Monday, March 25, 2024

ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) கோயில் தலவரலாறு

தலவரலாறு ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) கோயில் தலவரலாறு இறைவர் திருப்பெயர்:   பசுபதீஸ்வரர், அஸ்வத்தநாதர், ஆவூருடையார்.  இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை, பங்கஜவல்லி.  தல மரம்:     தீர்த்தம் : பிரமதீர்த்தம், காமதேனுதீர்த்தம் முதலியன.  வழிபட்டோர்:சம்பந்தர், சேக்கிழார்,காமதேனு, பிரமன், சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள்,வசிட்டர் ஆகியோர். 
ஊர் - ஆவூர்; கோயில் - பசுபதீச்சுரம்.
 
வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கியதலம். (காமதேனு உலகிற்கு வந்த இடம். கோ + வந்த + குடி = கோவந்தகுடி ஆயிற்று)
கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயு தேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.
இங்குள்ள இரு அம்பிகைகளில், மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பங்கஜவல்லி அம்பாள்-இதுவே, பழமையானது. (தேவாரத்தில் 'பங்கயமங்கை விரும்பும் ஆவூர் ' என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே.)

திருமுறைப் பாடல்கள் : 

1. சம்பந்தர்   - 1. புண்ணியர் பூதியர் பூதநாதர் (1.8) 

2. சேக்கிழார் -    பொங்கு காதலில் (12.28.376)

   தல மரம் : அரசு

கோச்செங்கட் சோழன் திருப்பணி - மாடக் கோயில்.
மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
சங்கப்புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலிய சார்றோர்களைத் தந்த ஊர்.
 
கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது.
கல்வெட்டுச் செய்தியில் "நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் " என்று இறைவன் குறிக்கப்படுகிறார்.
 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...