Wednesday, April 30, 2025

பொன் கொடுக்கும் அட்சய திதி ஐஸ்வர்யேஸ்வரர் திருக் கோயில்கள்

*பொன் கொடுக்கும் ஐஸ்வர்யேஸ்வரர் திருக் கோயில்கள்*.
*தலமும் பொன் பெற்ற பக்தரும்*.

சிதம்பரம்
திருவாரூர் 
திருச் சேறை   
திரு நின்றியூர் 
திரு நெல்வேலி 
மதுரை 
திருப் பூவணம் 
சித்தாய்மூர்
சீர்காழி 
திருக்கோலக்கா   
திருவாவடுதுறை 
திரு வீழி மிழலை
திருக்கடையூர் 
திரு முது குன்றம் 
நாகப் பட்டினம் 
திருப் புகலூர் 
திரு ஓணகாந்தன் தளி 
அரிசில் கரைப் புத்தூர்

மற்றும் பல கோயில்கள் வழிபட்டவர்களுக்குப் பொன் கொடுத்த கோயில்கள்.

*சிதம்பரம் நடராஜர் கோயில்*
         பூஜை முறை அந்தணர் நடை சார்த்தும் முன் திருச்சிற்றம்பலத்தில் சிவாய நம என்று ஐந்து எழுத்து ஓதி வைக்கும் தாமிரத் தகடு மறு நாள் முறை அந்தணர் சிவாய நம என்று ஓதித்  திறக்கும் போது   பொன் மேனி நடராஜர் திருவருளால் பொன்னாக மாறும்.

*செம்பு பொன்னாகும் சிவாய நம என்னில்*

*செம்பு பொன் ஆன திரு அம்பலமே*

என்று திருமூலர் போற்றுகிறார்.

*திருவாரூர் தியாக  ராஜர் கோயில்*
 . 
சீனிவாசப் பெருமாள்  குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்கப் பொன் வேண்டி சிவ பூஜை செய்த போது ஈசன் அவரைத் திருச்  சேறைக்கு வருமாறு பணித்தார்.
          பெருமாள்  பூஜித்த பெரிய   ருண விமோச்சன லிங்கம் உள்ள சந்நிதி  பிரகாரத்தில் உள்ளது. 

 *திருச்சேறையில்* வழிபட்ட   சீனிவாசனுக்குப் பரமேஸ்வரன் பெருமளவு பொன் அருளிச் செய்து கடன் தொல்லையைப் போக்கி அருளினார்.

செல்வம் அருளிய ஈசனுக்கு *செல்வர்* என்று திருநாமம். 
 
தேவாரப் பதிகம் முழுவதும்  *சேறைச் செந்நெறிச் செல்வனாரே* என்று    ஐஸ்வர்யேஸ்வரரைப் போற்றுகிறது .

*திரு நின்றியூர் மகா லட்சுமீஸ்வரர் கோயில்*
.
மகா லட்சுமி  பெரிய மகா லிங்கத்தைப் பூஜித்து சங்க நிதி பதும நிதி என்ற இரண்டு செல்வங்களுக்கு  அதிபதி  ஆகி  செல்வத்தின் தெய்வம் ஆனாள் .

*திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்*.

திருவண்ணாமலை திருவானைக்கா உள்ளிட்ட  பல தலங்களில் பூஜை செய்த குபேரன் நெல்லை சுயம்பு லிங்கத்தை வழிபட்டு செல்வத்தின் தேவன் ஆனான். 
           குபேரனை செல்வத்தின் தேவன் ஆக்கிய  நெல்லை யப்பருக்கு *செல்வர்*  என்று திருநாமம்.

*திரு நெல்வேலி உறையும் செல்வர் தாமே*  

என்று  ஒரு பதிகம்  முழுவதும் தெய்வ பாலகர் ஐஸ்வர்யேஸ்வரரைப்
போற்றுகிறார்.

*மதுரை சுந்தரேசர் கோயில்*

சொக்க லிங்கப் பரம் பொருள் அருளால்    முருகன் அவதாரமான உக்கிர குமார பாண்டியன்  வட நாடு சென்று
 சுந்தரேசர் அருளிய செண்டின் மூலம்  பொன் மலையாகிய மேரு மலைக் குகை யிலிருந்து   பெருமளவு பொன் பெற்றான்.

வேதம் ஓதும் வேதியர்களுக்கு 
சொக்க நாதர் எடுக்க எடுக்கக் குறையாத  பொன் கொண்ட உலவாக் கிழியை அருள் புரிந்தார் .

*மதுரை திருப் பூவணம் பூவணேஸ்வர் கோயில்*
 
மதுரைத் திருப் பூவணத்தில் வாழ்ந்த பொன்னனையாள் என்ற   தாயுமான சிவ நாமம் கொண்ட   பெண் அடியார்    மதுரை சுந்தரேசர் கோயில் போல் ஈசனது தங்கத்  திருமேனி  பிரதிட்டை செய்ய விரும்பி முயற்சித்த போது பரமேஸ்வரன் சித்தராக அவர் இல்லத்தில் எழுந்தருளித்   தங்கத் திருமேனி அருளினார்.
*பொன்னனையாள்*
 *திருவிளையாடல்  அன்பர்* .

திருவாரூர் அருகே *சித்தாய்மூர் எனப்படும் திருச்சிற்றேமத்தில்*  ஒரு பெண் அடியாருக்காக தினமும் பரமேஸ்வரன் பொற்காசு அருளினார்.

*சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில்*.

மூன்று வயது மழலை திருஞான சம்பந்தருக்கு பிரம்மபுரீசர் ஆண் பாதி பெண் பாதி யாகும் இருபால் அர்த நாரி ஈசனாய் அலிப் பெருமானாய் நந்தி மேல் வந்து  *பசும்பால் சாதம் உள்ள தங்கக் கிண்ணம்*  அருளினார்.

*சீர்காழியில்  திருக் கோலக்கா சப்த புரீஸ்வரர் கோயில்*

தெய்வ பாலகர்  பிஞ்சுக் கரங்களால் தாளம் இட்டுப் பாடிய போது ஓசை ஒலிப் பெருமான் அவருக்கு ஐந்தெழுத்து  பொறிக்கப்பட்ட  *தானே இசைக்கும் தங்கத் தாளங்களை* அருளினார்.

*திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில்*.
        
 சீர்காழி வேதியர்கள்  வேள்வி செய்வதற்காகத் தந்தை  சிவ பாத இருதயர் பொன் வேண்டிய  போது   திருஞான சம்பந்தருக்கு கோமுக்தீஸ்வரர் ஆயிரம் பொற்காசுகள்  அருளினார்.

*திரு வீழி மிழலை வீழி அழகர் திருக்கோயில்*

திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் தினமும் ஒரு தங்கக் காசு பெற்று  அன்ன தானம் செய்து அடியார் பசி போக்கினர்.

வீழி நாதர் திருஞான சம்பந்தருக்கு  எங்கும் இல்லாத புதிய சிறப்பான காசு அருளினார்.  
அதனால் கால தாமதம் ஆனதால்  ஞான பாலகர் 
 
*கறை கொள் காசினை முறைமை நல்குமே*

என்று   எல்லோருக்கும் புரியும் முறையில் புழக்கத்தில் உள்ள  கறை படிந்த  பழைய காசுகளை அருளுமாறு மாசிலா ஈசனை வேண்டிப் பாடிப்  பழங்காசு பெற்றார்.

*பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு*

என்று திருநாவுக்கரசர் போற்றுகிறார். 

சுந்தரர்  வீழி அழகரைப் பாடித்  தங்க ஆபரணங்கள் பெற்றார்.

*திருக் கடையூர் (திருக் கடவூர்) கால சம்ஹார வீரட்டேஸ்வரர் திருக் கோயில்*

வறுமையிலும் விடாமல் குங்கிலியப்  புகை அளித்துத் தொண்டு செய்த கலய நாயனாருக்கு அமிர்த லிங்கக் கால சம்ஹாரர்   குபேர நிதி அருளி  வாழ்க்கையை  அமிர்தமாக்கினார் 

*அரிசில் கரைப் புத்தூர் படிக்காசுப் பரமர் கோயில்* 

வறுமையில் வாடிய போதும் வெறும் வயிற்றுடன்  நீராட்டிப் பூஜை செய்த புகழ்த்  துணை சிவாச்சாரியார்  கையில் ஒரு தங்கக் காசு  வைத்த புத்தூர் அழகர் தினமும் ஒரு தங்கக் காசைப் படியில் வைத்து அருளினார்.   இந்த அற்புத வரலாற்றை சுந்தரர் போற்றுகிறார்.

 *விருத்தாச்சலம் ( திரு முது குன்றம்) விருத்த கிரீசர் கோயில்*

பரவையாருக்காக சுந்தரர் ஈசனிடம் பொன் வேண்டினார். 
        விருத்த கிரீசர் பெருமளவு பொன் அருளினார்.  

அவற்றை  விருத்தாச்சலம் மணி முத்தாற்றில் இட்டுத் திருவாரூர் திருக் குளத்தில் பெறுவதற்கும்  அருள் புரிந்தார்.

 *நாகப் பட்டினம் (திரு நாகை) காரோணம்  காரோணேஸ்வரர் திருக்கோயில்*  .

சுந்தரர்  சுந்தர விடங்கரைப் பாடிப் பெருமளவு  பொன் வைரம் ஆபரணம் ஆடை மற்றும் அனைத்தும் பெற்றார்.

 *திருப் புகலூர் கோணப் பிரான் கோயில்*

சுந்தரர் செங்கற்களை அடுக்கிப்  படுத்து உறங்கிய போது 
புகலூர்  புண்ணியன் செங்கற்களைப் பொன் கட்டிகளாக்கி அருளினார்.

: *திருக்கச்சி  ஓணகாந்தன் தளி ஓண காந்தனேஸ்வரர் கோயில்* .

சுந்தரர்   இங்கு ஈஸ்வரனைப் போற்றித் துதித்துப் பொன் பெற்றார் .

இவ்வாறு இன்னும் பலப் பல கோயில்கள் பலப் பல அடியார்கள்.

சிவப்பிரியா

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

வேலை கிடைக்க வேல் பூஜை செய்யலாம்.முருகன் வேலின் மகத்துவம்

_முருகன் வேலின் மகத்துவம்_ முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்க...