Wednesday, March 13, 2024

தானம், தர்மம் என்கிறார்களே?அப்படியென்றால் என்ன?

_*தானம் தர்மம்*_
_*தானம், தர்மம்*_ _*என்கிறார்களே?*_
_*அப்படியென்றால் என்ன?*_
_*மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின்*_ _*உயிரானது தன் தந்தை சூரிய*_ _*தேவனுடன் பரம்பொருள்*_ _*ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க*_ 
_*பேறு பெற்றது.*_

_சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது._

_*இதை உணர்ந்த ஈசன்,*_ 
_*அவர் முன் எழுந்தருளினார்.*_

_சூரியனே,_

_*என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டவர் ஈசன்.*_

_பரம்பொருளே.._

_*பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.*_

_ஆனால்,_

_*எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே.*_

_பிறகு எப்படி அவனுக்கு மரணம்_ _ஏற்பட்டது?_ 
_இது அநீதி_ _அல்லவா?_ _என கேட்டார் சூரியத் தேவன்._

__*இறை சிரித்தது.*_

_சூரியனே..._

_*நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள்... என்றது.*_

_தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்._

_*புண்ணியக் கணக்கில் சேராது.*_

_ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட...._

_*ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.*_

_கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை._

_*எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.*_

_அதனாலேயே_ _மரணம் அவனை எளிதாய்_ _நெருங்கியது. இப்போது புரிந்ததா?_ _என கேட்க,_ 
_ஈசனை வணங்கி நின்ற சூரியத் தேவன்._

_*தானமும்*_
_*தர்மமும்*_
_*பாவமும்*_
_*புண்ணியமும்*_
_*எல்லாமும் நீயே*_
_*என்பதும் புரிந்தது என்கிறார்.*_

_நாமும்_ _புரிந்துகொள்வோம்._

_*கேட்டு*_ _*கொடுப்பது*_ _*தானம்*_ 
_*கேட்காமல்*_ _*அளிப்பது*_ _*தர்மம்*_
 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...