Saturday, September 23, 2023

கடவுள் எப்படிப்பட்டவன்?*

*கடவுள் எப்படிப்பட்டவன்?* 
கவியரசன் கண்ணதாசன் சொன்னது. 
ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான். 
மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான். 
*அவன் தான் கடவுள்*🙏🏽

பூலோகத்தில் வாழும்போது  புகழையும் கொடுப்பான்.
பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான். 
*அவன் தான் கடவுள்*🙏🏽
     
பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.
அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்.
பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.
*அவன் தான் கடவுள்*🙏🏽
    
கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான். 
அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான். 
*அவன் தான் கடவுள்*🙏🏽
    
ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான். 
பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பான்.
*அவன்தான் கடவுள்🙏🏽*
    
அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்.
அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான். 
*அவன் தான் கடவுள்*

தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான். 
அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான். 
*அவன்தான் கடவுள்🙏🏽*
    ‌ 
நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான். 
அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான். 
*அவன் தான் கடவுள்🙏🏽*
    
புரியாதவனுக்கு புதிராய் இருப்பான். 
தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான். 
*அவன் தான் கடவுள்🙏🏽*

கடல் முழுதும் தண்ணீரை வைப்பான். 
தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான். 
*அவன் தான் கடவுள்🙏🏽*
      
மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும். 
சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான். 
பின்னிருந்து இயக்குவான். 
*அவன் தான் கடவுள்🙏🏽*
     
தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.
(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான். 
*அவன் தான் கடவுள்🙏

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...