Monday, February 26, 2024

வாணியம்பாடி அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்.

*அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்..!!*
*காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7மணி வரை திறந்திருக்கும்.

*மூலவர் 😗

*அதிதீஸ்வரர்*
*அம்மன் 😗

*பெரியநாயகி,பிரகன் நாயகி*

*தல விருட்சம் 😗

*அகண்ட வில்வமரம்*

*தீர்த்தம் 😗

*சிவதீர்த்தம்*

*பழமை 😗

*1000வருடங்களுக்கு முன்*

*புராணப் பெயர் 😗

*வாணியம்மைபாடி*

*ஊர் 😗

*வாணியம்பாடி*

*மாவட்டம் 😗

*வேலூர்*

*மாநிலம் 😗

*தமிழ்நாடு*

*பிரம்மா சரஸ்வதியிடம், “உலக உயிர்களைப் படைக்கும் நான்தான் பெரியவன். எனவே தான் பிரம்மா,விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள்” எனக் கூறினார்.*

*இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது.கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார். வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள்.*

*வாணியை பிரிந்த பிரம்மா,தேவர்களைத் திருப்திப்படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர்.*

*எனவே பலதிசைகளிலும் தேடி,சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.செல்லும் வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் தங்கினார்.*

*இதனால் மகிழ்ந்த சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள்செய்து அவளைப்பாடும்படி கூறினர்.வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள்.*

*கலை)வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூர் “வாணியம்பாடி”ஆனது.*

*மேற்கு நோக்கிய இந்தக் கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.* 

*இராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.*

*காச்ய முனிவரின் தர்ம பத்தினி அதிதி. இவள் புனர்பூசம் நட்சத்திரம் தோறும் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களை பெற்றாள் எனப் புராணங்கள் கூறுகிறது.*

*எனவே புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வாணியம்பாடி.*

*மாதம் தோறும் புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகை சாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும். புதுவீடு, வாடகை வீடு பால் காய்ச்சுதல் போன்ற விருத்தியாககூடிய செயல்களை இந்த நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு.*

*வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால்,குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன்பும்,பள்ளிமாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இங்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை.*

*ஆசிரியர்கள் தங்கள் தொழிலை துவங்கும் முன்பும் இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு. ஹோட்டல் தொழில் செய்பவர்கள் அடிக்கடி இங்கு வந்து அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.* 

*இதனால் தங்களது தொழிலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீங்கும் என்பது நம்பிக்கை.*

*இக்கோயில் பல்லவப்பேரரசர்களால் கட்டப்பட்டது. மூன்று நிலை மேற்கு இராஜகோபுரமும், ஐந்து நிலை கிழக்கு இராஜகோபுரமும் உள்ளது.சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் உள்ளது சிறப்பு.*

*இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான்,மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்.*

*திருவிழா:*

*சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை*

*கோரிக்கைகள்:*

*புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்.*

*கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய்,ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.*

*நேர்த்திக்கடன்:*

*பால், தேன், நதிநீர், அன்னம் ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.*
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...