_முருகன் வேலின் மகத்துவம்_
முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இகபர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்கவேண்டும்.
முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும். கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக் கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது.
அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன். மயில் மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம் தான். இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது.
கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது.
எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது.
வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன்,துங்கவடிவேலன், ப்ரசன்ன வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைத்தவர் அருணகிரியார்.
வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.
திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன.
வேலின் பெருமை:
வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், – வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை
இது திருமுருகாற்றுப்படையை ஒட்டி எழுந்த பின்னாளைய வெண்பா !
வேல் வினைகளை வேரறுக்க வல்லது. வேலுண்டு வினையில்லை என்பது அருளாளர் வாக்கு. அச்சம் அகற்றும் அயில் வேல் எனச் சிறப்பிக்கிறார் குமரகுருபரர். வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன் என்று கந்தரநுபூதியும், வினை எறியும் வேல் என்று திருப்புகழும் போற்றுகின்றன.
சக்திவேல் வழிபாடு என்பது இராஜ அலங்கார முருகன் படத்துக்கு அருகே உருவேற்றப்பட்ட சக்திவேலை வைத்து நாள்தோறும் வணங்குவது. சக்திவேலை உருவேற்றுதல் என்பது சக்திவேலுக்கான சூட்சுமசக்தியை வழிபாட்டின் மூலமாக அதிகரித்துக் கொண்டே செல்வது.
செய்யும் காரியங்களில் தடைகள் விலக, நீண்ட நாட்களாய் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்க, கல்வியில் மேன்மை பெற, மன பயம் நீங்கி வலிமை உண்டாக, வியாபாரத்தில் லாபம் பன்மடங்காய்ப் பெருக, பில்லி சூனியம் அணுகாதிருக்க, நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்க, பூத பிரேத பிசாசுகளின் தொல்லைகளில் இருந்து விடுபட, சகல சம்பத்துகளும் கிடைக்க, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க, அரசு மற்றும் தனியார் வேலை கிடைக்க வேல் பூஜை செய்யலாம்.
மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெற, விதியால் வரும் ஆபத்துகள் விலக, தடைபெற்று நிற்கும் திருமணம் நடைபெற, சொந்தமாய் வீடு வாங்க, கெட்ட கனவுகள் வராமல் இருக்க, நினைத்த காரியம் நினைத்தப்டியே நிறைவேற, பொன் வெள்ளி ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்க, தனதான்யங்கள் மேலும் பெருக, கலைகளில் தேர்ச்சி பெறவும் வேல் பூஜை செய்வது சிறப்பு.
எதிரிகளால் ஏற்படும் பயம் நீங்க, தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற, எதிர்மறைச் சக்திகளின் பாதிப்பிலிருந்து விலக, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருக, உயர்ந்த பதவிகள் பெற, வாக்கு வளம் பெற, விபத்துகள் ஏற்படாமல் இருக்க சக்திவேலை வணங்கலாம்.
ஒவ்வொரு நாள் காலையும் சூரிய உதயத்துக்கு முன்னதாக சக்திவேலை வழிபடுதல் சிறப்பு. சக்திவேலினை வீட்டிலோ, அலுவலகத்திலோ வைத்துக் கொள்ளலாம். அலுவலகத்தில் சக்திவேலை வைப்பதானால், அலுவலகம் சென்றவுடன் சக்திவேலை வணங்கிவிட்டே பணிகளைத் துவக்க வேண்டும். மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க எனச் சொல்லி வர மனம் இலேசாகி விடும்.
சக்திவேலைத் தொடர்ந்து வழிபட்டுக் கொண்டிருப்பதன் வழியாக அதன் சூட்சுமசக்தியை அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆக, சக்திவேலை வணங்க நாள்தோறும் ஐந்து நிமிடங்களாவது மறவாமல் ஒதுக்கிக்கொள்ளுங்கள். காலை, மாலை அல்லது இருவேளைகளிலும் சக்திவேலை வழிபடலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment