Monday, September 16, 2024

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...


12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின் 
108 திருப்பதிகளில்
(வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்கிய_திவ்ய_தேசங்களின் (#திருப்பதிகளின்) 
#மூலவர்களை தரிசிப்போம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

உலகம் முழுவதும் ஏராளமான பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆனாலும் மிகவும் போற்றப்படுவது சில கோயில்கள் மட்டுமே. அதிலும் திவ்ய தேச தரிசனம் மோட்ஷத்தை தரும் என வைணவர்கள் சொல்கிறார்கள்.

ஒருமுறை வைகுண்டத்திற்கு பெருமாளை தரிசிக்க சென்ற பிரம்ம தேவர், "வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீங்கள் வாசம் செய்கிறீர்?" என கேட்டார். அதற்கு பெருமாள், " ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச" என பதிலளித்தார்.

ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. பெருமாள் நித்ய வாசம் செய்யும் இடங்கள் பூலோகத்தில் 107, வைகுண்டத்துடன் சேர்த்து 108. பெருமாள் நித்ய வாசம் செய்வதாக அவரே திருவாய் மலர்ந்தருளிய இடங்களுக்கு தான் திவ்யதேசங்கள் என்று பெயர். இதில் பூலோக வைகுண்டம் என்றும், திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கொண்டாடப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில்.

108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, வைகுண்டம் 1 என உள்ளன. திவ்ய தேசங்களில் 27 ல் கிடந்த திருக்கோலத்திலும், 21ல் இருந்த திருக்கோலத்திலும், 60 ல் நின்ற திருக்கோலத்திலும் திருமால் அருள்பாலிக்கிறார். 79 திவ்ய தேசங்கள் கிழக்கு நோக்கியும், 19 திவ்ய தேசங்கள் மேற்கு நோக்கியும், 3 திவ்ய தேசங்கள் வடக்கு நோக்கியும், 7 திவ்ய தேசங்கள் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.

​108 திவ்ய தேசங்கள்:

1. ஸ்ரீரங்கம் (ஸ்ரீரங்கநாதர் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (திருச்சி)

2. திருஉறையூர் (அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி) தமிழ்நாடு (திருச்சி)

3. தஞ்சை (நீலமேகம் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)

4. சுந்தர்ராஜப்பெருமாள் (வடிவழகியநம்பி - அழகியவல்லி) தமிழ்நாடு (திருச்சி)

5. உத்தமர் கோயில் (புருஷோத்தமன் - பூர்ணவல்லி) - தமிழ்நாடு (திருச்சி)

6. திருவெள்ளரை (புண்டரீகாக்ஷன் - பங்கயச் செல்வி) - தமிழ்நாடு (திருச்சி)

7. புள்ளபூதங்குடி (வல்வில் ராமன் - பொற்றாமறையாள்) - தமிழ்நாடு (கும்பகோணம்)

8. கோயிலடி (அப்பக்குடத்தான் - இந்திராதேவி(கமலவல்லி)) - தமிழ்நாடு (திருச்சி)

9. ஆதனூர் (ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

10. தேரழுந்தூர் (ஆமருவியப்பன் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

11. சிறு புலியூர் (அருமாகடல் - திருமாமகள்) - தமிழ்நாடு (சீர்காழி)

12. திருச்சேரை (சாரநாதன் - சாரநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

13. தலைச்சங்காடு (நாண்மிதியப்பெருமாள் - தலைச்சங்கநாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)

14. கும்பகோணம் (சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி) - தமிழ்நாடு (குடந்தை)

15. கண்டியூர் (ஹரசாபவிமோசனர் - கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)

16. ஒப்பிலியப்பன் (ஒப்பிலியிப்பன் - பூமிதேவி) - தமிழ்நாடு (குமப்கோணம்)

17.திருக்கண்ணபுரம் (சௌரிராஜன் - கண்ணபுரநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

18. திருவாலி,திருநகரி (வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

19. நாகப்பட்டினம் (சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி) - தமிழ்நாடு (நாகப்பட்டினம்)

20. நாச்சியார்கோயில் (நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார்) - தமிழ்நாடு (குமபகோணம்)

21. நாதன் கோயில் (ஜகந்நாதர் - செண்பகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

22. மாயவரம் (பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

23. சிதம்பரம் (கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

24. சீர்காழி (தாடாளன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

25. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) (ஜகத்ரட்சகன் - பத்மாசநவல்லி)- தமிழ்நாடு (கும்பகோணம்)

26. திருக்கண்ணங்குடி (லோகநாதன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

27. திருக்கண்ணமங்கை (பக்தவத்சலன் - அபிசேகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

28. கபிஸ்தலம் (கஜேந்த்ரவரதர் - ரமாமணிவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

29. திருவெள்ளியங்குடி (கோலவில்லி ராமர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

30. மணிமாடக் கோயில் (சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

31. வைகுந்த விண்ணகரம் (வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

32. அரிமேய விண்ணகரம் (குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

33. தேவனார் தொகை (தேவநாயகர் - ஸமுத்ரதநயா) - தமிழ்நாடு (சீர்காழி)

34. வண்புருடோத்தமம் (புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

35. செம்பொன் செய்கோயில் (செம்பொன்னரங்கர் - சவேதபுஷ்பவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

36.திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால் - செங்கமலவல்லி) தமிழ்நாடு (சீர்காழி)

37. திருமணிக்கூடம் (மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)

38. திருக்காவளம்பாடி (கோபாலக்ருஷ்ணன் - செங்கமலநாச்சியார்)- தமிழ்நாடு (சீர்காழி)

39. திருவெள்ளக்குளம் (ஸ்ரீநிவாஸன் - பத்மாவதி) - தமிழ்நாடு (சீர்காழி)

40. திருபார்த்தன் பள்ளி (தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன்) - தமிழ்நாடு (சீர்காழி)

41.திருமாலிருஞ்சோலை (அழகர் - சுந்தரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

42. திருக்கோட்டியூர் (சௌம்யநாராயணர் - மஹாலக்ஷ்மி) - தமிழ்நாடு (சிவகங்கை)

43. திருமெய்யம் (சத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார்) - தமிழ்நாடு (புதுக்கோட்டை)

44. திருப்புல்லாணி (கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி)- தமிழ்நாடு (ராமநாதபுரம்)

45. திருத்தண்கால் (தண்காலப்பன் - அன்னநாயகி) - தமிழ்நாடு (சிவகாசி)

46. திருமோகூர் (காளமேகம் - மோஹனவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

47. கூடல் அழகர் கோயில் (கூடலழகர் - மதுரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

48. ஸ்ரீவில்லிபுத்தூர் (வடபத்ரசாயி - ஆண்டாள்) - தமிழ்நாடு (ஸ்ரீவில்லிபுத்தூர்)

49. திருக்குருகூர் (நவதிருப்பதி) (ஆதிநாதர் - ஆதிநாதவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

50. தொலைவில்லிமங்கலம் (இரட்டைத் திருப்பதி, நவதிருப்பதி) (அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

51. வானமாமலை (நவதிருப்பதி) (தோத்தாத்ரி நாதர் - ஸ்ரீவரமங்கை) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

52. திருப்புளிங்குடி (நவதிருப்பதி) (காய்ச்சினவேந்தன் - மலர்மகள்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

53. திருப்பேரை (நவதிருப்பதி) (மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

54. ஸ்ரீவைகுண்டம் (நவதிருப்பதி) (கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

55. திருவரகுணமங்கை(நத்தம்)(நவதிருப்பதி) (விஜயாஸனர் - வரகுணவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

56. திருக்குளந்தை (நவதிருப்பதி) (மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

57. திருக்குறுங்குடி (வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

58. திருக்கோளூர் (நவதிருப்பதி) (வைத்தமாநிதி - கோளூர்வல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

59. திருவனந்தபுரம் (அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலக்ஷ்மி) - கேரளம் (கோவளம்)

60.திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) (திருக்குறளப்பன் - கமலவல்லி)- தமிழ்நாடு (கன்னியாகுமரி)

61. திருக்காட்கரை (காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி) - கேரளா (கோட்டயம்)

62. திருமூழிக்களம் (திருமூழிக்களத்தான் - மதுரவேணி) - கேரளா (கோட்டயம்)

63. திருப்புலியூர் (மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

64. திருச்செங்குன்றுர் (இமையவரப்பன் - செங்கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

65. திருநாவாய் (நாராயணன் - மலர்மங்கை நாச்சியார்) - கேரளா (திருச்சூர்)

66. திருவல்லவாழ் (கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து) - கேரளா (கோட்டயம்)

67. திருவண்வண்டுர் (பாம்பணையப்பன் - கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

68. திருவட்டாறு (ஆதிகேசவன் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கன்னியாகுமரி)

69. திருவித்துவக்கோடு (உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி) - கேரளா (திருச்சூர்)

70. திருக்கடித்தானம் (அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

71. திருவாரன்விளை (திருக்குறளப்பன் - பத்மாசனி) - கேரளா (கோட்டயம்)

72. திருவஹீந்திபுரம் (தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி) - தமிழ்நாடு (கடலூர்)

73. திருக்கோவலுர் (திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார்) - தமிழ்நாடு (கடலூர்)

74. திருக்கச்சி (வரதராஜன் - பெருந்தேவி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

75. அஷ்டபுஜகரம் (ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

76. விளக்கொளி பெருமாள் (தூப்புல்) (தீபப்ரகாசர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

77. திருவேளுக்கை (முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

78. திருப்பாடகம் (பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

79. திருநீரகம் (ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

80. நிலாத்திங்கள் (நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

81. திரு ஊரகம் (உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

 
82. திருவெக்கா (யதோத்தகாரி - கோமளவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

83. திருக்காரகம் (கருணாகரர் - பத்மாமணி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

84. திருக்கார்வானம் (கள்வர்பெருமாள் - கமலவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

85. திருக்கள்வனூர் (ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

86. திருப்பவளவண் (பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார்)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

87. பரமேச்சுரவிண்ணகர் (பரமபதநாதன் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

88. திருப்புட்குழி (விஜயராகவன் - மரகதவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

89. திருநின்றவூர் (பத்தவத்ஸலர் - ஸுதாவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

90. திரு எவ்வுள் (வைத்ய வீரராகவர் - கனகவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

நேபாளம், உத்தராஞ்சலிலும் திவ்ய தேசங்கள் உள்ளன
91. திருநீர்மலை (நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை) - தமிழ்நாடு (சென்னை)

92. திருவிடவெந்தை (நித்யகல்யாணர் - கோமளவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

93. திருக்கடல்மல்லை (ஸ்தலசயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார்) - தமிழ்நாடு (சென்னை)

94. திருவல்லிக்கேணி (பார்த்தசாரதி - ருக்மணி)- தமிழ்நாடு (சென்னை)

95. திருக்கடிகை (சோளிங்கர்) (யோகநரசிம்மர் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

96. திருவேங்கடம் (திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை) - ஆந்திரப் பிரதேசம்

97. அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) (லட்சுமிநரஸிம்ஹன் - செஞ்சுலக்ஷ்மி) - ஆந்திரப் பிரதேசம்

98. திருவயோத்தி (சக்ரவர்த்திதிருமகன் - சீதாபிராட்டி) - உத்தரப்பிரதேசம்

99. நைமிசாரண்யம் (தேவராஜன் - ஹரிலக்ஷ்மி) - உத்தரப்பிரதேசம்

100. சாளக்கிராமம் (ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி) - நேபாளம்

101. பத்ரிகாச்ரமம் (பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி) - உத்தராஞ்சல்

102. தேவப்ரயாகை (நீலமேகம் - புண்டரீகவல்லி) - உத்தராஞ்சல்

103. திருப்ரிதி (பரமபுருஷன் - பரிமளவல்லி) - உத்தராஞ்சல்

104. திரு த்வாரகை (கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார்) - குஜராத்

105. வடமதுரை (கோவர்தனகிரிதாரி - சத்யபாமா) - டெல்லி

106. திருவாய்ப்பாடி (நவமோஹன க்ருஷ்ணன் - ருக்மணி,சத்யபாமா) - டெல்லி

107. திருப்பாற்கடல் (க்ஷீராப்திநாதன் - கடலமகள் நாச்சியார்) - புவியில் இல்லை

108. பரமபதம் (பரமபதநாதன் - பெரியபிராட்டியார்) - நாதன் திருவடி

#புரட்டாசி மாத சிறப்பு:

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக புரட்டாசி மாதம் சனிக்கிழமை வந்தால் சொல்லவே வேண்டாம். எல்லோரது வீட்டிலும் தளிகையும், கோவிந்தா கோவிந்தா என்ற நாமமும் நிச்சயமாக உச்சரிக்கும். வருடத்தில் 12 மாதங்கள் இருக்க, புரட்டாசி மாதத்தில் மட்டும் பெருமாளுக்கு எதற்காக இத்தனை சிறப்பு பூஜை புனஸ்காரங்கள். என்றைக்காவது நீங்கள் யோசித்து உள்ளீர்களா. இதற்கான வரலாற்று ரீதியான ஒரு கதையை இந்த நன்னாளில் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முன்பொரு காலத்தில் தொண்டைமான் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பெருமாள் பக்தன். தன்னுடைய அரண்மனையில் தங்கத்தால் செய்த பெருமாளை வைத்து, அனுதினமும் தங்க புஷ்பத்தால், வெள்ளி புஷ்பத்தால், அன்றாடம் பூஜித்து பெருமாளை வழிபடுவது மன்னனுடைய வழக்கமாக இருந்து வந்தது.

வழக்கம்போல ஒரு நாள் காலை எழுந்து மன்னன் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, எப்போதும்போல் பெருமாள் சிலைக்கு முன்பு வந்து அமர்ந்து, தயாராக இருக்கும் பூக்களை எடுத்து பூஜை செய்ய தொடங்கினான். ஆனால், மன்னன் எடுத்துப் போடக் கூடிய தங்க புஷ்பங்களும், வெள்ளி புஷ்பங்களும் வாசனை மிகுந்த மலர்களும் திடீரென்று களிமண் பூக்களாக மாறின.

மன்னன் புஷ்பத்தை எடுத்து பெருமாள் பாதங்களில் முதல் முறை போடும் போது, அந்த பூ, களிமண் பூவாக மாறி பெருமாள் பாதங்களில் விழுகிறது. இரண்டாவது முறை சோதித்து பார்க்கின்றான். இரண்டாவது முறையும், தங்கம் வெள்ளி பூக்களும் களிமண் பூக்கள் ஆகவே மாறுகின்றது. இந்த மன்னனுக்கு ஒரே குழப்பம். சரி என்ன செய்வது. ஆரம்பித்த பூஜையை நிறைவு செய்ய வேண்டும் அல்லவா. பூஜையை அரைகுறை மனதோடு நிறைவு செய்கின்றான். காலையில் இந்த பூஜையை முடித்த மன்னனுக்கு மனதில் ஏகப்பட்ட குழப்பம். ‘தான் செய்த பூஜையில் ஏதாவது தவறு நடந்திருக்குமோ. பெருமாளுக்கு ஏதாவது குறை வைத்திருக்கின்றோமோ’ என்ற ஏகப்பட்ட கேள்விகள் மன்னனின் மனதில் எழுகின்றது.

அன்றைய நாள் முழுவதும் சரியாகவே செல்லவில்லை. மனக் குழப்பத்தோடு அரைகுறை வேலைகளை செய்து எப்படியோ நாளை கடத்தி விட்டான். இரவு தூங்கும்போது பெருமாளை வேண்டிக் கொள்கின்றான். என்னுடைய பூஜையில் ஏதாவது குறை இருந்தால் என் கனவிலாவது வந்து அதை தெரியப்படுத்த வேண்டும், நாராயணா! என்று கூறிவிட்டு தூங்க சென்றான் மன்னன்.

தன்னுடைய பக்தனின் வேண்டுதலுக்கிணங்க பெருமாள், மன்னனுடைய கனவில் தோன்றி ‘உன்னுடைய குழப்பத்திற்கு எல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால், நீ நாளை பீமாவை போய் காண வேண்டும்’. என்று கூறிவிட்டு, பெருமாள் மறைந்துவிட்டார். மன்னனுக்கு தூக்கமும் கலைந்துவிட்டது. இந்த பீமா யாராக இருக்கும் என்ற குழப்பமும் மன்னனின் மனதில் எழுந்தது.

மறுநாள் அதிகாலை வேளையிலேயே எழுந்த மன்னன் தன்னுடைய வேலை ஆட்களை அனுப்பி, தன்னுடைய நாட்டில் பீமா யார் என்று விசாரித்து, பீமையா வாழும் இடத்தையும் கண்டுபிடித்து விட்டான் மன்னன். இந்த பீமா என்பவன் வயது முதிர்ந்த ஒரு குயவன். குயவன் என்றால் மண்பானை செய்வார்கள் அல்லவா, அவர்களை தான் குயவன் என்று சொல்லுவார்கள்.

இந்த குயவனும் ஒரு பெருமாள் பக்தன் தான். ஆனால் இந்த குயவனால், வாசனை மிகுந்த பூக்களைக் கொண்டு கூட பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய முடியாது. மனதார தினம்தோறும் பெருமாளை நினைத்து வழிபாடு செய்பவன் தான் குயவன்.

குயவனை தூரத்தில் நின்று பார்க்கின்றார் மன்னன். அந்த குயவன் பானை செய்து கொண்டு இருக்கின்றான். பானை செய்யும் போது ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற நாமத்தை உச்சரித்துக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்கின்றான். அந்த சமயம் பார்த்து அவனுக்கு முன்னால் பெருமாள் காட்சி தருகின்றார். பெருமாளைப் பார்த்து அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் கையிலிருந்த களிமண்ணில், பூக்களை செய்து பெருமாள் பாதங்களில் போட்டு பெருமாளை வணங்கினான். அந்தக் குயவன்.

மன்னனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கோவில் கட்டி, தங்க பூக்களால் வெள்ளி பூக்களால் அர்ச்சனை செய்த என்னுடைய கண்ணுக்கு பெருமாள் தரிசனம் கொடுக்க வில்லை. ஆனால், சாதாரண குயவன் இவனுடைய பக்திக்கு பெருமாள் காட்சி தருகிறார் என்றால், *அந்த குயவனுடைய பக்தியில் எவ்வளவு உன்னதம் இருக்க வேண்டும்.* என்று நினைத்து, பெருமிதம் அடைகின்றான் மன்னன்.

அந்த மன்னனுக்கு அப்போது தான் புரிந்தது. *பக்தி என்பது நாம் இறைவனுக்கு கொடுக்கக் கூடிய பொருட்களில் அல்ல. நம்முடைய சுயநலம் இல்லாத உண்மையான மனதும், சுயநலம் இல்லாத வேண்டுதலுமே உண்மையான பக்தி கான எடுத்துக்காட்டு என்பதை மன்னன் மனதா உணர்ந்து விட்டான்.*

இப்போது உங்களுக்கும் புரிகின்றதா? *இறைவழிபாட்டிற்கு உண்மையான மனது தான் முக்கியம். ஜாதி மதம் இனம் பணம் காசு இவைகளைப் பார்த்து என்றுமே இறைவன் அருளாசியை கொடுப்பது கிடையாது.* இந்த கதையை உணர்த்தும் வகையில், இன்றும் திருப்பதியில் மண்பாண்டங்களில் சில நைவேத்தியங்களை பிரத்தியேகமாக வைத்து பெருமாளுக்கு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

பெருமாள் தரிசனத்தைப் பெற்ற குயவனுக்கு அன்றைய தினம் மோட்சமும் கிடைத்தது. இந்த சம்பவம் நடந்த அந்த நன்னாள் புரட்டாசி மாத சனிக்கிழமை. புரட்டாசி மாத சனிக்கிழமை அன்று யார் பெருமாளை நினைத்து கொண்டு, பெருமாள் வழிபாடு செய்து கொண்டே இருக்கிறார்களோ, அவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் கோவிந்தா கோவிந்தா நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...