Friday, February 7, 2025

நல்ல வேலை கிடைக்க முருகனை வழிபடுங்கள்.

_நல்ல வேலை கிடைக்க முருகர் வழிபாடு_

நிரந்தரமான நல்ல வேலை கிடைத்து, ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் பல பேருடைய கனவாகஇருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் நல்ல வேலை நல்லசம்பளத்தோடு, நமக்கு சவுகரியமான வேலை கிடைப்பது என்பதுகுதிரை கொம்பாக உள்ளது. ஆகவே ஏற்கனவே ஒருவேலையில் இருப்பவர்கள், திருப்திகரமாக அந்த வேலையை செய்யுங்கள். 

மனசாட்சிக்குவிரோதம் இல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய வேலையை செய்யுங்க. நிச்சயம் உங்களுக்கு நிறைவான வருமானம் கிடைக்கும். நல்ல வேலை இல்லையா. இருக்கின்ற வேலையில் நிம்மதி இல்லையா. ரொம்பவும் பணப்பிரச்சினையாக இருக்கிறது, இன்னும் கொஞ்சம் உயர்ந்த சம்பளத்தில், நல்ல வேலை கிடைத்தால் நல்லா இருக்கும் என்ற சூழ்நிலை உங்களுக்கு உண்மையாகவே இருக்கிறது எனும் பட்சத்தில், அந்த வேலையில் இருந்துமாறுவதற்கு, புது வேலையை தேடுவதற்கு முயற்சி செய்யலாம்.
 
அதைவிடுத்துசும்மா சும்மா வேலையை மாற்றிக்கொண்டே இருக்காதீங்க அது எதிர்காலத்துக்கு நல்லது இல்லை. வேலையே இல்லாதவர்களுக்கு வேறு வழியே இல்லை கிடைத்த வேலைக்கு கட்டாயம் போகணும். சம்பாதிக்கணும். சரி, வேலை கிடைக்கணும் சம்பாத்தியம் பெருகனும் என்றால் முருகர் வழிபாட்டை எப்படி செய்வது. ஆன்மீகம் சொல்லும் எளிமையான வழிபாடு இது.


*நல்ல வேலை கிடைக்க முருகன் வழிபாடு:*

செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் முருகர் பாதங்களில் விழுந்து வழங்கினால் நல்ல வேலை கிடைக்கும். செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரை காலை 6:00 மணியிலிருந்து 7:00, மதியம் 1:00 மணியிலிருந்து 2:00, இரவு 8:00 மணியிலிருந்து 9:00 இந்த மூன்று நேரங்களில் உங்களுக்கு எது சௌகரியமோ அந்தநேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

வீட்டிலேயே முருகர் படத்திற்கு முன்பாக ஒரு பித்தளை தாம்பூல தட்டை வைத்து அதில் இரண்டு கைப்பிடி துவரம் பருப்பை போட்டு, அதன் மேலே இரண்டுமண் அகல் விளக்குகளை வைத்து, நெய் ஊற்றி சிவப்பு நிறத்தில் திரி போட்டு விளக்கு ஏற்றி ‘முருகா எனக்கு நல்ல வேலை அமைத்து கொடு’ என்று வழிபாடு செய்யுங்கள். முருகரை முழுமையாக நம்பி இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை தோறும் செய்து வருபவர்களுக்கு வேலையில் இருக்கும் பிரச்சனை நீங்கும். 

வேலையே இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர்ந்த சம்பளம் உயர்ந்த பதவி தேவை என்பவர்களுக்கும் அவை எல்லாம் கிடைக்க முருகப்பெருமான் அருள் பாவிப்பர். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கும் நல்ல செய்தி வந்துசேரும். இந்த பரிகாரத்தை செய்துவிட்டுசில வேலைகளுக்காக தேர்வு எழுதினீர்கள் என்றால் அந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

பிரார்த்தனையில் நம்பிக்கை வையுங்கள். முருகப் பெருமானிடம் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய உழைப்பிலும் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கையோடு போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வழிபாட்டை முடித்துவிட்டு அடுத்த நாள் புதன்கிழமை அந்த துவரம் பருப்பு எல்லாம் எடுத்து வழக்கம் போல நீங்கள் சமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

அதிலிருந்து ஒரு பிடி துவரம் பருப்பைமட்டும் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பசுமாட்டிற்கோ அல்லது காக்கை குருவிகளுக்கு இரையாக போடுங்கள் நன்மை நடக்கும். நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்று நம்பப்படுகிறது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்.


பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில். 

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்.
தேவகன்னியர், காமதேனு, ஐராவதம், இந்திரன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், நான்கு திசைகளிலும் இறைவனைத் தரிசிக்கும் வசதி அமைந்த ஆலயம் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில். தேவ கன்னியாகிய பெண், காமதேனுவாகிய ஆ, யானையாகிய கடம் அனைத்தும் சேர்ந்து பெண்+ஆ+கடம்= பெண்ணாடகம் ஆனது. இதுவே மருவி பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது. தேவேந்திரன் தன் சிவ பூஜைக்கு மண்ணுலகில் இருந்து பூக்களைக் கொண்டுவர தேவகன்னியரைப் பணித்தான். அவர்கள் நடுநாட்டில் அமைந்துள்ள பெண்ணாடகத்து சிவாலய நந்தவனத்தில் இருந்த பூக்களின் அழகால் கவரப்பட்டனர். அந்த மலர்களைப் பறித்த அத்தல இறைவனுக்கு பூஜை செய்தனர். தேவ கன்னியர்கள் வராததால், இந்திரன் காமதேனுவை அனுப்பினான். அதுவும் இத்தலத்தில் மயங்கி, இறைவன் மீது பால் சொரிந்தது.
தொடர்ந்து வெள்ளை யானையை இந்திரன் அனுப்பி வைத்தான். அது இத்தலம் வந்து தன் பசிக்குத் தேவையான கரும்பும், வாழையும் உண்டு, அங்குள்ள இறைவனை கண்டு மகிழ்ந்து தன்னிலை மறந்தது. இறைவனுக்கு தானே மண்டபமாக நின்றி நிழல் தந்தது. பூக்களைப் பறிக்கச் சென்ற ஒருவரும் திரும்பாததால், இந்திரனே பூலோகம் வந்தான். அவனும் இத்தல இறைவனால் ஈர்க்கப்பட்டு, வழிபாடு செய்து பின் தேவலோகம் திரும்பினான்.தல வரலாறு : ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து உயிர் களையும் உடைமைகளையும் அழித்து வந்தது. ஆனால், வெள்ளாற்றிற்கும், தென்பெண்ணை ஆற்றிற்கும் இடைப்பட்ட நடுநாட்டில் மட்டும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதற்கு, அங்குள்ள இறைவனே காரணம் என்பதை தேவர்களும், முனிவர்களும் உணர்ந்தனர். அத்தல இறைவனிடம் மக்களைக் காத்தருள வேண்டி நின்றனர். அதற்குச் செவிசாய்த்த இறைவன், பிரளயத்தை தடுக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். நந்திதேவர் ஊழி வெள்ளத்தைத் தன் வாயால் உறிஞ்சி, உலகைக் காத்தருளினார். எனவே இத்தல இறைவன் ‘பிரளயகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆலய அமைப்பு : இவ்வாலயம் கிழக்கு நோக்கி எளிய நுழைவு வாசலைக் கொண்டுள்ளது. உள்ளே நுழைந்ததும், குடைவரை விநாயகர் அமந்துள்ளார். இதன்பின் கிழக்கு நோக்கிய அபூர்வ நந்தி, ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இடதுபுறம் அன்னை அழகிய காதலி சன்னிதி தனிக் கோவிலாக விளங்குகிறது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், சுவாமியை நோக்கியபடி கலிக்கம்பர், மெய்கண்டார் சன்னிதிகள் உள்ளன. அருகே நடராஜர் சன்னிதியும் காணப்படுகிறது. எதிர் திசையில் பலிபீடம், கொடிமரம், கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்திதேவர் காட்சிதர, பிரளயகாலேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. இவர் எண்பட்டை வடிவில் சதுர வடிவ ஆவுடையாரில், பிரம்மாண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார்.

கருவறைச் சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிட்சாடனர், சண்டேஸ்வரர், துர்க்கை ஆகியோர் திருமேனி காணப்படுகிறது. இது தவிர, தனி துர்க்கையம்மன் சன்னிதியும் கூடுதலாக அமைந்துள்ளது. ஆலய பிரகாரத்தில் கோடி விநாயகர், நால்வர், சந்தனக் குரவர்களான மெய்கண்டார், மறைஞானசம்பந்தர் மற்றும் கலிக்கம்பர், சேக்கிழார், தண்டபாணி ஆகியோர் திருவுருவங்கள் அமைந்துள்ளன. உற்சவமூர்த்தி மண்டபம், சப்தகன்னியர், நாகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், கஜலட்சுமி சன்னிதிகளும், நடராஜர் சபைக்குப் பின்புறம், பைரவர் மற்றும் சூரியபகவான் சன்னிதிகளும் உள்ளன.

பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலிகட்டுமலைக்கோவில் : சுவாமியின் கருவறை ஒட்டி 30 மீட்டர் உயரத்தில் சவுந்தரேஸ்வரர் வாழும் மலைக்கோவில், ஏறவும், இறங்கவும் படிக்கட்டுகள் கொண்டு அமைந்துள்ளது. இதனை ‘கட்டுமலைக் கோவில்’ என்று அழைக்கின்றனர். இவ்வாலயம், சவுந்திரவல்லி என்ற அடியாரால் எழுப்பப்பட்ட ஆலயம் என்றும், அவரின் விருப்பத்திற்காகக் காட்சி தரும் விதமாக உயரத்தில் இருந்து இறைவன் அருளினார் என்றும் கூறப்படுகின்றது.அழகிய காதலி : சண்டிகேஸ்வரர் சன்னிதியின் எதிரே வடக்குப் பிரகாரத்தில் எளிய நுழைவு வாசல் மூலம் அழகிய காதலி அம்மன் ஆலயத்தை அடையலாம். பலிபீடம், கொடிமரம், நந்திமண்டபம் இதனைக் கடந்ததும் துவாரபாலகிகள் இருவர் காட்சி தர, கருவறையின் உள்ளே எழிலான கோலத்தில் அன்னை காட்சி தருகிறாள். ஆமோதனம்பாள், கடந்தை நாயகி என்ற வேறு பெயர்களும் அன்னைக்கு உள்ளன.
ஆலயத்தின் தல மரம் தலமரம் செண்பக மரமாகும். தலத் தீர்த்தம் தெற்கே ஓடும் வெள்ளாறு ஆகும். இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.கலிக்கம்பர் : அறுபத்துமூவரில் ஒருவரான கலிக்கம்பர் அவதரித்த தலம் இது. வணிகர் குலத்தில் தோன்றிய இவர், தன் இல்லம் நாடி வருபவர் சிவனடியார்களுக்கு பாதபூஜை, அன்னம் பாலிப்பு செய்து வழிபடுவது வழக்கம். ஒரு சமயம் அவ்வாறு வந்த சிவனடியார்களில், தன் வீட்டில் பணி புரிந்தவரும் இருந்ததால், அவரின் பாதத்திற்கு நீர்வார்க்கத் தயங்கினார், கலிக்கம்பர் மனைவி. சிவனடியார் என்பதையே சிந்தையில் கொண்ட கலிக்கம்பர், இதனால் கோபம் கொண்டு மனைவியின் கையைத் துண்டித்தார். கலிகம்பரின் தீவிர பக்தியை மெச்சிய ஈசன், அவரது மனைவிக்கு இழந்த கையை மீண்டும் வழங்கி இருவருக்கும் கயிலைப்பேறு தந்தருளினார். இவர் வாழ்ந்த இடத்தில் தனிக்கோவில் ஒன்று ஆலயத்தின் அருகே கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ளது.
சந்தானக்குரவர்கள் சந்தானக் குரவர்கள் நால்வரில் இருவர் சிதம்பரத்திலும், மற்ற இருவர் பெண்ணடாகத்திலும் தோன்றியவர்களாவர். மெய்கண்ட நாயனார், மறைஞான சம்பந்தர் இருவரும் இத்தலத்தில் அவதரித்த அருளாளர்கள். மெய்கண்டாருக்கான திருவாவடுதுறை ஆதின ஆலயம், அச்சுத களப்பாளர் மேடு என்ற அவதார இடத்திலும், மறைஞானசம்பந்தர் மடம் பெண்ணாடகத்தில் உள்ள காமராஜர் தெருவிலும் அமைந்துள்ளன. அப்பரின் தோளில் இலச்சினை : தனக்கு விருப்பமான ஒன்றை, தங்கள் உடலில் பச்சைக் குத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். சமண மதத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய இவர், ‘சமணருடன் வாழ்ந்த இவ்வுடலோடு நான் எப்படி உயிர் வாழ்வேன். இவ்வுடலை நான் ஏற்கும் பொருட்டு என் தோள்களில் உமது இலச்சினையை பொறித்தருள வேண்டும்’ என்று இத்தல இறைவனிடம் வேண்டி நின்றார். அதற்கு இசைந்த இறைவன், இவரின் தோள்களில் சூலம், இடபம் ஆகிய குறிகளைப் பொறித்தார் என பெரியபுராணம் குறிப்பிட்டுள்ளது.

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

நாகர்கோவில் ஸ்ரீநாகராஜா அனந்தகிருஷ்ணன்திருக்கோயில்.

நாகர்கோவில் 
எனும்  பெயர் 
வரக் காரணமாய் அமைந்த #கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான 
உள்ள 
உலகப் புகழ்பெற்ற 
நாக தலமான
#நாகர்கோவில் 
#ஸ்ரீநாகராஜா 
#அனந்தகிருஷ்ணன்
திருக்கோயில் வரலாறு:

மனிதர்களுக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தை பிறப்பதில் தடை ஏற்படுகிறது. எனவேதான் ஜோதிடர்கள் நாகதோஷம் நீங்க பரிகாரம் கூறுவார்கள். நாகதோஷம் சருமவியாதியைத் தருகிறது. நாகரை நினைத்து வழிபட்டால் சருமவியாதி தீரும் என்பது நம்பிக்கை.

நம் நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும்பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும்.

நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் ஆகும். இங்கே கருவறையில் நாகமே மூலவராக உள்ளது. இன்றையதினம்  நாகர்கோவில் நாகராஜா ஆலயம் பற்றி அறிந்து கொள்வோம்.

நாகர்கோவில் நாகராஜா :

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற மாநகரின் பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில். நாகராஜா திருக்கோயில் நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து இருந்தாலும் தெற்கு திசையில் உள்ள கோபுரவாசல் வழியே பக்தர்கள் தரிசனத்துக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது.

சுவாமி : நாகராஜர்.

மூர்த்தி : அனந்த கிருஷ்ணன், சுப்ரமணிய சுவாமி, துர்க்கையம்மன், ஸ்ரீ தர்ம சாஸ்தா.

தீர்த்தம்: நாகதீர்த்தம்.

தலவிருட்சம் : ஓடவள்ளி.

தலச்சிறப்பு : 

இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம்.  இங்கு மாதக் கார்த்திகைகள் விசேஷம்  தருவதாக கருதப்படுகிறது.  இக்கோவிலுக்கு வெளியில் உள்ள தல விருட்சத்தை சுற்றி நாக சிலைகள் உள்ளன.  இதில் மஞ்சள் மற்றும் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும்.  இந்த  தலத்தில் மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.   கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது.  வயல் இருந்த இடம் என்பதால்  எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது.  இந்த நீருடன் சேர்ந்த மணலையே,  கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த மணலானது ஆடி மாதம் முதல்  மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல்  ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது.  இந்த தலத்தில் உள்ள  துர்க்கை சிலை, இங்கு உள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது.  அதனால் அன்னை "தீர்த்த துர்க்கை"  என்று அழைக்கப்படுகிறாள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை  அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம்  ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள்  உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

தல வரலாறு : 

இங்கு நாகராஜர் கோவில் ஏற்பட்டதற்கு பல காரணக் கதைகள் கூறப்படுகின்றன.  இதோ! அவைகளில் சில : புல், புதர், செடி, கொடிகள் என்று இருந்த இந்தக்காட்டில் புல் அறுக்கும்  பெண் ஒருத்தி, மாட்டிற்குப் புல் அறுக்கும் போது, அவள் கையில் இருந்த அரிவாள் ஐந்து  தலைநாகம் ஒன்றின் தலையில் பட்டு ரத்தம் பீறிட்டது.  இதைக்கண்டு பயந்து நடுங்கிய அப்பெண்,  பக்கத்தில் உள்ள கிராம மக்களை அழைத்து வந்தாள்.  அவர்கள் கூட்டமாக வந்து பார்க்கும்போது,  அந்த ஐந்து தலைநாகம் சிலையாக காணப்பட்டது.  கிராம மக்கள், ஒரு சிறிய தென்னங்கீற்றால்  வேயப்பட்ட கூரைக்கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.  நாளடைவில் அக்கம் பக்கத்து கிராம மக்கள்  கூட்டம் கூட்டமாக வந்து, நாகராஜரை தரிசித்துச் சென்றதில், ஆலயம் மிகப் பிரபலமாயிற்று.   தமிழகத்துக் கோவில்களில் வேறு எங்கும் காணப்படாத தனிச்சிறப்பு, ஆலயத்தின்  மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டதாகும்.

உதய மார்த்தாண்டவர்மா மன்னர், இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒரு நாள் மன்னர் கனவில் நாகராஜர் தோன்றி, "ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும்  விரும்புகிறேன். முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன்.  ஆதலால் அதை  மாற்ற வேண்டாம்'' என்று கூறியதால் இன்றும் மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டு உள்ளது. 

நடைதிறப்பு : காலை 4.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை. மாலை 5.00 மணிமுதல்இரவு 8.30 மணிவரை.

பூஜைவிவரம் : ஆறுகாலபூஜைகள்.

திருவிழாக்கள் :

ஆவணித் திருவிழா – நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் உற்சவம்.

தைஉற்சவம் – தேர் திருவிழா 10 - நாட்கள் 9 –ம்நாள் திருத்தேர்.

அருகிலுள்ள நகரம் : நாகர்கோயில் .

இருக்குமிடம் : கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ.

கோயில்முகவரி : அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில்,

நாகர்கோவில் - 629 001, கன்னியாகுமரி மாவட்டம்.

சரித்திர வரலாறு :

இத்திருக்கோயில் கட்டுமானம் தொடர்பாக ஒருகதை வழங்கி வருகிறது. கி.பி.1516 முதல் 1535 வரை நெல்லை மாவட்டம் களக்காட்டை தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்த மன்னர் பூதலவீர உதயமார்த்தாண்டன். இவர் தீராத சரும வியாதியால் அவதிப்பட்டு வந்தார். ஜோதிடர்கள் அவரது ஜாதகத்தை ஆராய்ந்து இந்த நோய் நாகதோஷத்தால் உண்டானது என்றும் நாஞ்சில் நாட்டு நாகராஜா கோயிலில் வழிபடால் இந்த வியாதி தீரும் என கூறினர். அப்போது நாகர்கோவில் நாகராஜா கோவிலின் சிறப்பு பற்றி அறிந்து ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து கோவிலுக்கு நேர்ச்சை செய்து வழிபட்டதால் அந்த மன்னரின் சருமநோய் தீர்ந்தது. இதற்கு பிரதியுபகாரமாக கோவிலின் சில பகுதிகளை அவர் கட்டிக்கொடுத்துள்ளார்.

ஆதிஷேசன் :

அனந்தன் ஆதிசேஷனின் பெயர் ஆயிரம் தலைகளை கொண்டவர் பார்சுவநாதர் புராணத்தில் இடம்பெறும் ஆயிரம் தலையுடைய நாகராஜனுக்கு இணையான தெய்வம் திருமாலை தாங்கும் ஆதிசேஷன். இதனால் இக்கோயில் வைணவக் கோயில் ஆனது. திருக்கோயிலின் வாயிலில் இரண்டு பெரிய 5 தலை நாகங்களின் சிலை நம்மை வரவேற்கின்றன. இத்திருத்தலத்தின் கருவறையில் 5 தலை நாகத்தின் உருவச் சிலையே மூலவரான நாகராஜ தெய்வமாக வழிப்படப்படுகிறது. நாகராஜாவிற்கு வழிபாடுகள் நடத்தியப் பிறகு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஆவணி ஞாயிறு வழிபாடு :

இதன் காரணமாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு, மேலும் சிறப்பு பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, வழிபட்டு செல்கிறார்கள். இத்திருக்கோயிலில் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் நாகதோஷம் இங்கு வழிபடுவதன் மூலமாக தோஷம் நீங்குகிறது என்பது ஐதீகம். இறைவன் - அனந்தகிருஷ்ணன், நகராஜா, தீர்த்தம் - நாகதீர்த்தம், தலவிருட்சம் - ஓடவள்ளி, ஆகமம் - தாந்திரீகம்

சைவம், வைணவம், பௌத்தம் :

நாகராஜாவை வழிபட்டப் பின்னர், அவருடைய வலப் பக்கத்திலுள்ள சன்னிதானத்தில் வாயு ரூபியாக எழுந்தருளியுள்ள சிவனை தரிசிக்கின்றனர்.

அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் தூண்களில் சமண சமயத்தின் தீர்த்தங்கர்களான பார்சுவ நாதரும், மகா வீரரும் தவக்கோலத்திலுள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவாயில் நேபாள பெளத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர். எனவே இத்திருக்கோயில் சைவ, சமண, வைணவ, பெளத்த மார்க்கங்களின் சங்கமமாக கருதப்படுகிறது.

கொடிமரமும் தல விருட்சமும் :

ஓடவள்ளி என்று கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. இந்தக் கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணர் சன்னிதிக்கு எதிரேயே கொடி மரம் இருக்கிறது. தை மாதத்தில் அனந்த கிருஷ்ணருக்கே பிரம்மோற்சவமும் நடக்கிறது. அப்போது அனந்தகிருஷ்ணர் திருத்தேரில் எழுந்தருள்வார். தைமாத ஆயில்ய தினத்தன்று ஆராட்டு வைபவமும் நடைபெறும்.

ஆமைக் கொடி : 

பெருமாள் கோவில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும், கருடனும் பகைவர்கள் என்பதால், இத்தல பெருமாள் சன்னிதியின் கொடி மரத்தில் ஆமை இருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது. விழாக்களில் வாகனமாகவும் ஆமையே இருக்கிறது.

நாக வழிபாட்டின் நன்மை :

நல்லவை அனைத்தையும் தந்தருளும் மகாசக்தி கொண்டது நாக வழிபாடு. இத வழிபடும் முறையை அறிந்துகொண்டு, அதன்படியே வழிபட்டு வணங்கினால், எல்லா வளமும் நலமும் பெறலாம்!. புற்றை மூன்று முறை வலம் வந்து அம்மனை வழிபடுவது போல் வேண்டினால் எண்ணியவை நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

நாகதோஷம் நீங்கும் : 

குடும்பம் நலமாக இருக்க வேண்டி வழிபடுதல். மகப்பேறு வேண்டியும், பிரசவம் இடையூறு இன்றி நடைபெற வேண்டியும் வழிபடுகின்றனர்.

கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்து நோய் வராமல் தடுக்க வேண்டுவார்கள்.

நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு செய்வார்கள். தொழு நோய் நீங்கவும் புற்று வழிபாடு செய்யப்படுகிறது.

குழந்தைகள் தோஷங்கள் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் நலமுடன் வாழவும் புற்று வழிபாடு நடைபெறுகிறது.

சருமவியதிகள் தீரும் :

பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது. ஆவணி மாத ஞாயிறு நாக வழிபாட்டுக்கு மிகவும் சிறப்பானது. ஆவணி ஞாயிறு விரதமிருந்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டால் நாகதோஷம் நீங்கும், சருமவியாதிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

பாதாளேசுவரர் அரதைப்பெரும்பாழி, அரித்துவாரமங்கலம் திருவாரூர்...

அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில், அரதைப்பெரும்பாழி,                    
அரித்துவாரமங்கலம் 612802
திருவாரூர் மாவட்டம்.  

*மூலவர்:
பாதாளேசுவரர், 
பாதாள வரதர்

*தாயார்:
அலங்காரவல்லி

*தல விருட்சம்:
வன்னி மரம்

*தீர்த்தம்:
பிரம்ம தீர்த்தம் 

*தேவாரப் பாடல் பெற்ற தலம். பாடியவர்:
திருஞானசம்பந்தர்.                           

*மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் திருவடிகளைக் காண பூமியில் துவாரம் ஏற்படுத்தியதால் இவ்வூர் அரி+துவார+மங்கலம் என்ற பெயர் பெற்றது.     
*மூலவர் பாதேளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாதாளம் வரை லிங்கம் நீண்டிருப்பதால் பாதாளேஸ்வரர் என்ற பெயர் வந்தது.           

*வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும் பள்ளம் உள்ளது. இதற்குள்தான் வராகராக திருமால், சிவபெருமானின் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம். 
வராகர் அதல, விதல, சுதல, விதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான். 

*இத்தல ஈசனை சரணாகதி அடைந்தால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது இத்தலம் கூறும ரகசியமாகும்.    

*வராக அவதாரமெடுத்த திருமாலின் கொம்பைப் பறித்து இறைவன் அணிந்து கொண்ட திருத்தலமாகும் இது.        

*சிவனுக்கு வலது பக்கத்தில், கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி  அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். 
அம்பாள் அலங்கார வல்லி என்ற திருநாமத்தோடு  நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். 

*அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. 

*அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.   

*இக்கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. அனைத்தும் ஈசனே. இவரை வழிபட்டால் நவகிரக தோஷம்  நீங்கும்.        

*இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிய பின் ஈசனையும் அம்பாளையும் தரிசித்தால் வடக்கே உள்ள ‘ஹரித்துவார்’ சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும், பாவங்கள் அனைத்தும் நீங்கும்.     

*இத்தலம் பஞ்சாரண்ய ஷேத்திரங்களில் ஒன்று.                இந்த ஐந்து "வனத்" தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சிவபெருமானின் பேரருளைப் பெறலாம்.

1)உஷத் காலமான காலை 5.30-6.30 மணிக்குள் முல்லை வனமான திருக்கருகாவூர் ஈசனையும், 

2)காலசந்தியான காலை 8.30-9.00-க்குள் பாதரிவனமான அவளிவநல்லூர் ஈசனையும்,      

3)உச்சி காலமான மதியம் 11.30-12.00-க்குள் வன்னி வனமான அரித்துவாரமங்கலம் ஈசனையும், 

4)சாயரட்சை எனும் மாலை 5.30 - 6.30-க்குள் பூளைவனமான ஆலங்குடி ஈசனையும், 

5)அர்த்தயாமம் எனும் 7.30 - 8.00-க்குள் வில்வவனம் எனும் திருக்கொள்ளம்புதூர் ஈசனையும் வழிபடுவது பஞ்சாரண்ய தல வழிபாட்டு நெறியாகும்.

*இக்கோவிலில், மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு ஒன்று உள்ளது. 

*தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் அம்மாப்பேட்டை எனும் ஊரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும்   அரித்துவாரமங்கலம்  உள்ளது.  கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகள் உள்ளன.                                    

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Thursday, February 6, 2025

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது? எப்படி செல்ல வேண்டும்?



நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்) எண்ணிக்கையின் படி அன்னாதானம் செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார்.

தவறாமல் செய்யுங்கள்
பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்.

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது? 

எப்படி செல்ல வேண்டும்? 

அங்கு சென்றால் கிடைக்கும்

பலன் என்ன!

#அசுவினி:

கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.
சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும். 
இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6-11, மாலை4- இரவு 8.
போன்: 94438 85316, 04369 222 392

#பரணி:

கோயில்: நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்
அம்மன்: சுந்தரநாயகி 
தல வரலாறு: இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன் மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித்தலமானது. 
சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம். 
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்தில் நல்லாடை. 
திறக்கும் நேரம்: காலை 8- மதியம்12, மாலை 5- இரவு 8.30.
போன்: 94866 31196, 04364 285 341

#கார்த்திகை:

கோயில்: கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர்
அம்மன்: துங்கபால ஸ்தனாம்பிகை
தல வரலாறு: தேவர்கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் "காஞ்சன நகரம்' எனப்பட்டது. அதுவே "கஞ்சாநகரம்'(பொன்நகரம்) என்றாகிவிட்டது. 
சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை10- 11, மாலை4-5
போன்: 94874 43351, 04364 282 853.

#ரோகிணி:

கோயில்: காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் கோயில்
தல வரலாறு: வைசம்பாயனர் ரிஷியிடம், ஜன்மேஜய மகாராஜா, மகாபாரதக் கதை கேட்டார். கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பற்றிக் கேட்ட போது, மன்னருக்கும் அந்த தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ரிஷியின் வழிகாட்டுதல்படி காஞ்சிபுரத்தில் தவம் செய்து தரிசனம் பெற்றார். அவரே பாண்டவதூதப்பெருமாளாக கோயில் கொண்டிருக்கிறார்.
சிறப்பு: ரோகிணிதேவி, இத்தல பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி நட்சத்திரத்தினர் புதன், சனிக்கிழமை, அஷ்டமிதிதி, 8ம் தேதிகளில் வழிபடுவது சிறப்பு. 
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,. ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரிலுள்ள சாலை.
திறக்கும்நேரம்: காலை 7- 11, மாலை 4- இரவு 7.30.
போன்: 044- 2723 1899.

#மிருகசீரிஷம்:

கோயில்: எண்கண் ஆதிநாராயணப் பெருமாள் கோயில்
தல வரலாறு: பெருமாளை நோக்கி தவமிருந்த பிருகுமுனிவர், சிங்க வேட்டைக்கு வந்த சோழனின் ஆரவாரத்தால் தவம் கலைந்து எழுந்தார். கோபத்தில் அவனை சிங்கமுகத்தோடு பிறக்க சாபமிட்டார். விருத்தகாவிரி என்னும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் பெருமாளை வணங்கி மீண்டும் மனிதமுகத்தைப் பெற்றான். 
சிறப்பு: மிருகசீரிட நட்சத்திரத்தினர், மிருகசீரிட நாளில் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் பிரச்னை நீங்கி சந்தோஷம் கூடும். 
இருப்பிடம்: தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் 50கி.மீ., தூரத்தில் முகூந்தனூர். அங்கிருந்து 1கி.மீ., தூரத்தில் எண்கண்.
திறக்கும்நேரம்: மாலை5- இரவு 7.
போன்: 94433 51528, 04366- 269 965.

#திருவாதிரை:

கோயில்: அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர்கோயில்
அம்மன்: சுந்தரநாயகி அம்மன்
தலவரலாறு: அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள், திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் அடைந்து சிவனருள் பெற்றனர். அபயம் அளித்தவர் என்பதால், சிவனுக்கு "அபயவரதீஸ்வரர்' என பெயர் வந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ரைவத மகரிஷி, பைரவ மகரிஷி ஆகியோர் அருவநிலையில் இக்கோயில் சிவனை வழிபடுவதாக ஐதீகம். 
சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும். அதீவீரராம பாண்டியர் திருப்பணி செய்ததால், இத்தலம் "அதிவீரராமன்பட்டினம்' என வழங்கியது. தற்போது அதிராம்பட்டினமாகி விட்டது. 
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 70கி.மீ., அங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அதிராம்பட்டினம்.
திறக்கும்நேரம்: காலை 6.30- 12, மாலை4- இரவு 8.30.
போன்: 99440 82313, 94435 86451.

#புனர்பூசம்:

கோயில்: வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தலவரலாறு: பிரம்மாவைப் பிரிந்த சரஸ்வதி பூலோகம் வந்தாள். அவளை சிருங்கேரியில் கண்டு சமாதானப்படுத்தினார். இருவரும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அதிதீஸ்வரர் கோயிலில் தங்கிய கலைவாணியைப் பாடும்படி சிவபார்வதி வேண்ட, அவளும் இனிமையாகப் பாடினாள். அதனால் இத்தலம் வாணியம்பாடி என்றானது.
சிறப்பு: கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, வாணியம்பாடியில் புனர்பூச நட்சத்திர நாளில் விரதமிருந்து தேவர்களுக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றாள். மேற்கு நோக்கிய இத்தலத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தினர் வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும். 
இருப்பிடம்: வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி. அங்கிருந்து 3கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6.30- 10.30, மாலை 5- இரவு 7.
போன்: 99941 07395, 04174 226 652

#பூசம்:

கோயில்: விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில் 
அம்மன்: அபிவிருத்தி நாயகி
தல வரலாறு: காலில் ஏற்பட்ட வாதநோயைப் போக்கும் விதத்தில் சனி, திருத்தல யாத்திரை புறப்பட்டார். விளங்குளத்தில் இருக்கும் அட்சயபுரீஸ்வரரை வழிபட்டபோது நோய் குணமானது. அன்று, பூசம் நட்சத்திரமாக இருந்தது. பித்ருக்களின் அம்சமான காகங்களின் குருவான "பித்ரசாய்' சித்தர் இங்கு தினமும் வழிபடுகிறார்.
சிறப்பு: இங்கு மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவியருடன் சனீஸ்வரர் மணக்கோலத்தில் வீற்றிருக் கிறார். பூச நட்சத்திரத்தினர் பூசம் மற்றும் திரிதியை நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து எட்டுமுறை சுற்றி வர நோய் நீங்கும். திருமணயோகம் கைகூடும். 
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30கி.மீ., தூரத்தில் விளநகர் விலக்கு. அங்கிருந்து தெற்கே 2கி.மீ, தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: மாலை4- இரவு7. 
போன்: 97507 84944, 96266 85051.

#ஆயில்யம்:

கோயில்: திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
அம்மன்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
தல வரலாறு: துர்வாசரின் சாபத்தால் நண்டு பிறப்பெடுத்த கந்தர்வன், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். கற்கடகத்திற்கு (நண்டுக்கு) அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி "கற்கடேஸ்வரர்' என பெயர் பெற்றார். பிரகஸ்பதியின் வழிகாட்டுதலின்படி, இந்திரன் இங்குள்ள சிவனை1008 மலர்களால் வழிபட்டு ஆணவம் நீங்கப்பெற்றான். இந்திரன் திருந்திய தலம் என்பதால் "திருந்துதேவன்குடி' என்ற பெயர் வந்தது. "நண்டுக்கோயில்' என்றால் தான் தெரியும். 
சிறப்பு:ஆயில்யம், தேய்பிறை அஷ்டமிநாளில் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட நன்மை பெருகும். 
இருப்பிடம்: கும்பகோணம்- சூரியனார்கோயில் சாலையில் 11கி.மீ., தூரத்தில் திருவிசநல்லூர். அங்கிருந்து திருந்துதேவன்குடி 2கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை9- மதியம் 1.30, மாலை 4- இரவு7.
போன்: 99940 15871, 0435- 200 0240

#மகம்:

கோயில்: ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயில்
அம்மன்: மாணிக்கவல்லி, மரகதவல்லி
தல வரலாறு: மக நட்சத்திரத்தில் அவதரித்த பரத்வாஜர் தவமேடை அமைத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்ட தலம் ஒடுக்கம் தவசிமேடை. கோயிலுக்கு வரும் அடியவர்களின் பாதம் தன்மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜரே இங்கு பீடமாக இருக்கிறார். 
சிறப்பு: மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாதசிவராத்திரி நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வு வளம் பெறும். இங்கு மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவராத்திரியை ஒட்டி 30 நாட்கள் காலை நேரத்தில் மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பு. 
இருப்பிடம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து 2கி.மீ. தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை6- மாலை6.
போன்: 95782 11659, 93624 05382.

#பூரம்:

கோயில்: திருவரங்குளம் ஹரிதீர்த்தேஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: புத்திரப் பேறு வாய்க்காத சோழ மன்னன் கல்மாஷ பாதன் அகத்தியரின் உதவியை நாடினான். அவரின் வழிகாட்டுதலால், திருவரங்குளம் சிவனை வணங்கப் புறப்பட்டான். அந்தக் கோயில் புதைந்து போனது அறிந்து பூமியைத் தோண்டினான். லிங்கத்தில் கடப்பாறை பட்டு ரத்தம் பீறிட்டது. தோஷம் நேரும் என வருந்தி உயிர் விடத் துணிந்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து குறை தீர்த்தார். இந்த நிகழ்வு பூரம் நட்சத்திரத்தில் நடந்தது.
சிறப்பு: பூர நட்சத்திர லோகத்தில் சிவ,நாக, ஞானபிரம்ம, இந்திர, ஸ்ரீ, ஸ்கந்த, குரு தீர்த்தங்கள் உள்ளன. திருவரங்குளத்திலும் இவை ஏழும் உள்ளன. பூர நட்சத்திரத்தினர் தங்கள் பிறந்தநாளில் இங்கு வழிபட்டால் வாழ்வில் மேன்மை பெறுவர்.
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் 7 கி.மீ.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை5- இரவு7.30
போன்: 98651 56430, 99652 11768

#உத்திரம்:

கோயில்: இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்
அம்மன்: மங்களாம்பிகை
தல வரலாறு: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மாங்கல்ய மகரிஷி. இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியவர்களின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியவர். யாரும் அறியாமல் சூட்சும வடிவில் பூலோகத்தில் சிவனை வணங்கி தன் சக்தியை அதிகரித்துக் கொண்டார். சிவன் இவருக்கு அருள்புரிந்த தலமே இடையாற்று மங்கலம். 
சிறப்பு: மணவாழ்வுக்காக காத்திருப்பவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணம் நிச்சயித்தபின், மாங்கல்ய மகரிஷிக்கு வெற்றிலைபாக்குடன் கல்யாண பத்திரிகை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். உத்திர நட்சத்திரத்தினர் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.
இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22கி.மீ., தூரத்தில் லால்குடி. அங்கிருந்து இடையாற்று மங்கலம் 5 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை 8- மதியம்12, மாலை6- இரவு 8.
போன்: 98439 51363, 0431- 254 4070.

#அஸ்தம்:

கோயில்: கோமல் கிருபா கூபாரேஸ்வரர் கோயில்
அம்மன்: அன்னபூரணி
தல வரலாறு: சிவனின் கண்களைப் பார்வதி கைகளால் பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. அப்போது, சிவனும் தன் கையில் இருந்த ஹஸ்தாவர்ண ஜோதியில் மறைந்தார். சிவனைத் தேடி, அம்பாள் பசுவடிவில் பூலோகம் புறப்பட்டாள். அஸ்த நட்சத்திரத்தன்று சிவனை ஜோதிவடிவில் தரிசித்து ஐக்கியமானாள். பக்தர்கள் மீது கருணை(கிருபை) கொண்டவர் என்பதால் "கிருபா கூபாரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். 
சிறப்பு: அஸ்த நட்சத்திரத்தினர் திங்கள், புதன்கிழமையில் வழிபடுவது நல்லது. அன்னபூரணி அம்பிகை பசுவாக இங்கு வந்ததால் பசு,கன்று தானம் அளிப்பது சிறப்பு.
இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குப் பிரியும் இடத்தில் இருந்து 8கி.மீ., தூரத்தில் கோமல்.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை 5.30- இரவு 7.30.
போன்: 95002 84866

#சித்திரை:

கோயில்: குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி 
தல வரலாறு: தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கசனை, அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி திருமணம் செய்ய விரும்பினாள். கசனை அசுரலோகத்திலேயே கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தாள். மகனைக் காணாத பிரகஸ்பதி விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். விஷ்ணு சக்கரத்தாழ்வார் மூலம் கசனை மீட்டார். இதையடுத்து சக்கரத்தாழ்வாரும், தேவ குருவும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். அதுவே குருவித்துறை தலம். 
சிறப்பு: பிரகஸ்பதிக்கு அருள்புரிய விஷ்ணு, சித்திர ரதத்தில், சித்திரை நட்சத்திரத்தன்று எழுந்தருளினார். எனவே, இக்கோயில் சித்திரைக்குரியதானது. வியாழன், பவுர்ணமி, சித்திரை நட்சத்திர நாட்களில் தரிசிப்பது சிறப்பு. 
இருப்பிடம்: மதுரையிலிருந்து 23 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 3- 6.
போன்: 94439 61948, 97902 95795.

#சுவாதி:

கோயில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்
அம்மன்: பூங்குழலி
தல வரலாறு: படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது. . நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு "தாத்திரீஸ்வரர்' என்று பெயர். "தாத்திரீ' என்றால் "நெல்லி.
சிறப்பு: சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும். 
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை8- 10, மாலை 5-7
போன்: 93643 48700, 9382684485.

#விசாகம்:

கோயில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்
தல வரலாறு: பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது. 
சிறப்பு: விசாகம் என்றால் "மேலான ஜோதி'. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும். 
இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில். 
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 1, மாலை 5, இரவு 8.30.
போன்: 04633- 237 131, 237 343.

#அனுஷம்:

கோயில்: திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயில் 
அம்மன்: உலகநாயகி
தல வரலாறு: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதை அறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர். 
சிறப்பு: பூமியில் புதைந்துபோன சிவலிங்கம், சோழமன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோயில் அனுஷத்திற்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும். 
இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை 4- இரவு 8.
போன்: 04364- 320 520 

#கேட்டை:

கோயில்: பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்
தாயார்: பெருந்தேவி
தல வரலாறு: ராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105வது வயதில் சோழமன்னன் ஒருவன் ராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். அவர் பசுபதிகோயில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்கலம் புகுந்தார். அவரின் துன்பம் போக்கும் விதத்தில், பெருமாள் இங்கு மோட்சம் அளித்தார். 
சிறப்பு: பெரியநம்பியின் திருநட்சத்திர வைபவம் சிறப்பாக நடக்கும். கேட்டை நட்சத்திரத்தினர் வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாயன்று வரும் கேட்டையில் வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம்: தஞ்சாவூர்- கும்பகோணம் வழியில் 13கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை7- 9, மாலை 5.30- 7.30.
போன்: 97903 42581, 94436 50920

#மூலம்:

கோயில்: மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்
அம்மன்: புஷ்பகுஜாம்பாள்
தல வரலாறு: சிவன் ஆனந்ததாண்டவம் ஆடியபோது மிருதங்கம் வாசித்தவர் சிங்கி என்ற நந்திதேவர். இசையில் ஆழ்ந்து கண்ணை மூடியபடி தாளம் போட்டதால், நடனத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால், மப்பேடு வந்து சிவபூஜை செய்து இறைவனின் நடனத்தைக் கண்டு களித்தார். மெய்ப்பேடு என்பதே மப்பேடு ஆகிவிட்டது. சிங்கி வழிபட்ட சிவன் என்பதால் சிங்கீஸ்வரர் எனப்பட்டார்.
சிறப்பு: மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷத்தன்று இங்கு வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நவவியாகரண கல் மீது ஏறி, நந்தியையும், மூலவரையும் ஒரே சமயத்தில் தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும். 
இருப்பிடம்: சென்னை கோயம்பேடு- தக்கோலம் வழியில் 45 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை6- 10, மாலை 5.30-இரவு 7.30.
போன்: 94447 70579, 94432 25093

#பூராடம்:

கோயில்: கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: மங்களாம்பிகை
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய கடுவெளிச்சித்தர் அருள்பெற்ற தலம் கடுவெளி. "கடுவெளி' என்றால் "ஆகாசவெளி'. சோழமன்னன் ஒருவன் இங்கு கோயில் கட்டினான். ஆகாயத்திற்கு அதிபதியாக ஆகாசபுரீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார். 
சிறப்பு: இத்தலம் பூராடம் நட்சத்திரத்திற்குரியது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் பூராடத்தன்று இங்கு வழிபடுவதாக ஐதீகம். அன்று சிவனுக்கு புனுகு சாத்தி வழிபட திருமண, தொழில்தடை நீங்கும்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு 13 கி.மீ., அங்கிருந்து கல்லணை வழியில் 4 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை9-10, மாலை 5-6, பூராடத்தன்று: காலை 8- மதியம்1.
போன்: 94434 47826, 96267 65472

#உத்திராடம்:

கோயில்: கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: மீனாட்சியம்மன்
தல வரலாறு: படைப்புத் தொழிலைச் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவன் என்று பிரம்மா கருதினார். இந்த மமதையை அடக்க, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒருதலையைக் கொய்தார் சிவன். தனது பாவம் தீர பிரம்மா, பூலோகத்தில் சிவனை வழிபட்ட தலம் கீழப்பூங்குடி. பழைய கோயில் அழிந்து போனதால் புதிய கோயில் கட்டப்பட்டது. 
சிறப்பு: இங்குள்ள மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம். இதில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரரையும், மீனாட்சியையும் உத்திராடத்தன்று வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கும். 
இருப்பிடம்: மதுரையிலிருந்து 45கி.மீ., சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஒக்கூர் 12கி.மீ., அங்கிருந்து கீழப்பூங்குடி 3 கி.மீ., 
திறக்கும் நேரம்: காலை7- 11, மாலை 5- இரவு8
போன்: 99436 59071, 99466 59072

#திருவோணம்:

கோயில்: திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில்
தாயார்: அலர்மேலுமங்கைத் தாயார்
தலவரலாறு: புண்டரீக மகரிஷியின் பக்திக்கு இணங்கி பெருமாள் பிரசன்னமான தலம் திருப்பாற்கடல். சந்திரன் ஒரு சாபத்தால் இருளடைந்தான். அவன் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி வருந்தினாள். இங்கு வந்து வழிபட்டு கணவரின் சாபம் நீங்கப் பெற்றாள். 
சிறப்பு: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், மூன்றாம்பிறை ஆகிய நாட்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நினைத்தது நிறைவேறும். 
இருப்பிடம்: வேலூர்- சென்னை வழியில் 20கி.மீ., தூரத்தில் காவேரிப்பாக்கம். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில். 
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 4.30- இரவு 7.30
போன்: 94868 77896,04177 254 929

#அவிட்டம்:

கோயில்: கீழ்க்கொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: புஷ்பவல்லி
தல வரலாறு: கோரக்கசித்தர் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இரவில் விழித்தபோது, அவரருகில் ஒருத்தி படுத்திருந்தாள். முந்தானை சித்தர் மீது கிடந்தது. இதற்கு பரிகாரமாக தன் கைகளை வெட்டிக் கொண்டார். சிவனருளால் கைகள் வளர்ந்தன. கையை வெட்டியதால் "கோரக்கை' என்றும், குறுகிய கைகளால் வழிபட்டதால் "குறுக்கை' என்றும் ஊருக்குப் பெயர் வந்தது. தற்போது "கொருக்கை' எனப்படுகிறது.
சிறப்பு: அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மஞானபுரீஸ்வரர், பிரம்மாவுக்கு ஞானம் தந்ததால் இத்தலம் அவிட்டத்திற்கு உரியதானது. இந்த நட்சத்திரத்தினர் ஆவணி அவிட்டத்தன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் யோக வாழ்வு அமையும்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை11- மதியம்1, மாலை5- மாலை 6
போன்: 98658 04862, 94436 78579

#சதயம்:

கோயில்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: கருந்தார் குழலி
தல வரலாறு: தவமிருந்த அக்னிதேவனுக்கு சந்திர சேகரராக சிவன் காட்சியளித்து அருள்புரிந்த தலம் திருப்புகலூர். "புகல்' என்றால் அடைக்கலம். அடைக்கலம் புகுந்தவர்களை ஆட்கொள் பவராக சுவாமி இங்கு வீற்றிருக்கிறார். வர்த்தமானேஸ்வரர், மனோன்மணி அம்பாளும் இங்கு வீற்றிருக்கின்றனர். 
சிறப்பு: திருநாவுக்கரசர் தன் 81ம் வயதில் சித்திரை சதய நாளில் இங்கு சிவனோடு இரண்டறக் கலந்தார். இதை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும். சதய நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம்- நாகப்பட்டினம் வழியில் 10கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை 6- மதியம்12, மாலை 4- இரவு9
போன்: 04366 236 970

#பூரட்டாதி:

கோயில்: ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் கோயில் 
அம்மன்: காமாட்சி
தல வரலாறு: இந்திரனும், அவனது ஐராவத யானையும் பூரட்டாதிநாளில் திருவானேஸ்வரரை பூஜித்து நற்பலன் பெற்றனர். கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோயில். இறைவன் இங்கிருந்தே காலச்சக்கரத்தைப் படைத்தார். கஜ கடாட்ச சக்தி விமானத்தின் கீழ் சுவாமி எழுந்தருளியிருக்கிறார். 
சிறப்பு: பூரட்டாதியன்று திருவானேஸ்வரரை வழிபட்டு ஏழு வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளித்தால் புத்திகூர்மை உண்டாகும். திருமணம், வேலைவாய்ப்பு தடையின்றி நடந்தேறும்.
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு 20 கி.மீ., இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி 17கி.மீ., அங்கிருந்து அகரப்பேட்டை வழியில் 2கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை7-9, மாலை 5.30-இரவு 7
போன்: 94439 70397, 97150 37810

#உத்திரட்டாதி:

கோயில்: தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய லட்சுமி, அகத்தியரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் வழிபட்ட தலம் தீயத்தூர். அவள், தினமும் ஆயிரம் தாமரை மலர்களால், சிவனை வழிபட்டதால் "சகஸ்ரலட்சுமீஸ்வரர்' என்று பெயர் வந்தது. "சகஸ்ர' என்றால் "ஆயிரம்'. 
சிறப்பு: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷி ஆகியோர் அரூபவடிவில் சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நாளில் வருவதாக ஐதீகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொங்கல் நைவேத்யம் செய்ய பணக்கஷ்டம் தீரும். செயல்பாடுகளில் தடை நீங்கும். 
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோயில் 40கி.மீ., அங்கிருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் 21கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 12
போன்: 99652 11768, 04371-239 212

#ரேவதி:

கோயில்: காருகுடி கைலாசநாதர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: சந்திரன் தன் மனைவியான ரேவதியுடன் சிவனருள் பெற்ற தலம் காருகுடி. "கார்' எனப்படும் ஏழுவகை மேகங்களும் சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு "காருகுடி' என்ற பெயர் உண்டானது. 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி கோயிலைக் கட்டினான். 
சிறப்பு: ரேவதி நட்சத்திர தேவதை அரூப வடிவத்தில் (உருவமின்றி) தினமும் சிவனை வழிபடுவதாக ஐதீகம். ரேவதி நட்சத்திரத்தினர் இங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நினைத்தது விரைவில் நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். 
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 40கி.மீ, இங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை 21கி.மீ., அங்கிருந்து காருகுடி 5கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை

5- இரவு8
போன்: 97518 94339, 94423 58146

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Wednesday, February 5, 2025

தை மாத கிருத்திகை நட்சத்திர விரதத்தின் பலன்கள்:..

தை கிருத்திகை 
🌺🌿ஆறு விதமான சக்திகளை கொண்டவராக தோன்றியவர்தான் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வல்வினைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது நிச்சயம்.
🌺🌿முருகப்பெருமான் வழிபாட்டை தினமும் மேற்கொள்வது சிறந்ததுதான் என்றாலும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
🌺🌿அந்த வகையில் தை மாத கார்த்திகை நட்சத்திர தினத்தன்று முருகப்பெருமானை எவ்வாறு விரதமிருந்து வழிபட்டால் மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
🌺🌿தை மாத கிருத்திகை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப்பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.
🌺🌿அன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்க வேண்டும்.
🌺🌿மேலும் நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் கிருத்திகை நட்சத்திர விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
🌺🌿தை மாத கிருத்திகை நட்சத்திர விரதத்தின் பலன்கள்:..
🌺🌿திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
🌺🌿ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்.
🌺🌿 பொருளாதாரத்தில் இருந்துவந்த தேக்க நிலை நீங்கும்.
🌺🌿 தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும்.
🌺🌿 நேரடி, மறைமுக எதிரிகள் ஒழிவார்கள்..
🌺🌿 உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

தை கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள்


கார்த்திகை என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றான கார்த்திகேயன் என்ற பெயரை குறி க்கும். அதுவே காலப்போக்கில் கிருத்திகை என்று மருவியுள்ளது. 
கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால் அன்று விரதம் இருப்பது சிறப்பு. குறிப்பாக முருகனின் அறு படை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் கிருத்திகை நாளன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேய கடவுளுக்கு உகந்த நாட்கள்.

🌹கிருத்திகை விரதம் வரலாறு :
***************************************
கங்கையாகிய ஆறு தாங்கிய, ஆறு அக்னி பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறுபெண்களால் வளர்க்கப்பட்டான் அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவி ளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே.

இப்படி சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கா ன நாமம் 'சரவணபவ" என்னும் ஆறெழுத்தே ஆகும். கார்த்திகை விரதமே கார்த்திகை பெண்களை நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன் றியதும், அவனை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி போற்றி வளர்த்ததும், குமரன் வளர்ந் ததும், அவனை சேர்த்து ஒன்றாக்க உமையா ளுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் 'கார்த்திகேயன்" எனவும் அழைக்கப்படுவான் என்று சொன்னார்.

மேலும், அவர்களுக்கு நட்சத்திர பதவியும் அளித்து இந்த கார்த்திகைப் பெண்களின் நட்சத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்க ளுக்கு குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியு ம் கிடைக்கும் என்று அருளச் செய்தார். இந்த கார்த்திகை விரதம் தான் கிருத்திகை விரதம் என்று அழைக்கப்படுகிறது.

🌹விரதம் இருப்பது எப்படி :
*********************************
பரணி நட்சத்திரத்தன்று பகலில் உண்டு இரவி ல் உண்ணாது இருக்க வேண்டும். கார்த்திகை அன்று காலையில் நீராடி முருகன் கோயிலுக் கு சென்று வழிபடவேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருகனின் அருட்பாடல்களை பாராய ணம் செய்து அன்று முழுதும் முருகனை தியா னம் செய்ய வேண்டும்.

மறுநாள் ரோகிணியன்று காலையில் நீராடி நித்திய வழிபாடு செய்து, அன்னதானத்திற்கு பிறகு அமுது செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகையன்று விரதம் மேற்கொள்ள வேண்டும்.

கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் அவர்களுக்கு கல்வி, ஆயுள், நல்ல மனைவி, நன்மக்கட் பேறு, நிம்ம தியான வாழ்வு ஆகிய எல்லாம் கிடைக்கும். 

Tuesday, February 4, 2025

பாதாளேசுவரர் அரதைப்பெரும்பாழி அரித்துவாரமங்கலம் திருவாரூர்.

அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில், அரதைப்பெரும்பாழி,                    
அரித்துவாரமங்கலம் 612802
திருவாரூர் மாவட்டம்.  

*மூலவர்:
பாதாளேசுவரர், 
பாதாள வரதர்

*தாயார்:
அலங்காரவல்லி

*தல விருட்சம்:
வன்னி மரம்

*தீர்த்தம்:
பிரம்ம தீர்த்தம் 

*தேவாரப் பாடல் பெற்ற தலம். பாடியவர்:
திருஞானசம்பந்தர்.                           
*மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் திருவடிகளைக் காண பூமியில் துவாரம் ஏற்படுத்தியதால் இவ்வூர் அரி+துவார+மங்கலம் என்ற பெயர் பெற்றது.     

*மூலவர் பாதேளேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாதாளம் வரை லிங்கம் நீண்டிருப்பதால் பாதாளேஸ்வரர் என்ற பெயர் வந்தது.           

*வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசனுக்கு முன்பு பாழி என்றழைக்கப்படும் பள்ளம் உள்ளது. இதற்குள்தான் வராகராக திருமால், சிவபெருமானின் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம். 
வராகர் அதல, விதல, சுதல, விதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான். 

*இத்தல ஈசனை சரணாகதி அடைந்தால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது இத்தலம் கூறும ரகசியமாகும்.    

*வராக அவதாரமெடுத்த திருமாலின் கொம்பைப் பறித்து இறைவன் அணிந்து கொண்ட திருத்தலமாகும் இது.        

*சிவனுக்கு வலது பக்கத்தில், கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி  அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். 
அம்பாள் அலங்கார வல்லி என்ற திருநாமத்தோடு  நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். 

*அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. 

*அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.   

*இக்கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. அனைத்தும் ஈசனே. இவரை வழிபட்டால் நவகிரக தோஷம்  நீங்கும்.        

*இத்திருத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிய பின் ஈசனையும் அம்பாளையும் தரிசித்தால் வடக்கே உள்ள ‘ஹரித்துவார்’ சென்று வந்த புண்ணிய பலன் கிடைக்கும், பாவங்கள் அனைத்தும் நீங்கும்.     

*இத்தலம் பஞ்சாரண்ய ஷேத்திரங்களில் ஒன்று.                இந்த ஐந்து "வனத்" தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சிவபெருமானின் பேரருளைப் பெறலாம்.

1)உஷத் காலமான காலை 5.30-6.30 மணிக்குள் முல்லை வனமான திருக்கருகாவூர் ஈசனையும், 

2)காலசந்தியான காலை 8.30-9.00-க்குள் பாதரிவனமான அவளிவநல்லூர் ஈசனையும்,      

3)உச்சி காலமான மதியம் 11.30-12.00-க்குள் வன்னி வனமான அரித்துவாரமங்கலம் ஈசனையும், 

4)சாயரட்சை எனும் மாலை 5.30 - 6.30-க்குள் பூளைவனமான ஆலங்குடி ஈசனையும், 

5)அர்த்தயாமம் எனும் 7.30 - 8.00-க்குள் வில்வவனம் எனும் திருக்கொள்ளம்புதூர் ஈசனையும் வழிபடுவது பஞ்சாரண்ய தல வழிபாட்டு நெறியாகும்.

*இக்கோவிலில், மூன்றாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டு ஒன்று உள்ளது. 

*தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் அம்மாப்பேட்டை எனும் ஊரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவிலும்   அரித்துவாரமங்கலம்  உள்ளது.  கும்பகோணத்திலிருந்தும், தஞ்சாவூரிலிருந்தும் அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகள் உள்ளன.                                    
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

அவிநாச லிங்கம் தல மகிமைகள் இழந்த பதவி கிடைக்கும்.

அவிநாச தல மகிமைகள்

இழந்த பதவி கிடைக்கும்

ஐராவதம் பூசித்துத் தன் பதவி அடைதல்!

ஒரு பிரமகற்பதில் சிவபெருமான் திருவருள் பெற்ற தேவேந்திரன் சுவர்க்க லோகத்தில் தனது இந்திராணியோடு தேவபோகங்களை இரவும் பகலுமாக அனுபவிப்பதிலேயே இருந்து விட்டான். அவனது ஐராவதம் என்ற வெள்ளை யானை மத மயக்கத்தால் மயங்கிப் பூலோகத்திற்கு வந்து மலைச்சாரல்களில் திரியலாயிற்று. 

அங்கே ஐராவதம் ஒரு பெண் யானையிடம் தொடர்பு கொண்டு, தனது நிலையையும் கற்பகத்தரு நிழலையும் மறந்து இருந்தது.
இத்தருணத்தில் தேவலோகத்தின் ஒரு பகுதியில் அசுரர் படையெடுத்து போருக்கு வந்து போர்ப்பறை முழங்கினர். 

அதனை அறிந்த ஒரு வித்யாதரன் இந்திரனிடம் ஓடிவந்து அசுரர் செயலை முறையிட்டான். உடனே இந்திரன் போருக்குச் செல்லும் பொருட்டு, ‘ஐராவதம் எங்கே’ என்று வினவினான்.

அருகே நின்ற தேவர்கள், “நெடுநாளாக இங்கே ஐராவதம் இல்லை என்றனர். இந்திரன் கோபங்கொண்டு நமக்கு மேகவாகனம் உள்ளது என்று கருதி வெறுத்துத் தனது ஞான திருஷ்டியால் யானையின் நிலையினை உணர்ந்தான். 

அந்த ஐராவதம் பூமியிலுள்ள காட்டு யானைகளோடு சஞ்சரித்துக் கொண்டு தன் பெருமை கெடக்கடவது என்று சாபமிட்டான்

இந்திரன் சாபம் பற்றியதிலிருந்து ஐராவதம், தேவலோகத்தைத் துறந்து கவலைகொண்டு திரியும் போது ஒரு கந்தர்வன் கானகத்தில் ஐராவத்தைக் கண்டு, தேவலோகத்தின் நிலையையும், இந்திரன் சாபமிட்ட செய்தியையும் கூறிவிட்டுச் சென்றான்.

அப்போது, ஐராவதம் சோர்வுடன் இருந்த சமயம், நாரத முனிவர் வருகையைக் கண்டது. உடனே அவர் திருவடிகளில் வணங்கி நிற்க நாரதர், ‘அயிராவதமே! கவலை கொள்ளாதே’ என்று கூறி, இந்திரன் இட்ட சாபம் தணியச் சில வார்த்தைகள் கூறலானார்.

‘ஏ, ஐராவதமே!  மேரு மலையின் தெற்கே எண்ணிறந்த சிவத்தலங்கள் உள்ளன; அவற்றுள் முக்தியை அளிக்கும் தலங்கள் ஐந்து ஆகும். அவை, பிறக்க முக்தியைத் தரும் திருவாரூரும், தரிசிக்க முக்தியைத் தரும் சிதம்பரமும், நினைக்க முக்தியை தரும் அருணாசலமும், இறக்க முக்தியைத் தரும் காசிப்பதியும் அடைந்து வசிப்போர்க்கும் தலப் பெருமைகளைப் பேசுவோர்க்கும் முக்தியைத் தரும் அவிநாசியும் ஆகும். 

வெள்ளை யானையே! நீ அவிநாசித் தலத்தை அடைந்து இறைவனைப் பூசித்தால் நீ பெற்ற சாபம் நீங்கப் பெறுவாய்’ என்று கூறினார். 

உடனே வெள்ளை யானையான ஐராவதம் நாரதர் திருவடிகளில் வணங்கி விடை பெற்றுத் தென்திசை நோக்கி புறப்பட்டு, மேல் கொங்கு நாட்டை அடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசித் தலத்திற்கு வந்து சேர்ந்தது.

அங்கு இறைவனைப் பூசித்து வழிபடச் சந்நிதிக்கும் கீழ்ப்பால் ஓடும் நள்ளாற்றில் தனது நான்கு கொம்புகளால் பூமியைக்குத்தித் தோண்டி ஆற்று நீர் பெருகும்படி செய்து (அயிராவத்துறை என்ற பெயருடையாதாகச் செய்து) அதில் ஸ்நானம் செய்து, காசிக் கங்கைக் கிணற்று நீரைத் துதிக்கையில் முகந்து கொண்டுபோய் அவிநாசி நாதருக்கு அபிஷேகம் செய்து மலர் கொண்டு பூசித்தது.

இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் பூசித்து வரும்போது ஒரு நாள் மூல லிங்கத்திற்கு அருகே ஈசான பாகத்தில் ஒரு சிவலிங்கம் (அயிராவதலிங்கம் என்ற பெயருடன்) ஸ்தாபித்து பூசித்து வந்தது.

அவிநாசியப்பர் யானையின் பூஜைக்கு மகிழ்ந்து, இந்திரன் உள்ளத்தில் ஒரு அதிசயம் தோன்றும்படி செய்ய, உடனே இந்திரன் பொன் விமானத்தில் ஏறி அவிநாசித் தலத்திற்கு வந்தான். அப்போது அவிநாசி நாதரையும், அவரை வெள்ளை யானை தொழுது நின்ற நிலையையும் கண்டு, மகிழ்ச்சியோடு ‘ஐராவதமே! வா’ என்று அழைத்து மத்தகத்தை தன் கையால் தடவ, அதன் சாபம் நீங்கி நின்ற அதிசயத்தையும் கண்டான்.

அப்போது ஐராவதம் இந்திரனை வணங்கி நின்றபோது இந்திரன், ‘ஐராவதமே! உன்னால் தான் இத்தலத்தை வந்தடைந்தேன்; என்னை இறைவன் திருவடிகளை வணங்கும்படி செய்வாய்’ என்றான்.

உடனே ஐராவதம் இந்திரனை அழைத்துக் கொண்டு போய் அவிநாசி நாதர் முன்னே விட, அவன் கருணாலயச் செல்வியை வலத்தே கொண்ட சிவபெருமானைத் தரிசித்துத் துதித்து நிற்க, அப்போது “இந்திரனே! நீயும் உன் வெள்ளை யானையும் பொன்னுலகத்தை அடைக” என்ற ஒரு அசரீரி வாக்கு எழுந்தது. 

அதனைக் கேட்ட இந்திரன் மகிழ்ந்து இறைவனை வணங்கி வெள்ளை யானையின் மீது ஏறித் தனது பொன்னுலகத்தை அடைந்தான்.

இவ்விதம் ஐராவதம் அவிநாசியப்பரை பூசித்து இழந்த பதவியை பெற்றது.

இழந்த பதவிமைப் பெற்று தரும் அவிநாசியப்பரின் மகிமைகளில் ஒன்று . 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

செவ்வாய்க்கிழமை விரதமும் அறிவியல் பலன்களும்.

செவ்வாய்க்கு உரிய தெய்வம் சுப்பிரமணியர். அதனால் செவ்வாய் அன்று முருகனை வழிபடுதல் சிறப்பு. செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையிலேயே நீராடி, அருகில் இருக்கும் முருகப் பெருமான் கோவிலுக்கு சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை தொடங்கவேண்டும்.

வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து முருகனை நினைத்து சஷ்டி கவசம், கந்தகுரு கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய தோத்திரங்கள் மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். அதன்பின் மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

பலன்கள்: தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் விரதமிருந்து முருகனை உளமாற வழிபடுவதால், உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அதன் தீவிரம் குறைந்து நன்மை உண்டாகும். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும். கோழைத்தனம், பய உணர்வுகள் நீங்கி, தைரியம் மற்றும் தன்னம் பிக்கை பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந் து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.விரதத்தின் பயன்களை அறிவியல் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்ததற்கு ஜப்பானை சேர்ந்த செல் உயிரியலார்  Yoshinori Ohsumi  க்கு 2016 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

விரதம் இருக்கும் நேரத்தில் நமது செல்களே நமது உடலை சுத்தம் செய்யும், பலவீனமற்ற, நோய்வாய்பட்ட செல்களை உண்டு அழிக்கும். புற்றுநோய் செல்களை நீக்கும். பல நோய்கள் உருவாக காரணமாக உள்ள செல்களை நீக்கும் ...

தொடர்ச்சியாக 12 மணி நேரத்திற்கு மேல் விரதம்  இருந்தால் இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் நமது உடலில் படிப்படியாக விரத நேரம் கூட கூட நடக்கும் ...
(மிக முக்கிய குறிப்பு : விரதம் என்றால் டிபன் ஐட்டம் சாப்பிடுவது இல்ல, தண்ணீர் மட்டும் தான் குடிக்கலாம் ... 

விரதம் இருப்பதை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.

அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம்.

தைப்பூசம் ஸ்பெஷல்
அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும்.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப் பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவ து நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்தில் பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது.

தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமா கும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்வார்கள்.

மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல்,  போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவே ற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடு கள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவி ல்களிலும், எல்லா சிவன் கோவில்களிலு ம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுக ளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவி ல்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

🌹வரலாறு 

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர் கள் முறையிட்டனர்.

தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில் லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானி டம் வேண்டினர்.

கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்க ளின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். 

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளி யான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைக ளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழ ந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங் களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். 

சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெரு மானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். 

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப் பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அப்படி அளிக்கப் பட்ட வேலினை ஆயுதமாக கொண்டே முருகன் அசுரகுலத்தை அழித்து தேவர்க ளைக் காப்பாற்றினான்.

தேவர்களுக்குத்தொல்லை கொடுத்த அரக்கர் களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலை வாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள்.

எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காம ல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.
சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராய ணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற் கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானி ன் ஆறுபடை வீடுகளிலும் முருக னடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத் தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறை வு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்தி க்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்க மாகக் கொண்டுள்ளனர். தங்களின் வேண்டு தல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தான் விரும்பியது போல் மரணம் ஏற்பட வில்லையே ஏன்?

ரதசப்தமி 
நினைத்த போது மரணம் வருவது என்பது குதிரை கொம்பு.  

ஆனால் காலாகாலத்தில் சரியாக போய் சேர்வது ஒரு குடுப்பினை.

நம் முன்னோர்கள் அதனால் தான் “அநாயாசேன மரணம் வினாதைன்யேன ஜீவனம் தேஹிமே க்ருபையா சம்போ, த்வை பக்திம் அசஞ்சலாம்” என்று வேண்டினார்கள். அத்தோடு கூட  துன்பப்படுகின்ற ஆடு, மாடு, நாய், பக்ஷி போன்ற கண்களில் படுகின்ற அனைத்து ஜீவராசிகளும் நற்கதி அடைய பிரார்த்தனை செய்வது வழக்கம்.  
நல்லவர்கள் எளிதில் பரம்பதம் அடைவார்கள். நீண்ட காலம் நோயின்றி வாழ்வார்கள்.

இந்த உடலை விட முடியாமல் கதறி ஊரெல்லாம் ஒருவன் இறப்புக்காக (பிழைப்பதற்காக) பிரார்த்தனை  செய்வது என்பது கொடுமை.
மாகாபாரத்த்தில் இது குறித்து ஒரு சம்பவம் வருகிறது.

 பீஷ்மரைக் கொல்ல தக்க சமயத்தை எதிர்பார்த்த சிகண்டி போர் முனைக்கு வந்தான். சுத்த வீரனுடன்தான் போர் புரிவேன் என்ற கொள்கையுடைய பீஷ்மரின் முன்வந்து பீஷ்மருக்கு சவால்விட்டான். ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் காட்சி தந்த சிகண்டியுடன் போர்புரிய விருப்பமில்லாத பீஷ்மர் தயங்கினார். அர்ச்சுனன் பீஷ்மர்மீது அம்பு எய்வதற்குமுன், சிகண்டி பீஷ்மர்மீது அம்பு எய்தான். அர்ச்சுனன் சிகண்டியை முன்நிறுத்தி போர் புரிகிறான் என்பதை அறிந்த பீஷ்மர், சிகண்டி எய்த அம்பினை இடது கையால் பிடித்து முறித்து எறிந்தார். அப்போது அர்ச்சுனன் பீஷ்மர்மீது சரமாரியாக அம்புகளை எய்தான். அந்த அம்புகளால் துளைக்கப்பட்ட பீஷ்மர் கீழே சாய்ந்தார்.

 ஆனால் பூமியில் விழாமல், அந்த அம்புகள் படுக்கையாக பூமியில் பதிந்து பீஷ்மரைத் தாங்கின ஆனால் உயிர் பிரியவில்லை. தான் விரும்பிய நேரத்தில் முக்தியடையலாம் என்ற வரத்தின்படி உத்ராயனப் புண்ணிய காலத்திற்காகக் காத்திருந்தார் பீஷ்மர். உத்ராயன காலமும் வந்தது. 

ஆனால் பீஷ்மரின் உயிர் அவர் விரும்பியதுபோல பிரியாததால் அவஸ்தைக்குள்ளானார். 
காரணம் என்ன என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தார். உத்ராயன காலத்தில் உயிர் பிரிந்தால் எந்தத் தடையுமின்றி சொர்க்கம் போகலாம் என்பது சாஸ்திரம் சொல்லும் விதியாகும். அனைவரும் வந்து அவரை தரிசித்துவிட்டுச் சென்றார்கள். பஞ்சபாண்டவர்களும், பகவான் கிருஷ்ணரும் வந்திருந்தார்கள். பீஷ்மர், யார்மீதும் கோபப்படவில்லை. அனைவருக்கும் இறக்கும் நிலையிலும் போதனைகள் பல கூறினார். அதில் ஒன்றுதான் விஷ்ணு சகஸ்ரநாமம். 

தான் விரும்பியது போல் மரணம் ஏற்பட வில்லையே ஏன்? மனதிற்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.

 அப்போது அங்கே வந்தார் வேத வியாசர். வியாசரைக் கண்டதும் அவரிடம் பீஷ்மர், நான் என்ன பாவம் செய்தேன். நான் விரும்பிய படி ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை? என்று வருந்தினார். 

அதற்கு வியாசர், பீஷ்மரே, ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்குத் தீமை அநீதிகளைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவன்போல் காட்சி தருவதும் கூட பாவம்தான் அதற்கான தண்டனையையும் அவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில்தான் இப்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடல் அளவில் அவஸ்தைபட்டாலும், அதை விடஉள்ளம் படாத பாடுபடும். அந்த வேதனையே பெரும் தண்டனைதான் என்றார். 

பீஷ்மருக்கு வேதவியாசர் சொன்ன உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை. அந்த அவையில் பீஷ்மரும் இருந்தார். ஒரு மாபெரும் அநியாயம் நடந்தும் அதைத் தடுக்கக்கூடிய நிலையில் இருந்தும், அதைத் தடுக்காமல் போனதன் காரணமாகத்தான் இப்போது அம்புப் படுக்கையில் உயிர் பிரியாமல் தவிப்பதை உணர்ந்தார் பீஷ்மர். 

வேதனைப்பட்ட பீஷ்மர் வியாசரிடம், இதற்கு என்ன பிராயச்சித்தம்? என்று கேட்டார். 

யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போது அந்தப் பாவம் அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது. 

எனவே பீஷ்மர் நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது உன்னிடமிருந்து அகன்றுவிட்டது. 
இருந்தாலும் திரவுபதி கண்ணா, என்னைக் காப்பாற்றமாட்டாயா என்று துரியோதனன் அவையில் கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள், கூர்மையான பார்வையிருந்தும் பார்த்தும் பாராததுபோல் இருந்த உன் கண்கள், நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டிக்கேட்காத உன் வாய், உன்னிடமிருந்த அளப்பரிய தோள் வலிமையை சரியான நேரத்தில் உபயோகிக்காமலிருந்த உன் வலுவான தோள்கள், வாளையெடுத்து எச்சரிக்கை விடாத உன் உறுதியான இரு கைகள், ஆரோக்கியமுடன் அமர்ந்திருந்தபோது இருக்கையிலிருந்து எழாமல் இருந்த உன் இரு கால்கள், நல்லது எது? கெட்டது எது என்று யோசிக்காத உன் புத்தி இருக்கும் இடமான உன் தலை ஆகியவற்றுக்கும் தண்டனை கிடைத்தே தீரவேண்டும் என்பது விதி என்றார். 

அப்படியென்றால் என்னுடைய இந்த அங்கங்களையும் பொசுக்கக்கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியன்தான். சாதாரண அக்னியின் சூடு போதாது. என் அங்கங்களைத் தீய்க்க சூரியசக்தியைப் பிழிந்து தாருங்கள் என்று தன்னிலை உணர்ந்து வேதவியாசரிடம் வேண்டினார் பீஷ்மர்.

 உடனே வேதவியாசர் முன்கூட்டியே கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, பீஷ்மா இந்த எருக்கன் இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். 
அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழு சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும் என்றவர், அதன்படி பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர்.

 அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார். 

பீஷ்மருக்கு வருங்காலத்தில் சிரார்த்தம் போன்றவை செய்ய யாருமே இல்லையே. திருமணமாகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக அவர் உயிர் நீத்துவிட்டாரே என்று வருந்தினார் தர்மர்.

 அப்போது வியாசர். தர்மரே வருந்த வேண்டாம் ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும், தூய்மையான துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஓர் உயர்நிலைக்குப் போய்விடுகிறார்கள். 
சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாகத் திகழ்பவர்கள் தான் பாவிகள். ஆனால் பீஷ்மர் தன் வாக்கு தவறாத தூய்மையானவர். இனி வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வார்கள். அதோடு பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் கிடைக்கும் என்று வியாசர் கூறினார். 

எனவே ரதசப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும் அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து, அடுத்து வரும் ரதசப்தமியில் போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது, தவிர ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Sunday, February 2, 2025

வாலி இங்கு சிவபெருமானை வழிபட்டதால் இங்குள்ள இறைவன் "வாலீஸ்வரர்"

திரு குரங்கனில்முட்டம் காஞ்சிபுரம் - வந்தவாசி வழித்தடத்தில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு, நீங்கள் துசி கிராமத்தை அடைந்து, இங்கிருந்து குரங்கனில்முட்டத்திற்கு மாற்றுப்பாதையில் செல்லலாம். துசியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கோயில் உள்ளது. 
குரங்கனில்முட்டத்திற்கு அருகிலுள்ள மற்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - வான்பார்தன் பனங்காட்டூர் (10 கிமீ), திருமகரல் (13 கிமீ), திருமால்பூர் (25 கிமீ), மற்றும் திருவோத்தூர் (செய்யார்) (25 கிமீ).

பொதுவான தகவல்
மூலவர்
ஸ்ரீ வாலீஸ்வரர் / ஸ்ரீ கொய்யாமலர்நாதர்
அம்பாள்
ஸ்ரீ இராயர் வளையம்மை
தீர்த்தம் (புனித நீர்)
காக்கை மடு தீர்த்தம், வாலி தீர்த்தம்
ஸ்தல விருட்சம் (புனித மரம்)
இலந்தை
பதிகம் (பாடல்) வழங்கியவர்
புனித திருஞானசம்பந்தர்
இது தொண்டைநாட்டில் உள்ள 276 தேவார பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாகும் . 
இக்கோயிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக (சுயரூபமாக) இருக்கிறார்.
இரண்டு மாடவீதிகள் மற்றும் பிரதான கோபுரம் (ராஜகோபுரம்) இல்லாத மேற்கு நோக்கிய கோயில் இது.
கடைசியாக கும்பாபிஷேகம் (மஹாகும்பாபிஷேகம்) 04.02.1985 அன்று நடைபெற்றது.
கோயிலின் வரலாறு
பாலாறு ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோயில் 637 CE இல் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. 

புராணக்கதை
புராணக்கதை என்னவென்றால், ஒருமுறை வாலி (கிஷ்கிந்தாவின் குரங்கு ராஜா), இந்திரன் (வான தேவர்களின் ராஜா) மற்றும் யமன் (மரணத்தின் அதிபதி) ஆகியோர் தங்கள் தவறான செயல்களுக்காக முனிவர்களால் சபிக்கப்பட்டு, குரங்கின் வடிவத்தை எடுக்க வைக்கப்பட்டனர். ஒரு அணில் மற்றும் ஒரு காகம் முறையே.அவர்கள் கைலாச மலைக்குச் சென்று, சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறவும், சிவபெருமானை அவற்றின் அசல் வடிவத்திற்கு மீட்டெடுக்கும்படியும் வேண்டிக் கொண்டனர். சிவபெருமான் அவர்களை இத்தலத்திற்கு (குரங்கனில் முட்டம்) சென்று பிரார்த்தனை செய்யுமாறு அறிவுறுத்தினார். அவர்கள் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வணங்கியபோது, ​​அவர் தனது தரிசனத்தால் அவர்களுக்கு அருள்புரிந்து அவர்களின் பாவங்களைப் போக்கினார். சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்தார்.
குரங்கனில் முட்டத்தில் யமன் சிவபெருமானை வழிபடுவதற்கு முன் காகத்தின் வடிவில் இருந்தான். தன் கொக்கினால் நிலத்தைக் கீறி நீரூற்றை உருவாக்கினான். அந்த நீரூற்றில் குளித்து, அதிலிருந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டிய தண்ணீரை எடுத்து இறைவனுக்கு சமர்ப்பித்தார். கோயிலைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் அமாவாசை வடிவில் (அரை வட்ட வடிவில்) நீரூற்று செய்யப்பட்டது, மறுபுறம் ஒரு பாறையில் இறைவன் அமர்ந்திருக்கிறார். இந்த நீரூற்று "காக்கைமாடு தீர்த்தம்" மற்றும் "வயசமாடு தீர்த்தம்" - (காக்கை என்பது தமிழில் காக்கை / முட்டம் என்றும் சமஸ்கிருதத்தில் வயசம்) என்றும் அழைக்கப்படுகிறது.

வாலி தீவிர சிவபக்தர். இங்குள்ள சிவபெருமானை வழிபட வந்த அவர், பூக்களை கையால் பறிக்க விரும்பாமல், பூக்கள் நேரடியாக இறைவன் மீது விழ வேண்டும் என்பதற்காக மரத்தை அசைத்தார். இங்குள்ள இறைவன், அவருக்குப் படைக்கப்பட்ட மலர்கள் கைகளால் தீண்டப்படாததைக் குறிக்கும் வகையில், "கொய்யாமலர் நாதர்" என்றும் அழைக்கப்படுகிறார். "கொய்யா" என்றால் தீண்டப்படாதது மற்றும் "மலர்" என்றால் தமிழில் பூ என்று பொருள். துறவி திருஞானசம்பந்தர் இங்குள்ள சிவபெருமானைப் பற்றிய பதிகத்தில் இறைவனை "கொய்யாமலர் சூடி" (8 வது பாடலில்) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குரங்கு, அணில் மற்றும் காகம் இவற்றின் தமிழ் பெயர்கள் முறையே “குரங்கு”, “அனில்” மற்றும் “முட்டம்” ஆகும். எனவே இத்தலம் "குரங்குவானில் முட்டம்" என்று பெயர் பெற்றது. வாலி இங்கு சிவபெருமானை வழிபட்டதாக நம்பப்படுவதால், இங்குள்ள இறைவனுக்கு "வாலீஸ்வரர்" என்று பெயர். 

கோவிலில் தெய்வங்கள்
மாடவீதிகளில் விநாயகர், முருகன், காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், மகாவிஷ்ணு, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, சப்தமாதர், சூரியன், நவகிரகங்கள், பைரவர், நால்வர் ஆகியோரின் சிலைகள் மற்றும் சன்னதிகள் உள்ளன. புனித திருஞானசம்பந்தர் மற்றும் புனித சேக்கிழார் ஆகியோருக்கு தனித்தனி சிலைகளும் உள்ளன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, February 1, 2025

274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகள்.

நண்பர்களே ! 
274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். 
காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.
எண் - கோயில் - இருப்பிடம் - போன் 
சென்னை மாவட்டம்
01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.
03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.
04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.
காஞ்சிபுரம் மாவட்டம்
05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006. 
07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084. 
09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664. 
10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.
11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.
12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.
13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.
14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.
15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.
16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.
திருவள்ளூர் மாவட்டம்
17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.
18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.
20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725, 
21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.
22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.
வேலூர் மாவட்டம்
23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.
24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.
25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.
திருவண்ணாமலை மாவட்டம்
26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.
27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.
28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.
29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., - 044 - 2431 2807, 98435 68742.
கடலூர் மாவட்டம்
30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.
31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.
32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.
33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580. 
34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.
35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.
36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.
37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.
38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., - 04143 - 246 467.
39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.
40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., - 04144 - 208 704.
41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.
42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.
43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., - 94425 85845.
44. வீரட்டானேஸ்வரர் - திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை - 98419 62089.
45. விருத்தகிரீஸ்வரர் - விருத்தாச்சலம். சென்னை - மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., - 04143 - 230 203.
46. சிஷ்டகுருநாதேஸ்வரர் - திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., - 04142 - 248 498, 94448 07393.
47. வாமனபுரீஸ்வரர் - திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., - 04142 - 224 328.
48. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், - 04142 - 236 728.
விழுப்புரம் மாவட்டம்
49. பக்தஜனேஸ்வரர் - திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., - 94861 50804, 04149 - 224 391.
50. சொர்ணகடேஸ்வரர் - நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., - 04149 - 291 786, 94862 82952.
51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.
52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.
53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919. 
54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.
55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.
56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.
57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.
58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.
59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.
60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.
நாமக்கல் மாவட்டம்
61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.
ஈரோடு மாவட்டம்
62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.
63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.
திருப்பூர் மாவட்டம்
64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.
65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.
திருச்சி மாவட்டம்
66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.
67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260. 
68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. - 0431 - 246 0455. 
69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.
70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.
71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.
72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.
73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.
74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.
75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091. 
76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484. 
77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.
78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. - 0431 - 252 0126.
அரியலூர் மாவட்டம்
79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.
80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. - 99438 82368.
கரூர் மாவட்டம்
81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.
82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228
83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., - 04324 - 262 010, 99435 27792.
84. பசுபதீஸ்வரர் - கரூர் - 04324 - 262 010.
புதுக்கோட்டை மாவட்டம்
85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212
தஞ்சாவூர் மாவட்டம்
86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.
87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.
88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., - 94866 70043. 
89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.
90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047. 
91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.
92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.
93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.
94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.
95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.
96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.
97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) - 94446 26632, 0435 - 245 9519.
98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.
99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.
100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.
101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.
102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332. 
103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.
104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.
105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., - 04362 - 320 067, 93450 09344.
106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., - 94423 47433.
107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.
108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.
109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.
110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.
111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334. 
112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.
113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858. 
114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.
116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.
117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.
118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., - 94863 03484.
119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237. 
120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.
121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.
122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., - 0435 - 245 4421, 245 4026.
123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.
124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.
125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.
126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354, 
127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.
128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.
129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660. 
130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.
131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138. 
132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., - 0435 - 246 7343, 246 7219.
133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.
134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453. 
135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.
136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852
137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ., 
138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.
139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.
140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.
திருவாரூர் மாவட்டம்
141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343. 
142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343. 
143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646. 
144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.
145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.
146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146. 
147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.
148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300. 
149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.
150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.
151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., - 94862 78810, 04366 - 276 113.
152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.
153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.
154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.
155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.
156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.
157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. - 94427 66818, 04366 - 291 457. 
158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170. 
160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 - 238 818, 239 700, 94427 14055.
161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., - 98422 94416. 
162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. - 94439 43665, 0435 - 246 9555. 
163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. - 04366 - 291 646. 
164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ., 
165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.
166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.
167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., - 04374 - 265 130.
168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586
169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., - 04374 - 275 441.
170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.
171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். - 94423 99273. 
172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.
173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.
174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.
175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014.
176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.
177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.
178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.
179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781. 
180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.
181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.
182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.
183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.
184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.
185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.
186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.
187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.
188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293
189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367 - 237 707. 
190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578
191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900
192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., - 94426 82346, 99432 09771
193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366 - 228 305
194. மனத்துணைநாதர் - திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636
195. கோளிலிநாதர் - திருக்குவளை. திருத்துறைபூண்டி - எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412
196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876
நாகப்பட்டினம் மாவட்டம்
197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.
198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.
199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.
200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., - 93605 77673, 97879 29799.
201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151
202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.
203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., - 04364 - 256 424
204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770, 04364 - 256 273. 
205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.
206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.
207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.
208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., - 04364 - 279 423.
209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085 
210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261, 
211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.
212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., - 94867 17634. 
213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424, 
214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.
215. கல்யாண சுந்தரேஸ்வரர் - திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.
216. ஐராவதேஸ்வரர் - மேலத்திருமணஞ்சேரி.குத்தாலத்தில் இருந்து 6 கி.மீ., - 04364 - 235 487.
217. உத்வாகநாதர் - திருமணஞ்சேரி.கும்பகோணத்தில் இருந்து 27 கி.மீ., - 04364 - 235 002.
218. வீரட்டேஸ்வரர் - கொருக்கை.மயிலாடுதுறை- கொண்டல் ரோட்டில் 3 கி.மீ. 
219. குற்றம் பொறுத்தநாதர் - தலைஞாயிறு.வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல் மேடு வழியில் 8 கி.மீ. - 04364 - 258 833.
220. குந்தளேஸ்வரர் - திருக்குரக்கா.மயிலாடுதுறையில்இருந்து 13 கி.மீ., - 04364 - 258 785. 
221. மாணிக்கவண்ணர் - திருவாளப்புத்தூர்.மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ.- 98425 38954, 04364 - 254 879.
222. திருநீலகண்டேஸ்வரர் - இலுப்பைபட்டு.மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ., (மணல்மேடு அருகில்) - 92456 19738.
223. வைகல்நாதர் - திருவைகல்.கும்பகோணம்-காரைக்கால்ரோட்டில் 18 கி.மீ. தூரத்திலுள்ள பழிஞ்சநல்லூர் அருகில் - 0435 - 246 5616.
224. உமாமகேஸ்வரர் - கோனேரிராஜபுரம்.கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள எஸ். புதூர் அருகில் - 0435 - 244 9830, 244 9800. 
225. கோமுக்தீஸ்வரர் - திருவாவடுதுறை.மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் 16 கி.மீ., - 04364 - 232 055.
226. உத்தவேதீஸ்வரர் - குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ., - 04364 - 235 225
227. வேதபுரீஸ்வரர் - தேரழுந்தூர். மயிலாடுதுறை- கும்பகோணம் வழியில் 10 கி.மீ., - 04364 - 237 650.
228. மாயூரநாதர் - மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 04364 - 222 345
229. உச்சிரவனேஸ்வரர் - திருவிளநகர்.மயிலாடுதுறை-செம்பொனார்கோவில் வழியில் 7 கி.மீ., - 04364 - 282 129.
230. வீரட்டேஸ்வரர் - கீழப்பரசலூர்(திருப்பறியலூர்). மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ., - 04364- 205 555.
231. சுவர்ணபுரீஸ்வரர்- செம்பொனார்கோவில்.மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரோட்டில் 8 கி.மீ., - 99437 97974. 
232. நற்றுணையப்பர் - புஞ்சை.மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் 10 கி.மீ. - 04364 - 283 188
233. வலம்புர நாதர் - மேலப்பெரும்பள்ளம்.பூம்புகாரிலிருந்து 7 கி.மீ., - 04364 - 200 890, 200 685. 
234. சங்காரண்யேஸ்வரர் - தலைச்சங்காடு. மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. - 04364 - 280 757.
235. தான்தோன்றியப்பர் - ஆக்கூர்.மயிலாடுதுறை- நாகப்பட்டினம் வழியில் 16 கி.மீ., - 98658 09768, 97877 09742.
236. அமிர்தகடேஸ்வரர் - (அபிராமியம்மன் கோயில்).திருக்கடையூர் மயிலாடுதுறை-நாகப்பட்டினம் ரோட்டில், 26 கி.மீ., - 04364 - 287 429.
237. பிரம்மபுரீஸ்வரர் - திருமயானம். திருக்கடையூர் அபிராமி கோயிலில் இருந்து 1 கி.மீ., - 94420 12133, 04364 - 287 429. 
238. சரண்யபுரீஸ்வரர் - திருப்புகலூர். நாகப்பட்டினம் - திருவாரூர் ரோட்டில் 22 கி.மீ., - 94431 13025, 04366-237 198. 
239. திருப்பயற்றுநாதர் - திருப்பயத்தங்குடி. திருவாரூர்- திருமருகல் வழியில் 10 கி.மீ., - 98658 44677, 04366- 272 423.
240. ரத்தினகிரீசுவரர் - திருமருகல். நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ., - 04366- 270 823.
241. அயவந்தீஸ்வரர் - சீயாத்தமங்கை. நாகப்பட்டினம்- திருமருகல் ரோடு(நாகூர் வழி) - 04366-270 073.
242. காயாரோகணேஸ்வரர் - நாகப்பட்டினம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98945 01319, 04365- 242 844. 
243. நவநீதேஸ்வரர் - சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ., - 04365- 245 452, 245 350.
244. திருமறைக்காடர் - வேதாரண்யம். நாகபட்டினத்திலிருந்து 63 கி.மீ., - 04369- 250 238
245. அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியன்பள்ளி.வேதாரண்யம்- கோடியக்கரை வழியில் 2 கி.மீ., - 04369- 250 012
246. கோடிக்குழகர் - கோடியக்கரை.வேதாரண்யத்திலிருந்து 9 கி.மீ., - 04369- 272 470
மதுரை மாவட்டம் 
247. மீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை - 0452-234 9868.
248. திருவாப்புடையார் - செல்லூர். மதுரை கோரிப்பாளையம் அருகில் - 0452- 234 9868.
249. சத்தியகிரீஸ்வரர் - திருப்பரங்குன்றம்(முருகன் கோயில்)மதுரையில் இருந்து 7 கி.மீ., - 0452- 248 2248.
250. ஏடகநாதேஸ்வரர் - திருவேடகம். மதுரை- சோழவந்தான் ரோட்டில் 17 கி.மீ. - 04543-259 311.
ராமநாதபுரம் மாவட்டம்
251. ராமநாதசுவாமி - ராமேஸ்வரம். மதுரையில் இருந்து 200 கி.மீ., - 04573 - 221 223.
252. ஆதிரத்தினேஸ்வரர் - திருவாடானை. மதுரை- தொண்டி வழியில் 100 கி.மீ., - 04561 - 254 533.
சிவகங்கை மாவட்டம்
253. கொடுங்குன்றநாதர் - பிரான்மலை.மதுரை- பொன்னமராவதி வழியில் 65 கி.மீ., - 94431 91300, 04577- 246 170. 
254. திருத்தளி நாதர் - திருப்புத்தூர். மதுரை-தஞ்சாவூர் வழியில் 70 கி.மீ. - 94420 47593.
255. சொர்ணகாளீஸ்வரர் - காளையார் கோவில்.மதுரை- தொண்டி வழியில் 70 கி.மீ., - 94862 12371, 04575- 232 516.
256. புஷ்பவனேஸ்வரர் - திருப்புவனம். மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் 18 கி.மீ., - 04575- 265 082, 265 084.
விருதுநகர் மாவட்டம்
257. திருமேனிநாதர் - திருச்சுழி. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழி 35 கி.மீ., - 04566 - 282 644.
திருநெல்வேலி மாவட்டம்
258. நெல்லையப்பர் - திருநெல்வேலி. மதுரையிலிருந்து 152 கி.மீ., - 0462 - 233 9910.
259. குற்றாலநாதர் - குற்றாலம். மதுரையிலிருந்து 155 கி.மீ., 04633 - 283 138, 210 138.
புதுச்சேரி 
260. தர்ப்பாரண்யேஸ்வரர் - திருநள்ளாறு. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ., - 04368 - 236 530, 236 504.
261. சுந்தரேஸ்வரர் - திருவேட்டக்குடி.காரைக்கால் - பொறையார் வழியில் 6 கி.மீ. - 98940 51753, 04368 - 265 693.
262. பார்வதீஸ்வரர் - திருத்தெளிச்சேரி. காரைக்கால் பஸ்ஸ்டாண்ட் பின்புறம் - 04368 - 221 009. 
263. யாழ்மூரிநாதர் - தருமபுரம்.காரைக்காலில் இருந்து 4 கி.மீ. - 04368 - 226 616.
264. வடுகீஸ்வரர் - திருவண்டார்கோயில். புதுச்சேரியிலிருந்து 20 கி.மீ., - 99941 90417.
கேரளா
265. மகாதேவர் - திருவஞ்சிக்குளம்.திருச்சூரிலிருந்து 38 கி.மீ., - 0480 - 281 2061
கர்நாடகா
266. மல்லிகார்ஜுனர் - ஸ்ரீசைலம்.சென்னையில் இருந்து ஓங்கோல், ஓங்கோலில் இருந்து 80 கி.மீ., - 08524 - 288 881.
ஆந்திரா 
267. மகாபலேஸ்வரர் - திருக்கோகர்ணம்.மங்களூருவிலிருந்து உடுப்பி வழி 230 கி.மீ., - 08386 - 256 167, 257 167
268. காளத்தியப்பர் - காளஹஸ்தி, திருப்பதியில் இருந்து 30 கி.மீ., - 08578 - 222 240.
உத்தரகண்ட்
269. அருள்மன்ன நாயகர் - கவுரிகுண்ட் (அநேகதங்காவதம்) ரிஷிகேஷிலிருந்து 84 கி.மீ.,
270. கேதாரநாதர் - கேதர்நாத். ஹரித்துவாரிலிருந்து 253 கி.மீ., 
நேபாளம்
271. நீலாச்சல நாதர் - இந்திரநீல பருப்பதம். காட்மாண்டு
திபெத்
272. கைலாயநாதர் - கைலாஷ்(இமயமலை)
இலங்கை
273. திருக்கேதீச்வரர் - மாதோட்ட நகரம், தலைமன்னார்.
274. கோணேஸ்வரர் - திரிகோணமலை.
பிறசேர்க்கை கோயில்கள் தேவார பாடல் பெற்ற தலங்கள் 274 ஆக இருந்தது. 
சமீபத்திய ஆய்வின்படி, மேலும் இரண்டு கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
275. அகஸ்தீஸ்வரர் - கிளியனூர். திண்டிவனம்- புதுச்சேரி வழியில் 18 கி.மீ., - 94427 86709. 
276. புண்ணியகோடியப்பர் - திருவிடைவாசல். தஞ்சாவூர்-திருவாரூர் ரோட்டில் (கொரடாச்சேரி வழி)
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

நல்ல வேலை கிடைக்க முருகனை வழிபடுங்கள்.

_நல்ல வேலை கிடைக்க முருகர் வழிபாடு_ நிரந்தரமான நல்ல வேலை கிடைத்து, ஒரு இடத்தில் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் பல...