Saturday, September 9, 2023

கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்கிறது.

ஆச்சரியங்கள் நிறைந்த
                    அதிசய கோவில்கள்"!

தலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்!! 
 இந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்கிறது.

   1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவில், கட்டிடக்கலைக்கும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது. இந்த கோவிலைப் பற்றியும், நிழல் தலைகீழாக விழுவதற்கான காரணம் பற்றியும் தெரிந்து கொள்வோம்.....

   உலகம் வியக்கும் கட்டிடங்களில் ஒன்றுதான் சிறப்புமிக்க விருபாட்சர் கோவில். இந்த புகழ்பெற்ற கோவில், கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

   ஏழாம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட  ஹம்பி என்ற இடத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 

  இந்த கோவிலின் ராஜ கோபுரம் சுமார் 165 அடி உயரம் கொண்டது. இதன் நிழல் ஒரு சுவற்றில் இங்கு தலை கீழாக விழுகிறது. இந்த அதிசய நிழலின் ரகசியம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. 

   நிழலானது தலைகீழாக விழவேண்டுமானால் அதற்கு கண்ணாடி போன்று ஏதாவது ஒன்று நிச்சயம் தேவைப்படும். ஆனால், எதுவுமே இல்லாமல் இந்த கோவிலின் நிழல் எப்படி தலை கீழாக விழுகிறது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை.

   இந்த கோவிலில் உள்ள மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபத்தின் நடுவில் ஒரு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்திரை ஆற்றின் நீர் மடப்பள்ளியை அடைந்து பின் வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது. வடிகால் கால்வாய் முதல் வானளாவிய கோபுரம் வரை அனைத்திலும் மிக சிறந்த கட்டிட கலையின் திறன் காண்போரை பிரமிக்கவைக்கிறது. 

  இதை விஞ்ஞானிகள், கோபுரத்திற்கும் சுவருக்கும் இடையே ஒரு துளை லென்ஸ் போல செயல்பட்டு கோபுரத்தின் நிழலை தலைகீழாக விழ செய்கிறது என்று கூறுகின்றனர். இருந்தாலும் அவை நிரூபிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

  இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்ததில் இதை சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதாக தெரிகிறது. ஆனாலும், கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்த கோவிலில் பல பணிகள் நடைபெற்றதற்கான ஆதாரங்களும் அதில் இருக்கிறது.

No comments:

Post a Comment

Followers

கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ள கனகசபாபதி சுந்தரேசுவரர்....

*கனகசபாபதி* கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ளது கனகசபாபதி திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகிலுள்ள கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ளது கனக...