Tuesday, December 5, 2023

காலபைரவாஷ்டமி மிகவும் விசேஷமான நாள்.

காலபைரவாஷ்டமி:
******************** காலபைரவாஷ்டமி மிகவும் விசேஷமான நாள்.பைரவரை வணங்கி அவரி ன் அருளாசியை பெற்று க்கொள்ளுங்கள்

வேண்டியது வேண்டியபடி அருளும் காலபை ரவாஷ்டமி.

கால பைரவர்   சிவபெருமானின் 64 வடிவ ங்க ளில் ஒருவர். ‘பைரவர்’ன்ற. ‘பீருன்ற சொல்லி லிருந்து இருந்து வந்தது  ‘பீரு’ ன்னா ‘பயம் தர கூடியவர், எதிரிகளை அஞ்ச வைப்பவர்’ ன்னு பொருள்படும். பைரவரின் வாகனம் நாய்.  அதனால் தான், நாயை பைரவர்ன்னு சொல்லி அழைப்பார்கள்.  

எல்லா சிவன் கோவிலிலும் ஈசானிய மூலையில் தெற்கு நோக்கி அருள் புரிபவர். புண்ணிய பூமியான காசி நகரின்  காவல் தெய்வம் இவர் தான். சிவன் கோவிலி ன் காவல்தெய்வமும் இவரே. முன்பெல்லாம், கருவறையை பூட்டி, பைரவர் சன்னிதானத்தில் சாவியை வைத்து விட்டு செல்வார்கள். 

செவ்வரளி பூக்கள்ன்னா இவருக்கு பிரியம். இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசுநெய், விளக்கெண்ணெய் இவற்றால் தனி த்தனி தீபமேற்றி  வணங்கினால் நினைத்தது நிறைவேறும். பூசணிக்காயில் விளக்கேற்றி னாலும் விரும்பியது கிடைக்கும். 

தேங்காய், எலுமிச்சை, பாகற்காய்ன்னு விதம் விதமா விளக்கேற்றி வழிப்படுவது வழக்கம். வேண்டு தல் பெருசா இருந்தால் கல்யாண பூசணிக்கா யில் விளக்கேற்ற னும். ஏன்னா, அப்போது தான் அதிக நேரம் தீபம் எறிந்து நம் வேண்டுத லை சாமிக்கு நினைவுப்படுத்துமாம். 

தயிர்சாதம், உளுந்து வடை, பாசிப்பருப்பு பாயாசம் நைவேத்தியம்லாம் இவருக்கு படைக்கலாம்.  அஷ்டமி திதி, அதிலும் தேய் பிறை அஷ்டமியில் இவரை வழிபட நல்லது நடக்கும். சுவாதி, ஆயில்யம், மிருகசீரிஷம் நட்சத்திரத்திலும் வழிபடலாம். சனிப்பிரதோ ஷத்தன்று தயிர்சாதம் கொண்டு வழிபட்டால் வழக்குகளில் வெற்றி பெறலாம்.

தை மாத முதல் செவ்வாய் தொடங்கி பைரவ ருக்கு விரதமிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கு ம் பைரவர் அஷ்டகம் படித்து வர பயமின்றி வாழலாம். காலபைரவர் நிர்வாண கோலத் தோடு, நீல நிறத்தோ டும் இரு கோரை பற்கள்,  பன்னிரு கைக ளுடன்,  நாகத்தை பூணூலாக வும், சந்திர னைத் தலையில் வைத்தும், சூலா யுதம், பாசக்கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்க ளைத் தாங்கி, நாய் வாகனத்தின்மீது காட்சி தருபவர்.  

சிவனின் அம்சமென்பதால் மூன்று கண் களுண்டு. காலபைரவர் சனியின் குருவா கவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைக ள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத் தையும் கட்டுப்படுத்துபவராகவும் இருக்கிறார். காலபைரவரின் உடலில் நவக்கிரகங்களும் அடக்கம்.

ஆரம்பத்தில் சிவனைப்போலவே பிரம்ம னுக் கும் ஐந்து தலைகள் இருந்ததினால் பிரம்மன் அகங்காரம் கொண்டான். ஒருமுறை பரபிரம்ம ன் யாரென கேள்வி எழும்ப, வேறு யார்? நானே தான் பரபிரம்ம ன். ஐந்து தலையுடம் உள்ளேன். ஆக்கல் தொழிலை செய்கிறேன். அத்தோடு, பரபிரம்மன் என்ற வார்த்தையிலே யே பிரம்மன் இருக்க என்னைதவிர வேறு யார் பரப்பிரம்மன் யார் என ஆணவத்தோ டு கூறினான்.

இதைக்கேட்ட, விஷ்ணு, பரப்பிரம்மன்ன் னா பிறப்பு, இறப்பு இல்லாதவன்னு அர்த் தம். அப்படி பார்த்தால் என் நாபிக்கமலத்தி லிருந்து பிறந்தவன் நீ. பிறப்பு இப்படி இருக்க நீ பரபிர ம்மனில்லை. பிறப்பு, இறப்பு அற்ற நானே பரபிரம்மன் என விஷ்ணு கூற அங்கே யார் பெரியவன் என வாக்குவாதம் தோன்றியது.  இருவரு க்கும் பாடம் புகட்டும்படி ஜோதி வடி வெடு த்து அடிமுடி காண  சொன்னார் சிவன். 

விஷ்ணு வராக அவதாரமெடுத்து தன் முயற்சி பலிக்காமல் போக சிவனே பரபி ரம்மன் என சரணடைந்தார். ஆனால், தன் முயற்சி தோல் வியுற்றும் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தாழம்பூ வின் சாட்சியோடு பொய்யு ரைக்க சிவன் கோவம் கொண்டார்.  அவர் கோவத்திலி ருந்து பைரவர் தோன்றினார். எந்த நடுசிரசு ஆணவம் கொள்ள செய்ததோ அந்த சிரசை நகக்கண்ணால் கிள்ளி எறிந்தார்

பைரவரே!  நான் செய்த தவறுக்கு தண்டனை யாக நீங்கள் என் தலையை கிள்ளி எறிந்தீர்க ள் அந்த தலையை இனி என்றும் உங்கள் கை களில் இருக்கட்டும். உங்கள் கையிலிருக்கும் என் தலையை பார்ப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். ஆணவம் கொண்டு ஆடினா ல் இதுதான் கதின்னு புரிந்து ஆணவ  த்தை விட்டொழிக்கட்டுமென பிரம்மன் வே ண்ட, அதுப்படியே பிரம்மனும் அருளி, பிரம் ம னின் கபாலத்தை கையில் ஏந்திக் கொண்டார் 

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தேவலோக மே பைரவரை கண்டு பயந்தது. சிவபெருமா னால் உருவானதா ல் சிவபிள்ளையாக சிவபெருமானுக்கு மட்டுமே கட்டுபடுபவராக இருக்கார் பைர வர். பிரம்மனின் தலையை கொய்ததால் பைரவரை பிரம்மதோஷம் பீடித்தது.  அகிலமெங்கும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அலைந்து திரிந்தார். காசியில் அன்னபூரணி கையால் உணவு வாங்கி உண்ட பின்னே அவர் சாபம் நீங்கியது. அன்றிலிருந் து காசியின் காவல் தெய்வமானார் பைரவர்.  

பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களால் தன்னை கொல்ல இயலாது என நினைத்த தானாகசூரன் பெண்களா ல் தனக்கு மரணம் நேரக்கூடாதுன்னு வரம் வாங்கி உலகையே ஆட்டி படைத்து வந்தான். எல்லாரும் சிவனிடம் போய் முறையிட, தன் அம்சமான காளிதேவியை தானாகசூரனை வதம் செய்ய ஆணை யிட்டார். சிவனின் கட்டளைப்படியே தானா காசு ரனைக் காளி அழித்ததுடன், கோபம் தீராமலே கோபத்துடனே உலகெங்கும் சுற்றி திரிந்தாள். 

அவளுடைய கோபத்தீயினால் உலக உயிர்க ளெல்லாம் வருந்தின. காளியின் கோபத்தீ யைப் பருகுவதற்கு மாயையாய் பாலகன் உருக்கொண்டு இடுகாட்டில் குழந்தையாய்க் கிடந்து அழுதார். பசியால் அழும் குழந்தையை கண்ட காளி அதனை தூக்கி மார்புடன் அணைத்துப் பால் கொடு த்தாள். காளியிடம் பால் குடித்த குழந்தை பாலுடன் அவளுடைய கோபத்தீயையும் சேர்த்துப் பருகியது. அதனா ல் காளியின் கோபம் தணிந்தது. உலகமும் காளியின்  அழிவிலிருந்து காக்கப்பட்டது. 

குழந்தையாய் அவதரித்து காளியின் கோப த்தைத் தணித்த குழந்தைதான் ஷேத்திரபாலர். இந்த ஷேத்திரபாலர் சிவனுடைய மூர்த்தங்க ளில் ஒன்று என்றும் நாய் வாகனத்தின் மீது அமர்ந்தி ருக்கும் அவரே பைரவரின் திருவடி வம் என்று இலிங்க புராணம் சொல்கிறது.

சிவனிடமிருந்து இருள் என்னும் பெரும் சக்தி யை வரம் பெற்ற மமதையில் தேவர் களையெ ல்லாம் பெண்ணுரு கொண்டு ஏவல் செய்ய பணித்தான் அந்தகாசூரன். மேலும் உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களு ம், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார் கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னி யை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினா ர். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள்  தோன்றிய தாக புராணங்கள் சொல்கிறது. 

தட்சனின் மகளாய் அவதரித்த பார்வதி தேவி சிவனுக்குரிய அவிர்பாகத்தை கொடுக்காமல் தட்சன் நடத்திய யாகத்தை தடுக்க போய் முடி யாமல் அவன் நடத்திய யாகத்தீயில் விழுந்து உயிர்துறந்தாள். அவளின் உடலை கையில் கொண்டு ருத்ர தாண்டவமாடி பித்து பிடித்து போய்  உலகை வலம் வந்திருந்தார் சிவன். 

சிவனின் நிலையை கண்ட விஷ்ணு, தன் கையிலிருந்த சக்ராயுதத்தை வீசி பார்வ திதேவியின் உடலை துண்டாக்கி பூமியில் விழச்செய்தார். அப்படி பார்வதிதேவியின் உடல்பாகங்கள் விழுந்த இடங்கள் 64 சக்தி பீடங்களாய் மாறின. 

அந்த பீடங்களை  தாரா காசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களை யும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவர் என 64 பைரவர்களை உருவாக்கி  காவல் தெய்வமாகநியமனம் செய்தார்.

காலமே உருவான பைரவரின் திருவுருவ த்தில் பன்னிரெண்டு ராசிகளும் , 27 நட்ச த்திரங்க ளும் அடக்கம். மேஷ ராசி தலை யிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிக மும், தனுசு ராசி தொடையிலும், முழந்தா ளில் மகரமும், காலின் கீழே கும்பமும், பாதத்தில் மீன ராசியும் உள்ள தாக சாஸ் திர, ஜோதிடநூல்கள் சொல்கிறது. அதனா ல், அந்தந்த ராசிக்காரர்கள் அந்தந்த பாகத்தை பார்த்து வணங்குதல் கூடுதல் பலனை தரும்.

அஷ்டமி தினத்தில் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டர்கள்.  அன்றைய சுபக்கிரகங் கள், அஷ்டலட்சுமிகள் தங்கள் பலத்தினை புதிப்பி த்துக்கொள்ள பைரவரை நோக்கி விரதமிருப் பாங்க. அதனாலாயே சுபக் காரியங்களை அஷ்டமி திதியில் செய்வ தில் லை அன்றைய தினம் இந்த கடவுளை வணங் குவதைவிட அவர்களுக்கெல்லாம் வரம் கொடுக்கும் பைரவரையே நேரடியா வணங்கி பலன் பெறலாமே..

கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி திதியே காலபைரவாஷ்டமின்னு சொல்ல ப்படுது. அன்றைய தினம் தேங்காயை உடைத்து குடுமி இருக்கும் பக்கம், அதாவது முக்கண் இருக்கும் தேங்காய் மூடியில் நல்ல எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய் இதில் எதாவது ஒன்று ஊற்றி மிளகினை சிறு மூட்டையா கட்டி விளக்கேற்றி, கால பைரவரு க்கு சிவப்புஆடை சாற்றி, சிவப்பு அரளி அல்ல து சிவப்பு தாமரைமலர்மா லை சூட்டி, வெல்லம் பாசிப்பருப்பு பாயா சம் செய்து வடை மாலை அணிவித்து 21 முறை வலம் வந்து வணங்கி னால் நினைத்த வரம் கிடைக்கும். 

கால பைரவர் காயத்ரி மந்திரம்...

ஓம் கால காலாய வித்மஹே
கால தீத்தாய தீமஹீ 
தந்நோ கால பைரவ பிரசோதயாத்
காலபைரவர் மூல மந்திரம்..
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி பைர வர் சன்னிதியை வலம் வருதலும் சிறப்பு...

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

நட்சத்திரப் பிரதோஷம் என்றால் என்ன❓

1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த...