Saturday, June 1, 2024

துர்க்கை அம்மன் வழிபாடு









துர்க்கை அம்மன் வழிபாடு பற்றிய பதிவுகள் :*துர்க்கை அம்மன் வழிபாடு துர்க்கை அம்மன் வழிபாடு 
அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.
துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை.

துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

வழக்கு விவகாரங்கள் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் பந்த நிவாரணமும் சித்திக்கும்.

பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்காதேவி. துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும்.

ஸ்ரீ துர்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி ``மயில்தோகை''. ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி அவன் கைவசமாகும்.

ஸ்ரீ துர்கா தேவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது. துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.

துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது மந்திர சாஸ்திரம். 

1. குமாரி, 
2. த்ரிமூர்த்தி, 
3. கல்யாணி, 
4. ரோஹிணி, 
5. காளிகா, 
6. சண்டிகை, 
7. சாம்பவி, 
8. துர்கா, 
9. சுபத்ரா.

*சுவாஸினி பூஜையில் :*

1. சைலபுத்ரி, 
2. ப்ரம்ஹசாரிணி, 
3. சந்த்ரகண்டா, 
4. கூஷ்மாண்டா, 
5. மகாகௌரி, 
6. காத்யாயனி, 
7. காளராத்ரி, 
8. மகாகௌரி, 
9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.




துர்க்கை என்ற சொல்லில் த்', உ', ர்', க்', ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. 

த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். க்' என்றால் பாபத்தை நலியச் செய்பவள். ஆ' என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...