Saturday, September 23, 2023

மஹாளய பக்ஷம் ஆழமான விளக்கம்.

மஹாளய பக்ஷம் ஆழமான விளக்கம்.
********************************************
(சற்று நீண்ட பதிவு.)
(உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் படித்து மேன்மை அடைய வேண்டிய பொக்கிஷம்.)

முதன் முதலில் பிரபஞ்சத்தில் தோன்றிய ஆதிமூலச் சூரிய கிரகமும், ஆதிமூலச் சந்திர கிரகமும் இணைகின்ற கிரகமண் டல சங்கமத்தில் தோன்றுவதே மஹாளய பூஷித லோகமாகும் இங்குதான் மஹாள யபட்சத்தை திருவிழாவாக தேவர் களும் பித்ருக்களும் கொண்டாடுகிறார்கள்.

அதாவது, நமது மூதாதை யர்களது பித்ரு லோகங்களில் கொண்டாடப் படுகின்ற பிரம்மோற்சவமே மஹாளய பட்சமாகும்.
பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பண த்தில் எழுகின்ற தர்ப்பண நீரை கொண்டு, பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்க ளும் பித்ரு கணங்களும் பித்ரு பத்தினிக ளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர்.

புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங் களிலும் இருக்கும் மஹரிஷிகள் தேவர்க ள் மற்ற எல்லா ஜீவன்களும் பூலோகத்திற் கு வந்து பித்ரு தர்பணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது.

நமது முன்னோர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம் தர்ப் பணம்போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாகவும் அமாவாசையில் மஹாளய அமாவாசை மிகவும் குறிப்பிடத்தக்கது.

மஹாளய பட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பவுர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை முதல் அமாவா சை வரை 15 தினங்களுக்கு இறந்த பித்ரு க்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று நம்பப் படுகிறது.

இறந்து போனவரின் திதி தெரிந்தால் அந்த திதி தினத்தன்றும், தெரியாவிட்டால் மஹாளய அமாவாசை தினத்தன்றும்  பித் ருக்கள் நற்கதி அடைய பூஜை செய்ய வேண்டும் என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.

மஹாளய அமாவாசையின் போது பிராம ணர்கள் சிறப்பான முறையில் தர்ப்பணம் செய்வார்கள்.

மஹாளய அமாவாசை தினத்தன்று பித்ரு க்கள்,குறிப்பாக ஆயுதம் மூலமாக கொல் லப்பட்டோ, தற்கொலை செய்து கொண் டோ, அல்லது விபத்து மூலமாக அகாலம ரணடைந்து போன பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக பூஜை செய்யும் நாளாகும்.

மஹாளய அமாவாசை தினத்தன்று பிரா மணர்களுக்கு அன்னதானம் செய்வது சிறந்தது என்று கூறப்படுகிறது. திங்கள் கிழமையும், அமாவாசையும் கூடி வரும் போது அரச மரத்ததில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் கூடியிருப்பார்கள், அப்போது அரச மரத்தை சுற்றி வந்தால்நினைத்த காரியம் நிறைவேறும். 

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந் தை பிறக்கும்,பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுபோலவே மீண்டு ம் பிறவாது, மோட்சம் அடைந்து விட்ட ஆன் மாக்களுக்கு செய்வதும், நாராயண ப்ரீத் யர்த்தமாகவே சென்று விடுகிறது என்பர்.

பக்ஷம் என்றால் 15 நாட்கள்; மஹாளயம் என்பது பித்ரு தேவதைகள் வசிக்கும் இடம். பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்முடன் சூக்ஷ்ம ரூபத்தில் வசிக்கும் 15 நாட்களே மஹாளய பக்ஷம். 

புரட்டாசி மாச அமாவாசைக்கு முந்தைய 14 நாட்கள் மாஹாளய பக்ஷம் என்று பெயர். புரட்டாசி அமாவாசையை மஹாளய அமாவாசை என்று சொல்கிறோம். இந்த நாட்களில் நமது மூதாதையர்களான பித் ருக்கள் பூலோகத்திற்கு சூக்ஷம ரூபத்தில் வந்து நாம் அளிக்கும் பித்ருதர்பணங்க ளை நேரடியாக எற்பகிறார்கள்.

பொதுவாக பித்ருக்கள் எல்லா நாட்களிலு ம் பூலோகம் வர இயலாதாம். ஒவ்வொரு அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் அவர்க ள் மறைந்த திதி நாட்கள் மற்றும் மஹா ளய பக்ஷத்தில் மட்டுமே அவர்களால் பூலோகத்திற்கு வர இயலுமாம்.

அதனால்தான் அவர்கள் வரும் தினங்க ளில் பித்ரு பூஜையை செய்யச் சொல்லியி ருக்கிறார்கள் மஹரிஷிகள். புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங்களிலும் இருக்கும் மஹரிஷிகள், தேவர்கள்மற்ஸ எல்லா ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து பித்ரு தர்பணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. 

நமது பித்ருக்களான வசு, ருத்ர, ஆதித்யர் கள் கூட பூலோகம் வந்து பித்ரு தர்பணங் களை சூக்ஷ்ம ரூபமாய் செய்கிறார்கள் என்பர். அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் க்ரஹண காலங்களில் செய்யும் தர்பண மானது நமது தந்தை மற்றும் முந்தைய 2 தலைமுறையினருக்கும், தாய் வழியில் 3 தலைமுறையினருக்குமாக 12 பேர்களுக் கு மட்டுமே செய்யப்படுகிறது

ஆனால் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே, காருணீகர்கள் எனப்படும் மாமா-மாமி, பெரியப்பா-பெரியம்மா, அத்தைகள், சகோதரர்கள்-அவர்களது மனைவிகள், சித்தப்பா-சித்தி, மாமனார்-மாமியார், குரு, நண்பர்கள் ஆகிய எல்லோருக்கும் செய்ய முடிகிறது.

பித்ருக்களுக்கு உணவாவது எள் கலந்த நீரே. இதனை மந்த்ர பூர்வமாக அவரவர் பெயர் சொல்லி அளிப்பதன் மூலம் அவர்க ளது ப்ரீதிக்குப் பாத்திரமாகிறோம். இறந்த வர்கள் எங்கோ மறுபடி பிறந்திருப்பார்க ளே பின் எதற்கு இவை என்று ஒரு கேள்வி வரும்.அவ்வாறு பிறந்தாலும், மீண்டும் பிறந்த அந்த ஜீவனுக்கு அந்த நேரத்தில் வேண்டிய பொருளாக நாம் அளிக்கும் எள்ளும்-நீரும் மாறிவிடும் என்கிறார்கள். 

இன்னொரு கருத்துப்படி, நமது முன்னோ ர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம்/ தர்பணம் போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாக வும், செய்யத் தகுதியுடையவன் செய்யாது விடக்கூடாது என்பது பெரியவர்கள் கூற்று.

மஹாளயத்தை மூன்று விதங்களில் செய் யலாம். பார்ணவம் எனப்படும் ஹோமத் துடனான சிராத்தமாகவும், ஹோமமில்லா து ஹிரண்ய சிராத்தமாகவோ, அல்லது தர்பண ரூபமாகவோ செய்வது வழக்கம். 

நமது பொருளாதார, இட-கால வசதிக்கு ஏற்ப ஏதேனும்ஒரு வழியைப் பின்பற்றி யோ அல்லது குலவழக்கத்தின்படியோ செய்வது அவசியம். 15 தினங்களும் தர்பணம் செய்வதற்கு பக்ஷ-மாளயம் என்று பெயர். 

இதனைச் செய்ய இயலாதவர்கள் விசேஷ தினங்களான மஹாபரணி, மத்யாஷ்டமி, வ்யதிபாதம், கஜச்சாயா,அல்லது தமது தாய்/தந்தையின் திதிகளில் மட்டுமாவது ஹிரண்ய ரூபமாக சிராத்தம் செய்து அன்னமிடுதல் வேண்டும். 

குடும்பத்தில் யாரேனும் சன்யாசியாகி மரணமடைந்திருந்தால் அவர்களுக்கு மாஹாளய ஏகாதசியன்று சிராத்தம் செய் வதும் துர்மரணமடைந்தவர்களுக்கு சதுர் தசி உத்தமமானதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக நாம் தர்பணங்கள் செய்யும் போது நமது வலதுகை ஆள்காட்டி விரலுக் கும், கட்டைவிரலுக்கும் நடுவிலாக நீரை வார்க்கிறோம். இந்த இருவிரல்களுக்கு நடுவில் இருக்கும் ரேகைகளை பித்ரு- பூம்ய ரேகைகள் என்பர். இந்த ரேகைகள் மூலமாக அளிக்கப்படும் நீரானது பித்ருக் களுக்கானதாக மாறிவிடுகிறதாம்.

இந்த 15 நாட்களும் சிராத்தம், தர்பணம் போன்றவை மூலமாக தான தர்மங்களைச் செய்தல் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்த மானதாச் சொல்லப்படுகிறது. இவ்வாறு ப்ரீதியான பித்ருக்கள் நமது வம்சம் தழை க்கவும், நோய்-நொடியற்ற வாழ்வுக்கும் ஆசிர்வாதிக்கின்றனர். 

நமது வாழ்வுக்கு நல்லது என்பது ஒருபுற மிருந்தாலும், நம்மை வளர்த்து ஆளாக்கி ய நமது பெரியவர்களுக்கு நாம் செய்யும் நன்றி அறிவித்தல் என்ற எண்ணத்திலா வது இந்த பித்ரு பூஜையை விடாது செய்ய வேண்டும்.

பொதுவாக அனைத்து அமாவாசை திதிக ளிலும் ஸ்ரீ அக்னி பகவானின் பத்தினியா ன ஸ்வதா தேவியானவள், நாம் இடுகின்ற எள்ளையும் நீரையும் வாங்கி வானத்தில் எங்கெங்கோ உள்ள நீத்தார் உலகங்களுக் கு எடுத்துச் செல்கிறாள். 

ஆனால், மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய- சந்திர உலகிற்கு வந்துபோவதால் ஸ்வதா தேவி யால் அனைத்து உறவினர்களையும் அங் கு சந்திக்க முடிகிறது. 

எனவே மஹாளய பட்ச அமாவாசையில் நாம் சமர்ப்பிக்கும் எள், நீர் ஆகியவற்றை இறந்த நமது உறவினர்களி டையே உடன டியாக அவள் சேர்த்துவிடுகி றாள். இறந்த உறவினர்கள் மீண்டும் எந்தப் பிறவி எடுத் தாலும், அந்தப் பிறவியில் அவர் களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற காரியத்துக்குத் தேவையான உதவியை, காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு "மாற்றுப் பண்டங் களாக' உருவாக்கித் தந்துவிடுகி றாள் ஸ்வதா தேவி.

ஆகவே அவரவர் குலாசாரத்தின்படியாக எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதன் படியாக செய்து மூதாதயர்களை வணங்கி, ஆக, அதியற்புதமான- தெய்வீக ஆற்றல் களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்க ளை முறையாக அளித்து, பல்லாயிரக்க ணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரி காரம் தரும் மஹாளய பட்ச தர்ப்பண தான-  தர்மங்களை நிறைவேற்றி அவர்க ளது அருளை பெறலாம் எல்லா செல்வங் களையும் பெற்று நற்கதியும் அடையலாம்.

மஹாளய பட்சமும் நம் வீடு தேடி வரும் முன்னோர்களும் நம்மீது அளவற்ற அன் பையும், இரக்கத் தையும், பாசத்தையும், கருணையையும் காட்டி, தங்கள் சுகங்க ளைத் தியாகம் செய்து, நம்மை வளர்த்து ஆளாக்கிய நம் முன்னோர்களை நாம் பூஜிக்கவேண்டிய 15 புண்ணிய தினங்க ளாகும் இந்த மஹாளய பட்ச தினங்கள்.

நாம் திருக்கோயில் செல்லாமலிருக்கும் போது இறைவனே வீதிவுலா வந்து நமது இல்லங்களின் வாயிலிலேயே நமக்குத் தரிசனம் அளிப்பது போன்று, மஹாளய பட்சமாகிய இந்தப் பதினைந்து நாட்களும் நமது முன்னோர்களே நம் வீடு தேடி வந்து, நம்முடன் தங்கியிருந்து, நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகள் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்று, நம்மை ஆசீர்வதித் து, மஹாளய அமாவாசை தினத்தன்று அவர்களுக்குரிய உலகங்களை அடைகின்றனர். 

அவ்வாறு அவர்கள் மனநிறைவு பெற்று நம்மை ஆசீர்வதிப்பதால், முற்பிறவித் தவறுகளால் இப்பிறவியில் நமக்கு ஏற்ப டும் அல்லது ஏற்படக்கூடிய கடன் தொல் லைகள், நோய்கள், குடும்பப் பிரச்சினை கள், குழந்தைகளின் கல்வி முன்னேற்ற த்தில் தடங்கல்கள், செய்வினை தோஷங் கள், நியாயமில்லாமல் பிறரால் கொடு மைக்கு ஆளாகுதல், புத்திரப்பேறின்மை, கணவன்_மனைவியரிடையே அன்னியோ ன்யம் குறைதல், கணவன்_மனைவி பிரி ந்திருத்தல், உத்தியோகத்தில் தொல்லை கள், மனநலக்குறைவு, குடும்பத்தில் ஏற்ப டும் தற்கொலைகள், அகால மரணங்கள், காரணமற்ற மனபயம் ஆகிய மிகக்கொ டிய துன்பங்களும்கூட அடியோடு நீங்கி விடும் என்பது சத்தியம்.

எவ்விதம் பித்ருக்கள் வருகிறார்கள்?
*******************************************
மஹாளய பட்சம் ஆரம்ப தினத்தன்று பித்ரு தேவதைகள், சூரிய பகவான், தர்ம ராஜன் ஆகியோரின் அனுமதி பெற்று பித்ருக்கள், ஸ்வர்ண (தங்கம்) மயமான விமானங்களில் ஏறி நம்மிடம் வருகிறார்கள். 

இந்த விமானங்கள் சூரியனின் ஒளிக்கற் றைகள் மூலம் பறந்து வருகின்றன. இவ் விதம் பித்ருக்கள் பூமியில் இறங்கும் போ து அவர்களை தேவர்களின் உலகிலுள்ள மகரிஷிகள் ஆசீர்வதிக்கின்றனர்.

தேவர்கள் வணங்குகின்றனர். பித்ருக்கள் பரம பவித்திரமானவர்கள். தங்களது ஜீவித காலத்தில் செய்துள்ள புண்ணிய செயல்களால் புடமிட்ட தங்கம்போல் ஒளி பொருந்தியவர்களாகப் பித்ருக்கள் பிரகா சிக்கிறார்கள் எனப் புராதன நூல்கள் போற்றிப் புகழ்கின்றன.

மீண்டும், தங்கள் குழந்தைகளைப் பார்க்கு ம் வாய்ப்புக் கிட்டியதால், அவர்கள் பேருவ கை அடைவதாக ‘கருடபுராணம்’ கூறுகிற து. அவர்கள் நம்மிடையே வந்து நம்முடன் தங்கும் இந்தப் பதினைந்து புனிதநாட்க ளும் நாம் எப்படி நடந்து கொள்ள வேண் டும், எப்படி பேசவேண்டும், வீட்டை எப்படிப் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ‘வைத்யநாத தீக்ஷிதம்’ என்ற வடமொழி நூல் அதிஅற்புதமாக நமது நன்மைக்காக விளக்கியுள்ளது.

இந்த, பதினைந்து நாட்களிலும், ஒவ்வொ ருவரும் நமது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத் தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவ து, தகாத சொற்களைப் பேசுவது, திரைப் படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், பாலியலைத் தூண்டும் புத்தக ங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகி யவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டி ப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.

நாம் எந்த அளவிற்கு தூய்மையாக இருக் கிறோமோ _ எந்த அளவிற்குச் சுத்தமாக இருக்கிறோமோ _ எந்த அளவிற்கு ஒற்று மையாக இருக்கிறோமோ _ எந்த அளவிற் குப் பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கி றோமோ அந்த அளவிற்கு இந்த பதினை ந்து நாட்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மன நிறைவையும் அடைகிறார்கள் எனப் பழை மையான தர்மநெறி நூல்கள் கூறுகின்றன. 

பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாட்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மை யைக் கண்டு மனத் திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள்.

உடனுக்குடன் நன்மை.
**************************
நாம் செய்யும் அனைத்துப் புண்ணிய காரி யங்களுக்கும் நமக்கு நல்ல பிரதிபலன் உண்டு. நமது நற்செயல்களுக்கான புண் ணிய பலனை எட்டு தேவர்கள் அவ்வப் போது சேர்த்து வைத்துக்கொண்டே வருகின்றனர். 

எதிர்காலத்தில் நமக்குத் துன்பங்கள் ஏற்படும்போது இவ்விதம் சேர்த்து வைத்த புண்ணிய பலன்களை நமது தேவைக்கு ஏற்றவாறு நமக்கு அளிக்கின்றனர். 

ஆனால், மஹாளய பட்சத்தின்போது நாம் பித்ருக்களை அந்தப் பதினைந்து தினங்க ளிலும் பூஜித்து, அவர்களுக்குத் திருப்தி யை அளிக்கும் நற்செயலின் பலன் மட்டும் நமக்கும், நம் குடும்பத்தினருக்கும் முக்கி யமாக நமது குழந்தைகளுக்கும் உடனுக் குடன் அளிக்கப்படுகிறது. 

அதனால் குடும்பத்தில் ஏற்படும் சிரமங்க ளனைத்தும் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு விடுகின்றன. மஹாளய பட்சத்தின் தனிச்சிறப்பு இதுதான்.

நமக்கு உதவியவர்களுக்கும் திதி செய்தல்
***********************************************
நமது பாரத தர்மம் உலகமனைத்தையுமே பாசத்துடன் அணைத்துக்கொண்ட தர்மமா கும். நமக்குப் பல தருணங்களில் அன்பும், இரக்கமும் காட்டி உதவிய பித்ருக்களுக்கு ம் இந்த மஹாளய பட்சத்தில் திதி செய்கிறோம். இவர்களுக்கு ‘காருண்ய பித்ருக்கள்’ என்று பெயர். 

அதாவது நாம் துன்பப்படும்போது நம்மீது கருணைகாட்டி உதவிய பித்ருக்கள் என்று பொருள். ‘உலக மக்களனைவரும் ஷேம மாக இருக்கட்டும்’ (சர்வே ஜன: சுகினோ பவந்து:) என்று கூறுகிறது வேதம். 

இந்த அடிப்படையில்தான் நம்மிடம் எவ்வி த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், நம் மீது கருணைகாட்டி, நமக்கு உதவி செய்த வர்கள் _ அவர்கள் யாராக இருந்தாலும் _ அவர்களுக்கும் இந்த மஹாளய பட்ச காலகத்தில் பூஜை செய்கிறோம்.

பித்ருக்களை வழியனுப்பி வைத்தல்.
********************************************
இவ்விதம் மஹாளய பட்சம் பதினைந்து நாட்களும் பூஜித்த பிறகு, மஹாளய அமாவாசை அன்று விசேஷ பூஜை செய்து நம்மை ஒரு பொருட்டாகக் கருதி இப்பூவுல கிற்கு எழுந்தருளி நம்முடன் இந்தப் பதினைந்து நாட்களும் தங்கி, நமக்கு அருள்புரிந்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களுக்குப் பாதபூஜை செய்து (பெரியவர் ஒருவர் மூலம்), நன்றி கூறி அம்மகாபுருஷர்களையும், அவர்களது தேவியரையும் (மனைவி) வழியனுப்பி வைக்கிறோம். 

அவர்களும் தாங்கள் வந்த தங்கமயமான விமானத்திலேயே சூரியனின் கிரணங்க ள் வழியாக தங்களது நல்லுலகிற்குச் செல்கிறார்கள். ஆதலால், மஹாளய பட்சம் என்ற மகத்தான புண்ணிய காலம் நமக்கு அளவற்ற நற்பலன்களைத் தேடித் தருகிறது.

சிரத்தையுடன் மஹாளய பட்சத்தை அனு ஷ்டிப்பவர்கள் குடும்பங்களில் எத்தகைய துன்பமானாலும் நொடியில் தீர்ந்து அந்தக் குடும்பம் செழிப்பதை அனுபவத்தில் காணலாம். மஹாளய பட்சத்தில் செய்யும் பித்ருக்கள் பூஜை இறைவனின் திருவுள் ளத்திற்கும் உகப்பானது.

எக்காரணத்திலாவது இந்தப் பதினைந்து நாட்கள் பூஜையைச் செய்யாமல் விடுபவ ர்கள் எளிதில் கிட்டாத ஓர் அரிய நல்வாய் ப்பினை இழந்துவிடுகிறார்கள்.

திருமணம் தடைபடுதல், கடன் தொல்லை கள், குடும்ப சச்சரவுகள், தீராது எனத் தீர் மானிக்கப்பட்ட நோய்கள் ஆகியவை மஹாளயபட்ச பித்ரு பூஜைகளால் அடியோடு நீங்கும். ஆதலால் பரம பவித்தி ரமான இந்தப் பூஜையை வாசக அன்பர்க ள் அனைவரும் செய்து பயனடைய வேண் டும் (தாய், தந்தையர் இருப்பவர்கள் திதிபூஜை செய்யக்கூடாது).

நீத்தார் கடன்கள் இயற்றும் முறையும் அதன் பலன்களும்
**************************************************
நீத்தார்களுக்குச் செய்யவேண்டிய கடன்க ளையும், அதனால் விளையும் பயன்களை யும் பற்றி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி கள் தெளிவாக, விரிவாக கூறியுள்ளார். அவரது அருளுரையிலிருந்து ஒரு பகுதி.

ஐவகை யக்ஞங்கள்.
*************************
இவ்வுலகில் செய்யப்பட்டுவரும் ‘யக்ஞங் கள்’ பலவகைப்படுவனவாகும். இவை பல்வேறு விதமான காரண காரியங்களு க்க்கு செய்யப்படுகின்றன. இந்த யக்ஞங் 
களில் எல்லாவற்றையும் விட சிறந்தவை என ஐந்து வகை யக்ஞங்களை சான்றோர் குறிப்பிட்டுள்ளனர். 

அவை பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம் புருஷ யக்ஞம் என்ப வைகளேயாகும். இதில் பிதுர் யக்ஞம் எனக் குறிப்பிடப்படுவது இறந்து போன தம் முன்னோர்களுக்காக நாம் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியதாகும். 

இக்கர்ம பலன்களை முறையாகச் செய்யு ம் பொழுது வேத மந்திரங்களைச் சொல்லி அருக்கியம் விட வேண்டும். அதாவது மந்திர நீர் இறைக்க வேண்டும். அக்கினிக் கும் காக்கைக்கும் பிண்டம் வழங்குவது முதலான செயல்கள் அனைத்தும் இதில் அடங்கும். 

இக் காரியம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் பிதுர் கடன்களை யக்ஞம் என்று குறிப்பிட்டிருபார்கள் என்ப தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

இந்த உடலைத் தகனம் செய்த பிறகும் அதன் ஆத்ம சொரூபம் எஞ்சியிருக்கின்
றது. தேகத்தை சுட்டெரிக்கின்ற போது அக்கினி தேவதையிடத்து சமர்ப்பிக்கின்ற பிராத்தனை ஒன்று ரிக்வேதத்தில் இருக்கின்றது. 

அக்கினி தேவதையே! உமது கரங்களில் இனிது பற்றி இவரை அழைத்துச் செல்வீ ராக! இவருக்கு தோஷமற்ற தேகத்தை நல்குவீராக! பித்ரு தேவதைகள் வசிக்கும் இடத்திற்கு இவரை அழைத்துச் செல்லும். சோகமும் மரணமும் இல்லா அவ்வுலகில் இவரைக் கொண்டு போய் சேர்த்துவிடும். என்பதே அது. 

இது போன்ற பிராத்தனைகளை எல்லா மதங்களிலும் காண முடியும். இறந்து போ னவர்களுக்கு ஆண்டு தோறும் சிரார்த்தம் செய்வது மிகவும் அவசியம். நாம் செய்யும் கர்மாவினால் நம் முன்னோர்கள் சந்தோச ப்படுகின்றனர். 

நம்பிக்கையுடனும் மிக்க ஆதரவுடனும் ஆசாரத்துடனும் பித்ருக்களுக்கு அன்னம ளிக்க வேண்டும். அதனால் தான் அன்னசி ரார்த்தம் சிறந்ததாகின்றது. ஒரு குடும்பத் திற்கு பித்ருக்களின் சாபம் ஏற்பட்டால் அவர்களின் சந்ததிகளுக்கு பலவித இன்னல்கள் ஏற்படும் இது போன்ற பல விஷயங்களை ஸ்ரீமத்ஸய புராணத்தில் விரிவாக காணலாம்.

எள் இறைக்கும் காரணம்.
******************************
அமாவாசை அன்று செய்யப்படும் தர்ப்ப ணத்திற்குப் பயன்படுத்தப்படும் கறுப்பு எள்ளும் தர்ப்பையும் மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து உண்டாவதாக ஐதிகம். எள்ளும் தர்ப்பையும் இப்படி இறைவனது உடலில் இருந்து உண்டானவைகள் ஆத லால் மனதை ஒருமுகப்படுத்தி அலைபா ய விடாமல் நிறுத்தி வைக்கும் ஆற்றலைப் பெற்றுத் திகழ்கின்றன. 

இந்தக் காரணத்தாலேயே தர்ப்பையும் எள்ளும் சிரார்த்த காலத்தில் பிராமணர் கள் உட்காருமிடத்திலும் சிரார்த்தம் செய் யுமிடத்திலும் இறைக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...