Friday, September 16, 2022

பைரவர் வழிபாட்டின் நன்மைகள்**********************

இன்று 19.08.2022. தேய்பிறை அஷ்டமி
*********************************************
பைரவர் வழிபாடு
*********************
பரமேஸ்வரனான சிவபெருமான் பிரபஞ்ச வடி வானவர். அனைவரையும் காக்கும் பொருட்டு் பல்வேறு திருவடிவங்கள் தாங் கி உருவெடு த்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பவர். 

அறுபத்து நான்கு திருவடிவங்கள் கொண் டு பிரசன்னமாகி தீமையை அழித்து நன் மையை காத்தவர். அவற்றுள், கணபதி, முருகன், வீரபத்திரர்,  பைரவர், ஐயனார் ஆகியோர் சிவகுமாரர்கள் என்கின்றன புராணங்கள். 

சிவனின் ரூபமாக தோன்றியதால் அவர் களே சிவனாகவும், சிவ குமாரர்களாகவும் விளங்கி, துஷ்ட நிக்ரஹமும் பக்த பரிபா லனம் செய்கி றார்கள்.  'சிவனே பைரவர்', ‘பைரவரே சிவன்' என்றபோதும் இருவருக் குமான வழிபாடுகள், பூஜைமுறைகள், பலன்கள் எல்லாம் தனித்த னியானவை. 

பயம் போக்கும் பைரவர் வழிபாடு நான்மு கனா கக் காட்சிதரும் படைப்புக்கடவுள் பிரம்மனுக்கு முற்காலத்தில் ஐந்து தலைக ள் இருந்தனவாம். அந்த ஐந்தாவது தலை மறைந்தது எப்படி என்று அறிந்து கொண் டால் பைரவ அவதாரம் குறித்தும் அறிந்து கொண்டு விடலாம். 

அந்தகாசுரன் என்னும் அரக்கன் மூவுல கையும் ஆட்டுவித்துவந்தான் அந்தகம் என்றால் இருள் தன் சக்தியால் பிரபஞ்சம் முழுமையையும் இருளாக்க, அஞ்சி நடுங் கிய தேவர்களும் முனிவர்களும் கயிலை யில் சரணடைந்தனர். 

அப்போது அவர்களுக்கு அபயம் அளித்த சிவன் தன் சக்தியாக பைரவரைப் படைத் தார். பைரவர் இந்த உலகின் ஒளியாகி எண் திசை களிலும் நின்று ஒளிகொடு த்தார். அப்படி எண் திசைகளிலும் நின்று ஒளிகொடுத்து அந்தகா ரத்தை அழித்தவ ர்களே ‘அஷ்ட பைரவர்கள்' என்கிறார்கள்.

பிரம்மன் படைப்புத்தொழில் செய்வதாலு ம் ஐந்துதலைகளை கொண்டிருப்பதாலும் ‘தானே பெரியவன்' என்னும் அகந்தை கொண் டாராம். அகந்தை கொண்டு அவர் எல்லோரை யும் எள்ளிநகையாடினார். 

அப்போது பிரம்மனின் ஆணவத்தை அழி க்கும் படி சிவனடியார்கள் வேண்டிக் கொள்ள சிவன் தன் ரூபமான பைரவரைத் தோற்றுவித்தார். விஸ்வரூபம் கொண்ட பைரவர் தன் விரல் நகத்தினால் பிரம்மா வின் தலை ஒன்றினைக் கொய்தார். அகந்தை நீங்கி அயனும் பைரவ ரை வணங்கித் தன் பிழை பொறுக்குமாறு வேண்டினார்.

இருளையும் அகந்தையையும் அழிப்பவர் பைர வர் ஆதலால், இவற்றால் துன்பப் படுபவர்கள் பைரவ வழிபாடு செய்ய அவை அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறையும்.

சிவனும் பைரவரும்
************************
சிவனும் பைரவரும் வேறுவேறல்ல. 

சிவனை லிங்க ரூபமாக வழிபடுகிறோம். பைர வரை யோ பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் தரித்து ம், சூலாயுதம் ஏந்தி,  பாசக் கயிறு கொண்டு, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தாங்கிய திருமேனியாக வழிபடுகிறோம்.

ஆலயங்களில் கிழக்கு அல்லது மேற்கு நோக் கி சிவபெருமான் எழுந்தருள்வார். பைரவரோ அனைத்து ஆலயங்களிலும் வடக்கு நோக்கி யே நின்றருள்வார்.

சிவபெருமானின் பிரதான வாகனம் ரிஷபம். பைரவரின் பிரதான வாகனம் நாய். ருத்ரம் என்னும் வேதபாகம் ஈசனை ‘நாய்களின் தலை வன்' என்று புகழ்வது பைரவ ரூபத்தையே.

சிவம் என்றால் மங்களம் என்று பொருள். சிவன் மங்கள மூர்த்தியாகத் திகழ்பவர். இந்த உலகில் ஐந்தொழில்களையும் புரி யும் வகை யில், வக்ரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை என்னும்  ஐந்து குண ங்கள் கொண்ட தன் அம்சங்களை அவர் பிறப்பித்தார்.

பஞ்ச குணங்களில் பைரவர் வக்ர குணத் தின் அம்சமானவர். பகைவரை அழிக்கும் ருத்ரமூர் த்தியாக விளங்கும் பைரவரை வழிபட பகை முற்றிலும் மறையும்.

பைரவ மூர்த்தியை  ஏன் வழிபட வேண்டும் ?
************************************************
பயம் போக்கும் பைரவர் வழிபாடு துன்பம் ஒரு வெள்ளம் போல சூழ்ந்துகொண்டு தப்ப வழியின்றித் தவிப்பவர்கள், பற்றிக் கொள்ள உகந்த வழிபாடு பைரவர் வழிபா டு. பைரவர் காவல் தெய்வம் போன்றவர். கூப்பிட்ட குரலு க்கு ஓடிவந்து காப்பவர். இவர், நவகிரகங்களி ல் சனியின் குருவா க கருதப்படுபவர். குருவை வணங்கினா ல் சீடன் மகிழ் வார் என்பது இயல்பு. 

பைரவரை வழிபடு வதன் மூலம் சனியி னைக் குளிர்வித்து அவர் பார்வையால் ஏற்படும் கெடுபலன்களை நற்பலன்களாக மாற்றிவிட முடியும். அசுர சக்திகளை அழிப்பதற்காகவே அவதரித்த பைரவரை வேண்டிக்கொள்ள பக்தர்களைத் தாக்கும் தீய சக்திகளை அவர் அழித்துக்காப்பார்.

சிவாலயங்களில் அனைத்து வழிபாடுக ளும் காலை சூரியபகவானிடம் தொடங்கி இரவில் பைரவரிடம்தான் நிறைவு பெறு ம். இரவில் கோயிலைக் காத்தருள்பவர் பைரவர் என்பதா ல் அவரின் திருவடிகளி ல் திறவுகோலை சமர்ப்பிக்கும் வழக்கமும் உண்டு.

ஆலயத்தைக் காக்கும் பைரவர் அடியார்க ளின் வீட்டையும் காப்பார். தினமும் ஆலய ம் சென்று பைரவரை வணங்கி வர திருடர் பயம் நீங்கி ஆனந்தமாக வாழலாம்.

பைரவரை வழிபட  உகந்த நேரமும் நாளும்
*************************************************
இவரை, சிவப்பு நிற ஆடை அணிந்து சிவ ப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு நிறப் பழ ங்களை நிவேதனம் செய்து வழிபடவேண்டும். கோயில்களில், ராகுகா லத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்துகொள்வது அபரிமி தமான நன்மை யைக் கொடுக்கும். இதனால், மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகி வாழ்க்கை செழிப்படையும்.

பைரவர் வழிபாட்டின் நன்மைகள்
***************************************
◆பைரவர் வழிபாடு பயம் போக்கும் 

◆பைரவர் வழிபாடு திருமணம் யோகம் கைகூட.

◆வெள்ளிக்கிழமை, ராகு கால நேரத்தில் பைர வருக்கு விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.

◆குழந்தைபாக்கியம் பெற, தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவா லயங்களு க்குச் சென்று, பைரவ மூர்த்திக் கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

◆இழந்த பொருள் - சொத்துகளைத் திரும் பப் பெற.பைரவர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து மனமுருகிப் பிரார்த்தித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், இழந்த பொருள் மற்றும் சொத்துகள் திரும்பக் கிடைக்கும்.

◆வறுமை நீங்க. வெள்ளிக்கிழமை மாலை வேளையில், வில்வ இலைகள் மற்றும் வாச  னை மலர்களால் பைரவரை அர்ச்ச னை செய்து வழிபட்டால் வறுமை அகலும்.

◆நோய்கள் தீர, யமபயம் நீங்க. ஞாயிற்று கிழமை ராகுகாலம், தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களில் பைரவருக்கு நடை பெறும் வழிபா டுகளில் கலந்துகொண்டு, பைரவரு க்கு மஞ்சள் மற்றும் சந்தன அபிஷேகம் செய்து எலுமிச் சைமாலை அணிவித்து அர்ச்சனை செய்தால் நோய்கள் மறையும். யம பயம் நீங்கும்.

◆சனி தோஷம் நீங்க. சனிக்கிழமைகளில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டா ல், சனி கிரகத்தால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய....
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ....
ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி....
19.08.2022... நேசமுடன் விஜயராகவன்.....

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...