திட்டை திருத்தலம் சென்று ஈசனையும், ராஜ குருவையும் வணங்கி குருவருளும் ஈசனின் திருவருளும் ஒருங்கே பெற அன்பர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இத்தலம் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 12 .30 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.மேலும் விபரங்களுக்கு இத்தலத்தின் அா்ச்சகா் திரு கல்யாண குருக்கள் அவா்களை
9894186885 மற்றும் திருக்கோயில் கணக்காளா் திரு மணி அவா்களை 9843965864 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

*திருத்தலம் செல்லும் வழி:

தஞ்சாவூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் திட்டை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வசிஸ்டேஸ்வரர் திருத்தலம். தஞ்சையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. தஞ்சையிலி ருந்து திருக்கருகாவூர் செல்லும் பேருந்து வழித்தடத்தில் திட்டை உள்ளது. தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரம் என்ற பகுதியிலிருந்து திட்டைக்குச் சாலை பிரிந்து செல்கின்றது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Friday, March 29, 2024

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு பரக்கலக்கோட்டை அருள்மிகு பொதுஆவுடையார் ஆலயம்.



*தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு பரக்கலக்கோட்டை அருள்மிகு பொதுஆவுடையார் ஆலயம்.*
*மூலவர்:பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்)*

*ஆகமம்/பூஜை:சிவாகமம்*

*பழமை:500 வருடங்களுக்குள்*

*ஊர்:பரக்கலக்கோட்டை*

*மாவட்டம்:தஞ்சாவூர்*

*மாநிலம்:தமிழ்நாடு*

*திருவிழா:*

*கார்த்திகை சோமவாரம், தைப்பொங்கல்.*

*தல சிறப்பு:*

*பகலில் கோயில் திறக்காமல் திங்கட்கிழமை அன்று மட்டும் நள்ளிரவில் கோயில் திறக்கப்படுகிறது. இங்கு அம்பாள் கிடையாது. சிவன் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார்.தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*நிர்வாக அதிகாரி,அருள்மிகு பொதுஆவுடையார் திருக்கோயில்,பரக்கலக்கோட்டை- 614 613 தஞ்சாவூர் மாவட்டம்.*

*போன்:*

*+91- 4373 - 283 295, 248 781.*

*பொது தகவல்:*

*சுவாமிக்கென தனி விமானம் எதுவுமில்லை. மரத்தின் வடிவில் அருளும் சிவபெருமானுக்கு, மரத்தின் இலைகளும், கிளைகளுமே விமானமாக இருக்கிறது. மூலஸ்தானத்திலேயே சுவாமிக்கு முன்புறத்தில் கஜலட்சுமி காட்சி தருகிறாள். அருகிலேயே இரண்டு யானைகளும் வைக்கப்படுகிறது.*

*சிவனுக்கு பூஜை செய்யும்போது, இவளுக்கும் சேர்த்தே பூஜைகள் நடக்கிறது. இங்கு சிவனே பிரதான மூர்த்தியாக இருப்பதால், இங்கு அம்பிகை, சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர், பைரவர் என எந்த பரிவார மூர்த்திகளும் இங்கு கிடையாது. கோயிலுக்கு வெளியில் வீரசக்தி விநாயகர், பெத்த பெருமாள் (காவல் தெய்வம்) சன்னதி மட்டும் இருக்கிறது. இந்த விநாயகர் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். வான் கோபர் அலங்காரத் துடனும், மகா கோபர் துறவி கோலத்திலும் ஒரு புளிய மரத்தின் கீழ் சிலை வடிவில் இருக்கின்றனர்.*

*திங்கட்கிழமையன்று நள்ளிரவில் பூஜை முடிந்து தரிசனத்திற்காக சன்னதி நடை திறந்த பின்பு, சுவாமியை தரிசிக்க வந்த ஊர்க்காரர்களில் யார் வயதில் முதிர்ந்தவராக இருக்கிறாரோ அவருக்கு, சிவனுக்கு அபிஷேகம், பூஜை செய்த பிரசாதங்கள் கொடுத்து முதல் மரியாதை செய்கின்றனர். அப்போது அவரிடம் ரூ.1 மட்டும் காணிக்கையாக வாங்குகிறார்கள். இதனை, ""காளாஞ்சி' என்கிறார்கள்.*

*நள்ளிரவில் சுவாமிக்கான அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, பக்தர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த சந்தனம், மற்றும் வெற்றிலை, பாக்கு தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. கோயில் சார்பில் பணியாளர் ஒருவர் இவ்வாறு பக்தர்களுக்கு கொடுக்கிறார். அதன்பின், விடிய,விடிய அன்னதானம் நடக்கிறது.*

*பிரார்த்தனை:*

*இங்கு அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற வேண்டிக்கொள்ளலாம்.*

*நேர்த்திக்கடன்:*

*பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.*

*தலபெருமை:*

*ஆலமர சிவன்:*

*ரூபமாகவும் (வடிவம்), அரூபமாகவும் (வடிவம் இல்லாமல்), அருவுருவமாகவும் (லிங்கம்) வழிபடப்பெறும் சிவபெருமான், இத்தலத்தில் வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார். எனவே, இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோயில் திறக்கப்படும்போது, வெள்ளால மரத்தின் முன்பக்கத்தில் ஒரு பகுதியில் மட்டும் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்காரம் செய்கின்றனர். அப்போது சன்னதிக்குள் மரத்தை காண முடியாதபடி சுற்றிலும் வெண்ணிற துணியால் மறைத்து விடுகிறார்கள். நமக்கு லிங்க சொரூபம் மட்டுமே தெரிகிறது.*

*மூலஸ்தானத்திற்குள் ஆல மரத்திற்கு முன்பாக சிவனின் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. சிவபெருமான், முனிவர்களுக்கும் காட்சி தந்ததன் அடையாளமாக பாதம் வைக்கப்பட்டிருக்கிறது.*

*நள்ளிரவு மட்டும் தரிசனம்:*

*இக்கோயிலில் பகலில் நடை திறப்பது கிடையாது. ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமையன்று மட்டும் இரவில் நடை திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும்.*

*அன்றிரவில் 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடக்கிறது. அப்போது சுவாமியை தரிசிக்க முடியாதபடி திரையிடப்படுகிறது.*

*அதன்பின் 11.30க்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னதிகளில் பூஜை நடத்திவிட்டு, பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் சுவாமி சன்னதி திறக்கப்படுகிறது. அப்போதுதான் சுவாமியை தரிசிக்க முடியும்.*

*பக்தர்களின் தரிசனம் முடிந்தபின்பு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடை சாத்திவிடுகின்றனர்.*

*தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து, மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம். இதுதவிர, சிவனுக்குரிய சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுவதில்லை.*

*குரு தலம்:*

*சிவனின் குரு அம்சமான தெட்சிணாமூர்த்தி, சிவன் கோயில்களில் கோஷ்ட சுவரில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். இத்தலத்தில் சுவாமியே ஆலமரத்தின் வடிவில் அருளுகிறார். எனவே, இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். இங்கு சிவனாக கருதப்படும் ஆலமரத்தின் இலையே பிரதான பிரசாதமாக தரப்படுகிறது. பக்தர்கள் இந்த இலையைக் கொண்டு சென்று வீட்டில் வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதும், விவசாய நிலங்களில் இட்டால் விவசாயம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.*

*இக்கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நேரத்தில், சுவாமி சன்னதி கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னதி கதவையே சுவாமியாக பாவித்து மாலைகள் சாத்தி வழிபட்டு, பிரகாரத்தில் இருந்து ஆலமரத்தை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இம்மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.*

*விளக்குமாறு காணிக்கை:*

*இக்கோயிலில் பெண்கள் முடி வளருவதற்காக விளக்குமாறை காணிக்கையாக செலுத்துகின்றனர். தென்னங்கீற்றில் உள்ள குச்சிகளை, தங்களது கையால் விளக்குமாறாக செய்து இவ்வாறு காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் தென்னங்கீற்று போலவே முடி வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கிடைக்கும் விளக்குமாறுகளே ஆயிரக்கணக்கில் குவிந்துவிடும் என்கிறார்கள். இத்தலத்தில் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறுவதாக நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறப்பெற்றவர்கள் இக்கோயிலுக்கு அதிகளவில் காணிக்கை செலுத்துகின்றனர்.*

*கார்த்திகை சோமவாரத்தின்போது பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, பயிறு, எள் முதலிய அனைத்து தானியங்களையும், வீட்டு உபயோகப்பொருட்கள், வஸ்திரங்கள், அலங்கார பொருட்கள் என எளிய தவிட்டில் (நெல் உமி) இருந்து தங்கக்காசு வரையிலும் அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு கோயிலுக்கு செலுத்தப்படும் காணிக்கைகள் பெறுவதற்காகவே, பிரம்மாண்டமான பந்தல்கள் போடப்படுகிறது.*

*கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும். சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும். வெண் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மத்தியஸ்தம் செய்ததால் வெண் ஆலமரமே ஸ்தல விருச்சமாக வணங்கப்படுகிறது. மர த்தின் வேரில் சந்தனம் பூசி, அதன் மேல் நெற்றிப்பட்டம், நாசி, திருவாய், முன்புறம் திருவாய்ச்சி அமைத்து சிவலிங்க வடிவில் இருப்பதை பக்தர்கள் வழிபடுவர். ஒவ்வொரு வருடமும் கடைசி சோமவார தினத்தில் நள்ளிரவு சரியாக 12 மணியளவில் விசேஷ பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு. தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்படும். இவ்விழாவில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் கலந்துக்கொண்டு, தங்கள் கொண்டு வரும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தி வழிபடுவர்கள். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் , பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பரக்கலக்கோட்டை கிராமவாசிகள் செய்வார்கள்.*

*தல வரலாறு:*

*வான் கோபர், மகா கோபர் என்ற இரு முனிவர்களுக்கு ""இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?'' என சந்தேகம் வந்தது. தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி இருவரும் சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவர் இத்தலத்தில் காத்திருக்கும்படி சொல்லி, தான் அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அதன்படி இத்தலம் வந்த இரு முனிவர்களும் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தனர்.*

*சுவாமி ஒரு கார்த்திகை மாத, திங்கட்கிழமையன்று சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு இங்கு வந்து ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று இருவருக்கும் பொதுவாக, ""இல்லறமாயினும், துறவறமாயினும் நல்லறமாக இருந்தால் இரண்டுமே சிறப்பு,'' என்று பொதுவாக தீர்ப்பு கூறிவிட்டு, பின்பு வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். தீர்ப்பு சொல்வதற்காக வந்த சிவன் என்பதால் இவர் "பொது ஆவுடையார்' என்றும், "மத்தியபுரீஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*பகலில் கோயில் திறக்காமல் திங்கட்கிழமை அன்று மட்டும் நள்ளிரவில் கோயில் திறக்கப்படுகிறது. இங்கு அம்பாள் கிடையாது. சிவன் வெள்ளால மர வடிவில் காட்சி தருகிறார். தைப்பொங்கலன்று ஒருநாள் மட்டும் அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரையில் நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சம்.*

*அமைவிடம்:*

*தஞ்சாவூரில் இருந்து (50 கி.மீ.,) பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து 12 கி.மீ., சென்றால் பொதுஆவுடையார் கோயிலை அடையலாம்.*
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

*ஸ்ரீ_நரசிம்மர்_வழிபாடு:-*
*1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.*

*2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு     8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.*

*3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி,    உயர் நிலையைப் பெற்றன.*

*4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.*

*5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.*

*6. நரசிம்மருக்கு.   நர சிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன்,* *சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.*
.
*7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக* *கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.*

*8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.*
*9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.*

*10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது.*
.
*11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.*

*12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.*

*13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியததில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.*

*14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.*

*15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.*

*16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.*

*17. "எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.*

*18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.*

*19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.*

*20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.*

*21. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.*

*22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறியுள்ளார்*.

*23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.*

*24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.*

*25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.*

*26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.*

*27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.*

*28. ராமாயணம், மகாபாரதம்,   பாகவதம், 18 புராணங்கள்,             உப-புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.*

*29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.*

*30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.*

*31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.*

*32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.*

*33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.*

*34. நரசிம்மரை வழிபடும் போது "ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.*

*35. "அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.*

*36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.*

*37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.*

*38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.*

*39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.*

Wednesday, March 27, 2024

நடனபுரீஸ்வரர் கோவில், தாண்டந்தோட்டம், தஞ்சாவூர்


 நடனபுரீஸ்வரர் கோவில், தாண்டந்தோட்டம், தஞ்சாவூர்
 நடனபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுகாவில் தண்டந்தோட்டம்தூ கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும்.  மூலவர் நாதனபுரீஸ்வரர் என்றும், தாயார் சிவாகம சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார்.  இக்கோயிலைப் பற்றி தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இக்கோயில் தேவார வைப்பு ஸ்தலம் என்று கருதப்படுகிறது.  பழங்காலத்தில் இந்த கிராமம் நர்த்தனபுரி, நர்த்தனபுரம், தாண்டவபுரி என்றும் அழைக்கப்பட்டது.  இக்கோயில் அரசலாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  இக்கோயில் திருமண பரிகார ஸ்தலம் என்று கருதப்படுகிறது.

 புராணக்கதைகள்

 அகஸ்திய முனிவர் திருமண கோலத்தில் சிவனை தரிசனம் செய்தார்:

 சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் புனிதமான திருமணம் கைலாச மலையில் நடந்தபோது, ​​​​அனைத்து தேவர்களும் துறவிகளும் அதைக் காண வந்தனர்.  எனவே, பூமியின் எடை சமநிலை சீர்குலைந்தது, இதனால் வடக்கு அரைக்கோளம் எழுந்தது, மேலும் தெற்கு அரைக்கோளம் கீழே சரியத் தொடங்கியது.  பூமியை சமப்படுத்த சிவபெருமான் அகஸ்தியரை தெற்கு நோக்கி அனுப்பினார்.  அகத்தியர் தெய்வீக திருமணத்தைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தார், எனவே சிவபெருமான் அகஸ்தியருக்கு அவர் விரும்பும் இடத்தில் திருமண வடிவில் தரிசனம் செய்வதாக உறுதியளித்தார்.  அகஸ்தியரின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் இக்கோயிலில் காத்யாயினி சமேத கல்யாண சுந்தரராக தரிசனம் தந்தார் என்பது நம்பிக்கை.  இறைவனும் அவருக்கு இரண்டு வரங்களை அருளினார்.  அதன்படி இங்குள்ள நடனபுரீஸ்வரரை வழிபடுபவர்களின் திருமணத்தடைகள் நீங்கி வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.

 தாண்டந்தோட்டம்:

 இந்த கிராமம் முன்பு தாண்டவர் தோட்டம் (வயல்களுக்கு மத்தியில் நடனமாடும் இறைவன்) என்று அழைக்கப்பட்டது, இது இப்போது தாண்டந்தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

 மணி கட்டிய விநாயக:

 சிதம்பரத்தில் அவர் ஆடிய சிவனின் நடனத்தைக் காண சிவ பக்தர்கள், அகஸ்திய முனிவர் மற்றும் பிற முனிவர்கள் விரும்பினர்.  சிவபெருமான் விருப்பத்தை ஏற்று, பசுமை நிறைந்த இந்த கிராமத்தில் நடனமாடத் தொடங்கினார்.  அவர் நடனமாடிக்கொண்டிருந்தபோது, ​​கீழே உள்ள மைதானத்தில் சலங்கையில் (நடனத்தின் போது அணியும் சங்கு) மணிகள் சிதறிக் கிடந்தன.  விநாயகப் பெருமான் மணிகளை ஒவ்வொன்றாகச் சேகரித்து மீண்டும் தந்தையின் காலில் கட்டினார்.  மணி கட்டிய விநாயகர் என்று அழைக்கப்படும் விநாயக கோவில் (சிவன் கோவிலில் இருந்து அரை கிலோமீட்டர்) உள்ளது.

 நால்வருக்கு சிவன் தரிசனம்:

 இங்குள்ள அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிவபெருமான் தரிசனம் தந்தார்.

 மற்ற பெயர்கள்:

 இந்த இடம் நர்த்தனபுரி, நர்த்தனபுரம், தாண்டவபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

 கேரளாவின் பாலக்காட்டில் உள்ள கிராம மக்களுக்கு குல தேவதா:

 சோழ நாட்டின் இந்தப் பகுதியில் வாழ்ந்த சுமார் 3,000 பிராமணர்கள் ஒருமுறை கேரளாவின் பாலக்காடு பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.  அவர்கள் புறப்படும்போது, ​​இத்தலத்தில் இருந்து சாளக்கிராம இறைவன் மற்றும் அன்னையின் சிலைகள் மற்றும் மண் ஆகியவற்றைச் செய்தார்கள்.  கடைசியாக பாலக்காடு அருகே தேங்காய்க்காட்டில் குடியேறினர்.  தங்கைக்காடு கிராமத்தில் சிலைகளை நிறுவி, அடுத்தடுத்த தலைமுறையினர் கோயிலைக் கட்டினர்.  அவர்கள் காலப்போக்கில் தங்கள் குல தெய்வத்தை மறந்தனர்.  அவர்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு திடீரென நோய்வாய்ப்பட்டு மரணம் ஏற்பட்டது.

 இந்த சோக நிகழ்வுகளால், கிராம மக்கள் ஒரு பகுதியினர் தேவ பிரசன்னத்தை பார்க்க சென்றனர்.  காஞ்சி மஹாபெரியவாவைச் சந்தித்து தங்கள் குறைகளைச் சொல்ல இன்னும் சிலர் காஞ்சிக்கு வந்தனர்.  மஹாபெரியவா அவர்களின் குல தெய்வத்தைப் பற்றி ஒரு வடிவில் கூறினார்.  கிழக்கிலும் தெற்கிலும் நுழைவாயில்களைக் கொண்ட ஒரு ஆலயத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தார்.  ஆனால் தெற்கு வாசல் பிரதான நுழைவாயில்.  கோவிலில் வில்வ மரமும், கோவில் கிணறும் நுழையும் உடனேயே இருக்கும்.

 இந்த விளக்கம் தந்தந்தோட்டம் கோயிலுடன் சரியாகப் பொருந்துகிறது.  அதே சமயம் தேவ பிரசன்னமும் இதையே தெரிவித்தார்.  இந்த தகவலை அறிந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  பின்னர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டனர்.  மேலும், 1965ல், மஹாபெரியவா, தண்டோட்டத்திற்கு வந்து, அங்கேயே தங்கி, சதுர் மாச விரதத்தை நடத்தி, சிவனை வழிபட்டார்.

 வரலாறு

 இந்த கோவில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டது.  கி.பி 8ஆம் நூற்றாண்டின் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் இக்கோயிலுக்குப் பெருமளவு பங்களித்துள்ளார்.  பிற்காலச் சோழர்களும் இந்தக் கோயிலைப் புதுப்பித்தனர்.  பல்லவர் காலத்தைச் சேர்ந்த "செப்பேடுகல்" (பண்டைய காலத்தின் பித்தளை தோல்கள்) தண்டந்தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  பல்லவ, சோழர் காலத்தில் இவ்வூர் மகத்தான பெருமை பெற்றிருந்தது என்பதை இந்தச் செப்பேடுகள் தெளிவாக விளக்குகின்றன.  கி.பி 8 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் பற்றி இந்த பித்தளைத் துண்டுகள் தெரிவிக்கின்றன.

 ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோயில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது என்பதும் இந்தச் செப்பேடுகள் மூலம் அறியப்படுகிறது.  ஒருமுறை கோவிலில் ஒரு பெரிய நடராஜர் சிலை இருந்தது.  ஒருமுறை பாதூர், சிவபுரம், தண்டந்தோட்டம் ஆகிய இடங்களில் உள்ள நடராஜர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.  பெரும் தேடுதலுக்குப் பிறகு பாதூர் மற்றும் சிவபுரம் நடராஜர் சிலைகள் மட்டும் மீட்கப்பட்டன.  தண்டோட்டம் நடராஜர் சிலையை நிரந்தரமாக இழந்தது.  காஞ்சி மஹாபெரியவா இந்த கோவிலுக்கு சிறிய அழகான நடராஜர் சிலையை பரிசாக அளித்துள்ளார்.

கோவில்

 கோயில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.  ராஜகோபுரம் இல்லை.  கோவிலுக்கு கிழக்கு மற்றும் தெற்கு பக்கங்களில் நுழைவாயில்கள் உள்ளன.  பிரதான நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது.  தாயார் சன்னதி நுழைவாயிலுக்குப் பிறகு முன் மண்டபத்தில் அமைந்துள்ளது.  சன்னதி கிழக்கு நுழைவாயிலுக்குப் பிறகும், அன்னை சன்னதியின் இடதுபுறமும் அமைந்துள்ளது.  துவஜ ஸ்தம்பம் இல்லை.

 கருவறையை நோக்கி நந்தியும் பலிபீடமும் மட்டுமே காணப்படுகின்றன.  கருவறை மற்றும் தாயார் சன்னதி இரண்டும் முன் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன.  மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் இரண்டு பைரவர் சிலைகள் உள்ளன.  மூலஸ்தான தெய்வம் நாதனபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் மற்றும் கிழக்கு நோக்கி இருக்கிறார்.  அவர் கருவறையில் லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.

 லிங்கம் சுமார் 6 அடி உயரம்.  உற்சவர் கல்யாண சுந்தர மூர்த்தியாக, மனைவி கார்த்யாயனியுடன் திருமண கோலத்தில் இருக்கிறார்.  தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவா, பிரம்மா மற்றும் ஜ்யேஷ்டா தேவி ஆகிய கோஷ்ட மூர்த்திகள் கருவறைச் சுவரைச் சுற்றி அமைந்துள்ளன.  இங்கு தட்சிணாமூர்த்தி ராசி மண்டல குரு என்று அழைக்கப்படுகிறார்.  தட்சிணாமூர்த்தி 12 ராசி (நட்சத்திரம் / ராசி) மண்டலங்களுக்கு மேலே ஒரு பீடத்தில் அமர்ந்திருக்கிறார்.

 மஞ்சள் வஸ்திரம் (மஞ்சள் நிற ஆடை) மற்றும் கொண்ட கடலை மாலை (பட்டாணி மாலை) ஆகியவற்றை அவருக்கு சமர்ப்பித்து வழிபட்டால், 12 ராசிக்காரர்களின் தோஷங்கள் (பாவங்கள்) நிவர்த்தி செய்து, அவர்களுக்கு இறைவன் அருள் புரிவார் என்பது பொதுவான நம்பிக்கை.  ஏராளமாக.  கோஷ்டத்தில் இருந்து லிங்கோத்பவ மற்றும் பிரம்மா காணவில்லை.  துர்காவிற்குப் பதிலாக ஜ்யேஷ்டா தேவி கோயிலின் தொன்மையைச் சான்றளிக்கும் தனித்துவமான அம்சமாகும்.  சண்டிகேஸ்வரர் சன்னதி அவரது வழக்கமான இடத்தில் அமைந்துள்ளது.  தாயார் சிவகாம சுந்தரி என்று அழைக்கப்படுகிறார்.  அவள் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள்.

 பிரகாரத்தில் பாலகணபதி, நாகர்கள், துர்க்கை, முருகன், துணைவியார் வள்ளி, தெய்வானை சன்னதிகள் உள்ளன.  முருகன் சக்கரத்தாழ்வார் போல் காட்சியளிக்கிறார்.  நவக்கிரக சன்னதி கோயில் வளாகத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.  இக்கோயிலுடன் தொடர்புடைய தீர்த்தங்கள் அகஸ்திய தீர்த்தம் மற்றும் சூரிய தீர்த்தம் ஆகும்.  ஸ்தல விருட்சம் வன்னி மரம்.  இந்த கோவிலுக்கு மிக அருகில் அகஸ்தீஸ்வரர் என்ற பழமையான சிவலிங்கம் உள்ளது.

 கோவில் திறக்கும் நேரம்

 கோவில் காலை 09:00 மணி முதல் திறந்திருக்கும்.  10:30 AM மற்றும் 05:00 P.M.  இரவு 07:00 மணி வரை

 இலக்கியக் குறிப்பு

 அப்பர் பாடிய தேவாரப் பாடல்கள்n இக்கோயிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதால் இக்கோயில் தேவார வைப்பு ஸ்தலம் என்று கருதப்படுகிறது.  7ஆம் திருமுறையில் 12ஆம் பதிகத்தில் 2ஆம் பாடலில் கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அண்டத் தண்டத்தின் அப்புறத்

 தாடும் அமுதனூர்

 தண்டந் தோட்டந் தண்டங்குறை

 தண்டலை யாலங்காடு

 கண்டல் முண்டல்கள் சூழ்கழிப்

 பாலை கடற்கரை

 கொண்டல் நாட்டுக்கொண்டல் குறுக்கை

 நாட்டுக் குறுக்கையே

 பிரார்த்தனைகள்

 நடனபுரீஸ்வரர் கோயிலை தரிசித்தால் திருமண தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.  இக்கோயில் திருமண பரிகார ஸ்தலம் என்று கருதப்படுகிறது. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன். 

பாண்டியநாட்டு_தேவாரப்_பாடல் பெற்ற திருத்தலமான திருப்பூவணம் (திருப்புவனம்)பூவணநாதசுவாமி :



#பாண்டியநாட்டு_தேவாரப்_பாடல் பெற்ற திருத்தலமான #திருப்பூவணம் (திருப்புவனம்)
#பூவணநாதசுவாமி :
பொன்னனையாள் என்ற பக்தைக்காக இறைவர் சித்தராக வந்து இரசவாதம் செய்து(64-திருவிளையாடல்_ஒன்று)  #இரசவாதம்_செய்த_படலம் 

திருப்பூவணத்தில் பொன்னனையாள் என்ற சிவபக்தை இருந்தாள். இவள் சிறந்த நடன மாது. நாட்டிய இலக்கணப்படித் தினமும் இறைவன் முன் நடனமாடுவது இவளது வழக்கம். தனக்குக் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் அன்னதானத்திற்குச் செலவு செய்தாள். தினமும் சிவனடியார் பலரும் வந்து உணவருந்திச் செல்வதைக் கண்டு மகிழ்ந்தாள்.

அப்படியிருக்கையில் அவளுக்குத் திருப்பூவணம் கோயிலில் வைத்துப் பூசிப்பதற்கு இறைவனின் திருமேனியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்று பேராவல் பூவணநாதரின் அருளாசியினால் உண்டானது. ஆனால் கிடைக்கும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவானது. தங்கத்திற்கு எங்கே போவது. குலபூடண பாண்டியனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொற்கிழியை வழங்கிய மதுரை சோமசுந்தரக் கடவுளை மனதில் நினைந்து வேண்டினாள்.

இந்த பக்தையின் விருப்பத்தை அறிந்த மதுரை சோமசுந்தரப் பெருமான். அதனைப் பூர்த்தி செய்ய திருவுள்ளம்கொண்டு சித்தர் வடிவில் திருப்பூவணத்தில். பொன்னனையாள் வீட்டிற்கு எழுந்தருளினார்.

அங்கு, அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, தாதியர்கள் உணவு உண்ண வாருங்கள் எனச் சித்தரையும் அழைத்தனர், அதற்கு சித்தர் பெருமான். உங்களது தலைவியை இங்கே அழையுங்கள் எனக் கூறினார், பொன்னனையாள் வந்தாள். சித்தரது பாதங்களில் தனது தலை பதியுமாறு பணிந்து உணவு உண்ண அழைத்தாள், அதற்குச் சித்தர். உனது முகம் வாட்டத்துடன் காணப்படுகின்றதே! உனது மனக் கவலைதான் என்ன? என்று கேட்டார், பொன்னனையாளும், எங்கள் தலைவனாம் திருப்பூவணத்து இறைவனது திருவுருவினைச் செய்வதற்கு உள்ளத்தில் பெருவிருப்பம் கொண்டு மெழுகினால் கருக்கட்டி வைத்துள்ளேன், அதனைப் பொன்னினால் செய்து முடிக்கக் கருதிய எனக்கு நாள்தோறும் கையில் வரும் பொருள் முழுவதும் அடியார்களுக்கு அன்னம் இடுவதிலேயே செலவாகி விடுகின்றது, நான் என்ன செய்வேன்? என்று தனது கவலையை கூறினாள், அதற்குச் சித்தரும். நீ தானத்துள் சிறந்த அன்னதானத்தை நாள்தோறும் செய்து வருகின்றாய், உன் பெயருக்கு ஏற்றவாறு அழிவில்லாத இறைவனின் திருவுருவத்தைத் தங்கத்தினால் செய்யப் பெறுவாயாக என வாழ்த்தினார்.

பின்னர். அனைத்து உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வரச்செய்து. திருநீற்றினைத் தூவினார், இவற்றைத் தீயிலிட்டுக் காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்குமெனக் கூறி அருளினார், பொன்னனையாள் அச்சித்தர் சுவாமியை வணங்கி இன்றைய இரவு இங்கேயே தங்கித் திருவமுது செய்து இரசவாதம் செய்து முடித்தபின்னர் அதிகாலை எழுந்து செல்லலாம் என வேண்டினாள், மீனாட்சி அம்மையைப் பிரியாத சோமசுந்தரரே சித்தர் வடிவில் வந்துள்ளதால் அவர் யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம் எனக் கூறி மறைந்தார், சித்தர் கூறிய சொற்களும். மறைந்தருளிய தன்மையையும் கண்ட பொன்னனையாள். வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடியருளும் அம்பலவாணரே எனக் கண்டு பக்தியால் நெகிழ்ந்து. தனது கவலையை இறைவனே நேரில் வந்து நீக்கினார் எனக் களிப்புற்றவளாகிச் சித்தர் கூறியபடியே செய்ய உலோகப் பாத்திரங்களைத் தீயிலிட்டுப் புடம் செய்தனள், ஆணவமலம் கெட்டு இறைவனின் திருவடியை அடைந்தவர் சிவமாக விளங்குதல் போல உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக மாறின, அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவம் வார்ப்பித்தாள்,

கிடைத்த தங்கத்தைக் கொண்டு வடிவே இல்லாத இறைவனின் திருவுருவத்தைச் செய்திட்டார், இறைவனின் அழகான திருவுருவத்தைக் கண்டு அச்சோ! அழகிய பிரனோ இவன்!! என்று இறைவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள், அதனால் இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது, இத் திருவுருவத்தை இன்றும் கோயிலில் தரிசித்திடலாம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.

*தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலமான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 
#திருப்புவனம் (திருப்பூவணம்)
#பூவணநாதசுவாமி 
(புஷ்பவனேஸ்வரர் )
#செளந்தர_நாயகி (அழகிய நாயகி) திருக்கோயில் வரலாறு:

புஷ்பவனேஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்னும் ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மேலும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். 
இங்கு அழகியநாயகி உடனுறை பூவணர் கோயில் கொண்டுள்ளார். இவரை வடமொழியில் புஷ்பவனேஸ்வரர் எனவும் இறைவியை சௌந்தரநாயகி எனவும் அழைப்பர். இத்தலத்தின் வழிபடுமரம் (தலவிருட்சம்) பலா மரம் ஆகும்.

 278 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம். தமிழ் நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப் பெற்றதென்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்து வந்த பொன்னையாளுக்கு தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.

*மூலவர் :புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்

*அம்மன் : சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி

*தல விருட்சம்: பலா

*தீர்த்தம் :வைகை, மணிறகர்ணிகை
*ஆகமம்/பூஜை  :இங்கு தினமும் 6 கால பூஜை நடக்கிறது
*புராண
பெயர்: திருப்பூவணம் 
*ஊர் : திருப்புவனம்
*மாவட்டம் : சிவகங்கை

*வழிபட்டோர்:

சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர்

#திருஞானசம்பந்தர் பாடிய திருப்பூவணம் தேவாரப் பாடல்:

"அறையார்புனலு மாமலரும் 
  ஆடர வார்சடைமேல்
குறையார்மதியஞ் சூடிமாதோர் 
  கூறுடை யானிடமாம்
முறையால்1 முடிசேர் தென்னர்சேரர் 
  சோழர்கள் தாம்வணங்கும்
திறையாரொளிசேர் செம்மையோங்குந் 
  தென்திருப் பூவணமே.

மூவர் பெருமக்களுக்கும் வைகை மணல் சிவலிங்கமாகத் தோன்றியமையால் மூவரும் மறுகரையிலிருந்தே-இத்தலத்தை மிதிக்க அஞ்சி-வணங்க, இறைவன்அவர்கள் தம்மை நேரே கண்டு வணங்குவதற்கு ஏதுவாக நந்தியை விலகச் செய்தருளினார். இதனால் நந்தி சாய்ந்துள்ளதை காணலாம்.

திருப்புவனம் என்பது உச்சரிப்பில் திரிபு ஏற்பட்ட பெயராகும். "திருப்பூவணம்" என்பது திரிந்து திருப்புவனம் ஆகியது. இங்கு பாரிசாதப் பூவின் படிமம் சிவலிங்கமாக உள்ளது. எனவே சிவலிங்கத்தின் பெயர் "பூவணன்" என்பதாகும். இதன் காரணமாக இந்த ஊருக்குத் திருப்பூவணம் என்ற பெயர் உண்டானது. பாண்டிய நாட்டுத் தலங்களில் மூவர் பாடலும் பெற்ற தலம் இது ஒன்றே. 36ஆவது "திருவிளையாடல்" நடைபெற்ற தலம். எலும்பு பூவாக மாறிய தலம், காசிக்கு வீசம் கூட எனப் புகழ் பெற்ற தலம்.

*மதுரையின் கிழக்கு வாயில்:

பண்டைய பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குக் கிழக்கு வாயிலாக இத்தலம் இருந்துள்ளது. திருஞானசம்பந்தர் சமணர்களை வெற்றி கொள்ள மதுரை செல்லும் போது மதுரையின் கிழக்கு வாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்று விரும்பினார். எனவே மதுரையின் கிழக்கு வாயிலாக விளங்கிய திருப்பூவணத்தை வந்து அடைந்தார்.பிற்கால பாண்டியர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.. பின்னர் விஜயநகர பேரரசின் மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கரால் அர்த்த மண்டபம் மகாமண்டபம் இராஜ கோபுரம் கட்டப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

*பார்வதி தேவியார் தவம் செய்த இடம்:

வைகை ஆற்றின் தென் கரையில் திருப்பூவணம் உள்ளது. திருக்கோயிலுக்கு நேர் எதிரே வைகைஆற்றின் வடகரையில் பார்வதி தேவியார் தவம் செய்த இடம் உள்ளது, இங்கே வந்த திருஞானசம்பந்தர் வைகை ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன.

*திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார்:

எனவே திருஞானசம்பந்தர் அங்கிருந்தபடியே தென்திருப்பூவணமேஎன்று முடியும் தேவாரப் பதிகத்தைப் பாடி வணங்கினார், திருப்பூவணநாதர் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார்.

இவரைப் பின்பற்றி இத்தலத்தில் சுந்தரர்(8 பாடல்கள்), அப்பர் (11 பாடல்கள்), மாணிக்கவாசகர் (பாடல் கிடைக்கப் பெறவில்லை), கரூர்தேவர்(8 பாடல்கள்), அருணகிரிநாதர் (3 பாடல்கள்), குமரகுருபரர் (பாடல் கிடைக்கப் பெற வில்லை) இவர்களும் வைகை ஆற்றின் வட(மறு) கரையிலிருந்தே இறைவனை வழிபட்டுள்ளனர்.

இது "36ஆவது திருவிளையாடல்" நடைபெற்ற திருத்தலம். மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரர் சித்தராக வந்து இரசவாதம் செய்து தங்கம் தயாரித்துக் கொடுத்த திருத்தலம், இத்தங்கத்தைக் கொண்டே திருப்பூவணத்தில் உற்சவர் (அழகிய பிரான்) செய்யப்பட்டுள்ளார், இதனால் மதுரை அருள் மிகு சோமசுந்தரேசுவரரால் திருப்பணி செய்யப்பெற்ற திருத்தலம் என்ற பெருமை உடையது இத் திருத்தலம்.

*கோவில் அமைப்பு: 

ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய கோபுரத்துடன் உள்ளது. பெரிய கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒர் தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதிற்சுவரின் உள்ளே சுற்றுப் பிரகாரங்களுடன் அமையப் பெற்றுள்ளன.

கோவிலின் தலவிருட்சமாக பலாமரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகைநதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இவ்வாலத்தின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது. கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் உள்ளது. அருகே பதஞ்சலி முனிவரும், வீயாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தாலான உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையிலுள்ளனர்.

திருவிழா: 

வைகாசியில் விசாக விழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி கொலு உற்சவம், ஐப்பசியில் கோலாட்ட உற்சவம், கார்த்திகையில் பெரிய தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், மாசியில் சிவராத்திரி, பங்குனியில் 10 நாள் உற்சவம் ஆகியவை சிறப்பானவைகளாகும்.

எப்படிப் போவது  :   

மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்புவனம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்புவனம் செல்லலாம். திருப்புவனம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Tuesday, March 26, 2024

குலதெய்வம் என்றால் என்ன??? குலதெய்வத்தின் சிறப்புகள் என்ன

பங்குனிஉத்திரம் (குலதெய்வ வழிபாடு)
சொந்தக் குல தெய்வங்களின் பெயரை சொல்வதை கௌரவ குறைச்சலாக நினைத்துக் கொண்டு ஏதோ ஒரு தெய்வத்தை வணங்குவதை கௌரவமாக நினைத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தற்போது இருக்கின்றோம் நாம்.

சொந்த குல தெய்வத்தை வணங்காமல் மற்றவர்களிடம் பெருமையாக சொல்ல வேண்டும் என்பதற்காகவே நான் வியாழக்கிழமை சாப்பிட மாட்டேன். அந்த சாமியோட பக்தன், பக்தை என ஏதோ ஒரு நமக்கு தொடர்பில்லாத சாமி பெயரை சொல்வார்கள்.

குலதெய்வம் என்றால் என்ன??? குலதெய்வத்தின் சிறப்புகள் என்ன?.மற்ற தெய்வ வழிபாடுகளை காட்டிலும் குலதெய்வ வழிபாடு எத்தனை சிறப்பானது.

குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்மோடு எப்போதும் நீங்காமல் இருந்து நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழி காட்டும் அருட்சக்தி ஆகும்.

கோடி தெய்வங்களின் சன்னதியை தேடிப் போய் வணங்கி பெறும் ஆசிகளை ஒற்றைக் குலதெய்வத்தின் சன்னதி முன் வணங்கி பெறலாம்.

ஆயிரம் தெய்வங்களை ஆயிரம் கோயிலுக்கு நோன்பு, விரதம் இருந்து தரிசித்துப் பெறும் மகிமையை ஒற்றைக் குல தெய்வக் கோயிலுக்கு சென்று குலதெய்வத்தை தரிசிப்பதன் மூலம் பெற்று விடலாம்.

குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போகக் கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள்.

அன்னிய மதத்தினரின் படையெடுப்பு காரணமாகவோ, பிழைப்பிற்காகவோ, அல்லது வறட்சி காரணமாகவோ, காலரா போன்ற கொள்ளை நோய் காரணமாகவோ முந்தைய தலை முறையினர் தங்களது பூர்வீக ஊரை விட்டு வேறு பகுதிகளில் குடியேறி இருப்பார்கள்.

ஊரை காலி செய்யும் முன் தங்களது முன்னோர்கள் வழி வழியாக வணங்கிய குல தெய்வத்தின் முன் கண்ணீரோடு நிற்பார்கள்.

அந்தக் குல தெய்வத்தின் சன்னதியில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து " இங்கே இருந்து எங்கள காப்பாத்துன மாதிரி நாங்க குடி போகுற இடத்துக்கும் எங்களோடு வந்து எங்கள காப்பாத்துமய்யா" என புலம் பெயருவார்கள்.

அந்த கைப்பிடி மண்ணைக் கொண்டு தாங்கள் புதிதாக குடியேறும் ஊரில் தங்களது குல தெய்வத்திற்கு கோயில் கட்டி வழிபடுவார்கள்.

எத்தனை வளமான மண்ணாக இருந்தாலும் தளிர்த்து வளரும் செடியை அதன் பிறந்த இடத்து பிடி மண்ணோடு இன்னொரு இடத்தில் வைத்தால் மட்டுமே வேர் விட்டு தழைத்து வளரும்.

புலம் பெயரும் இடத்தில் எத்தனை தெய்வ ஆலயங்கள் இருந்தாலும் குல தெய்வத்தின் அருளையும் ஆசியையும் பிரதானமாக நினைத்து பிடிமண் ஆலயம் என குல தெய்வத்தின் ஆலயத்தை வைத்து வழிபட்டு வந்தனர் முன்னோர்கள்.

தம்பி! ! உங்க குடும்ப தெய்வம் எது? என கேட்டால்!!! கடம்பாக்குளம் பூலுடையார் சாஸ்தா என பதில் சொல்லும் போதே!!! உங்க முன்னோர்கள் பூர்வீகம் தென்திருப்பேரை தானே என குல தெய்வத்தை வைத்தே குலத்தை பற்றியும், கோத்திரத்தை பற்றியும் சொல்லி விடும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உண்டு.

"நாள் செய்யாததை கோள் செய்யும்.

கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்" என்பார்கள்.

ஒரு செயல்களையோ, காரியத்தையோ ஆரம்பிக்கும் முன் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து செய்வோம்.

கிரகம் எனும் கோள்களில் சுக்கிர திசை உச்சத்தில் இருக்கிறதா என கிரகாச்சார அமைப்பை பார்த்து தொழில் ஆரம்பிப்போரும் உண்டு.

நாளும், கோளும் பார்க்காமல் கற்குவேல் அய்யனாரே! நான் ஆரம்பிக்குற மளிகை கடை யாவரத்துக்கு நீர் தான் மொதலாளி! எந்த நட்டமும், போட்ட முதலுக்கு சேதாரமும் வராம லாபத்தை தாருமய்யா! என குல தெய்வத்தை வணங்கி ஆரம்பிக்கும் எந்த தொழிலும் தோற்றுப் போனதாக சரித்திரம் இல்லை.

ஆம்..குலதெய்வத்தின் அருளாசி நாளும் கோளும் செய்யாததை விட அதிகமாக அருள் புரிந்து நம்மை காக்கும்.

பசியால் பிள்ளை அழுதால் தாய் பொறுக்க மாட்டாள். குல தெய்வமும் தாயை போலத்தான். தன் முன் குறைகளை கண்ணீரோடு சொல்லி முறையிடும் தனது பிள்ளைகளின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றி தரும் கருணை கொண்டவர் குலதெய்வம் ஆவார்.

இந்த சனிப்பெயர்ச்சி என்னை போட்டு பாடாய் படுத்துதே!! என கிரகப்பெயர்ச்சி பலனை நினைத்து வருந்துபவர்கள் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கினாலே போதும்.

எந்த ஒரு கிரகப் பெயர்ச்சியும் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கி வருபவர்களை ஒன்றும் செய்து விட முடியாது.

குலலெதெய்வ வழிபாடு ஆனது கிரகப்பெயர்ச்சியினை நல்லதை தரும் நல்வினையாக மாற்றும் மகிமை வாய்ந்தது ஆகும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கின்றது.

"குல தெய்வத்தை கும்புடாம போனா குலம் தழைக்காது" என சொல்வார்கள்.

எம்புள்ளைக்கு கலியாணம் முடிஞ்சு வரும் பங்குனி மாசத்தோட பத்து வருசம் ஆவப் போவுது.

எம் மருமொவ வயத்துல ஒரு புள்ள பூச்சி தங்க காணோம்.

சொரிமுத்து அய்யா!! நாங்க அறிஞ்சு அறியாம எந்த தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுடும்.

என்னோட கொலம் தழைக்க எம்புள்ளைக்கு ஒரு வாரிசு கொடு.

புள்ள பெத்து கரையேறி வந்ததும் தாயையும், புள்ளையையும் ஒன்னோட தலத்துக்கு கூட்டி வந்து ஒன்னோட சன்னதியில என்னோட பேரபுள்ளைக்கு பொறந்த முடி எடுக்குறோமுய்யா! என மகனுக்காக குல தெய்வத்திடம் பிள்ளை வரம் கேட்டு பிரார்த்தனை செய்யும் தாய்மார்களின் வேண்டுதலை நம்மில் அனேகர் கேட்டு இருப்போம்.

குலம் தழைக்கும் வல்லமையை தருவது கூட குலதெய்வத்தின் அருளாசிகள் தான்.

தென் தமிழக மக்களுக்கு குலதெய்வம் பெரும்பாலும் சாஸ்தா ஆகவே இருப்பார்.

யார் இந்த சாஸ்தா?

சாஸ்தா என தற்போது தென்மாவட்ட மக்களால் அழைக்கப்படும் சொல் முந்தைய தலைமுறை மக்களால்

சாத்தா என்று அழைக்கப்பட்டது.

சாத்து என்றால் கூட்டம் என பொருள்.

குல தெய்வ கோயிலுக்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் ஒரு போதும் தனித்து வர மாட்டார்கள்.

குடும்ப சகிதமாக கூட்டமாக வந்து தான் தங்களது குல தெய்வத்தை வணங்குவார்கள்.

கூட்டுக்குடும்பமாக வந்து கூட்டமாக மக்கள் வணங்குவதால் குல தெய்வமானவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.

குடும்பத்தில் தந்தையை ஐயா!! என்று அழைப்பது முந்தைய தலைமுறை நெல்லை மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கம்.

ஐயா, ஐயன் என்ற தமிழ்ச்சொல்லுக்கு மூத்தவர், தலைவர் என்ற பொருள் படும்.

ஐயன் என்ற தமிழ்ச்சொல்லில் 'ன்' என்பது ஒருமையில் வருவதால் ஆர் என மரியாதைக்குரிய விளிச்சொல்லை சேர்த்து தங்களது குல தெய்வத்தை ஐயனார் என அழைத்தனர்.

தேவர்களுக்கு அமிர்தம் வழங்க பகவான் நாராயணர் எடுத்த மோகினி அவதாரத்தில் சிவ - வைணவ ஐக்கியமாக உதித்தவர் சாஸ்தா.

ஐயன் (திருமால்), அப்பன்(சிவன்) என்ற இரு மூர்த்திகளின் ஒருமித்த சக்தியாக சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் தான்.

தென் மாவட்டங்களில் சாஸ்தாவின் ஆலயங்கள் பெரும்பாலும் குளம், ஆறு, சுனை போன்ற நீர்நிலைகளின் அருகிலேயே அமைந்து இருக்கும்.

பிடிமண் சாஸ்தா கோயில் என்ற பெயரில் குடும்ப சாஸ்தாவை தங்களது தோட்டத்து கிணற்று பக்கத்தில் சிறிய பீடம் அமைத்து ஏதேனும் மரத்தடியில் வைத்து வணங்கி வருவார்கள்.

எதற்காக சாஸ்தாவை தென் மாவட்ட மக்கள் நீர்நிலைகளின் அருகில் வைத்து வணங்க வேண்டும்.

விவசாயம் தான் தென்மாவட்ட மக்களின் பிரதான தொழில்.

நீரின்றி அமையாது உலகு என்பது போல் நீரின்றி விவசாயம் நடைபெறாது.

தங்களது நீர்நிலைகளை பாது காத்து விவசாயத்தை செழிக்க வைக்க தங்களது குலதெய்வமான சாஸ்தாவை நீர் நிலைகளின் கரையோரங்களில் வைத்து வணங்கி வந்தனர்.

"ஏரிக்கு ஒரு ஐயனாரும், ஊருக்கு ஒரு பிடாரியும் எங்க ஊருல உண்டு வேய்" என தங்கள் கிராமத்து ஏரிக்கரையில் ஐயனார் என்ற பெயரில் சாஸ்தா வீற்றிருப்பதையும், தலை என்ற பதத்தின் பழஞ்சொல்லான பிடாரி என்ற வார்த்தையை கொண்டு முப்பிடாரி, முப்புடாதி என அழைக்கப்படும் மூன்று பிடாரி என்ற மூன்று முகங்களை கொண்ட முத்தாரம்மன் ஊரின் நடுநாயகமாக வீற்றிருந்து அருள் பாலிப்பதையும் தங்கள் ஊரின் பெருமையாக கிராமத்தில் சொல்வார்கள்.

காரையாறு சொரி முத்து ஐயனார் அருஞ்சுனை காத்த ஐயனார், கடம்பாக்குளம் பூலுடையார் சாஸ்தா, ஸ்ரீவல்லப பேரேரி என்ற சீவலப்பேரி ஏரியின் மறுகால் மடையில் வீற்றிருக்கும் மறுகால் தலை சாஸ்தா

என தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சாஸ்தா ஆலயங்கள் அனைத்தும் நீர் நிலையின் அருகாமையில் தான் இருக்கும்.

இவ்வாறு நீர்நிலைகளின் தெய்வமும், சம்சாரி எனும் விவசாயி மக்களின் குல தெய்வமான சாஸ்தா பங்குனி உத்திர திருநாளில் அவதரித்தார்.

குல தெய்வத்தை வழிபடும் பங்குனி உத்திர நாள் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கொண்டாடப் பட்டாலும் தென் தமிழகமான நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் பங்குனி உத்திரத்தை கொண்டாடும் விதமே தனி..

சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திர திருநாள் ஆனது தென் மாவட்ட மக்கள் அனைவரும் குடும்பத்தோடு ஒன்று சேரும் நாள் என்று கூட சொல்லலாம்.

சொக்காரன் என அழைக்கும் பங்காளிகள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளாதவர்கள் கூட உத்திர நாளில் சாஸ்தாவை வணங்க குலதெய்வ கோயிலுக்கு குடும்பமாக வந்து விடுவார்கள்.

போன வருச பங்குனி உத்திரத்தோட ஊருக்குப் போயிட்டா வியாபாரம் பாதிக்குமே ன்னு சாஸ்தா கோயிலுக்கு போகாம இருந்துட்டேன்.

பாம்பு துரத்துற மாதிரி கனவு வருது.. யாவரமும் சரியில்லை.

வீட்டுக்காரி வேற மும்மூணாக்கூடி மேலுக்கு சரியில்லாம படுத்துக்குடுதா..

எய்யா!! கடம்பா குளத்துக்கரை பூலுடையார் சாஸ்தாவே.. இந்த வருசம் உத்திரத்திற்கு ஒம்ம சன்னதிக்கு வர நீதாய்யா அருள் புரியணும்.

என சத்தம் போட்டு குலசாமியிடம் வேண்டி கொண்ட மளிகைக்கடை சொக்காரனின் வேண்டுதல் குரலை கேட்ட அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும்.

பங்குனி உத்திரத்திற்கு சென்று குலதெய்வத்தை வழிபடுவதை தென் மாவட்ட மக்கள் தங்களது கடமையாகவே கருதுவார்கள்.

பெரும்பான்மையான இந்த சாஸ்தா கோயில்களில் தினசரி பூஜைகள், தீபம் ஏற்றுவது கூட நடைபெறாது.

கை விடப்பட்ட அனாதை குழந்தை போல, பிள்ளைகளால் துரத்தி விடப்பட்ட முதியவர்களை போல் வருடம் முழுவதும் யாரும் வந்து எட்டி பார்க்காமல் தனியாகவே இருப்பார் குல தெய்வமான சாஸ்தா.

நிதம் தனது சன்னதியில் வந்து தன்னை வணங்கி வழிபட்டால் மட்டுமே அருள் புரிவேன், லாபத்தில் பத்து சதவீதம் பங்கு தந்தால் மட்டுமே காப்பாற்றுவேன் என ஒரு போதும் குல தெய்வமான சாஸ்தா தனது பிள்ளைகளிடம் ஒரு போதும் நிபந்தனை விதிக்க மாட்டார்.

தனியாக இருக்கும் சாஸ்தாவின் மோன நிலையை பார்க்கும் போது தனது பிள்ளைகளின் நலனுக்காக தந்தையான பரமசிவனை நோக்கி தவம் இருப்பதை போலவே தோன்றும்.

பிழைப்புக்காக ஏதோ ஒரு இடத்திற்கு சென்று தான் செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து காலையில் வியாபாரம் ஆரம்பிக்கும் முன் எய்யா!! எங்க சாமி!! இன்றைய பொழுது நல்லாயிருக்கணும், நல்லா லாபம் கெடைக்கணும்" என தனது புகைப்படத்தின் முன் நின்று ஒற்றை ரூபாய் ஊதுபத்தியை ஏற்றியோ, ஏற்றாமலோ தன்னை வணங்கும் பிள்ளைகளின் பிரார்த்தனையை தான் இருந்த இடத்திலிருந்த படியே நிறைவேற்றி கொடுப்பது தான் குலதெய்வத்தின் தனிப்பெரும் கருணை எனலாம்.

வருடம் முழுவதும் தனியாக இருக்கும் சாஸ்தா ஆனவர் பங்குனி உத்திர நாளில் பிறந்த நாளை கொண்டாடும் சிறுவனை போல் உற்சாகம் ஆகி விடுவார்.

ஆம். பங்குனி உத்திரம் தான் சாஸ்தாவின் பிறந்தநாள் ஆகும்.

பங்குனி உத்திர திருநாள் ஆனது சாஸ்தாவின் பிறந்த நாளோடு மட்டுமல்லாமல் நிறைய புண்ணிய நிகழ்வுகளையும் கொண்ட தினம் ஆகும்.

அனைத்து தமிழ் மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு.

தமிழ் மாதங்களில் 12ஆவது மற்றும் கடைசி மாதமான பங்குனியில் 27 நட்சத்திரங்களில் 12 ஆவதாக வரும் நட்சத்திரமான உத்திரம் ஆகிய இரண்டு பன்னிரெண்டாவது வரிசை காரர்கள் இணைந்து வரும் பவுர்ணமி நாள் ஆன பங்குனி உத்திரமே மற்றைய தமிழ் மாதங்களில் வரும் உத்திர தினங்களை விட மிகச்சிறப்பானது ஆகும்.

"சிங்க மாசம் வந்து சேர்ந்தால் நின்னை ஞானே சொந்தமாக்கும்" என டூயட் பாடி சிம்ம ராசி மாதமான ஆவணி மாதத்தை கல்யாணம் செய்து கொள்ள மலையாளிகள் தேர்ந்தெடுத்தனர்.

பூப்பூக்கும் மாசம் தை மாசம்.

ஊரெங்கும் வீசும் பூ வாசம்.. என தமிழர்கள் திருமணம் செய்து கொள்ள தை மாதத்தை தேர்வு செய்த மாதிரி தெய்வங்கள் தங்களது திருமணங்களை செய்து கொள்ள தேர்ந்தெடுத்தது இந்த புனிதமான பங்குனி மாத உத்திர திருநாளை...

சிவ பெருமான் - பார்வதி திருமணம், ஸ்ரீராமன் - சீதை திருமணம், ஸ்ரீரங்கமன்னார் - ஆண்டாள் திருமணம், முருகன் - தெய்வானை திருமணம், சந்திரன் அஸ்வினி முதல் ரோகிணி வரையிலான இருபத்தியேழு நட்சத்திரங்களை மணந்தது, கும்ப முனி அகத்தியர் லோபா முத்திரையை மணந்தது

என பல்வேறு தெய்வங்களின் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாக பல்வேறு புராணங்கள் குறிப்பிடுகின்றன.

கீதை தந்தது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

அந்த கீதை இவ்வுலகிற்கு வர காரணமாக இருந்தது காண்டீபதாரி அர்ஜுனன்.

அர்ஜுனன் மனம் சடைந்து போரிட மாட்டேன் என்றதால் கிருஷ்ணர் மூலம் அர்ஜுனன் பெற்ற
உபதேசமே கீதை.

அப்படி கீதாபதேசம் முதலில் ஸ்ரீகிருஷ்ணர் வாயால் கேட்க பெற்ற ஆணுக்குரிய பதினெட்டு அம்சங்களை ஒருங்கே பெற்று பிறந்தவனான அர்ஜூனன் பிறந்ததும் இந்த பங்குனி உத்திர திருநாளில் தான்.

குறமகளாக வேடுவர் குலத்தில் பிறந்து கந்தனை காந்தர்வ மணம் புரிந்த வள்ளி நாச்சியார் பிறந்தது இந்த பங்குனி உத்திர திருநாளில் தான்.

திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே! தீபங்கள் ஆராதனை" வெறும் சிவாஜி பட டூயட் இல்லைங்க..

நிஜமாகவே திருமகள் எனும் மகாலெட்சுமியான ஸ்ரீதேவி பிராட்டியார் கல்யாணசுந்தர விரதம் இருந்து திருமாலின் மார்பில் இடம் பிடித்த நாளும் இப்புனிதமான பங்குனி உத்திர திருநாளில் தான்.

பொதிகை மலையில் தோன்றிய தாமிரபரணி என்ற கன்னிகைக்கும் சமுத்திரராஜன் என்ற வரனுக்கும் குறுமுனி அகத்தியரால் தூத்துக்குடி மாவட்டம் சோமாரண்யம் என்ற ஆத்தூரில் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட தினமும் பங்குனி உத்திரத்தில் தான்..

நிறைய இடங்களில் முந்தைய நாட்களிலும், தற்போது கூட சில பகுதிகளிலும் பங்குனி உத்திர தினத்தன்று திருமண நாள் குறித்து திருமண ஓலை எழுதுதல், தாலிக்கு பொன் உருக்குதல், சீமந்தம் செய்தல், பூ முடித்தல், புதியதாக தொழில் அல்லது வியாபாரம் தொடங்குவது போன்ற சுபகாரியங்களை செய்வதற்கு மிகவும் சிறந்த நாளாக பங்குனி உத்திரத்தை கருதி நடத்தி கொண்டு வருகின்றனர்.

பங்குனி உத்திர திருநாள் வழிபாடு மிகவும் புண்ணியமானதுவும், சகல நலன்களை தருவதுவும், துவக்கும் காரியங்களில் வெற்றியை தரவல்லது ஆகும்.

பங்குனி உத்திர திருநாள் வழிபாடு பணக் கஷ்டம், திருமணத் தடைகள், வாராக் கடன், ஆரோக்கியக் குறைவு போன்ற அனைத்து தடைகளையும் நீக்கி தரும் புண்ணிய நாளாகும்.

புனிதமும், மகிமையும் வாய்ந்த பங்குனி உத்திரத் திரு நாளை தன்னை வணங்க ஏற்ற நாளாக ஆக்குவதற்காகவே சாஸ்தா அந்த நாளில் அவதரித்தார்.

உத்திர திருநாளில் அன்னை, தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, உற்றார், உறவினர்களோடு உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள்.

தனியாக ஒருபோதும் குலதெய்வ கோயிலுக்கு செல்லாதீர்கள்.

தனியாக சென்று வேண்டும் வேண்டுதல்களை ஒருபோதும் குலதெய்வம் கேட்பதில்லை.

ஒற்றுமையாக குடும்பத்தோடு கூட்டமாக சென்று வேண்டும் வேண்டுதல்களைத் தான் குலதெய்வம் எப்பொழுதும் நிறைவேற்றி தரும்.

தனது குடும்பம் ஒற்றுமையாக இருப்பதைத் தானே எந்த குடும்பத் தலைவனும் விரும்புவான்.

குடும்பத்தின் ஆதி தலைவன் குலதெய்வம் என்பதால் குடும்பம் ஒற்றுமையாக இருப்பதைத் தான் குலதெய்வம் எப்போதும் விரும்பும்.

குலதெய்வக் கோயிலுக்கு செல்லும் போது தவறாது பொங்கலிட்டு குல தெய்வத்தை வணங்கி அவருக்கு படையலிட்ட பொங்கலை அவர் ஆலயத்தில் வைத்து சாப்பிடுங்கள்.

நீங்கள் படைக்கும் பொங்கல் நிச்சயம் உங்கள் குல தெய்வத்திற்கானது அல்ல..

யோவ்!!! என்ன!!! நாங்க வைக்குற பொங்கலு எங்க சாமிக்கு இல்லையா. நாங்க வைக்குற பொங்கலை எங்க சாமி ஏத்துக்கிடாதா என பட்டுன்னு எகிறாதீங்க..

பிள்ளைகள் வயிறார சாப்பிடுவதை தானே தாய் விரும்புவாள்.

தாயைப் போல தாய்மை குணம் நிறைந்தது தானே குலதெய்வம்.

தன்னை வணங்கி விட்டு பசியோடு தனது பிள்ளைகள் வீட்டிற்கு செல்லக்கூடாதே!! என்று எண்ணி தனக்கு பொங்கல் படைக்க வேண்டும் என்று கூறி தனக்கு படைக்கப்பட்ட பொங்கலை தனது ஆலயத்தின் முன் இருந்து வயிறார சாப்பிடும் பிள்ளைகளை கருவறையில் இருந்த படியே மனம் நிறைய பாசத்தோடு ஆசிகள் வழங்கி கொண்டிருப்பார் குல தெய்வமான சாஸ்தா.

குல தெய்வ வழிபாடு என்பது வெறும் கிராமத்து வழிபாடு அல்லது கிராமத்து தெய்வத்தின் வழிபாடு மட்டும் அல்ல..

குல தெய்வ வழிபாடு விட்டு போன உறவுகளை இணைப்பதற்காக, உறவுகள் விட்டு போகாமல் இருப்பதற்காக, பட்டுப் போன உறவுகளை துளிர வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு புண்ணிய சடங்கு ஆகும்.

குலதெய்வத்தை வழிபட்டு அனைவரும் குடும்பத்தோடு ஒற்றுமையாக இருப்போம்.

அவரவர் குலதெய்வத்தின் அருளாசிகள் அனைவருக்கும் கிட்டட்டும்.

படித்ததில் மனம் கவர்ந்தது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலுக்குள் திவ்ய உலா வந்தவர் மஹா பெரியவர். கங்கை கொண்டான் மண்டபத்தில் ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயில் சார்பாக வானமாமலை, அஹோபிலம், காஞ்சி காமகோடி பீடம் ஆகிய மூன்று மடங்களின் பீடாதிபதிகளுக்கு மட்டும் சடாரி மரியாதை உண்டு. அந்த வகையில் மஹா பெரியவருக்குப் பரிவட்டம் கட்டி சடாரி சாற்றியுள்ளனர்.

108 வைணவத் தலங்களுள் ஒன்றான திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் ஐந்து திவ்யதேச பெருமாள்களை ஒரே இடத்தில் தரிசிக்கும்படியாக அமைந்துள்ளது.
🙏🏾#ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் தரிசித்து, பாடல் பெற்ற தலங்களை மங்களாசாசனம் செய்தவை என சிறப்பித்து வழங்குதல் சம்பிரதாயம். அப்படி பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.

திருமங்கை ஆழ்வார் பாசுரத்தின் இறுதியில் தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி என்ற வாக்கின் மூலம் ஆலயத்தின் பழைமையும், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் என்ற மயிலையும் இணைந்திருந்தமை தெரிகிறது.

இரண்டு வாசல், இரண்டு துவஜஸ்தம்பம், இரண்டு கருட சன்னிதி ஆகிய தனிச் சிறப்பு கொண்ட திருக்கோயில் இது.

வைகுந்தத்திற்கு இணையான இத்திருத்தலத்தில் மூலவர் சன்னிதி என்று வழங்கப்படும் பார்த்தசாரதி சன்னிதியில் மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் ஆஜானுபாகுவாய் பகவான் ருக்மணி தேவி, அண்ணா பலராமன், தம்பி சாத்யகி, மகன் ப்ரத்தும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் குடும்ப சமேதராய் விளங்குகிறார்.

ஆனால் உற்சவத் திருநாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் விளங்கும் உற்சவர் பார்த்தசாரதி சுவாமிதான் திருவீதி உலா வருவார்.

இத்திருக்கோயிலில் திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், எம்பெருமானார் எனப் போற்றப்படும் ஸ்ரீமத் ராமானுஜர், வைணவ கிரந்தங்களை பெருவாரியாக தொகுத்து இன்றுவரை அனுசந்திக்கும்படி அருளிய மகான் மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன.

🔥  #பள்ளி_கொண்ட கோலத்தில் பெருமாள்

தனிச் சன்னிதியில் ராமர், சீதா, லட்மணன், ஆஞ்சநேயருடன் சேவை சாதிக்கிறார். அருகிலேயே ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்திலேயே திருச்சன்னிதி கொண்டுள்ளார்.

மனம்குளிரப் பெருமாளைத் தரிசித்துவிட்டு சன்னிதியை விட்டு வெளியே வந்தால் ஆழ்வார், ஆச்சாரியர்களைத் தரிசித்தபடியே வரும்பொழுது சிறிய திருவடியான ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம்.

வேதவல்லித் தாயார் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். நித்ய கருட சேவையில் அருளுகின்றார் மூலவர் காஞ்சி வரதர்,

தனி வாசலும், தனி த்வஜஸ்தம்பமும் கொண்டு மூலவராக யோக நரசிம்மர் அருள்பாலிகிறார். உற்சவருக்கு அழகிய சிங்கர் என்பது திருநாமம். இந்தப் பெருமாளை `தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனே` என்று போற்றுகிறது பாசுரம்.

🔥💃#ஆண்டாள், தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். இச்சன்னிதியை அடுத்து, ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களை விளக்கும் வகையில் சுவர் ஓவியங்களாக வரையப்பட்டு, பாசுரங்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளவிதம் அற்புதம்🙏🏾

சிவசூரிய பெருமாள், கீழ்க்குடி, ராமநாதபுரம்



 சிவசூரிய பெருமாள், கீழ்க்குடி, ராமநாதபுரம்
 கோவில் பற்றிய அடிப்படை தகவல்கள்

 மூலவர்: சிவா

 நேரம்: மதியம் 6 முதல் 12 மணி வரை & மாலை 4 முதல் 8 மணி வரை

 நகரம் / நகரம்: கீழ்குடி

 மாவட்டம்: ராமநாதபுரம்

 தற்போதைய இடம் காரைக்குடி (51 கிமீ) ராமநாதபுரம் (56 கிமீ)

 புதுக்கோட்டை (88 கிமீ) சிவகங்கை (117 கிமீ)

 இடம்

 ஸ்தல புராணம் மற்றும் கோவில் தகவல்கள்

 திருவெற்றியூரில் இருந்து தொண்டி செல்லும் வழியில் இருந்ததால் இந்த புதிரான கோவிலுக்கு சென்றோம்.  திருவாடானையிலிருந்து தொண்டி செல்லும் பிரதான சாலையில் இருந்து தெற்கே சுமார் 3 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.  200க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கிராமமே சிறியது.

 இந்தக் கோவிலைப் பற்றி எங்கும் சரித்திரமோ, ஸ்தல புராணமோ கிடைக்கவில்லை, ஒருவேளை இது ஒப்பீட்டளவில் புதிய கோவிலாக இருக்கலாம்.  அப்படிச் சொன்னால், இது ஒரு புதிய கோயிலாக இருக்காது என்பதற்கான அறிகுறிகள்.  மாறாக, இங்குள்ள மூலக் கோயில் மிகவும் பழமையானதாக இருக்கலாம் - நான் ஏன் அப்படி நினைக்கின்றேன், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  விஷயம் என்னவென்றால், யாருக்கும் தெரியாது.

 உள்ளூர் ஒருவர் எங்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில், கோயில் கடைசியாக 2010 இல் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோயில் கிராமத்தின் அமைதியான பகுதியில் அமைந்துள்ளது, பெரிய நீர்நிலை (இது கோயிலின் தீர்த்தமாகவும் செயல்படுகிறது) கோயிலுக்கு வடக்கே உள்ளது.  -மேற்கு.

 எவ்வாறாயினும், சிவன் மற்றும் விஷ்ணுவின் ஒற்றுமையையும் ஒற்றுமையையும் நிரூபிக்கவே இந்த கோயில் நிறுவப்பட்டதற்கான காரணம் என்று அவர் சொல்லக் கேட்டதாக உள்ளூர்வாசி குறிப்பிட்டார்.  கடந்த நூற்றாண்டுகளில், திருவெற்றியூர் வன்மீகநாதர் கோயிலின் ஸ்தல புராணத்தை தவறாகப் புரிந்துகொண்டு, விஷ்ணுவை திருவெற்றியூரில் உள்ள சிவபெருமானால் நோய்வாய்ப்பட்டு குணப்படுத்தியதாகக் கருதும் பக்தர்களிடையே சர்ச்சைகள் எழுந்ததால் இது தேவைப்பட்டது.

 கோவிலின் வாயில்கள் பூச்சுகளால் குறிக்கப்பட்ட வழக்கமான வைணவ சின்னங்களுடன் ஒரு வளைவால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.  உள்ளே ஒரு மண்டபம் உள்ளது, கருடன் (கிழக்கு முகமாக, பெருமாளுக்கு முதுகைக் காட்டி), அதைத் தொடர்ந்து ஒரு த்வஜஸ்தம்பம் உள்ளது.  நேராக விஷ்ணுவுக்கு சூரியநாராயணப் பெருமாள் என்ற கர்ப்பக்கிரகம் உள்ளது.  இங்கே சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், விஷ்ணு ஒரு மானுட உருவமாக சித்தரிக்கப்படவில்லை, ஆனால் ஒரு தூணால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார், அதில் திருநாமம் சின்னம் உள்ளது, மேலும் அடித்தளத்திற்கு அருகில் ஒரு சடாரி வைக்கப்பட்டுள்ளது.  அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் போன்ற சில இடங்களில் மட்டுமே காணப்படும் விஷ்ணுவின் அசாதாரணமான சித்தரிப்பு இது.  இந்த சன்னதிக்கு வெளியே வடக்குப் பகுதியில் ஆஞ்சநேயருக்கு சிறிய சன்னதி உள்ளது.

 தூண் வழிபாட்டின் முதன்மை வடிவமாகக் கருதப்படுகிறது, மேலும் இது வேத வழிபாடு (எந்த மூர்த்திகள் அல்லது உருவப்படங்கள் இல்லாமல் இருந்தது), மற்றும் சடங்கு ஆகம வழிபாடு (கோயில்கள் கட்டுதல், தெய்வங்களை நிறுவுதல் போன்றவற்றைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட விதிகளைக் கொண்டுள்ளது) ஆகியவற்றுக்கு இடையேயான மாற்றத்தின் புள்ளியைக் குறிக்கிறது.  ஒரு தூண் எந்த வடிவத்திலும் இருக்கலாம் - ஒரு சிறிய மணல் மேடு (பல்வேறு புற்று கோவில்கள்), ஒரு சிவலிங்கம் (இதுவும் ஒரு தூண்), அல்லது ஒரு மலை அல்லது மலை (திருவண்ணாமலை அல்லது கைலாசம்) போன்ற பெரியது.

 இடப்புறம் சிவபெருமானுக்கு தனி சன்னதி உள்ளது, இருப்பினும் தெய்வத்திற்கு பெயர் இல்லை.  இந்த சன்னதியின் வெளியில் விநாயகர் மற்றும் முருகன் ஆகியோருக்கு சிறிய சன்னதிகள் உள்ளன.  இந்த சிவன் சன்னதியின் கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் பிரம்மா உள்ளனர் - அந்த அளவிற்கு, இது பெரும்பாலும் ஒரு சிவன் கோவிலாக முழுமையாக உள்ளது.

 மூலவர் சன்னதிக்கு வலதுபுறம் மற்றொரு சுவாரஸ்யமான சன்னதி உள்ளது.  மேலே உள்ள ஸ்டக்கோ படங்களைப் பார்த்தால், இது ஒரு கிராம தேவதையின் ஆலயமாகத் தோன்றும்.  இருப்பினும், உள்ளே ஒரு தூண் உள்ளது, இது மிகவும் பழமையானதாகத் தெரிகிறது.

 தூண் அதன் செங்குத்து அச்சில் எட்டு மற்றும் நான்கு பக்க முகங்களுடன் மாறி மாறி, விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒவ்வொன்றையும் சித்தரிக்கும் பொறிக்கப்பட்ட படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  தூணே சிவனைக் குறிக்கிறது, தசாவதாரம் விஷ்ணுவைக் குறிக்கிறது - இதை ஒரு சிவ-விஷ்ணு சன்னதியாக ஆக்குகிறது (அல்லது கோவிலின் பெயரால் கூட).

 கோயிலின் வடக்கு/வடகிழக்கு பகுதியில் தனி நவக்கிரகம் சன்னதி உள்ளது.

 உங்கள் வருகைக்கான பிற தகவல்கள்

 கோயில் நேரங்கள் கூறப்பட்டாலும், இது ஒரு கிராமக் கோயிலாக இருப்பதால், கோயில்களின் கிரில் கேட்கள் மூடப்பட்டாலும், பிரதான வாயில்கள் பொதுவாகத் திறக்கப்படாமல் இருக்கும். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன். 

Followers

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

_வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்_ 'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னக...