Sunday, June 15, 2025

தமிழகத்தில் உள்ள அஷ்ட (8) நரசிம்மர் கோவில்கள்..

தமிழகத்தில் உள்ள அஷ்ட (8) நரசிம்மர் கோவில்கள்
1 சிங்கிரிகுடி (அல்லது அபிஷேகப்பாக்கம் என்பது)
2.பரிக்கல்
3 பூவரசங்குப்பம்
4 சோளிங்கர்
5 சிங்கபெருமாள்  
    கோவில்
6 நாமக்கல்
7.சிந்தலவாடி
8.அந்திலி 
  
நரசிம்மர் தலங்களில் நடுநாயகமாக உள்ளது பூவரசங்குப்பம் ஆகும்

இதன் கிழக்கில் சிங்கிரிக்குடி மேற்கில் பரிக்கல், அந்திலி வடக்கில் சோளிங்கர், சிங்கப் பெருமாள் கோவிலும் தெற்கில் நாமக்கல், சிந்தலவாடி அமைந்துள்ளது.
பூவரசங்குப்பம்
சிங்கிரிக்குடியில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஊரை அடையலாம். நேர்கோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் தலங்களில் நாம் 2-வதாக வழிபட வேண்டியது இது. இந்த ஆலயத்திலும் இறைவன், 'லட்சுமி நரசிம்மர்' என்ற திருநாமத்துடனேயே அருள்பாலித்து வருகிறார். தாயாரின் பெயர், அமிர்தவல்லி என்பதாகும். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபாடு செய்து வந்தால், உடல்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்கள் நீங்கும். 
பரிக்கல்

பூவரசங்குப்பத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. நரசிம்மர் ஆலயத்தில் மூன்றாவதாக வழிபட வேண்டிய கோவில் இது. இந்த ஆலய இறைவனின் பெயரும், 'லட்சுமி நரசிம்மர்'தான். தாயாரின் பெயர் கனகவல்லி என்பதாகும். பதவி உயர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள், பதவி இழந்தவர்கள் அந்தப் பதவியை மீண்டும் பிடிப்பதற்கும் இங்கு வந்து வழிபாடு செய்யலாம். 
சிங்கிரிக்குடி

புதுச்சேரியில் இருந்து இந்த தலம் மிக அருகில் உள்ளது. எனவே ஒரே நாளில் 3 நரசிம்மரை வழிபட விரும்புபவர்கள், புதுச்சேரியில் இருப்பவர்கள் இங்கிருந்து நரசிம்மர் வழிபாட்டைத் தொடங்கலாம். சிங்கிரிக்குடியில் வீற்றிருக்கும் நரசிம்ம மூர்த்தியின் திருநாமம், 'லட்சுமி நரசிம்மர்' என்பதாகும். இங்கு இவர் உக்கிர நரசிம்மராக அருள்கிறார். தாயாரின் திருநாமம் கனகவல்லி ஆகும். திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், இங்குவந்து லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த உக்கிர நரசிம்மரை வணங்கினால் எதிரி களின் தொல்லை நீங்கும். இந்த ஆலயம் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். புதுச்சேரியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிங்கிரிக்குடி.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஆடி அமாவாசை நாளில் யாரெல்லாம் பூஜை செய்யலாம்?

 24-07-2025 வியாழக்கிழமை* *ஆடி அமாவாசை* *இந்து தர்மத்தில் உள்ள ஆன்மீக அன்பர்களே.!* *ஆடி அமாவாசை என்பது வெறும் சாதாரண நாள் அல்ல.....